அகநானூறு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

0. கடவுள் வாழ்த்து
    
1 - 10             11 - 20                 21 - 30             31 - 40             41 - 50            
51 - 60                 61 - 70                 71 - 80             81 - 90             91 - 100        
101 - 110         111 - 120         121 - 130         131 - 140         141 - 150        
151 - 160         161 - 170         171 - 180         181 - 190         191 - 200        
201 - 210         211 - 220         221 - 230         231 - 240         241 - 250     
251 - 260         261 - 270         271 - 280         281 - 290         291 - 300        
301 - 310         311 - 320         321 - 330         331 - 340         341 - 350        
351 - 360         361 - 370         371 - 380         381 - 390         391 - 400        
  தேவையான   பாடல் எண்   எல்லையைத்   தட்டுக
மூலம்

#0 கடவுள் வாழ்த்து
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்		5
வேலும் உண்டு அ தோலாதோற்கே
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
செ வான் அன்ன மேனி அ வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை	10
முதிரா திங்களொடு சுடரும் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொன் முறை மரபின்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்		15
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே
					மேல்
 
				


#1 பாலை மாமூலனார்
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய		5
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்	10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை		15
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே
					மேல்
#2 குறிஞ்சி கபிலர்
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது			5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய		10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்		15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே
					மேல்
#3 பாலை
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை		5
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்		10
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய்		15
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே
					மேல்
#4 முல்லை குறுங்குடி மருதனார்
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப		5
கருவி வானம் கதழ் உறை சிதறி
கார் செய்தன்றே கவின் பெறு கானம்
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த		10
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்		15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே
					மேல்
#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்		5
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப		10
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்		15
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச்செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி		20
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த_காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்		25
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே
					மேல்
#6 மருதம் பரணர்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை
இழை அணி பணை தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்		5
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய		10
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல		15
சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும்
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்		20
இளமை சென்று தவ தொல்லஃதே
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே
					மேல்
#7 பாலை கயமனார்
முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை		5
பேதை அல்லை மேதை அம் குறு_மகள்
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி		10
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி			15
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த		20
துய் தலை வெண் காழ் பெறூஉம்	
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே
					மேல்
#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல-மன் இகுளை பெரிய			5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய		10
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல்
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்		15
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே
					மேல்
#9 பாலை கல்லாடனார்
கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்க பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்		5
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு
ஆலி வானின் காலொடு பாறி
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்		10
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து		15
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி
கன்று புகு மாலை நின்றோள் எய்தி		20
கை கவியா சென்று கண் புதையா குறுகி
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
அம் தீம் கிளவி குறு_மகள்			25
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே
					மேல்
#10 நெய்தல் அம்மூவனார்
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப
நெய்தல் உண்கண் பைதல கலுழ			5
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும்
அரிது உற்றனையால் பெரும உரிதினின்
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு
குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர்
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்		10
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே
					மேல்
 




#11 பாலை ஔவையார்
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி		5
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்		10
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே			15
					மேல்
#12 குறிஞ்சி கபிலர்
யாயே கண்ணினும் கடும் காதலளே
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே		5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்		10
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்
மழை படு சிலம்பில் கழைபட பெயரும்
நல் வரை நாட நீ வரின்
மெல்லியல் ஓரும் தான் வாழலளே
					மேல்
#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்		5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன்		10
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட		15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமை கழிக வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர	20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்_குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே
					மேல்
#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ		5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற		10
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின் காலை
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென		15
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்		20
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே
					மேல்
#15 பாலை மாமூலனார்
எம் வெம் காமம் இயைவது ஆயின்
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை காவின் துளுநாட்டு அன்ன		5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரி செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானை சுடர் பூண் நன்னன்			10
பாழி அன்ன கடி உடை வியல் நகர்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி		15
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே
					மேல்
#16 மருதம் சாகலாசனார்
நாய் உடை முது நீர் கலித்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை	5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து		10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன்
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா	15
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே
					மேல்
#17 பாலை கயமனார்
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும்-மன்னே இனியே		5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென		10
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்		15
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி		20
வைகுறு_மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே
					மேல்
#18 குறிஞ்சி கபிலர்
நீர் நிறம் கரப்ப ஊழ்_உறுபு உதிர்ந்து
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி
மராஅ யானை மதம் தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்			5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்		10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்	15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே
					மேல்
#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்	5
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின்
சே இதழ் அனைய ஆகி குவளை			10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇ பையென
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை		15
பூ வீ கொடியின் புல்லென போகி
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே
					மேல்
#20 நெய்தல் உலோச்சனார்
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி		5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி
மணி பூ பைம் தழை தைஇ அணி தக
பல் பூ கானல் அல்கினம் வருதல்			10
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை
கடி கொண்டனளே தோழி பெரும் துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி			15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே
					மேல்
 



#21 பாலை காவன்முல்லை பூதனார்
மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு		5
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்		10
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை		15
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்		20
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர்
ஊறாது இட்ட உவலை கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து	25
இரும் களிற்று இன நிரை தூர்க்கும்
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே
					மேல்
#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்
படியோர் தேய்த்த பல் புகழ் தட கை		5
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என
முது வாய் பெண்டிர் அது வாய் கூற
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து
உருவ செந்தினை குருதியொடு தூஉய்		10
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்
ஆரம் நாற அரு விடர் ததைந்த
சாரல் பல் பூ வண்டு பட சூடி
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல		15
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு			20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே
					மேல்
#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ
காடே கம்மென்றன்றே அவல			5
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர்
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ
தண் அறல் பருகி தாழ்ந்துபட்டனவே
அனைய-கொல் வாழி தோழி மனைய		10
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மா சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே
					மேல்
#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்		5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி
மங்குல் மா மழை தென் புலம் படரும்
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
தம் ஊரோளே நன்_நுதல் யாமே			10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து	15
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்
இரவு துயில் மடிந்த தானை
உரவு சின வேந்தன் பாசறையேமே
					மேல்
#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல			5
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர்		10
பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன
இகழுநர் இகழா இள_நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு		15
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தட கை
பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன்		20
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே
					மேல்
#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்			5
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று		10
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே		15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்		20
மகன்_வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு என சாஅய்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே		25
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே
					மேல்
#27 பாலை மதுரைக்கணக்காயனார்
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார் நாம் அழ
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்
செல்ப என்ப என்போய் நல்ல			5
மடவை மன்ற நீயே வட_வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்	10
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல்		15
குருதியொடு துயல்வந்து அன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே
					மேல்
#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே			5
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி
பரியல் நாயொடு பன் மலை படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி		10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே
					மேல்
#29 பாலை வெள்ளாடியனார்
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப
செய்_வினைக்கு அகன்ற_காலை எஃகு உற்று		5
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின்
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண்		10
தாழ கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை		15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு		20
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே
					மேல்
#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்		5
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி
பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி		10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே		15
					மேல்
 



#31 பாலை மாமூலனார்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து		5
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்		10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே		15
					மேல்
#32 குறிஞ்சி நல்வெள்ளியார்
நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண்		5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்	10
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
கடிய கூறி கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்_வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து		15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
என் குறை புறனிலை முயலும்			20
அண்கணாளனை நகுகம் யாமே
					மேல்
#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளை பருந்தின் கோள் வல் சேவல்		5
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்		10
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள்		15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்_வயின்
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய்_வினை ஆற்று_உற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே		20
					மேல்
#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்	5
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற
செல்க தேரே நல் வலம் பெறுந			10
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென		15
மழலை இன் சொல் பயிற்றும்
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே
					மேல்
#35 பாலை குடவாயில் கீரத்தனார்
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த		5
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்	10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன்
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை		15
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையே
					மேல்
#36 மருதம் மதுரை நக்கீரர்
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி		5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில்		10
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்		15
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்		20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
#37 பாலை விற்றூற்று மூதெயினனார்
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி		5
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை	10
கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றி பகல் செல		15
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே
					மேல்
#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன்
அம் சிலை இடவது ஆக வெம் செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன்		5
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்		10
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல்
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு		15
அய வெள் அருவி சூடிய உயர் வரை
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே
					மேல்
#39 பாலை மதுரை செங்கண்ணனார்
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து	5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ
காடு கவர் பெரும் தீ ஓடு வயின் ஓடலின்
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு		10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென		15
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
இன்_நகை இனையம் ஆகவும் எம் வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்		20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே		25
					மேல்
#40 நெய்தல் குன்றியனார்
கானல் மாலை கழி பூ கூம்ப
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி
குவை இரும் புன்னை குடம்பை சேர
அசை வண்டு ஆர்க்கும் அல்கு_உறு_காலை		5
தாழை தளர தூக்கி மாலை
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவர் உடை கேண்மை		10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை		15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே
					மேல்
 



#41 பாலை குன்றியனார்
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப
கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து
குடுமி கட்டிய படப்பையொடு மிளிர		5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப
கோழ் இணர் எதிரிய மரத்த கவினி
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில்
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய்		10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய			15
நுண் பல் தித்தி மாஅயோளே
					மேல்
#42 குறிஞ்சி கபிலர்
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே			5
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச
கோடை நீடிய பைது அறு காலை
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லா புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை		10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கி தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே
					மேல்
#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி		5
குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி
மை இரும் கானம் நாறும் நறு நுதல்		10
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருள்_பிணி போகி தம்
இன் துணை பிரியும் மடமையோரே		15
					மேல்
#44 முல்லை குடவாயில் கீரத்தனார்
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்து தமர் ஆயினரே
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது		5
ஊர்க பாக ஒருவினை கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்		10
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்			15
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை
தண் குடவாயில் அன்னோள்
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே
					மேல்
#45 பாலை வெள்ளிவீதியார்
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்		5
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி		10
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்	15
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே
					மேல்
#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை		5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர
யாரையோ நின் புலக்கேம் வார்_உற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்		10
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க			15
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ		
					மேல்
#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி		5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை_வயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின்	10
குறு நடை புறவின் செம் கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன்		15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணை தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே
					மேல்
#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூ சாரல் என் தோழிமாரோடு		5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று_உழி
புலி புலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன்		10
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி		15
நாணி நின்றனெமாக பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் பையென
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து		20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள்			25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே
					மேல்
#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி		5
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி		10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்
செல்வு_உழி செல்வு_உழி மெய் நிழல் போல		15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே
					மேல்
#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும்
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப
பகலும் நம்_வயின் அகலான் ஆகி			5
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி			10
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என
கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே
					மேல்
 



#51 பாலை பெருந்தேவனார்
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற		
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி		5
எருவை சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி
பல் இதழ் மழை கண் மாஅயோள்_வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது		10
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே
					மேல்
#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர்
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின்		5
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம்
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என		10
இரு_பால் பட்ட சூழ்ச்சி ஒரு_பால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய் என செப்பாதீமே			15
					மேல்
#53 பாலை சீத்தலை சாத்தனார்
அறியாய் வாழி தோழி இருள் அற
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை		5
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்		10
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்			15
அருளே காதலர் என்றி நீயே
					மேல்
#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள் வாய் ஆழி உள் உறுபு உருள			5
கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர்		10
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்		15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி	20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூ_கொடி நிலையே
					மேல்
#55 பாலை மாமூலனார்
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வய களிற்று அன்ன காளையொடு என் மகள்		5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படை
கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை		10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்		15
காதல் வேண்டி என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே
					மேல்
#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய		5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்		10
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு
எம் மனை புகுதந்தோனே அது கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று
இ மனை அன்று அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி			15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே
					மேல்
#57 பாலை நக்கீரர்
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை		5
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ்
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆக தாமே			10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி			15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே
					மேல்
#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை		5
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும்	10
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றி
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே
					மேல்
#59 பாலை மதுரை மருதன் இளநாகன்
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்		5
மரம் செல மிதித்த மாஅல் போல
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்		10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
தாம் பாராட்டிய_காலையும் உள்ளார்		15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே
					மேல்
#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளி சொரிந்து		5
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ		10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
கொற்ற சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே		15
					மேல்
 



#61 பாலை மாமூலனார்
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி தாழாது			5
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும்		10
கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி		15
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலை பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே
					மேல்
#62 குறிஞ்சி பரணர்
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள்
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன
மா இதழ் மழை கண் மாஅயோளொடு		5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல		10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேல்
களிறு கெழு தானை பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப
கடவுள் எழுதிய பாவையின்			15
மடவது மாண்ட மாஅயோளே
					மேல்
#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்
கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி		5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவர தகுந கானம் நீந்தி
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து		10
மன்று நிறை பைதல் கூர பல உடன்
கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை		15
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள்
வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே
					மேல்
#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களையும் இடனால் பாக உளை அணி
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்	5
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல
கடு நீர் வரித்த செம் நில மருங்கின்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி		10
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர்_வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை	15
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே
					மேல்
#65 பாலை மாமூலனார்
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்		5
பாடி சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி		10
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை
உயவல் யானை வெரிநு சென்று அன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி		15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள்
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே		20
					மேல்
#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி
சிறுவர் பயந்த செம்மலோர் என
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்		5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின்
இயன்ற அணியன் இ தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து	10
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும்
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர்
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண
புல்லி பெரும செல் இனி அகத்து என		15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந்தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று	20
அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய			25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே
					மேல்
#67 பாலை நோய்பாடியார்
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின்			5
நிரம்பா நோக்கின் நிரையம் கொள்-மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்		10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர்
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை
உரு இல் பேஎய் ஊரா தேரொடு			15
நிலம் படு மின்மினி போல பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே
					மேல்
#68 குறிஞ்சி ஊட்டியார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலை		5
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்		10
வருவர் ஆயின் பருவம் இது என
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்_வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ		15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்
புன் தலை மட பிடி பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி பட துழவும்
அகல் வாய் பாந்தள் படாஅர்			20
பகலும் அஞ்சும் பனி கடும் சுரனே
					மேல்
#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவர			5
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை
பராரை நெல்லி அம் புளி திரள் காய்
கான மட மரை கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்	10
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண்		15
அம்பு உடை கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே		20
					மேல்
#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே		5
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே
வதுவை கூடிய பின்றை புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெரும் துறை கழனி மா நீர்		10
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும்
வென் வேல் கவுரியர் தொன் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த		15
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே
					மேல்
 



#71 பாலை அந்தி இளங்கீரனார்
நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம்
சுனை பூ நீத்து சினை பூ படர
மை இல் மான் இனம் மருள பையென		5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக			10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து		15
இது-கொல் வாழி தோழி என் உயிர்
விலங்கு வெம் கடு வளி எடுப்ப
துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுதே
					மேல்
#72 குறிஞ்சி எருமை வெளியனார் மகனார் கடலனார்
இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை		5
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து		10
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன்
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்		15
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீ தவறு உடையையும் அல்லை நின்_வயின்		20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறு உடையேனே
					மேல்
#73 பாலை எருமை வெளியனார்
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய்		5
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது			10
காணிய வம்மோ காதலம் தோழி
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின்
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி		15
விடு பொறி சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே
					மேல்
#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த
தண் பெயல் பொழிந்த பைது_உறு காலை
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப		5
பைம் கொடி முல்லை மென் பத புது வீ
வெண் களர் அரி மணல் நன் பல தாஅய்
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து	10
திண் தேர் வலவ கடவு என கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி கொடும் கோல்	15
கல்லா கோவலர் ஊதும்
வல் வாய் சிறு குழல் வருத்தா_காலே
					மேல்
#75 பாலை மதுரைப்போத்தனார்
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை			5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல்
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய்		10
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்		15
தருநரும் உளரோ இ உலகத்தான் என
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி		20
ஆனா நோயை ஆக யானே
பிரிய சூழ்தலும் உண்டோ
அரிது பெறு சிறப்பின் நின்_வயினானே
					மேல்
#76 மருதம் பரணர்
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது		5
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என
ஆதிமந்தி பேது உற்று இனைய			10
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே
					மேல்
#77 பாலை மருதன் இள நாகனார்
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து_உற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்		5
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ்
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர			10
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர் கவலை போகின் சீறூர்
புல் அரை இத்தி புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தட கை		15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே
					மேல்
#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல்
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ		5
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல்
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள்
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம்		10
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர்
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை		15
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று
செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு_வயின் பிழையா
தாள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி		20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
கடும் பரி புரவி கைவண் பாரி
தீம் பெரும் பைம் சுனை பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே
					மேல்
#79 பாலை குடவாயில் கீரத்தனார்
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்_புலம் துமிய போகி கொங்கர்			5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும்
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர		10
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி
கொடு வில் எயினர் கோள் சுரம் படர
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை		15
கல் பிறங்கு அத்தம் போகி
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே
					மேல்
#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
கொடும் தாள் முதலையொடு கோட்டு_மீன் வழங்கும்
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை
புணர் திரை பரப்பு_அகம் துழைஇ தந்த		5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ		10
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைம் தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே
					மேல்
 



#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின்
புல் அளை புற்றின் பல் கிளை சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும்		5
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த		10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே		15
					மேல்
#82 குறிஞ்சி கபிலர்
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அம் வளி குழல் இசை ஆக
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு		5
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன்		10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செரு செய் யானை செல் நெறி வினாஅய்
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில் வாழி தோழி அவருள்			15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே
					மேல்
#83 பாலை கல்லாடனார்
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
கறை அடி மட பிடி கானத்து அலற
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து	5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும்	10
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே
					மேல்
#84 முல்லை மதுரை எழுத்தாளன்
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறு காலை		5
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி
அயிர்_கண் படாஅர் துஞ்சு புறம் புதைய
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்_நுதல் யாமே			10
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து	15
வினை வயின் பெயர்க்கும் தானை
புனை தார் வேந்தன் பாசறையேமே
					மேல்
#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்
அறவர் அல்லர் அவர் என பல புலந்து
ஆழல் வாழி தோழி சாரல்			5
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி
கன்று பசி களைஇய பைம் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை		10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் துனைதரு தண் கார்
வருதும் யாம் என தேற்றிய
பருவம் காண் அது பாயின்றால் மழையே		15
					மேல்
#86 மருதம் நல்லாவூர் கிழார்
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி
மனை விளக்கு உறுத்து மாலை தொடரி
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை		5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர		10
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ நன் பல உதவி
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி			15
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து		20
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த_காலை யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்		25
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே			30
					மேல்
#87 பாலை மதுரை பேராலவாயார்
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலை பந்தர் புல் வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லி தங்கி
குடுமி நெற்றி நெடு மர சேவல்			5
தலை குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்		10
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி
தாழ் இரும் கூந்தல் நம் காதலி			15
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே
					மேல்
#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்
முதை சுவல் கலித்த மூரி செந்தினை
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர்
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும்
புருவை பன்றி வரு_திறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய		5
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்		10
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே		15
					மேல்
#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை
உருத்து எழு குரல குடிஞை சேவல்
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்		5
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழ்_உறு விளை நெற்று உதிர காழியர்
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய
களரி பரந்த கல் நெடு மருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்		10
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்		15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து
அளவு_உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்	20
இடு மணல் பந்தருள் இயலும்
நெடு மென் பணை தோள் மாஅயோளே
					மேல்
#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
மூத்தோர் அன்ன வெண் தலை புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ
இல் வயின் செறித்தமை அறியாய் பல் நாள்		5
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர்		10
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் என கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே
					மேல்
 



#91 பாலை மாமூலனார்
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது
பாசி தின்ற பைம் கண் யானை			5
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை		10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப
பசி என அறியா பணை பயில் இருக்கை
தட மருப்பு எருமை தாமரை முனையின்		15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே
					மேல்
#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய நேர் இறை			5
நெடு மென் பணை தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை		10
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே
					மேல்
#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
ஆரம் கண்ணி அடு போர் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன		5
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின்
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள்_அங்காடி நாறும் நறு நுதல்			10
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப		15
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை		20
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை
தெண் நீர் உயர் கரை குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே
					மேல்
#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்
தேம் படு சிமய பாங்கர் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூ குழைய
வான் என பூத்த பானாள் கங்குல்
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ		5
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காய
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்		10
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே
					மேல்
#95 பாலை ஒரோடோகத்துகந்தரத்தனார்
பைபய பசந்தன்று நுதலும் சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்
பலரும் அறிய திகழ்தரும் அவலமும்
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழி தோழி பொரி கால்		5
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்		10
கௌவை மேவலர் ஆகி இ ஊர்
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே		15
					மேல்
#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி		5
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே		10
செம் பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய		15
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே
					மேல்
#97 பாலை மாமூலனார்
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறி கலை
வறன்_உறல் அம் கோடு உதிர வலம் கடந்து
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்		5
கொலை வில் ஆடவர் போல பல உடன்
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு	10
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து
ஆழல் என்றி தோழி யாழ என்			15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து		20
இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர்
புகை புரை அம் மஞ்சு ஊர
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே
					மேல்
#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல்		5
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து	10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்		15
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்	20
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று		25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே		30
					மேல்
#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை	5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய் பராஅம்
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம			10
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே
					மேல்
#100 நெய்தல் உலோச்சனார்
அரை_உற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த	5
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடா பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும்			10
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்		15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே
					மேல்
 



#101 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர்		5
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல்
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர்	10
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்		15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பன் மலை இறந்தோர்க்கு
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே
					மேல்
#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி		5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப			10
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பி பையென
வீழா கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகல முயங்கி தோள் மணந்து
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி		15
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே
					மேல்
#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்ப போகி முனாஅது		5
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் மனை
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்_வயின்		10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே		15
					மேல்
#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்து வினை முடித்த_காலை தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா			5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர்
வாங்கு சினை பொலிய ஏறி புதல
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய		10
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்		15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே
					மேல்
#105 பாலை தாயங்கண்ணனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தன் பாராட்ட
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி		5
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி
சில் பரி குதிரை பல் வேல் எழினி			10
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழு தொடை மறவர்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம்		15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர் செலவே
					மேல்
#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை		5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்		10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே
					மேல்
#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்		5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும்		10
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு	15
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்
மாலை இன் துணை ஆகி காலை
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப		20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே
					மேல்
#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம்
வரை முதல் சிதறிய வை போல் யானை
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப		5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும்
இருள் இடை தமியன் வருதல் யாவதும்		10
அருளான் வாழி தோழி அல்கல்
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடி
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள்		15
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே
					மேல்
#109 பாலை கடுந்தொடைகாவினார்
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி
காடு கால்யாத்த நீடு மர சோலை			5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்		10
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன்_உறு குன்றம் பல விலங்கினவே		15
					மேல்
#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல்		5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனம் ஆக எய்த வந்து
தட மென் பணை தோள் மட நல்லீரே		10
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி		15
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ என காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்		20
என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால்
ஒழிகோ யான் என அழி_தக கூறி
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே
					மேல்
 



#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகில் கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி		5
ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்த கேழல் அட்ட நல் கோள்			10	
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப
குருதி ஆரும் எருவை செம் செவி
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே		15
					மேல்
#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி	5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும்
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்
தோள்_இடை முயக்கம் நீயும் வெய்யை		10
கழிய காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான் தோய் வெற்ப
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்		15
தொன்று இயல் மரபின் மன்றல் அயர
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே
					மேல்
#113 பாலை கல்லாடனார்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர்		5
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன்	10
அல்கு வன் சுரை பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல்		15
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி		20
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினை குடம்பை புல்லென
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு		25
மெய் இவண் ஒழிய போகி அவர்
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே
					மேல்
#114 முல்லை
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்		5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண்
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்		10
வான்_அக மீனின் விளங்கி தோன்றும்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்கு சால் அரிவையை காண்குவம்		15
பொலம் படை கலி_மா பூண்ட தேரே
					மேல்
#115 பாலை மாமூலனார்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்		5
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்		10
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை	15
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருள்_பிணி
கூடாமையின் நீடியோரே
					மேல்
#116 மருதம் பரணர்
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாண் இலை மன்ற பொரி என		5
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல்
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே		10
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் தானே மலர் தார்
மை அணி யானை மற போர் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்		15
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
#117 பாலை
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர		5
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து	10
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம்		15
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே
					மேல்
#118 குறிஞ்சி கபிலர்
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன்
தேம் கமழ் இணர வேங்கை சூடி
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட		5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்		10
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தான் நின் அளி அலது இலளே
					மேல்
#119 பாலை குடவாயி கீரத்தனார்
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை		5
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து		10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை
தொடை அமை பீலி பொலிந்த கடிகை
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள		15
மற புலி உழந்த வசி படு சென்னி
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை
மை தோய் சிமைய மலை முதல் ஆறே		20
					மேல்
#120 நெய்தல் நக்கீரனார்
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பி குட_வயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு		5
மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால்
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி		10
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்			15
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே
					மேல்
 



#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல்
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி		5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்கு_உறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி		10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே			15
					மேல்
#122 குறிஞ்சி பரணர்
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்		5
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்		10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின்		15
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா			20
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே
					மேல்
#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த		5
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகு இலை இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்		10
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே
					மேல்
#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே			5
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி		10
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்த கடவு-மதி மாலை
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும்			15
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே
					மேல்
#125 பாலை பரணர்
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப		5
தாது உறு குவளை போது பிணி அவிழ
படாஅ பைம் கண் பா அடி கய வாய்
கடாஅம் மாறிய யானை போல
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர		10
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின்	15
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகை பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த		20
பீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே
					மேல்
#126 மருதம் நக்கீரர்
நின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று		5
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்		10
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி		15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் என
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்		20
மின் நேர் மருங்குல் குறு_மகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே
					மேல்
#127 பாலை மாமூலனார்
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து		5
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன		10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ			15
வருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே
					மேல்
#128 குறிஞ்சி கபிலர்
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்-கொல் வாழி தோழி மயங்கி		5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்
குறும் சுனை குவளை வண்டு பட சூடி
கான நாடன் வரூஉம் யானை			10
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே		15
					மேல்
#129 பாலை குடவாயில் கீரத்தனார்
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்		5
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்			10
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின்	15
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே
					மேல்
#130 நெய்தல் வெண்கண்ணனார்
அம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை
பேஎய் தலைய பிணர் அரை தாழை		5
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும்		10
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே
 
மேல்
					மேல்
#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என		5
வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்		10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே		15
					மேல்
#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி
வால் நிண புகவின் கானவர் தங்கை		5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை		10
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும்
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே
					மேல்
#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப
கார் தலைமணந்த பைம் புதல் புறவின்		5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று		10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம்		15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே
					மேல்
#134 முல்லை சீத்தலை சாத்தனார்
வானம் வாய்ப்ப கவினி கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்		5
செய்கை அன்ன செம் நில புறவின்
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழ்_உறுபு உதிர்ந்த		10
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே
					மேல்
#135 பாலை பரணர்
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி			5
பேது உற்றிசினே காதலம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர்		10
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே
					மேல்
#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர் பேணி
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து		5
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூ கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை		10
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
தூ உடை பொலிந்து மேவர துவன்றி		15
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ		20
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென		25
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே
					மேல்
#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர் சோழர்		5
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்		10
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்			15
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே
					மேல்
#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி		5
உடலுநர் கடந்த கடல் அம் தானை
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ		10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி		15
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி
நன் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே		20
					மேல்
#139 பாலை இடைக்காடனார்
துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்		5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை		10
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்
பரப்பியவை போல் பாஅய் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ		15
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல்
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவி கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே
					மேல்
#140 நெய்தல் அம்மூவனார்
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்
இரும் கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்		5
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு		10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே		15
					மேல்
 



#141 பாலை நக்கீரர்
அம்ம வாழி தோழி கைம்மிக
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி		5
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய		10
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவர புலர்ந்து தூ மலர் கஞலி
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ		15
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது		20
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்
வெல் போர் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை		25
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே
					மேல்
#142 குறிஞ்சி பரணர்
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற		5
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு		10
ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய			15
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி
சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து		20
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள்		25
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே
					மேல்
#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு	5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன்		10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன்
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல			15
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே
					மேல்
#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்		5
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லி பெரிய புலப்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல		10
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி		15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்_வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே
					மேல்
#145 பாலை கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு	5
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்		10
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சர குரல குருகோடு ஆலும்			15
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்		20
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே
					மேல்
#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி
மட கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணி பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர்		5
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாய பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின்		10
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து
ஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே
					மேல்
#147 பாலை ஔவையார்
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என	5
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளி வீதியை போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து		10
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே
					மேல்
#148 குறிஞ்சி பரணர்
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின்
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து		5
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என
காணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை		10
பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே
					மேல்
#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்
அத்த நீள் இடை போகி நன்றும்			5
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்		10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய		15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே
					மேல்
#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறி
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து	5
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்ப காலை			10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து
வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே
					மேல்
 



#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு			5
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி
கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும்		10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செம் நாவின்
மணி ஓர்த்து அன்ன தெண் குரல்
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே		15
					மேல்
#152 குறிஞ்சி பரணர்
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை
சினம் கெழு தானை தித்தன்_வெளியன்		5
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல்		10
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ்
பாரத்து தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில்
களி மயில் கலாவத்து அன்ன தோளே
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி		15
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தளுள்ளும் பல உடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும்		20
மாஅல் யானை ஆஅய் கானத்து
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே
					மேல்
#153 பாலை சேரமான் இளங்குட்டுவன்
நோகோ யானே நோ_தகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பும்-மன் அளியள் தானே இனியே
வன்கணாளன் மார்பு உற வளைஇ		5
இன் சொல் பிணிப்ப நம்பி நம்_கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி		10
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல்
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி		15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின்
கால் உற கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே
					மேல்
#154 முல்லை பொதும்பி புல்லாளங்கண்ணியார்
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி
செம் நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப		5
வெம் சின அரவின் பை அணந்து அன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி
காமர் துணையொடு ஏமுற வதிய
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி		10
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
நம்_வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே		15
					மேல்
#155 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம்		5
செய்_வினை முடிக்க தோழி பல் வயின்
பய நிரை சேர்ந்த பாண் நாட்டு ஆங்கண்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது		10
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும்		15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#156 மருதம் ஆவூர் மூலங்கிழார்
முரசு உடை செல்வர் புரவி சூட்டும்
மூட்டு_உறு கவரி தூக்கி அன்ன
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர்
மூதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ		5
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய			10
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி		15
தணி மருங்கு அறியாள் யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே
					மேல்
#157 பாலை வேம்பற்றூர் குமரனார்
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகு வாய் பானை குவி முலை சுரந்த
அரி நிற கலுழி ஆர மாந்தி
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின்		5
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார்
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி		10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய்
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே
					மேல்
#158 குறிஞ்சி கபிலர்
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி		5
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே
நனவின் வாயே போல துஞ்சுநர்			10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு		15
முருகன் அன்ன சீற்றத்து கடும் திறல்
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே
					மேல்
#159 பாலை ஆமூர் கவுதமன் சாதேவனார்
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரன் உடை சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடி உறு பகழி கொடு வில் ஆடவர்		5
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும்		10
கவலை காதலர் இறந்தனர் என நனி
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூ சாரல் குறும் பொறை குணாஅது
வில் கெழு தட கை வெல் போர் வானவன்		15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின்		20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே
					மேல்
#160 நெய்தல் குமுழிஞாழலார் நப்பசலையார்
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்
அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த		5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய்
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன்
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி		10
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப
இர வந்தன்றால் திண் தேர் கரவாது		15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவ சீறூர் காண
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே
					மேல்
 



