பதிற்றுப்பத்து

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

1 - 10
11 - 20
21 - 30
31 - 40
41 - 50
51 - 60
61 - 70
71 - 80
81 - 90
91 - 100

தேவையான பாடல் எண்
எல்லையைத் தட்டுக

  
# 0 கடவுள் வாழ்த்து  

எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிய
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து	5
வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண் நூல்
சிரந்தை இரட்டும் விரலன்  இரண்டு உருவாய்
ஈரணி பெற்ற எழில் தகையன் ஏரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறேற்கும் பண்பின் மறு மிடற்றன் தேறிய		10
சூலம் பிடித்த சுடர்ப்படை
கால கடவுட்கு உயர்க மா வலனே

 



பதிற்றுப்பத்தில் 
முதல் பத்தும் (1 - 10)
இறுதிப் பத்தும் (91 - 100)
கிடைக்கவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டு (91 - 94) 
அவை இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

					மேல்


 


இரண்டாம் பத்து
     குமட்டூர்க்கண்ணனார்

# 11 பாட்டு 11
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை		5
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று		10
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்
கடி உடை முழு_முதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்			15
போர் அடு தானை சேரலாத
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே		20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே			25
					மேல்
# 12 பாட்டு 12
வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் பிற மான்		5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி		10
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ			15
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை		20
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே		25
					மேல்
# 13 பாட்டு 13
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும்
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்		5
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலி தெங்கின் இமிழ் மருதின்
புனல் வாயில் பூ பொய்கை
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி		10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூ கரும்பின் கழனி புல்லென
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க	15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே
காடே கடவுள் மேன புறவே			20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது		25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
					மேல்
# 14 பாட்டு 14
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு		5
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையையே
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர்
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே	10
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ		15
பல களிற்று தொழுதியொடு வெல் கொடி நுடங்கும்
படை ஏர் உழவ பாடினி வேந்தே
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல நின்று நீ		20
கெடாஅ நல் இசை நிலைஇ
தவாஅலியரோ இ உலகமோடு உடனே
					மேல்
# 15 பாட்டு 15
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து
முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப	5
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல்		10
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின்
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே		15
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்து
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின்		20
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின்
போர் வல் யானை சேரலாத
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என
உண்டு உரை மாறிய மழலை நாவின்		25
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த
வெய்து_உறவு அறியாது நந்திய வாழ்க்கை
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி		30
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின்
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென்
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது		35
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின்
புரை_வயின் புரை_வயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின்
நெடியோன் அன்ன நல் இசை
ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே		40
					மேல்
# 16 பாட்டு 16
கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல்
துஞ்சு_மர குழாஅம் துவன்றி புனிற்று_மகள்
பூணா_ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு		5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்			10
ஊடினும் இனிய கூறும் இன் நகை
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின்
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும்_பொன்		15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய் நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே			20
					மேல்
# 17 பாட்டு 17
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை	5
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்			10
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே
					மேல்
# 18 பாட்டு 18
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்		5
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும்
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி		10
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே
					மேல்
# 19 பாட்டு 19
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர்
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப
செம் கள விருப்பொடு கூலம் முற்றிய		5
உருவ செந்தினை குருதியொடு தூஉய்
மண்_உறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து
அ வினை மேவலை ஆகலின்			10
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு
யார்-கொல் அளியை				15
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின பழனம்-தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து		20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை
நல்ல-மன் அளியதாம் என சொல்லி		25
காணுநர் கை புடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே
					மேல்
# 20 பாட்டு 20
நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி		5
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து		10
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானை கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ
விரி உளை மாவும் களிறும் தேரும்		15
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிலை ஞாயில்
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு பகை அட்டு மலர் மார்பன்		20
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும்
கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்		25
வயிறு பசி கூர ஈயலன்
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே          
					மேல்

 



மூன்றாம் பத்து  	
     பாலைக்கௌதமனார்

# 21 பாட்டு 21
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர் சால் வாய்மொழி
உரு கெழு மரபின் கடவுள் பேணியர்		5
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை		10
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி		15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர்		20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு	25	
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து		30
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்	35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணை தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே
					மேல்
# 22 பாட்டு 22
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து		5
கடலும் கானமும் பல பயம் உதவ
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம்
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய		10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த		15
வேல் கெழு தானை வெருவரு தோன்றல்
உளை பொலிந்த மா
இழை பொலிந்த களிறு
வம்பு பரந்த தேர்
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு		20
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிரை பதணத்து			25
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்
நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநரும்
ஒலி தலை விழவின் மலியும் யாணர்		30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்
குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றி
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன் பகல் அமயத்து
கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றி		35
கழல் கண் கூகை குழறு குரல் பாணி
கரும் கண் பேய்_மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே
					மேல்
# 23 பாட்டு 23
அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்தி
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகு சிறை பாடும்		5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும்
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ		10
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின நின்		15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை	20
நந்து நாரையொடு செ வரி உகளும்
கழனி வாயில் பழன படப்பை
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே		25
					மேல்
# 24 பாட்டு 24
நெடு வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ		5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை		10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்		15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்		20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப		25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே		30
					மேல்
# 25 பாட்டு 25
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா		5
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை		10
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே
					மேல்
# 26 பாட்டு 26
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்
நோகோ யானே நோ_தக வருமே			5
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து_உற்று
வலம் இன்று அம்ம காலையது பண்பு என
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ
மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி		10
காடு உறு கடு நெறி ஆக மன்னிய
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்
உரும்பு இல் கூற்றத்து அன்ன நின்
திருந்து தொழில் வயவர் சீறிய நாடே
					மேல்
# 27 பாட்டு 27
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர்		5
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்
பழன காவில் பசு மயில் ஆலும்
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்		10
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன் நாட்டு			15
யாணர் அறாஅ காமரு கவினே
					மேல்
# 28 பாட்டு 28
திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர்
பைம் கண் யானை புணர் நிரை துமிய
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால்
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப
இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது		5
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்
விடு நில கரம்பை விடர் அளை நிறைய
கோடை நீட குன்றம் புல்லென
அருவி அற்ற பெரு வறல் காலையும்
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று	10
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை
செம் நீர் பூசல் அல்லது
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே
					மேல்
# 29 பாட்டு 29
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி
வளை கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த
தடம் தாள் நாரை இரிய அயிரை
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின்	5
வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும்
அழியா விழவின் இழியா திவவின்
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய		10
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மா கண் கடிய கழற
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானை குட்டுவன்
வரம்பு இல் தானை பரவா ஊங்கே		15
					மேல்
# 30 பாட்டு 30
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல்
பாசடை பனி கழி துழைஇ புன்னை
வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும்
அல்கு_உறு கானல் ஓங்கு மணல் அடைகரை		5
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும்
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட		10
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது
அரி கால் அவித்து பல பூ விழவின்		15
தேம் பாய் மருதம் முதல் பட கொன்று
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும்	20
செழும் பல் வைப்பின் பழன பாலும்
ஏனல் உழவர் வரகு மீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும்
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும்		25
பல் பூ செம்மல் காடு பயம் மாறி
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து	30
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிர
கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்		35
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்		40
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே     
					மேல்


 



நான்காம் பத்து		
     காப்பியாற்றுக்காப்பியனார்

# 31 பாட்டு 31
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென		5
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர		10
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு
கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு
கருவி வானம் தண் தளி தலைஇய		15
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய
பனி வார் விண்டு விறல் வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள்	20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின்	25
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து	30
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள்
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர்
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு
சூர் நிகழ்ந்து அற்று நின் தானை			35
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே
					மேல்
# 32 பாட்டு 32
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப		5
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும்
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ
நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய		10
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும்
முடந்தை நெல்லின் கழை அமல் கழனி
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து
வையா மாலையர் வசையுநர் கறுத்த		15
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே
					மேல்
# 33 பாட்டு 33
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள்
கடி_மரத்தான் களிறு அணைத்து
நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு		5
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின்
செ வாய் எஃகம் வளைஇய அகழின்
கார் இடி உருமின் உரறு முரசின்			10
கால் வழங்கு ஆர் எயில் கருதின்
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே
					மேல்
# 34 பாட்டு 34
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர்
செ உளைய மா ஊர்ந்து
நெடும் கொடிய தேர் மிசையும்			5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்
மன் நிலத்து அமைந்த
மாறா மைந்தர் மாறு நிலை தேய
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ	10
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே
					மேல்
# 35 பாட்டு 35
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே
உரை சான்றனவால் பெருமை நின் வென்றி
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து
அளகு உடை சேவல் கிளை புகா ஆர		5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை
அந்தி மாலை விசும்பு கண்டு அன்ன
செம் சுடர் கொண்ட குருதி மன்றத்து
பேஎய் ஆடும் வெல் போர்
வீயா யாணர் நின்_வயினானே			10
					மேல்
# 36 பாட்டு 36
வீயா யாணர் நின்_வயினானே
தாவாது ஆகும் மலி பெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்		5
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார்
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவை பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய		10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட
குருதி செம் புனல் ஒழுக
செரு பல செய்குவை வாழ்க நின் வளனே
					மேல்
# 37 பாட்டு 37
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த
பகைவர் ஆர பழங்கண் அருளி
நகைவர் ஆர நன் கலம் சிதறி
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்	5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்
மா இரும் புடையல் மா கழல் புனைந்து
மன் எயில் எறிந்து மறவர் தரீஇ
தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு	10
கோடு அற வைத்த கோடா கொள்கையும்
நன்று பெரிது உடையையால் நீயே
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே
					மேல்
# 38 பாட்டு 38
உலகத்தோரே பலர்-மன் செல்வர்
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்		5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை
செ உளை கலி_மா ஈகை வான் கழல்
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே			10
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்
வசை இல் செல்வ வானவரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை			15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே
					மேல்
# 39 பாட்டு 39
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர்
துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை
கறுத்த தெவ்வர் கடி முனை அலற
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை	5
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும்
காலன் அனைய கடும் சின முன்ப
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்		10
புன் புற புறவின் கண நிரை அலற
அலந்தலை வேலத்து உலவை அம் சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க		15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே
					மேல்
# 40 பாட்டு 40
போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ பெரும நின் தானை
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல்		5
வந்து இறைகொண்டன்று தானை அந்தில்
களைநர் யார் இனி பிறர் என பேணி
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்	10
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த			15
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல்
புன் கால் உன்னம் சாய தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே			20
செல்லாயோ தில் சில் வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப
பாணர் பைம் பூ மலைய இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து		25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்			30
தொழில் புகல் யானை நல்குவன் பலவே     
					மேல்






ஐந்தாம் பத்து		
      பரணர்

# 41 பாட்டு 41
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப
பண் அமை முழவும் பதலையும் பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர்		5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன்
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி		10
சேஎர் உற்ற செல் படை மறவர்
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர்		15
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்			20
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண்
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை	25
கடும் பரி புரவி ஊர்ந்த நின்
படும் திரை பனி கடல் உழந்த தாளே
					மேல்
# 42 பாட்டு 42
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல்
மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கி
சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது		5
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ
அண்ணல் யானை அடு போர் குட்டுவ
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி			10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல்
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின்	15
மன்பதை மருள அரசு பட கடந்து
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர்
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய		20
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து
வெண் தலை குரூஉ பிசிர் உடைய
தண் பல வரூஉம் புணரியின் பலவே
					மேல்
# 43 பாட்டு 43
கவரி முச்சி கார் விரி கூந்தல்
ஊசல் மேவல் சே இழை மகளிர்
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ		5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த		10
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப
குன்று வறம் கூர சுடர் சினம் திகழ
அருவி அற்ற பெரு வறல் காலையும்
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து	15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆர நன் கலம் சிதறி			20
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்
பாடு விறலியர் பல் பிடி பெறுக
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக		25
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு
கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின்		30
தொலையா கற்ப நின் நிலை கண்டிகுமே
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்			35
வண் கை வேந்தே நின் கலி மகிழானே
					மேல்
# 44 பாட்டு 44
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும்		5
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர்
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை		10
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு
அரண்கள் தாவு_உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து	15
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி		20
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே
					மேல்
# 45 பாட்டு 45
பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்		5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து
கதவம் காக்கும் கணை எழு அன்ன		10
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்		15
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை
மழை கொள குறையாது புனல் புக நிறையாது
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல்	20
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே
					மேல்
# 46 பாட்டு 46
இழையர் குழையர் நறும் தண் மாலையர்
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி		5
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்
சுரம் பல கடவும் கரை வாய் பருதி
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய
பல் செரு கடந்த கொல் களிற்று யானை		10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய
வெல் புகழ் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே
					மேல்
# 47 பாட்டு 47
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்		5
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல
நன் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே
					மேல்
# 48 பாட்டு 48
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு
கடலொடு உழந்த பனி துறை பரதவ
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர்		5
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன் என தத்தம்
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும்		10
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர்
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை		15
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும்
தீம் புனல் ஆயம் ஆடும்
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே
					மேல்
# 49 பாட்டு 49
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர்
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய
களிறு பரந்து இயல கடு மா தாங்க
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப		5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார்
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்		10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக
படு பிணம் பிறங்க பாழ் பல செய்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட		15
கரும் சினை விறல் வேம்பு அறுத்த
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே
					மேல்
# 50 பாட்டு 50
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ
செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை		5
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு	10
அரணம் ஆகிய வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார்		15
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து		20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ
எவன் பல கழியுமோ பெரும பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்		25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே     
					மேல்







ஆறாம் பத்து 		
      காக்கைபாடினியார் நச்செள்ளையார்

# 51 பாட்டு 51
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானல் குட புலம் முன்னி
கூவல் துழந்த தடம் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும்		5
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள்		10
வெறி_உறு நுடக்கம் போல தோன்றி
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி
அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து
குண குட கடலோடு ஆயிடை மணந்த		15
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடு உடன் கமழ
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று			20
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே
மழை தவழும் பெரும் குன்றத்து			25
செயிர் உடைய அரவு எறிந்து
கடும் சினத்த மிடல் தபுக்கும்
பெரும் சின புயல்_ஏறு அனையை
தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும்
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர்	30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து
நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை
கைவல் இளையர் கை அலை அழுங்க
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம்		35
வலை விரித்து அன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவத்தானே
					மேல்
# 52 பாட்டு 52
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும்
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல்		5
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை		10
இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ		15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப		20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ என பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ		25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட			30
வான் தோய் வெண்குடை வேந்தர்_தம் எயிலே
					மேல்
# 53 பாட்டு 53
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின்		5
செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும்
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில்
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி		10
நின்னின் தந்த மன் எயில் அல்லது
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும்
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில்
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை		15
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின்
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி
மேம்படு வெல் கொடி நுடங்க			20
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே
					மேல்
# 54 பாட்டு 54
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள்
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை
பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல்		5
மின் இழை விறலியர் நின் மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி
அனையை ஆகல் மாறே எனையதூஉம்
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று	10
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ
நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும்	15
ஒல்லார் யானை காணின்
நில்லா தானை இறை கிழவோயே
					மேல்
# 55 பாட்டு 55
ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்
கமழும் தாழை கானல் அம் பெரும் துறை		5
தண் கடல் படப்பை நன் நாட்டு பொருந
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடி தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி		10
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல		15
சென்றாலியரோ பெரும அல்கலும்
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு
பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மை
தாங்குநர் தகைத்த ஒள் வாள்			20
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே
					மேல்
# 56 பாட்டு 56
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்	5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே
					மேல்
# 57 பாட்டு 57
ஓடா பூட்கை மறவர் மிடல் தப
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப
குருதி பனிற்றும் புலவு களத்தோனே
துணங்கை ஆடிய வலம் படு கோமான்
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி			5
செல்லாமோ தில் சில் வளை விறலி
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த		10
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே		15
					மேல்
# 58 பாட்டு 58
ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர்
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர்
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை		5
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது
உண்குவம் அல்லேம் புகா என கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை		10
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப கானத்து
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர்		15
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே
					மேல்
# 59 பாட்டு 59
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி
மாசி நின்ற மா கூர் திங்கள்
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி			5
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம்		10
அறியாது எதிர்ந்து துப்பில் குறை_உற்று
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்
சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்		15
ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணை தோள்
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே
					மேல்
# 60 பாட்டு 60
கொலை வினை மேவற்று தானை தானே
இகல் வினை மேவலன் தண்டாது வீசும்
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர்
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி		5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்
மறாஅ விளையுள் அறாஅ யாணர்
தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி		10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாய் இனத்தானே 
					மேல்





ஏழாம் பத்து 		
      கபிலர்

# 61 பாட்டு 61
பலா அம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல்
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறியிலை		5
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி
முழவு மண் புலர இரவலர் இனைய
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என		10
இரக்கு வாரேன் எஞ்சி கூறேன்
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான்
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே ஒள் வாள்
உரவு களிற்று புலா அம் பாசறை			15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவில் போக்கிய வெண்கை
விழவின் அன்ன நின் கலி மகிழானே
					மேல்
# 62 பாட்டு 62
இழை அணிந்து எழுதரும் பல் களிற்று தொழுதியொடு
மழை என மருளும் மா இரும் பல் தோல்
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்	5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல்
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி		10
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி		15
அரியல் ஆர்கை வன் கை வினைஞர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே
					மேல்
# 63 பாட்டு 63
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே		5
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே
சிறியிலை உழிஞை தெரியல் சூடி
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி		10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி
நீ கண்டனையேம் என்றனர் நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால்	15
செல்வக்கோவே சேரலர் மருக
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி				20
வாழி ஆத வாழிய பலவே
					மேல்
# 64 பாட்டு 64
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு		5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என		10
ஆனா கொள்கையை ஆதலின் அ வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்		15
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே		20
					மேல்
# 65 பாட்டு 65
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின்
பரி உடை நன் மா விரி உளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ		5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ		10
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின்
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு		15
சேறு செய் மாரியின் அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே
					மேல்
# 66 பாட்டு 66
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி		5
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து
தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின்		10
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின்
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப			15
பூத்த முல்லை புதல் சூழ் பறவை
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும்
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின்
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே		20
					மேல்
# 67 பாட்டு 67
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர்
கடன் அறி மரபின் கைவல் பாண
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை
கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க		5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர
அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின்
குழூஉ சிறை எருவை குருதி ஆர
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு		10
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர்
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு		15
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய்		20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை
கல் உயர் நேரி பொருநன்
செல்வக்கோமான் பாடினை செலினே
					மேல்
# 68 பாட்டு 68
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது		5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய
நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்		10
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ		15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி
செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல்
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே		20
					மேல்
# 69 பாட்டு 69
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க
கடல் போல் தானை கடும் குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற
எறிந்து சிதைந்த வாள்				5
இலை தெரிந்த வேல்
பாய்ந்து ஆய்ந்த மா
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படு பிணம் பிறங்க நூறி பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே		10
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம்
நிலம் பயம் பொழிய சுடர் சினம் தணிய
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர		15
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த
இலங்கு கதிர் திகிரி முந்திசினோரே
					மேல்
# 70 பாட்டு 70
களிறு கடைஇய தாள்
மா உடற்றிய வடிம்பு
சமம் ததைந்த வேல்
கல் அலைத்த தோள்
வில் அலைத்த நல் வலத்து			5
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த		10
வலம் படு வான் கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல்		15
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப
தொலையா கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை		20
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும்	25
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே 
					மேல்






எட்டாம் பத்து 		
      அரிசில் கிழார்

# 71 பாட்டு 71
அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு		5
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின்
அலந்தனர் பெரும நின் உடற்றியோரே
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப		10
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப		15
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்	20
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர்
மெய் பனி கூரா அணங்கு என பராவலின்
பலி கொண்டு பெயரும் பாசம் போல
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி		25
அறிந்தனை அருளாய் ஆயின்
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே
					மேல்
# 72 பாட்டு 72
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறிது உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்		5
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின்
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின்
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்		10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை			15
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே
					மேல்
# 73 பாட்டு 73
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே
கூந்தல் ஒண் நுதல் பொலிந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்		5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும் பல் யாணர் குரவை அயரும்		10
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு
கொல்லி பொருந கொடி தேர் பொறைய நின்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்		15
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என
ஆங்கும் மதி மருள காண்குவல்
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே		20
					மேல்
# 74 பாட்டு 74
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல்
வேறு படு திருவின் நின் வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம்	5
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து		10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப		15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய		20
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்_வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்		25
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர
கூறினை பெரும நின் படிமையானே
					மேல்
# 75 பாட்டு 75
இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம்
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல்
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு		5
அறை_உறு கரும்பின் தீம் சேற்று யாணர்
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து
கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும்		10
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே
					மேல்
 76 பாட்டு 76
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகி
பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ		5
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
கருவி வானம் தண் தளி சொரிந்து என		10
பல் விதை உழவின் சில் ஏராளர்
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே		15
					மேல்
# 77 பாட்டு 77
எனை பெரும் படையனோ சின போர் பொறையன்
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர்
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்		5
பண் அமை தேரும் மாவும் மாக்களும்
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர்		10
ஆ பரந்து அன்ன செலவின் பல்
யானை காண்பல் அவன் தானையானே
					மேல்
# 78 பாட்டு 78
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்
அம் வெள் அருவி உ வரையதுவே
சில் வளை விறலி செல்குவை ஆயின்
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி		5
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின்
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர்			10
ஓடு_உறு கடு முரண் துமிய சென்று
வெம் முனை தபுத்த_காலை தம் நாட்டு
யாடு பரந்து அன்ன மாவின்
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே
					மேல்
# 79 பாட்டு 79
உயிர் போற்றலையே செருவத்தானே
கொடை போற்றலையே இரவலர் நடுவண்
பெரியோர் பேணி சிறியோரை அளித்தி
நின்_வயின் பிரிந்த நல் இசை கனவினும்
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின்		5
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர்
தோள் இடை குழைந்த கோதை மார்ப
அனைய அளப்பு அரும்-குரையை அதனால்
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென		10
வில் குலை அறுத்து கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து		15
நிறம் படு குருதி புறம்படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ
கேடு இல ஆக பெரும நின் புகழே
					மேல்
# 80 பாட்டு 80
வான் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணம்_கொண்டு அவர்
எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்க
சாந்து புலர்ந்த வியல் மார்பின்			5
தொடி சுடர் வரும் வலி முன்கை
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால்
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள்
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என		10
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகன் மாறே பகைவர்
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி
புல வரை தோன்றல் யாவது சின போர்		15
நிலவரை நிறீஇய நல் இசை
தொலையா கற்ப நின் தெம் முனையானே
					மேல்






