<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
கௌ - முதல் சொற்கள்
கௌவை

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கௌவை - (பெ) 1. பிஞ்சுத்தன்மை, unripedness
                    2. ஊரார் பழிச்சொல், slander
                    3. துன்பம், affliction, distress
                    4. பேரொலி, din, noise
1.
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் - மலை 105
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
2.
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே - நற் 354/11
ஊரெல்லாம் உரக்கப்பேசும் பழிச்சொல்லாய் ஆகின்றது உன்னுடனான நட்பு -
3.
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே - குறு 34/1-3
தாயர் முதலானோர் இடித்துரைக்கவும், தந்தை முதலானோர் மறுத்துரைக்கவும்
தனியராக உறங்கும் துன்பம் இல்லாததாகி
இனியது கேட்டு இன்புறுக இந்த ஊரே!
4.
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே
குரவ நீள் சினை உறையும்
பருவ மா குயில் கௌவையில் பெரிதே - ஐங் 369/2-5
மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று
நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு
குரவ மரத்தின் நீண்ட கிளையில் தங்கியிருக்கும்
வேனிற்பருவத்துக் கரிய குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது.

 மேல்