#161 பாலை மதுரை புல்லங்கண்ணனார்
வினை வயின் பிரிதல் யாவது வணர் சுரி
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை
படு முடை நசைஇய வாழ்க்கை செம் செவி		5
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்		10
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே
					மேல்
#162 குறிஞ்சி பரணர்
கொள குறைபடாஅ கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல
கடல் கண்டு அன்ன மாக விசும்பின்
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி		5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என		10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண்
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்
கோல் அமை விழு தொடி விளங்க வீசி
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது		15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன்
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய		20
வில் கெழு தானை பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர்_கொள் நெடு வரை கவாஅன்
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே		25
					மேல்
#163 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழைய
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆக துனி உளம் கூர
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி		5
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனி பானாள்
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால்		10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே
					மேல்
#164 முல்லை மதுரை தமிழ் கூத்தன் நாகன்தேவனார்
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின்
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன்		5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்		10
இது நன் காலம் கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை
வெம் சின வேந்தன் வினை விட பெறினே
					மேல்
#165 பாலை
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செம் வாய் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்		5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும்
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என
கண்ணும் நுதலும் நீவி தண்ணென
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ		10
தாழி குவளை வாடு மலர் சூட்டி
தரு மணல் கிடந்த பாவை என்
அரு மகளே என முயங்கினள் அழுமே
					மேல்
#166 மருதம் இடையன் நெடுங்கீரனார்
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை		5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்		10
யார்-கொல் வாழி தோழி நெருநல்
தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு
புதுவது வந்த காவிரி
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே		15
					மேல்
#167 பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின்
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை		5
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ்		10
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று		15
ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்
கூர் முக சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறை பொதியிலானே		20
					மேல்
#168 குறிஞ்சி கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான்
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்		5
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின்
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன்
தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப		10
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண்
வாள் வரி வய புலி கல் முழை உரற
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே
					மேல்
#169 பாலை தொண்டியாமூர் சாத்தனார்
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை		5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும்
சுரம் பல கடந்த நம்_வயின் படர்ந்து நனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை		10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
கயல் உமிழ் நீரின் கண் பனி வார
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே
					மேல்
#170 நெய்தல் மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ		5
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம்
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு		10
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து
நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே
					மேல்
 



#171 பாலை கல்லாடனார்
நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல் வாழி தோழி புணர்வர்			5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை		10
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே		15
					மேல்
#172 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நப்பாலனார்
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென
கல் முகை விடர்_அகம் சிலம்ப வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல்		5
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி			10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின்		15
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே
					மேல்
#173 பாலை முள்ளியூர் பூதியார்
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என
செய்_வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல்
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல்		5
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின்
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர் வாழி தோழி பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ		10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட
காடு கவின் அழிய உரைஇ கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழம் குழி தாஅம்		15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரை கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#174 முல்லை மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என
பூ கோள் ஏய தண்ணுமை விலக்கி
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை		5
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்து கடும் குரல் கொண்மூ
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை		10
ஊழ்_உறு நறு வீ கடுப்ப கேழ் கொள
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்
நன் மணல் வியல் இடை நடந்த
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே
					மேல்
#175 பாலை ஆலம்பேரி சாத்தனார்
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின்
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்		5
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன்		10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்	15
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு
மண் பயம் பூப்ப பாஅய்
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே
					மேல்
#176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால்
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை	5
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க
பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்		10
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் ஊர
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து	15
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல்
புல் உளை குடுமி புதல்வன் பயந்து
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய		20
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ்
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு
கூர் நுனை மழுகிய எயிற்றள்			25
ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே
					மேல்
#177 பாலை செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
தொல் நலம் சிதைய சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண்
இரும் பிடி தட கை மான நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்	5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பு இன்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை		10
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த		15
கழல் கால் பண்ணன் காவிரி வட_வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்கு உடை வன முலை தாஅய நின்
சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே	20
					மேல்
#178 குறிஞ்சி பரணர்
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி		5
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக		10
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும்	15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லென
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை		20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே
					மேல்
#179 பாலை கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில்
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு
சிறு கண் யானை நெடும் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது		5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்
நன் நிலை பொறித்த கல் நிலை அதர
அரம்பு கொள் பூசல் களையுநர் காணா
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை		10
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய்
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ
மதி ஏர் வாள் நுதல் புலம்ப
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே
					மேல்
#180 நெய்தல் கருவூர் கண்ணம்பாளனார்
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர
கதழ் பரி திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூ குவளை		5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன்		10
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
படப்பை நின்ற முட தாள் புன்னை
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே		15
					மேல்
 



#181 பாலை பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ		5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன்		10
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை		15
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவை துறை_கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசை			20
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்		
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த			25
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே
					மேல்
#182 குறிஞ்சி கபிலர்
பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ
தீம் பழ பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட		5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவி தண் புதல் குருதியொடு துயல் வர
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல்		10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால்
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க		15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே
					மேல்
#183 பாலை கருவூர் கலிங்கத்தார்
குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை
திதலை அல்குல் அம் வரி வாடவும்
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும்
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று			5
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி
குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி
இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே மாலை			10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே	15
					மேல்
#184 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு	5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டை கோட்ட குறு முள் கள்ளி
புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி			10
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர்
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று		15
செக்கர் வானம் சென்ற பொழுதில்
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே
					மேல்
#185 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் வாடல்		5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில்		10
பெரு விழா விளக்கம் போல பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
#186 மருதம் பரணர்
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்		5
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட		10
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள்_வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்		15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே	20
					மேல்
#187 பாலை மாமூலனார்
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்		5
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு		10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து
எல் விருந்து அயர ஏமத்து அல்கி
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து		15
வேனில் வெற்பின் கானம் காய
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை		20
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே
					மேல்
#188 குறிஞ்சி வீரை வௌவௌயன் தித்தனார்
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ
போர்ப்பு_உறு முரசின் இரங்கி முறை புரிந்து
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர்
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்		5
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும்
மின் உடை கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி		10
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்
குற_மகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே
					மேல்
#189 பாலை கயமனார்
பசும் பழ பலவின் கானம் வெம்பி
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மட பிடி தழீஇ வேறு நாட்டு
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி		5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெம் வரை அத்தம் சுட்டி பையென
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்		10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே		15
					மேல்
#190 நெய்தல் உலோச்சனார்
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள்		5
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை
பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை	10
இரும் கழி புகாஅர் பொருந்த தாக்கி
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணி புரவி விரை நடை தவிர
இழுமென் கானல் விழு மணல் அசைஇ		15
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே
					மேல்
 



#191 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
அத்த பாதிரி துய் தலை புது வீ
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர்
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி			5
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை			10
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும்
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல்		15
ஒலி இரும் கூந்தல் தேறும் என
வலிய கூறவும் வல்லையோ மற்றே
					மேல்
#192 குறிஞ்சி பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைம் தார்
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி		5
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென		10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு_உறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல்
உரும் இறைகொண்ட உயர் சிமை
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே		15
					மேல்
#193 பாலை மதுரை மருதன் இளநாகனார்
கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த
பொரு_களத்து ஒழிந்த குருதி செம் வாய்
பொறித்த போலும் வால் நிற எருத்தின்		5
அணிந்த போலும் செம் செவி எருவை
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும்			10
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி
முருந்து ஏர் முறுவல் இளையோள்
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே
					மேல்
#194 முல்லை இடைக்காடனார்
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி		5
இரலை நன் மான் இனம் பரந்தவை போல்
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட		10
குடுமி நெற்றி நெடு மா தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுற
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும்		15
கார்-மன் இதுவால் தோழி போர் மிக
கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி
விரி உளை நன் மான் கடைஇ
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே
					மேல்
#195 பாலை கயமனார்
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள்
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும்		5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே		10
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல்
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்		15
மாறா வரு பனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்
எம் மனை முந்துற தருமோ
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே
					மேல்
#196 மருதம் பரணர்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு		5
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர
தொடுகலம் குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய	10
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நல தகுவியை முயங்கிய மார்பே
					மேல்
#197 பாலை மாமூலனார்
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ		5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்
மறம் மிகு தானை கண்ணன்_எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல்		10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி			15
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே
					மேல்
#198 குறிஞ்சி பரணர்
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை		5
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து
வில் வகுப்பு_உற்ற நல் வாங்கு குடச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து		10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில்
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்		15
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே
					மேல்
#199 பாலை கல்லாடனார்
கரை பாய் வெண் திரை கடுப்ப பல உடன்
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல்		5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை
அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய		10
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப		15
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய	20
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே
					மேல்
#200 நெய்தல் உலோச்சனார்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்		5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற		10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே
					மேல்
 




#201 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து		5
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும்		10
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்து கவாஅன்		15
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே
					மேல்
#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன்
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்		5
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்
உத்தி அரவின் பை தலை துமிய			10
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி
தேராது வரூஉம் நின்_வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே			15
					மேல்
#203 பாலை கபிலர்
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்	5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இ வறு மனை ஒழிய தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற	10
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை_உறாஅது எய்தி முன்னர்
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர்		15
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே
					மேல்
#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை
கடல் போல் தானை கலி_மா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில்		5
கணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை		10
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி
தண்டலை கமழும் கூந்தல்
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே
					மேல்
#205 பாலை நக்கீரர்
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல
தையல் நின்_வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே		5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி		10
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்
காவிரி படப்பை பட்டினத்து அன்ன
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி		15
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில்
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர			20
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை
கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே
					மேல்
#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ்
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு		5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழைய		10
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை
பெரும் பெயற்கு உருகி ஆங்கு			15
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே
					மேல்
#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரை பர பொறைய நரை புற கழுதை		5
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்		10
தெண் கண் உவரி குறை குட முகவை
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்		15
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே
					மேல்
#208 குறிஞ்சி பரணர்
யாம இரவின் நெடும் கடை நின்று
தேம் முதிர் சிமைய குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்		5
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று		10
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்		15
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை களைதந்து ஆங்கு மிகு பெயல்
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லா காமம் நண்ணி		20
நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே
					மேல்
#209 பாலை கல்லாடனார்
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன்
நேரா எழுவர் அடிப்பட கடந்த			5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து	10
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி		15
நிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே
					மேல்
#210 நெய்தல் உலோச்சனார்
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து		5
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி
தான் இவண் வந்த_காலை நம் ஊர்
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன்		10
சாயல் மார்பின் பாயல் மாற்றி
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி நாமே
					மேல்
 




#211 பாலை மாமூலனார்
கேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வய களிறு உரிஞுதொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்		5
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய			10
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை		15
நீர் ஒலித்த அன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே
					மேல்
#212 குறிஞ்சி பரணர்
தா இல் நன் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய்		5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்		10
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை		15
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த		20
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத்தந்தோயே
					மேல்
#213 பாலை தாயங்கண்ணனார்
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி		5
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது		10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லி குட வரை		15
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை		20
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே
					மேல்
#214 முல்லை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய்
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை		5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை		10
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே			15
					மேல்
#215 பாலை இறங்கு குடி குன்ற நாடன்
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி
செலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லே		5
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லா காட்சி
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்		10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்		15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே
					மேல்
#216 மருதம் ஐயூர் முடவனார்
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை		5
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர்
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு		10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர் செல்லி கோமான்
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போல			15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே
					மேல்
#217 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ
கோடை பூளையின் வாடையொடு துயல்வர		5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ
ஊழ்_உறு தோன்றி ஒண் பூ தளைவிட		10
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என
செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே		15
நல்கா காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீ பிறப்ப திருகி
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே	20
					மேல்
#218 குறிஞ்சி கபிலர்
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து		5
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி	10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும்
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்		15
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு	20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே
					மேல்
#219 பாலை கயமனார்
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்தி பேர் இலை
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி			5
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள்
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என		10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்		15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மட தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே
					மேல்
#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ
தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர்
கடாஅ யானை குழூஉ சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்		5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே		10
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின்			15
இரும் கழி முகந்த செம் கோல் அம் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து
யாணர் தண் பணை உறும் என கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள்		20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே
					மேல்
 




#221 பாலை கயமனார்
நனை விளை நறவின் தேறல் மாந்தி
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல்		5
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை	10
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ
இரும் பிடி இரியும் சோலை
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே
					மேல்
#222 குறிஞ்சி பரணர்
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை
கான நாடன் உறீஇய நோய்க்கு என்
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்		5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி			10
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பன் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கி
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே		15
					மேல்
#223 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்		5
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்_வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்		10
அம் பணை நெடும் தோள் தங்கி தும்பி
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட
நன் முகை அதிரல் போதொடு குவளை
தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின்		15
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே
					மேல்
#224 முல்லை ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்
செல்க பாக எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி		5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்		10
தெறி நடை மரை கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு_உறுத்த
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என	15
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால்
அரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே
					மேல்
#225 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற		5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல்		10
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர
மழை துளி மறந்த அம் குடி சீறூர்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்		15
செறி தொடி முன்கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே
					மேல்
#226 மருதம் பரணர்
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின்
பழன பைம் சாய் கொழுதி கழனி			5
கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும்
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரி			10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி		15
போர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
#227 பாலை நக்கீரர்
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள்		5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர்
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து		10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையா பெருநாள் இருக்கை		15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து		20
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே
					மேல்
#228 குறிஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார்
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டி
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில்
கண் என மலர்ந்த மா இதழ் குவளை
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி		5
பகலே இனிது உடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ			10
புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலை
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே
					மேல்
#229 பாலை மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பகல் செய் பல் கதிர் பருதி_அம்_செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்	5
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகி
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லென
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள்		10
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி
நன் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய			15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை
செம் கண் இரும் குயில் நயவர கூஉம்
இன் இளவேனிலும் வாரார்			20
இன்னே வருதும் என தெளித்தோரே
					மேல்
#230 நெய்தல் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்
பெரும் தண் மா தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள்		5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இ மனை கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் என			10
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர்
கைவல் பாகன் பையென இயக்க
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி
சிறிய இறைஞ்சினள் தலையே			15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே
					மேல்
 




#231 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்	5
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக
வருவர் வாழி தோழி பொருவர்			10
செல் சமம் கடந்த செல்லா நல் இசை
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சி
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே			15
					மேல்
#232 குறிஞ்சி கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇ
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும்
பெரும் கல் நாடன் கேண்மை இனியே		5
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்		10
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்
விரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே		15
					மேல்
#233 பாலை மாமூலனார்
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின்
அலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என
ஊன் இல் யானை உயங்கும் வேனில்		5
மற படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு		10
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅ
பொருள்_வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே		15
					மேல்
#234 முல்லை பேயனார்
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய		5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை	10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி
முல்லை நறு மலர் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலை
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்		15
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நன் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே
					மேல்
#235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை		5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய		10
களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை		15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதைய சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரே
					மேல்
#236 மருதம் பரணர்
மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு		5
பனி படு சாய் புறம் பரிப்ப கழனி
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்		10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை		15
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல				20
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே
					மேல்
#237 பாலை தாயங்கண்ணனார்
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து		5
இன்னா கழியும் கங்குல் என்று நின்
நன் மா மேனி அணி நலம் புலம்ப
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல்
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு	10
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து		15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே
					மேல்
#238 குறிஞ்சி கபிலர்
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என
மட மான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து	5
மட கண் ஆமான் மாதிரத்து அலற
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரும் கல் நாட பிரிதி ஆயின்			10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து		15
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே
					மேல்
#239 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய			5
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி
புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய		10
ஈட்டு அரும்-குரைய பொருள்_வயின் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என
குறு நெடும் புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே			15
					மேல்
#240 நெய்தல் எழுஉப்பன்றி நாகன் குமரனார்
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப
இனி புலம்பின்றே கானலும் நளி கடல்
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்		5
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி			10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே		15
					மேல்
 




#241 பாலை காவன் முல்லை பூதனார்
துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியா காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை		5
மூங்கில் இள முளை திரங்க காம்பின்
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை		10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும்			15
நன் மர மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#242 குறிஞ்சி பேரிசாத்தனார்
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை
பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம்	5
செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை			10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய		15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது-மன்னோ தோழி
நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில்
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை
சாந்த மென் சினை தீண்டி மேலது		20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரை_அக வெற்பன் மணந்த மார்பே
					மேல்
#243 பாலை கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
அவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு		5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை		10
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே	15
					மேல்
#244 முல்லை மதுரை மள்ளனார்
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவை
பகல் உறை முது மரம் புலம்ப போகி
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை		5
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது-கொல் வாழி தோழி என தன்
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி		10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி
நெடும் தேர் ஊர்-மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே
					மேல்
#245 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்		5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள்		10
கான யானை வெண் கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ	15
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழிய			20
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே
					மேல்
#246 மருதம் பரணர்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு		5
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்		10
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
#247 பாலை மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர்
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்	5
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி		10
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமை
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
#248 குறிஞ்சி கபிலர்
நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற		5
தறுகண் பன்றி நோக்கி கானவன்
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன்			10
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி			15
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே
					மேல்
#249 பாலை நக்கீரனார்
அம்ம வாழி தோழி பல் நாள்
இ ஊர் அம்பல் எவனோ வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி		5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார்		10
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ
தோகை தூவி தொடை தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற
புலவு களம் துழைஇய துகள் வாய் கோடை
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த		15
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
#250 நெய்தல் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட	5
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்	10
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி
வெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே
					மேல்
 




#251 பாலை மாமூலனார்
தூதும் சென்றன தோளும் செற்றும்		
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்		5
தங்கலர் வாழி தோழி வெல் கொடி
துனை கால் அன்ன புனை தேர் கோசர்
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்		10
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை		15
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடை போகி
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே	20
					மேல்
#252 குறிஞ்சி நக்கண்ணையார்
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி		5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி			10
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு
பெரும் குளம் காவலன் போல
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே
					மேல்
#253 பாலை நக்கீரர்
வைகல்-தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடா பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்		5
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய			10
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த		15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து	20
உள்ளுப தில்ல தாமே பணை தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திரு முகத்து			25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே
					மேல்
#254 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்ட
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ
மனை உறை புறவின் செம் கால் சேவல்		5
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம் வயின் நினையும் நன் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி	10
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய
தளவ முல்லையொடு தலைஇ தண்ணென		15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லென
தார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே		20
					மேல்
#255 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்	5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர்-மன்னால் தோழி தண் பணை
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்		10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி
பலவு காய் புறத்த பசும் பழ பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை		15
கடி மனை மாடத்து கங்குல் வீச
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய
நிரை வளை ஊரும் தோள் என
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே
					மேல்
#256 மருதம் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறை
பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு	5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டமை அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை	10
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக
தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி
கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர்		15
திரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்விய
அறன் இலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை			20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
#257 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி			5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை	10
மெல் இறை பணை தோள் விளங்க வீசி
வல்லுவை-மன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து		15
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்			20
பிள்ளை எண்கின் மலை வயினானே
					மேல்
#258 குறிஞ்சி பரணர்
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை		5
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி		10
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரு படர் தலைத்தந்தோயே		15
					மேல்
#259 பாலை கயமனார்
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து
குறு முறி ஈன்றன மரனே நறு மலர்		5
வேய்ந்தன போல தோன்றி பல உடன்
தேம் பட பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் என பரத்தரும் நிலவின் மாலை
போது வந்தன்று தூதே நீயும்			10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்த		15
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே
					மேல்
#260 நெய்தல் மோசி கரையனார்
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
கரை ஆடு அலவன் அளை_வயின் செறிய		5
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேர
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உற			10
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பு இலாளன் அறிவு நயந்தேனே		15
					மேல்
 




#261 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ காண்வர
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர்
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக		5
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என ஏகல் நாணி ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு		10
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே		15
					மேல்
#262 குறிஞ்சி பரணர்
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவு_உறு செம் செய்
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது	5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்	10
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்		15
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே
					மேல்
#263 பாலை கருவூர் கண்ணம்பாளனார்
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம்
பயம் கெட திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு	5
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ	10
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே		15
					மேல்
#264 முல்லை உம்ப காட்டு இளங்கண்ணனார்
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு		5
நீர் திகழ் கண்ணியர் ஊர்_வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்		10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை
காய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை
வெம் சின வேந்தன் பாசறையோரே		15
					மேல்
#265 பாலை மாமூலனார்
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை			5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு		10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க			15
துகள் அற விளைந்த தோப்பி பருகி
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்		20
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே
					மேல்
#266 மருதம் பரணர்
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்தி பராஅய புது புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ		5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண்
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்		10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது		15
அவலம் அன்று-மன் எமக்கே அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்			20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே
					மேல்
#267 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை		5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர
மை பட்டு அன்ன மா முக முசு இனம்
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென	10
வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய்
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை	15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறு உடையவ்வே
					மேல்
#268 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அறியாய் வாழி தோழி பொறி வரி
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த
குருதி செம் களம் புலவு அற வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய		5
காமம் கலந்த காதல் உண்டு எனின்
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர் தேரின்
யான் அலது இல்லை இ உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது		10
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே
					மேல்
#269 பாலை மதுரை மருதன் இளநாகனார்
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக
ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்		5
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்	10
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்		15
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇ
திரு நுதல் மகளிர் குரவை அயரும்		20
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின்
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே		25
					மேல்
#270 நெய்தல் சாகலாசனார்
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை		5
பராஅரை புன்னை வாங்கு சினை தோயும்
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவி கைவண் கோமான்
நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலைய		10
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை
சேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே		15
					மேல்
 



#271 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
பொறி வரி புறவின் செம் கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி		5
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே	10
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும்
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள்	15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே
					மேல்
#272 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல்
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க		5
தனியன் வந்து பனி அலை முனியான்
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை		10
குறி இறை குரம்பை நம் மனை_வயின் புகுதரும்
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவ செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ		15
என் ஆவது-கொல் தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே
					மேல்
#273 பாலை ஔவையார்
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ
ஆர்கலி வள_வயின் போதொடு பரப்ப
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்		5
அறியார்-கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு	10
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம்		15
நில வரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே
					மேல்
#274 முல்லை இடை காடனார்
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி		5
திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ		10
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே
					மேல்
#275 பாலை கயமனார்
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகைமையை வள மனை கிழத்தி
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என		5
யாம் தன் கழறும்_காலை தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல்
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பி			10
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ
குருளை எண்கின் இரும் கிளை கவரும்
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம்
நெருநை போகிய பெரு மட தகுவி		15
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்
கூழை நொச்சி கீழது என் மகள்
செம் புடை சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே
					மேல்
#276 மருதம் பரணர்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய
கடி இலம் புகூஉம் கள்வன் போல
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு		5
ஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல		10
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே		15
					மேல்
#277 பாலை கருவூர் நன்மார்பன்
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய்
பகல் அழி தோற்றம் போல பையென
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கடையல் அம் குரல வாள் வரி உழுவை		5
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல்		10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்_வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறன் உடை சேவல்		15
போர் புரி எருத்தம் போல கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரே			20
					மேல்
#278 குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படை தானை
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள்		5
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை		10
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள்
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய
தணிவு அரும் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே		15
					மேல்
#279 பாலை இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என		5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை		10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி		15
கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே
					மேல்
#280 நெய்தல் அம்மூவனார்
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள்
நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும்	5
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்		10
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்
தேன் இமிர் அகன் கரை பகுக்கும்
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே
					மேல்
 




#281 பாலை மாமூலனார்
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை		5
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து		10
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே
					மேல்
#282 குறிஞ்சி தொல் கபிலன்
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப	5
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு		10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும்			15
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே
					மேல்
#283 பாலை மதுரை மருதன் இளநாகனார்
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி
சில் உணா தந்த சீறூர் பெண்டிர்			5
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி		10
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்க
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப		15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே
					மேல்
#284 முல்லை இடைக்காடனார்
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி		5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்		10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே
					மேல்
#285 பாலை காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர்
காடு தேர் மட பிணை அலற கலையின்		5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி		10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே		15
					மேல்
#286 மருதம் ஓரம்போகியார்
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த		5
இறாஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி		10
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர் தெரியும்_காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன		15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே
					மேல்
#287 பாலை குடவாயிற்கீரத்தனார்
தொடி அணி முன்கை தொகு விரல் குவைஇ
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர்		5
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க		10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்கு_உறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே
					மேல்
#288 குறிஞ்சி விற்றூற்று மூதெயினனார்
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கை படு சினை புது பூ
முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியை
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்		5
எவ்வம் கூறிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி		10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற		15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவி தந்தை காப்பே
					மேல்
#289 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும்
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்_வயின் என்றும்		5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி		10
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி		15
நல்ல கூறு என நடுங்கி
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே
					மேல்
#290 நெய்தல் நக்கீரர்
குடுமி கொக்கின் பைம் கால் பேடை
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர்
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என
அல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது	5
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும்
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூ கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்		10
மணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன்
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ			15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே
					மேல்
 




#291 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ
வானம் பெயல் வளம் கரப்ப கானம்
உலறி இலை இல ஆக பல உடன்
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி		5
புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல்
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்		10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர் கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர		15
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம்		20
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது என
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழை கண் நம் காதலி
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே	25
					மேல்
#292 குறிஞ்சி கபிலர்
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வர			5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானை
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரை இடை கழுதின் வன் கை கானவன்		10
கடு விசை கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி சாரல்
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவா_காலே		15
					மேல்
#293 பாலை காவன்முல்லை பூதனார்
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆக பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி		5
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெம் சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி யாமே			10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து
இன்னா மொழிதும் என்ப
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே
					மேல்
#294 முல்லை கழார்க்கீரன் எயிற்றியார்
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற
புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய
காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர		5
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரை பைம் பூ பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச		10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறன் இலாளர்
இ நிலை களைய வருகுவர்-கொல் என
ஆனாது எறிதரும் வாடையொடு			15
நோனேன் தோழி என் தனிமையானே
					மேல்
#295 பாலை மாமூலனார்
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணை தோள்		5
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்
கல் உடை அதர கானம் நீந்தி
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து	10
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்		15
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண்		20
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே
					மேல்
#296 மருதம் மதுரை பேராலவாயார்
கோதை இணர குறும் கால் காஞ்சி
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி		5
புலரா மார்பினை வந்து நின்று எம்_வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும்
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல்		10
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே
					மேல்
#297 பாலை மதுரை மருதன் இளநாகனார்
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர் கலங்கி
நம்_வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே நம்_வயின்
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி		5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்		10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்		15
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே
					மேல்
#298 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை	5
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின்	10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை		15
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர்		20
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே
					மேல்
#299 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
எல்லையும் இரவும் வினை_வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை		5
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என	10
வைகு நிலை மதியம் போல பையென
புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப		15
கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி
நா நடுக்கு_உற்ற நவிலா கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா
பருவரல் எவ்வமொடு அழிந்த			20
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே
					மேல்
#300 நெய்தல் உலோச்சனார்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர்	5
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல்
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து
தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது		10
நொதுமலர் போல பிரியின் கதுமென
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்
சேணின் வருநர் போல பேணா
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ		15
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூற தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்		20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே
					மேல்
 



#301 பாலை அதியன் விண்ணத்தனார்
வறன்_உறு செய்யின் வாடுபு வருந்தி
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு			5
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர		10
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ
முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து
களரி ஆவிரை கிளர் பூ கோதை
வண்ண மார்பின் வன முலை துயல்வர		15
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு		20
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின் வழி நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்		25
அதுவே மருவினம் மாலை அதனால்
காதலர் செய்த காதல்
நீடு இன்று மறத்தல் கூடுமோ மற்றே
					மேல்
#302 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும்		5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல்		10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே		15
					மேல்
#303 பாலை ஔவையார்
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை		5
மா இரும் கொல்லி உச்சி தாஅய்
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின்		10
நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம்	15
ஐயம் தெளியரோ நீயே பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்
வழி நடை சேறல் வலித்திசின் யானே		20
					மேல்
#304 முல்லை இடைக்காடனார்
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை		5
செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில்
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய	10
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணி மிக
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப			15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்_வயின் அறியாள்			20
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே
					மேல்
#305 பாலை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை		5
பருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ
அருள் இலாளர் பொருள்_வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து		10
யான் எவன் உளனோ தோழி தானே
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென
கனை எரி பிறப்ப ஊதும்			15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே
					மேல்
#306 மருதம் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்		5
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல் உடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி		10
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளே		15
					மேல்
#307 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்
அகல் எழில் அல்குல் அம் வரி வாட
பகலும் கங்குலும் மயங்கி பையென
பெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து	5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும்		10
புற்று உடை சுவர புதல் இவர் பொதியில்
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும் புறா பெடையொடு பயிரும்
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே		15
					மேல்
#308 குறிஞ்சி பிசிராந்தையார்
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ	5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி		10
மல்லல் அறைய மலிர் சுனை குவளை
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட
காவலர் கரந்து கடி புனம் துழைஇய
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை		15
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே
					மேல்
#309 பாலை கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்		5
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார் கோடியர்
பெரும் படை குதிரை நல் போர் வானவன்		10
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம்		15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே
					மேல்
#310 நெய்தல் நக்கீரனார்
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு		5
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால்
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப		10
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து		15
உரும் இசை புணரி உடைதரும்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே
					மேல்
 



#311 பாலை மாமூலனார்
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை
எழுதி அன்ன திண் நிலை கதவம்
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர்		5
இம்மை உலகத்து இல் என பன் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப
வரு வழி வம்பலர் பேணி கோவலர்
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி		10
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும்
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே
					மேல்
#312 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது		5
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார்		10
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல
கொடி பட மின்னி பாயின்றால் மழையே
					மேல்
#313 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்து பொரு கயலின் கண் பனி மல்க
ஐய ஆக வெய்ய உயிரா			5
இரவும் எல்லையும் படர் அட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரிய			10
நிதியம் சொரிந்த நீவி போல
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல		15
இல்_வழி படூஉம் காக்கை
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
#314 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறி உடை மட பிணை தழீஇ புறவின்		5
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர்		10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப தீம் தொடை
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என
கடவுள் கற்பின் மடவோள் கூற			15
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லை
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்		20
இன் நகை இளையோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே
					மேல்
#315 பாலை குடவாயில் கீரத்தனார்
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்		5
அறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள்
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி		10
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென
கூர் வேல் விடலை பொய்ப்ப போகி
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்		15
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே
					மேல்
#316 மருதம் ஓரம்போகியார்
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து		5
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தர
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ	10
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப		15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்ம அஃது உடலுமோரே
					மேல்
#317 பாலை வடமோதம் கிழார்
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்		5
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து		10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மரன் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து		15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல		20
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து
என் உழியது-கொல் தானே பன் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன் நுதல் பாஅய பசலை நோயே
					மேல்
#318 குறிஞ்சி கபிலர்
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்		5
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய		10
என் கண்டு பெயரும்_காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே		15
					மேல்
#319 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை		5
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை
பொன் வீ வேங்கை புது மலர் புரைய
நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்_வயின்	10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழை
தளிர் ஏர் அன்ன தாங்கு அரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர்			15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே
					மேல்
#320 நெய்தல் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன்
தழை அணி அல்குல் செல்வ தங்கையர்
விழவு அயர் மறுகின் விலை என பகரும்
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப		5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை	10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றை
சூளும் பொய்யோ கடல் அறி கரியே
					மேல்
 




#321 பாலை கயமனார்
பசித்த யானை பழங்கண் அன்ன
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது		5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை
படு மணி இன நிரை உணீஇய கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர்		10
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ		15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே
					மேல்
#322 குறிஞ்சி பரணர்
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி		5
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி		10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை
புகல் அரும் பொதியில் போல
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே		15
					மேல்
#323 பாலை பறநாள் பெருங்கொற்றனார்
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்_வயின்
செய்வோர் ஏ சொல் வாட காதலர்
வருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய			5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவி
பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானை செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின்		10
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே
					மேல்
#324 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை
தட மென் பணை தோள் மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளரா பிள்ளை தூவி அன்ன
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில்		5
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால
தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த		10
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக
செல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே		15
					மேல்
#325 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி காதலர்
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது		5
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்	10
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ	15
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகி			20
ஒழிய சென்றோர் மன்ற
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே
					மேல்
#326 மருதம் பரணர்
ஊரல் அம் வாய் உருத்த தித்தி
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்
நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்		5
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானை சோழர் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை		10
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே
					மேல்
#327 பாலை மருங்கூர் பாகை சாத்தன் பூதனார்
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போல
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப		5
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அம் வரி நீர் என நசைஇ
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை		10
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மை நிற உருவின் மணி கண் காக்கை		15
பைம் நிணம் கவரும் படு பிண கவலை
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்
கோல் கழிபு இரங்கும் அதர
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே
					மேல்
#328 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறி பானாள்
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி		5
துனி கண் அகல வளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு	10
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே			15
					மேல்
#329 பாலை உறையூர் முதுகூத்தனார்
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடி சீறூர்
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர்		5
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை
பகடு அயா கொள்ளும் வெம் முனை துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை		10
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறும் சுனை
பனி படு சிமைய பல் மலை இறந்தே
					மேல்
#330 நெய்தல் உலோச்சனார்
கழி பூ குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும்
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு		5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ		10
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
எக்கர் தாழை மடல்_வயினானும்
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த		15
கடும் செலல் கொடும் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே
					மேல்
 