ஒன்பதாம் பத்து		
      பெருங்குன்றூர்க் கிழார்

# 81 பாட்டு 81
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து
கடும் சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள	5
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப
அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வர		10
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார்
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி		15
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி
கட்டளை வலிப்ப நின் தானை உதவி
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர்		20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி
காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர்
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து		25
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவர
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து	30
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள்
பூண்க மாள நின் புரவி நெடும் தேர்
முனை கைவிட்டு முன்னிலை செல்லாது
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு	35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே
					மேல்
# 82 பாட்டு 82
பகை பெருமையின் தெய்வம் செப்ப
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி		5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல
மறவர் மறல மா படை உறுப்ப
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக			10
பாடி காண்கு வந்திசின் பெரும
பாடுநர் கொள_கொள குறையா செல்வத்து செற்றோர்
கொல_கொல குறையா தானை சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை		15
நிலம்தருதிருவின்நெடியோய் நின்னே
					மேல்
# 83 பாட்டு 83
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு
நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்து
செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே		5
இன்னாது அம்ம அது தானே பன் மா
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின்
போர் அரும் கடும் சினம் எதிர்ந்து
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே
					மேல்
# 84 பாட்டு 84
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும்
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல்		5
பூழியர் கோவே பொலம் தேர் பொறைய
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும்		10
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ
போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல	15
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர
காஞ்சி சான்ற செரு பல செய்து நின்
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே		20
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல் நெடும் காலை
கல் சேர்பு மா மழை தலைஇ
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே
					மேல்
# 85 பாட்டு 85
நன் மரம் துவன்றிய நாடு பல தரீஇ
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண்
ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான்
இட்ட வெள் வேல் முத்தை தம் என
முன் திணை முதல்வர் போல நின்று		5
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின்		10
உவலை கூரா கவலை இல் நெஞ்சின்
நனவில் பாடிய நல் இசை
கபிலன் பெற்ற ஊரினும் பலவே
					மேல்
# 86 பாட்டு 86
உறல் உறு குருதி செரு_களம் புலவ
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கை
வென் வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான்
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து		5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த			10
பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும்
சாந்து வரு வானின் நீரினும்
தீம் தண் சாயலன் மன்ற தானே
					மேல்
# 87 பாட்டு 87
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல்
ஒய்யும் நீர் வழி கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால் அளியே		5
					மேல்
# 88 பாட்டு 88
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து
தம் பெயர் போகிய ஒன்னார் தேய
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு	5
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறி
கால் வல் புரவி அண்டர் ஓட்டி
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து			10
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய
கொற்றம் எய்திய பெரியோர் மருக
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்		15
விரவு பணை முழங்கு நிரை தோல் வரைப்பின்
உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே
உடலுநர் தபுத்த பொலம் தேர் குருசில்		20
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந
நீ நீடு வாழிய பெரும நின்_வயின்
துவைத்த தும்பை நனவு_உற்று வினவும்
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு		25
வருநர் வரையா செழும் பல் தாரம்
கொள_கொள குறையாது தலைத்தலை சிறப்ப
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்
பாவை அன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு		30
தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்து
திருவில் குலைஇ திரு மணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை
அருவி அரு வரை அன்ன மார்பின்		35
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்
ஈங்கு காண்கு வந்தனென் யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி		40
நுண் மணல் அடைகரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே
					மேல்
# 89 பாட்டு 89
வானம் பொழுதொடு சுரப்ப கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள		5
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர் கூலம் கெழும
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக
பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின்
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த		10
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென	15
தகரம் நீவிய துவரா கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே	20
					மேல்
# 90 பாட்டு 90
மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து
இன்பம் பெருக தோன்றி தம் துணை
துறையின் எஞ்சாமை நிறைய கற்று
கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா		5
ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல் வையத்து பகல் ஆற்றி
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர		10
வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டு
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை		15
கொள குறைபடாமையின் முந்நீர் அனையை
பல் மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்
கடல் இகுப்ப வேல் இட்டும்			20
உடலுநர் மிடல் சாய்த்தும்
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்ற திருவின் உரவோர் உம்பல்
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே			25
மட்ட புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே		30
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை
வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின்
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்		35
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு
காழ் எஃகம் பிடித்து எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே		40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப		45
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணை
காவிரி படப்பை நன் நாடு அன்ன
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல் இசை
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ		50
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆக என உள்ளி
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு		55
உரும் என முழங்கும் முரசின்
பெரு நல் யானை இறை கிழவோயே

 மேல்




பதிற்றுப்பத்தில்
முதல் பத்தும் (1 - 10) இறுதிப் பத்தும் (91 - 100)
கிடைக்கவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


# 91
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு	5
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
நீர் துனைந்து அன்ன செலவின்
நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே		10
					மேல்
# 92
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி
கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு	5
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர்
கண் வேட்டனவே முரசம் கண் உற்று
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப		10
நெடு மதில் நிரை ஞாயில்
கடி மிளை குண்டு கிடங்கின்
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க			15
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே
					மேல்
# 93
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளே
					மேல்
# 94
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலி_மான் தேரொடு சுரந்து
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை
மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை		5
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணி நின் பாசறை யானே			10
					மேல்
  
# 0 கடவுள் வாழ்த்து  

நெருப்பை இகழ்ந்தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையவன்; விரிந்த பூங்கொத்துகளையுடைய
கொன்றை மலரால் ஆன அழகிய புதிய மாலையணிந்த மார்பினன்; பகையாகிய அவுணரின்
கோட்டையைத் தீவைத்துக்கொளுத்திய வில்லையுடையவன்; செறிந்த இருளில்
சுடுகாட்டை விரும்பி அங்கு ஆடிய ஆட்டக்காரன்; நீண்டுபோய்
முதுகை மறைக்கும் அளவுக்குத் தாழ்ந்த சடைமுடியையுடையவன்; தொடையில் மோதி
வெண்மையான மணிகள் பேரொலி எழுப்பும் விழாவினன்; நுண்ணிய நூலால் கட்டப்பட்ட
உடுக்கையை மாறிமாறி ஒலிக்கும் விரல்களையுடையவன்; ஆணும் பெண்ணுமான இரண்டு உருவங்களால்
தோடும் குழையுமாகிய இரண்டுவகை அணிகலன்கள் பெற்ற அழகிய பொலிவுபெற்றவன்; வளர்கின்ற
இளம்பிறை சேர்ந்த நெற்றியையுடையவன்; களங்கனி
தன் நிற மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் பண்பினையுடைய கறையுள்ள கழுத்தையுடையவன்; தெளிவான ஒளியையுடைய
சூலமாகிய வேலினைப் பிடித்த, ஒளிவிடும் வேறு படைக்கலன்களையும் கொண்ட
காலக் கடவுளுக்கு உயர்க பெரும் வெற்றி.

 



பதிற்றுப்பத்தில் 
முதல் பத்தும் (1 - 10)
இறுதிப் பத்தும் (91 - 100)
கிடைக்கவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டு (91 - 94) 
அவை இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

					மேல்


 


இரண்டாம் பத்து 	
      குமட்டூர்க்கண்ணனார்

# 11 பாட்டு 11
மலை போல் எழும் அலைகள் வெண்மையான சிறுதுளிகளாக உடைய
காற்று மோதிச் சிதைத்த, அசைந்தாடும் கரிய முதிர்ந்த சூலைக் கொண்டாற் போன்ற
மிகுந்த கரிய பரப்பினைக் கொண்ட பெரிய கடலுக்குள் முனைந்து சென்று
பிறரை வருத்துதலை உடைய அவுணர்கள் பாதுகாத்து நிற்கும்
சூரபத்மனின் மாமரத்தை வேருடன் வெட்டிச் சாய்த்த, பெரும் புகழும்
கடும் சினமும் வெற்றியையும் உடைய செவ்வேள் யானையின்மீது வந்ததைப் போன்று,
கூரிய வாயினையுடைய வாள்படை குறுக்கே வருவோரை வீழ்த்த,
அவரின் அரிய மார்பு பிளந்த புண்ணிலிருந்து வெளிவரும் குருதியினால்
நீல மணி போன்ற பெரிய கழி தனது நீரின் நிறம் மாறிக்
குங்குமக் கலவை போலாக, அவரின் அரணை அழித்து,
வலி மிகுந்த சிறப்பினால் உயர்ந்த மனவெழுச்சி உடையவனே!
பகைவர் பலராய்க் கூடிநின்று பாதுகாத்த திரண்ட பூக்களைக் கொண்ட கடம்பமரத்தினை
காவல் உள்ள முழுமரத்தையும் வெட்டிச்சாய்க்கும்படி வீரரை ஏவி,
வென்று அறையும் முழங்குகின்ற முரசால் செய்த வெல்லும் போரினையும்,
நார்க்கூடையால் அரித்து வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரங்கள் அணிந்த மார்பினையும்
போர் புரியும் சேனைகளையுடைய சேரலாதனே!
மார்பில் கிடக்கும் புதிய மாலை, யானையின் நெற்றிப்பட்டம் வரை தாழ்ந்து விளங்கும்
வெற்றியால் உயர்ந்த கொம்புகளையுடைய குற்றம் தீர்ந்த யானையின்
பொன்னாற் செய்த அணிகலன்களையுடைய பிடரியின் மேல் ஏறியிருந்து சிறந்து விளங்கும் உன்
பலரும் புகழும் செல்வத்தை இனிதே காண்கிறோம் -
முருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,
பரந்து விளங்கும் அருவியோடு, நரந்தம் புற்களைக் கனவில் காணும்
ஆரியர் குழுமியுள்ள பெரும் புகழைக் கொண்ட இமயமலை,
தெற்கில் உள்ள அழகிய குமரி முனை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள
பெருமை பேசித் திரியும் மன்னர்களின் வீரம் எல்லாம் கெட்டொழியுமாறு -
					மேல்
# 12 பாட்டு 12
வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
அவரின் காவல்மரமான கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே!
பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
திரளாகக் கூடும் இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல
முரசுகள் முழங்கும் நெடிய அரண்மனைக்குள் அரசர்கள் துயில் கொள்ளாமல் இருக்க,
நான்கு பக்கத்தையும் நடுங்கச் செய்யும் உன் வீரம் சிறந்து விளங்கும் பலவாறான புகழ்
கேட்பதற்கு இனியது; உன் செல்வத்தைக் கேள்விப்படும்போதெல்லாம்
உன்னைக் காணவேண்டுமென்ற விருப்பத்தால், மணங்கமழும் காட்டுமல்லிகையால்,
உதிராத பசிய மயிரினையும், இளமையான அசைகின்ற நடையினையுமுடைய
பெருமை பொருந்திய இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற,
கன்றுகளைத் தழுவிய பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து
வந்து, அங்குத் தங்கிய பெரிய என் சுற்றத்தார்,
நாட்பட்ட பசியால் வருந்திய வருத்தம் தீர,
அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்,
ஆட்டு இறைச்சி இட்ட வெண்ணெல்லின் வெண்மையான சோற்றினையும்,
மலர்களின் அரும்புகள் சேர்த்த தெளிந்த கள்ளுடன் மிகுதியாக உண்டு,
நீரில் நனைந்த பருந்தின் பெரிய சிறகுகளைப் போன்ற
மண்படிந்த கிழிந்த உடையைக் களைந்த பின்னால்,
நூற்கப்படாத நூலாகிய பட்டால் செய்த ஆடையை நீளமாக இடுப்பில் கட்டி,
வளைவாக முடிச்சிட்ட கரிய கூந்தலையும், வளைவான மூங்கில் போன்ற மென்மையான தோள்களையும் கொண்ட
குற்றமற்ற மகளிர் ஒளிவிடும் அணிகலன்களை அணிந்துகொள்ள,
உன்னை மிகவும் விரும்பி, உன் மெய்யினைச் சூழவிருக்கும் சுற்றத்தோடு,
துய்ப்பதற்கு இனியது, உன் பெரும் மகிழ்ச்சி கொண்ட அரச அமர்வு.
					மேல்
# 13 பாட்டு 13
பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்,
காளைமாடுகள் சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும்,
கரும்புப் பாத்திகளில் பூத்த நெய்தல்
பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டங்களை வேறு இடங்களுக்குச் செல்லாதபடி தடுக்கவும்,
ஒலி மிகுந்த துணங்கைக் கூத்து ஆடிய இடங்களில்
வளைந்த தலையையுடைய முதிய பசுக்கள் ஆம்பலை உண்ணவும்,
செழித்து வளர்ந்த தென்னைமரங்களும், பறவைகள் ஒலிக்கும் மருதமரங்களும்,
கால்வாய்களையுடைய பூம்பொய்கைகளும் உள்ள
புலவர் பாடும் சிறப்பு மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய
நாடுகள் தம் அழகு சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி,
கூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல,
நீ வெகுண்டு முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் -
விரிந்த பூக்களைக் கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற,
முறுக்கிய காய்களையுடைய விடத்தேரை மரங்களுடன், கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து
இரண்டாகப் பிரிந்த தலைமயிருடன் பேய்மகள் கழுது என்னும் பேய் மீது ஏறி சுற்றித்திரிய,
பரவிக்கிடக்கும் நெருஞ்சி மிகுந்து, புழுதி படியும் பாழிடங்களான
சாணப்பூச்சு அற்ற, ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள்,
நெஞ்சம் நிலைகுலைய, துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து,
நினைத்துப்பார்ப்போர் நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின;
காடுகள் கடவுள் விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,
பெருவழிகள் அவற்றைப் போலவே இனியவை ஆக, மேலும் நிலத்து விளையும்
தானியங்களை விற்போரின் குடும்பங்களைக் காத்து,
குடிமக்களைக் காக்கும் காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து,
செவ்வாய் சென்ற இடத்தில் வெள்ளி செல்லாமையால்
மழை வேண்டி நிற்கும் இடங்களில் பெருமழை பொழிய,
நோயுடன் பசியும் இல்லையாக நீங்கி,
வளம் சிறந்து விளங்குகிறது, பெருமானே! நீ காத்த நாடு.
					மேல்
# 14 பாட்டு 14
நிலம், நீர், காற்று, விசும்பு ஆகிய நான்கினையும் போல
உன் பெருமையை அளந்து காண்பதற்கு அரியவன் ஆவாய்;
நாள் மீன்களும், கோள் மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும்
ஆகிய ஐந்தும் ஒன்றுசேர்ந்தால் பிறக்கும் பேரொளியைப் போன்றவன் ஆவாய்;
போர் செய்வதில் மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன்,
வலிமைபெற்றுத் திகழ்வதில் மிகத் தேர்ந்த அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய
அக்குரன் என்பவனைப் போன்ற வள்ளல் தன்மை உடையவன் ஆவாய்;
போர்க்களங்களில் எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின்
போர்த்திறனின் பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே!
கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே!
எழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த வெற்றித்திருமகள் நிறைந்த மார்பினையும்
வலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே!
வானுலகில் வாழும் மகளிரின் மெய்ந்நலத்தோடு போட்டிபோடக்கூடிய -
ஒளிரும் அணிகலன்களால் மறைப்புண்ட வண்டுகள் மொய்க்கும் பின் கூந்தலும்,
ஒடுங்கிய நெய்ப்புற்ற முடிந்த கூந்தலும், வளைந்த காதணிகளையும் உடைய - தேவிக்குக் கணவனே!
பல யானைகளின் கூட்டத்தோடு, வெற்றிக்கொடி வளைந்து அசையும்
படையினையே ஏராகக் கொண்ட உழவனே! பாண்மகள்களுக்குப் பரிசுகள் தரும் வேந்தனே!
ஒளிர்கின்ற மணிகள் செறிந்த பொன்னால் செய்யப்பட்ட ஆணைச் சக்கரத்தைக் கொண்டு
கடல் சூழ்ந்த இந்த நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன்
சேரர் குலத்து முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ
கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து
தாழ்வின்றி வாழ்க! இந்த உலகத்தில்.
					மேல்
# 15 பாட்டு 15
ஆண்டுகள் கழிந்துபோக, நீ வேண்டிய நாட்டில் தங்கி,
போர்முனைகளில் நெருப்பு பரவும்படி கொளுத்தி அழித்து, நெருங்கமுடியாத சீற்றத்துடன்
மேகங்கள் தவழ்ந்து ஒன்றுகூடிய மதிலையும், காவல்மரத்தையும் சிதைத்து,
வரிசையாகக் களிறுகள் ஒழுங்குபடச் செல்லும், பகைநாட்டை வென்று கொள்ளும் படைவெள்ளம்
நாலாபக்கங்களிலும் பரவி, கழங்குகளைப் போட்டுக் குறிபார்த்து மனம் அழியும் மன்னர்களின் சுற்றத்தை அழிக்கும்,
கொடிவிட்டெழும் நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத
நெருப்பு எரித்தழித்த இடங்களைப் போல, அனைத்தையும் உருக்குலைய அழித்து,
தம்முடைய பழைய அழகிய நிலை அழிந்துபோன இடம் அகன்ற ஊர்களையும்,
வெண்மையான பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர,
பீர்க்கங்கொடிகள் மேலேறிப் படர்ந்த நீரற்ற உழவடை சால்களில்,
சிவந்த காந்தள் வேருடன் காய்ந்துபோய் இருக்கும் பாழடைந்த வீடுகளையுடைய
புலால் நாறும் வில்லை வாழ்க்கையாகக் கொண்ட புல்லிய மறவர்கள் நடமாடும்
புல்லிய பனையோலை வேய்ந்த ஊர்களையுடைய பகைநிலங்களை அழிக்கும் மறமாண்பினைத்
தமது அறியாமையால் மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன்
பகைவரின் நாடுகளையும் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன் -
கடலில் விளைவனவும், மலையில் கிடைப்பனவும், ஆற்றால் பெறுவனவும், பிறவும் ஆன
வளம் பலவும் திகழும் அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள
விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில்
கொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில்
சிறப்புப் பெற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் முரசைக் கொண்ட
வலிமிகுந்த வீரர்களின் வேந்தனே! பரிசிலர்களின் ஆதாரப் பொருளே!
மாலையணிந்து அழகுடன் விளங்கும் பூண்கள் விட்டுப்போன கொம்புகளையுடைய
போரிடுவதில் வல்ல யானைகளையுடைய சேரலாதனே!
'நீ வாழ்வாயாக! இந்த உலகத்தோர் பொருட்டு' என்று
கள்ளை உண்டதினால் பேச்சு மாறிப்போன குழறுகின்ற நாவினில்
மென் சொற்களைக் கொண்ட, இசைக்கலன்களின் பையினையுடைய இயவர் திருத்தமான யாழை இசைத்து வாழ்த்த -
மனத்துயரம் கொள்ளுதலை அறியாத, வளம் பெருகிய வாழ்க்கையினையுடைய,
சான்றோர் செய்த நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன்,
உண்மையே உரைத்துப் புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும்
வாழுமிடங்களை இழப்பதை அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து,
நரகத்தை வெறுத்த அறவேட்கையுடைய சான்றோர்
விரும்பி வாழ்கின்ற - பலரும் புகழ்கின்ற பண்பினையுடைய -
நீ காத்துவருவதால் நோயை முற்றிலும் நீங்கப்பெற்ற -
புதுவருவாயை உடைய - நல்ல நாட்டினையும் கண்டு மதி மருண்டேன் -
மண் செறிந்த இந்த உலகில் வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக்
கொடுத்துக் கை ஓயாத ஈகையினையும், மிகுந்த வலிமையினையும் கொண்ட -
உயர்ந்தோர்க்கெல்லாம் நிறையக் கொடுத்த -
இன்பம் தரும் சிறப்பு மிக்க விழாவினையுடைய
திருமாலைப் போன்ற நல்ல புகழ்
குன்றாத - மைந்தனே! உன் பண்புகள் பலவற்றை விரும்பி -
					மேல்
# 16 பாட்டு 16
மலைச் சிகரங்களோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை அடுத்துள்ள,
ஒரு நாட்டைக் கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும் அடுத்து,
குறுக்காகக் கிடக்கும் கணையமரங்கள் பல செறிவாக அமைந்து, அண்மையில் பிள்ளைபெற்ற இளம்பெண்
பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள
நல்ல அழகிய நெடிய கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால்
பன்றியைப் போலாகிய நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய,
மதநீர் சொரிந்து, மிக்க சினம் கொண்டு
கணைய மரங்களை ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில்
நீண்டநாள் தங்கிவிட்டாயாதலால் கண்பதற்காக வந்தேன் -
அமைதிகொண்ட கற்பும், அடக்கமான பெண்மைநலமும்,
ஊடிய காலத்திலும் இன்சொற்களைக் கூறும் இனிதான முறுவலும்,
அமுதத்தையே உள்ளேகொண்டிருக்கிற சிவந்த வாயும், அமைதியான கண்களும்,
ஒளிவிடும் நெற்றியும், அசைந்த நடையும் உள்ள உன் மனைவி உன்னை நினைத்து வருந்துகிறாள்;
படுக்கையில் கிடந்து வருந்தும் வருத்தத்திலிருந்து உய்வாளோ? தோன்றலே! குற்றமற்ற
அழகிய மணிகள் நெருக்கமாய் அமைந்த, ஒளி விடும் பசும்பொன்னாலான,
பிரகாசிக்கும் கதிர்களையுடைய வயிரத்தோடு சேர்ந்த பூண் ஆரமானது சுடர்விடுகின்ற -
எழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த - வெற்றித்திருமகள் நிறைந்த - உன் மார்பினை,
உன் காதல் மகளிரின் மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக,
போர்மேற் செல்லும்போது நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே! உன்
மென்மையான மார்பு அவளை மிகவும் வருத்துகின்றது.
					மேல்
# 17 பாட்டு 17
- உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;
பொறுக்கமுடியாத பெரிய பிழை செய்தாரெனினும், பகைவர்கள்
பணிந்து திறை செலுத்த அதனை ஏற்றுக்கொள்கிறாய் என்பதனால் -
அசைகின்ற அலைகள் துளித்துளியாய்ச் சிதறும்படி, கரிய கடலைக் கடந்து சென்று,
கடம்பமரத்தை வெட்டி உண்டாக்கிய வெற்றியைத்தரும் பெரிய முரசுக்கு,
வீரர்கள் திரும்ப வந்து அரிய பலியினைப் படைத்து,
குறுந்தடியால் முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடி அணிந்த தோள்களையுடைய இயவர்கள்,
'ஒரு பாதுகாப்பான இடத்தையும் காணாமல் திக்கெல்லாம் தேடிச்செல்லும்,
விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்' என்று,
ஞாயிறு விரும்பிச் செல்லும் குற்றமற்ற சிறப்பையுடைய,
நீர் நிறைந்து, இடி மின்னலைக் கொண்ட கூட்டமான மேகங்கள் ஒன்றுகூடும்,
கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய
விசும்பினைச் சென்றடையும் வெண்கொற்றக்குடையின் புகழினைக் கூறும்
பசிய பூணினை அணிந்த மார்பினனே! பாடினிகளுக்குப் பரிசளிக்கும் வேந்தனே! -
					மேல்
# 18 பாட்டு 18
உண்பீராக கள்ளை! சமைப்பீராக சோற்றை!
அறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!
இல்லையென்று வருவோர்க்குக் குறைவுபடாமல் - பொன்னாலான அணிகலன்கள் ஒலியெழுப்ப,
இருண்டு வளைந்த, செழித்த, முறுக்கு அவிழ்ந்த, ஐவகையாய் முடிக்கப்பட்ட பின்னலையுடைய,
ஏந்திய கொம்பினைப் போன்ற அல்குலையுடைய, முகிழ்த்த நகையினையுடைய, இளமைப் பண்புடைய,
கூந்தலழகு மிக்க விறலியரே! - மூட்டுங்கள் அடுப்புகளை -
நீங்கள் பெற்றுக்கொண்டவைகளைச் சிறிது கொடுத்துதவுங்கள்! மேலும் அது தவறாகாது!
உலகத்து உயிர்கள் அழிய, பல ஆண்டுகள் வருத்தி,
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
மாரிக்காலத்தில் பொய்த்துவிட்டாலும்
சேரலாதன் பொய்க்கமாட்டான் உமது விருப்பத்தை -
					மேல்
# 19 பாட்டு 19
பகைவர் நிலத்தில் கொள்ளையிட்டதையே உணவாகக் கொண்ட, முன்னேறிச் செல்லும் கால்களையுடைய ஏவலர்கள்
கற்களையுடைய நெடிய வழிகளை வெட்டி, பாலைவெளியில் வழிகளை உருவாக்க,
ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு
சிவந்த போர்க்களத்தில் புகும் விருப்பத்தோடு, கூலங்களாக நிரப்பிய
நிறங்கொண்ட செந்தினையைக் குருதியோடு கலந்து தூவிப் பலியிட்டு,
கழுவிப் பூசிக்கப்பட்ட முரசத்தின் மேற்பகுதியில் குருதியினைப் பூசி, முரசு முழக்குவோர்
குறுந்தடியை வலது கையில் கொண்டவராய், தொடி அணிந்த தோளினை ஓங்கிஉயர்த்தி முழக்க,
காப்புக்கயிறுகளை களைதலை அறியாத வீரரோடு, அம்புகளைத் தெரிவுசெய்து
முடிந்துபோன அந்தப் போரினையே மேலும் விரும்புகிறாயாதலால்,
பகலில் பெரிதும் பொறுத்திருந்து, இரவில் கிடக்கும்
அரிதாகப் பெறுகின்ற உறக்கத்தில் சிறிய மகிழ்ச்சியேனும் பெற்று
கனவினிலேயே வாழும், பெரும் நற்பண்புகளும், மேனியின் மெலிவால் ஏற்பட்ட
நாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு
நீ யாராயினாய்? இரங்கத்தக்கவனே!
பசுக்கூட்டங்கள் கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக,
விளைநில இடங்களெல்லாம் களையிழக்க, உழவுத்தொழிலினை அழித்து, நீ
வாழ்வு தராததால் வளம் அற்றுப்போன பகைவர் நாடுகள்
அப்படிப்பட இயல்பினை அடைந்தன - நீர்நிலைகளிலெல்லாம்
நெருப்புப் போன்ற தாமரை ஆம்பலுடன் மலர்ந்து,
நெல்விளையும் இனிய வயல்களில் நெய்தல் பூத்திருக்க,
விளைந்த நெல்லை அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின்
சாறு பிழியும் எந்திரத்தின் கொப்பரை வருந்த,
இன்றல்ல, நேற்றல்ல, தொன்றுதொட்டு
இந்த நாடுகள் நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி
காண்போர் கைகளைத் தட்டிக்கொண்டு வருந்திநிற்க,
கெட்டழிந்த தன்மையினைக் கொண்டன, பலவகையாலும் சிறப்புப் பெற்ற இந்த நாடுகள் -
					மேல்
# 20 பாட்டு 20
உம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன்
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று,
அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட
நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை;
- வாய்ப்பதை அறியான் - வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட -
பகைவரின் நாட்டில் பின்வாங்கும் முயற்சி -
கண்ணுக்கு முன்னால் மகிழ்ச்சியைக் காட்டி, தம் மனம் திறந்து அன்புசெலுத்தாத
உட்பகைகொண்டாரின் நாட்டினிலும் பொய்கூறுவதை அறியான்,
கனவில்கூட - பகைவர் வலிகுன்றிப்போக வெற்றிப்பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடந்து
தன்னைப் பணியாதோரை அழித்து, வடிவமைப்பான மணிகள் மாறிமாறி ஒலிக்கும்
மதம்பிடித்த யானைகளின் கூட்டமான வரிசைகள் அலறிக்கொண்டு ஓட
அகன்ற பெரிய பரப்பினையுடைய பெரிய நிலத்தை வென்று,
புலவர்கள் புகழ்ந்துபாட, ஓங்கிய புகழை நிலைநாட்டி,
விரிந்த தலையாட்டம் அணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும்
கொம்பூதுவோர், கழைக்கூத்தாடிகள் ஆகிய கூத்தர்களுக்கு, தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாமல், வாரி வழங்கி
பபதுகாப்பு மிக்க காவல்காடுகளையும், ஆழமான அகழிகளையும்
நெடிய மதில்களையும், நிலைபெற்ற கோட்டை வாயிலையும்,
அம்புகளையுடைய கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து, இவற்றை விழுங்கிய
சமையலினால் எழாமல் ஊரினைச் சுட்டதால் உண்டான இந்தப் புகை படிந்த மலர்ந்த மார்பினன்;
எம்மைச் சேர்ந்த பாணருக்கும், பிற பொருநருக்கும், வேறு இரவலர் போன்றோர் எவராயினும்,
பரிசில் பெறுவதற்குரிய திறன் இல்லாதவராயினும்,
கொடுப்பதையே கடமையாக விரும்பிக் கொண்ட கோணலற்ற நெஞ்சினன்;
உலகத்து உயிர்கள் அழியுமாறு, ஆண்டுகள் பலவாக மாறுபட்டு,
குளிர்ச்சியான இயல்பினையுடைய மேகங்கள் மழையினைப் பெய்யாமற்போனாலும்
வயிற்றுப்பசி மிகுகின்ற வகையில் ஈயாமல் இருக்கமாட்டான்;
வயிறு குற்றமின்றி இருக்கட்டும் அவனை ஈன்ற தாய்.
					மேல்

 



மூன்றாம் பத்து  	
      பாலைக்கௌதமனார்

# 21 பாட்டு 21
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!
					மேல்
# 22 பாட்டு 22
கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்;
இந்தத் தீயவைகளைத் தொலைவிற்குத் தள்ளிவிட்டு, நன்மையானவற்றை மிகவும் செய்து,
கடலும், முல்லைக்காடுகளும் பலவிதப் பயன்களைக் கொடுத்துதவ,
குடிமக்கள் ஒருவரையும் வருத்தாமல், அயலார் பொருள்மீது ஆசைப்படாமல்,
குற்றமற்ற அறிவினராய்ச் செம்மையான ஒழுக்கநெறியில் நடந்து, தம்மை
விரும்பும் துணையான மனைவியைப் பிரியாமல், இருப்பதைப் பகுத்து உண்டு, குடிமக்கள்
முதுமையடைந்த உடம்புடன் நோய் இல்லாமல் வாழ
ஆட்சி செய்யும் முன்னோர்களின் வழித்தோன்றலே!
இரும்பால் செய்யப்பட்ட குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட
வேல்கள் தாங்கிய வேற்படையைக் கொண்ட அச்சம்தரும் தோன்றலே!
தலையாட்டத்தால் பொலிவுபெற்ற குதிரைகளோடும்,
நெற்றிப்பட்டம் போன்ற அணிகளால் பொலிவுபெற்ற களிறுகளோடும்,
புதிய தேர்ச் சீலைகள் பரந்து விளங்கும் தேர்களோடும்
போரினை எதிர்கொள்ளும் விருப்பத்தையுடைய வீரர்களோடும்,
கணையமரங்கள் செறிக்கப்பட்ட, பெரிய அகன்ற வெளியில் அமைந்துள்ள
உயர்ந்து நிற்கும் வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய,
எந்திர வில்கள் பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும்,
பாதுகாப்பான காவல்காடும் ஆழமான அகழியும் கொண்ட,
நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
பொன்னால் செய்த உழிஞை மாலையை அணிந்த வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே!
தோல் போர்த்துள்ள பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும்,
நீர்விளையாட்டில் எழும் ஆரவாரத்தின், போரில் அம்புகள் எழுப்பும் ஒலியையும் அமுக்கிப்போடும், ஒலியும்,
பேராரவாரம் எழுகின்ற விழாக்களில் உள்ளதைப் போல் மிகுந்துவரும், புதுவருவாயையுடைய
நாட்டினில் பொருந்திய மருதநிலங்களைச் சினந்து பார்ப்பதனால் -
மேற்குத் திசையில் மறைந்து, கிழக்கில் அடிவாரத்தில் தோன்றி,
பரவிக்கிடக்கும் இருளை அகற்றும் பயன்தரும் பண்பினையுடைய
ஞாயிறு ஒருபக்கமும் சாயாமல் இருக்கும் நடுப்பகற் பொழுதில்
பிரிந்து செல்லும் வழிகளில் வெள்ளையான நரிகள் மாறி மாறி ஊளையிடும்,
பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப,
கரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்
- பெரிய பாழ்நிலமாய்விடும், அவைதாம் இரங்கத்தக்கன!
					மேல்
# 23 பாட்டு 23
காய்ந்துபோன உச்சியையுடைய உன்ன மரத்தின் பிரிவுபட்ட கிளையினில் இருந்து
சிள்வண்டு ஒலிக்கும் அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி
நிலம் பசுமை இல்லாமற்போன, விளைநிலங்கள் சீர்குலைந்த காலத்திலும்
இழுத்துக் கட்டிய இசைக்கலங்களைக் கொண்ட பையினராய், அங்குள்ள
ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய்  தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற
கூத்தரும் பாணருமான மக்களின் கடும் பசி நீங்க,
அவர்களின் பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணிகலன்கள் ஒலிக்க, பெரிதும் உவந்து
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய், உண்டு கூட்டமாய் ஆட,
சிறிதளவு கள்ளுண்ட மகிழ்ச்சியிலும் பெரும் செல்வத்தை வாரி வழங்கும்
போரில் வெற்றிகொள்ளும் சேனைகளையுடைய பொன்னாலான மாலையைச் சூடிய குட்டுவனே!
உன்னைக் காணவிரும்பி வந்த நாங்கள் கண்டோம், புற்கள் மிகுந்து,
நடமாடுவோர் இல்லாமற்போனதால் ஓரங்கள் உருக்குலைந்து தூர்ந்துபோய்
தமது பெரும் அழகு அழிந்துபோன வழிகளில் காளைகளைக் கூடி,
பெரிய காட்டுப்பசுக்கள் அமைதியாகவும் இனிமையாகவும் வாழ்ந்திருக்கும் அளவுக்கு,
வானளாவ உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஊர்கள் காட்டுநிலம் ஆயின; உன்
வலிமையால் நிறைந்த பெரும் புகழை அறியாதவராய், உன்னோடு பகைகொண்டு
போரிட எதிர்த்துவந்த வேந்தர், உன் முன்னணிப்படைக்கே தோற்று ஓடிப்போனதால்;
மருதமரங்கள், தம்மிடம் பல பறவைகள் தங்கி ஒலிக்கும்படி நிற்கின்ற செறிவான பெரிய பரப்பிடமாகிய,
மணல் நிறைந்த பெரிய ஆற்றுத்துறையில் நெருங்கிவளர்ந்த காஞ்சி மரங்களோடு
முருக்க மரங்களினின்று உதிர்ந்த பூக்களால் நெருப்பைப்போன்று தோன்றும் மணல் அடைத்த கரையில்
நன்கு வளர்ந்த நாரையோடு, செவ்வரி நாரையும் ஓடித்திரியும்
கழனிகளுக்கு வாயிலாக அமைந்த பொய்கையைச் சார்ந்த விளைநிலங்களில்
நெருப்பினைப் போன்ற பூவையுடைய தாமரையும், வளையணிந்த பெண்
பறிக்காமல் விட்டுவிட்ட ஆம்பலும் உள்ள,
அற்றுப்போகாத புதுவருவாயையுடைய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு -
					மேல்
# 24 பாட்டு 24
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!
					மேல்
# 25 பாட்டு 25
உன் குதிரைப்படைகள் பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா;
மதம் சொரியும் தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின்
கூட்டம் பரந்து சென்ற நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா;
உன் படைவீரர்கள் கூடிய ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன;
நீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை இழந்தன;
நீ மூட்டிய தீ - மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து
புதிதாய்த் தோன்றும் பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள்
காட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழிகளாய்,
ஆறலைக்கள்வரின் ஒளிப்பிடமாக அகன்ற பெரிய பாழிடங்களாய் மாறிவிட்டன;
இடிபோல முழங்கும் முரசத்தோடு, பெரிய மலையின்
பக்கங்களில் இறங்கும் அருவியைப் போல பொலிவுள்ள கொடிகள் மடங்கி ஆட,
விரைந்த ஓட்டத்துடன் சீறியெழும் பறவையைப் போல் பறந்து செல்ல, நீ
உன் நெடிய தேரினை ஓட்டிய பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள்.
					மேல்
# 26 பாட்டு 26
செல்வர்களின் தேர்கள் சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்களால் உழுவது தேவைப்படவில்லை;
ஆண்பன்றிகள் கிழங்குக்காகத் தோண்டிய நிலங்களில் கலப்பைகளால் உழுவது தேவைப்படவில்லை;
தயிர் கடையும் மத்துகள் முழங்கும் வீடுகளில் வேறு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கத் தேவையில்லை;
அவ்விடத்தை முன்பு நன்றாக அறிந்தவர் அப்போதிருந்த செழுமையான வளத்தை இப்போது நினைத்துப்பார்த்தால்,
வருந்துகிறேன் நான், அவர்கள் மிகவும் வருத்தப்பட நேருமே என்று;
காலத்தில் பெய்யும் மழை காக்காமல் போனதினால் வெப்பம் மிகுந்து
நலமற்றுப் போனது காலத்தின் பண்பு என்று
கண்கள் பனித்துப் பெருக்கெடுக்கும் நீரை நிறையத் தாங்கிக்கொண்டு, கைகளை அடித்துக்கொண்டு
தளர்ச்சியுற்ற நெஞ்சத்தினராய்ப் பகைவர்நாட்டு மக்கள் சிறுமை மிகுந்திருக்க,
பீர்க்கங்கொடிகள் பற்றியேறின வேலிசூழ்ந்த பாழ்பட்ட மனைகளும், நெருஞ்சிமுள்
காடாய் வளர்ந்திருக்கும் கடிய வழிகளுமாக நிலைபெற்றன -
முருகப்பெருமான் மாறுபட்டு வெகுண்டதால் தன் ஆரவாரமிக்க சிறப்பை இழந்த பழமையான ஊரைப்போல,
பிறரால் நலிவுறாத கூற்றுவனைப் போன்ற உன்
திருத்தமான போர்த்தொழிலையுடைய படைவீரர்கள் சீறிச் சென்ற நாடு -
					மேல்
# 27 பாட்டு 27
- சிதைந்துபோனது, உண்மையாகவே! நீ கண்கள் சிவந்து பார்த்தபோது -
தொடர்ந்தாற்போல மலரும் குவளையைத் தமது தூய அலையலையான கூந்தலில் செருகி,
மலர்ந்த ஆம்பல் பூவின் அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய்,
சுருண்ட மயிரையுடைய அழகிய தலையுச்சியில் பூவினால் தொடுத்த தலைமாலையை அணிந்து,
கள்ளை உண்டவராய், இனிதே சுருதி சேர்ந்த வாத்தியத்தையுடையோர் தங்கியிருக்கும்
துறைக்குப் பக்கத்தில் இருக்கும் மருத மரத்தில் ஏறி, பக்கத்து வயல்களில் பரவியிருக்கும் பறவைகளை ஓட்டுவதற்காக
ஒளிவிடும் வளையல்களை அணிந்த மகளிரின் தெளிவான அழைப்பொலியின் இனிய ஓசையைக் கேட்டு
வயலோரச் சோலைகளில் புத்துணர்ச்சிகொண்ட மயில்கள் ஆடுகின்ற
பொய்கையின் மதகுகளில் நீர் வந்து மோதும் கதவிடுக்கில்
நெய்தல் பூக்களை மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற
வலிமையான மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று ஆழ்ந்துபோய்
சேற்றில் மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட
நல்ல எருதுகள் இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது
வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
வேறே போரினால் ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின்
புதிய வருவாய்கள் அற்றுப்போகாத பலரும் விரும்பும் தம் அழகு -
					மேல்
# 28 பாட்டு 28
- மிகுந்த செல்வத்தை உடையது - மிகுந்த வலிமை கொண்ட பகைவரின்
பசிய கண்களையுடைய யானை கலந்த படைவரிசை தூள்தூளாக,
தமது வலிமையைச் செலுத்தித் தூக்கிவைத்த குருதிக்கறை படிந்த பாதத்தையுடைய கழலணிந்த கால்களைக் கொண்ட
விரையும் குதிரையைப் போன்ற மறவர்கள் மிகுந்த விசையுடன் கூடிய தம் வில் தொழிலை மறக்கும்படியாக,
காவல்காட்டைக் காக்கும் தொழிலை இனிதே செய்து, நாட்டினில் விளைச்சல் குறைவின்றி இருக்க,
வீட்டைவிட்டுப் பிரியாத வாழ்க்கையுடன் நீ ஆட்சி செய்வதால் -
- மேய்ச்சலுக்காக விடப்பட்ட கரம்பை நிலத்தில் உள்ள வெடிப்பான பள்ளங்கள் நிறையும்படி -
கோடைக்காலம் நீட்டித்துச் செல்ல, குன்றுகள் பொலிவழிந்து தோன்ற,
அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும்
- உயர்ந்து, கரையை மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும்
சிறப்புப் பொருந்திய அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்படியாக,
காய்ந்த இலைதழைகளைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின்
சிவந்த நீர் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
கொடுமையான போர் ஆரவார ஒலிகள் அரிதாயுள்ள, அகன்ற இடத்தையுடைய உன் நாடு -
					மேல்
# 29 பாட்டு 29
அவலை இடிக்கும் உலக்கையை வாழைமரத்தில் சார்த்திவிட்டு,
வளையலணிந்த கையையுடைய மகளிர் வள்ளைப் பூவினைப் பறிக்கின்ற
வளைந்த நெற்கதிர்கள் விளைந்த வயலில் மேல் பரவித்திரியும்
பெரிய கால்களையுடைய நாரைகள், அந்த மகளிரைக் கண்டு வெருண்டு, அங்கிருக்கும் அயிரையாகிய
நிறைந்த மீனைகளைத் தின்பதற்காக, மரங்கள்தோறும் குழுமியிருக்க,
வெறும் கையாய் இருக்கும் மகளிர் அந்த வெள்ளைப் பறவைகளை விரட்டுகின்ற -
தொடர்ந்து நடைபெறும் விழாக்களினால் தொய்ந்துபோகாத யாழ்க்கட்டுகளையுடைய
கூத்தரான மக்கள் பண்களை நன்றாக அமைத்து, இசையை எழுப்பி,
ஊர்ப்பொதுவிடங்களை அணுகி, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற -
அகன்ற இடங்களையுடைய ஊர்களையுடைய நாடுகளாயிருந்தன - இப்போது இரங்கத்தக்கன.
கலந்திருக்கும் பல்வேறான தானியங்களோடு சேர்ந்த இரத்தத்தைப் பலியாகச் செலுத்தி,
மயிருள்ள தோலால் மறைக்கப்பட்ட பெரிய முகப்பினைக் கொண்ட முரசம் வேகமாக அடிக்கப்பெற,
போரைச் செய்வதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்னும்படி, அரிய மதில்களை வெற்றிகொள்ளும்
மிகவும் அதிகமான யானைகளைக் கொண்ட குட்டுவனின்
வரம்பில்லாத சேனைகள் பரந்து செல்வதற்கு முன்னர் -
					மேல்
# 30 பாட்டு 30
பூங்கொத்துகள் செறிந்திருக்கும் ஞாழல்கள் இருக்கும் கரையைப் பொருந்திய பெரிய நீர்த்துறையில்
நீல மணியினால் செய்யப்பட்ட பாத்திரத்தைப் போன்ற பெரிய இதழ்களையுடைய நெய்தலின்
பசிய இலைகள் உள்ள குளிர்ந்த கழியினில் மீனை வேட்டையாடிவிட்டு, புன்னையின்
நீண்ட பூங்கொத்துகள் உள்ள தாழ்ந்த கிளையில் கொக்குகள் தங்கும்,
மக்கள் தங்குவதற்குரிய கடற்கரைச் சோலையில் உள்ள உயர்ந்த, மணல் இறுக்கமாய் அமைந்த கரையில்,
தாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க,
ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும்
குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும் -
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேடர்கள்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள
வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப்
பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும்
குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் -
பருவமல்லாத காலத்திலும் கரும்பினை அறுத்து மாளாது,
கரும்பின் வேர்க்கட்டைகளை அழித்து, அங்கு பல பூக்களைக் கொண்டு எடுக்கும் விழாவினையுடைய,
தேன் பாயும் மருதமரத்தை அடியோடு சாய்த்து,
வெண்மையான நுரையை முகப்பினில் கொண்ட சிவந்த புதுவெள்ளம் பரந்து ஓரங்களை உடைத்துச் செல்லும் இடங்களில்
பல வைக்கோல் புரிகள் சூழக் கட்டிய மணல் தடுப்புகளும் கரைந்துபோக, அந்த வெள்ளத்தை
அணையிட்டுத் தடுக்கும் ஆரவாரத்தோடு விரும்பிநிற்கும் மக்கள் கூட்டம்,
முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற,
செழுமையான பல ஊர்களையும் கொண்ட மருத நிலப் பகுதிகளின் மக்களும் -
தினைப்புனத்தை உழுது வாழும் குறவர்கள், வரகுத்தாள்களை மேலே வேய்ந்த,
மணம் மிக்க காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறை முறையாய்ப் பகிர்ந்தளிக்கும்
புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லைநிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் -
பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய்,
செவ்வரக்கு போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு,
ஒளிவிடும் நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும்,
வானளாவ உயர்ந்த நின்ற மரங்களைக் கொண்ட காடுகளும் அவை சார்ந்த நிலங்களிலுள்ள மக்களும் -
முரசினையுடைய வேந்தர்களும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறிக்
கடலோரத்திலும், காடுகளிலும் அரண்களைக் கொண்டு வலிமையுடையோராய் இருந்தும் நடுக்கமுறும்படி,
மாறுபாடு மிகுந்து ஒலிக்கும் முரசின் கடுமையான ஒலி விசும்பினை அடைந்து அதிர,
மிகுந்த சினத்தைக் கொண்டு முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு,
கரிய கண்களையுடைய பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க,
இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
எறும்புகளும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக,
கரிய கண்களையுடைய காக்கைகளோடு பருந்துகளும் சேர்ந்து உண்ணும்படியாக,
பகைவருக்குப் பின்னிட்டு ஓடாத கொள்கையைப் பூண்ட, ஒளிரும் புள்ளிகளைக் கொண்ட கழலணிந்த கால்களையுடைய
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க,
போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது -
கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்.
					மேல்


 