#331 பாலை மாமூலனார்
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர்		5
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்	10
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே
					மேல்
#332 குறிஞ்சி கபிலர்
முளை வளர் முதல மூங்கில் முருக்கி
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை
குருதி செம் கோட்டு அழி துளி கழாஅ		5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரை தக்க சாயலன் என நீ			10
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடை படாஅ முயக்கமும்
தண்டா காதலும் தலை நாள் போன்மே		15
					மேல்
#333 பாலை கல்லாடனார்
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையை ஆகி அவர்_வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின்		5
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய		10
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து
யானை பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள் இடைப்படாமை வருவர் நமர் என
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது	15
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல
சென்ற தேஎத்து செய்_வினை முற்றி		20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே
					மேல்
#334 முல்லை மதுரை கூத்தனார்
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து	5
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப		10
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்			15
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே
					மேல்
#335 பாலை மதுரை தத்தம் கண்ணனார்
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து		5
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம்
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார்
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன்		10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால்
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு		15
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ
வார்_உறு கவரியின் வண்டு உண விரிய
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்			20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய்
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய்			25
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே
					மேல்
#336 மருதம் பாவை கொட்டிலார்
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை
பாசி பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின்	5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன்		10
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்		15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் சோழர்		20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே
					மேல்
#337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி
பேர் அமர் மழை கண் புலம்பு கொண்டு ஒழிய
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆக பொருள் என்று உமணர்		5
கண நிரை அன்ன பல் கால் குறும் பொறை
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை
படை உடை கையர் வரு_திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே		10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர
கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை		15
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை
கள்ளி நீழல் கதறு வதிய
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை
எமியம் கழிதந்தோயே பனி இருள்
பெரும் கலி வானம் தலைஇய			20
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே
					மேல்
#338 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்		5
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்		10
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்து கொல்லி போல
தவாஅலியரோ நட்பே அவள்_வயின்		15
அறாஅலியரோ தூதே பொறாஅர்
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனா பெரும் துறை			20
முழங்கு இரு முந்நீர் திரையினும் பலவே
					மேல்
#339 பாலை நரை முடி நெட்டையார்
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட		5
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க காமம் தட்ப
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலை படாஅ உறவி போன்றனம்		10
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே
					மேல்
#340 நெய்தல் நக்கீரர்
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்பு_உறுதல் ஒழிக தில் அம்ம		5
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்		10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே		15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை		20
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு
முன்றில் தாழை தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே
					மேல்
 




#341 பாலை ஆவூர் மூலங்கிழார்
உய் தகை இன்றால் தோழி பைபய
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்		5
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர்
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன்	10
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும்
யாணர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே
					மேல்
#342 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்	5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட
பல் செரு கடந்த செல் உறழ் தட கை
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ		10
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம்
வரை அர_மகளிரின் அரியள்
அம் வரி அல்குல் அணையா_காலே
					மேல்
#343 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்		5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை	10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை
புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று	15
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய்
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே
					மேல்
#344 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வள மழை பொழிந்த வால் நிற களரி
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என
தொகு முகை விரிந்த முட கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர்
கை மாண் தோளி கடுப்ப பையென		5
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை வல்லே
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி
வயக்கு_உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து	10
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ
பயப்பு உறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே
					மேல்
#345 பாலை குடவாயில் கீரத்தனார்
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி
தண் பதம் படுதல் செல்க என பன் மாண்
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்
கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால்
பல் படை புரவி எய்திய தொல் இசை		5
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்து
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின் நாள் கழிக என்று முன்_நாள்			10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த		15
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும் அத்தம்			20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே
					மேல்
#346 மருதம் நக்கீரர்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறை சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்		5
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை
மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய			10
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி		15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள்
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர்
இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்		20
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொள
கோதைமார்பன் உவகையின் பெரிதே		25
					மேல்
#347 பாலை மாமூலனார்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய
சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன		5
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே
வாய்க்க தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து	10
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மக பெண்டிரின் தேரும்			15
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#348 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
என் ஆவது-கொல் தானே முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்		5
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல்
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர்
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழி		10
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சே
					மேல்
#349 பாலை மாமூலனார்
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே		5
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை		10
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே
					மேல்
#350 நெய்தல் சேந்தன் கண்ணனார்
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின்
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே		5
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி		10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே		15
					மேல்
 



#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்
வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணி
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற		5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில்
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி		10
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண்
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்து_உழி கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என		15
உள்ளு-தொறு படூஉம் பல்லி
புள்ளு தொழுது உறைவி செவி முதலானே
					மேல்
#352 குறிஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார்
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை		5
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன்
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்		10
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்		15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே
					மேல்
#353 பாலை மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவு கழிந்து அனைய ஆகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்		5
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு		10
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து		15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பி தண்ணென
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி		20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே
					மேல்
#354 முல்லை மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார்
மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவை பல் இனம் புறவு-தொறு உகள
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து	5
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை
கடு நடை புரவி வழிவாய் ஓட
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர்
புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய		10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே
					மேல்
#355 பாலை தங்கால் பொற்கொல்லனார்
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும்		5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்
தாது உகு தண் பொழில் அல்கி காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி		10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே
					மேல்
#356 மருதம் பரணர்
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணி
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என்	5
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது		10
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்
கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப அதாஅன்று		15
ஒலி பல் கூந்தல் நம்_வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே		20
					மேல்
#357 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து	5
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும்
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்		10
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின்			15
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே
					மேல்
#358 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளை		5
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ		10
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே		15
					மேல்
#359 பாலை மாமூலனார்
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறிய சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே		5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது
அரும் சுர கவலை அசைஇய கோடியர்
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை		10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்
பொய்யா நல் இசை மா வண் புல்லி
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள்
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை
அருவி துவலையொடு மயங்கும்			15
பெரு வரை அத்தம் இயங்கியோரே
					மேல்
#360 நெய்தல் மதுரை கண்ணத்தனார்
பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன்
குட_வயின் மா மலை மறைய கொடும் கழி
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப		5
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால்		10
பாணி பிழையா மாண் வினை கலி_மா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி பையென
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப		15
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நன் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே
					மேல்
 




#361 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தூ மலர் தாமரை பூவின் அம் கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்	5
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே
கரியா பூவின் பெரியோர் ஆர			10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று
சின் மொழி அரிவை தோளே பன் மலை
வெம் அறை மருங்கின் வியன் சுரம்		15
எவ்வம் கூர இறந்தனம் யாமே
					மேல்
#362 குறிஞ்சி வெள்ளிவீதியார்
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு	5
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே		10
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே		15
					மேல்
#363 பாலை மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ
அகல் இரு விசும்பில் பகல் செல சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை	5
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த
கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர்	10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும்
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய		15
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே
					மேல்
#364 முல்லை மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன்	5
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ
முல்லை இல்லமொடு மலர கல்ல
பகு வாய் பைம் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்றே காலை காதலர்
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை		10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே
					மேல்
#365 பாலை மதுரை மருதன் இளநாகனார்
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானை கதுவாய் வள் உகிர்			5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர் காணா
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு		10
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கை
தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே			15
					மேல்
#366 மருதம் குடவாயில் கீரத்தனார்
தாழ் சினை மருதம் தகைபெற கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின்		5
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்து			10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து			15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே
					மேல்
#367 பாலை பரணர்
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனை உழை இருந்த அம் குடி சீறூர்		5
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்	10
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்			15
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே
					மேல்
#368 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய		5
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர்		10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழி பெருகி
அம் பணை விளைந்த தே கள் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்		15
எவன்-கொல் வாழி தோழி கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே
					மேல்
#369 பாலை நக்கீரர்
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு
மங்கையர் பல பாராட்ட செம் தார்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சே இழை மகளிர் ஆயமும் அயரா		5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்	10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக
கடல் அம் தானை கைவண் சோழர்
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன
நிதி உடை நன் நகர் புதுவது புனைந்து		15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை
மணி அணி பலகை மா காழ் நெடு வேல்
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த		20
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ		25
மேயினள்-கொல் என நோவல் யானே
					மேல்
#370 நெய்தல் அம்மூவனார்
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்			5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல்		10
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து
ஆடு_மகள் போல பெயர்தல்			15
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே
					மேல்
 




#371 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி
குறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை		5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து		10
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே
					மேல்
#372 குறிஞ்சி பரணர்
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து	5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்		10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலின் காப்பு சிறந்து		15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே
					மேல்
#373 பாலை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று		5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை		10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்து_உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்	15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே
					மேல்
#374 முல்லை இடைக்காடனார்
மா கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போல பல உடன் மின்னி
தாழ்ந்த போல நனி அணி வந்து			5
சோர்ந்த போல சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றி பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை		10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணி மண்டு பவளம் போல காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய
கார் கவின் கொண்ட காமர் காலை		15
செல்க தேரே நல் வலம் பெறுந
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே
					மேல்
#375 பாலை இடையன் சேந்தன் கொற்றனார்
சென்று நீடுநர் அல்லர் அவர்_வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை			5
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவை சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன்		10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும்		15
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே
					மேல்
#376 மருதம் பரணர்
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண		5
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து		10
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய		15
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை
குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே
					மேல்
#377 பாலை மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர			5
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்	10
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை பட பெய்தல் ஆற்றுவோரே			15
					மேல்
#378 குறிஞ்சி காவட்டனார்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறும் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகை			5
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும்		10
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்		15
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலை பலவின் கனி கவர் கைய		20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே
					மேல்
#379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேள்-மதி		5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவு_உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி		10
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டு_வயின் உவப்ப
செய்வு_உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின்		15
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழை புறத்து அன்ன புள்ளி நீழல்			20
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த			25
நிரம்பா நீள் இடை தூங்கி
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே
					மேல்
#380 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும்
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்		5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உது காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது		10
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே
					மேல்
 



#381 பாலை மதுரை இளங்கௌசிகனார்
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும்
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்	5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி		10
பச்சூன் கொள்ளை சாற்றி பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய		15
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை
எதிர் மலர் இணை போது அன்ன தன்		20
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே
					மேல்
#382 குறிஞ்சி கபிலர்
பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப	5
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறிய கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக		10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன்_உறல் அறியா சோலை
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே
					மேல்
#383 பாலை கயமனார்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ
காடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என		5
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு	10
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டி புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயே
					மேல்
#384 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்		5
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ		10
உரை-மதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே
					மேல்
#385 பாலை குடவாயில் கீரத்தனார்
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓர் அன்ன தாயரும் காண
கைவல் யானை கடும் தேர் சோழர்
காவிரி படப்பை உறந்தை அன்ன
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர		5
நன் மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்ப செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல் அறை கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ			10
வளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி		15
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே
					மேல்
#386 மருதம் பரணர்
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன்		5
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்
கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்		10
சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே		15
					மேல்
#387 பாலை மதுரை மருதன் இளநாகனார்
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர்
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்		5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரி புற இதலின் மணி கண் பேடை		10
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது		15
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே		20
					மேல்
#388 குறிஞ்சி ஊட்டியார்
அம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின்
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி		5
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரே			10
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழி போகல் உறுமோ மற்று என
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட
சொல்லி கழிந்த வல் வில் காளை			15
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என
அன்னை தந்த முது வாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்		20
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போக
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி_வழி ஒற்றி			25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே
					மேல்
#389 பாலை நக்கீரனார்
அறியாய் வாழி தோழி நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்		5
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும்
என் புறந்தந்து நின் பாராட்டி
பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்
மனை_வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து		10
இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட
நல் இசை தம்_வயின் நிறும்-மார் வல் வேல்		15
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை	20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#390 நெய்தல் அம்மூவனார்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள		5
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை ஒல்கு_வயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும்
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின்		10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற		15
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே
					மேல்
 




#391 பாலை காவன் முல்லை பூதனார்
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி		5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை
பழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ		10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை
குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே
					மேல்
#392 குறிஞ்சி மோசிகீரனார்
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ
பின்னிலை முனியான் ஆகி நன்றும்		5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல் மட நல்லோள்_வயின்
தீது இன்று ஆக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே		10
ஒல் இனி வாழி தோழி கல்லென
கண மழை பொழிந்த கான் மடி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென		15
மற புலி உரற வாரணம் கதற
நனவு_உறு கட்சியின் நன் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்		20
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற		25
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே
					மேல்
#393 பாலை மாமூலனார்
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி		5
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம் வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்	10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்		15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்	20
நீடலர் வாழி தோழி தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப
தகரம் மண்ணிய தண் நறு முச்சி
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின்			25
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே
					மேல்
#394 முல்லை நன்பலூர் சிறுமேதாவியார்
களவும் புளித்தன விளவும் பழுநின
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர்
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு		5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்த பின்றை நீயும்
இடு முள் வேலி முட கால் பந்தர்
புது கலத்து அன்ன செம் வாய் சிற்றில்
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர	10
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்			15
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே
					மேல்
#395 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண்
பனி வார் எவ்வம் தீர இனி வரின்
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர்		5
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு		10
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே		15
					மேல்
#396 மருதம் பரணர்
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி		5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே		10
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ		15
ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே
					மேல்
#397 பாலை கயமனார்
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாக கொள்ளான் கல் பக
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்		5
எளிய ஆக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என
தணிந்த பருவம் செல்லான் படர்தர
துணிந்தோன் மன்ற துனை வெம் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி		10
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு
கோடை வெம் வளிக்கு உலமரும்			15
புல் இலை வெதிர நெல் விளை காடே
					மேல்
#398 குறிஞ்சி இம்மென்கீரனார்
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை
ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து		5
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழை கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ		10
கரை பொரு நீத்தம் உரை என கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி
நயன் அற துறத்தல் வல்லியோரே		15
நொதுமலாளர் அது கண்ணோடாது
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூ கானத்து அல்கி இன்று இவண்		20
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே		25
					மேல்
#399 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்		5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ		10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்		15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே
					மேல்
#400 நெய்தல் உலோச்சனார்
நகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின் நீல உத்தி			5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை
குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ		10
பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல்		15
கால் கண்டு அன்ன வழிபட போகி
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு		20
நேமி தந்த நெடு_நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாற பல உடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர்			25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே
					மேல்



அடிநேர் உரை

#0 கடவுள் வாழ்த்து
கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலான
குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்;
மார்பின்கண் உள்ளது குற்றமற்ற நுண்ணிய பூணூல்;
நெற்றியில் உள்ளது இமைக்காத கண்; பகைவரைக் கொல்லும்,
கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு;
ஏறிச்செல்வது காளை; சேர்ந்து இருப்பது உமையவள்;
சிவந்த வானத்தைப் போன்ற மேனி; அந்த வானத்தில்
ஒளிரும் பிறை போன்ற நேர்குறுக்கான வெண்மையான கூரிய பற்கள்;
நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி;
இளம்பிறையுடன் ஒளிரும் நெற்றி;
மூப்படையாத அமரரும், முனிவரும், பிறரும் (ஆகிய)
அனைவரும் அறியாத தொன்மையான மரபினையுடைய;
கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்
(ஆகிய சிவபெருமானின்)மாசற்ற அடிகளின் நிழலில் உலகமக்கள் உறைகின்றனர்.
					மேல்
 
				


#1 பாலை மாமூலனார்
வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய,
முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின்
அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்' என்ற சொல்லைத் தாம்
மறந்துவிட்டாரோ! தோழி! (என்) சிறந்த
மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப்
பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக - நிலம் பிளக்குமாறு
தீயைப் போல் வெம் கதிர்கள் பசுமையே அற்றுப்போகும்படி எரித்தலால்
(தம்)நிழல் குறைந்து உலர்ந்துபோன மரங்களைக் கொண்ட - பாறைகள் காய்ந்து
நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய - ஒருவரேனும்
அவ்வழியே செல்பவர் இல்லாததால், வழிப்பறிசெய்வோரும் சோர்ந்திருக்கும்
வறண்ட நிலத்தின் பொலிவற்ற பாதைகளை உடைய - ஆடும் கிளைகளிலுள்ள
நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள்
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு,
உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக்
கடல் போன்று தோன்றும் காட்டினைக் கடந்து சென்றோர்.
					மேல்
#2 குறிஞ்சி கபிலர்
கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை
(தேறல் என)அறியாமல் குடித்த ஆண்குரங்கு, (பின்னர்) அருகிலிருக்கும்
மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில் ஏறாமல்,
நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
(நீ)எண்ணி முயன்ற இன்பம் நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்?
மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக் கொண்ட(இவளும்),
கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின், (இவளது)தந்தையின்
கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே, பசுமையான புதர்கள் (சூழ்ந்த)
வேங்கை மரங்களும் நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன,
மிகுந்த வெண்மை நிறமுள்ள திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.
					மேல்
#3 பாலை
கருமையான சேற்றுப்பகுதிகளில் இருக்கும் முதலையின் மேல் தோலைப் போன்ற
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மயங்கி ஆசையுடன் பறந்து சென்ற சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்
அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி,
(அதன்) ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சிக் குடித்து,
முடைவீசும் புலி விட்டுச்சென்ற மூட்டு கழன்ற மிகுந்த நாற்றமுள்ள தசையைக்
கொள்ளை மாந்தரைப் போல் விரைந்து திரும்பத் திரும்பக் கவரும்,
குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,
அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின்னால் இருந்து விரட்டும் நெஞ்சமே! உன் வாயின்
மெய் போன்ற பொய்மொழிகள் (என்)துன்பத்தை எவ்வாறு களையும்?
முள்முருங்கைப்பூவின் இதழ் போன்ற, காண்பதற்கு இனிய சிவந்த வாயின்
அழகிய இனிய சொற்களும், ஆய்ந்த அணிகலன்களும் கொண்ட பெண்ணின்(தலைவியின்),
வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை
நீண்டுகிடக்கும் அந்தத் தொலைவிடத்திலும் குறுக்கே மறிக்கும் நேரத்தில் -
					மேல்
#4 முல்லை குறுங்குடி மருதனார்
முல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்துடன்,
பசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ,
இரும்பை முறுக்கினாற் போன்ற கரிய பெரிய கொம்பினையுடைய,
பரற்கற்கள் உள்ள பள்ளங்களை அடுத்துள்ள, இரலை மான்கள் துள்ளிவிளையாட,
பொலிவுபெற்ற நிலம் (வறட்சித்)துன்பத்தைப் பின்துரத்த,
கூட்டமான மேகங்கள் சீறிவரும் மழைத்துளிகளைச் சிதறி
கார்கால மலர்ச்சியைச் செய்தன கவின் பெற்ற கானத்தை;
வளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
நரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
பூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) கலக்கமடைவதை(எண்ணி) அஞ்சி,
மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்
உங்கு பார், வந்துவிடுவான் - குறிய மலைகளையுடைய நாட்டைச் சேர்ந்தவன்
சுற்றுப்புறம் எங்கிலும் ஒலிக்கும் இசையுடன் விழா நடக்கும் உறந்தையின் கிழக்கே
நெடிய பெரிய குன்றத்தில் நெருக்கமாய் வளர்ந்த காந்தள்
மொட்டு அவிழ்ந்த மலரைப் போன்று மணக்கும்
ஆய்ந்த தோள்வளையையுடைய அரிவையாகிய நின் சிறந்த அழகினை நினைத்து.
					மேல்
#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
(நாம்)கனிவுடன் இருக்கும் நிலையை ஏற்காமல், பூசல் கொண்ட முகத்தவளாய்,
(அன்புடன்)விளிக்கும் நிலையை மனதில் கொள்ளாளாய், தனித்தவளாய், மெதுவாக
அழகு மிக்க சிவந்த அடிகளை நிலத்தில் அழுந்தத் தடம் பதித்து,
மிக அருகில் வந்து, தன் கூரிய பற்கள் தோன்ற
சிறிதே தன் உள்ளத்தில் எழுந்த பொய்மையான முறுவலை உடையவள்,
(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
(நாம்) பொருள்தேடச் செல்லுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் -
உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று 
உதிர்ந்து கிடக்கும் - ஞாயிற்றின் கதிர்கள் காயும் - உச்சிமலைச் சரிவுகளில்
(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய
பரற்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்
செல்ல எண்ணுவீராயின், அது அறத்தின்பாற்பட்டது
அன்று என மொழிந்த பழமையான முதுமொழி
பழம்பேச்சாகவே ஆக என்று சொல்பவள் போல
(தன்)உட்கிடக்கையைக் காட்டி, முகக்குறிப்பால் உரைத்து
ஓவியத்தின் நிலை போல ஒன்றையே நினைத்தவளாய் (என்னை)உரசிக்கொண்டு
கண்ணின் கருவிழிகள் மறைத்த, துளிர்த்த நீருடனான பார்வையோடு
(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை   
மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை, ஒளிரும் தொடியுடையாள்
(நாம்)அருகிலிருக்கும்போதே இங்ஙனம் ஆகிவிட்டவள்
பிழைத்திருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.
					மேல்
#6 மருதம் பரணர்
பரல்கள் இடப்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் மலரின் அழகிய மாலையையும்,
அரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளைகளால் அழகுபெற்ற முன்கையையும்,
நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
நேற்று புனலாடினாய், இன்று (இங்கே) வந்து
மார்பினில் அழகிய கொங்கைகளில் அழகுத்தேமலை உடையவளே,
மாசற்ற கற்புடையவளே, என் மகனுக்குத் தாயே என்று
மாய்மாலமான பொய்மொழிகளைப் பணிவுடன் பலமுறை கூறி, எனது
முதுமையை இகழ வேண்டாம். அது எனக்குப் பொருந்தும்தானே!
தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, என்
இளமை கழிந்து மிகவும் பழையதானது,
இனிக்கவா போகிறது (உன்) பொய்மொழி எனக்கு.
					மேல்
#7 பாலை கயமனார்
“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,
ஒளிரும் விளக்குகளையுடைய நல்ல இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி,
தன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று அஞ்சி, இனிதாக முழக்கமிடும்
ஆண்மானைக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்த, மோப்பது போல் மூச்சுவிடும் இளைய பெண்மானே!
வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்; அதனால்
வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன், இவ்விடத்தில்
உன்னிடம் வினவுவதைக் கேட்பாயாக,
பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்,
செழித்த அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய,
ஆய்ந்தெடுத்த சுளைகளைக் கொண்ட பலாக்கனியைத் தின்று, முசுக்கலை உதிர்த்த
தலையில் வெண்பஞ்சுவைக் கொண்ட வெள்ளிய கொட்டைகளைப் பெறும்
பாறைகளைக் கொண்ட சிறுகுடியைச் சேர்ந்த கானவன் மகளாகிய என் மகளே.
					மேல்
#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
ஈசல்புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தில் தங்கிய
புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்
நமக்கு அரியது அல்ல, தோழி! பெரிய
ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி,
பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகளில் புலால் நாற இழுத்துச்செல்லும்,
மூங்கில்கள் ஒலிக்கும் மலைச் சரிவில், சுரபுன்னையோடு
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படியாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
விண்ணளாவிய மலையின் குகைகளில் ஒலித்து அதிரும் அவருடைய நாட்டில்,
எண்ணிலடங்காக் குன்றுகளிலுள்ள விலங்குகள் நடந்த நெறிகளில் வழிதவறாமல்,
மின்னலடிக்கும்போது சிறிதே ஒதுங்கிக்கொண்டு, மெள்ளமெள்ள நடந்து,
மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
நேர்வழிகள் குலைய, குறுக்கும் நெடுக்குமாகக்கிடக்கும் இந்தக் காட்டுப்புறத்தை நீவிர்
அறியவும் அறிவீரோ என்று கேட்பாரைப் பெறின்.
					மேல்
#9 பாலை கல்லாடனார்
கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட
வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
வெண்ணெய் போன்ற, இனிய, உள்துளை உள்ள மெல்லிய வாயை உடைய பூக்கள்,
காம்பை நீக்கிக் காணத்தக்க துளையினை உடையவாகி, புல்லிவட்டம் கழன்று,
ஆலங்கட்டி போல காற்றால் சிதறுண்டு
பவளம் போன்ற சிவந்த மேட்டுநில வழிகளில்
குருதி மீது உள்ள கொழுப்பைப் போல் பரந்துகிடக்கும்,
காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
வளைந்த நுண்ணிய கூந்தலை உடைய மகளிர் உயர்த்திய
பூணால் சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி
நெடிய பெரிய மலையில் உள்ள ஆந்தையின் குரலோடு மாறிமாறி ஒலிக்கும்
குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும் 
எம்மைக் காட்டிலும் விரைந்து சீக்கிரமாகச் சென்று, பல கட்டுக்களால் சிறப்புற
உயர்ந்த நல்ல இல்லத்தில் ஒரு பக்கமாக நிலைகொண்டு,
அருகில் உள்ள பல்லி ஒலிக்கும்தோறும் அதனை வாழ்த்தி,
பசுவின் கன்றுகள் நுழையும் மாலையில், நின்றுகொண்டிருப்பவளை அடைந்து,
கைகளை வளைத்தவாறு சென்று, கண்களைப் பொத்தியவாறு மிகநெருங்கி,
பெண்யானையின் துதிக்கை போன்ற பின்னிய கூந்தலைத் தீண்டி,
தொடி அணிந்த கையைத் தழுவி வருடிவிட்டவாறு அணைத்தது அன்றோ!
நாணத்தோடு கலந்த கற்பினையும், ஒளிபொருந்திய நெற்றியினையும்
அழகிய இனிய பேச்சையும் உடைய இளையோளின்
மென்மையான தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம்.
					மேல்
#10 நெய்தல் அம்மூவனார்
பெரிய கடல்பரப்பினின்றும் எழும் நீர்த்திவலைகளுக்கு எதிர்நின்ற,
விண்மீன்களைக் கண்டாற் போன்ற, மெல்லிய அரும்புகள் மலர்ந்த
கூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில்
பறவைகள் அடைந்துகிடக்கும் நெய்தல் நிலத் தலைவனே!
நெய்தல் மலரைப் போன்று மை உண்ட கண்கள் துன்பத்துடன் கலங்க,
(தலைவியைப்)பிரிதலை நினைத்தாயாயின் மிகவும்
அரியசெயலைச் செய்யவேண்டியவன் ஆனாய், பெருமானே!, உரிமையுடன்
எடுத்துக்கொண்டு உன் ஊருக்குப் போகவேண்டும், கீழ்க்காற்றால்
கலங்கி நிறம் மாறிய கடல் அலைகள் உடைக்கும் மணல்மேட்டின்
பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
மேடான மணலால் ஆன அடைகரையில் வந்த சுறாமீனைக் கைப்பற்றி,
மணம் கமழும் பாக்கத்தில் உள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கும்
வளம் மிக்க தொண்டியைப் போன்ற அழகிய இவளது நலனை.
					மேல்
 