நான்காம் பத்து		
      காப்பியாற்றுக்காப்பியனார்

# 31 பாட்டு 31
குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்
கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்
நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,
கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,
நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
நீலமணியின் நிறத்தைப் போன்ற கரிய இருள் நீங்கும்படி நிலவொளியைப் பரப்பி
பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று
வருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
வெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு,
இடிமின்னலுடன் கூடிய மேகங்கள் குளிர்ந்த நீரைப் பொழிய,
வடதெற்காகக் குறுக்கிட்டு நின்று தடுத்து விலக்கும் உச்சிகளில் மேகங்களை உடையதாகி,
குளிர்ச்சி நிறைந்த மலையாகிய சிறந்த மலையைப் போன்றது.
தேவர்களுக்குப் பயந்து வானத்தில் கட்டிய
தொங்குகின்ற கோட்டையின் கதவினைக் காத்துநிற்கும்
கணைய மரத்தை நிமிர்த்தி வைத்தாற்போன்ற பருத்த அழகிய வலிமையுள்ள முழவினைப் போன்ற தோள்கள் உன்னவை;
வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில்
கொடையால் வரும் புகழை நிலைநிறுத்திய வகைவகையான செல்வங்களைக் கொண்ட
வண்டன் என்பானைப் போன்றவன் நீ; வண்டுகள் மொய்க்கும்
செழிப்பான கூந்தலையும், அறம் சார்ந்த கற்பினையும்,
காதிலிருக்கும் குழைக்கு வெளிச்சம் தரும் ஒளிவிடும் நெற்றியையும், பொன்னாலான
அணிகலன்களுக்கு வெளிச்சமூட்டும் அழகிய வளைந்த வயிற்றையும் கொண்டு,
வானுலகில் நடமாடும் பெண்களுக்குள் சிறந்த
செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி;
நிலத்திலுள்ளோர் அதிர்ந்து நடுங்குமாறு முழங்காமல், வெற்றியினால் சிறந்து
உன் அகன்ற முரசு முழங்கும்; வேற்படை மொய்த்துக்கிடக்கும் போர்க்களத்தின் நடுவே,
ஒடுங்கிய பனைமாலை அணிந்த, பொன்னாலான கழலை அணிந்த வலிமையான கால்களையுடைய -
அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
அவரின் முதுகினில் வேல்களை வீசியெறியமாட்டார் - உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்
உன்னோடு சிரித்து உறவாடுவோருக்குப் பாதுகாவலாய் அமைந்து, பகைவர்க்கு
அச்சுறுத்தும் தெய்வம் தாக்கியது போன்றது உன் சேனை,
இவ்வாறு போர்த்தொழிலில் சிறந்து விளங்கும் அரசனே! மாட்சிமை பொருந்தியவனாவாய் பலவகையாலும்!
					மேல்
# 32 பாட்டு 32
மாட்சிமை பொருந்தியவனாவாய் பலவகையாலும்! போரில் மேம்பட்டு விளங்கும் குருசிலே! நீ!
நாற்புறத்தையும் ஒளிவிடச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும்,
முத்து உடைய கொம்புகளையுடைய இளமையான களிறுகள் பிளிறும்படி,
போர்வேட்கை மிகுந்து எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று
வலிமை முழுவதையும் காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார் மகிழும்படி,
கொடுத்து நிறைந்தும் அழியாத செல்வத்தையுடைய வளமும்,
வருந்துகின்ற குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும் ஆகிய
எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எண்ணினால் எண்ணிக்கைக் கழங்குகளும் முடிந்துவிடும்;
உன்னிடம் மிகச் சிறந்ததொன்றைக் கண்டு மருண்டேன், கொல்லுகின்ற போரையுடைய கொற்றவனே!
நெடுமிடல் என்னும் மன்னன் தோற்றோட, அவனது கொடிய வலிமை அழியும்படி,
பெரிய மலையைப் போன்ற யானையோடு பகைவரின் நாடு கெடும்படி அவர் நாட்டில் தங்கி,
பெரிய கால்களையுடைய நாரை நிலையாகத் தங்கி மீனைக் கவர்கின்ற
வளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய
தவறாத விளைச்சலையுடைய நாடுகளைக் கைப்பற்றி,
ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட
பகைவரின் நாட்டில் இருப்பினும்,
சினங்கொள்ளாது இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது!
					மேல்
# 33 பாட்டு 33
எனக்குண்டாகும் வியப்பு பெரியது! கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படையையுடைய அரசனே!
வடிவாக அமைக்கப்பட்ட மணிகள் தழுவிக்கிடக்கும் பக்கங்களையும், முரசு போன்ற வலிய கால்களையுமுடைய
யானைகளைக் காவல் மரத்தில் கட்டி,
ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு,
பகைவர் நாடு கெடும்படியாக நெருக்கமாய்ச் செல்லும் வரம்பு கடந்த வெள்ளம் போன்ற உன் படைகளுக்கு,
வாட்படையே மதில் ஆக, வேற்படை உயர்ந்த காவற்காடு ஆக,
வில்லிலிருந்து வேகமாக வெளிவரும் அம்புகளே கூர்மையான முள்வேலியாக,
சிவந்த வாயையுடைய படைக்கருவிகள் வளைவான அகழியாக,
மேகத்திலிருந்து இடிக்கும் இடியைப் போன்ற முழங்கும் முரசினையுடைய
காலாட்படையே வெல்லுதற்கரிய கோட்டை ஆக, பகைமேற் செல்லக் கருதினால்,
போர்புரிய எதிர்ப்பட்ட மன்னர்கள் புறங்கொடுத்து ஓடுவர் உன்னைவிட்டு.
					மேல்
# 34 பாட்டு 34
புறங்கொடுத்து ஓடுவர் உன்னைவிட்டு, ஒப்பற்ற பெரிய வேந்தனே!
புறங்கொடாத நிலைப்பாட்டைக் கொண்ட ஒளிவிடும் புள்ளிகள் உள்ள கழலை அணிந்த கால்களையும்
பெரிய நிலம் வரையில் தொங்குகின்ற விரிந்த நூலால் நெய்யப்பட்ட ஆடையினையும் உடைய உன் பகைவர் -
சிவந்த தலையாட்டமணிந்த குதிரையை ஓட்டிக்கொண்டும்,
நீண்ட கொடியையுடைய தேர் மீது ஏறிக்கொண்டும்,
முகபடாம் அணிந்து விளங்கும் அச்சம்பொருந்திய புள்ளிகளுள்ள நெற்றியையுடைய
பொன்னரிமாலை அணிந்த யானையினுடைய வலிமை பொருந்திய கழுத்தின் மீதிருந்தும்,
நிலைபெற்ற நிலத்தின்மீது இருந்தும் போரிடுகின்ற,
போரிடுவதிலிருந்து மாறாத வீரரின் வலிமை கெட்டுப்போகவும்,
முரசை முழக்கிச் செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக,
பகை மன்னர் பலரை வெல்லும் ஆற்றலையுடைய
சிறப்பு மிக்க வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால்.
					மேல்
# 35 பாட்டு 35
சிறப்பு மிக்க வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால்.
சான்றோரும் புகழும் தன்மைய ஆயின, பெருமை மிக்க உன் வெற்றி -
பெரிய களிறுகளான யானைகளின் ஒளிருகின்ற நீண்ட தந்தங்களுடன்,
நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில்,
பெடையையுடைய சேவல்கள் தம் சுற்றத்தோடு இறைச்சியாகிய உணவை மிகுதியாய் உண்ண,
தலைகள் துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய,
அந்தி மாலை நேரத்தில் வானத்தைக் கண்டது போன்ற
சிவந்த ஒளியையுடைய குருதி படிந்த போர்க்களத்து நடுவே
பேய்கள் எழுந்தாடுகின்ற வெல்லுகின்ற போரினால்
குன்றாத புதுச்செல்வங்கள் வந்தடைந்தன, உன்னிடத்தில் -
					மேல்
# 36 பாட்டு 36
குன்றாத புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில்
குறைபடாததாகும், மிகுதியாகப் பெற்ற வலிமை;
வெற்றி நிறைந்த உள்ளத்தோடு, புதுமையாக வந்த போர்களை வென்று,
போரில் சிறந்த வலிமை பொருந்திய வீரர்களுடன் கூடிச் சென்று,
பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான
யானைகள் இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக் களத்தில்
குதிரைகள், யானைகள், வீரர்கள் ஆகியோரின் வீழ்ந்துகிடக்கும் பிணங்களை உண்ணும்பொருட்டு,
இட்டுவைத்தாற் போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும்,
புல்லிய முதுகையும் கொண்ட பருந்தின், பெடையோடு சேர்ந்துவாழும் சேவலை,
குடுமியைக் கொண்ட கழுகுடன், இழுத்துக்கொண்டு கீழே இறங்கிப் பாய,
பள்ளமான இடத்திற்குப் பாய்ந்துசெல்லும் வெள்ளத்தைப் போல, நீண்ட குவியல்கள் பலவற்றைச் சுமந்துகொண்டு,
அச்சம் பொருந்திய கூளிக்கூட்டம் உண்டு மகிழ்ச்சி மிகுந்து கூத்தாட,
குருதியாகச் சிவந்த வெள்ளம் பெருக்கெடுத்தோட,
போர்கள் பலவற்றைச் செய்வாய்! வாழ்க உன் வளம்!
					மேல்
# 37 பாட்டு 37
- வாழ்க உன் வளம்! வாழ்க உன்னுடைய வாழ்நாள்!
வாய்மையே உரைக்கும் சான்றோர், உன்னுடைய புகழைப் போற்றிப் பாட,
பகைவர்க்கு அதிகமான துன்பத்தைச் செய்து,
நீ நகைத்து உறவாடுவோர்க்கு அதிகமான நல்ல அணிகலன்களை அள்ளிக்கொடுத்து,
நற்குணங்களால் நிறைந்து, பணிவுடன் நடந்து, புலன்களை அடக்கியாளும் குற்றமற்ற தலைவனே! 
வானைத் தொடும் உன் நல்ல புகழ் உலகமுள்ளளவும் வாழ,
வருந்துகின்ற குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும்,
கரிய பெரிய பனந்தோட்டு மாலையையும், பெரிய வீரக் கழலையும், சூடிக்கொண்டு,
பகை மன்னர்களின் மதில்களை அழித்து, அவர்களுடைய வீரர்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்து,
பழமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய உன் ஆட்சியின் கீழ் வாழ்பவர்க்கு இணையாக,
அவரின் மனக்கோட்டம் தீர்ந்துபோகுமாறு திருத்தி வைத்த மனக்கோட்டமற்ற கோட்பாட்டையும்
மிகவும் மிகுதியாகக் கொண்டிருக்கிறாய் நீ!
கடுமையான திறத்தையுடைய வேந்தனே! இந்த உலகத்தார்க்காக -.
					மேல்
# 38 பாட்டு 38
இந்த உலகத்தாரில் பலர் இருக்கிறார்கள் செல்வர்கள்,
அவர் எல்லாரிலும் உனது நல்ல புகழே மிகுந்திருக்கும்!
பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்,
சிவந்த தலையாட்டத்தைக் கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும்,
நல்ல வேலைப்பாடு அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே!
பரிசிலர்களின் செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே!
ஒளி பொருந்திய நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே!
குற்றமின்றி விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே!
பழிச்சொல் இல்லாத செல்வத்தையுடையவனே! வானவரம்பனே!
உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, 'அவற்றைத் தனித்தனியே நுகருவோம்,
கொண்டுவாருங்கள்' என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால் -
					மேல்
# 39 பாட்டு 39
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்,
எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் - உன் வீரத்தை விளக்கிக்கூறும் வீரர்கள்!
போர்த்தொழிலின் முழுமையையும் கற்றறிந்த, கடுமையையுடைய தும்பை மாலையைச் சூடிய,
சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி
குறுந்தடியால் ஓங்கி அடிக்க ஒலிக்கின்ற. படைவீரரைப் போருக்கும் ஏவிவிடும் அகன்ற முரசம்
இடிபோல் அதிர்ந்து முழங்க, போர்வெறி மிகுந்து,
அடங்காதாரின் கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும்
காலனைப் போன்றவன் நீ, கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே!
வெண்மையான பருத்தி நூலால் இழைக்கப்படாத, நுண்ணிய மயிர் போன்ற இழைகளையுடைய,
பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்,
புன்மையான முதுகினைக் கொண்டதுமான புறாக்களின் கூட்டமான வரிசைகள் பயந்து ஓடும்படியாக,
சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில்,
சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,
சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி -
					மேல்
# 40 பாட்டு 40
உனது போரினைப் புகலிடமாக விரும்பிய சுற்றத்தோடு, ஊரின் முன்பகுதியில்
தங்கிவிடாமலிருப்பாராக! பெருமானே! உன் படைகள்' என்று
இனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடிக்கும்
முரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,
'காய் காய்த்த கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில்
வந்து நிலையாகத் தங்கியுள்ளது சேனை, அவ்விடத்தில்
நம் துயரைத் தீர்ப்பவர் சேரனைத்தவிர யார் இருக்கிறார்கள் இனி வேறே' என்று இறைவனைத் தொழுது,
பகைவரின் நிலையான கோட்டைக்குள்ளிருக்கும் வீரர்கள் ஓசை அடங்கிப்போய் வெளிவராமல் இருக்க,
வேறு பகைவரும் அழியும்படி, தும்பைப் பூ மாலையினைச் சூடிக்கொண்டு, வஞ்சினம் கூறி,
வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய அரிய போரினை
அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த,
வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
பகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஒளிவிடும் பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த
முன்னணிப்படையினரை மிகுதியாகக் கொண்ட, வலிமையுள்ள நார்முடிச் சேரல்,
புல்லிய அடிப்பகுதியையுடைய உன்னமரம் பகைவரின் தோல்வியைக் குறியிட்டுக்காட்டி வாடி நிற்க, தெளிந்த கள்ளில்
சிறிதளவே சேர்மானப் பொருள்கள் கலக்கப்பட்ட அரியல் என்ற கள் இரவலரை வேறு ஏதேனும் குடிக்கவிடாமல் தடுக்க,
தான் தனக்கெனத் தருவித்து உண்ட பூ அரும்புகளால் சமைக்கப்பட்ட நறவு என்ற கள்ளினை உண்டுகளித்து,
அருவிநீர் இனிமையாக ஒலிக்கும் மலைச் சரிவையுடைய நேரிமலையில் இருக்கிறான்!
செல்வாயாக! சிலவாகிய வளைகளை அணிந்த விறலியே!
மலர்ந்த வேங்கை மரத்தைப் போல ஒளிரும் அணிகலன்களை அணிந்து
மென்மையான இயல்பினையுடைய மகளிரின் அழகு நலம் சிறந்திருக்க,
பாணர்கள் பசும்பொன் மாலையைச் சூடியிருக்க, இளையவர்கள்
இனிய களிப்பால் வழுவாத மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய் பெரிய போர்க்களத்தை வாழ்த்த,
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் - தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக, 
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு - நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
					மேல்






ஐந்தாம் பத்து		
      பரணர்

# 41 பாட்டு 41
முறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை நிறைவுற்ற
வளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,
தாளங்களைத் தட்டிப்பார்த்து அமைக்கப்பட்ட மத்தளமும், ஒரு கண் பறையும், பிறவும்
மூங்கிலின் கணுக்களை அறுத்துச் செய்யப்பட்ட பெருவங்கியத்தோடு சேர்த்துக்கட்டி
காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்
யாழிசைப்பதில் வல்லவரான இளையோர் கடவுளை வாழ்த்திக்கொண்டுவர,
வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு,
மலையினைச் சார்ந்து நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின்
பூக்களைக் கொண்ட பெரிய கிளையை வளைத்து, அதனைப் பிளந்து தன்
கரிய பெரிய தலையுச்சி அழகுபெறச் சூடிக்கொண்டு,
திரளாக வருகிற பகைவர்மேற் செல்லும் படைவீரர்கள்
தண்டினை வலதுகையில் ஏந்தியவராய்ப் போரை எதிர்கொண்டு ஆரவாரிப்பதைப் போல,
சுரபுன்னைகள் செறிந்து இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற,
மழை பெய்வது மாறிப்போன, மூங்கில்கள் உலர்ந்துநிற்கும் அரிய வழிகள்
ஒன்றோ, இரண்டோ அல்ல, பலவற்றைக் கடந்து, திண்ணிய தேரையுடைய
பழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்!
வருந்துவதிலிருந்து உய்வு பெறுமோ? - தவறாமல்
தமது சூளுரையைச் செய்து முடிக்கும் பேச்சு மாறாத வீரர்கள்,
முரசுகளையுடைய பெரிய போரில் அரசர்கள் பலரை வெற்றிகொண்டு,
போர்வெம்மையின் மிகுதி பெருக, பகைவரை,
மிளகினை இடிக்கும் உலக்கையைப்போல் அவரின் பெரிய தலைகளைத் தோமரத்தால் இடித்து அழிக்க,
நிலைத்திருக்கும் ஆரவாரம் உண்டாகும் கருமை படிந்த கடற்பரப்பைப் போல்,
எடுத்து எறிதலை ஏவிய குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற அகன்ற முகப்பையுடைய முரசு,
வெற்றியால் உண்டாகிய புகழொலியோடு, ஒன்றாகக் கூடிச் சேர்ந்து முழங்க,
காற்றால் மோதுண்டு சிறு சிறு கடிய திவலைகளாக உடையுமாறு, வெண்மையான தலையாட்டமணிந்த
விரைவான ஓட்டத்தையுடைய புரவியில் ஏறிவந்த உன்
ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ந்த கடலில் போரிட்ட உன் கால்கள் -
					மேல்
# 42 பாட்டு 42
கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும், பொன்னால் செய்த பெரிய வீரக் கழலினையும் உடையோராய்
மீனைத் தெரிவுசெய்ய உயரத்தே சுற்றிச்சுற்றிவந்து, குளிர்ந்த குளத்தில் பாய்ந்து மூழ்கி
மீன்கொத்திப் பறவை மீண்டு எழுவதைப் போல, நெடிய வெண்மையான ஊசி
நீண்ட பிளவினில் தைத்த தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட,
அம்புகள் தைத்த உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல்,
மற்றவரோடு தும்பை மாலை சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய
அத்தகையவருக்குத் தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே!
தலைமை சான்ற யானைகளையும் எதிர்த்து அழிக்கும் போராற்றல் மிகுந்த குட்டுவனே!
பகைவரின் வலிமையை உடைக்கும் நல்ல போரில் எதிர்நின்று வெற்றியைத் தந்து,
இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,
சந்தனத்தை வெளியில் பூசிய கள்குடங்கள் சமைக்குக்கும்போது ஆடுகின்ற அடுப்புகளிலிருந்து
இனிய சுவைமிகுந்த சாறு வடிக்கப்பட்ட நீலமணி போன்ற தெளிந்த கள்ளினைத்
தனக்கென்று வைத்துக்கொள்ளாத ஈகையால் மிகுந்த களிப்பினை அளித்து,
கூத்தர்களின் பெரிய சுற்றம் செழித்து வாழ, ஆடும் இயல்பினையுடைய
தலையாட்டம் சிறந்துவிளங்கும் செருக்குள்ள குதிரைகள் கொடுக்கப்பட்டவற்றை எண்ணினால்,
மக்களெல்லாம் வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று,
முன்னால் செய்த போரை, அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக -
ஒளிர்கின்ற நிலையையுடைய உயர்ந்த தந்தங்களை ஏந்தியபடி இருக்கும் களிறின் மீது ஏறி வந்து
மானத்தையுடைய வலிமை மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, - உன்
தேருடன் சேர்ந்த வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க,
கரிய பெரிய தெளிந்த கடலின் மிக்க அலைகளையுடைய நீர்ப்பரப்பில்
நுரையாகிய வெண்மையான உச்சி நிறமுள்ள திவலைகளாக மோதி உடைய,
குளிர்ச்சியாகவும் பலவாகவும் வருகின்ற அலைகளைக் காட்டிலும் பலவே!
					மேல்
# 43 பாட்டு 43
கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்,
ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,
உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும்,
பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால், அவற்றுக்குள்
தமக்குப் புதுமையாகத் தோன்றித் தாம் விரும்பும் பெண்யானைகள் எண்ணிப்பார்க்கும் எண்ணிக்கையில் அடங்கப் பெறாத,
தெய்வங்கள் நிலைபெற்றிருக்கும், பெரும் பாறைகள் உயர்ந்து நிற்கும் மலையான
வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக,
தெற்கில் உள்ள குமரியோடு, இவற்றுக்கிடையே உள்ள அரசர்களின்
முரசுகளையுடைய பெரிய போர் அழிந்துபோக, அதனால் ஆரவாரம் மிகுந்து எழ,
புகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,
போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த குட்டுவனே!
பெரிய மூங்கில்கள் வாடிப்போகுமளவுக்கு மிகுந்த மழை பெய்யாமற்போக,
குன்றுகளில் வறட்சி மிகுந்திருக்க, ஞாயிறு சினந்து வெப்பம் மிக்குத் திகழ,
அருவிகள் நீர் அற்றுப் போன பெரும் வறட்சி நிலவுகின்ற காலத்திலும்,
கடப்பதற்கரிய நீரோட்டத்தையுடைய பெரிய ஆற்றின் பெரிய கரையை உடைத்துச் செல்லும்படியாகவும்,
புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்,
எண்ணற்ற அதிர்கின்ற முழக்கங்களை முழங்கி, மழை மிகுந்து,
பெருத்த ஆரவாரத்தையுடைய வானம் துளிகளைச் சொரிவதைப் போல,
தான் அன்புகொண்டவர் நிரம்ப உண்ணும்படி, தனக்கென எதனையும் வைத்துக்கொள்ளாமல் அவருடன் உண்டு,
தான் சிரித்து உறவாடுவோர் நிரம்பக் கொள்ளும்படி நல்ல அணிகலன்களை வாரி வழங்கி,
ஆடுகின்ற சிறகுகளையுடைய கின்னரப்பறவையை வெல்லுகின்ற யாழ்நரம்பின் இனிய இசையோடு சேர்ந்த இனிய குரலில்
பாடுகின்ற விறலியர் பல பெண்யானைகளைப் பெற்றுக்கொள்க;
மேலே பஞ்சு போன்ற முடியினைக் கொண்ட வாகைப்பூவும், நுண்ணிய கொடியில் பூக்கும் உழிஞையும் சூடுகின்ற
வெற்றியை விரும்பும், பகைவர்க்கு அச்சம்தரும் சிறப்பினையுடைய,
பகைப்புலத்தைக் கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க;
ஊர்ப்பொதுவிடத்தில் பரவித்திரிந்து, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் சென்று
சிறிதாக வெட்டப்பட்ட நுண்ணிய கோலைக் கையில் ஏந்திக்கொண்டு, அரசனின் போர்வெற்றியை வாழ்த்திப் பாடும்
பாணன் பெற்றுக்கொள்க குதிரைகளை என்ற - எப்பொழுதுமே
போராகிய தொழிலை விரும்புவதால், பகைவர்களும்
மனம் அடங்காமல் புகழ்ந்த, தூங்கல் ஓசையினைக் கொண்ட முழவினையுடைய, 
அழையாத கல்வியினையுடையவனே!  - உனது செல்வமிக்க நிலையைக் கண்டோம் -
நிணத்தைச் சுடுவதால் உண்டான புகையுடன் நெருப்பு தன் வெம்மையை நீங்காமல்
நிரம்புதலும் அகலுதலும் இல்லாத, கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள
நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே! உன்னுடைய மகிழ்ச்சிமிக்க அரசவையில் -
					மேல்
# 44 பாட்டு 44
நிலத்தையே உடைப்பது போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல்
வானத்தில் தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட,
எவ்வளவு பெருமையுடையதாயினும், போரில் வெற்றியடைந்து பெற்றவைகளை,
மிகவும் அரியவை என்று எண்ணாமல், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கி,
அணிகலன்களை மிகவும் கொடுப்பதை அன்றி, கனவிலும்
என் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையும்,
பெருமித நடையையுமுடைய அண்ணலே! உன்னைப் பாடுகின்ற பாடினி காண்பாளாக -
 - காணாமலேபோகட்டும் - உன்னைப் புகழ்ந்த யாக்கையாகிய,
மிக்க வலிமை பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை -
நுண்ணிய கொடியையுடைய உழிஞையின் பூவைச் சூடிய, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பவன்
தோலைவில் இருந்தாலும் உன்னை நண்பன் என்று கூறிக்கொண்டு,
பகைவர்க்கு அஞ்சி தன் இடத்தை விட்டுப் பெயர்ந்து ஒளிந்திருந்த நீக்கமுடியாத சச்சரவிற்கு,
அரண்களைக் கடந்து, தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற் போல,
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே! திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக்
கவலைப்படச்செய்து வருத்தும் பென்கூகையையுடைய பாழ்நிலத்தில்,
முரசினை உடைய, பரம்பரையாக அரசுரிமை பெற்ற, வேந்தர்கள் பலரை வென்று
அசைகின்ற கடல் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்து, தம் வாழ்நாளை இனிதே கழித்து இறந்துபோன
மன்னர்களை உள்ளிட்டு மூடிமறைத்த தாழிகளைக் கொண்ட
வன்னி மரம் நிற்கும் ஊர்ப்பொதுவிடத்தில் விளங்கிய இடுகாடு -(- காணாமலேபோகட்டும் - - உடம்பினை.)
					மேல்
# 45 பாட்டு 45
பொன்னால் செய்யப்பட்ட தும்பைப் பூவையும், புள்ளிகள் பொருந்திய அம்பறாத்தூணியில்
புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்,
களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினையும்,
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,
ஏழுஅரசர்களின் மணிமுடியினின்றும் செய்யப்பட்ட பதக்கத்தை மார்பினில் அணிந்த சேரலே!
ஆழமான இடத்தையுடைய அகழிகளைக் கொண்ட மதில்கள் பலவற்றை வெற்றிகொண்டு,
முன்னர் பலகாலங்களின் பலமுறை உள்ளே புகுந்து அங்குள்ள பொருள்களைக் கொண்டு அழித்த
நாடு பொருந்திய அரசுரிமையுடைய, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின்
கதவினைக் காக்கும் திரண்ட எழுமரத்தைப் போன்ற
பகைவர் நாடுகளைப் பெறும் திண்மையான தோளினை உயர ஓங்கித் தூக்கி,
பிணங்கள் குவிந்துகிடக்கும் போர்க்களத்தில் துணங்கைக்கூத்து ஆடி,
சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து,
முள்வேலி இடுவதை அறியாத எல்லையையும், பகைவரின்
வில் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும்,
அத்தகைய பண்பினையுடைய சேனையையுடைய வேந்தர்
இப்பொழுது வேறு யார் உள்ளாரோ? உனக்கு  முன்னாலும் இல்லை,
மேகங்கள் உறிஞ்சிக்கொள்வதால் குறையாமலும், ஆற்று வெள்ளம் புகுவதால் நிறையாமலும் இருக்கின்ற -
குறுக்கிட்டுத் தடுக்கும் காற்று செலுத்துதலால், அசைகின்ற, மிக நிறைந்த சூல்கொண்ட மேகங்களின்
ஒளிர்கின்ற மணி போன்ற மின்னலைப் போன்று வேலினைச் செலுத்தி,
- முழங்குகின்ற அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடத்தில் பகைவரைப் போரிட்டு அழித்தவர்கள் -
					மேல்
# 46 பாட்டு 46
அணிகலன்களையும், காதணிகளையும், நறிய குளிர்ந்த மாலையினையும் அணிந்த,
நிமிர்ந்தெரியும் சுடர் போன்று ஒளிரும் வளையல்களைச் செறிவாக அணிந்த முன்னங்கைகளையும்,
மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்,
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலைக் கொண்டையாக முடித்து அலங்கரித்துக்கொண்ட மகளிர்,
நரம்புகள் இறுக்கமாகக் கட்டப்பட்ட பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்து,
பகைவருக்குப் பணியாத மரபினையுடைய உழிஞைத் திணையைப் பாட,
அவர்களை நன்கு உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் -
பாலைவழிகள் பலவற்றைக் கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள்
தான் செல்லுகின்ற போக்கில் எண்ணற்ற பசிய தலைகளைத் துண்டாக்க,
பல போர்களை வென்ற, கொல்லுகின்ற களிறாகிய யானைகளையுடைய,
சங்குகள் முழங்கும் கடல் கலங்கும்படி, வேற்படையைச் செலுத்தி,
எழுந்து உடையும் அலைகளையுடைய நீர்ப்பரப்பாகிய ஒலிக்கின்ற கடலில் பகைவரைத் தோற்றோடச் செய்த
வெற்றியால் கிடைக்கும் புகழை உடைய குட்டுவனைக் கண்டோர்
செல்வோம் என்று சொல்லமாட்டார், பாடிவிட்டுத் திரும்ப அவரது ஊருக்கு -
					மேல்
# 47 பாட்டு 47
பகைவரோடு போரிட்டது போதும் என்று ஓயமாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும்போதெல்லாம்
பெற்று ஓயமாட்டார், பரிசிலர், களிறுகளை;
மலைமேலிருந்து விழும் அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து
காற்றால் அலைக்கப்படும் ஒளிவிடும் கொடிகள் ஆடி அசையும் தெருவில்
சொரிகின்ற சுரை பெற்றுக்கொண்ட நெய் வழிந்து பரவுதலால்
பாண்டிலாகிய வட்ட விளக்கில் பருத்த சுடர் ஆடிக்கொண்டு எரிய,
நல்ல நெற்றியைக் கொண்ட விறலியர் ஆடுகின்ற
பழமையான மாளிகையுள்ள ஊர்களில் அவனது புகழுரைகள் ஓயமாட்டா.
					மேல்
# 48 பாட்டு 48
பசும்பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பாணருக்குச் சூட்டி,
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலிகளுக்குப் பொன்னாற் செய்த மாலைகளை அணிவித்து,
நிலையில் தாழ்ந்துபோகாத பலவான புகழை நிலைநாட்டி, கடலுக்குள் சென்று,
கடற்பகைவரோடு போரிட்டு வெற்றிபெற்ற, குளிர்ந்த துறைகளைக் கொண்ட பரதவனே!
அங்கு, நீரில் பெற்ற அரும் பொருள்களை, இங்கு இவரின்
மனம்கொள்ளாப் பாடலுக்கு எளிதிலே வழங்கும்,
கொடுத்தலையன்றித் தனக்கென வைத்துக்கொள்ளுதலைக் கல்லாத வாய்மையையுடையவன் இவன் என்று, அவரவர்,
இசைப்பதில் வல்லவர்களாகிய இளையவர்கள், தங்களின் ஒத்த கைகளை வரிசையாக நீட்ட,
வேண்டியவர்க்கு வணங்கிய மென்மையினையும், வேண்டாதோர்க்கு வணங்காத ஆண்மையினையும், கொண்டு
பகைவரின் ஊர்களைச் சுடுகின்ற மிகுதியான நெருப்பை எரிப்பதால், மிகவும்
பூவிதழ்கள் தம் அழகழிந்துபோன மாலையோடு, பூசிய சந்தனம் புலர்ந்துபோன
பலவாகிய புள்ளிகளையுடைய மார்பையுடையவனே! உன் பெயர் வாழட்டும் -
உனது மலையில் பிறந்து, உனது கடலில் சென்று கலக்கும்
மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும்
சோலைகளில் தங்கியிருந்து செய்யும் வேனில் விழாவும் கொண்ட பெரிய அழகிய வாழ்க்கையில்
உன்னை விரும்பிச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரோடு உண்டு, இனிமையாகத் துய்த்து,
இனிய வெள்ளத்தில், மக்கள் கூட்டம் நீர்விளையாட்டு ஆடுகின்ற
காஞ்சி என்னும் ஆற்றின் அழகிய பெரிய துறையிலிருக்கும் மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் -
					மேல்
# 49 பாட்டு 49
- நாங்களும் செல்கிறோம், நீங்களும் வாருங்கள்,
முன்னும் பின்னும் அசைகின்ற மாலையினையும், பக்கவாட்டில் அசைந்தசைந்து நடக்கும் இயல்பினையும் உடைய விறலியரே!
பாடும் திறத்தால் வாழும் வாழ்க்கையினையுடைய உம்முடைய சுற்றத்தவர் இனிதே உண்பார்களாக -
யானைப்படை பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் தாங்கித்தாங்கி நடக்க,
ஒளிவிடும் கொடிகள் அசைந்து ஆட, தேர்கள் விலகி விலகி வளைந்து செல்ல,
வேல்களை எறிந்துகொண்டு மேற்செல்லும், பகைவரின் பக்கவாட்டுப் படைகளை அழிக்கின்ற விரைவான முன்னணிப்படையும்,
வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
மார்பிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி,
மழை நாளின் வெள்ளம் போலச் செங்கலங்கலாக, பள்ளங்களை நோக்கிப் பாய,
செத்து விழுகின்ற பிணங்கள் குவியும்படியாக மிகுதியான சீரழிவைச் செய்து,
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசு போர்க்களத்து நடுவே வெற்றியை முழங்க,
பகைவரின் வளம் எல்லாம் அற்றுப்போகுமாறு கொள்ளை நிகழ, இருந்து வாழக்கூடிய இளையர் பலர் இறக்கும்படி செய்து,
கரிய கிளைகளையும், வலிமையினையும் உடைய வேம்பினை வெட்டி வீழ்த்திய,
மிகுந்த சினத்தைக் கொண்ட குட்டுவனைக் கண்டு வருவதற்காக -
					மேல்
# 50 பாட்டு 50
பெரிய மலையில் மேகங்களின் முழக்கத்தினால் விலங்குக் கூட்டம் அஞ்சி நடுங்க,
காற்றோடு கலந்து வேகமாகப் பெய்யும் மழை, ஆலங்கட்டிகளோடு சிதறிப் பொழிய,
கரும்புகள் நெருங்கி வளர்ந்த கழனிகளையுடைய நாடு வளத்தை மிகுதியாகத் தர,
வளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து,
நேர் கிழக்காக ஓடும் கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய,
காவிரியோடு கூட, பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள்
மூன்றும் ஒன்று கூடும் முக்கூடல் போன்றவன் நீ!
கொல்லுகின்ற களிறுகள் வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க,
உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,
பலவாறான முரசங்கள் கலந்து முழங்குகின்ற ஒலியினைக் கேட்டு வெருண்டுபோன வேந்தர்களுக்குப்
பாதுகாப்பாகிய அச்சம் தரும் வெள்ளமாகிய முன்னணிப்படை,
மலையின் மேலும், கடலிலும், பிற இடங்களிலும் உள்ள
அரண்கள் அமைந்த போர்களை வென்று, அச்சம் பொருந்திய
வீரர்கள் நிறைந்த இடங்களையுடைய நாடுகளைக் கைப்பற்றி,
நல்ல புகழ், இந்த அகன்ற உலகில், கெட்டழிய, பகைவரின்
சினமாகிய தீ முற்றிலும் அணைந்துபோகுமாறு நிறைவுசெய்தாய்! எனவே பூசிய சந்தனம் புலர்ந்துபோக,
மேனியின் ஒப்பனைகள் துடைக்கப்பட, பலவகையாக அழகு சேர்ந்த
கோடுகளைக் கொண்ட வண்டுகள் ஒலிக்கும், உன் மார்பினால் ஒன்றுசேர்க்கப்படும் மகளிரின்
விரிந்த மெல்லிய கூந்தலான மென்மையான படுக்கையில் இருந்து,
வருத்துகின்ற காமமாகிய நோயை நீக்கும்பொருட்டு, அவரின் மார்பைச் சேர்ந்திருக்கும் அணைப்பினால்
இரவுப்பொழுதின் பயனைக் கொள்ளும் முறைமையினால் - சிறிய தூக்கத்திலிருந்து விழிக்க
எத்தனை நாட்கள் கழியுமோ? பெருமானே! பல நாட்கள்,
பகைவர்மீது கொண்ட பகைமையின் வெம்மையினால், பாசறையில் தங்கியிருப்பதால்
தூக்கம் என்பது அரிதாக அமைந்த சிறிய துயிலும் கொள்ள இயலாமல்,
சங்கொலி முழக்கமும், பிற கருவிகளின் இனிய ஓசையும் எழுப்பிவிடும்
பெருமை பொருந்திய போர்ச்செல்வத்தில் பழகிப்போன உன் கண்களுக்கு -
					மேல்