#11 பாலை ஔவையார்
வானத்தில் ஊர்ந்துசெல்லும், சுடர்கின்ற ஒளியையுடைய சூரிய மண்டிலம்
நெருப்போ என்னுமாறு சிவந்துபோய், வெப்பம் தகிக்கின்ற காட்டில்
இலையே இல்லாமல் மலர்ந்த, மொட்டுக்கள் அற்ற இலவ மலர்கள் -
ஆரவாரத்துடன் மகளிர்கூட்டம் மகிழ்வுடன் ஒன்றுசேர்ந்து எடுத்த
அழகிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போலத் தோன்ற,
குளங்கள் புழுதிக்காடாய் ஆகியிருக்கும் வளம் அற்றுப்போன காட்டில்,
நம்மோடு சென்றிருந்தால், மனதிற்கினிமையாகப்
புதுத்துணியை விரித்தாற்போன்ற செழித்து எழும் மணலைக் கொண்ட காட்டாற்றின்
பெரிய கிளைகள் தாழ்ந்திருக்கும், நிறைந்த பூங்கொத்துகளைக் கொண்ட மணல்மேட்டில்,
உடம்பினுள் புகுந்துவிடுவதைப் போன்று கைகள் சூழ்ந்த அணைப்பினை
அவரும் பெற்றிடுவாரே பாசத்துடன்,
நீர் ஒழுகும் ஒளியுள்ள மலரைப் போன்று, இடைவிடாமல்
(அம் மலர்கள்)நீரற்ற குளத்தை நிறைப்பது போல நாளும்
அழுதலை மேற்கொள்ளாதவை ஆகி,
குற்றமற்ற (எமது)கண்களும் தூங்கப்பெறுமே.
					மேல்
#12 குறிஞ்சி கபிலர்
எம் தாய் (தன்)கண்ணைக்காட்டிலும் (இவளிடம்)மிக்க அன்புடையவள், எம் தந்தையும்
(இவள்)தரையில் கால்வைக்கப் பொறுக்கமாட்டார். “(உன்) சின்னப் பாதங்கள் சிவக்க
எங்கே, அடி, சின்னவளே! போகிறாய் என்பார்,
நானும் அவளும், பிரிவு இல்லாமல் அமைந்த உவர்ப்பில்லாத நட்பினால்
இருதலைப் பறவையைப் போல ஓருயிராய் இருக்கின்றோம்.
தினைப்புனக் காவல் மகளிர் ஓயாது ஆரவாரிக்குந்தோறும்
கிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்
சிறந்த குலைகளைக் கொண்ட பலாமரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு
குறவர்கள் எழுப்பிய குடிசை மறையுமாறு  
வேங்கைப்பூக்கள் உருவாக்கிய தேன்சிந்தும் தோற்றத்தைப்
புலியென்று எண்ணி வெருண்ட புகர்முக யானை
மேகங்கள் படர்ந்த மலைச்சரிவில் மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்துசெல்லும்
நல்ல மலை நாட்டைச் சேர்ந்தவனே! நீ (இரவில்) வந்தால்
மெல்லியலாள் (உனக்கு நேரக்கூடிய ஊறுகளை எண்ணி) வாழமாட்டாள்.
					மேல்
#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன்னுடைய தென்கடலில் உண்டான முத்தினால் ஆகிய மாலையும்,
பகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடய தனது மலையிலுள்ள
யாராலும் அழிக்கமுடியாத மரபையுடைய கடவுளாகிய முருகனுக்குப் பூசையிட்டுக்
குறவர்கள் தந்த சந்தனத்தின் மாலையும் ஆகிய
இரண்டு பெரிய மாலைகளையும் அழகுற அணிந்திருக்கும்,
செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான -
குழியில் (விழவைத்துப்) பிடித்த பழக்கப்படாத யானைகளை
விலங்கு மொழியால் புரியவைக்கும் குறுகிய பொழுதில் அன்றி,
(மற்ற நேரங்களில்)தனக்கெனக் கொள்ளும் நிலை இன்றி இரவலர்களுக்கு ஈயும்,
கூர்மையான வாயைக்கொண்ட அம்பினை உடைய கோடைமலைத் தலைவன் -
பண்ணி என்பான் செய்த பயன் மிகுந்த களவேள்வியைப் போல (க்காட்டிலும்)
சிறந்த பயன் நிகழுமாயினும் – தெற்கே ஏறிச்சென்று
மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
வனப்பில் இனிய துணையாகிய இவளைப் பிரிந்துபோய்த் தங்கினால்,
எக்குறையும் இல்லாமல் இருப்பதாக நீ ஈட்டும் பொருள்! நல்ல பக்குவமாக,
குற்றமற்ற தூய்மையான மடிக்கப்பட்ட துணி விரித்த படுக்கையில்
தழுவி இன்புறுதல் இன்றிக் கழிக – வளமுடைய வயல்களில்
தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலில் வரப்புகளை அணைத்து அசைய,
தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்.
					மேல்
#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்
செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒன்றாகச் சேர்ந்து
தம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்ல, பவளத்துடன்
நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் சூழ்ந்த
அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் தழுவி
முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள் புல்லை உண்டு தாவி மகிழ
முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
மாலைக் காலத்திலும் நினைக்கமாட்டார் எனின், காலையில்
என்ன ஆவோமோ பாணனே! என்று சொன்ன
தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்ல முடியாதவனாகி,
செவ்வழிப் பண்ணை நல்ல யாழில் இசைத்தவனாய் மெல்ல,
கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக, கண்டேன் யானே
(இழுத்து)விட்ட (அம்பு போன்ற)வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க
கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம்
கார்காலத்து மழையின்  இடிமுழக்கின் ஒலியை ஒக்கும்
போர்முனையே தன் ஊராகக் கொண்ட தலைவனின் புனையப்பட்ட நெடும் தேரினை.
					மேல்
#15 பாலை மாமூலனார்
எம்முடைய மிகுந்த விருப்பம் சரியாக அமைந்தால்,
மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் -
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள் வாழும் சோலைகளையுடைய - துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
நெருக்கமாக அமைந்த சேரிகளையுடைய தலைமையான முதிய ஊர்கள்
அறிமுகம் உள்ள மக்களைக் கொண்டது ஆகுக - 
தோழியர்களும் நானும் தனிமையில் வருந்த,
முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட - ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட - நன்னனின்
பாழி நகரத்தைப் போன்று மிகுந்த கட்டுக்காவலை உடைய அகன்ற (நம்)இல்லத்தின்
செறிந்த பாதுகாப்பையும் மீறி அவனோடு போன,
அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்- பரவலாகச் செல்லும்-
தனது இனிய துணைவனை நினைந்த உள்ளத்தோடு ஒன்றுசேர்ந்து
மலை மூங்கிலைப் போன்ற திரண்ட என்
மெல்லிய தோளையுடைய மகள் சென்ற - வழி.
					மேல்
#16 மருதம் சாகலாசனார்
நீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்
நாவினால் திருத்தமாகப் பேசாத, சிரிப்பைத் தோற்றுவிக்கும் இனிய பேச்சையும்(உடைய)
அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
பார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் -
“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
“மாசற்ற இளையவளே, எதற்குக் கலங்குகிறாய்,
நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
அன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே! வானத்துத்
தெய்வமகளாகிய அரும் கடவுள் போன்றோள் உன்னுடைய
மகனுக்குத் தாய் ஆகுதல் பொருத்தமானதுதானே என்று.
					மேல்
#17 பாலை கயமனார்
வளப்பம் பொருந்திய அழகிய மாளிகையில் பந்தைச் சிறிதுநேரமே எறிந்து விளையாடினாலும்,
இளைய துணைகளான தோழியருடன் கழங்கு ஆட்டத்தைச் சேர்ந்து ஆடினாலும்,
வருந்துகின்றது அன்னையே என் உடம்பு என்று தளர்ந்துபோய்,
கொட்டுகின்ற வியர்வைத் துளிகள் கோத்துநிற்கும் நெற்றியை உடையவள், சில்லெனும்படியாக
தழுவினவளாய் அமர்வாள் - (அதெல்லாம் போச்சே!) இப்போதோ,
தோள்வளை அணிந்த சிறந்த தோழியர் கூட்டத்தையும், என்னையும் நினைக்காதவளாய்,
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
வலிமை கொண்டனவோ? - நடந்துசெல்வதற்கு, பேரிரைச்சலுடன்
ஊரே ஒன்றுசேர்ந்து வருவதைப் போன்ற அச்சம் மிக்க பயணத்தை மேற்கொண்ட,
நீரற்ற காட்டுவெளியின் கடுமையான பாதையில், ஒன்றுசேர்ந்த,
கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்
கடுமையான ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் நிறைந்த வறண்ட மலைகளில்,
பெரும் களிறு உரசிய மண்ணையுடைய நடுப்பகுதியைக் கொண்ட யா மரங்களை உடைய,
அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய நீண்ட பாதையின் ஓரங்களில்,
நீண்ட நடுப்பகுதியை உடைய இலவமரங்களில் பூத்து முடிந்த பல மலர்கள் -
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (அணைவது)போன்று - காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் -
மேகங்கள் தங்கும் பெரிய மலைகள் எதிர்நிற்கும் வழியில்
					மேல்
#18 குறிஞ்சி கபிலர்
நீரின் நிறம் மறைந்துபோகும்படி, முதிர்வுற்று உதிர்ந்த
அழகிய மலர்கள் நெருக்கமாக அமைந்த, விரைவான ஓட்டமுள்ள காட்டாற்றில்
முதலைகள் படுத்திருக்கும் பாறைகளில் உயர எழுந்து மோதித் திரும்பும் சுழிகளை உடையதும்
தன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி
வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான  வெள்ளத்தை
அஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன்
அச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில்
இங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!
ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
வாழ்பவள் அல்லள் என் தோழி, ஒருசிறிதும்
இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலமுறை போய்வருபவர்கள்
நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர், அதனால்
துன்புற்று வருத்தம் அடைகிறோம் – எம் தோட்டத்தை அடுத்துள்ள
வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம் – அகன்ற மலையின்
வளைந்த மூங்கிலின் கணுக்களின் இடைப்பகுதியைப் போன்ற, எம் தாய்
போற்றி வளர்த்த அகன்ற மெல்லிய தோள்களை.
					மேல்
#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்
அன்று அங்கேயே இருந்திருக்கலாம் - அதுவும் இல்லை, வந்தபின் மிகுதியாக
வருந்துகிறாய், வாழிய என் நெஞ்சே! பருந்து இருந்து
வருந்தும் குரலில் பலமுறை அழைக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்
உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,
எம்முடன் கடந்து செல்லவும் மாட்டாய், பின் தங்கி
(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
போகலாம் இனியே - சிறப்புறட்டும் உன் உள்ளம்! – விரைவாக,
மறப்பதைச் செய்யாதிருப்பாயாக எம்மை – நறவம்பூவின்
சிவந்த இதழ் போன்றவை ஆகி - (முன்பு)குவளையின்
கரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் -
உள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக -
துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி, மெதுவாக
(அணிந்திருக்கும்)சில வளையல்களும் கழன்று விழுந்த மெலிந்த கைகளின் மணிக்கட்டு
பூக்கள் உதிர்ந்த கொடியைப் போல பொலிவிழந்து போக,
தகட்டை அழுத்திச் செய்த அழகிய அகல்விளக்கின் சுடரே துணையாக
எங்குமே செல்லாது நின்றிருக்கும் நம் காதலியின்
வருந்திய மெலிந்த முதுகினைத் தழுவிய பின்னர்.
					மேல்
#20 நெய்தல் உலோச்சனார்
கடற்பரப்பில் (பிடித்து) எம் தந்தை கொண்டுவந்த
ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி,
மணல்மேட்டிலுள்ள புன்னைமரத்தின் இனிய நிழலில் தங்கி,
சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,
ஞாழலின் உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட, வளைந்த கழியை
தாழை விழுதால் ஆன கயிற்றால் செய்த ஊஞ்சலில் ஆடி,
கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,
மணி போன்ற மலர்களால் ஆன பசிய தழையுடையைத் தைத்து அழகுபெற (உடுத்தி)
பலவிதப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தங்கி வருதலை,
பழித்துச் சொல்லல் என்னும் மனநோயுற்ற இந்த ஊரின்
கொடுமை மட்டுமே அறிந்த பெண்களின் சொற்களைக் கேட்டு, அன்னை
வீட்டுக்காவலை மேற்கொண்டாளே தோழி, பெரும் துறைகளில்
பகலென்றும் இரவென்றும் இல்லாமல், ஒலி எழுப்பிக்கொண்டு
பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று -
					மேல்
 



#21 பாலை காவன்முல்லை பூதனார்
இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்,
அழகிய வயிறு, அகன்ற அல்குல், அலங்கரிக்கப்பட்ட
தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த, தொலை நாட்டுக்குச்
செல்லவேண்டாம் என்று யான் சொல்லவும் (அதற்கு) உடன்படாமல்
பொருளீட்டும் செயலை விரும்பி இருந்தாய்; ஆதலால், (நம்) இல்லம் பொலிவுற
பலவித வேறுபட்ட செல்வத்தை ஈட்டிக் கொணர்வோம் - விரைவாக
எழுவாயாக இனி, வாழ்க என் நெஞ்சே! புரி போல் சுருண்ட பூங்கொத்துகள்
மெல்ல மலரும் அழகிய கிளைகள் வறிது ஆகுமாறு, வலியவன் ஒருவன்
கிளையின் உச்சியை அடிக்கும் கோல் போன்று, மலர்கள் உதிரத் தாக்கி
மரா மரத்தை அலைக்கழித்த மணம் வாய்க்கப்பெற்ற தென்றல்
பாலைவழியில் செல்லும் மள்ளரின் சுருள்முடியில் (அம் மலர்களைத்)தூவிவிடும்-
வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய -
பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய -
பெரிய பாறைகளின் இடுக்கில் ஈன்று படுத்திருக்கும்
மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் சிதறி,
செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்
விதைகள் பரவிய மண் மேடுகளான கட்டாந்தரையை உடைத்த
வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் தூர்க்கும் -
பெரிய பாறைகளைக் கொண்ட பாலைநிலம் முன்னர்நிற்கும் இக் காட்டினில் (செல்ல).
					மேல்
#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
தெய்வங்களை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கும்
திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,
தனக்குப் படியாதாரை அழித்த, நிறைந்த புகழையும் நீண்ட கைகளையும் உடைய
நெடுவேளைத் தொழ, நோய் தணியப்பெறுவள் இவள் என
முதுமை வாய்ந்த பெண்டிர் அதனை உண்மை எனக் கூற,
வெறிக்களத்தை நன்கு அலங்கரித்து, பூமாலை சூட்டி,
வளம்பொருந்திய வீடே எதிரொலிக்கப் பாடி, பலி கொடுத்து,
அழகிய செந்தினையைக் குருதி கலந்து தூவி,
முருகனை வரவழைத்த நாளின் அச்சம் பொருந்திய நள்ளிரவில்,
(மார்பில்) சந்தனம் கமழ, அரிய மலையிடுக்கில் செறிவாய்க் கிடந்த,
சாரலின் பல பூக்களையும், வண்டுகள் மொய்க்கச் சூடி,
களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,
நல்ல மனைஉயர்ந்த இல்லங்களைக் கொண்ட ஊரின் காவலர்கள் அறியாவண்ணம்,
தன் நசை உள்ளத்து, நம்முடைய விருப்பம் நிறைவேற,
இனிய உயிர் குழையுமாறு தழுவுதோறும், உடல் பூரித்து,
சிரித்தேன் அல்லவா நான்? எம்மை மெலிவித்த
நோயைத் தணிக்க காதலர் வர, இதற்கு
ஏதும் தொடர்பில்லாத வேலனுக்காக (அந்நோய்)அழிந்தது அறிந்தே.
					மேல்
#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
சில்லென்ற மழையினை - நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;
புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
காடு முழுதுமே ‘கம்’மென மணக்கின்றதே! பள்ளங்களில் உள்ள,
சங்கு உடைந்ததைப் போன்ற வெண்காந்தளின் பசிய பயிரோடு,
அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி
குளிர்ந்த நீரைப் பருகிப் படுத்துக்கொண்டன;
(காலமும்)அவ்வளவாகிவிட்டதே!; வாழி என் தோழி! வீட்டிலுள்ள
குட்டையான நொச்சியினைச் சூழ்ந்து மலரும்
காட்டுமுல்லைக் கொடியினை உடைய கருத்த கிளைகளைக் காட்டி,
அந்த முல்லை பூக்கும் காலம்தான் என்றார்-அங்கே செல்வம் சேர்த்துத் திரும்பி வரும் கால அளவு.
					மேல்
#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்
வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிதறுகின்ற அழகிய துளிகள் தூவுதலால் மலர்கின்ற
தைத்திங்களில் நின்று குளிரப் பெய்யும் கடைசி நாளில்
ஒளிவிடும் (ஞாயிற்றின்)கதிர்கள் ஒளிந்திருக்கும் வாடை வீசும் வைகறையில்
உச்சிவானமே உரிந்து விழுவது போல் அகன்ற வானில் இயங்கி
பஞ்சுமூட்டத்துடன் பெரு மழை தென்திசையில் சென்று ஏகும்
பனி கொட்டும் கரிய இருட்டாகிய வெள்ளத்தைத் தனி ஒருத்தியாய் நீந்தித்
தனது ஊரில் இருக்கிறாள் நல்ல நெற்றியை உடையவள்; நானோ
காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்
உருவி மீண்டும் உறையில் இடாத வாளையுடைய வலிய தோளினையும்
இரவில் தூக்கத்தை முடித்துவிட்ட சேனையையும் உடைய
மிக்க சினம் கொண்ட வேந்தனின் பாசறையில் உள்ளேன்.
					மேல்
#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்
உயர்ந்த கரைகளைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க வெள்ளம் வற்றிவிட,
பளபளக்கும் அறல்களைக் கொண்ட பரந்த மணலுள்ள அகன்ற நீர்த்துறைகளில்
குளிர்ந்த மடுக்களை ஒட்டிய சோலைகள்தோறும் காஞ்சி மரத்தின்
அழகிய தாதுக்களை அணிந்த பூக்கள் நிறைந்த மணல்மேடுகள்
திருமணமாலையின் புதுமணத்தோடு புத்துணர்ச்சியுடன் திகழ,
மாமரத்தின் அரும்புகளைக் கோதிய நீலமணி நிறமுள்ள கரிய குயில்கள்
ஒலிக்கும் தமது நாவினால் (மன்றத்தின்) நடுவில் நின்று நாள்முழுக்க
உரத்துக்கூறுவது போல மாறிமாறிக் கூவ,
கூட்டமான வண்டுகள் உகுத்துவிட்ட - இலவமலர்களின் மேல் -
கிளைகளில் பூத்திருக்கும் கோங்கின் நுண்தாது - விற்போர்
பவளச் செப்பில் பொன்துகளைச் சொரிந்தது போன்ற,
அலட்சியத்துடன் இருப்பவர்களும் அலட்சியப்படுத்தாத இளவேனில் நாளை
(திரும்பிவரும் நாள் ஆகக்) குறித்தல் செய்தார் என நீ உனது
வருந்துகின்ற உன் மையிட்ட கண்களில் நீர் வடிந்து உதிர;
(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என
மென்மையான இனிய சொற்களைக் கூறி, விரைவிலேயே
வந்துவிடுவார்; வாழ்க! தோழியே! போர்வீரர்கள்
எதிர்த்து வரும் போரினை வென்ற, வில் ஏந்திய பெரிய கைகளையுடைய,
பொதிகை மலைத் தலைவன் - பொன்னால் ஆன தேரை உடைய - திதியனின்
இனிய இசையுள்ள முரசைப் போன்று முழங்கும்,
மலை மேலுள்ள அருவிகளைக் கொண்ட காடுகளைக் கடந்து சென்றவர்.
					மேல்
#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த
மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை,
விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும் 
அழகிய வயல்களை அருகில்கொண்ட வளம் மிகுந்த ஊரனாகிய தலைவனைக்
கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே! ஒவ்வொரு நாளும்,
பெரிய கோட்டைக் கதவினைக் குத்தித் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள
இரும்பாலான (கரிய) வளையத்தைப் போன்ற அழகினை உடையதாகி,
கரிய கண்களை உடைய (என் கொங்கைகளைத் தன்)மார்பகத்தில் சேர்த்து
(முற்றிலும்) முயங்குவதைத் தடுக்கின்றன இவை என்று கூற, தடுமாறி
நான் “விடும்” என்று கூறவும் உடன்படாராய், தாம் மேலும்
இவற்றைப் பாராட்டிய காலங்களும் உண்டு; இப்பொழுதோ,
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்
மணமிக்க சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் (தலைவனின்) மார்பில்,
விம்மும்படி முயங்குதலை நான் விரும்பினேனாகவும்,
இனிய பால் (தன் மார்பில்) படுதலை அவர் அஞ்சினார்; அப்போது,
(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, ஆர்வ நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர், இதோ
(என்)செல்வனுடன் சேர்ந்துகொள்கிறேன் நான் எனறு சொல்லி, மெதுவாக என்
மகனிடத்திற்குச் சென்றேன்; அதைப் பார்த்து,
நானும் விருப்பமுடையேன் அவனிடம் எனப் பணிந்து
(என்) முதுகினைச் வளைத்து அணைத்துக்கொண்டாராக, மிகுந்த மழையின்
குளிர்ந்த துளிகளை ஏற்றுக்கொண்ட, பல முறை உழுத செங்காட்டின்
மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் கலங்கிப்போய்
நெஞ்சழிந்துபோன அறிவினை உடைய என்னால் - (கோபித்துக்கொள்ள முடியுமா?)
					மேல்
#27 பாலை மதுரைக்கணக்காயனார்
வளைந்த வரிகளையுடைய பெரிய புலி இருக்குமிடம் தெரியும்படியாக, நீண்ட மலையில்
ஆடுகின்ற தண்டினைக் கொண்ட வலுவான கல்மூங்கில்கள் மேல்காற்றினால் வளையும்
காட்டு வழி கடினமானது என்னாமல்; நம்மை அழவிட்டு,
நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையினால் சென்று, இங்கு திரட்டிக் கொணரச்
செல்கிறார் என்று சொல்கிறார்கள் என்கிறாயே, நல்ல
பேதைப்பெண் நீ, வடக்கிலிருக்கும்
வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
வீரப் போர் புரியும் பாண்டியர், அறநெறியில் காக்கும்
கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
தடுத்து நிறுத்தினால் வெளியில் சென்று தங்கமாட்டார் - எனினும், மீறிச்செல்ல
எப்படி விட்டுவிடும் பார்ப்போம். இனிமை சொட்ட,
தெளிந்த நீருக்கு ஏற்ற திரண்ட கால்களை உடைய குவளையின்
பேரழகைப் பழிக்கும் வகையில் இருந்தும் அமையாது, பருந்துகள் வட்டமிட
மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்
குருதியுடன் ஆடுவது போன்ற உன்
செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மாறுபட்ட பார்வை -
					மேல்
#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி
எவ்வளவு நேரம் ஒன்றுசேர்ந்து இருந்தாலும் குறைவுபடாமலும் இயைந்தும் உள்ள விருப்பத்துடன்
தளர்ந்துபோக மாட்டாய் எனினும் (ஒன்று) சொல்வேன், தோழி!
கொய்வதற்கு முன்னரேயே கதிர்கள் தினையை உதிர்க்க ஆரம்பித்துவிட்டன.
நீர் அற்ற பசிய பயிர்கள் எல்லாம்
வெறும் தட்டைகளாய்ப் ஆகிவிட்டன, பல இடங்களில் - நீதான்
பலவகையான மணங்களும் கமழும் தேன் ஒழுகும் தலைமாலையை உடைய,
விரைந்து ஓடும் வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்! உனது
பூக்கள் சிறந்த மாலை அசைய, அடிக்கடி எழுந்து சென்று
கிளிகளை விரட்டும் தெளிந்த ஓசையை அவ்வப்போது எழுப்பி,
அங்கங்கே சென்று வராவிட்டால், நம் அன்னை
சிறிய கிளிகளை விரட்டுவதற்கு இவள் சரிப்பட்டுவரமாட்டாள் என எண்ணி
வேறு சிலரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவாள் - அப்படியாயின்
(நீ) அடைவதற்கு அரிதாய்ப்போய்விடும் அவனது அகன்ற மார்பு.
					மேல்
#29 பாலை வெள்ளாடியனார்
தொடங்கிய வினையைக் கைவிடாத - தளர்ச்சியற்ற - வலிமையான முயற்சியை உடைய -
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
தாழ்வுணர்ச்சி இல்லாத உள்ளம் மென்மேலும் மிகுந்து விளங்க,
பொருளீட்டும் செயலுக்குப் பிரிந்து சென்ற நேரத்தில், - ‘கத்தியால் வெட்டுப்பட்டு
இரண்டு பகுதியாக ஆன, நன்கு புலனாகும் அழகினையுடைய
மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்’ - என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
வெம்மை குறையாத நெருப்பு கொட்டும் பாழ்நிலத்தில்
(தன் உடல்) பருமன் வற்றிப்போன தலைமைப் பொறுப்புள்ள யானை
நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,
வற்றிப்போன ஆற்றில் உள்ள ஓடத்தைப் போல, வழிநடுவே வாடிக்கிடக்கும்,
நினைத்துப்பார்ப்பவரையும் நடுக்கும் ஊக்கம் அழிக்கும் வறும் காட்டினில்
(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.
					மேல்
#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்
நீண்ட கயிற்றில் கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய அழகிய வலையில்
கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்
இளையரும் முதியருமாய்ச் சுற்றத்துடன் கூடி
உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
வரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி
நுண்மணல் செறிவாக அடைந்துள்ள கரையில் ஆரவாரத்துடன் இழுத்து
பெரிய களத்தில் (நெல்லைக்)குவித்துவைத்த உழவர் போல
இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து
பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
கரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே!
நின் பெருமை என்பது குறைந்துபோகுமோ? ஏதேனும் ஒரு நாளில்
கழுவப்படாத முத்துக்கள் (போல) அரும்பியிருக்கும் புன்னையின்
குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில் வந்து, “உம்
அழகு எப்படி இருக்கிறது?” என்றவராய்க் கேட்டுவிட்டுப் போனால்.
					மேல்
 



#31 பாலை மாமூலனார்
தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என
உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
கல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
செவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து
சென்றார் என்று கூறுபவர் இலர், தோழி! வெற்றியோடு
வில்லால் (பகைவரை)அழித்து (அவரின் செல்வத்தைத்)துய்க்கும் வலிய ஆண்மையுள்ள வாழ்க்கை உடைய
தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.
					மேல்
#32 குறிஞ்சி நல்வெள்ளியார்
நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
“சிறுதினையில் படியும் கிளிகளைக் விரட்டுவதற்கு, பலவிதமான உயர்ந்த
குளிருடன் கூடிய தட்டைகளை வலுவில்லாமல் அடித்துக்கொண்டு,
சூர்கொண்ட தெய்வமகளிர் போல நிற்கின்ற நீ
யாரோ, என்னை வருத்துகின்றவளே, (உன்னை)விழுங்கட்டுமா?” என்று
என் பின்கழுத்தை வளைத்துப் பிடித்தவனாக, அதன் காரணமாகக்
கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என்
உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி, (என்)உள்ளத்தில் இல்லாத
கடுஞ்சொற்களைக் கூறி (அவனது) கையின் பிணைப்பினை விடுவித்து
வெருளும் பெண்மானைப் போல் விலகி நின்ற
என் உறுதியின் தன்மையினால் (அவன்)தன்னிலைக்கு வந்து, வேறு என்னிடம்
சொல்ல வலுவுள்ள சொற்கள் எதுவும் இல்லாதவனாய், அலமந்து
(தன்)கூட்டத்திலிருந்து நீங்கும் களிற்றைப் போல் சென்றவன், இன்றைக்கும்
தோற்காதிருத்தல் இல்லை, தோழியே! நாம் செல்வோமாக,
வளைந்து இறங்கும் பெரிய (என்)தோள்களின் உரிமை தனக்கே
களங்கமின்றி உடையது என்பதையும் அறியான், வருத்தமுற்று
என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
					மேல்
#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
பொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நல்லது என்பதை வெகுவாக உணர்த்தி
மனையில் இருக்கும் சிறந்த கற்பினையுடைய ஒளிரும் நெற்றியை உடையோளைப் பிரிந்து,
கவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
ஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை
வளைந்த வாயை உடைய பெண்பருந்தை அழைப்பதற்காக மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
இளி என்ற சுரத்தைத் தேரும் இனிய குரல் ஒலிக்கும் அருஞ்சுரம்
செல்வதற்கு மிகவும் கடினமானது என்று எண்ணாமல் பயணத்தை மேற்கொண்டு, தலைவியின்
மலரின் பெருமையைக் குலைக்கும் வகையில் அமைந்த, மையிட்ட அழகிய குளிர்ந்த கண்களின்
தெளிவில்லாத பார்வையை நினைத்துப்பார்க்கிறாய் - உளியின் வாயைப்போன்று (கூர்மையான)
சூடான பரல்கற்களைக் கொண்ட பாதைகளையுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து,
(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும்
(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால், மிகப் பழமையான,
வெற்றிப்போர்களின் சேரமன்னனின் கொல்லிமலையின் உச்சியில் உள்ள
சிறிய கெட்டிமூங்கில் போன்ற வளைந்த பக்கங்களையுடைய பருத்த தோள்களையும்,
தேமலைக்கொண்ட அல்குலையும், வெண்மையான பற்களையும் கொண்ட தலைவியைவிட்டுப்
பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
பிரிந்த நாளில் என்னைப்பற்றி நீ சரியாக அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று நாம்
மேற்கொண்டுள்ள பணியை நடுவழியில் விலக்கிவைத்தால்
அடையமாட்டாயோ, பிறர் எள்ளி நகையாடும் நிலையை?
					மேல்
#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
சிறிய கரிய பிடவஞ்செடியின் வெள்ளை நிறத் தலையை உடைய சிறிய புதர்
தலைமாலை போல மலரும் குளிர்ந்த மணமிக்க முல்லை நிலத்தில்
செருப்பு அணிந்த வேட்டுவன் இரண்டாகப் பிளப்புண்ட கோலைத் தோளில் சுமப்பதைப் போல
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
தெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில்
அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்
பெருந்தன்மையினைக் கண்டு உடைந்துபோன நெஞ்சம் இன்பமடையும்வண்ணம்
நம் தேர் விரைந்து செல்லட்டும், நல்ல திறம்வாய்ந்த பாகனே!
ஆடையில் தோய்த்த அதிகக் கஞ்சிப்பசையை அலசும் மெல் விரல் பெரும் தோள் வண்ணார்ப்பெண்,
ஆற்றுத்துறையில் அலசிவிடுவது போன்ற தூய வெண்மையான மயிர்களையுடைய அன்னங்கள்
தம் பெடைகளுடன் விளையாடி மகிழும் காவல் உள்ள மனையகத்தில்,
சிவந்த மாலை அணிந்தது போன்ற கழுத்தையுடைய பசுங்கிளியைத் தனது முன்னங்கையில் ஏந்தி,
நம்மைப் பிரிந்து சென்றவரைப் பற்றி, இன்று வருவார் என்று உரைப்பாய் என்று
வீட்டிலுள்ளவர்கள் அறிந்துவிடுவாரோ என்று அஞ்சி மிகவும் மெதுவாக
மழலையாகிய இனிய சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லும்
நாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு -
					மேல்
#35 பாலை குடவாயில் கீரத்தனார்
பெற்றுப் போற்றி வளர்த்த என்னையும் மறந்துவிட்டாள்-
விண்ணைத் தொடும் உயர்ந்த மதிலையுடைய இந்த நல் மனை தனிமையுற்றது;
தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய -
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) -
போரிட்டு மீட்ட - பசுக்களைக் கொணர்ந்து, (அந்த மழவர்களை) மேட்டுநிலத்தில் வீழ்த்திய
வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு
அந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
துணிவுடன் சென்று (நமக்கு) அன்னியள் ஆகிவிட்டாலும் - (அவளுக்குப்) பலவித அணிகளை அணிந்து
ஆர்வமுள்ள நெஞ்சமோடு அவளது அழகிய நலனைத் துய்த்துத் தன்னுடைய
மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக -
ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடிய தேரைக் கொண்ட காரியின் கொடுங்கால் என்னும் இடத்தின் முன்துறையில் உள்ள
பெண்ணை ஆகிய அழகிய பெரிய ஆற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற
நெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியாத நாட்டில் அவளைக் கூட்டிச் சென்ற துணைவன்.
					மேல்
#36 மருதம் மதுரை நக்கீரர்
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!
(வற்றாது) வரும் நீரை உடைய வைகையின் நீண்ட மணற்பரப்புள்ள அகன்ற துறையின்
அழகிய மருதமரங்கள் ஓங்கி வளர்ந்த, விரிந்த மலர்களுள்ள சோலையில்
நறிய, மிக்க கூந்தலையுடைய, குறு வளையல்களை அணிந்த இளம்பெண்ணுடன்
மணவாழ்க்கை நடத்தினாய் என்று ஊரார் கூறுகின்றனர் - ஊரார் ஏளனப் பேச்சு,
கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய -
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
முரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
அவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது
வெற்றியடைந்த வீர்ர் எழுப்பிய ஆரவாரத்தினும் பெரிதாக உள்ளது.
					மேல்
#37 பாலை விற்றூற்று மூதெயினனார்
(தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டாரெனினும், கறங்கும் ஒலிகளையுடைய
பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க -
வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,
வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
குளத்தில் நீரை மண்டும் காளையைப் போலப் பருகி, அழகு பொருந்த
கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
வளைத்து உண்ட கை தடுத்த பின்னர் - உயரமாக,
சூரியனைப் போன்ற அழகான நெற்குவியலைச் சுற்றிப் பகல் முடிய
மருதமர நிழலில் காளைகளுடன் தங்கியிருக்கும்
விரும்பித்துய்க்கும் வேனில் காலம் அல்லவா இது!
இவ்வாறாகச் சிறப்பான நலத்தினைத் துய்க்கும் துணையைப் பெற்றவருக்கு -
					மேல்
#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
மலர்ந்த கொத்துக்களை உடைய வேங்கைப்பூவால் செய்த, வண்டுகள் மொய்க்கும் கண்ணியன்-
ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை மலர்களால் ஆன தேனொழுகும் மாலையன் -
அழகிய வில் இடக்கையது ஆக, கடிதாய்ப் பறக்கும்
அம்பினை வலக்கையில் தெரிந்துகொண்டு, காதலியை அடைய எண்ணி
வருவது (இன்றும்)நடக்கும் - அந்த வானளாவிய மலைநாட்டவன்
(இன்று)அவ்வாறு வந்தால், அழகிய தளிர்களை உடைய அசோக மரத்தின்
தாழ்வாக இல்லாமல் நீண்டிருக்கும் கிளையில் கட்டிய, கீழிறங்கும் கயிற்றின்
ஊஞ்சல் இல்லாமல்போன இடத்தையும், (நீரில்)பாய்ந்து ஒன்றாக
விளையாடாததினால் கலங்கல் இல்லாமல் தெளிந்து,
நீளமான இதழ்களைக் கொண்ட அழகுபெற்ற நீலப்பூக்கள்
கண் போல மலர்ந்துகிடக்கும் சுனையையும், வளவிய சிறகுகளையுடைய
இளங்கிளிகள் தூக்கிச் செல்ல முடியாத பெரிய கதிர்களின்
வளைந்த பாரத்தை அறுத்துவிட்ட தட்டைகளே தலையாய்க் கொண்ட அரிதாள்களைக்கொண்ட
அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து - நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
துயருற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!
சுனையிலிருந்து வரும் வெள்ளிய அருவியை உச்சியில் கொண்ட உயர்ந்த மலையில்
கூப்பிடுதூரத்தில்தான் உள்ளது எம் ஊர் என்று
அப்பொழுதே அதனை (அவனுக்கு)அறிவுறுத்தலை மறந்துவிட்டேனே நான்!
					மேல்
#39 பாலை மதுரை செங்கண்ணனார்
செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்	
கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே - உன்
தேடிநுகரும் அழகினை மறப்பேனோ - மாட்டேனே! நெடுந்தூரம் கடந்து,
தழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள, நாட்பட்ட
காய்ந்துபோன புல்லின் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்ய
காட்டையே சூழ்ந்த பெரும் தீ காற்றடிக்கும் பக்கமெல்லாம் பரவியதால்,
பாதையைத் தவறவிட்ட வணிகக் கூட்டத்தாருடன் சேர்ந்து
செருக்குற்ற புலியைக் கண்டு அஞ்சிய மதங்கொண்ட யானைகளின்
கூட்டம் சிதறுண்டு திரியும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில்,
தொங்குவது போல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட -
வண்டுகள் சூழும் கூந்தலினாய்! உன்னை நாடி நினைத்து
அரும் பயணமும் இயலாமற்போன அந்த அரிய வழியில், ‘சட்’டென்று
படுத்துக் கண்மூடிய தூக்கத்தில் - ஒரு பெண்மான் கண்ணிற்பட்டாற் போன்ற
மின்னும் கைவளையல்களைச் சேர்த்து மேலிழுத்து, குனிந்த பார்வையுடன்,
நிலத்தைக் காலால் கிளறிக்கொண்டு சிந்தனைசெய்துகொண்டிருந்த உன்னைக் கண்டு
‘இனிய முறுவல் கொண்டவளே!, நான் இவ்வாறு வருந்தியிருக்கவும், என்னுடன்
(உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?’ என்று உன்
பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை
ஏற்றுக்கொள்ளாததினால் ஊடல்கொள்கிறாய் என்னுடன்.
					மேல்
#40 நெய்தல் குன்றியனார்
கடற்கரைச் சோலை மாலைக் காலத்துக் கழியில் இருக்கும் பூக்கள் குவிய,
நீல நிறப் பெருங்கடலின் ஓசை மிகுந்து ஒலிக்க,
மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்
திரண்ட பெரிய புன்னை மரத்தின் கூடுகளைச் சென்றடைய,
(தம் கூடுகளில் வந்து சேரும்)வண்டுகள் மிகுந்து ஒலிக்கும் அடையும்பொழுதில்
தாழைகள் தளரும்படி அசைத்து, மாலையில்
நோகும்படி வந்த கீழ்க்காற்றினால் மிகுந்த துன்பம் கொண்ட
ஆசைகொண்ட நெஞ்சம் செயலற்று வருந்த
நமக்குத் துன்பம் விளைவித்து (அது தீர)நம்மீது அருள்கூராராயினும்
அற்றுப்போகாதிருப்பதாக அவருடைய நட்பு -
(அவரிடம்) கருணை இல்லாததால் அவ்விடத்தில் தங்குதலை வெறுத்து,
(திரும்பி)வராமல் இருப்பதாக, தோழி - வயல்வெளிகளில்
வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும் தலைவனது
இனிய துயில் கொள்ளத்தக்க மார்பினை எண்ணிச் சென்ற என் நெஞ்சம் - 
					மேல்
 



#41 பாலை குன்றியனார்
பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,
கருஞ்சிவப்பான அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,
நெடிய நெற்பயிர்களைச் சேர்த்துக் கட்டிய கழினியினுள் ஏர்களை எடுத்துச்சென்று
தலை குவிந்த மண்கட்டிகளையுடைய தோட்டத்தைப் போன்று சிறந்து விளங்க
அரிதாள்களைப் பிளந்து உழுகின்ற, தெரிந்தெடுத்த காளைகளையுடைய உழவர்கள்
(காளைகளை அதட்டும்)ஓசையாகிய தெளிந்த குரல் காடுகள்தோறும் பரக்க,
செழித்த பூங்கொத்துகள் எதிர்த்துத் தோன்றிய மரங்களையுடைவாய் அழகுற்று,
காடு அழகு பெற்ற காண்பதற்கினிய பொழுதில்,
நாம் பிரிந்திட்டதன் தனிமையால் அழகுகெட மெலிந்து
நம் பிரிவை இதுவரை அறியாத அழகுடன் சிறந்து விளங்கிய
நல்ல தோள்கள் நெகிழும்வண்ணம் வருந்துவாளோ!
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி
					மேல்
#42 குறிஞ்சி கபிலர்
மிகுந்த மழையால் தழைத்த மழைக்காலப் பிச்சிக் கொடியின்
கொய்வதற்கு முடியாத நிலையையுடைய மழைக்கு எழுச்சிபெற்ற மணமுள்ள அரும்பின்
சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!
நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் -
குன்றுகளைப் பார்த்தது போன்ற கரைகளையுடையவும், முற்றிலும்
பறவைகள் வந்து தங்குதல் இல்லாதனவும் ஆகிய, உள்ளே நீர் அற்ற
வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டிப்
பெரிய மழை பொழிந்த இன்பமிக்க விடியற்காலத்தில்
பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம்
எனக்குள் பெய்ததைப் போன்று இருக்கிறதே! நெடுந்தொலைவில்
உயர்ந்து தோன்றும் உயரமான மலைகளையுடைய
வானளாவிய மலையைச் சேர்ந்தவன் வந்ததாலே.
					மேல்
#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்
கடல்நீரை அள்ளி எடுத்த நிறைந்த சூல்கொண்ட கரு மேகம்
ஒளி நிமிர்ந்த மின்னலோடு வலமாக எழுந்து ஒலித்து
வெம்மையினால் வருந்திய புல்லிய தலையை உடைய இளைய பெண்யானை
தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் படிந்து விளையாட
நிலமும் வானமும் நீரால் பொருந்திச் சேர
குறுநீரையுடைய நாழிகை வட்டிலில் நாழிகை பார்ப்போர் அன்றி
ஞாயிறு உள்ள பக்கம் தெரியாது உலகமே அஞ்சிக்கிடக்கப் பரவி
நீர்த்துளிகளைக் கொட்டியது குளிர்ந்த, முழக்கத்தையுடைய மேகங்கள் - நானோ	
கொய்யும்போது துண்டிக்கப்பட்ட முல்லைமலரின் மணம் காற்றில் கலந்து
இருண்ட பெரிய காடு (மணக்கின்றதைப் போல்) மணக்கும் நறிய நெற்றியையும்
செழித்த கரிய கூந்தலையுடைய மென்மையான இயல்புடைய தலைவியின்
நல்ல அழகுள்ள மார்பினைச் சேர்ந்திருக்கின்றேன்; எப்போதுமே
(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் - இரக்கமின்றி
அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
இனிய துணையைப் பிரியும் மடமையையுடையோர்.
					மேல்
#44 முல்லை குடவாயில் கீரத்தனார்
மேற்கொண்ட செயலான போரை முடித்துவிட்டான் நம் வேந்தனும்; பகைவரும்
தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
பகைமை மிகுந்திருந்த படைகள் இரண்டும்
ஒன்றாகிவிட்டதாக ஒலிக்கப்பட்டது முரசு. உனது தேர்
முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி - அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்
யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
நல்ல பண்புகளையுடைய மார்பினில் இனிய துயிலைப் பெறுவதற்கு.
					மேல்
#45 பாலை வெள்ளிவீதியார்
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
கோடைக்காலம் நீடித்திருக்கும் அகன்ற பெரிய குன்றில்
நீரற்று இருக்கும் அரிய வழியில் நிமிர்ந்துவரும் களிற்றினைக் கொன்று
போய்வருவோர் இல்லாத கிளைவழிகளில் புலிகள் புரண்டுவிளையாடும்
பாலைக் காட்டைக் கடந்துதான் காதலர் சென்றிருக்கிறார் -- எனது மாமை நிறமானது
மெல்லிய நுண்ணிய பசலை பரத்தலால், பீர்க்கின்
அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது. ஊர்மக்கள் பேச்சோ
அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே - நானோ,
என் தலைவனைக் காணாமற்போக்கிய சிறுமையால் மனநோய் மிகுந்து
ஆதிமந்தி போல பித்துப்பிடித்து
துயரத்துள் மூழ்கித் திரிவேனோ! பொன் மாலை அணிந்தவனும்
கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
அச்சமெனும் பிணியோடு தூங்காமல் கிடக்கின்றேன்.
					மேல்
#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
கூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
நீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
வண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
உன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
கீழிறங்கும் மேகத்தைக் காட்டிலும் பளபளத்துத் தாழ்ந்து விழும் கரிய கூந்தலையுடையவள்
ஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.
					மேல்
#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்
கொண்ட உறுதியினின்றும் பிறழ்வுபடாத உள்ளம் பன்னெடுங்காலம் சிறந்து விளங்க,
இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக; தழைத்த உச்சியினையுடைய
ஆடுகின்ற மூங்கிலை ஒலி எழுமாறு தாக்கி, குறுக்காக எழுந்து
சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
கொடும் போர்முனையைப் போன்ற அரிய பாதையைக் கடந்து, அளவுகடந்து,
பெரிய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய, வீட்டில்
ஒளிரும் வளையணிந்த பெண்கள் வெள்ளிய திரிகளைக் கொளுத்த,
சிறுநடை போடும் புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
உயர்ந்த மாடங்களை உடைய பெரிய மனையில் உள்ள தான் விரும்பும் பெடையை அழைக்கும்
தனிமைத் துயருடன் வந்த துன்பத்தைத் தரும் மாலைவேளையில்,
“எங்கு இருக்கின்றாரோ” என நினைத்துக் கலங்கியிருக்கும் தலைவியை அடைந்து,
இழைகள் அணியப்பெற்ற நெடிய தேரினைக்கொண்ட வள்ளல்தன்மை நிறைந்த செழியனின்
முகில்கள் தவழும் வளம் மிக்க சிறுமலை என்னும் மலையின்
சாரல்களில் கூதளம் கமழும் மலையின்
மூங்கிலைப் போன்ற பருத்த தோளில் பரவியுள்ள
பசலை நோயின் வருத்தம் நீங்கப் பலமுறையும் முயங்குவோம்.
					மேல்
#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்
அன்னையே வணக்கம், நான் கூறுவதைக் கேட்குமாறு வேண்டுகிறேன். ‘உனது மகள்
பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன், முன்பொருநாள்
நிறைந்த பூக்களையுடைய மலைச்சாரலில் என் தோழிமாருடன்
தழைத்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் பூக்களைக் கொய்யச் சென்றபோது
‘புலி, புலி’ என்று நாங்கள் கூச்சலிட,
ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
தலையின் ஒரு பக்கத்தே சேர்த்துச் செருகிய வெட்சிப்பூத் தலைமாலை அணிந்தவன்,
இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
வரிந்து கட்டிய வில்லையுடையவன், ஒரு நல்ல அம்பைக் கையினில் கொண்டு,
‘அந்தப் புலி சென்ற வழி எது?’ என்று
வினவி நின்றான்; அவனைக் கண்டு
எமக்குள்ளே ஒருவரையொருவர் மறைத்துக்கொண்டு
நாணி நின்றோம், அதனால், ‘அக்கறையுடன்
ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உண்டோ?’ என்றனன், (பின்னர்) மெதுவாகச் செல்லுமாறு
தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
பகல் முடிந்த அந்தியில் மலையில் ஞாயிறு மறையும் நேரத்தில்
அவன் சென்று மறைந்த திசையை நோக்கியவாறே, ‘இவனே
ஆண்மகன், தோழியே’ என்றாள் உன் மகள்;
அது எத்தகையது என்று அறிவு மிக்கோர் அறிந்துகொள்வார்’.
					மேல்
#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
வேறுபட்டுள்ளாள்; “என் உயிர் போவதாக” என்று கூறி,
வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
கிட்டே வந்து குவிந்திருக்கும் நெற்றியைத் தடவி,
மென்மையாக தழுவிக்கொண்டேனாக – என் மகள்
என்னுடைய நல்ல மார்பின் முலைகளிடையே வியர்வை உண்டாக
பலமுறை என்னைத் தழுவிக்கொண்டாள்; ஐயகோ!
வெற்றி மிகு பெருந்தகையாளன் பலபடியாகப் பாராட்ட,
பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
பாலைநிலத்தில் உடன்போகுதலை அறிந்திருந்தால் - இவள் தந்தையின்
உணவிருப்பு மிகுந்த காவல் பொருந்திய அகன்ற இல்லத்தில்
செல்லுமிடமெல்லாம் கூடவரும் நிழல் போல
மாலை சூடிய தோழியரோடு ஓரை விளையாட்டில்
கூடு போன்ற சிலம்பின் பரல்கள் ஒலிக்க, அவள்
ஆடுகின்றபோதெல்லாம் அகலாதிருந்திருப்பேனே!
					மேல்
#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்
கடலில் ஓசை குன்றி, தோணிகள் கடலைவிட்டு நீங்கி(க் கரையில் கிடக்க)
நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்,
கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்,
நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்கப்,
பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்; இப்பொழுதோ,
ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, “இரவில்
(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
ஏதேனும் ஒரு துணை பிரிந்திருந்தாலும் தூங்கமாட்டா, காண்பாயாக என்று
கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று. 
					மேல்
 



#51 பாலை பெருந்தேவனார்
ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
மிக்க வெம்மை பரவிய  - நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
வேனில் நீண்டிருக்கும் - மூங்கில்கள் உயர்ந்த - அகன்ற காட்டுவெளியில்
நீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
பிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
தலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
நினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து - 
					மேல்
#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்
சுற்றிய வள்ளிக் கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில்
செழித்தெழுந்த வேங்கை மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள
பொன்னைப் போன்ற புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள்,
இனிமையற்ற குரலில் “வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால்
உயர்ந்த பாறைகளின் அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில்
பசுவைக் கவரும் வலிய புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது
மலையை அடுத்துள்ள சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன்
இடது கையில் வில்லை உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது
அகன்ற மார்பில் அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத்
தெரிவிப்போமா, தெரிவிக்காமல் இருப்போமா என்று
இருவகையால் நாம் எண்ணி ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு
வந்துள்ளது; நீ வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும்
இனிய உயிர் பிரிவதாயினும் உன் மகளின்
ஆய்ந்தெடுத்த மலர் (போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது
கலியாண ஆசையால் உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே!
					மேல்
#53 பாலை சீத்தலை சாத்தனார்
(நீ) அறியமாட்டாய் தோழி, வாழ்வாயாக!, இருள் நீங்கும்படியாக
வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,
நீண்ட அடிமரத்தைக் கொண்ட முருங்கையின் வெண்மையான பூக்கள் பரவியிருக்க,
நீரில்லாமல் வறண்டுபோன முடிவில்லாமற்செல்லும் நீண்ட இடைவெளியில்,
கூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்தும் தன் பெண்நாயுடன் -
கள்ளிகள் நிறைந்த கட்டாந்தரை நிலத்தில் வாகைமரத்தின் (அடிமரத்தை)
உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்
பொரித்துப்போனது போலக் கூட்டமாய் மொய்த்திருக்கும் ஆளரவமற்ற வழியில்
இழுத்துக்கட்டிய வில்லையுடைய மறவர்கள் அம்பு எய்ய, இறந்து வீழ்ந்தோரின்
பெயரெழுதிய நடுகல்லின்  - இனிய நிழலில் தங்கியிருக்கும்
அரிய பாலைநிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும்
இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்;
(அதைவிடுத்து, அவரின்) காதல் அருள்மீதுதான் என்கிறாய் நீ.
					மேல்
#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும்
மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்
உறுதியான சக்கரங்கள் பதிந்து உருண்டுவர,
விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;
தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான
பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) 
					மேல்
#55 பாலை மாமூலனார்
வெம்மையுடன் செல்லும் ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால்
பறக்கும் கொக்குகள் வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில்,
உளிபோன்ற வாயை உடைய பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால்
உயிர் எப்போது போகும் என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில்
வலிமைமிக்க ஆண்யானை போன்ற தலைவனுடன் என் மகள்
சென்றுவிட்டதற்காக நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து
உலையில் ஊதும் துருத்தி போல பெருமூச்சு விட்டு
தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய
கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்
போர்க்களத்தருகே வாளையுயர்த்தி வடக்கிருக்க,
அச் செய்தியைக் கேட்ட சான்றோர்
சுவர்க்கத்துக்கு அவனோடு செல்வதற்காக
உயிர் நீத்ததைப் போல, என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே
இவ்வுலகத்து ஆசையை விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து
போகாத என் உயிரை வெறுத்து (அழுகின்றேன்.)
					மேல்
#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிரிப்பை உண்டாக்குகின்றது தோழி, நேற்று
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, குவளையின்
அப்போது மலர்ந்த பல மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும்
காஞ்சி மரத்துப் பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ,
மெல்லும் கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும்
குளிர்ந்த துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில்
மணக்கோலத்திலிருக்கும் புதிய பெண்களைச் சேர்க்க
ஆசையுடன் வந்த பாணன், தெருவில்
அண்மையில் ஈன்ற ஒரு தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு,
எமது வீட்டுக்குள் புகுந்துவிட்டான், அதனைக் கண்டு
மனத்தில் தோன்றிய மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு
இந்த வீடு அல்ல , அதுவே உமது வீடு என்ற
என்னையும் தன்னையும் நோக்கி
மருண்ட மனத்தினனாய் (என்னைத்) தொழுதுநின்ற நிலையே!
					மேல்
#57 பாலை நக்கீரர்
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்
பெரிய சொரசொரப்பான உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால்
பெரிய துதிக்கையையுடைய யானை உயர்த்தினாற்போன்று ஆடும்,
குன்றத்துச் சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில்
யான் தனியனாக இருக்க, தலைவியோ,
குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல,
மிகவும் சிறந்த ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று,
சிறிய பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ!
கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
விழுப்புண்பட்டவரைப் போல மிகவும் மனம் நொந்து வருந்தி
நடு இரவிலும் பகலிலும் 
நிற்காமல் அழுவோளின் அழகிய சிறு நெற்றியே!
					மேல்
#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,
காட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்
புலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட
தேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்
குளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!
வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை 
மின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள
உனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று –
நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,
குளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,
நீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,
வீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு
பலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை
					மேல்
#59 பாலை மதுரை மருதன் இளநாகன்
குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள
மரம் வளையும்படி மிதித்துத் தந்த கண்ணன் போல
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை - தோழி
சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின்
சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள
இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை
தான் பாராட்டிய காலத்தினையும் நினைத்துப்பாராமல்,
புடைத்த பக்கங்களைக் கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில்
அரிய செயலாகிய பொருளிட்டலை நினைத்து, நம்மைப்
பிரிந்து தூரத்தே தங்கியிருப்பவர் சென்ற வழியில்.
					மேல்
#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்
பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி
கொடிய தொழிலான (மீனை) முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட
நீண்ட திமிலிலிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து
கொழுத்த மீனின் துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய
திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்; 
ஊதற்காற்று குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில்,
மாலையையுடைய தோழிகளுடனே மணல்வீடு கட்டி
விளையாடினும் குன்றும் உன் மேனி அழகு என்று,
காரணமின்றியே கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய
அரசாண்மை உள்ள சோழரின் குடந்தை நகரில் வைத்த
பகை நாடுகள் தரும் செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த 
கடுமையான காவலில் வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய்.
					மேல்
 



#61 பாலை மாமூலனார்
‘புண்ணியம் செய்தவர்கள் அவர்கள், இயமனால்
கொள்ளப்பட்டு இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்’ என்று
முயற்சி வெற்றிசிறக்க, தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற)
நாள்களைக் குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள்
ஆழ்ந்துவிடாதே தோழி! தாழ்க்காமல்
இடியைப்போன்று ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும்
வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி
அரிய மார்பில் அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன்,
தலைமை வாய்ந்த யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு,
கள்ளை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும்
கழலினைப் புனைந்த திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன்,
மழவரின் நாட்டை வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின்
விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும்,
அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் - மிகப் பழமையான,
முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்
பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது
ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும்
நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து -
					மேல்
#62 குறிஞ்சி பரணர்
பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,
மார்பில் அரும்பிய முலைகளையும், பருத்த தோள்களையும்,
கரிய தண்டினையுடைய குவளை மலர்களைச் சேர்த்து வைத்தாற் போன்ற
கரிய இமைகளையுடைய குளிர்ந்த கரிய கண்களையும் உடையவளாகிய அவளுடன்,
பேயும் அறியாத காலத்தில் நடந்த மறைவான சந்திப்பினை
ஒலிக்கும் உடுக்கினைப் போன்று தனித்தும் சேர்ந்தும் பழித்துக் கூறுவதால்
மறைவான ஒழுக்கத்தில் இனி நாம் செல்வது அரிதாகிவிட்டது; அதனால்
கடுமையான வெள்ளம் பெருகிய காவிரி ஆற்றில்
நெடிய சுழியுள்ள நீரில் மூழ்கி எழுபவள் போல,
உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, நேற்று
என் மார்புள் புதைந்துகிடந்தாள்; வெல்லும் வேலினையும்
யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
ஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற
தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற
பேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.
					மேல்
#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்
கேட்பாயாக! வாழ்க! மகளே! உன்னுடைய தோழி
அழகிய இல்லத்தின் இடங்களெல்லாம் வெறிச்சோடிப்போக, தன் தலைவனுடன்
பெரிய மலைகளைத் தாண்டிச் சென்றதற்காக வருந்தவில்லை - வருந்துகிறேன்
கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை,
பெரிதாக விடிகின்ற விடியலின் ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து வெயில் எறிக்க,
கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல்
தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய
அஞ்சத் தகுந்த பாலைநிலத்தைக் கடந்து,
தம் கன்றுகளைக் காணாமல் துயரம் மிகுந்தனவாய்ச் செவிகளைச் சாய்த்து
மன்றத்தில் நெருக்கிநிற்பதால் ஆகும் துன்பம் மிகுந்துபோக, பலவும் சேர்ந்த
கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின்
ஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி
முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்
இளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள்
தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி,
வேட்டையாடும் கள்வரின் வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய,
காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலியினைக்
கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து அழும் என் நெஞ்சைக் குறித்து -  
					மேல்
#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களைகின்ற காலம் இதுவே! பாகனே! தலையாட்டம் அணிந்த,
உலகத்தையே கடந்து செல்வது போன்ற, பறவையின் தன்மை கொண்ட குதிரையின்
செம்மையாக அமைந்த அழகினையுடைய கடிவாளத்தை நீ கையிலெடுக்க,
செம்முல்லை மொட்டுகள் தம் கட்டுகள் அவிழ்ந்த குளிர்ந்த பதத்திலுள்ள பெருவழியில்
அழகாக ஒளிறும் அகன்ற இலையையும், எண்ணெய் நிறையப் பூசிய வலிய தண்டையும் உடைய
வெற்றி வேலை ஏந்திய இளைஞர்கள் விரைந்த ஓட்டத்தில் மிகுந்த வேகம் கொள்ள,
பயணத்தை நாம் மேற்கொள்வோமாயின், மழைபெய்த
விரைந்து செல்லும் நீர் வரிவரியாகச் செய்த செம்மண் நிலத்துப் பக்கத்தில்
தேர் விடும் தடத்திலுள்ள ஈர மணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளற
பாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக்
கொம்பினில் மண்ணைக் கொண்ட தலைமைப் பண்புள்ள காளை
தன்னோடு உடனிருப்பதை விரும்பிய இளம் பசுவைத் தழுவிக்கொண்டு
ஊருக்குத் திரும்பிவரும் பொழுதில், எல்லாம் ஒன்று சேர்ந்து
கன்றுகளை அழைக்கும் குரலுடையவாய்த் தொழுவத்துக்குள் நிறையப் புகும்
பசுக்கள் அணிந்துள்ள தெளிவான மணிகளின் அழகாக எழும்பும் இனிய ஒலியை
தனிமையைக் கொண்டுள்ள மாலையில் கேட்கும்போதெல்லாம்
கலங்கியவளாய் இருக்கும் நம் தலைவியின் செயலற்ற நிலையை -
					மேல்
#65 பாலை மாமூலனார்
நமது மனவோட்டத்தை உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் மனத்தை மறைத்துக்கொண்டிருக்கும்
நம் தாயின் கடுஞ்சொற்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வோம்; சிறிதளவும்
இரக்கமில்லாத இயல்பினையுடைய பொய்யே பேசும்
சேரிப் பெண்களின் பழிச்சொற்களையும் நிறுத்திவிடுவோம்;
தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய உதியஞ்சேரலாதனைப்
பாடிச் செல்லும் பரிசிலரைப் போல
இப்பொழுது மகிழ்வாயாக, வாழ்க தோழியே! நம் தலைவர்,
அடர்த்தியான கூந்தலையுடையவளே! நம் கருத்தோடு ஒன்றிய கருத்துடையவராய்
நம்மை அவருடன் கூட்டிச்செல்ல விரும்பினார் இப்போது - மலைகள்தோறும்
பெரிய மூங்கில்கழைகள் உரசிக்கொள்வதால் ஏற்பட்ட, காற்றடிப்பதால் மிகுந்து எரியும் நெருப்பு
மீன்பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகில் தோன்றும் செறிவான சுடர்கள்
வானளாவிய கடல் அலையின் மீது காணப்படுவது போல்
காட்சிக்கினியதாய்த் தோன்றும், யா மரங்கள் உயர்ந்து நிற்கும் அகன்ற இடத்தில்
பசியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து போவது போலப்
பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும், மூங்கில்கள் கரிந்து சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகளையுடைய,
காடுகளை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த கொம்புகளையுடைய களிறு
வழியினைக் காவல்கொண்டிருக்கிற கடத்தற்கரிய பாலை வழிகள், மூங்கில் போன்ற தோளினையும்
மணங்கமழும் கூந்தலையும் திரட்சியான தொய்யில் எழுத‌ப்ப‌ட்ட‌ முலையினையும்
வரிசையான இத‌ழ்க‌ளையுடைய‌ நீல‌ ம‌ல‌ர் போன்ற‌ மையுண்ட‌ க‌ண்க‌ளையும் உடைய‌ பெண்களுக்கு
கடந்து செல்லக் கடுமையானதாகும் என்று சொல்லித் தள்ளிப்போட்டுகொண்டிருந்த உடன்போக்கினை.
					மேல்
#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்
இப்பிறவியில் உலகத்தில் புகழோடும் விளங்கி
மறுபிறப்புக்குக் காரணமான மேனிலையுலகத்தையும் தடையின்றி எய்துவர்,
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய
மக்களைப் பெற்ற திருவுடையோர் என்று
பலரும் கூறுகின்ற பழமொழி முழுவதுமாக
உண்மையாகிப்போவதைக் கண்கூடாகக் காணப்பெற்றேன் தோழியே! 
வரிசையாக மாலைகளைப் போட்டுக்கொண்ட மார்பினையுடைய நம் தலைவன் நேற்று ஒருத்தியை
மணம் செய்துகொள்ள விரும்பி புதிதாகச்
செய்துகொண்ட அலங்காரனாய், இந்தத் தெருவழியே செல்வோன்
சிறந்த தொழில்நுட்பம் கோண்ட (குதிரையின்) மணி ஒலிக்க, தலைவாசலைக்கடந்து சென்று
(தன்னைப்)பார்க்கும் ஆசையுடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த
பூப்போலும் கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நம் நெடிய தேரினை
நிறுத்துவாயாக வலவனே! என்று சொல்லிவிட்டுத் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதியாமல்
பவளம் போன்ற புதல்வனது சிவந்த வாய் தன் மார்பினில் அழுந்த
அவனைத் தன் மார்போடு அணைத்து, ஐயா! நீ வீட்டுக்குள் போ என்று
கையைவிட்டு இறக்கிவிட முனைபவனுக்கு உடன்படாதவனாய் அழுவதனால் அவனைத் தடுத்த மகனோடு
பெருஞ்செல்வக் குபேரனைப் போன்றவன் என்று கண்டோர் கூறும்படி், தழுவிய மகனோடு
தானே வந்து இல்லத்திற் புகுந்தான்; நானே இவ்வாறு நடக்கும்படி 
செய்தேன் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று எண்ணி வெட்கப்பட்டு, இடையூறு செய்து இவன்
காரியத்தைக் கெடுத்துவிட்டான் போலும் இந்தத் துடுக்குப்பயல் என்று போய்
அடிக்கின்ற கோலுடன் நான் அவனருகில் செல்ல, மகனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு,
ஒலிக்கும் முகப்பினையுடைய முழவின் இனிய ஓசை, மணம் நடக்கும் அவர் வீட்டிலிருந்து
அழைப்பது போல வந்து ஒலிக்கவும், நம் வீட்டிலிருந்தும் செல்லாதவனாய்
முன்பொருநாள் கழங்கு விளையாடும் தோழியரிடையே வந்து நம்மை அருள்செய்த
பழைய அருட்செயல் நினவுக்கு வந்து தன்னை வருத்த
நடப்பதற்கிருந்த தன் மணவிழாவை நிறுத்திவிட்டான்.
					மேல்
#67 பாலை நோய்பாடியார்
நான் என்ன செய்வேன்? தோழியே! புள்ளிகளையும் வரிகளையுமுடைய
வானம்பாடிப் பறவை பாடவும், மனமிரங்காமல்
துளிபெய்தலை நீத்து மேகம் அகன்று போனதால், தம் இலைகள் காய்ந்து போனதால்
மரங்கள் பொலிவிழந்து நிற்கும், சரளைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப்பகுதி உயர்ந்துள்ள அகன்ற இடத்தில்
அரத்தால் கூர்மையாக்கப்பட்ட முனையையுடைய பிறைவாய் அம்பினையும்,
இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையும் உடையவராய்த் தம் ஆனிரையை மீட்கவேண்டி
நெல்லி மரங்களையுடைய நீண்ட வழியிடத்தில் இரவிலேயே விரைந்து சென்று
வெட்சியாருடன் நடந்த நல்ல போரினை வென்று இறந்த மானம் மிக்க கரந்தை வீரர்களின்
பெயரினையும், சிறப்பினையும் பொறித்து, மக்கள் வழங்கும் வழிகள்தோறும்
மயிலிறகை அணிந்த புகழ் விளங்கும் நடுகற்கள்
வேற்படையினை நட்டுக் கிடுகுப்படையும் சார்த்தப்பட்டிருப்பவை பகைவரின் போர்முனையைப் போன்றிருக்கும்
வேற்றுமொழி வழங்கும் நாட்டைக் கொள்ளவதற்காக, மன்னர்களது
கழியால் கட்டப்பட்ட கரிய கேடகத்தைக்கொண்ட காலாட்படையை அணிவகுத்துப் பார்த்தாற் போன்ற,
இறந்தவரின் உடம்பைத் தழை கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாலைப் பரப்பிலே; 
உருவம் இல்லாத, ஊர்ந்து செல்லாத பேய்த்தேர் என்னும் கானல்நீரில்
நிலத்தில் ஊரும் மின்மினிப்பூச்சியைப் போல, பலவாக
ஒளிவிடும் பரல்கற்கள் மினுங்கும் என்று கூறுவர், நமது
பெண்மைநலத்தைத் துறந்து பிரிந்துபோயிருப்பவர் போயிருக்கும் வழி.
					மேல்
#68 குறிஞ்சி ஊட்டியார்
அன்னையே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகிறேன். நம் தோட்டத்திலுள்ள
குளிர்ந்த பள்ளத்தில் நெருங்கி வளர்ந்த கூதளம் செடி குழைந்துபோகுமாறு,அதன் மீது விழுந்து
இனிய இசையையுடைய அருவி ஒலிக்கின்றது, அதனைச் சிறிதேனும்
கேட்டாயா? இதனையும் கேட்பாயாக! நம் தோட்டத்திலுள்ள
அரக்கினைத் தேய்த்துவிட்டாற் போன்ற ஒளிவிடும் தளிரினையுடைய அசோகமரத்தின்
ஓங்கி வளர்ந்த கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊஞ்சலைப் பாம்பு என நினைத்து
அந்த மரம் முழுதும் வேரோடு அழிந்துபோகும்படி இடி விழுந்தது அல்லவா,
அதனையும் கேட்டாயா? என்று நான் கேட்டும் அதனை அறியாதவளாய்
அன்னையும் மிகுந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள், அதைத்தவிர
உலகத்து உயிர்களெல்லாம் உறங்கிப்போய்விட்டன அந்த நேரத்தில், நம் காதலர்
வந்தால் இது தகுந்த தருணம் என்று
ஒளிவீசிப் பிரகாசிக்கும் பளபளப்பான வளையல்கள் கழன்றுவிழும்படி மெலிந்திருக்கின்ற நம்மை
நினைந்திருக்கும் தமது நெஞ்சம் சிறிதும் குற்றமற்றதாகும்படி
வந்துள்ளார் வாழ்க தோழியே! வானத்திலிருந்து
முழங்கிக்கொண்டு பொழியத்தொடங்கிய கூட்டமான பல மேகங்கள்
இடைவிடாமல் பெய்தலால் உண்டாகிய வெள்ளம் இடங்களெல்லாம் பெருகிவர
யானைக் கன்றின் காலைப் பிடித்திழுக்கும் கடுமையான சுழலினைக் கொண்ட வெள்ளத்தில்
புல்லிய தலையையுடைய இளம் பெண்யானைகளின் ஆரவார ஒலிகள் பலவும் சேர
வெள்ளிய தந்தங்களையுடைய களிறு பிளிறிக்கொண்டு கன்றினைப் பற்றத் துதிக்கையால் துழாவும்,
அங்காந்த வாயையுடைய பாம்புகள் புதர்களில் படுத்திருக்கும்,
பகலிலும் வருவதற்கு மனிதர் அஞ்சுகின்ற நடுங்கவைக்கும் கடுமையான வழியைக் கடந்து -
					மேல்
#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆராய்ந்து தெரிந்தெடுத்ததைப் போன்ற அழகினைத் தொலைத்த மேனியினையும், பெரிய செந்தாமரையின்
சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், இத்தகையது என்று கூற உவமை வகை இல்லாத
தனித்தன்மையுடைய தமது சுணங்குகள் நிறம் மழுங்கிப்போனதையும் நோக்கி
துன்பத்தில் மூழ்கிவிடாதே! நீ அமைதியாயிருப்பாய்; தனக்கு உரிமையான
கொடையால்வரும் இன்பத்தையே விரும்பி, அதிலே  மனம் பொருந்தி
பொருளீட்டுவதில் முயல்வாராகி, சிறிய இலையினையும்
பருத்த அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காய்களை,
காட்டிலுள்ள இளம் மரைமானின் பெரிய கூட்டம் கவர்ந்து தின்னுதற்குரிய
வெம்மை மிக்க வழி என்று பாராமல், அந்தத் துன்பத்தையே இன்பமாகக் கொண்டு,
வானளாவிய உயர்ந்த குடையினையும், வேகமாகச் செல்லும் தேரினையும் கொண்ட மோரியர்கள்
தமது பொன்னால் செய்த தேர்ச்சக்கரங்கள் தடையின்றிச் செல்ல வெட்டி வழியுண்டாக்கிய
பாறைகளைக் கடந்து சென்றாராயினும், சிறிதளவும் 
தமது இருப்பினை நீட்டிக்கமாட்டார், வாழ்க தோழியே! ஆடுகின்ற இயல்பினையுடைய
இளம் மயில் உதிர்த்த தோகையை இரண்டாகக் கிழித்துத் தம்முடைய
ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பலவான, சிறந்த
அம்புகளைக் கையில் கொண்டவராய், பகைவரின் அரண்கள் பலவற்றை அழித்து
அழகிய அணிகலன்களைக் கொணர்கின்ற வலிமைமிக்க மறவர்களுடைய தலைவனாகிய
சுடரும் மணிகள் பதித்த பெரும் பூண்களை அணிந்த ஆய் என்பவனின் காட்டின்
அன்றலர்ந்த மலர் என மணக்கும் உன்னுடைய
பரந்த முலையினையுடைய மார்பினில் துயிலும் இனிய துயிலை மறந்து - 
					மேல்
#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
வளைவான படகுகளைக் கொண்ட மீனவர்கள் தம் மீன்வேட்டை நல்லபடியாக வாய்க்கப்பெற்று,
பெரிதும் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில்
குறுகலான கண்களையுடைய அழகிய வலையின் பயன் கருதி அதற்கு நறும்புகைகாட்டிக் கொண்டாடி
தாம் கொணர்ந்த கொழுவிய கண்ணையுடைய அயிலை மீன்களை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் நம் நெய்தல் தலைவன்
நம்முடன் கொண்ட காதல் நட்பு, இதற்கு முன்னர்
தமக்குள் பேசிக்கொண்ட பெண்கள் ஊர்முழுதும் பரப்ப
ஊரில் பலரும் அறிவதற்கிடமானது. ஆனால் அது கழிந்தது. இப்போது
நம் தலைவருடன் மணம் கூடிய பின்னர், புதிதான
பொன்னிறப் புலிநகக்கொன்றையின் பூக்களோடு, புன்னை மலர்கள் உதிர்ந்து ஓவியமாய்க் கிடக்கும்
கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறைகளின் வயல்களில் கரிய நீரில்
பச்சை இலைகளையுடைய தழைத்த திரண்ட தண்டினையுடைய நெய்தல் பூக்களை
விழாவிற்குத் தம்மை அலங்கரிக்கும் பெண்கள் தங்கள் தழையுடைக்கு அழகுசெய்யச் சேர்க்கும்
வெற்றி வேலினையுடைய பாண்டியரின் மிக்க பழமையுடைய கோடிக்கரையின் அருகில்
முழங்குகின்ற பெரிய கடலின் அருகில் பறவைகள் ஆரவாரிக்கும் துறைமுற்றத்தில்
வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய வேதங்களை ஓதுவதற்காக அப் பறவைகளின் ஆரவாரத்தை அடக்கிய
பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல
பேச்சு மூச்சற்றுக்கிடக்கிறது பெரிதாய்ப் பேசிய இந்த ஊர்.
					மேல்
 