ஆறாம் பத்து 		
      காக்கைபாடினியார் நச்செள்ளையார்

# 51 பாட்டு 51
அசைகின்ற நீரையுடைய அகன்ற கடற்பரப்பு கலங்கும்படி காற்று மோதுவதால்
ஒளிவிட்டு எழுகின்ற பெரிய அலைகள் இடி போல முழங்கும்
கடலைச் சேர்ந்த கடற்கரைச் சோலையுள்ள மேற்கு நிலப்பகுதியை நோக்கிச் சென்று,
பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை,
குவிந்த பூங்கொத்துகளையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையில் சென்றுதங்கும்,ழ்ர்
வண்டுகள் தங்கியிருக்கின்ற குளிர்ந்த கடற்பரப்பில்,
அடம்பங்கொடிகள் நெருங்கி வளர்ந்த இறுகிய கரையினில் நண்டுகள் ஊர்ந்துதிரிந்ததனால் ஏற்பட்ட
சுவடுகளை அழிக்கும்படியாக நுண்ணிய குறுமணலை ஊதைக் காற்று வீசியெறியும்
தூய்மையான பெரிய பனைமரத் தோப்பினில், அலங்காரத்தால் பொலிவுற்று விளங்க,
நடந்துகொண்டும், நடுங்கிக்கொண்டும் ஆடுகின்ற இளைய மகள்
தெய்வம் ஏறும்போது வளைந்து வளைந்து ஆடுதல் போன்று தோன்றி,
பெரிய மலையின் இடங்கள்தோறும் குறுக்கிட்டு ஓடும், அரிய மணிகளைக் கொண்ட,
பாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை,
சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல்,
கிழக்கிலும், மேற்கிலும் கடல்கள் ஆகிய இவற்றிடையே உள்ளோர் கூடிச் சேர்ந்த
பந்தலின் உள்புறத்தை வேய்ந்தாற்போல,
வளமை மிக்க மலர்ந்த கண்போன்ற நெய்தல் மலர்கள்
தேனைக் கொண்ட நறவம் பூக்களோடு, நாடு முழுவதும் மணங்கமழ,
ஒளி திகழும் நெற்றியினையும், கபடமற்ற பார்வையினையும்,
மிகுந்த ஒளியினால் பொலிவுபெற்ற பளிச்சிடும் பற்களையும்,
அமுதம் போன்ற மொழியினைக் கொண்ட சிவந்த வாயினையும், அசைகின்ற நடையினையும் உடைய விறலியரின்
பாடல்களை நிரம்பக் கேட்டு நீண்டநேரம் இருத்தலால்
வெள்ளிய வேலினை ஏந்திய வேந்தன் மென்மையான இயல்பினன் போலும் என்று
நினைப்பார்களோ உன்னை நன்கு தெரிந்துவைத்திராதவர்கள்? -
மேகங்கள் தவழும் பெரிய குன்றுகளில் வாழும்
வருத்துதலையுடைய பாம்புகளைத் தாக்கி,
மிக்க சினத்தையுடைய அவற்றின் வலிமையை அழிக்கும்
பெரும் முழக்கத்தையுடைய மேகங்களினின்றும் இறங்கும் இடியைப் போன்றவன் நீ!
எதிர்த்துவரும் பகைவரின் பெரிய கையையுடைய யானையின் பூண் அணிந்த கொம்புகளை முறிக்கும்
வாளையுடைய வெற்றிவீரர்கள் உன் படையினில் வாழ்பவர்கள்;
வீரம் பொருந்திய பனையின் வெண்மையான தோடுகளால் செய்யப்பட்டு
பகைவரின் இரத்தத்தால் நிறம் மாறிப்போன உன் தலைமாலையைப் பருந்துகள் கொத்திச் செல்ல நேரம் பார்த்திருக்க,
உன் வலிமையான அம்புகள் பாய்ந்து கிழித்த, பகைவரின் கரிய கண்ணையுடைய தண்ணுமையை,
இசைக்கும் தொழிலில் வல்ல இளையர்கள் கையால் தட்டி இசைப்பதைத் தவிர்க்க,
மாற்றமுடியாத சீற்றத்தையுடைய கரிய, பெரிய கூற்றுவன்
கொல்வதற்காக வலைவிரிப்பதைப் போன்ற பார்வையினை உடையவனே!
அச்சத்தையூட்டுகின்றாய்! நெடுந்தகையே! போர்க்களத்தில்.
					மேல்
# 52 பாட்டு 52
கொடிகள் அசையும் நிலையையுடைய கொல்லுகின்ற போர்யானைகள் நெருக்கமாகத் திரிவதால்
நன்றாக வடிவமைக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேர்களை வேறு இடங்களில் பரவச்செய்து,
அரிய பொருள்களைக் கொணர்வதற்காக, கடலின்மேல் நிமிர்ந்து செல்லும்
பெருத்த ஆரவாரத்தையுடைய கப்பல்கள் தத்தம் திசைகளில் திரிந்துகொண்டிருப்பதைப் போலப் படைகளை இயக்கி,
மழைமேகத்தை அணிந்துகொண்டிருப்பதைப் போல எழுந்துநிற்கும் கரிய, பெரிய பலவான கேடகங்களுடன்,
மெய்யை மறைக்கும் கவசங்கள் வேண்டுமென்று எண்ணாமல், வேல்களைச் சுமந்துகொண்டு
போரின் முன்னணியில் நிற்கும் மனவுரம் மிகுந்த வீரர்களின்
தோற்காத நிலையுள்ள தும்பைப்பூ மாலை, பகைவர் நடுவே விளங்கித் தோன்ற,
விண்ணுலகை அடைந்தனராகப் பகைவர் பலரும் மடிய,
நல்ல போர்களைப் போரிட்டு வென்ற உன் இடி போன்ற பெரிய கை,
வேண்டிக் கைநீட்டுவோருக்காகக் கவிகிறதேயன்றி, பிறரிடம் வேண்டி
உன் கைகள் விரிந்திருப்பதை அறியமாட்டா என்பதைக் கேள்விட்டிருக்கிறோம்; இப்பொழுது
ஒளிர்கின்ற பாண்டில் விளக்கின் இறைத்தன்மை இனிமையாக வெளிப்படும் வெளிச்சத்தில்,
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,
முழங்குகின்ற வலிமையான காளையினைப் போல, முதல்கை கொடுத்து, நீ
பெண்களுடன் நெருக்கமாக நின்று சுற்றிவருவதைக் கண்டு, ஊடல்கொண்டவளாய்,
அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும் உடைய உன் மனைவி
ஒளிவிடும் இதழ்கள் விரிந்த பூவின் உட்புறத்தைப் போன்ற சிறிய அடிகளில் அணிந்துள்ள
பல மணிகளைக் கொண்ட இரண்டு சதங்கைகளும் தன் சிறிய கணுக்காலை வருத்த,
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், "நீ எமக்கு
இனி யாரோ?" என்று அந்த இடத்தை விட்டு நீங்கிச் செல்பவளின் கையினில் இருந்த குவளை மலரைச்
சட்டென்று வெகுண்ட பார்வையுடன் அதனை நீ
பறித்துக்கொள்ளுவதற்கு இயலாதவனாய் ஆகிவிட்டாய்; ஆனால் இதனைப் பறித்துக்கொள்ள
எவ்வாறு உன்னால் முடிந்தது? வாழ்க! உன் தலைமாலை!
அகன்ற கரிய வானத்தில் பகல்காலத்துக்கு இடம் தருவதற்காக,
சுடுகின்ற கதிர்கள் ஒளிர்கின்ற நிறம் பொருந்திய ஞாயிற்றின்
உருவத்தையும், எழுச்சியுற்ற இயல்பினையும் கொண்ட,
வெண்கொற்றக்குடையையுடைய வேந்தரின் வானளாவ நிற்கும் கோட்டைகளை -
					மேல்
# 53 பாட்டு 53
பகைவரை வென்று, அவரின் செல்வத்தைக் கொணர்வதற்காக, அவர் நாட்டில் நினைத்த இடத்தில் தங்கி, அவர் தம்
குன்றாத புதுவருவாயையுடைய நாட்டையே திறையாகக் கொடுத்து,
'அருள்செய்பவனாய் இருப்பாய் எம்மிடம்" என்று வேண்டி நிற்க, அவருக்கு அருள்செய்து,
மலைகள் சுடரிட்டு விளங்கும் நாட்டினில், இடுப்பில் கட்டியது போல் காடு சூழ்ந்துள்ள உன்
பழமையான புகழையுடைய முதிய ஊருக்குச் செல்வாயென்றால்,
செம்மையாகச் சேர்த்து மூட்டப்பட்ட கால்சிலம்போடு, ஆடையாகத் தொடுக்கப்பட்ட தழையுடையும் தொங்குகின்ற,
வில் இல்லாமல் எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில் -
பிடிப்பதில் வல்ல முதலைகளைக் கொண்ட ஆழமான இடத்தையுடை அகழி -
வானைத் தொடும்படி உயர்ந்துநிற்கும் வளைவு வளைவாக அமைக்கப்பட்ட மதில் - ஆகியவற்றைக் கொண்டு,
ஒத்துவராத பகைவர் மேற்கொள்ளும் போரினை அழிக்கும்படியாகக் குறுக்கிட்டு நிற்கின்ற,
உன்னால் சிறிய வேந்தருக்குக் கொடுக்கப்பட்ட, இப்போது உனக்கு அடங்காமற்போன, கோட்டைகளை அல்லாமல்,
உன் முன்னோர்களுக்கு முன்னிருந்தோராலும், அவருக்குப் பின்வந்தோராலும் பேணிப் பாதுகாக்கப்பட்ட
கோட்டையின் எதிரில் நிற்பது எதற்காக? இதனைக் கைப்பற்றி, இதன் வழியே செல்லாமல் வளைந்து,
வேறு சுற்றுவழியில் செல்வாயாக! சினம் பொருந்திய வேந்தனே!
கணைய மரத்தால் காக்கப்பட்டு, இரும்பு ஆணிகள் தைத்த பலகைகளால் ஆன
பற்பல நிலைகளையுடைய சிறிய நுழைவாயில்களையுடைய கதவுகளின் உருவத்தைக் கண்டாலே,
தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் கைமீறிக்கொண்டு,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடையவாய்,
ஏந்திய கையைச் சுருட்டிக்கொண்டு, மேலிருப்போர் வழிநடத்தும் அங்குசத்தையும் மீறிக்கொண்டு,
உயர்ந்து நிற்கும் வெற்றிக்கொடிஅசைந்தாட,
அடக்கமாட்டாமற் செல்லும் அங்கு உன் களிறு.
					மேல்
# 54 பாட்டு 54
ஈகை நெஞ்சுடையவன் என்று சொல்லப்படுவதால் உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன்,
நான் நினைப்பதை முடித்துத்தருவாய்! வாழ்க! உன் தலைமாலை!
புடைத்தெழுந்து இறங்கும், பெருத்த, மூங்கில் போன்ற பருத்த தோள்களையும்,
ஏந்திய அழகினைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பருத்துப் புடைத்து வரும் இளம் முலைகளையும்,
பூப்போட்ட துகில் மூடிய அல்குலையும், தேனொழுகும் கூந்தலையும்,
மின்னுகின்ற அணிகலன்களையும் கொண்ட விறலியர் உன் வீரத்தைப் புகழ்ந்து பாட
இரந்து வருவோரின் இன்னல்கள் தீரும்படியாக, நாள்தோறும்
புகழ்ந்துரைக்கும்படியான பெருஞ் செல்வத்தை வரையாது வழங்கி,
அப்படிப்பட்டவனாய் நீ இருப்பதனால் - சிறிதளவு காலத்திற்குக்கூட,
உயர்நிலை உலகமாம் விண்ணுலகிற்குச் செல்லாமல், இங்கேயே இருந்து
பெரிய நிலவுலகத்தில் நெடுங்காலம் வாழ்வாயாக!
எதிர்ப்பாரின் நிலப்பகுதி குறைவுபடும்படி அமைக்கப்பட்ட, அவரின் எல்லைக்குட்பட்ட நிலத்துப் பாசறையில் தங்கி,
ஒலிக்கின்ற முகப்பையுடைய முரசம் பாசறையின் நடுவில் முழங்க,
வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
முரசின் ஏவலை மேற்கொண்டு இளைய வீரருடன் நிற்கின்ற,
உன்னுடன் உடன்படாதோரின் யானைப் படையைக் கண்டால்,
நில்லாமல் சென்று தாக்கும் சேனைகளையுடைய அரசுரிமை உடையவனே!
					மேல்
# 55 பாட்டு 55
கற்பிற் சிறந்தவளின் கணவனே! நற்குணம் நிரம்பியவரை ஆதரிப்பவனே!
உன்னை விரும்பிக் காண வந்தேன், கொல்லுகின்ற போரைச் செய்யும் கொற்றவனே!
இனிய ஓசையுள்ள அலைகள் முழங்கும் கடல் வழியே வந்த
நிறைந்த அணிகலன்களாகிய செல்வம் தேங்கியிருக்கும் பண்டகசாலைகள் உள்ள
கமழ்கின்ற தாழைகள் பூத்திருக்கும் கடற்கரைச் சோலை இருக்கும் அழகிய பெரிய துறையையுடைய
குளிர்ந்த கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டுக்குத் தலைவனே!
தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலையும்,
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!
குடநாட்டாரின் கோமகனே! கொடிகள் பறக்கும் தேரையுடைய அண்ணலே!
இரந்து வருபவர் வராமற்போனாலும், இரவலர் வருவதை விரும்பி
வெளியூரிலிருந்து தேரில் வரவழைத்து, அவர்களுக்கு நிறைய உணவை வழங்கும்,
கேட்பதற்கு விருப்பமுள்ள உண்மையான மொழியினையுடைய புகழ் நிறைந்த தோன்றலே!
- நீ வேண்டும் கால அளவுக்கு, ஆண்டுகள் பல கழிய,
மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
சென்று கெடாமல் இருப்பதாக, பெருமானே! நாள்தோறும்
அகன்ற இடத்தையுடைய வேந்தரின் முன்னணிப்படையினர் அழிந்து அலறும்படியாக,
நீண்ட மலையில் பல மலையிடுக்குகளைக் கொண்ட நாடுகளைக் கைப்பற்றிப்
போரிட்டு, அவர் மேலெழுந்த சினம் தணிந்துபோன போரை விரும்பும் ஆண்மையினையும்,
எதிர்நின்று தடுக்கும் பகைவரை முற்றிலும் அழிக்கும் ஒளிரும் வாளினையும்,
எழுச்சிமிக்க உள்ளத்தினையும் கொண்ட வேந்தனே! உனது வாழ்நாள் -
					மேல்
# 56 பாட்டு 56
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!
வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
மின்னிடும் பூணினை அணிந்தவனாயும், பொன்னாலான கொடியாகிய உழிஞையைச் சூடியவனாயும்,
அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் -
					மேல்
# 57 பாட்டு 57
தோற்று ஓடக்கூடாது என்ற உறுதிப்பாட்டையுடைய வீரரின் வலிமை கெடும்படியாக,
பெரிய பனந்தோட்டால் செய்த மாலையோடு, வெண்மையான வீரக் கழலும் சிவந்துபோகுமாறு
இரத்தம் சிதறித்தெளிக்கும் புலால் நாறும் போர்க்களத்தில் இருக்கிறான்,
துணங்கைக் கூத்து ஆடிய வெற்றி பொருந்திய சேரமான்;
மென்மையான நிலத்து வழியினில், தன் சிறிய கால்களால் ஒதுங்கி நடந்து
செல்வோமா, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே? -
பாணர் கையிலுள்ள கீழே இழுத்துக்கட்டிய நரம்பினையுடைய
விரலால் வாசிக்கப்படும் பேரியாழில், பாலைப் பண்ணை அமைத்து,
குரல் என்ற நரம்போடு சேர்த்த இனிய இசையில் தழிஞ்சி என்னும் துறையைப் பாடி,
இளமையான துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப் பெற்றளித்த
வளமை பொருந்திய சிலம்பையும், அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும்,
நிறைந்த அறிவையும், நற்குணங்களால் உண்டாகிய நல்ல புகழையும் உடைய,
ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட மகளிர் புலவியால் கோபங்கொண்டு பார்க்கும் பார்வையைக் காட்டிலும்,
இரந்து வருவோரின் இன்னலுள்ள பார்வைக்கு அஞ்சுகின்ற,
நம்மைப் பாதுகாத்தலை மேற்கொண்டுள்ளவனைப் பார்த்து வருவதற்கு -
					மேல்
# 58 பாட்டு 58
ஆடுவீர்களாக விறலியர்களே! பாடுவீர்களாக பரிசில் மாக்களே!
வெண்மையான பனந்தோட்டில் கட்டிய ஒளிவிடும் குவளைப்பூவையுடையவராய்,
வாளின் கூரிய பக்கம் ஏற்படுத்திய சிறப்புப் பொருந்திய தழும்பினைக் கொண்ட உடம்பினராய்,
இடியைப் போன்ற மறவர்கள் தம்முடைய கொல்லுகின்ற ஆயுதங்களைக் கொண்டுவர,
இன்று இனிதே நுகர்ந்தோம் என்றாலும், நாளை
மண்ணால் கட்டப்பட்ட கோட்டைமதில்களைக் கடந்தபின் அன்றி
உண்ண மாட்டோம் உணவினை என்று கூறி
போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன்,
தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும்,
பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்; காட்டினில்
ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வண்டுகள் பொரிப்பொரியான அடிப்பகுதியில் தங்கியிருக்கும்
சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுதியாய் இருக்கும்
புன்செய் நிலங்களை உழுது விதைக்கும் வலிமையான கைகளையுடைய உழவர்கள்
சிறப்பினை உடைய பல காளைகள் ஒலியெழுப்ப அவற்றைக் கலப்பையில் பூட்டி உழுது
கலப்பையின் கொழுச் சென்ற சாலின் பக்கத்தில்
அசைகின்ற கதிர்களில் அழகிய தானிய மணிகளைப் பெறுகின்ற
அகன்ற இடங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டுக்குரியவன்.
					மேல்
# 59 பாட்டு 59
பகற்பொழுது நீண்டு அமையாமல், இரவுப்பொழுது நீண்டு உள்ள
மாசி மாதத்து, விலங்குகளும் குளிர் மிகுந்து வருந்தும் காலத்தில்
மிகுந்த குளிர் உள்ள பாலைவழியில் செல்லும் பாணன் மகிழும்படியாக,
புன்மையான இருள் முடிந்து விடிய, தனிமைத்துயர் நெடுந்தொலைவுக்கு விட்டகல,
பரவிக்கிடக்கும் இருள் அகன்றுபோகும்படி, தனது பலவான கதிர்களைப் பரப்பி
ஞாயிறு கீழ் வானத்தில் தோன்றியதைப் போல,
இரந்துண்ணும் மக்கள் வாழும் ஊர்களில் வளம் சிறக்கும்படியாக
உலகத்து உயிர்களைத் தாங்குகின்ற, மேம்பட்ட கல்வியறிவையுடைய
வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே! வீறுபெற்று இருக்கும் பெரும் அரசாண்மையுடைய
வேந்தர்க்கெல்லாம் வேந்தனே! உன்னைச் சேர்ந்திருப்போருக்கு அரணம் போன்றவனே!
அறியாமல் உன்னை எதிர்த்துப் போரிட்டு, தம் வலிமையில் குறைவுற்று,
உன்னைப் பணிந்துகொண்டு உனக்குத் திறை கொடுப்பர் உன் பகைவர் என்றால்
உன் சினம் உன்னிடத்திலிருந்து சென்றுவிடத் தணியுமோ? வாழ்க உன் தலைமாலை!
பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து வந்து குவிந்த,
மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப்பனவும் ஆகிய பொருள்களைப் பகிர்ந்தளிக்கும்
வழிகளால், குன்றாமல் அறத்தைச் செய்து ஒழுகும்
பகைவர் நாடுதற்குரிய வலிமை பொருந்திய பருத்த தோள்களால்,
பாடற்குரிய உயர்ந்த செல்வங்களை அளிக்கும்
நாடுகளைப் பாதுகாத்தல் உனக்குக் கடமையாகும்.
					மேல்
# 60 பாட்டு 60
கொலைத்தொழிலை விரும்பியது சேனை; தானும்
போர்த்தொழிலையே விரும்புவான்; குறைவின்றி வாரி வழங்குவான்;
போவோமா? பாண்மகளே! அவனைக் காண்பதற்கு -
வண்டுகள் புறத்தே மொய்த்துநிற்கவும், இனிய சுவையில் மாறுபடாது,
அரம்பத்தால் அறுக்கமுடியாத மரத்தில் உண்டாகிய சுவையான கனியாகிய
அழகிய குழைவான சதைப்பற்று அமைந்த முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள்
வழியில் செல்லும் மக்களுக்கு தளர்வான நிலையைத் தடுத்து நிறுத்தும்,
மாறாத விளைச்சலுள்ள அற்றுப்போகாத புதுவருவாயையுடைய,
அம்பினைத் தொடுப்பதில் சோம்பலைக் களைந்த வில்லையுடைய மறவர்கள்
பொங்குகின்ற சிறு திவலைகளைச் சிதறும் அலைகளோடு, தாழ்ந்து வரும் மேகங்கள் கலந்து
வரும் கடலின் குளிர்ந்த காற்றில் மிகவும் நடுக்கம்கொள்ளும்,
நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே -
					மேல்





ஏழாம் பத்து 		
      கபிலர்

# 61 பாட்டு 61
பலா மரத்தில் பழுத்து வெடித்த புதிய வெடிப்பிலிருந்து ஒழுகும் கள்போன்ற சாற்றின் மணத்தை
வாடைக்காற்று அந்த வெளியெல்லாம் பரப்பும் நாட்டினைப் பொருந்திய பெரிய திறம் படைத்தவனும்,
ஓவியத்தில் வரைந்தது போன்ற வேலைப்பாட்டுடன் கட்டப்பட்ட நல்ல இல்லத்தில் இருக்கும்,
பாவையைப் போன்ற நல்ல அழகும் நலமும் அமைந்தவளின் கணவனும்,
பொன்னைப் போன்ற பூவைக் கொண்ட சிறிய இலைகளையுடைய
புன்மையான அடிமரத்தையுடைய உன்ன மரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும்,
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
கொண்ட அகன்ற மார்பினையுடைய பெரிய வள்ளல்தன்மையுடைய பாரி
முழவின் கண்ணில் பூசப்பட்ட கரிய சாந்து புலர்ந்துபோகவும், கொடுப்போர் இல்லாததால் இரவலர்கள் வருந்தவும்,
திரும்பி வரமுடியாத தொலைதூரத்து மேலுலகுக்குச் சென்றுவிட்டான்; அருள்செய்வாயாக என்று
உன்னிடன் இரந்து வரவில்லை; உன்னை மிகைபடக் கூறமாட்டேன்;
கொடுப்பதினால் மனம் குன்றிப்போவதில்லை; கொடுத்துக்கொண்டே இருப்பதினால் மகிழ்ந்துபோவதுமில்லை;
கொடுக்கக் கொடுக்க இன்னும் பெரிதும் கொடுப்பவன் என்று உலகத்தவர் கூறும் உன்னுடைய
நல்ல புகழ் என்னை ஈர்க்க உன்னிடம் வந்துள்ளேன்; ஒளிரும் வாட்படையும்,
வலிமை மிக்க யானைகளும் உள்ள புலால் நாற்றமுள்ள பாசறையில்,
நிலாவின் ஒளியைப் போன்ற வெண்மையான உன் வேலினைப் பாடும் பாடினி,
முழவின் ஓசைக்கேற்ப வெறுங்கையை அசைத்து ஆடும்,
திருவிழாவைப் போன்ற உன்னுடைய ஆரவாரமிக்க அரசிருப்பில் -
					மேல்
# 62 பாட்டு 62
நெற்றிப்பட்டமும், மாலைகளுமாகிய அணிகலன்கள் அணிந்து நிற்கும் பல யானைகளின் தொகுதியும்,
மேகங்களோ என்று மருண்டு நோக்கக்கூடிய கரிய பெரிய பல தோல் கேடகங்களும்,
வேற்படையை அழித்த கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைப் படையும் ஆகிய உன் சேனை
வலிமை உடைய கடப்பதற்கரிய கோட்டை மதிலைப் பக்கவாட்டில் வளைத்து
வந்து கோட்டைக்கு வெளியே தங்கியிருக்கின்றது; பகைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
பல ஞாயிறுகளைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
உயிர்களுக்குப் பொறுக்கமுடியாத கலக்கத்தைத் தந்து, பெரும் முழக்கத்தோடு திரியும்
கூற்றுவனின் இயல்பினைக் கொண்டகடுமையான வலிமைமிக்க,
போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே!
வெள்ளமாய் நீர் மோதும் அகழியையும், மலை போன்ற மதிலினையும் கொண்டு,
தெய்வமாய் நின்றுவருத்தும் பெரிய கையினையுடையவராய் உனது அதிகாரமிக்க ஆளுமையைக் கூறியவாறு
பணிந்து திறை தருவர் உன் பகைவர் என்றால்,
புற்களையுடைய அகன்ற வெளியில் பலவான பசுக்களை மேயவிட்டு,
வளப்பத்தையுடைய வயல்களில் விளைந்தவற்றைக் கதிர்களிலிருந்து உதிர்க்கும்
களத்தில் தூற்றப்படுவதில்லாத நெல்மணிக் குவியலைக் காஞ்சி மரத்தடியில் கூட்டிச் சேர்த்து,
கள்ளை நிறைய உண்ணும் வலிமையான கைகளைக் கொண்ட உழவர்கள்
அருவிநீரில் செழித்து வளர்ந்த ஆம்பல் பூவை உச்சந்தலையில் சூடியவராய்
அசைகின்ற சிறகுகளையுடைய வரிகளைக் கொண்ட வண்டுகளை விரட்டும்,அ
புலவர் பாடும் சிறப்பைப் பெறுவனவாகும் அந்தப் பகைவரின் அகன்ற இடங்களைக் கொண்ட நாடுகள்.
					மேல்
# 63 பாட்டு 63
பார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிதலை அறியாய்;
இவ்வாறு பணியாத உள்ளத்தோடு அழகுவரப் பொருந்தி,
உன்னுடன் நட்புக்கொண்டோரைத் தவிர பிறருக்குப் பரிவுகொண்டு அஞ்சமாட்டாய்;
வளைந்த வானவில்லோடு போட்டிபோடும் பூமாலையின் மணம் கமழ்கின்ற உன் மார்பானது
மகளிரைத் தவிர வேறு யாருக்கும் திறந்து காட்டுவதனை அறியாது;
நிலங்கள் தம் இயல்பினின்றும் மாறுபடும் காலம் என்றாலும்
சொன்ன சொல்லை நீ பொய்த்தலை அறியமாட்டாய்;
சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையைச் சூடிக்கொண்டு
பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு
குன்றின் நிலையையே தளரச்செய்யும் இடியைப் போலச் சீற்றங்கொண்டு,
ஒரு முற்றுகையில் இரு பெரும் வேந்தர்களை ஓட்டிய ஒளிரும் வாளையுடைய,
போரில் மேம்பட்ட சேனையைக் கொண்டு வெல்லுகின்ற போரினையுடையவனே!
முன்னர் பல போர்களில் பகைவரைக் கொல்வதைப் பெற்று, உன்னிடம் தோற்றழிந்த வீரர்கள், பகைமை மாறி,
'உன் சொற்படி நடப்போம்' என்று கூறினர்; நீயும்
உன் வலிமையைக் கொண்டு மேலும் பல போர்களை வென்றாய்! அதனால்
செல்வக் கடுங்கோவே! சேரர் குடித்தோன்றலே!
காற்றால் அலைகள் திரண்டெழ, முழங்குகின்ற ஓசையையுடைய கடலே வேலியாகக் கொண்ட
அகன்ற இடத்தையுடைய உலகத்து மக்கள் செய்த நன்மை நிலைபெறுவதென்றால்,
இலைகள் அடுத்தடுத்து இருப்பதில்லாத, அரிதான பூ ஆகிய ஆம்பல் என்ற எண்ணளவும்,
ஆயிரம் வெள்ளம் என்ற எண்ணளவும் சேர்ந்த ஊழிகள் பல
வாழ்க! வாழியாதனே! வாழ்க!
					மேல்
# 64 பாட்டு 64
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
குறைவுபடாத கொள்கையை உடையவனாதலின், அவ்விடத்தில் -
கரிய பெரிய ஆகாயத்தில் பல விண்மீன்களின் ஒளி குன்றும்படி,
ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
- காண்பதற்கு வந்திருக்கிறேன் - காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த நெய்தல் பூவின்
இதழின் வனப்பைக் கொண்ட தோற்றத்தோடு, உயர்ந்த
மழையைக் காட்டிலும் பெரிதான பயனைப் பொழிகிறாய், அதனால்
பசித்திருக்கும் சுற்றத்தாரை அப் பசி நீங்கும்படி செய்ய
புகழ் மேம்பட்ட தோன்றலே! உன் பாசறையினில் -
					மேல்
# 65 பாட்டு 65
வெட்டப்பட்டு வீழ்ந்த பிணங்களை இடறிக்கொண்டு செல்வதால் சிவந்துபோன கறை படிந்த குளம்புகளையுடைய,
விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளுக்கு விரிந்த தலையாட்டத்தைச் சூட்டி,
எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!
வில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே!
பூண்கள் அணியப்பெற்று அழகு பெற்ற, வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகளையுடைய,
மாட்சிமைப்பட்ட வரிகளைக் கொண்ட அல்குலையுடைய, மலர்ச்சியான கண்களையுடைய,
மூங்கிலைப் போன்று அழகாய் அமைந்த, நலம்பெற்றதாய் இறங்குகின்ற பருத்த தோள்களையுடைய,
எல்லாரும் விரும்பும் கடவுளரையும் ஏவல்கொள்ளும் கற்பினையுடைய,
மிக்க தொலைவுக்கும் மணக்கும் நறிய நெற்றியையுடைய, செம்மையான அணிகலன்களை அணிந்தவளின் கணவனே!
பாணர்களின் பாதுகாவலனே! பரிசிலர்களின் செல்வமாயிருப்பவனே!
பூண்கள் அணியப்பெற்று விளங்கும் புகழ் நிறைந்த மார்பினனே! உன்னுடைய
நாளோலக்கம் என்னும் இன்பமான அரச இருக்கையை இனிதே கண்டோம் -
இனிய முறுக்கமைந்த நரம்பினால் அமைந்த பாலை யாழை இசைப்பதில் வல்லவன்
அழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பண்களை மாறிமாறி வாசிப்பதைப் போல,
சேற்றை உண்டாக்கும் மழையைப் போல, அள்ளிக்கொடுக்கும் - உன்னுடைய
திருவிழாக் காலத்து செல்வத்தைப் போன்ற கள்ளுண்ணும் இன்ப இருக்கையின்போது -
					மேல்
# 66 பாட்டு 66
வளைந்த கரிய கொம்புபோன்ற தண்டினையுடைய, இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த,
இசை இன்பத்துக்கு இடமாக உள்ள, பெரிய யாழினில் பாலைப் பண்ணை அமைத்து,
சேர மன்னனை நினைத்துச் செல்லுகின்ற முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!
இடியைப் போன்ற ஓசையையுடைய முரசத்தோடு, வஞ்சினம் கூறி, பகைவரின்
வேலை உடைய திரண்ட கூட்டத்தின் போரைச் சிதையும்படி அழித்து,
அவரைக் கொன்று, மீந்துள்ளோரின் புறமுதுகிடுதலைப் பெற்ற, பிணங்கள் செறிவாய்க் கிடக்கும் போர்க்களத்தில்
பகைவர் பழைய திறையாகத் தந்த களிற்றோடு, நெல்லின்
மரக்காலின் அளவையால் அளந்து உறையிட முடியாத
நிறைந்த உணவை அளிப்பான் என்று சொல்லுவர்; தான் கோபங்கொண்ட பகைவரின்
மிகுந்த பகைமையைத் தடுக்க வல்ல ஒழுங்கான அரிய அணிவகுப்பையுடைய,
நாள்காலையில் மேகங்கள் கூடியுள்ள மலையுச்சியைப் போன்ற தோற்றத்தில்
தோலால் ஆன கேடயங்களின் மேல் எழுந்துநிற்கும் பரந்து ஒளிவீசுகின்ற வேலையுடைய,
மாலைகள் முறுக்கிக்கொள்வதைப் போல சுழல்கின்ற வாள்களை உடைய விழாவையுடைய,
போரை மேற்கொள்ளும் வீரர்கள் பனங்குருத்தோடு சேர்ந்து தொடுத்த
கொற்றவை வாழும் வாகை மரத்தின் உச்சியில் பஞ்சினைக் கொண்ட பூவைப் போலப்
பூத்திருக்கும் முல்லைக் கொடி படர்ந்த புதர்களைச் சூழவரும் வண்டினங்கள்
காட்டுவெளியில் உள்ள பிடவமரத்தின் மாலைபோன்ற பூக்குலையில் சென்று தங்கும்
வெண் பளிங்குக் கற்கள் கலந்துகிடக்கும் சிவந்த பருக்கைக் கற்களைக் கொண்ட மேட்டுநிலத்தில்
பளிச்சிடும் கதிர்களைக் கொண்ட அழகிய மணியை அங்குவாழ்வோர் பெறுகின்ற,
அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய - நாட்டுக்கு உரியவன்.
					மேல்
# 67 பாட்டு 67
கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் உயர்ந்த புகழைக்கொண்ட உன் சுற்றத்தாருடன்,
பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த
பாணர்க்குரிய கடமைகளை அறிந்த மரபில் வந்த கைதேர்ந்த பாணனே!
தெளிந்த கடலில் விளைந்த முத்துக்களோடு, நல்ல அணிகலன்களையும் பெறுவாய்!
வீரர்கள் கொல்லுகின்ற படைக்கலன்களைத் தெரிவுசெய்ய, வெற்றிக்கொடி அசைந்தாட,
ஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க,
பலவான களிறுகளின் கூட்டம் வரிசை வரிசையாக தமக்குரிய இடத்தைவிட்டுப் பெயர்ந்து நடக்க,
போரிடும் இடமாக அமைந்த மின்னுகின்ற கொழுப்புகள் பரந்து கிடக்கின்ற களத்தில்
கூட்டமான, பெரிய சிறகுகள் கொண்ட பருந்துகள் குருதியைக் குடிக்க,
தலை துண்டிக்கப்பட்டதால் எஞ்சி நிற்கும் ஆண்மை ததும்பும் குறையுடலோடு
அழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க,
நாடு முழுதும் நடுங்க, பல போர்களில் சிறப்பாகச் செயல்பட்டு,
மணங்கமழும் பூங்கொத்தான கொன்றையுடன் வெண்மையான பனந்தோடு சேர்ந்து கட்டிய தலைமாலையும்,
வாளின் கூரிய பக்கம் ஏற்படுத்திய சிறப்புப் பொருந்திய தழும்பினைக் கொண்ட உடம்பினையும் கொண்ட,
வளைவு வளைவாக அமைந்த கொம்பினையுடைய எருமை எருதுகளினுடையதும்
வேறு வளைந்த தலைகளையுடைய விலங்குகளினுடையதுமான தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்போரின்
வெட்டரிவாள் கொத்தியெடுத்த மரப்பலகையைப் போல மேனி சிதைவுற்று
பூசியிருக்கும் சந்தனத்தின் அழகை மறைக்கும்படியாயிருக்கின்ற வீரருடைய பெருமகனான -
பூத்திருக்கும் காந்தள் பூவில், அது தெய்வத்திற்குரியது என்று உணராமல், அதை விட்டு விலகாமல் தேனையுண்ட
விரைவாகப் பறக்கும் தும்பியானது, அந்தப் பூக்களைத் தெய்வம் விரும்புவதால்
தமது பறக்கின்ற பண்பினை இழக்கும் பெருமை சான்ற நெடிய மலையாகிய
பாறைகளால் உயர்ந்த நேரி என்னும் மலைக்கு உரியவனான,
செல்வக் கோனுமாகிய வாழியாதனைப் பாடினவனாகச் சென்றால் -
					மேல்
# 68 பாட்டு 68
காற்றே குறுந்தடியாய் மோதியடிக்க, கடல் பேரொலி எழுப்புவதைப் போல
பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே
மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது
விரிந்த பெரிய வானத்து நடுவில் அதிர்ந்து முழங்க,
கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
நெஞ்சம் போரையே விரும்பும் ஊக்கத்தையுடையவராய், உடல்வலிமை குன்றி துன்புற்று இருக்கும்
பகைவரின் உறைவிடத்தைத் தாம் கைப்பற்றினால்தான்,
பகை மன்னர் ஏறிவரும் யானையைக் கொன்று அதன் வெண்மையான கொம்பினைத் தோண்டியெடுத்து,
கள்ளுக்கடையின் கொடி அசைந்தாடும் கடைத்தெருவில் நுழைந்து உடனே
அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து கள்ளைப் பெற்று, பின் அதனைக் குடித்து மகிழ்ந்து
அச்சம் என்பதே அறியாத இன்பமான வாழ்க்கையையுடைய
வட நாட்டில் வாழ்பவரைப் போன்று பெரிதும் அமைதியாக இருந்து நாள்தோறும்
இனிய மகிழ்ச்சி பொங்கும் பல பொழுதுகளைப் பெறுவார்களோ?
பிரிவுத் துயரத்தால் தூக்கம் இல்லாததால், தம் பசிய இழைகள் நெகிழ்ந்துபோக
உயரமான, மண்ணால் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த நீண்ட பெரிய வீட்டின் எல்லையில்
ஓவியத்தில் உள்ளதைப் போன்ற நெடிய சுவரில் நாள்கள் பலவற்றைக் கோட்டால் குறித்துவைப்பதால்
சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும்
காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்
சந்தனத்தின் மணம் கமழும் மார்பினையுடையவனே! உன் காலடி நிழலில் வாழும் உன் வீரர்கள் -
					மேல்
# 69 பாட்டு 69
மலை போன்ற யானைகளின் மேல் வானத் தொடும்படி எடுத்த வெற்றிக்கொடி
மலை மேலிருந்து இறங்கும் அருவியைப் போல அங்கங்கே அசைந்தாடிக்கொண்டிருக்க,
கடல் போன்ற சேனையின் நடுவே பெரும் முழக்கத்தை எழுப்பும் முரசம்
காற்றால் அலைகழிக்கப்படும் கடலைப் போல பெரியதாய் முழங்க,
பகைவரை வெட்டியதால் சிதைந்துபோன வாள்வீரரும்,
இலையைப் போன்ற வேலின்தலையை உயர்த்திப் பிடித்த வேல்வீரரும்,
பகைவர் மேல் பாய்வதால் வருத்தமடைந்த குதிரைகளும்,
பகைவரைத் தேடிப்பிடித்துப் போரிடும் போரவா மிகுந்த வீரர்களும் ஆகிய படையுடன் சென்று,
வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று, அவரின்
கெட்டுப்போன குடிமக்களை வாழச்செய்த வெற்றி வேந்தனே!
உன்னைப்போல் தோல்வி இல்லாத நெறிமுறையை உடையவராதலால், தளர்வின்றி
ஆண்டார்கள், உறுதியாக, இந்த மண் செறிந்த நிலவுலகத்தை -
நிலங்கள் மிக்க பலனை விளைவிக்க, வெயிலின் வெம்மை தணிந்து நிலவ,
உலகுக்கு நல்ல பயனைத் தரும் வெள்ளியாகிய கோள் மழைக்குரிய நிலையில் நிற்க,
ஆகாயம் தன் இடம் அகன்று தோன்றுமாறு மேகங்கள் மழைபெய்து உலகைக் காக்க,
நான்காக வேறுபட்டு நிற்கும் அகன்ற இடங்களாகிய திசைகள் ஒன்றுபோல ஈட்டம் பெற,
ஒளிரும் கதிர்களைக் கொண்ட அரசாணையாகிய அரசசக்கரத்தைச் செலுத்திய உன் முன்னோர்கள்.
					மேல்
# 70 பாட்டு 70
களிறுகளைச் செலுத்திய கால்களையும்,
குதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் முன்பகுதியையும்,
பகைவரின் போரைச் சிதைத்த வேலினையும்,
பெரிய கற்களைத் தூக்கிப் பயிற்சிசெய்த தோள்களையும்,
வில்லினால் பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையும் கொண்ட,
வண்டுகள் மொய்த்து இசையை வெளிப்படுத்தாத குளிர்ச்சியான பனையாகிய போந்தையின்,
குவிந்த அரும்புகளைக் கொண்ட, ஊசிபோல் கூர்மையான, வெண்மையான குருத்தினைக் கொண்டு
இனிய சுவையுள்ள சுனைநீரின் மலர்களைக் கண்ணியாகச் செய்து சூடி, இறுமாப்புடன் செருக்கி,
தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!
விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட -
நாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று,
கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய,
சிறந்தவளுக்குக் கணவனே! - பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்கும் சான்றோராகிய சுற்றம் உன்னைச் சூழ இருக்க,
வேள்விகளைச் செய்து இறைவர்க்குப் பலியூட்டினாய்! முன்னோர் சொல்லக் கேள்விப்பட்ட
உயர்ந்த நிலையுள்ள உலகமான விண்ணுலகில் இருப்போரை மகிழ்வித்தாய்!
சான்றோரை வணங்கும் மென்மையான உள்ளமும், பகைவரை வணங்காத ஆண்மைத் திறமும் கொண்டு,
இளம் துணைவராகிய புதல்வரைப் பெற்று, முதியோரைப் பேணி,
தொன்றுதொட்ட உன் கடமையைத் தவறாது செய்யும், வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!
தேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல
குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.
					மேல்