#71 பாலை அந்தி இளங்கீரனார்
செல்வம் நிறைந்தோரைத் தேடிக்காணும் உள்ளத்துடன், தம்மிடம் நட்புக்கொண்டோர் செல்வத்தில் குறைந்துபோனால்
அவர்களால் பயன்பெறுவது இல்லையாதலால், அவர் மேலிருந்த பற்றினை விட்டு அவரை ஒதுக்கிவைக்கும்
பண்பற்ற மக்களைப் போல, வண்டுக்கூட்டம்
சுனையிலிருக்கும் பூக்களை விடுத்து மரக்கிளைகளில் இருக்கும் பூக்களை நாடிச் செல்ல,
களங்கமில்லாத மான்கூட்டம் மருண்டுநோக்க, (மெதுவாக)
உலையில் காய்ந்து பின் (மெதுவாக) ஆறிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல செக்கர் வானம் பூத்திருக்க,
வியக்கத் தக்க நல்லறிவினையும் போக்கிச் செயலற்றுப்போகச்செய்யும் துன்பத்தோடே
அகன்ற பெரிய வானம் அழகிய பஞ்சுப்பொதிகளான மேகங்களைப் புதிதாய்க் கொண்டுவர
பகலுக்கு வழிவிட்டுநிற்கும் துயரந்தரும் மாலைப்பொழுது -
காதலரைப் பிரிந்த தனிமையால் நொந்துபோயிருக்கவும்,
மிகுந்த துன்பத்தில் இருப்பவர் ஒருவரின் காண்பதற்கரிய மார்பினைக் குறிவைத்து
கூர்மையான வேலை எறிவாரைப்போல மேலும் துயரத்தைச் செய்கிறது.
குற்றம் தீரச் செய்யப்பட்ட உருவம் காட்டும் கண்ணாடியின்
உட்புறத்தே ஊதிய ஆவி, முதலில் பரந்து பின்னர் மெதுவாகச் சுருங்கி மறைவது போல்
என் மனவலிமை சிறுகச் சிறுகக் குறைந்து மாய்ந்துவிடப்போகிறது. பெரிதும் அழிவுற்று,
சுழன்றடிக்கும் மிகக் கடுமையான சூறாவளி மோதித்தாக்க,
அலைமோதும் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் (எந்நேரமும் பறந்துசெல்லலாம் என்றிருக்கும்)பறவையைப் போல
என் உயிர் என்னைவிட்டு நீங்கும் காலம் இதுதான் போலும், வாழ்க தோழியே
					மேல்
#72 குறிஞ்சி எருமை வெளியனார் மகனார் கடலனார்
கவிழ்ந்திருக்கும் இருளைக் கிழிப்பது போல் மின்னல்வெட்டி, மேகமானது
துளிகளாய் ஆரம்பித்து மிகப் பெரிய மழைபெய்யும் நள்ளிரவில்
மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
காய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி
புற்றாஞ்சோற்றைக் கிளறி எடுக்கும் பெரிய கையையுடைய ஆண்கரடி
இரும்பு வேலை செய்யும் கொல்லனைப் போலத் தோன்றும் அந்த இடத்தில்
தலைவன் வரும் வழிகள் செல்வதற்கு அரிய தன்மையுடையன 
எண்ணிப்பார்த்தாலே நடுங்கவைக்கும் அச்சந்தரும் முதலைகளையுடையன,
ஓடக்கோலையும் மூழ்கவைக்கும் பெருவெள்ளம் பாறைகளை மோதிக்கொண்டு ஒலிக்க,
அச்சம்கொள்ளாமல், தனித்திருக்கிறோம் என்று எண்ணாமல், மேகமூட்டத்தினைச் சுமந்துகொண்டு
அசைகின்ற மூங்கில்கள் ’நரநர’வென்று ஒலிக்கும் தெய்வங்கள் வாழும் உச்சி மலைச்சரிவில்
கருவுற்றிருக்கும் தன் பெண்புலியின் வேட்கை மிக்க பசியினைப் போக்க
கரிய ஆண்பன்றியினைக் கொன்ற மிக்க சினங்கொண்ட ஆண்புலி
அச்சம் தரும் நல்லபாம்பு உமிழ்ந்து வைத்து
தான் மேய்வதற்குப் பயன்படுத்தும் மணியின் வெளிச்சத்தில் குருதி தோய்ந்து காய இழுத்துச்செல்லும்
கத்தி முனையில் நடப்பது போன்ற நடமாட்டமில்லாத பலவாறு பிரிந்துசெல்லும் வழிகளில்
கடக்க நினைப்பவர் அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறிய பாதையில்
நமக்கு அருள்புரியவேண்டும் என்ற எண்ணத்துடன், வேலையே துணையாகக் கொண்டு
வந்திருக்கும் நம் தலைவனும் கொடியவன் அல்லன், அவனை இங்கு வரச்செய்த
நீயும் தவறுடையவள் அல்லள், உனக்கு
இந்த நீங்காத தீர்த்தற்கரிய துன்பத்தினைச் செய்த
நானே தவறுடையவள் ஆவேன், தோழியே!
					மேல்
#73 பாலை எருமை வெளியனார்
பின்னலிட்டு முடிந்துவிட்ட, வேறு ஒப்பனை செய்யப்படாத கொண்டையினில்,
நெய் தடவப்பெற்றுக் கீழே விழும் குழலினையும் சேர்த்துக்கட்டி
காட்டுப்பூனையின் இருளில் மின்னும் கண்களைப் போன்று ஒளிவிடும்
முத்துக்களாலான ஒற்றை வடம் முலைமேல் கிடந்து திகழ,
வணங்குதற்குரிய கற்புடன், காண்போர் இவள்தான் என்று அறியாமை கொள்ளும்படி பெரிதும் மெலிந்து
நீ எய்துகின்ற நோயினால் மட்டும் வருந்தியிருப்பவளும் இல்லை; அச்சம் வர
என்ன ஆகுமோ இந்த இரங்கத்தக்கவளுக்கு என்று
என்னுடைய வருத்தத்திற்கும் மனமிரங்கும் உன்னோடு நானும்
ஒருவர் செய்வது நல்லதல்ல என்று மற்றவர் சொல்லாத வேற்றுமை அற்ற அறிவினையுடைய
நம் இருவருடைய வருத்தமும் நீங்க, நம் தலைவர் வருவதனைக்
காண்பதற்கு வருவாயாக, அன்புடைய தோழியே!
கொடிகள் பின்னிக்கிடக்கும் சிறு காட்டினில் இருக்கும் இருண்ட நிறத்தையுடைய யானை
சோர்ந்திருக்கும் தகுந்த காலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிங்கத்தின் வலிமையினையுடைய
தினைவகைகளில் ஒன்றாகிய சிறுதினையைக் காக்கும் பரண்மேலுள்ளவனின் கையிலிருக்கும்
கைப்பிடியைக் கொண்ட தீயை உமிழும் கொள்ளிக்கட்டையை
வீசும்போது எழுகின்ற தீப்பொறியைப் போல மின்னி, நம் தலைவர்
சென்றிருக்கும் நாட்டினில் ஊன்றிப் பெய்கிறது மழை.
					மேல்
#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்
தான் மேற்கொண்ட போர்வினையை நிறைவு செய்த வெற்றியுடன் மகிழ்ச்சி மிகுந்து
போரில் வல்ல வீரர் தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்த
குளிர்ந்த மழை பொழிந்து நிலம் பச்சைப்பசேலென்ற பொழுதினில்
இரத்தச் சிவப்பு நிறமுடைய மின்னுகின்ற சிவந்த தாம்பலப்பூச்சிகள்
பெரிய வழிகளின் ஓரர்ங்களில் பல சிறிய வரிகளாக ஊர்ந்துசெல்ல
பச்சைக் கொடிகளைக் கொண்ட முல்லையின் மென்மைப் பதமுள்ள புதிய பூக்கள்
வெண்மையான களர் ஆகிய அறல்பட்ட மணலில் பரந்து கிடக்க,
வண்டுகள் அரும்பினை ஊதி மலர்த்தும் குளிர்ச்சியான மணம்கமழும் முல்லைநிலத்தில்
கரிய கொம்பினையுடைய ஆண்மான்களின் அழகிய இளம் பெண்மான்களின்
மருட்சியான பார்வையினைப் பார்க்கும்போதெல்லாம் உன்னை நினைத்து
திண்ணிய தேரினை ஓட்டும் பாகனே! இன்னும் வேகமாகப்போ என்று அவனை முடுக்கிவிட்டு
இன்றைக்கே வந்துவிடுவார் நம் தலைவர், பொறுத்திருப்போம் நம் துன்பத்தை என்று
வற்புறுத்தும் இனிய மொழிகளால் நல்லனவற்றைப் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லும்
உன் சொல்லைத் துணிந்து கேட்டுக்கொள்வேன் - நாள்தோறும்
வருத்தத்தைத் தரும் மாலைப்பொழுதுடன் கூடி, வளைந்த கோலினையுடைய
தம் தொழிலேயன்றிப் பிறதொழிலைக் கல்லாத கோவலர்கள் ஊதுகின்ற
வலிய வாயினையுடைய சிறிய குழல் என்னை வருத்தாமலிருந்தால்
					மேல்
#75 பாலை மதுரைப்போத்தனார்
அருள் செய்வது என்பதைப் பொருட்டாக எண்ணாமல், பொருளீட்டும் முயற்சியையே ஆண்பிள்ளைகள்
பொருட்டாக எண்ணித் துணிந்த உண்மையற்ற அறிவினையுடைய
வலிமை மிக்க உள்ளத்தால், சோம்பியிராமல்,
தீயின‌து வெப்ப‌ம் த‌வ‌ழும் பெரிய‌ பாலை நில‌த்தில், இலை முதலியன
கரிந்து உதிர்ந்த மரத்தையுடைய காட்டினில் வாழும் வாழ்க்கையையுடைய
கொல்லுகின்ற புலியை ஒத்த வலிமையையுடைய வீரக் கழல் கட்டிய அடியினையுடைய மறவர்கள்
பழையதாய் வருகின்ற சிறிய ஊரின்கண் அமைந்த மன்றத்து நிழலிலே துயிலும்
பெருமையையுடைய நெடிய மலையிலுள்ள நீர் வற்றிக் காய்ந்துபோன
பரல்கற்கள் நிறைந்த வழியில் செல்வாராயின், நல்ல நெற்றியினையும்,
குற்றமற்ற விரதக்கோட்பாடுகளையும், ஒருசில சொற்களையே பேசும் பவளம் போன்ற வாயினயும்
ஒளிரும் வளை அணிந்த முன்கையினையும், ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுமுடைய பெண்களின்
முத்தாரம் தொங்குகின்ற பரந்த முலையையுடைய மார்பினில்
தணியாத விருப்பத்துடன் (அணைப்பதால்) தமது மார்பினில் கொண்ட மாலை குழைந்துபோகாமல்,
மறைந்துபோன பழைய பேரழகினை நினைத்து, என்றும்
வருத்தப்படுவார்தான் இருப்பாரேயன்றி, யாரேனும்
அவ்வழகினை மீண்டும் கொண்டுவந்து கொடுப்போர் இருக்கிறார்களோ இவ்வுலகத்தில் என்று
மழைக்காலத்து இண்டைச்செடியின் கரிய தளிரைப் போன்ற
அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், நுண்மையான இடையினையும்
ப‌ல‌ காசுக‌ளை வரிசையாக‌க் கோத்த மேகலையை உடைய‌ பக்கம் உய‌ர்ந்த‌ அல்குலினையும் 
மென்மையான இயல்பினையுமுடைய சிறுபெண்ணே! நீ என்னிடம் பிணக்கம் கொண்டு பலவும் சொல்லி
குறையாத துன்பமுடையவளாக இருக்கும்போது, நானோ
பிரிந்துசெல்ல எண்ணவும் செய்வேனோ
அரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய உன்னை விட்டு -
					மேல்
#76 மருதம் பரணர்
மார்ச்சனை என்ற சாந்து செறிவாகப் பூசப்பெற்ற மத்தளத்துடன், காண்போர் மிகுந்த மகிழ்ச்சியடைய நாங்கள் கூத்தினை நடத்த
அதனைக் காண, குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் எம் சேரிக்கு வந்ததற்கு
இனிமையும் கடுப்பும் கொண்ட கள்ளினையுடைய அஃதை என்பானது, யானைகளுடன்
நல்ல அணிகலன்களையும் வாரி வழங்கும் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருக்கையின்போது
அவனுடைய மண்டபத்தில் நுழையும் பொருநர் முழங்குகின்ற பறையைப் போல, விடாமல்
இகழ்ந்து பேசுகிறார்கள் அவனுடைய வீட்டுப்பெண்கள் என்கிறார்கள்.
கச்சணிந்தவனும், கழல் கட்டியவனும், தேனொழுகும் மாலையணிந்த மார்பையுடையவனும்,
பல்வேறு வகைத் தொழில்திறம் அமைந்து பொலிவுற்ற மாலையினையுடையவனும்,
சுருட்டை முடியினையுடையவனுமான அழகிய கூத்தனாகிய ஆட்டனத்தியைப் பார்த்தீர்களா என்று தேடிக்கொண்டு
ஆதிமந்தி என்ற பெண் பித்துப்பிடித்து வருந்தி அலைய
கரையினை மோதி உராய்ந்துகொண்டு நேர்கிழக்காகப் பாயும்
அழகிய குளிர்ந்த காவிரி (ஆட்டனத்தியை இழுத்துக்கொண்டு சென்றது) போல
(நானும்)அந்தத் தலைவனை வளைத்துக் கைக்குள்போட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
					மேல்
#77 பாலை மருதன் இள நாகனார்
நம் தலைவியின் நல்ல நெற்றி பசந்துபோகவும், முயற்சியால் பொருள் ஈட்டுவதற்கு
நெருங்க முடியாத காட்டுவழியில் செல்லுதல் நல்லதென்று எண்ணி
என் பின்னே நின்று நீ நினைத்தால், மிகுந்த கொடிய செயலைச்
செய்ய நினைக்கின்றாய், வாழ்க நெஞ்சமே! வெப்பம் மிகுந்திருக்கும்படி
இடிகளை உமிழும் மேகம் மழைபெய்யாமல் அகன்று செல்வதால், எங்கும்
குடிமக்கள் தத்தம் ஊர்களைவிட்டு வெளியேறுகின்ற, பலரும் சுட்டிக்காட்டிக்கூறும் பழைய பாழிடத்தில்
கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட குடத்திலுள்ள ஒலையை வெளியே எடுப்பதற்கு
குடத்தின் இலச்சினையை நீக்கும் ஆவணப்பெரியோர் (அந்த ஓலைகளை வெளியே எடுப்பது) போன்று
தம் உயிர் தம்மைவிட்டுப் போக, நல்ல போரினை வென்று மடிந்த
அஞ்சாநெஞ்சரின் குடலை வெளியே எடுக்க, மிகவும் வலிந்து,
சிவந்த செவியினைக் கொண்ட பருந்து காண்போர் அஞ்சும்படியாக இழுக்கும்
பரல்கற்கள் நிறைந்த பலவாறாகப் பிரிந்துசெல்லும் வழியில் போனால், அங்குள்ள சிற்றூர்களின்
பொலிவற்ற அடியினையுடைய இத்தி மரத்தின் புள்ளி புள்ளியான நிழலில் 
பெருங்காற்று வீசும் இருள் மிக்க மாலை வேளையில் (ஓய்வெடுக்கக் கண்ணை மூடும்போது)
சேரனின் படைத்தலைவனான, வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பவன்
தன்னோடு ஒத்துவராத மன்னர்களுடனான அரிய போரில் ஓங்கித்தூக்கிய
திருத்தமான இலைத்தொழிலையுடைய வேல் (அப் பகை மன்னர்க்குத் தரும் துன்பத்தைப்) போல
தாங்க முடியாத துயரத்தைத் தரும் நம் தலைவியின் நீர் ஒழுகும் கண்கள் (நம் மனக்கண் முன் தோன்றி)
					மேல்
#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்
அகன்ற இடத்தையுடைய காட்டினிலிருக்கும் ஆளி என்ற விலங்கினை எண்ணி அஞ்சி,
தன் இனத்தைத் தன்னிடத்தே சேர்த்துக்கொள்ளும், வெளிப்படையாகத் தெரியும் பேராற்றலையும்,
வரியினையுடைய வண்டுகள் ஒலிக்கும், வாயினுள் செல்லும் மதத்தினையும் உடைய
புள்ளிகள் நிறைந்த நெற்றியால் பொலிவுபெற்ற வலிமை பொருந்திய ஆண்யானைகளின் தலைவன்
தன் கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையால் இன்பமுறத் தழுவ
முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் இளம் பெண்யானை (ஆளியை எண்ணி) நடுங்குகின்ற மலைச்சாரலில்,
இனிமையாகப் பிழிந்தெடுத்த கள்ளினையுடைய குறவர்களின் முற்றத்தில்
மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தளின்
நீண்ட இதழ்களான நெடிய துடுப்புகள் முறியவும், குளிர்ச்சியாக
வாடைக்காற்று வீசும் பனிவிழத்தொடங்கும் முன்பனிக்காலத்தில்
நாம் இல்லாத தனிமையில் தம் ஊரில் தனியாளாக இருக்கும் அவர்கள்
எப்படி இருக்கிறார்களோ பாவம் அவர்கள் என்று
எம்மைவிட்டுப் பிரிந்திருந்த சில நாட்களில் சிறிதளவேனும்
நினைந்திருந்தீரோ, ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே -
உலகம் உள்ளளவும் வாழும் பலரும் புகழும் நல்ல புகழினையும்,
வாய்மையே கூறுகின்ற மொழியையுமுடைய கபிலன் ஆலோசனை சொல்ல, நெடும் தொலைவிலிருந்து
வளம் பொருந்திய வயல்களில் விளைந்த நெற்கதிர்களைக் (கிளிகள்மூலம்) கொண்டுவந்து, அவற்றைப்
பெரிய தண்டுகளையுடைய ஆம்பல் மலரோடு சேர்த்து ஆக்கி உண்டு,
பல ஆண்டுகள் கழியவும் தான் விரும்பிய இடத்டைவிட்டு இடம்பெயராமல்
பகைவரின் வாட்போரினைக் கலக்கி, முயற்சியால் வென்று
நிமிர்ந்த கொம்புகளைக் கொண்ட யானைகளையுடைய மூவேந்தரையும் விரட்டியடித்த
மிகுந்த விரைவுடன் செல்லும் குதிரைப்படையை உடைய வள்ளல்தன்மை மிகுந்த பாரியின்
இனிய பெரிய பசுமையான சுனைநீரில் பூத்த
தேன் மணக்கும் புதிய மலராக மணக்கும் இவளின் நெற்றியை - (சிறிதளவேனும் நினைந்திருந்தீரோ)
					மேல்
#79 பாலை குடவாயில் கீரத்தனார்
தோளில் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்ட வலிய கைகளையுடைய ஆடவர்கள்,
மிக்க தீப்பொறி உண்டாக (பாறைகளை உடைத்து) கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு
கல்லி எடுத்து உண்டாக்கிய மிக்க உவரையுடைய கிணற்றில்
மண்ணுள்ள பக்கத்தே ஊறிய நீரைப் பருகும் பொருட்டு,
கட்டாந்தரை துகள்படுமாறு நடந்து, கொங்கரின்
ஒலிக்கும் மணிகளைக் கட்டிய பசுத்திரளுள் நீருக்காகத் தலைநிமிர்ந்து செல்லும்
சிவந்த பசு கிளப்பிய செம்மண்ணின் சிவந்த புழுதி
அகன்ற பெரிய வானத்தில் மிகுந்து தோன்றும்
அகன்ற இடத்தையுடைய காட்டில் நம் தலைவி நம்மோடு துணையாக
முடிந்த அளவில் செல்வோம் என்று அங்கேயே நினைக்காமல், இப்போது பயணத்தைக் கைவிடநேரும்படி
வருந்துகிறாய், வாழ்க, என் நெஞ்சமே! பெரிய சிறகுகளையும்,
வளைவான அலகினையும் உடைய பருந்தின் வெண்மையான கண்களையுடைய பேடை,
அசைந்து நடக்கும்போதெல்லாம் ஒலிக்கும், அழகிய வாயையும் கடும் ஓசையினையுடைய உடுக்கையையும்
வளைந்த வில்லையும் உடைய மறவர்கள் வழிப்போக்கரின் பொருளைக் கொள்ளையிடும் வழியில் நடந்து செல்ல
(பேடை)(உணவு கிட்டப்போகிறது என்று)நெடிதாக ஒலியெழுப்பித் தன் துணையை அழைக்கும் செல்லத் தொலையாத இடமான
பரல்கற்கள் பரந்திருக்கும் காட்டில் நடந்து
நிலையில்லாத பொருளைச் சம்பாதிக்க அவளை விட்டுப் பிரிந்துவந்த நீ.
					மேல்
#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
வளைந்த காலினையுடைய முதலையோடு சுறாமீன்களும் நடமாடும்
கரிய உப்பங்கழியில் குறுகிய பாதையில் நடந்து, இரவிலே
வருகின்றாய், குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவனே!
நாங்கள் என்ன உனக்குக் காண்பதற்கு அரிதாகவாபோய்விட்டோம், எம் தந்தை
சேர்ந்துவரும் அலைகளையுடைய கடற்பரப்புக்குள் சென்று தேடித் தந்த
நிறைய மீன்களின் வெயிலில் காயும் வற்றல்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்டிக்கொண்டிருப்போம்
நீர்முள்ளிச்செடிகள் தழைத்த கடலோரக் கரையில் உள்ள
ஒளிவிடும் பலவான மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின்
சிவந்த நிறமுள்ள மெல்லிய கொடிகளை உன்னுடைய தேர்ச்சக்கரங்கள் ஏறித் துண்டிக்க
பல மணிகளைப் பூண்ட குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி
மின்னுகின்ற இலைகளால் பொலிவுற்று விளங்கும் பூங்கொத்துக்கள் கட்டவிழ்ந்து பொன்னிறமுள்ள
குளிர்ந்த‌ மணமுள்ள பூந்துகள்க‌ளை உதிர்க்கின்ற‌
புன்னை மரங்கள் நிறைந்த அழ‌கிய‌ க‌ட‌ற்க‌ரைச் சோலையிலே ப‌க‌ற்பொழுதிலேயே வ‌ந்த‌ருள்வாயாக‌!
					மேல்
 