எட்டாம் பத்து 		
      அரிசில் கிழார்

# 71 பாட்டு 71
தீர்ந்துபோகாத புதுவருவாயையுடைய அகன்ற இடமான வயல்களில்
நிறைந்து இருக்கும் ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்களை நெற்கதிர்களோடு அறுத்து,
வயல்வேலை செய்யும் மகளிர் மிகுந்திருக்கும் நெற்களத்தில்
பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்
மரக்கால் அளவைகளைப் பத்தாயத்தில் குவித்து வைத்ததைப் போன்ற,
கடுமையாகக் கொட்டுதலைச் செய்யும் கூட்டமான குளவிகள் மொய்த்தவாறு தங்கியிருக்கும்
செழுமையான குளவிக்கூட்டைக் கலைத்த பெற்றோர்க்கு இளமைத் துணையான சிறுவர்களைப் போன்று
துன்பப்பட்டனர், பெருமானே! உன்னைக் கோபப்படுத்தியவர்கள்;
நெருப்பு, பகைவர் ஊர்களைக் கவர்ந்துகொள்ளுமாறு, சினந்து மேலெழுந்து உன் கோபத்தைத் தெரிவிக்க,
போரில் சுடுகின்ற புகைநாற்றம் கமழும் புகை திசைகளையெல்லாம் மறைக்க,
மதில்களுக்குள்ளே இருந்து, வெளியில் வராமல், தமது பழியை மிகுதிப்படுத்திக்கொள்பவர்களின்
ஆழமான இடத்தையுடைய அகழியையும், குறுகிய படிகளையும் கொண்ட கோட்டை முகப்பினையுடைய
கடத்தற்கு அரிய மதிலின் காவலை அழித்துக் கவர்ந்துகொண்டாய்! காளைகளுடன்
கன்றுகளையும் உடைய பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொண்டுவந்து, அவற்றின் மேல் விருப்பம் மிக்கு,
புலால் நாறும் வில்லையுடைய வெட்சிவீரர் அவற்றை விடுவிக்க
தயிர் கடையும் மத்து கயிற்றினில் சுழலாத விடியற்காலத்தே, உன்னை நினைத்து வந்து,
பசுக்களின் பயனைக் கொண்டு வாழும் இடையர்களின் கழுவுள் என்னும் தலைவன் தலைவணங்கி நிற்க,
செல்லுகின்ற ஊர்கள் பாழ்பட்டுப்போகும்படி, வேறு இடத்தை நோக்கிச் சென்று,
புதிதாகத் தாம் தேடிய செல்வத்தோடு, தமது முன்னோர் தேடிவத்த பெரும் செல்வமும் அழிந்துபோயின என்று,
வெல்லுதற்கரிய போரில் அரிய நிலையை எதிர்த்து நின்று தடுக்கும் புள்ளிகள் கொண்ட நெற்றியையுடைய
பெரிய ஆண்யானைகளோடு, அருமையான அணிகலன்களையும் திறையாகத் தந்து,
மேனி மிகவும் நடுக்கமுற்று, தெய்வமேயென்று உன்னைப் புகழ்ந்து நிற்க,
பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
பகைவரின் திறையைமட்டும் எடுத்துக்கொண்டு மீளுகின்றாய்! வாழ்க உன் வாழ்நாள்!
அறிவுடையோர்க்கும், அறிவில்லாதோர்க்கும், அவரின் அறிவின் அளவைத் தெரிந்து எண்ணி
அவரவர் தகுதிக்கேற்பச் செய்யாவிட்டால்
நெடுந்தகையே! யார்தாம் இங்கு வாழ்வார்?
					மேல்
# 72 பாட்டு 72
பகைமையுணர்வு மிகுந்திருப்பதால் படையெடுத்து வருவதற்கு அஞ்சாதவராய்,
ஆராயாமல் போர்செய்யத் துணிவதே அல்லாமல், சிறிதளவும், பலரும் கூடி
தம் நாட்டைக் காப்பதற்கு இயலாதவர் உன்னைப் பகைத்தவர்; உன்
குலத்தில் முன்னாக இருந்த முன்னோர்களுக்குப் பாதுகாப்பாயிருந்து
உலகத்து மக்களைக் காக்கும் நெறிமுறைகளை எடுத்துக்கூறும்
நல்லவற்றை அறிந்த உள்ளத்தையுடைய சான்றோரைப் போன்ற உன்
பண்புகளை நன்கு அறியமாட்டார், அறியாமை மிகுந்திருப்பதால்
எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலம் நுழைகின்ற போதில்
நிலம் தன் பாரத்தைக் குறைத்துக்கொள்ளும் வகையில், வெள்ளம் பரந்து நிறைந்து வந்து கூடி,
வலிய அலைகள் கடுமையாகச் சினந்து எழுந்துவருமாறு, ஊழிப் பெருவெள்ளம்
எல்லைகளே தோன்றாத திசைகளிலெல்லாம் இருளுடன் சேர்ந்து பரவி நிற்க,
ஞாயிறு தோன்றி, பன்னிரண்டாய் விரிந்து வரும் கூட்டத்தில்,
அழகிய விழாவைப் போன்று இன்பந்தரும் உன் வழக்கமான தொழிலை விடுத்து,
பொங்கியெழும் பிசிரினையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் சிவந்த சுவாலைகளோடு தோன்றும்
ஊழிப்பெருந்தீயைப் போன்றவன்,
சினம் பொருந்திய குருசிலே! உன்னைக் கோபப்படுத்தியவர்களுக்கு.
					மேல்
# 73 பாட்டு 73
அறிவுடையோர் நினைத்துப்பார்த்தாலும், அறிவில்லாதர் நினைத்துப்பார்த்தாலும்
பிறர்க்கு நீ ஒப்புமையாக அமைவதல்லாமல், உனக்குப்
பிறர் ஒப்புமை ஆகாத தனிச் சிறப்பு வாய்ந்த வேந்தனே!
--- கூந்தலிலும், ஒளிவிடும் நெற்றியிலும் அழகுற அமைந்த
வண்ணமயமான புதிய அணிகலன்களை அணிந்த குல மகளிரும்,
தெய்வத்தன்மையைத் தரும் நெஞ்சினைக் கொண்ட ஆன்றோர் ----
மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்
இரவும் பகலும் தம் புத்தம்புதிய அணிகலன்களைக் கழற்றாதவராய்
அருகருகே அமைந்துள்ள பல புதுப்புது இடங்களில் குரவைக் கூத்தினை ஆடி மகிழும்,
காவிரி பெருக்கெடுத்துச் சென்று தொலைவில் பரந்து விரிகின்ற அழகினையுடைய
புகார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே!
மூங்கில்கள் விரிந்து எழுகின்ற மேகங்கள் தவழும் உயர்ந்த சிகரங்களையுடைய
கொல்லி மலைக்குத் தலைவனே! கொடிகளையுடைய தேரையுடைய சேரனே! உன்
செல்வமும், வீரமும், வள்ளண்மையும்
மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாயின என்று பல நாள்கள்
நான் சென்று உன் பகைவரிடம் சொல்லவும் அவர்கள் அவற்றை உணரமாட்டார்; வேறு
சான்றோர்கள் சொன்னால் உணர்ந்துகொள்வாரோ என்று கருதினால்
அவ்வாறு சொன்னபோதும் மதி மயங்கி இருக்கக் கண்டேன்;
எவ்விதம் அவருக்கு எடுத்துச் சொல்வேன் என்று வருந்துகிறேன் நான்.
					மேல்
# 74 பாட்டு 74
வேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;
நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட
திருமகளினின்றும் வேறு பட்ட மற்றொரு திருமகளாகிய உன் தேவி உன் குலம் வாழும்பொருட்டு -
கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,
பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,
பெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி,
அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
கூர்மையை உடைய ஊசியால், உள்புறத்தில் தைத்து, தொழிலில் வல்லவன்
சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்
விசும்பில் பறக்கும் வழக்கத்தையுடைய பருந்து ஊன் என்று கொத்தித்தின்ன முனையும்படியாக
மணிகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்ற அழகிய மணி சேர்ந்த நல்ல தோளையும்,
ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும், ஒளிவிடும் நெற்றியையும் கொண்ட உன் தேவி - கருவில் அமைத்து
எண்ணப்படும் மாதங்கள் பத்தும் முடிவடைந்து, இருவகை அறிவும் அமைந்து,
நற்பண்புகளும் நடுவுநிலைமையும் உள்ளிட்ட பிற பண்புகளும்,
நாட்டினைக் காப்பதற்கு அமைந்த அரசியலறிவு முதலியவற்றையும் கற்றுத் தேர்ந்த
சிறப்பு நிறைந்த புதல்வனைப் பெற்றுள்ளாய், இந்த உலகத்து மக்களுக்கு;
அரசர்க்குரிய அரிய கடமைகளைச் செய்து முடித்த, போரினை விரும்பும் வலிமையுடையவனே!
மேற்கூறிய கேள்வி, வேள்வி, மக்கட்பேறு ஆகிய அவற்றைக் கண்டு வியப்புறவில்லை, உன்னிடம்;
உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான புரோகிதனை,,
கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி
நாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி
கூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.
					மேல்
# 75 பாட்டு 75
பெரிய புலியைக் கொன்று, அதன்மேலும் பெரிய ஆண்யானையைக் கொல்லும்
அரிய வரிவரியான மயிரினைக் கொண்ட வலிமையான சிங்கத்தைப் போன்றவனே! பலவான வேற்படையினையும்,
பொன்னால்செய்த மாலையை அணிந்த யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய இரும்பொறையே!
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும், பிறரும் உன்னைக் கீழ்ப்பணிந்து
உன் விருப்பப்படி நடக்காவிட்டால், நெல் மிகுதியாய் விளைய,
வெட்டப்பட்ட கரும்பின் இனிய சாறாகிய புதுவருவாயினை
வருவோர்க்கு அளவின்றிக் கொடுக்கும் செல்வம் பெருகியிருக்கும் குடியிருப்புகள்
வன்புலத் தன்மை பெற்று, மருதநிலங்கள்தோறும்
அரிய பறையையுடைய வேட்டுவர் புல்லிய போரில் ஈடுபட்டு,
கள் இருக்கும் கடைத்தெருவில் நல்ல விலைக்குக் கொடுக்கும்
உழுது விதைத்துப் பெற்ற வெள்ளை வரகும், கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,
அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்; எனவே, அவரவருடைய,
புகழ் பெற்ற ஊர்களையுடைய
நாடுகளை ஒருசேர ஆளுவது எவ்வாறு இயலும் அவருக்கு.
					மேல்
 76 பாட்டு 76
களிறுகளைக் கொண்டு செய்யும் பெரும் போர் சிதைந்துபோகும்படி, வேலையும் வாளையும் உயர்த்திப் பிடித்து,
ஒளிவிடும் வாளையுடைய பகைமன்னர்கள் சேர்ந்துவந்து போரிடும் நிலையை அழித்து,
வெற்றி முரசு குறுந்தடியால் அடிக்கப்பெற, அரிய பல போர்த்துறைகளைக் கடந்துசென்று,
பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,
பெரிய கைகளைக் கொண்ட கூட்டமான யானைகளின் கடுமையான துயரத்தைப் போக்கி,
இரந்து வந்தவர் வாழும்படியாக அவர்களுக்குக் கொடுத்து, பின்னர் வந்து இரப்போர்க்கும்
ஈதலில் குறையாத குதிரைகளை வாரி வழங்கும் உன் பாசறை இருப்பினைக்
கண்டு செல்வதற்கு வந்தேன்!
இடிமின்னலோடு மேகங்கள் குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொரிய
மிகுதியாக விதைப்பதற்கேற்ற உழவடையை உடைய சில ஏர்களை உடைய உழவர்கள்
குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
வெளுக்கப்பட்ட வெள்ளை ஆடையைப் போல் தலையில் சூடிக்கொண்டு,
உழுவதால் புரண்டு விழுகின்ற மண்ணில் ஒளிரும் கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற
அகன்ற இடத்தையுடைய ஊர்கள் நிறைந்த நாட்டின் உரிமையாளனே!
					மேல்
# 77 பாட்டு 77
எந்த அளவு பெரிய படையைக் கொண்டவன், சினத்துடன் போரிடும் இரும்பொறை?
என்று கேட்பீராகில், வழியே செல்லும் புதியவர்களே!
உலகமக்கள் நிலைகுலைந்துபோக, அரசர்கள் போர்க்களத்தில் அழிந்துபோக
அவரைக் கொன்று தோள்களை உயர்த்தி வெற்றி ஆட்டமான துணங்கைக்கூத்தாடிய
பகைவரின் பிணத்தின் மீது உருண்டோடியும் தேய்ந்துபோகாத சக்கரங்களையுடைய
சிறப்பாகச் செய்யப்பட்ட தேரினையும், குதிரைகளையும், காலாட்படையினரையும்
எண்ணுவதற்கு அரிதாதலால் அவற்றை நான் எண்ணிக் கணக்கிடேன்;
தறிகளில் கட்டிப்போட இடம்தராமல், தன்னை அடக்குவதற்குக் குத்தும் குத்துக்கோல்களை முறித்துப்போட்டு,
உயரப்பறக்க மேலெழும் பருந்தின் நிலத்தில் படியும் நிழலைப் பார்த்துச் சீறி,
வெகு தொலைவுக்கு பரல்கற்களையுடைய மேட்டுநிலத்தில், வளைத்து இழுக்கும் தொறட்டிக் கம்பினையுடைய கொங்கர்களின்
பசு மாடுகள் பரந்து செல்வதைப் போன்று நடந்துபோகின்ற, பலவான
யானைகளைக் காண்கிறேன் அவனுடய சேனையில்.
					மேல்
# 78 பாட்டு 78
வெற்றி முழக்கமிடும் முரசினைப் போல, ஒளிர்வனவாய் விழுகின்ற
அழகிய வெண்மையான அருவி அந்த எல்லையில் உள்ளது -
சிலவான வளையல்களை அணிந்த விறலியே! அங்கு நீ செல்லவிரும்பினால்,
வளமையான இதழ்களையுடைய தாமரைப் பூவை நெய்தற்பூவோடு சேர்த்துக் கொய்துகொண்டு
மென்மையான இயல்பினையுடைய மகளிர் அசைந்தசைந்து நடந்து
தினைக் கதிர்களில் வந்து படியும் கிளிகளை ஓட்டுவதற்கு விருப்பமுடையோராய், தினைப்புனங்கள்தோறும் குரலெழுப்ப,
பலவகையான பயன்களும் நிலைபெற்ற காடுகளில் இருக்கும் ஊர்களையும்,
வெல்லுகின்ற போரையுடைய ஆடவர் வீர்ச் செயல்கள் புரிந்து காக்கின்ற
விற்படையினர் நிறைந்த காவற்காட்டையுடைய தகடூரைத் தகர்த்து,
கண்டார்க்கு அச்சத்தை உண்டாக்கும்படி பிறழ நோக்கும் பார்வையையும், பல இசைக்கருவிகளையுமுடைய பகைவரின்,
பிறரைத் தோற்று ஓடும்படியாகச் செய்யக்கூடிய கடும் பகைமை அழிந்துபோகச் சென்று
அவரின் கொடிய போர்முனையை அழித்த போது, அவருடைய நாட்டில்
ஆடுகள் சிதறிப் பரந்து செல்வதைப் போன்ற குதிரைகளையும்,
பசுக்களும் சிதறுண்டு பரந்து செல்வதைப் போன்ற யானைகளையும் உடையவனின் குன்று -
					மேல்
# 79 பாட்டு 79
உயிரை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, போர்க்களத்தில்;
கொடுக்கின்ற பொருள்களின் அளவை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, இரவலர்களின் நடுவில்;
பெரியோரைப் பேணிக்காத்துச் சிறியோருக்கும் அருள் செய்கின்றாய்!
உன்னிடமிருந்து புறப்பட்டுச் சென்ற உனது நல்ல புகழ், கனவிலும்
வேறு யாரையும் விரும்பிச் செல்லுதலை அறியமாட்டாது! தெளிவான பேச்சைக்கொண்ட செம்மையான நாவினையும்,
படிந்துவராதவரை முற்றிலும் அழிக்கின்ற ஆண்மையையும், தோள்வளை அணிந்த மகளிரின்
தோள்களின் இடையே குழைந்துபோன மாலையையுடைய மார்பினையும் கொண்ட வேந்தனே!
அத்தன்மைகளில் அளத்தற்கரியவனாய் இருக்கிறாய்! அதனால்
உன் விருப்பப்படி நடப்பதற்கு இசையாமல், தங்கள் நாட்டிலேயே இருந்து,
அவர் ஏறிவருகின்ற கொல்லுகின்ற ஆண்யானையின் பிடரி புல்லென்று வெற்றிடம் ஆகும்படியாக,
அதன் மீது வருவோரின் வில்லின் நாணை அறுத்து அவரை வீழ்த்தி, தனது செங்கோலுக்கு அடங்கிவராத
வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து, அவருடைய
பட்டத்து யானை கதறக்கதற அதனுடைய கொம்புகளை அறுத்தெடுத்துச் செய்த
அச்சம் தரும் தன்மையையுடைய கட்டிலின் மேலிருந்து
தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்வினில் ஓய்ந்திருக்க,
மார்பினைக் கிழித்து வரும் குருதி மேலே பட்டாலல்லது
பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
அழியாதது ஆகுக பெருமானே! உன் புகழ்!
					மேல்
# 80 பாட்டு 80
- வெண்மையான கொம்புகளைக் கொண்ட போர்யானைகள்
பெரிய மலை போலக் கூட்டமாய் நிற்க, அவர்கள்
தூக்கிவைத்து முழக்கிய வெற்றி முரசம்
கார்கால மேகங்கள் போல் மிக அதிகமாக முழங்க,
பூசிய சந்தனம் புலர்ந்துபோன அகன்ற மார்பினையும்,
தோள்வளை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வலிமை மிக்க முன்கையினையும்,
விழுப்புண் பட்ட வலிமையான தோள்களில் மாலையையும், அழகிய கழலணிந்த கால்களையும்,
காலைப் பின்னெடுத்து வைக்காத கோட்பாட்டையுடைய ஒளிரும் வாட்படையினையும் உடைய
வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று, இரண்டு பக்கங்களிலும் உலாவி,
"செலுத்துவீராக திறையை, உமக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்காக வந்திருப்பவருக்கு" என்று
வலக்கையில் அம்பினை உடைய வீரர்கள் புகழ்ந்து கூற,
நீயும் அப்படிப்பட்டவன் ஆதலினாலே, உன் பகைவரின்
காற்று மேலெழுந்ததைப் போன்ற விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய
வேகமாகச் செல்லும் நெடிய தேர் மீது கட்டிய அசைந்தாடும் கொடி
அவரது நாட்டின் எல்லையில் தோன்றுவது எவ்வாறு? சினங்கொண்ட போரினையும்
நிலத்தின் எல்லைவரை நிறுவிய நல்ல புகழினையும்
கேடில்லாத கல்வியினையும் உடையவனே! நீ பகைகொண்ட போர் முனையில் -
					மேல்






ஒன்பதாம் பத்து		
      பெருங்குன்றூர்க் கிழார்

# 81 பாட்டு 81
உலகத்து உயிர்களைக் காக்கும், அச்சம் தரக்கூடிய சிறப்பினையுடைய
கரிய நிறத்துடன் தொகுதியாய் இருக்கும் வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மழைமேகங்கள்,
அகன்ற கரிய வானத்தில் அதிரும்படி மின்னிக் குமுறி,
மிக்க முழக்கத்தை எழுப்பி, வானத்தையே அடைத்துக்கொண்டு உயர்ந்தெழுந்து,
கார்காலத்தை அறிவிக்கும் பருவத்தால் உயிர்கள் வருத்தம் கொள்ள,
களிறுகள் பாசறையில் விரைவாக அங்குமிங்கும் நடந்து திரிய, விரைந்து செல்லும் குதிரைகள் கட்டுப்பாட்டுடன் நடக்க,
ஒளிவீசும் கொடிகள் அசைந்தசைந்து ஆடிக்கொண்டிருக்க, தேர்கள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு சுழன்றுவர,
பகையரசர் சுற்றிலும் முற்றுகையிட்டுத் தங்கியிருந்தாலும், சிறிதும் நடுக்கமில்லாதவராய் நடமாடிக்கொண்டு
தமக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைக் காவல் காக்காத வன்மையினராகிய வீரர்கள்
பெரும் இருள் நிறைந்த இரவுநேரத்திலும் தம் தோளின் வீரவளை ஒளிவீசத்
தம் கைகளால் தோள்களை மாறி மாறிப் பிடித்துக்கொண்டவராய், போர் மீது பெரு விருப்பம் கொண்டு, ஒவ்வொரு நாளும்
போரில் தம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வேட்கையினை உடையவராய், வஞ்சினம் கூறி
கெடாத நல்ல புகழையுடைய தம் குடியின் சிறப்பை நிலைநிறுத்துவதற்கு,
அளவிடப்படாத எல்லையைக் கொண்ட அகன்ற பாசறையில் சுழன்று திரிய,
பகைவர் நாட்டை வென்று கீழ்ப்படுத்தியதால் அந் நாட்டில் கொள்ளவேண்டியவற்றைக் கொள்ளாமல் விட்டு
நெருப்பிலிட்டு உருக்கி உருவாக்கிய ஒளிவிடும் தங்கக் கட்டிகளை,
இன்னின்னாருக்கு இன்னளவு தரவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டவாறு, உன் படைவீரருக்கு உதவி,
வேற்று நாடுகளில் வேண்டுமளவு தங்கிய வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!
முழவைப் போன்று அமைந்த பெரிய பலாப்பழத்தை உண்டு,
விழாக் கொண்டாடும் காலத்தில் குடிப்பதைப் போன்று, கரிய, அழகிய புதுமையினை உடைய
மூங்கில் குழாயினுள்ளே முதிர்வடைந்த இனிய கள்ளினை நிறைய அருந்தி,
காந்தள் பூ மாலையைத் தலையில் சூடிய, செழித்த குடியினைச் சேர்ந்த செல்வர்கள்
ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பியவராய், இரப்போர்க்கு அள்ளிக்கொடுக்கும்,
வண்டுகள் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த பெரும் புகழையுடைய கொல்லி மலையில் உண்டாகிய
இருவாட்சிப் பூக்களோடு, பச்சிலையைத் தொடுத்து அணிந்து,
மின்னல் வெட்டியதைப் போன்ற ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த ஆயமகளிர் சூழ்ந்திருக்க,
தனது நிறத்தையே மறைக்குமளவுக்கு வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய,
சுருண்டிருக்கும் முன்மயிர் தவழும் ஒளி பொருந்திய நெற்றியும் அழகு பெறும்படியான
வளைந்த காதணியுடன் போட்டிபோடும் பார்வையினையும், இன்பம் வரும்படி
தன் பெருங்குணங்களுக்கு ஏற்பப் பேசும் மென்மையான சொற்களையும், அழகிய முகத்தையும்,
மிகச் சிறந்த அணிகலன்களையும் உடைய உன் தேவியைக் காண்பதற்கு ஒரு நாள்
பூட்டுக! உன் புரவிகளையுடைய நெடிய தேரினை!
போரைக் கைவிட்டு உன் முன்னே வணங்கி நில்லாமல்
உன் வலிமையினை எதிர்த்து நிற்கமுடியாத வன்மை இல்லாத வீரரோடு
அவரின் பழமையான குலத்தை நீ வேரறுப்பாய் என்று அஞ்சி, அரண்களுக்குள் பதுங்கிக்கொண்டு
தூங்காமல் இருக்கும் வேந்தர்களும் கொஞ்சம் தூங்கிக்கொள்ளட்டும்;
உன் தேவியைத் தழுவும் விருந்தும் கிடைக்கட்டும் உன் பெரிய தோள்களுக்கு.
					மேல்
# 82 பாட்டு 82
உன்னுடைய பகைமை பெரிதாகையால், உன் பகைவர் தெய்வத்தை வழிபட,
இனிதாகத் தங்குவதற்கு அரிதான இருப்பிடமாயினும் வீரர்கள் அஞ்சாத, பகைவர்க்கு அச்சந்தரக்கூடிய பாசறையில்,
பல வகைக் கொடிகள் அசைந்தாடும் வலிமையினையுடைய பகைவரின்
படையெடுத்துச் சென்று போரிடும் போர்களை அழித்த போர்த்தொழிலில் நன்கு பயிற்சிபெற்ற யானைகள்,
மதநீர் பொழிந்து மிகுந்த சினக் கொண்டு
வண்டுகள் மொய்க்கும் தலையினையுடையவாய், பெண்யானைகளைச் சேர்ந்து திரிய
வீரர்கள் போர்வெறிகொண்டு திரிய, குதிரைகள் போர்க் கவசங்கள் பூண்டு இருக்க,
தேரின்மீது கொடிகள் அசைந்தாட, கேடகப் படைகள் ஒருபக்கத்தில் ஆரவாரிக்க,
காட்டு மரங்களை வெட்டிக் குளிர்காய்ந்த நீண்ட நாட்களாக இருக்கின்ற பாசறை இருப்பில்
இப்படியாகத் தங்குதல் பல நாள்களாக இருக்க,
- பாடிக் காண்பதற்கு வந்திருக்கிறேன், பெருமானே!
பாடி வருவோர் பெற்றுக்கொண்டே இருந்தாலும் குறையாத செல்வத்தையும், பகைவர்
கொன்றுகொண்டே இருந்தாலும் குறையாத சேனையையும், சான்றோரானவர்
உனது கொடை, செங்கோன்மை, நற்பண்புகள், வீரம் ஆகிய இவற்றை
விரும்பிப் புகழ்வதால் கிடைக்கும் குன்றாத நல்ல புகழையும்
மாற்றார் நிலத்தைப் போரிட்டுச் சேர்த்துக்கொள்ளும் செல்வத்தையும் உடைய நெடியவனான சேரமானே, உன்னை -
					மேல்
# 83 பாட்டு 83
கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற
வெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற
கொல்லுகின்ற யானைப்படைகளினூடே செறிந்து கலந்த பலவான கேடகப் படையுடன்
நெடிய தேரின் மீது அசைந்தாடும் கொடி ஒளிவீசிப் பறக்க, அழகுபட
படையெடுத்துச் செல்வது பெரிதும் இன்பம் தருவதாகும் உன்னைக் காணுவோர்க்கு;
- துன்பத்தைத் தருகிறது அதுவே! பலபடியாக
பகைவரின் நாடுகள் கெட்டழிய, திறையாக நல்ல அணிகலன்களைக் கொண்டுவருகின்ற உன்
போரிடுவதற்கு அரிய கடுமையான சினத்தை எதிர்கொண்டு
பகைமை கொண்ட வேந்தரின் பாசறையில் உள்ளவர்க்கெல்லாம் -
					மேல்
# 84 பாட்டு 84
போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
தோலால் போர்த்தப்பட்ட முரசின் முகப்பு அதிர்வதைப் போன்ற
கார்காலத்து மேகங்களின் முழக்கத்தைக் கேட்டாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் தறியின் பிணிப்பினை அறுத்துக்கொண்டு
நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய யானைப்படை
கண்காணிப்புக் கூடாரத்துக்கு வந்து சேருகின்ற, பல வேற்படையினைக் கொண்ட
பூழிநாட்டவர்க்கு வேந்தனே! பொன்தகட்டால் மூடிய தேரினையுடைய சேரமானே!
மக்களைப் பெரிதாய்த் துன்புறுத்தும் கூற்றுவனைப் போன்ற வலிமையுடையவனே!
உன் பகைவரின் கொடிகள் அசைந்தாடும் வெல்வதற்கு அரிய மதில்களைக் கணக்கிட்டால் எண்ணிமுடியாது;
பலவான குதிரைகளும் யானைகளும் பரந்திருக்கின்றன; எனினும் உன்னுடைய நாட்டைக் கொள்வது எளிய செயல் என்று எண்ணாமல்
நீ மிக்க வலிமையுடையவன் என்பதனை நன்கு அறிந்திருக்கின்றனர் உன் பகைவர்; ஆயினும்
நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் பிளிறிக்கொண்டு செருக்குடன் வர, தன்
காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல,
தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்? -
உன்னை வணங்கி வாழ்தலை அறியமாட்டார் - சினந்தெழுந்து உன் முன் வந்து
தோலால் போர்க்கப்பட்ட தண்ணுமையின் மிகுந்த ஓசை எழுந்து போரைத் தெரிவிக்க,
உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்யும் போர்த்தொழிலை மேற்கொண்ட வேற்படை செறிந்திருக்கும் போர்க்களத்தில்
போரை விரும்பும் விருப்பத்தில் மாறா வீரருடன்,
இடி வீழ்ந்த மலை போல களிறுகள் கொலையுண்டு நிலத்தில் விழ,
நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்த உன்
- திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்,
உரிய காலத்தில் மழை பெய்து உழவுத்தொழில் நடக்கச்செய்து
மலையுச்சியை நோக்கிச் சென்ற மேகங்கள், நீண்ட நேரங் கழித்து,
மலையை அடைந்து மிகுந்த மழையைப் பெய்யத்தொடங்கியதால்
பல குரல்களையுடைய பறவைகளின் ஒலி எழுந்ததைப் போன்ற -
					மேல்
# 85 பாட்டு 85
நல்ல மரங்கள் செறிந்து வளர்ந்த நாடுகள் பலவற்றை வென்றெடுத்து,
ஒளிவிடும் பொன்னால் செய்த அழகிய வேலைப்படுள்ள பளிச்சிடும் பெரிய அணிகலன்களைக் கொண்ட,
எம்மோடு ஒன்றிவராத கொள்கையையுடைய சோழர்களின் வேந்தனை
என் முன்னே கொண்டுவருவீராக என்ற சொல் கேட்டவுடன், சோழரின் படைவீரர் கீழே எறிந்த வெண்மையான வேல், 
உன் முன்னிருந்த உன் குலத்து முன்னோர்களைப் போல நிலைபெற்றிருந்து,
இனிய நீரினையுடைய சுனைகள் வற்றாமல் இருக்கும், மலைவளம் பெருகிய பக்கங்களைக் கொண்ட,
சிகரங்கள் பல பரவலாய் இருக்கும், ஏறி நின்று பார்த்தால் நாடு முழுவதும் தெரியுமளவுக்கு உயரமான நீண்ட மலையில் உள்ள
சூடிக்கொள்ளாத நறவு ஆகிய நறவு என்னும் ஊரில் நாள்காலத்துக்குரிய கொலுவிருக்கையில்,
அவையிலுள்ளோர் பணிந்து நிற்க, அறத்தை விரும்பிச் செய்து புகழ்பெற்ற,
வீரத்தையும் விரும்புகின்ற உன் கொள்கையினை, தெளிந்த பேச்சினையுடைய செம்மையான நாவினையும்,
சிறுமைகூராத கவலை அற்ற நெஞ்சினையும்,
மெய்யாகவே புகழ்ந்து பாடிய நல்ல புகழையும் கொண்ட
கபிலன் பெற்ற ஊரின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகப் பலவாகும்.
					மேல்
# 86 பாட்டு 86
கொட்டிப்படிந்த குருதியால் போர்க்களம் புலால்நாற்றம் வீச,
பகைவரைக் கொன்று போரில் வென்ற மிகுந்த திறம் பொருந்திய பெரிய கையையும்,
வெற்றியையுடைய வேலினையும் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால், உள்ளம் அஞ்சும்படியான
கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான்;
நல்ல புகழை நிலைநிறுத்தும்பொருட்டு, அகன்ற இடத்தையுடைய உலகத்தில்
பொருளில்லாதவரின்  துன்பம் நீங்குமாறு அள்ளிக்கொடுக்கும்
அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்,
பாடிவரும் பாணர், புலவர் ஆகியோரின் பாதுகாவலன் இந்த அசைந்த நடையையுடைய அண்ணல்,
ஓடக்கோல் ஊன்ற முடியாத அளவுக்கு ஆழமானது என்றாலும்,
அந்த நீரில் பாய்ந்து மகளிர் நீர்விளையாட்டு ஆட, அவர் காதிலிருந்தி விழுந்த
பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும்
சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும்
இனிய குளிர்ந்த இயல்பினன், உறுதியாக.
					மேல்
# 87 பாட்டு 87
செல்வாயாக பாடினியே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்!
சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்
இழுத்துக்கொண்டுவரும் நீர்மேல் மிதந்து வரும் வேழக் கரும்பைக் காட்டிலும்
பல வேற்படையினைக் கொண்ட பொறையன் வல்லவன் துணைபுரிவதில்.
					மேல்
# 88 பாட்டு 88
உலகம் சிறப்பதற்கான தொழில்முறையில் வழுவாமல் இருந்து,
விந்தை என்னும் கொற்றவையின் பெயரைக் கொண்ட விந்தாடவி என்ற காட்டோடு இருக்கும் விந்திய மலை உயர்ந்து நிற்க,
தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய உலகத்தில்,
தங்கள் புகழை எங்கும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் தம் நிலையில் தாழ்வுற,
அசைவாடும் அலைகளைக் கொண்ட பெரிய கடலை அரணாகக் கொண்ட நிலை அழியுமாறு வேற்படையைச் செலுத்தி வென்று
தெய்வத்தன்மை பொருந்திய அவர்களின் காவல்மரமான கடம்பமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்து,
போரிடும் பகைமை கொண்ட கழுவுள் என்பானைப் புறமுதுகிடச் செய்து,
அவனுக்குத் துணையாய் வந்த அச்சந்தரக்கூடிய மன்னர்களைத் துண்டுதுண்டாக வெட்டிச் சாய்த்து,
வலிமையான கால்களை உடைய குதிரைகளைக் கொண்ட அண்டர் என்னும் இடையர்களை விரட்டி,
ஒளிவிடும் பூவான வாகையினைச் சூடிய நன்னனை அழித்து,
இரத்தம் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
அச்சந்தரும் இயல்புடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் போற்றிப்பாடி,
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் பின்னால் நின்று பணிந்துகொள்ள,
வெற்றி எய்திய பெருமக்களின் வழிவந்தவனே!
அகன்ற பிடரிமயிரினை உடைய சிங்கம் போன்ற வீரம் பொருந்திய குருசிலே!
பலவகையான முரசுகள் முழங்குகின்ற, வரிசையாகத் தோலாலான கேடயங்கள் பரப்பிய இடத்தையுடைய,
வலிமையான களிறுகளின் மேல் வெற்றிக் கொடிகள் அசைந்தாடும் பாசறையில்,
பகைவரின் அரிய மதிலைச் சீர்குலைத்த கற்களை வீசியெறியும் கவணைப் பொறியையும்,
நார்க்கூடையால் வடிக்கப்பட்ட கள்ளையும் உடைய கொங்குநாட்டவர் அரசனே!
உன்மேல் சினங்கொண்டவரைக் கொன்றழித்த, பொன்தகடால் வேய்ந்த தேரினை உடைய குருசிலே!
சங்குகளையுடைய கடலின் முழக்கத்தைப் போன்ற முழவினையுடைய, தொண்டி நகரத்தார்க்குத் தலைவனே!
நீ நீண்ட காலம் வாழ்வாயாக பெருமானே! உன்னை நோக்கி வரும் -
பல வாத்தியங்கள் முழங்குகின்ற, தும்பைப்பூ சூடிக்கொண்டு செய்யும் போரில், மெய்யான வெற்றியை வேண்டிக்கொண்டு
மாற்றுதற்கு அரிய தெய்வங்கள் கூடியிருக்கும் அயிரை மலையில் தோன்றிய
நீர் நிறைந்த பேரியாறு இறங்கி வந்ததைப் போன்று -
 - பெருங்கூட்டமான இரவலருக்கும்  - வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம்,
அந்த இரவலர் வாங்கிக்கொண்டேயிருக்கவும் குறைந்துபோகாமல் மேலும் மேலும் மிகுந்திருக்க,
ஓவியத்தில் வரைந்தாற் போன்ற உருவம் பொருந்திய நெடிய அரண்மனையில்
கொல்லிப்பாவை போன்ற அழகிய மகளிர் நடுவில் -
ஆடவர்க்குரிய இலக்கணமாகக் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்தி, பொலிவுடன் திகழும் சந்தனத்துடன்
குளிர்ந்த, மணங்கமழும் மாலையைச் சூடி, அணிகலன்களைப் பூண்டு,
வானவில்லை வளைத்து, அழகிய நீல மணி போன்ற,
அச்சந்தரும் இடிமின்னலோடு கூட்டமாய்ச் சேர்ந்த பெரிய மேகங்கள் ஒன்றுசேர,
வேங்கைப்பூக்கள் மலர்ந்திருக்க, விண்ணைத்தொடும் தொலைவிலுள்ள சிகரத்திலிருந்து விழும்
அருவியையுடைய அரிய மலையைப் போன்ற மார்பினையுடையவனாய் -
நெடுந்தொலைவுக்கும் சென்று மணம்வீசும் நல்ல புகழைக்கொண்ட செம்மையான இழைகளை அணிந்தவளுக்குக் கணவனே!
- திசைகளெல்லாம் ஒளியால் விளங்க கரிய வானத்தில் உயரே எழுகின்ற
ஞாயிற்றைப் போல சிறப்புடன் வாழ்வாயாக, பல நாட்கள்;
இங்கு காண வந்திருக்கிறேன் நான்,
பெரிய காற்றினால் எழுந்து, ஓங்கி உயர்ந்து வரும் அலை,
நுண்ணிய மணலையுடைய அடைத்தகரையில் மோதி உடைந்துபோகும்
குளிர்ந்த கடலோரப் பகுதிகளைக் கொண்ட நாட்டுக்கு உரியவனே!
					மேல்
# 89 பாட்டு 89
மழை உரிய காலத்தில் பொழிய, காடுகளில்
கூட்டமான இளைய மான்கள் தத்தம் ஆணோடு கூடி இனிதிருக்க,
பறவைகளும் வண்டினமும் பெரிய மரக்கிளைகளிலிருந்து ஆரவாரிக்க,
பழங்களும், கிழங்குகளும் உண்பதால் தீர்ந்துபோகாமலிருக்க,
பலவாகிய பசுவின் நல்ல கூட்டம் புல்லை மேய்ந்து துள்ளி மகிழ,
எல்லையறியாப் பயன்களைக் கொண்ட வளம் பொருந்திய சிறப்பினால்,
பெரிய அளவில் பலவகையான புதுப்புது தானியங்கள் நிறைந்திருக்க,
நல்ல பலவான ஊழிக்காலமாய் வளங்கள் நிறைவும், குறைவும் இன்றி நிலைபெற்றிருக்க,
பலவான வேற்படையை உடைய இரும்பொறையே! உனது செங்கோலாட்சி செம்மையாக நடைபெறுவதால்
நாள்தோறும் நாட்டு மக்களெல்லாம் உன்னைத் தொழுது புகழ,
விண்ணுலகில் இருக்கும் உயர்ந்தவர்கள் உன்னைப் போற்றிப் பாட,
- அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோயின்றி இருப்பாயாக நீயே! உன்னிடத்தில்
அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்,
கனவிலும் பிரியாத வாழ்க்கையோடு, குளிர்ச்ச்சியுண்டாக
மணம்வீசும் கலவைகள் பூசிய எண்ணெய்ப்பசை நீங்காத கூந்தலையுடைய
மணமகளிர் திருமணநாளில் பார்த்துப் பின்னரும்
தம் வாழ்நாளை உறுதிசெய்துகொள்ளும் ஒளிர்கின்ற சுடர் போன்ற தோற்றத்தையுடைய
அருந்ததி என்ற விண்மீனைப் போன்ற கற்பினையுடைய 
ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன் மனைவியுடன் அழகுற விளங்கி -
					மேல்
# 90 பாட்டு 90
நாள் மீன்களும், கோள்மீன்களும் தத்தம் இடத்தில் நிற்க, மழை பொய்க்காமல் பொழிய,
அச்சமே இல்லாமற்போய், பாதுகாப்பு உணர்வு பெருக, துன்பம் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தமக்கு அளவாக வகுக்கப்பட்ட
துறைகளையெல்லாம் மீதமின்றி நிறையக் கற்று,
வலிமையில் மிகுந்தோர் சினமூட்டும் போரின் கடுமையான வன்மைக்கு அஞ்சாத
ஒளிவிடும் வாளையுடைய வலிய வேந்தர்கள்
களிறுகளோடு கலன்கள் பலவற்றையும் தந்து
தமது பழைமையைச் சொல்லிப் பணிந்து நடக்க,
அகன்ற நிலவுலகில் நடுவுநிலைமையை நிலைநிறுத்தி,
அழியாத, பலவகையில் சிறந்த புகழ், அகன்ற வானமெங்கும் பரவ,
தன் வாள் வலிமை தெரியக் காட்டி, செங்கோன்மை மேற்கொண்டு
அறவோர் வாழ்த்த, நன்றாக ஆண்ட
வெற்றியையுடைய மாந்தரன் என்பவனின் சிறந்த வழித்தோன்றலே!
நெஞ்சிலே இரக்கம் கொண்டிருப்பதால் தண்ணீரின் தன்மையைப் போன்றிருக்கிறாய்;
உன் திறனை அளப்பதற்கு அரிது என்பதால் பெரிய விசும்பினைப் போன்றிருக்கிறாய்;
இரவலர் எடுத்துக்கொள்ள குறைவுபடாதிருப்பதால் கடலைப் போன்றிருக்கிறாய்;
பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல
மலர்ந்த சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;
அச்சந்தரும் மரபினையுடைய அயிரை மலையிலிருக்கும் கொற்றவையைப் போற்றித் துதித்தும்,
கடற்பகைவர் தாழ்ச்சியுற வேற்படையைச் செலுத்தியும்,
சினந்து வந்தவரின் வலிமையை அழித்தும்,
மலையிலும், நிலத்திலும் பகைவரின் அரண்களைக் கைப்பற்றி,
அங்குப் பெற்ற பெருமளவு பொருளைப் பலருக்கும் வழங்கியும்,
வெற்றியும் செல்வமும் பெற்றிருக்கும் உரமுடைய முன்னோர்களின் வழித்தோன்றலே!
சர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை வேகவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே!
கள்ளுடன் கூடிய உணவினையுடைய குட்டுவரின் தலைவனே!
தம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!
ஒலிக்கின்ற கடற்பரப்பைக் கொண்ட மரந்தை நகரத்தாரின் பொருநனே!
வெள்ளையான பூவைக்கொண்ட வேளைக் கொடியுடன் சுரைக்கொடியும் பின்னிக்கிடக்கும்
பல்வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளில் இருக்கும் வீரர்களுக்கு வேந்தனே!
மிகுந்த பரப்பினைக் கொண்ட கடலைப் போன்ற தடுப்பதற்கு முடியாத சேனையுடன்,
சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது
வில்லின் நாண் தேய்ப்பதால் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வலி பொருந்திய பெரிய கையினையும்,
நீண்டு ஒப்பனை செய்ததைப் போன்ற உயர்ந்த திரண்ட தோளினையும் கொண்டு,
விண்மீன் பூத்திருப்பதைப் போன்ற ஒளி விளங்கும் மணிகள் தைக்கபெற்ற சேணத்தையும்,
அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
காம்பையுடைய வேலினைப் பிடித்துப் பகைவர் மீது எறிந்து
அவர் எய்தும் துன்பத்தையே மேலும் விரும்புகின்ற நீங்காத ஆண்மையினையுடைய -
நிலையாமையை நெஞ்சிற்கொண்ட வீரர்களின் - பெருமானே!
பெருகிவரும் பெரும் சிறப்பினால் உயர்ந்த புகழைக் கொண்டவனே!
வயல்வெளிகளிலிருக்கும் உழவர்கள் தண்ணுமையை முழக்கினால்
நீர்நிலைகளில் வாழும் மயில்கள் மேகங்களின் முழக்கம் என்று எண்ணி ஆடுகின்ற,
குளிர்ந்த நீரில் ஆடுவோர் செய்யும் ஆரவார ஒலியுடன் கலந்து,
கொடிய போரைச் செய்யும் வீரர்களின் தெளிந்த ஓசையமைந்த கிடாரிப்பறை ஒலிக்கின்ற,
செல்வமுடைய நல்ல இல்லங்களில் காளைகள் தம்முள் மாறுபட்டு செருக்கி முழங்குகின்ற,
செழுமையான பல ஊர்களையுடைய, வளம் மிக்க பல குளிர்ந்த வயல்களைக் கொண்ட,
காவிரியாற்றால் வளம்பெறும் நிலப்பகுதிகளைக் கொண்ட, நல்ல சோழநாட்டைப் போன்றவளும்,
தொழில்வளம் பொருந்திய சிலம்பையும், அடக்கமே கொள்கையாகவும், 
சினமற்ற கற்பினையும், தெளிவாய் விளங்கும் நல்ல புகழையும்
வண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிவிடும் தொடிகளையும் உடையவளுக்குக் கணவனே!
உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம்
ஓர் ஆண்டைப் போல் இருப்பதாக, உனது ஓர் ஆண்டு
ஓர் ஊழியைப் போல் இருப்பதாக, உனது ஓர் ஊழி
பேரெண்ணாகிய வெள்ளம் என்பதன் எல்லையாக இருப்பதாக என்று நினைத்து வாழ்த்தி
உன்னைக் காண வந்திருக்கிறேன் நான்; போர்க்காலத்தில் மேம்பட்டு
இடியைப் போல முழங்கும் முரசினையும்,
பெரிய நல்ல யானைகளையும் உடைய இறைத்தன்மைக்குரியவனே!

 மேல்




பதிற்றுப்பத்தில்
முதல் பத்தும் (1 - 10) இறுதிப் பத்தும் (91 - 100)
கிடைக்கவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


# 91
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
நீர் துனைந்து அன்ன செலவின்
நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே
					மேல்
# 92
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி
கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர்
கண் வேட்டனவே முரசம் கண் உற்று
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப
நெடு மதில் நிரை ஞாயில்
கடி மிளை குண்டு கிடங்கின்
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே
					மேல்
# 93
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளே
					மேல்
# 94
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலி_மான் தேரொடு சுரந்து
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை
மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணி நின் பாசறை யானே
					மேல்