#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்
விடியற்காலத்தில் இரையைத் தேடி உலாவுவதை மேற்கொண்ட, தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி
உயர்ந்த கிளைகளையுடைய இலுப்பை மரத்தின் இனிய பழங்களைத் தின்று சலித்துப்போனால்
பொலிவற்ற துளைகளைக் கொண்ட மண்புற்றின், கூட்டமான கறையான்கள்
ஒன்றுகூடி முயன்று செய்த நனைந்த வாயையுடைய நெடிய உச்சியினை
இரும்புலையில் ஊதும் துருத்தியைப் போல் பெரிதாய் வளைக்குள் மூச்சுவிட்டுப் புற்றாஞ்சோற்றை உண்ணும் -
நிலம் dddடிக்கும்படியாக வறண்டுபோன பாலை நிலமான - அந்த இடத்தில், கண்கள் கூசும்படியாக
ஞாயிறு காய்வதால், கவிழ்ந்து கிடக்கும் பரட்டைத் தலையையுடைய வலிமையான கிளைகளைக் கொண்ட
பாதை ஓரத்து வெண்கடம்பு மரத்தில் ஏறியிருந்து, ஒற்றையாக, 
பாய்ந்து இரையைப் பற்றும் பருந்து வருந்தியிருக்கும் வெப்பம் மிக்க நீண்ட இடங்களான
கடும்சண்டைகள் நடக்கும் கடந்துசெல்லக் கடினமான வழியினைத் தாண்டி - சிறந்த
தலைமைப் பண்புள்ள  உமது உள்ளம் தூண்டுவதால் - வெகுண்டெழுந்த பகைவரின்
ஒளிர்கின்ற வேல்படையுள்ள போர்க்களத்தை, யானைப்படைகளும் அழியுமாறு வெல்லும்,
மிகுந்த வள்ளல்தன்மை நிறைந்த கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊரினைப் போன்ற, எமது
கருமையான அழகிய மையுண்ட கண்கள் கலங்கி அழ
ஐயனே - செல்வீர்களா, எம்மைப் பிரிந்து சென்று பொருள்தேடுவதற்காக.
					மேல்
#82 குறிஞ்சி கபிலர்
அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த மின்னிடும் துளைகளின் பக்கத்தே
கோடை எனும் அழகிய மேற்காற்றினால் எழும் ஒலி குழலின் இசையாகவும்,
ஓசை இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய இசை
மொத்தமாகச் சேர்ந்த முழவுகளின் செறிவான இசையாகவும்,
கூட்டமான மான்கள் அடித்தொண்டையில் எழுப்பும் கடுங் குரல் பெருவங்கியம் என்னும் கொம்பிசையாகவும்
இவற்றுடன், பூக்களைக் கொண்ட மலைச் சாரலின் வண்டுகள் எழுப்பும் ஓசை யாழிசையாகவும்,
இவ்வாறாக, இனிய பல்விதமாக ஒலிக்கும் இசையினைக் கேட்டு ஆரவாரம் செய்து
குரங்குகளாகிய நல்ல அவையோர் வியப்புடன் காண,
மூங்கில்கள் வளர்ந்த மலைச்சரிவினை ஒட்டிய நிலப்பகுதியில் உலாவி ஆடும் மயில்கள்
விழாக்களத்தில் புகுந்தாடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டையுடையவன்
அழகிய வலிமையான வில்லினை ஒரு கையில் கொண்டு, ஆய்ந்த அம்பினை அடுத்த கையில் கொண்டு
தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற வழியினை விசாரித்துக்கொண்டு
முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் நுழைவிடத்தின் ஒரு பக்கத்தில்
மலர் மாலை அணிந்த மார்பினையுடையவனாய் நின்றுகொண்டிருந்தவனைக் கண்டவர்கள்
பலரே, வாழ்க தோழியே! அவர்களுள்
நிறைந்த இருள் செறிந்த இரவினில் படுக்கையில் கிடந்து
நான் ஒருத்திமட்டுமே இவ்வாறு இருப்பதற்குக்காரணம் என்ன - 
நீர் ஒழுகும் கண்ணோடு, மெலிந்த தோளினையுடையவளாய் -
					மேல்
#83 பாலை கல்லாடனார்
வலப்பக்கமாக சுழித்திருக்கும், வெண்கடம்பின், பாலைவெளியெல்லாம் மணக்கும் புதிய பூக்களைச்
சுருட்டை நிறைந்திருக்கும் தலையாட்டம் போன்று அசையும்படி தம் தலை பொலிவுறச் சூடி,
உரல் போன்ற பாதங்களையுடைய இளம் பெண்யானை காட்டினில் அலறிக்கொண்டிருக்க,
அதன் ஆண்கன்றினைப் பிரித்துக் கொணர்ந்த மகிழ்ச்சியையுடையவராய், செருக்கு மிகுந்து
கரிய அடிமரத்தையுடைய வெண்கடம்பின் திரண்ட கிளையினைப் பிளந்து
பெரிதாக உரித்த வெண்மையான நாரால் காலில் வடு உண்டாக இறுக்கிக்கட்டி,
உயரமான கொடிகள் அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழமையான ஊரில்
கள்ளினை விற்கும் நல்ல இல்லத்தின் வாசற்கதவண்டைக் கட்டிப்போடும்,
தம் வேட்டைத் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்கட்குத் தலைவனான புல்லி என்பவனின்
விரிந்த இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள வேங்கடமலையினைத் தாண்டிச்சென்றாலும்
வெகுதூரம் சென்றுவிட்டார் என்றிராமல், அன்பினை மிகவும் செலுத்தி
நம்மை அடைய வந்தன - நெய்தலின்
முறுக்கவிழ்ந்த ஒளியுடைய மலரைப் போன்ற
உயர்ந்த அழகமைந்த குளிர்ந்த கண்களையுடைய நம் காதலியின் குணங்கள் -
					மேல்
#84 முல்லை மதுரை எழுத்தாளன்
மலைக்கு மேலே குலைந்து தோன்றிய அச்சந்தரும் வானவில்லினையுடைய
முரசம் போன்று முழங்குகின்ற மேகம், கடல்நீரை முகந்துகொண்டு
இறங்கிப் பெய்யும் மிக்க மழையுடன் வலப்பக்கமாக எழுந்து உலகத்தை வளைத்துக்கொண்டு
திசையெல்லாம் மறைந்துபோகப் பொழிதலால், கண்ணுக்கினியதாக
பெரிய நிலமெல்லாம் அழகுபெற்ற இன்பமான வேளையில்,
தீக்கங்கு போன்ற சிறிய கண்ணினைக் கொண்ட பன்றி
குறுமணலில் முளைத்திருக்கும் சிறிய புதரில் முதுகு மறையத் தூங்க,
நறுமணம் மிக்க பூக்களைக்கொண்ட முல்லைக்கொடியின் புதிய மலர்கள் உதிரும்
முல்லைநிலத்தை ஒட்டியிருக்கும் அரிய முகப்பினையுடைய வழியிலுள்ள
சிற்றூரில் இருக்கிறாள் ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட நம் தலைவி, நானோ
தீப்பிழம்பு போன்ற தாமரை முதலிய பல மலர்களைத் தலைகீழாக வைத்து
கதிர் அறுப்போர் இறுக்கக்கட்டிய, ஆடுகின்ற முகப்பைக் கொண்ட பெரிய நெற்கதிர்க்கட்டுகளை
கள்ளைக் குடித்த வேலையாட்கள் களங்கள்தோறும் எடுத்துச்செல்லும்
மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசைந்தாடும் அரிய கோட்டைமதிலைப்
பகை மன்னர் அரிய திறையாகக் கொடுக்கவும் , அதனை ஏற்றுக்கொள்ளாமல், மிகுந்த சினத்துடன்
மேன்மேலும் போரில் நடத்திச்செல்லும் படையினைக்கொண்ட
மாலையை அணிந்த மன்னனின் பாசறைக்குள் இருக்கின்றேன்.
					மேல்
#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நல்ல நெற்றி பசந்துபோகவும், பெரிய தோள்கள் மெலிந்திடவும்
உண்ணாமல் இருப்பதால் உண்டான வருத்தத்தால் உயிர் போகும்படி மெலிவுற்று
நாம் இந்த நிலைக்கு ஆளாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் தலைவர்
அறத்தின்பாற்பட்டவர் அல்லர் அவர் என்று பலவாறு மனம்வெறுத்துத்
துயரத்தில் ஆழ்ந்துவிடாதே வாழ்க, என் தோழியே! மலைச் சாரலில்
ஈன்று நாட்பட்ட மெல்லிய நடை வாய்ந்த இளம் பெண்யானைக்கும்
அதன் கன்றுக்கும் பசியைத் தீர்க்கும்பொருட்டு, பசிய கண்களையுடைய ஆண்யானை
மூங்கிலின் முற்றாத இளம் முளையைக் கொண்டுவந்து ஊட்டும்
வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையன் என்பவனின் வேங்கடமென்னும் நீண்ட மலையில்
நல்ல நாள் காலையில் பூத்த மிகவும் இளைய வேங்கைமரத்தின்
மணமுள்ள பூக்களினூடே நுழைவதால் அவற்றின்bb துகள்படியப்பெற்ற புள்ளியையும் கோடுகளையும் உடைய மயில்
அரும்பிய பசிய குருந்த மரத்தின் நறுமணம் கமழுகின்ற கிளையின் மேல் இருந்து
தனது பெடையை அழைத்து அகவுகின்ற, விரைந்து வரும் குளிர்ந்த கார்ப்பருவமே
யாம் திரும்ப வருவோம் என்று அவர் தெளிவாகக் கூறிச்சென்ற
பருவம், இங்கே பார், மேகமும் பரவி வருகின்றது. 
					மேல்
#86 மருதம் நல்லாவூர் கிழார்
உழுந்தப்பருப்பைச் சேர்த்துச் செய்த குழைவான களி உருண்டையோடு
அறுசுவை உணவை உண்ணும் ஆரவாரம் இடைவிடாமல் நிற்க, வரிசையான கால்களுடன்
குளிர்ச்சியான பெரிய பந்தலின் கீழ் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய மணலைப் பரப்பி,
வீட்டிலிருக்கும் குத்துவிளக்கை நடுவில்வைத்து ஏற்றி, அதன்மேல் மாலையினைத் தொங்கவிட்டு,
கும்மிருட்டு நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில்
தீய கோள்கள் தன்னைவிட்டு நீங்கப்பெற்ற (இராகுகாலம் நீங்கிய) பிறைத் திங்களானது
குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்மீனை வந்து சேர,
தலையில் (நிறை)குடத்தை உடையவரும், இடுப்பில் புதிய அகன்ற வாயுள்ள மண்பாண்டத்தை உடையவருமான
பொதுக்காரியங்களை எடுத்துச்செய்யும் ஆரவாரம் மிக்க முதிய மங்கல மகளிர்
முன்னேயும் பின்னேயும் கொடுப்பனவற்றை முறையே கொணர்ந்து கொடுக்கக் கொடுக்க வாங்கி வைக்க,
மக்களைப்பெற்ற, தேமல் படர்ந்த அழகிய வயிற்றையும்,
சிறந்த அணிகலன்களையும் உடைய மங்கல மகளிர் ஒரு நால்வர் ஒன்றாகக் கூடி நின்று
”கற்பொழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் நல்ல பல பேறுகளையும் தந்து
உன்னை மனைவியாகப்பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவளாய் இருப்பாய்” என்று வாழ்த்தி
நீருடன் சேர்த்துத் தலையில் சொரிந்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள்
நிறைந்த கருமையான கூந்தலில் நெல்லுடன் சிந்திக்கிடக்க,
இவ்வாறு மணமகளுக்குரிய நல்ல திருமணச் சடங்குகள் செய்து முடிந்த பின்னர்,
பெருத்த ஓசையுடன் விரைவாக அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து,
"பெரிய மனையாட்டி ஆவாய்" என்று தாய்தந்தையராகிய உறவினர் கைப்பிடித்துக்கொடுக்க,
ஓர் அறையில் ஒன்றாய் இருப்பதற்கான இரவில்,
வளைவாக முதுகை வளைத்து, கோடிப் புடவைக்குள்
தன்னை முடக்கிக்கொண்டு தரையில் படுத்திருந்தவளின் முதுகினைத் தழுவி
அவளை அணைத்துக்கொள்ளும் ஆசையுடன் மூடியிருந்த முகத்தைத் திறந்து பார்க்க,
அஞ்சினவளாய் மூச்ச்சினை இழுத்துப்பிடித்து நிறுத்திப் பின் மெதுவாக விட்டபோது, “உன் மனம்
என்ன நினைத்துக்கொண்டிருந்தது என்று மறைக்காமல் என்னிடம் சொல்” என்று
இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையிலே பின்னர் நான் கேட்கவும்,
சிவந்த அணிகலனாகிய ஒளிவிடும் குழைகள் தனது வளமான செவிகளில் அசைந்தாடும்படி
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை உடையவளாய் நாணம்மிக்கு முகங்கவிழ்ந்து
விரைந்து தலைவணங்கினாள், மானின்
மடப்பம் கொண்ட மதர்த்த பார்வையினையும்
இழுத்துச்சீவிய நெய்பூசிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தினையுடையவள்
					மேல்
#87 பாலை மதுரை பேராலவாயார்
இனிமையான தயிரைக் கடைந்த திரட்சியான தண்டினையுடைய மத்து,
கன்று தன் நாவினால் நக்கிச் சுவைக்கும்படி முற்றத்தில் தொங்கும்,
மரத்து நிழலே பந்தலாக உள்ள, புல்லால் வேயப்பட்ட குடில்களையுடைய
வறுமைப்பட்ட சிற்றூரில் இரவிலே தங்கி,
கொண்டைப்பூவையுடைய நெற்றியையுடைய, உயரமான மரத்தில் அடைந்திருக்கும் சேவலின்
முதற்கூவலில் எழுந்து விடியற்காலையில் புறப்பட்டுப்போய், முன்னே கிடக்கிற
கொடிய பார்வையுள்ள மறவரின் கற்கள் பொருந்திய காட்டரண்களில்
ஒலித்த தண்ணுமைப்பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழுகின்ற ஓசை
அரிய காட்டுவழியில செல்பவரின் நெஞ்சம் திடுக்கிட,
குன்றினை நோக்கிச் செல்லும் பலவாறான பாதைகளில் ஒலிக்கும் காட்டுவழியில்
மிகவும் நீண்ட நேரம் வருந்தி வந்தாய், அதனால்
இனிமேல் மகிழ்ச்சிகொள் நெஞ்சே! வாழ்வாயாக! இருள் நீங்கும்படியாக
விடிவிளக்கு எரிகின்ற, வானளாவிய பெரிய மாளிகையில்
அழகுத்தேமல் படர்ந்த அழகிய முலையினது அழகைப் பாராட்டி,
தாழ்ந்த கருங்கூந்தலையுடைய நம் காதலியின்
நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோள்களையும் அணைத்து - (மகிழ்ச்சிகொள் நெஞ்சே!)
					மேல்
#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்
பழங்கொல்லையாகிய மேட்டுநிலத்தில் செழித்து வளர்ந்த பெரிய செந்தினையின்
உயரமாக வளைந்து நிற்கும் பெரிய கதிர்களைத் தின்பதற்காக, நல்ல திசையிலே
பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும் நிமித்தத்தை ஆராய்ந்து வருகிற இயல்பையுடைய
இளமை பொருந்திய பன்றி வருவதை எதிர்பார்த்து
வலிமையான கையையுடைய குறவனாகிய தினைப்புனம் காப்போன் தனது பரண் மீது கொளுத்திவைத்த
நீண்ட சுடரின் வெளிச்சத்தைப் பார்த்து வந்து நமது
நடுக்கம் தரும் துயரத்தைக் களைந்துபோட்ட நல்லவனாகிய நம் தலைவன்
நடந்துபோனான் போலும் தானாக! குன்றிலுள்ள
பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின்
கன்னங்களில் பெருகி வழியும் அழகிய மதநீரில்
கரிய சிறகினைக் கொண்ட வண்டுக்கூட்டம் ஆரவார ஒலியெழுப்ப,அதனை யாழிசை என்று எண்ணி
பெரிய மலையின் பிளந்துள்ள குகையினில் இருக்கும் அசுணம் என்னும் விலங்குகள் கூர்ந்துகேட்கும்
மூங்கில் நிறைந்த குறுங்காட்டில் பாம்புக‌ள் இற‌ந்தொழியும்ப‌டி நெருங்கி
வளைந்த‌ விரல்களையுடைய கரடி தோண்டும்
சுவ‌டுகள் ப‌திந்துள்ள‌ புற்றுக்க‌ளையுடைய‌, செல்லுதற்கு அரிய‌ வ‌ழியினில் - (நடந்துபோனான் போலும் தானாக!)
					மேல்
#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்
சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய ஞாயிறு உச்சியில் நின்று எரித்தலால்
மிக்க மழைநீர் வற்றிப்போன பேய்த்தேர் என்னும் கானல்நீரையுடைய அகன்ற பாலைப் பரப்பினில்
சினத்தோடு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல்
புற்களும் இல்லாமற்போன வெடிப்பிடங்கள் தனித்திருக்க (அவற்றைவிட்டு)ப் பறந்துபோய், மலையிலுள்ள
கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசை போல மாறி மாறிக் குழறுகின்ற அந்த இடத்தில்,
சிள் வண்டு ஒலிக்கும், சிறிய இலைகளைக் கொண்ட கருவேல மரத்தின்
காய்ந்து முற்றிய நெற்றுகள் உதிர்ந்துவிழ, துணிவெளுப்போரின் 
தொழிலுக்குதவும் பரந்த வெளியிலுள்ள சூடான உவர்மண் எடுத்தது போக மீந்துள்ள
களர்மண் பரந்துள்ள மலைப்பக்கத்தே அமைந்த நீண்ட இடத்தில்,
கொழுப்புள்ள ஊனைத் தின்ற விசைகொண்ட வில்லினரான மறவர்கள்
கருமை பொருந்திய திண்ணிய தோள்கள் பூரிக்க, (துன்புறுத்தி)
சுமைமிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைத் தொடர்ந்து வருகின்ற
செப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களான வணிகரை(துன்புறுத்தி) அவரின் அரிய தலையை வெட்டிய
மிக்க புலவு நாறும் சண்டைக்களத்தில், உடுக்கையினைத் தாழக் கொட்டி
அரிய கலன்களைத் திறையாகப் பெற்றுக்குவித்த பெரும் போர்விருப்பினைக் கொண்ட வெற்றியாளர்கள்
விற்கள் பொருந்திய அரணில் அவரவர் பங்கைப் பிரித்துக்கொள்ளும்
கொல்லையினைக் கொண்ட பெரிய காடுகள் நீண்டு செல்வன என்று எண்ணாமல்
மென்மையான சிவந்த பாதங்கள் வருந்தும்படி நடந்துசெல்லும்
திறம் கொண்டவளோ? அவள்தான், தேனை ஊற்றிக்
கலந்த இனிய பாலினைக் குடிக்கும்படி வருந்திவேண்டவும் உண்ணமறுத்து
மணல் பரப்பிய பந்தலுக்குள் ஓடியாடித்திரியும்
நீண்ட மெல்லிய மூங்கில்போன்ற தோளினையுடைய மாமை நிறம்கொண்ட மகள்.
					மேல்
#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
வயதானவர்களின் நரைத்த தலையைப் போல வெள்ளைத் தலையையுடைய கடலானது
இளம்பெண்கள் விளையாட்டாய்ச் செய்யும் மணல்வீட்டை அழிக்கின்ற,
முறுக்குவிட்டு மலர்கின்ற தாழையையுடைய கடற்கரைச் சோலையையுடைய பெரிய கடல்துறையில்,
ஒருசிலரின் செவிகளில் மட்டுமே பட்டிருந்த உங்கள் சந்திப்பு, பின்னர் எல்லாரும் அறிய அலராக எங்கும் பரவ
வீட்டில் அவளைப் பூட்டிவைத்துவிட்டதை அறியாதவனாய், பல நாள்கள்
வளர்கின்ற இளம் முலைகளையுடைவளை வருத்துகின்ற அழகிய பெருமைமிக்க மார்பினையுடைய,
கலக்கம்கொண்ட உள்ளத்தோடு வருந்துகின்ற உன்னிடம்,
இவ்வாறு சந்திப்பதை நிறுத்திக்கொள் என்று நான் எப்படிச் சொல்வேன்?
அரிய துடிப்பான தெய்வங்கள் இருக்கும் செல்லூரின் கிழக்கிலிருக்கும்,
பெரிய கடல்போல முழக்கத்தையுடையதாகி, புதிய வருவாயினை உடைய,
இரும்பாற் செய்த ஆயுதங்கள் தம்மிடம் உண்டாக்கிய தழும்புகளை உடைய முகத்தை உடையவராகிய
அஞ்சாமையையுடைய கோசருடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுத்தாலும்
சரியாகும் என்று கொள்ளமாட்டார் எம் வீட்டார்
மணக்கும் நெற்றியினையுடைய பெண்ணான இவளின் அணிகலன்களுக்கு விலையாக.
					மேல்
 



#91 பாலை மாமூலனார்
ஒளி சிந்தும் பகலினைக் கொடுத்து உதவிய பல கதிர்களைக்கொண்ட ஞாயிறு
வளம் பொருந்திய பெரிய மலையின் பயன்கள் எல்லாம் கெட்டுப்போகும்படி சுட்டுப்பொசுக்குவதால்
அருவிகள் இல்லையாகிப்போன பெரிய மலைச்சாரலில்
தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறைகின்ற சுனையினைக் கையினால் துழாவியும் நீராகிய பயனைக் காணாமல்
அங்கு உலர்ந்து கிடக்கும் பாசியைத் தின்ற பசிய கண்ணையுடைய ஆண்யானையானது,
இயக்கம் ஓய்ந்து போகும்படியான பசியினையுடைய தனது பெண்யானையோடு ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடப்ப 
மூங்கில்களின் கணுக்கள் உடையும்படி காய்கின்ற வெயில் தகிக்கின்ற அகன்ற பாலைப் பரப்பிலே
கிட்டுதற்கரிய பொருள்மீது கொண்ட ஆசையால் நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்றாரெனினும்
நம் மீது மிகவும் அதிகமான அன்பினையுடையவர், தோழியே! கரிய நிறமுடைய
ஆண்மான்கள் படுத்துக்கிடக்கும் பரற்கற்களையுடைய உயரமான கற்குவியலில்
கொடுமை நிறைந்த மழவர்கள் களவு செய்யும் தொழிலுக்காகக் கூடிய
நீண்ட அடிமரத்தைக் கொண்ட ஆசினிப்பலாவையுடைய ஒடுங்காடு என்னும் ஊருக்கு அப்பால்
இழுத்துக் கட்டிய முழவினையுடைய குட்டுவன் என்பவன் பாதுகாத்தலால்
பசி என்பதை அறியாத மருதவளம் மிக்க ஊர்களையுடைய,
வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேய்ந்த தாமரையை வெறுக்குமானால்
முடத்தன்மை மிகுந்த பலாவினது கொழுவிய நிழலிலே தங்கும்
குடநாட்டினையே பெறுவதாயிருந்தாலும் அங்குத் தங்கமாட்டார்,
இளமை வாய்ந்த மான் போன்ற பார்வையையுடையவளே! உன்னுடைய  மாட்சிமைப்பட்ட அழகினை மறந்து
					மேல்
#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்
உயர்ந்த மலையின் சரிவை ஒட்டிய சமவெளியிடத்தில் பார்ப்போர் கண்கள் குருடாகும்படி மின்னி
மிகுந்த மழையைப் பொழிந்த பாதி இரவாகிய இருள்நேரத்தில்
யானையை அது நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும்
சிவந்த கண்களையும் உடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலுக்கு
வரவேண்டாம், வாழ்க நீர், ஐயனே! நேர்த்தியான முன்கையினையும்
நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோளினையும் உடைய இவளும் நானும்
தினைப்புனத்தைக் காவல்காக்கக் கருதியுள்ளோம், நாளைப் பகலில்
மந்திகளும் ஏறி அறிந்திராத மரங்கள் செறிந்த (இருளடர்ந்த) காட்டில் 
ஒளிவிடும் செங்காந்தள் மலர்ந்திருக்கிற அந்த இடத்தில்
குளிர்ச்சியாய் நிறைந்து அருவிகள் விழும் தாழ்வான சுனையின் ஒரு பக்கத்தில்
இடி சினந்து முழங்குதலால் வலி அழிந்த பாம்பு உமிழ்ந்த
சிறந்த மணியாகிய விளக்கொளியின் வெளிச்சத்தில் பெற்றிடுவாய்
இவளின் இருண்ட மெல்லிய கூந்தலே படுக்கையாகக்கொண்ட இன்பமான தூக்கத்தை.
					மேல்
#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நம் உறவினர்களைத் துன்பம் போக்கித் தாங்கவும் மேலும் சுற்றத்தார்கள் நன்கு உண்ணவும்
சுற்றம் அல்லாதவர் சுற்றத்தார் போல நம்மொடு பொருந்தி நடக்கவும், 
பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதான ஊக்கம் கொண்டு, ஆசை மிகுந்து,
ஆத்திமாலை சூடிய பகைவரைக் கொல்லும் போர் வன்மை மிக்க சோழருடைய
அறம் பொருந்திய நல்ல அரசவையினையுடைய உறையூரைப் போன்ற
பெறுதற்கரிய நல்ல அணிகலன்களை எய்தி, யாவரும் விரும்பும்
செய்வதற்கரிய பொருளீட்டும் வினையை நாம் முடித்திருக்கிறோம், எனவே
பகை அரண்கள் பலவற்றையும் வென்ற வலிமையையுடைய படைகளையுடைய
வாடாத வேப்ப மாலையைத் தரித்த பாண்டியனின் மதுரையின்
காலைக் கடைவீதியைப் போல் மணக்கும் நறிய நெற்றியினையும்
நீண்ட கரிய கூந்தலையும் உடைய மாநிறத்தவளான நம் தலைவியை - 
மலையைக் குடைந்து செய்ததைப் போன்ற வானளாவிய நீண்ட மாளிகையில்
நுரையை முகந்து வைத்ததைப் போன்ற மென்மையான பூக்களாலான படுக்கையையுடைய,
உயர்ந்து நிற்கும் கட்டிலில், உயரமான குத்துவிளக்கின் வெளிச்சத்தில்
நன்மை பொருந்திய நம் மார்பினில் தலைவியின் மார்பகத்து பூண்கள் அழுந்தித் தடம்பொறிக்க -
தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே! வரி பொருந்திய நெற்றியினையும்
வேட்கை மிக, வடிந்து வாய்க்குள் புகும் மதநீரையும்,
கூற்றுவனைப் போன்ற வலிமையோடு, நிலத்தின் மேல் சுருட்டி எறிந்து, நெருங்கிவந்து
ஆட்களைப் பிடித்துக்கொள்ளுதலில் தப்பாத அச்சம்தரும் நீண்ட கையினையும் உடைய
கடுமையான களிற்றியானைகளையும், நெடிய தேர்களையும் உடைய சேரனின்
செல்வம் மிக்க சிறந்த அகன்ற நகரனான கருவூரின் நீர்த்துறையின்
தெளிந்த நீர் உயர்ந்த கரையின்கண் குவித்துள்ள
குளிர்ந்த ஆன்பொருநை ஆற்றின் மணலைக்காட்டிலும் பலமுறை -(தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே!)
					மேல்
#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்
தேன் அடைகள் தொங்குகின்ற உச்சிமலையின் பக்கத்தில் அடந்து வளர்ந்த
குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள், செழிப்புடன்
வானத்தில் மீன்கள் பூத்ததைப் போலப் பூத்துக்கிடக்கும் நள்ளிரவாகிய இருளில்
ஆட்டுக்குட்டிகளை ஒன்றுசேர்த்த (மழைக்கு )ஓலைப்பாய் மறைப்பை முதுகுப்பக்கம் கொண்ட இடையன்
குளிர்ச்சியான, மணங்கமழும் முல்லைப்பூவைத் தோன்றிப்பூவுடன் கலந்து
வண்டுகள் மொய்க்கும்படி தொடுத்த நீர் ஒழுகும் தலைமாலையை அணிந்தவனாய்
மெல்லிதாக எரியும் கொள்ளி உள்ளங்கையைப் பொசுக்க (மழையில் நனையாதபடி உள்ளங்கையால் மறைத்தலால்)
குள்ளநரியை ஓட்டுவதற்கு மிக்க இருளினூடே செய்கின்ற நீண்ட ஒலியானது,
சிறிய கண்களையுடைய பன்றிகளின் பெரிய கூட்டத்தை விரட்டுவதற்கு
முதிர்ந்த தினைப் புனத்துக் காவலாளிகள் பன்றிகள் வரும் காலத்தை எண்ணியிருந்து ஊதுகின்ற
கருமையான கொம்பின் ஓசையுடன் சேர்ந்து வந்து ஒலிக்கின்ற
புன்செய்க் காடுகள் உள்ள பகுதியில் இருக்கிறது, அன்பு கலந்த
விருப்பம் மிக்க மென்மைத்தன்மையையும்
கரிய பலவாகிய கூந்தலையும் திருத்தமான அணிகலன்களையும் உடைய தலைவியின் ஊர்
					மேல்
#95 பாலை ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
கொஞ்சம் கொஞ்சமாக என் நெற்றியும் பசந்துகொண்டுவருகிறது; மெலிந்து
தேய்ந்துபோகிறது என்னுடைய மாந்தளிரைப் போன்ற உடம்பும்; 
ஊரிலுள்ளோர் பலரும் அறியும்படி விளங்குகின்ற எனது இந்த அவலமும்
என்னுடைய உயிரைக் கொண்டு போவதில்லாமல், நினைத்துப்பார்க்கும்போது
வேறு என்ன செய்யும்? வாழ்க தோழியே! பொரிந்துபோன அடிமரத்தையும்,
கொப்புளம் போன்ற குமிழிகளையுடைய நடுமரத்தையும் கொண்ட இலுப்பை மரத்தின் குவிந்த குலையிலிருந்து கழன்ற
ஆலங்கட்டியைப் போன்ற உள்ளே துளையுள்ள திரளான பூக்களை
பாதையில் செல்கின்ற வழிப்போக்கர் நீண்ட வழியில் தடைப்பட்டுத் தங்கும்படி,
குட்டிகளை ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவருகின்ற
கொடிய வழிகள் பலவற்றைக் கடந்துசென்ற நம் தலைவருக்காக நாம் மனம் இரங்குதல் இயல்பு என்று கருதாமல்
பழி தூற்றுதலையே விரும்புவாராய், இந்த ஊரின்
பாழாய்ப்போன பெண்கள் இன்னாத சொற்களைக் கூறுவது
நல்லதல்ல என் மகளுக்கு என்று கடவுளை வேண்டித்தொழுது
நமது நிலையையும் உணர்ந்துகொண்டு, யாதும் சொல்லாமல் அடங்கிய கோட்பாட்டினையுடைய
நம் அன்னைக்கு முன்னால் நாம் இந்தக் காதல்வாழ்க்கையில் ஈடுபடல் எவ்வாறு இயலும்?
					மேல்
#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கள்ளுண்ட மொந்தை என்ற மண்கலம் கழுவப்பட, அந்த நீரை உண்ட இறாமீன் செருக்குற்று
பூட்டிய நாண் அறுந்துபோன வில் தெறிப்பது போல் நெல்கூடுகளின் மீது துள்ளி விழுகின்ற
வயலோரப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது
அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடி
அருவியாய் வந்து விழும் நீரின்மேல் படர்ந்த ஆம்பலின் அகன்ற இலையைச் சுற்றிக்கொள்ள
அசைந்து வரும் வாடைக்காற்று அதனை விட்டுவிட்டுத் தூக்குவதால், அந்த இலை கொல்லனின் ஊதுலையில்
விசைத்து இழுத்துவிடும் தோலாலான துருத்தியைப் போன்று புடைத்துச் சுருங்கும்
வயல்களையும் அழகிய தோட்டங்களையும் உடைய, காஞ்சிமரங்கள் மிக்க ஊரையுடைய தலைவனே!
ஒளிரும் வளையல் அணிந்த பரத்தை மகளிருள்ளே நீ பெரிதும் விரும்பி
மணந்து கொண்டாய் ஓர் இளையவளை என்கின்றனர், இந்தப் பேச்சு
செம்பொன்னாலான சிலம்பினையும், செறிவான தொடையினையும்
அழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் உடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
பெருமை தங்கிய யானையையும், வெல்லும் போரினையும் உடைய சோழர்
வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்ற ஊரின் போர்க்களத்தில்
சேர, பாண்டிய மன்னராகிய இரண்டு பெரும் வேந்தர்களும் போர்செய்து களத்தில் மடிய,
ஒளிர்கின்ற வாளினால் செய்த நல்ல போரினை வென்ற அந்த நாளில்
அம்மன்னருடைய களிற்றியானைகளைக் கைப்பற்றியபொழுது எழுந்த ஆரவாரம் போல
இவ்வூரில் பலர் வாயிலும்விழுந்து எங்கும் அலர் எழுகின்றது.
					மேல்
#97 பாலை மாமூலனார்
கள்ளிக்காட்டிலேயுள்ள, புள்ளிகளான பொறிகளையுடைய கலைமானை
அதன் வறண்டிருக்கும் அழகிய கொம்பு உதிர்ந்துபோகுமாறு, அதன் ஓட்டத்தை வென்று, (கொன்று தின்ற)
புலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுகள் கழன்ற கடும் முடைநாற்றமுள்ள தசை கிடக்குமிடத்தில்
இரவில் அரணிலுள்ளோர் அலறும்படி அவர்களைக் கொன்று, தாம் கைப்பற்றிய ஆநிரைகளைப் பகிர்ந்துகொண்டு
பெரிய பாறைகளின் இடுக்கில் தசையினை அறுத்துத் தின்னும்
கொலைசெய்யும் வில்லினையுடைய ஆடவரைப் போல, பலவும் ஒன்றுசேர்ந்து
பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகளும் வந்து சூழ்ந்துகொள்ளும்
கடத்தற்கரிய காட்டுவழியைக் கடந்துசென்ற கொடுமையாளரான நம்தலைவருக்காக, நாள்தோறும்
பெரிய மூங்கில் புதரினூடே ஆராய்ந்து பார்த்து அறுத்தெடுத்துக் கொண்ட
நுணுகிய கணுக்களையுடைய சிறிய கோலைப் பிடித்த வளைந்து இறங்கும் கையையுடைய விறலியரோடு
பாணர்களைப் பாதுகாக்கும் அன்பினையும், கழலும் தொடியினையும்
கள்ளுண்டு மகிழும் இருக்கையினையும்  உடைய நன்னன் வேண்மானது
பசலைக்கொடி படர்ந்த வேலியினையுடைய வியலூர் என்னும் ஊரினைப் போன்ற உன்னுடைய
பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வாட, பலவாறாக நினைத்துக்கொண்டு
துன்பத்திலாழ்ந்திட வேண்டாம் என்று சொல்கிறாய், தோழியே! என்னுடைய
கண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ? குரவமரங்கள் பூத்து,
பனிக்காலம் நீங்கிய அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலத்தில்
அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிலேயுள்ள
துறையை அழகுசெய்யும் மருதமரங்களோடு மாறுபாடு தோன்ற உயர்ந்து
நீண்டு தொங்குகின்ற தளிரால் அழகு செய்யப்பெற்ற பெரிய கிளைகளையுடைய மாமரங்களினது
பூங்கொத்துகள் செறிந்த புதிய மலர்கள் நெருங்கிய கிளைகளில்
புகைபோன்ற அழகிய வெண்முகில்கள் தவழ,
அவ்வின்பத்தை நுகரும் குயில்கள் கூவும் குரலைக் கேட்போருக்கு - கண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ?
					மேல்
#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
குளுமையுள்ள மலையில் உயர்ந்துநிற்கும் வளம் பொருந்திய உச்சிமலைச்சாரலில்
வெறுப்பில்லாத கொள்கையுடன் நம் தலைவர் நமக்கு உவந்தளித்த
அவரது இனிய உள்ளம் இப்பொழுது இன்னாதது ஆகிவிட்டதால்
நாம் வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக நம்மிடம் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தமானது
அந்தத் தெய்வம் உறையும் மலையினையுடையவனின் மார்பினைச் சேர்வதால்மட்டுமே தணியுமென்பதை
அறியாதவளாயிருக்கிறாய் தாய், நீண்ட, திரட்சியான,
செறிவான, ஒளிருகின்ற பிரகாசமான வளையல்கள் கழன்றுவிழும் நிலையைப் பார்த்து
செயலற்ற உள்ளத்தினளாய்க் குறிசொல்லும் பெண்களை விசாரித்ததினால், முதுமை வாய்ந்த
பொய்யுரைப்பதில் வல்ல அந்தப் பெண்கள் மூங்கிலரிசியைப் பரப்பி வைத்து
இந்நோய் முருகனால் ஏற்பட்ட அரிய வருத்தம் என்று சொல்ல, அதனை நம்பி,
ஓவியம் போன்ற, சிறந்த தொழில்திறத்தால் புனையப்பட்ட நல்ல மனையில்
பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்பெறும் சிறந்த அழகானது
முன்பு போல் சிறப்புறட்டும் என் மகளுக்கு எனத் தெய்வத்தைத் தொழுது போற்றி
ஒன்றாய்ச்சேர்ந்த பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, வெறியாடும் களத்தை அமைத்து
ஆடுவதற்கேற்ற அழகுசெய்த அகன்ற பெரிய பந்தலில்
வெண்மையான பனந்தோட்டினைக் கடம்பமலருடன் சூடி, கேட்பதற்கினிய‌ பாட்டினை
மெலிதாக அமைந்த‌ தாள‌த்தோடே கூட்டி, கையுயர்த்திக் கூப்பி
முருகக்கடவுளின் பெரும் புகழினை ஏற்றிப்புகழ்ந்து, வேலன்,
வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்ல‌வ‌னாலே
ஆட்டப்ப‌டுகின்ற‌ பொறி அமைக்கப்பட்ட பாவையைப் போல ஆடுவதை விரும்பினால்
அப்பொழுது ந‌ம் நிலை என்ன ஆகுமோ? தோழியே! அறிவு மயங்கிப்
பித்துப்பிடித்த இந்தப் பெண்களுக்கு மேலும் துன்பமே உண்டாகும்படி
வேலன் வெறியாடிய பின்னரும்; எனது வாடிப்போன மேனி
முன்பு போல் சிறப்புற விளங்காவிட்டால், இந்த மறைவான காதல் ஒழுக்கம்
பலரும் தூற்றும்படி அனைவருக்கும் தெரியாமற்போவது அரிதான காரியம், அல்லாமல்
நம் தலைவரான அறிவாளி நமக்குச் செய்வித்த இந்த அல்லலைக் கண்டு மனமிரங்கி
மணங்கமழும் நெடுவேளாகிய முருகன் நமது முந்தைய அழகைத் தந்தருளினால்
செறிவாக வளையணிந்த தலைவிக்கு ஏற்பட்ட துயரம் தம்மாலேஅல்லாமல் வேறொன்றால் ஏற்பட்டது என்று
காடுகள் பொருந்திய நாட்டினையுடையவன் கேள்விப்பட்டால்
நான் உயிரோடிருப்பது அதனைக்காட்டிலும் அரிதானதாகும்.
					மேல்
#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் போன்ற வரிகளையுடைய புலியின், விலங்கினைக் கொன்ற குருதிபடிந்த நகத்தைப் போன்ற
இரத்தச் சிவப்பான மொட்டுகள் மலர்ந்த முள் நிறைந்த முருக்க மலரின்
வண்டுகள் சூழ்ந்த வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, மதர்த்த அழகையும்
சிறந்த அணிகலன்களையும் உடைய இளம்பெண்களின் பூண் அணிந்த முலையைப் போன்ற
அரும்புகள் கட்டவிழ்ந்த கோங்க மலரோடு கூடி, அரும்பிய
புனலிப் பூக்கள் பரவப்பெற்று, அழகிய குளிர்ச்சியுடைய பாதிரியினது
அழகிய கிளையிலிருந்து உதிர்ந்த மலர்களும் பரவப்பெற்று, பூக்கும் பருவத்தை எதிர்ந்த
வெண்கடம்ப மலரொடு கலந்து, வழிபாடு செய்வதற்குரிய
தெய்வம் உறைகின்ற திருக்கோயில் போல மணம் கமழுகின்ற பல்வேறு மலர்களும் உள்ளதால்
நாம் செல்லும் இக்காடு பெரிதும் விரும்பத் தக்கதாய் இருப்பதைக்
காண்பாயாக, வாழ்க, இளம்பெண்ணே! உன் தந்தை
பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் போரிட்டதால் பூண்கள் சிதைந்துபோன கொம்பினையுடையனவும்
பெண்யானைகள் சூழப்பெற்றனவும் ஆகிய களிறுகளைப் போலத் தோன்றும்
சிறிய, பெரிய அளவினையுடைய குன்றுகளையும் கொண்டிருக்கிறது - (காண்பாயாக).
					மேல்
#100 நெய்தல் உலோச்சனார்
அரைக்கப்பெற்று இனிதாக அமைந்த சந்தனத்தைப் பூசி
சிறப்புற அணியப்பட்ட மாலையினையுடைய மார்பினையுடையவனாய்
உனது நல்ல மார்பில் தடம் உண்டாகும்படி தழுவி, நீ வந்து
இரவினில் போவது எனக்கும் இனிமையாகத்தான் இருக்கிறது;
பெரும் அலைகளின் முழக்கத்துடன் அதன் இயக்கமும் ஓய்ந்து இருந்த
மேகங்கள் சூழ்ந்த இரவில், கரிய கடலில் (தமது தோணிகளில்) கொளுத்திவைத்த
நிரைய மீன்களைப் பிடிக்கும் பரதவரின் இருளை நீக்கும் ஒளிபொருந்திய விளக்குகள்,
புறங்கொடாத கொள்கையினைப் பூண்ட வேந்தனின் பாசறையில்
அசைகின்ற இயல்பையுடைய யானைகளின் அழகிய முகங்களில் கட்டிய
பொன்னாலான முகபடாங்களின் ஒளிவிடும் சுடர்களைப் போன்று தோன்றும்,
பாடிவருவோரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் வள்ளன்மை மிக்க கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பவனின், விரிந்த மலர்க்கொத்துக்களையுடைய
புன்னைமரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையினில் உள்ள
புதிதாய் வந்த நாரையின் கூட்டம் ஒலித்ததைப் போன்ற
பழிச்சொற்கள் ஓங்கி எழுந்தன, குளிர்ச்சியாய்ப் புலர்ந்திடும்
இருள்தங்கிய விடியற்காலத்தில் சென்ற எருமை
நெய்தலின் அழகிய புதுமலர்களை விருப்புடன் தின்னும்
தாழை வேலியையுடைய அழகிய தோட்டங்கள் அமைந்த எம்முடைய ஆரவாரமுடைய ஊரில் - 
					மேல்
 



#101 பாலை மாமூலனார்
நான் கூறுவதைக் கேள், வாழ்க, தோழியே! இப்பிறப்பில்
நன்மை செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிற
தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்த்துப்போய்விட்டதோ?
செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுற்றிக்கொண்டு சுருண்டுபோயுள்ள
பிடரியை மறைக்கும் தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவர்கள்
வாய்க்குப்பகையாகிய இருமலைத் தவிர்க்க புற்றுமண்ணை வாய்க்குள் அடக்கிக்கொண்டு, கடும் திறன்வாய்ந்த
தீயை உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பிடித்துக்கொண்டு
வெண்ணெய் வரக் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் இருக்குமிடத்திற்கு
பாதங்களை மறைக்கும் செருப்புகள் ஒலியெழுப்பச் சென்று
காவலையுடைய இடத்தில் கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளைக் கொள்ளையடித்தவர்களாய்
அக் கூட்டத்தைக் கூண்டோடு ஓட்டிக்கொண்டுபோகும் அகன்ற வெளிகளைக் கொண்ட பெரிய காட்டில்,
அகன்ற வானம் என்னும் கடலுக்கு ஓடம் போன்ற
நடுப்பகலில் காய்ந்த பலகதிர்களையுடைய ஞாயிற்றின்
வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்றுவரும் மேல் காற்றினால்
உறுதியற்ற அடிமரத்தினைக் கொண்ட முருங்கையின் முதிர்ந்து கழியும் பல மலர்கள்
குளிர்ந்த முகிலினின்றும் உதிருகின்ற ஆலங்கட்டிகளைப் போலப் பரவி உதிருகின்ற
நடுக்கம்தரும் பல மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு
வெறுக்கத்தக்க செயலை நாம் செய்யவில்லையே - (நாம் நன்றுதானே செய்தோம், அவர் பிரிந்து சென்றாரே!)
					மேல்
#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
பிடரிமயிரினையுடைய சிங்கம்போன்ற வலிமையோடு, உயர்ந்து வளர்ந்த தினைப்பயிரைக்கொண்ட பெரிய புனத்தின்
பரண்மேலிருக்கும் குறவன் கள்ளினை உண்டு மகிழ்ந்திருக்க,
பூசிய மயிர்ச் சந்தனத்தையுடைய பரந்த கரிய தனது கூந்தலை
மெல்ல இயங்குகின்ற காற்றானது புகுந்து புலர்த்த, கையைத் தூக்கி
தழைத்து நீண்ட அம்மயிரினைக் கோதியவளாய், கொடிச்சியானவள்
பெரிய மலையின் பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணைப் பாட
தினையையும் தின்னாமல், இருந்த இடத்தைவிட்டு நகராமல்
தூக்கம் வரப்பெறாத தனது பசிய கண்களும் தூக்கம் வரப்பெற்று, விரைவாக
முரட்டுத்தனத்தையே மிகவும் விரும்புகின்ற இளைய களிறு தூங்குகின்ற நாட்டையுடைய நம் தலைவன்
சந்தனம் பூசிய தனது மார்பினில் அழகிய வண்டுகள் ஒலிக்க,
மார்பிலும் தலையிலும் மாலைகளைச் சூடியவனாய், வலக்கையினில் வேலைப் பிடித்தவனாய்
காவலர் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து, மெதுவாக,
தாழ்ப்பாள் போடாத கதவினருகே தங்கி, உள்ளே புகுந்து
வருந்துகின்ற துன்பம் நீங்க அணைத்து, தோளின் மேல் பொருந்தி
இனிய சொற்களைக் கலந்து பேசிவிட்டுச் சென்றான், தோழியே!
நாம் ஏனோ காண்கின்றோம், இன்று ஒருநாள் அவன்
வந்து நமக்கு அருள்செய்யாமற்போய்விட்டதால், ஊராருக்குத்தெரிந்து அவர்கள் பழித்துப்பேசும்படியாக ஆகி
அனைவரும் கூடி மகிழ்ச்சிகொள்வதற்குக் காரணமாக, 
கரியவாய்ச் சூழ்ந்திருக்கும் கூந்தல் புரளும் நமது ஒளிவிடும் நெற்றியில் இந்தப் பசலையை (நாம் ஏனோ காண்கின்றோம்)
					மேல்
#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழலே இல்லாத அகன்ற பாலை நிலைப்பரப்பினில் வல்லூறினால் பாய்வதற்குக் குறிவைக்கப்பட்ட
ஒளிவிடும் தலையினையும் நுணுகிய சிவந்த நாவினையும்
அள்ளித்தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் உடைய
அழகிய குரும்பூழ்ச் சேவலானது, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்க எண்ணி
தான் மறைந்திருந்த உலர்ந்த புதர் தனித்துக்கிடக்கும்படி பறந்து போய், தன் முன்னாலிருக்கும்
வன்னிலத்தைச் சார்ந்திருந்த மிகவும் பழைமையான பெரிய மன்றத்தில்
ஆறலை கள்வர் வழிப்போக்கரை எதிர்பார்த்து தங்கியிருக்கும் பசுக்களையுடைய சிற்றூரில்,
குடியிருப்போர் விட்டுப்போன உயர்ந்த நிலையினையுடைய பெரிய பாழ்மனையின்
கூரை இறப்பின் நிழலில் ஒரு பக்கமாய்த் தங்கி, தனிமையால் பெருமூச்செறிந்திருக்கும்
கொடுமையான பகைப்புலத்தின் கடத்தற்கரிய வழிகளைக் கடந்து, தம்மிடத்தே
கடமையாக வந்து சேர்ந்த பொருள் ஈட்டும் வினையில் மீண்டும் சென்றார் என்று
நள்ளென்ற நடுயாமத்தில் நமக்கு உற்றதுணையாக இருக்கும் பொருட்டு
நம்முடனே இப்பசலை நோயையும் இதுவரை பொறுத்திருந்து, இப்போது அவரோடு
தானே போய்விட்ட நமது பெண்மை நலத்தை
இனி நமக்கு அருள மாட்டாரோ, நாம் விரும்பும் நம் தலைவர்.
					மேல்
#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்தன் தனது போரினை முடித்த பின்னர், திசைகள் எல்லாம் பறந்து
கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
வெற்றி பொருந்திய வேலினையுடைய இளைஞர் இன்பம் அடைய, தேர்ப்பாகன்
கடிவாளத்தை இழுத்துப் பிடித்துச் செலுத்தாமல், தாற்றுக்கோலைக் குதிரைகள் மீது பாய்ச்சினால்
கடல்சூழ்ந்த உலகமே அதன் ஓட்டத்திற்கு ஆற்றாத
மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில்
அதன் வளைவான கொடிஞ்சி பொலிவுறுமாறு ஏறி, புதர்களில் படர்ந்த
பூக்களையுடைய கொடியின் அவரையின் உள்ளீடற்ற பிஞ்சுகளின் பொய்த்தோல் போன்ற
உள்ளீடில்லாத‌ வ‌யிற்றையுடைய‌ வெள்ளாட்டின் வெண்ணிற‌மான‌ குட்டிக‌ள்
ம‌ய‌ங்கி விழுந்தாற் போன்று தாழ்ந்து தொங்குகின்ற‌ பெரிய‌ செவியையுடைன‌வாய்
பரட்டைத்தலையையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று, ம‌ன்ற‌த்தின் ப‌க்க‌த்திலுள்ள‌
க‌வ‌டுப‌ட்ட‌ இலைக‌ளையுடைய‌ ஆத்திம‌ர‌த்தின் அழ‌கிய தளிரைக் கடிக்கும்
சிறிய ஊர்கள் பல பின்னே போய் மறைந்திட, மாலைப்பொழுதில்
இனியது ஒன்றைச் செய்தாய், எம் பெருமானே, நீர் வாழ்க!
நீர்வடியும் கண்ணையுடையவளாய், பலவற்றையும் எண்ணி வெறுத்து வீட்டிலிருக்கும்
ஆராய்ந்தெடுத்த வளையலையுடைய தலைவி தன் கூந்தலில்
மலர்ச் சரங்களை அணிந்துகொள்ளும்படி சூட்டிவிட்டாய்.
					மேல்
#105 பாலை தாயங்கண்ணனார்
அக‌ன்ற‌ பாறை அருகில் அரும்புக‌ள் முதிர்ந்த‌ வேங்கையின் ம‌ல‌ரோடு
ஒளிவிடும் ப‌ச்சிலையையும் கலந்து தொடுத்த‌ மாலையைச் சூட்டிவிட்டு, மென்மையாக
நல்ல மலைநாடனாகிய தன் காதலன் தன்னைப் பாராட்ட (அவனுடன் போவது)
எப்படித்தான் அவளால் முடிந்ததோ? தேனை ஊற்றி,
மணிகள் பதித்த பொன்னாலான பாத்திரத்தில் இனிய பாலினை எடுத்துக்கொண்டு
செவிலித்தாய்மார் ஊட்டிவிடவும், அதனை உண்ணாதவளான அவள்,
நிழலுள்ள குளம் போல உயர்ந்த மாடங்களைக் கொண்ட எம் மாளிகையிலுள்ள
பெரிய செல்வத்தையும் பொருட்டாக நினைக்கவில்லை; தன் காதலனின் பொய்யான பேச்சில் மயங்கி,
பந்தை அடிப்பதைப் போன்ற தாளத்துக்குப் பொருத்தமான பலவகையான அடியிட்டு நடத்தலையும்,
மெல்லென்ற ஓட்டத்தையும் உடைய குதிரைகளையும், பெரிய வேற்படையினையும் உடைய எழினி என்பவனின்
ஒருகாலத்திலும் கெட்டுப்போகாத வலிமையினால் தமக்குப் பணித்த தொழிலைச் செய்து முடிக்கும் பொருட்டு
மிகுந்த தீப்போன்ற கதிர்கள் பரவிப் பாறைகள் சுடுகின்ற காட்டில்
தமது தொழிலில் வல்ல அம்புகளைக் குறி தப்பாமல் தொடுப்பதில் சிறந்த மறவர்கள்
தேனால் ச‌மைத்த‌ ந‌றிய‌ க‌ள்ளைப் ப‌ருகிய‌த‌ன் செருக்கினோடு ப‌கைவ‌ர்க‌ளைப் போர்க்க‌ள‌த்தில் வீழ்த்தி வென்று
பருத்த மென்மையான மடியினையுடைய, காளைகளோடு கூடிய ஆனினத்தைக் கைப்பற்றிக் கொண்டுவரும்
பகைமை நிறைந்த பலவாகிய வழிகளில் - ம‌லைக‌ள் வெடித்துப் பிளவுகளாய்த் திறக்குமளவிற்கான வேனில் ப‌ருவ‌த்தில் -
போவது - (எப்படித்தான் அவளால் முடிந்ததோ?)
					மேல்
#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
தீ கொழுந்து விட்டாற்போல இதழ் திறந்து மலருகின்ற தாமரை மலர்களையுடைய வயல்களில்
நெல்லைப் பொரிக்கும்போது பொரிகள் தெரிப்பது போலத் துள்ளுகின்ற பலவாகிய சிறிய மீன்களைப்
பற்றித் தின்பதற்காக, மணமுடைய பசிய இலையின்மேல் மெல்ல மெல்ல
பறக்க முடியாத வயதான மீன்கொத்திப்பறவை அசைந்து வந்து இருக்கும்
நீர்த்துறை பொருந்திய மருதநிலத்துத் தலைவனின் மனைவி, தன் கணவனை
நம்முடன் இணைத்துப்பேசிப் பிணக்கம் கொள்கிறாள் என்கிறார்கள்; நாம் அப்படிச்
செய்யவில்லையென்றாலும், அவள் கூறும் பழியிலிருந்து தப்பிக்க முடியாதாகையால்
செறிவான வளையல்கள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு கொஞ்ச நேரம் அந்த இடத்தில்
சுற்றித்திரிந்துவிட்டு வருவோம், செல்லலாம் தோழியே!
ஒளிர்கின்ற வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன்
குற்றமில்லாத படைப்பயிற்சியுடன் தான் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களில் வாகைசூடும்போதெல்லாம்
களிற்றியானையைப் பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற
தண்ணுமையினது கண்ணைப்போல (அவள்) அடித்துக்கொள்ளட்டும் தன் வயிற்றை
					மேல்
#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ இவளை உடன் கொண்டுசெல்லும் விருப்பத்தினை அவள் கேட்கும்போதெல்லாம் பலவற்றையும் நினைந்து;
அன்புடைய தனது நெஞ்சத்தினுள்ளே அந்நினைவுகளை ஆராய்ந்து பார்த்து, துன்பச்சுமையால் மெலிந்துள்ள
எனது நெஞ்சத்தின் துன்பத்தை நீக்கும்பொருட்டு, (உன்னுடன்),
கருங்கல்லாலான அகன்ற பாறையில் கிடத்தி, வயிற்றுப்பகுதியைத் தின்றுவிட்டு
பெரிய புலி விட்டுச்சென்ற ஆண்மானின் காய்ந்துபோன தசையை,
வழிப்போக்கரான புதியவர்கள் கண்டு மகிழ்ச்சிகொண்டு, அவ்விடத்தில்
காற்றால் ஒலிக்கின்ற முங்கிலில் விளைந்த நெல்லின் அரிசியுடன் சேர்த்து
பசுமாடுகள் கிடைபோட்டிருக்கும் இடத்தில் கிடைக்கும் தயிரை ஊற்றிச் சமைத்த
வெண்மையான கொழுப்பை உருக்கிக் கூட்டிய‌ மிக‌வும் வெண்மையான‌ சோற்றினைப்
புள்ளிகளைக்கொண்ட அடிமரத்தையுடைய தேக்கின் அகன்ற இலையிலிட்டு உண்ணும்,
கல்வியறிவில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயைடைய வடுகமறவரின்
வலிய ஆண்மை விளங்குகின்ற கடத்தற்கரிய போர்க்களங்களையும் கடந்து சென்று, (துன்பம் மிக்கு)
சரிந்து விழும் மண்ணினால் ஏற்படும் தீங்குக்கு அஞ்சும்படியான ஒற்றையடிப் பாதையில்
இன்னாததான ஏற்றத்தில் ஏறும்போது வழுக்கி விழுந்து, கால்கள் மடங்கிக்கொண்டு (துன்பம் மிக்கு)
தன்னந்தனியே கிடக்கும் உடல்வலிமை வாய்ந்த பொதி சுமக்கும் காளையினுக்கு
அழ‌கிய‌ த‌ளிரையுடைய இலுப்பையின் வெட்டுப்பட்ட வாயையும், வெள்ளிய‌ உள்துளையையும் உடைய பூவை
புன்மையான தலைமயிரையுடைய சிறுவர்கள் தம் வில்லினால் வீழ்த்தி, (அதனைத் தின்னவரும்)
மரைமானைத் துரத்தி (காளையினுக்கு) உண்ணக்கொடுக்கும் மலையிடத்து அமைந்த சிறிய ஊர்களில்
மாலைக் காலத்தில் உனக்கு இனிய துணையாகத் தங்கி, காலையில்
புதிய தேனையுடைய நறிய மலர்கள் பருத்த பரற்கற்களின் மேல் உதிர்ந்துகிடத்தலால்
திருமண மனை போல நறுமணங் கமழுகின்ற காட்டுவழியே
உன் வாழ்க்கைத் துணைவியாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும் (உன்னுடன்) வருவாள்
					மேல்
#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
தாம் அன்புகொண்டவரின் துன்பத்தை நீக்கி அவரைப் பாதுகாத்தருளுதலும் முழுதும் உணர்ந்த சான்றோர்க்குப்
பொருந்திய செயலாம், ஆனால் இது எப்படியோ?, முத்துக்கள்
மலையடிவாரத்தில் சிதறிக்கிடப்பது போல், யானையின்
புள்ளியினையுடைய முகத்தில் மோதிய புதிய ஆலங்கட்டி
பளிங்கினைச் சொரிவது போல பாறையில் விழுந்து அழகுசெய்ய,
மேகங்கள் சினந்தெழுந்த இடம் அகன்ற வானத்தில்
தீக்கடைகோலிலிருந்து தெறித்து விழும் பொறிகளைப் போல கொடிவிட்டு மின்னி
மிக்க மழையைப் பொழிந்த நடுநாளாகிய இரவில்,
அரிய உயிரினங்களையே உணவாகக் கொண்ட கொல்லும் தொழிலையுடைய விலங்குகள் நடமாடும்
இருட்டுக்குள்ளே தனியாக வருவதால் சிறிதளவும்
நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை, வாழ்க தோழியே! - இரவினில்
புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு வெருண்டு, பாம்புகளின்
வருத்தத்தைத் தரும் அரிய தலைகள் படமெடுப்பதைப்போன்று
காயாம்பூவின் மெல்லிய கிளைகளைத் தீண்டும்படி நீண்டு அரும்பிய
பல தூக்கிய துடுப்புகள் போன்று அசையும் கொத்தாகிய காந்தளின்
அழகிய மலர்களிலுள்ள நறிய தாதினை நுகருகின்ற வண்டுகள்
கையில்வைத்து ஆடுகின்ற சூதாடும்காயைப்போலத் தோன்றும்
மேகம் தவழும் உச்சிகளைக்கொண்ட மலைக்கு உரியவன் - (நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை)
					மேல்
#109 பாலை கடுந்தொடை காவினார்
பல இதழ்களையுடைய மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும், நல்ல யாழின்
நரம்பு ஒலிப்பது போன்ற மிக இனிய சொற்களையும் உடைய
நமக்குத் எல்லா நலனும் தரும் ஒப்பற்ற ஒருத்தி இருக்கும் ஊருக்கு (திரும்பிச் செல்ல வேண்டுமென்றால்),
பகைவர் மார்பினை உழுகின்ற கொம்புகளையுடைய களிறுகளின் கூட்டம் கூட
அடர்ந்த காடாக வளர்ந்த உயரமான மரங்களைக் கொண்ட சோலைகளும் -
ஒன்றையொன்று விரும்பும் அணில்கள் ஓடியாடித்திரியும் மூங்கில்கள் வளர்ந்த அகன்ற இடமும் -
தீட்டுவதால் வெள்ளையான நுனிகளைக் கொண்ட அம்புகளின் வேகத்தால் இறந்தோரின்
எண்ணிலடங்காத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய
பாலைவெளியில் இருக்கும் பல்வேறாய்ப் பிரியும் வழிகள் ஆறலைக் கள்வரால் கொள்ளப்பெற்றது என்று
வழிச்செல்வோர் இல்லாமற்போன கடினமான பாதையில் அறியாமல் வந்தவர்களின்
கையில் பொருள் இல்லையாயினும் அவரின் உடம்பைப் பற்றிக்கொண்டு (மனமிரங்கி)
அவரின் உயிரினைக் கொல்லாதவராய் அவரை விட்டுவிட்ட தவறுக்காக,
பெரிய களிற்றின் கொம்புடன் புலியின் வரியினைக் கொண்ட தோலினைத் தண்டமாக வசூலிக்கும்
அறப்பண்பு சிறிதுமில்லாத எயினர் வேந்தன் ஆளுகின்ற
வறங்கூர்ந்து பாழ்பட்டுக்கிடக்கும் மலைகள் பற்பலவும் - இடையிட்டுக் கிடக்கின்றனவே
					மேல்
#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னையானவள் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளட்டும், அலர்தூற்றும் வாயினால்
’அம்’ என்னும் ஒலியுடன்  இச்சேரியில் வாழ்கின்ற மகளிர் கேட்டாலும் கேட்டுக்கொள்ளட்டும்
(தலைவியின் மெய்வேறுபாட்டிற்கு) வேறொரு காரணம் இல்லையென்பதை நீ தெளிவாய்த் தெரிந்து கொள்ள,
வளைந்த சுழிகளையுடைய ஆற்றின் சங்கமுகத்திலுள்ள தெய்வத்தை நோக்கிச்
சத்தியம்செய்து சொல்லுவேன் உனக்கு, கடற்கரைச் சோலையில்
எம்மை மாலை போலத் தொடர்ந்து வரும் தோழிமார் கூட்டத்தோடு சென்று கடலில் சேர்ந்து நீராடியும்
மணல்வீடு கட்டிக்கொண்டும், மணற்சோறு சமைத்துக்கொண்டும்
விளையாடி வருந்திய வருத்தம் தீரும்படி சிறிது நேரம் நாங்கள்
இளைப்பாறி இருக்கும்போது, கிட்டே வந்து
”பெரிய, மென்மையான, மூங்கில் போலும் தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நல்ல பெண்களே!
பகல்நேர வெளிச்சமும் குறைந்தது, களைப்பாயிருக்கிறேன், 
இந்த மெல்லிய இலைப்பரப்பில் நீங்கள் ஆக்கிய சிறுசோற்றை விருந்தினனாக உண்டு, நானும் இந்த
ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் என்ன?”
என்று (கேலியாகக்) கேட்டான் ஒருவன், அவனைக் கண்டு
முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, ஒருவர் முதுகை ஒருவர் பற்றிக்கொண்டு
“இந்தச் சாப்பாடு உமக்குப் பொருத்தமானது அல்ல, இழிந்த
கொழுமீனால் ஆக்கிய சோறு” என்று கூறினோம், சட்டென்று
“நீண்ட கொடிகள் அசையும் தோணிகள் தோன்றுகின்றன,
போய்ப் பார்ப்போமா?” என்று அந்த மணல்வீடுகளைக் காலினால் சிதைத்துவிட்டு
நிற்காமல் ஓடிப்போன பலருக்குள்
என்னையே உற்றுப்பார்த்த பார்வையுடன், “நல்ல நெற்றியையுடையவளே!
நான் போகட்டுமா?” என்று தனது நெஞ்சம் வருத்தப்படச் சொல்லிவிட்டு
நான் ”போங்கள்” என்று சொல்லியும், (போகாமல்) பார்த்துக்கொண்டே, தனது
நீண்ட தேரின் கொடிஞ்சியைப் பிடித்துக்கொண்டு 
நின்றிருந்தவனே என் மகளின் மெய்வேறுபாட்டிற்குக் காரணம் போலும் - (என்று அன்னை அறியினும் அறிக)
					மேல்
 



#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
தம் முன்னோர் வைத்துப் போன பொருள் உள்ள அளவிலே மகிழ்ந்திருக்கமாட்டாராய், தம் பகைவர்
இகழும் நெஞ்சத்தோடு கூறுகின்ற அம்பு போன்ற பழிச் சொல்லிற்கு நாணி, (பொருளீட்டச்சென்றவர்)
விரைவில் வந்துவிடுவார், வாழ்க தோழியே, பட்டத்து
யானை தன் கையில் உயர்த்திப் பிடித்த பட்டுக்கொடியினைப் போல
காய்ந்துபோன ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்திக்கூடு
ஓடைக்குன்றம் என்னும் குன்றிலுள்ள மேல்காற்றினால் அசைய,
அதைப் பார்த்து மேகம் என்று குழம்பிப்போன மயக்கத்தையுடைய கூட்டமாகச் சேர்ந்த
ஓய்ந்துபோன களிறுகள் தூக்கிய வருத்தத்தையுடைய நீண்ட கைகள்
புரவலரின் புகழைத் தொகுத்துப்பாடும் கூத்தர்களின் தூம்புகளைப் போல் ஒலியெழுப்பும்
காட்டு வழியிலுள்ள ஆண்பன்றியினைக் கொன்ற நல்ல இரையைக் கொண்ட
ஆண் செந்நாய் விரைவாக அதனை இழுக்க,
ஒழுகிய குருதியைக் குடிக்கும் பருந்தின் சிவந்த செவிகள்
மறவர்கள் திரண்டு சென்று போரிடும் போர்க்களத்தில் இரவினில் மறவர்கள் தம் கையில் கொண்ட
விழுப்புண்பட்டு விழுந்த மறவருடைய புண்ணை ஆய்வதற்குரிய விளக்குகளைப் போலக் காணப்படுகின்ற
வானைத் தோயும் குவியலான மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் - (விரைவில் வந்துவிடுவார்)
					மேல்
#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனிய முதுகினையுடைய கரடிகளின் குறுகக்குறுக அடியெடுத்து நடக்கும் கூட்டம் 
கறையான்கள் கட்டிய செங்குத்தாய் நிற்கும் நிலையினையுடைய புற்றினது
மண்ணால் புனைந்த நெடிய குவடுகள் உடைந்து போகும்படி அகழ்ந்தெடுத்து
புற்றாஞ்சோறாகிய இரையை விரும்பித் தின்பதற்குச் செல்லுகின்ற இந்த நள்ளிரவின் இருளினூடே,
அண்மையில் குட்டியை ஈன்ற, வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக தறுகண்மையையுடைய ஆண்புலி
ஒளிவீசும் ஏந்திய கொம்புகளையுடைய ஆண்யானையைக் கொன்று முழங்குகின்ற
குளிர்ந்த அடர்ந்த இருட்டான சோலையில் நாங்கள் தனித்திருக்கிறோம் என்று நினைக்காதவனாய்
இங்கு வந்ததினால் எமக்குத் தீங்கினையே செய்திருக்கிறாய்.
அதனால் நீ வராமற்போனால் ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தலைவி உயிர் வாழாள்
ஒவ்வொருநாளும் என் தலைவியின் தோள்களை முயங்குதலை நீயும் விரும்புகின்றாய்
எவ்வளவுதான் காதலர் என்றாலும் சான்றோராயிருப்பவர்கள்
பழியுடன் சேர்ந்து வரும் இன்பத்தினை விரும்பமாட்டார்,
கலியாணம் செய்துகொண்டால் என்ன? வானைத் தோயும் மலைநாட்டவனே!
கூட்டமான கலைமான்கள் அடிக்குரலில் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த இம் மலைச் சாரலில்
எய்துவதற்கு அரிய களவொழுக்கத்தால் நீங்கள் ஏற்கனவே சேர்ந்திருப்பதை அறியாத எம் சுற்றத்தார்
தொன்றுதொட்டு வரும் முறைப்படி பெண்கேட்டுவந்து, மணவிழாவும் நடந்தால்
நீ இவளை மனைவியாகக் கொள்ளும் சடங்குகளையும் உங்கள் மணக் கோலங்களையும் கண்ணாரக் கண்டு
யாரோ அயலாராகிய விருந்தினர்போல இருந்து, இவளின்
புதிய நாணமாகிய அடக்கத்தையும் காண்பேன் நான்.
					மேல்
#113 பாலை கல்லாடனார்
தம் நண்பர் நன்றாக இல்லாத காலத்திலும் தமது நட்புப்பண்பில் மாறுபடாமல்
துன்பமுற்ற அவரிடம் சென்று அவர் வழி நின்று அவர்க்கு உதவும் பிறழாத தமது கோட்பாடு காரணமாக,
புல்லிய தலையையுடைய இளைய பிடி யானைகளைப் பாணர்க்குத் தரும் தலைவனான,
பிடியுடன் களிற்றையும் வாரி வழங்கும் தனது வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து,
அவனைக் காவல் மிகுந்த இடத்தில் நிலைநிறுத்திய பல வேல்படையினையுடைய கோசர் என்பவரின்
புதிய கள் கமழும் நெய்தலம்செறு என்னும்
வளம் பொருந்திய நல்ல நாட்டைப் போன்ற என் தோளினைச் சேர்ந்து,
ஆரவாரமுடைய பழைய ஊர் அலராகிய பழிச்சொற்களை மிகுதியாகக் கூற,
நமக்கு அருள் செய்யாமல் நம்மைப் பிரிந்து சென்ற நம் காதலர், எப்பொழுதும்
கற்கள் தைத்து மெலிந்துபோகாத (செருப்பணிந்த, அதன்) ஒசை இனிய வலிய அடியினையுடையவனும்
மிக்க வலிய மூங்கிற் குழாயில் வைத்த உணவினையுடையவராய்,
தன் எல்லையைக் கடந்து இருப்பவராயினும், நல்ல சமயம் பார்த்து, பகைவர்கள்
பாதுகாப்புடன் இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று
திரண்ட இமிலையுடைய காளைகளுடன் கூடிய பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து செலுத்திக்கொண்டுவரும்
செறிந்த கரிய பூணையும் நெய் தடவிய தண்டையும் உடைய நீண்ட வேலினையும்
விழாக் கொண்டாடியது போன்ற கொழுமையான பல உணவையும் உடைய,
பகைவர்க்குப் புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட
வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற கள்வர்கள்
தங்களின் ஆயுதங்களைக் கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சிறிதளவு நீரையுடைய
நடமாட்டம் அற்ற துறையாகிய குறுமணல் பொருந்திய கரையினைத் தாண்டிச் சென்று
மிகவும் தொலைவிலுள்ளார் என்று பலரும் கூறுவதால் சிறுமைப்பட்டுப்போன என்
செயலற்ற நெஞ்சத்தின் துயரம் நீங்குமாறு
அழாமல் இருக்கவும் உரியவராவோம், பருத்த அடிமரத்தில் கிளைத்த
ஆடுகின்ற அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவிழந்துபோக
இடம் மாறிச் சென்றுவிட எண்ணிய பறவை பறந்து சென்றதைப் போல்
என் உடம்பு இங்கே கிடக்க அதனின்றும் பிரிந்து புறப்பட்டு அவர்
வினையாற்றுமிடத்திற்குச் செல்லட்டும் என் உயிர்
					மேல்
#114 முல்லை
’கேட்பாயாக, ஏடி, தோழியே! வேலன்
வெறியாடும் களத்தில் சிறிய, பலவாகப் பரப்பப்பட்ட
கதம்பமான பூக்கள் போலப் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
வெப்பம் மிகுந்த கதிர்கள் தம் வெம்மை மழுங்கப்பெற்று மேற்கு மலையினை அடைந்த ஞாயிறு
பாம்பு விழுங்கிய மதியைப் போல மெதுவாக மறைகின்ற
பொலிவிழந்த இளம் மாலை நேரத்திலும் நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் அவர்’ என்று
(எம் காதலி) எம்மீது பிணக்கம் கொண்டு இருக்கும் துன்பம் நீங்கும் வகையில்
குதிரைநூல்களைக் கற்ற பாகனே! முன்னே பார்த்து செலுத்துவாயாக -
நெடிய கொடிகள் அசைகின்ற வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மதிலில்
நடுநிசிக் காவலர்கள் ஏற்றிவைத்த ஒளி செறிந்த விளக்குகள்
விண்மீன்கள் போன்று விளக்கமுடன் தோன்றும்
அணுகுதற்கு அரிய காவலையுடைய அச்சம்தரும் மூதூரிலுள்ள
செல்வம் நிறைந்த மனையில் நாம் கூறியபடியே அடங்கியிருக்கின்ற குற்றமற்ற கற்பினையும்
செவ்வரியோடிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும் மூங்கில்போன்ற தோளையும்
பிரிவாற்றாமையாகிய துன்பத்தையும் உடைய எம் காதலியைக் காண்போம்
பொன் சேணம் அணிந்த செருக்கினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரினை (முன்னே பார்த்து செலுத்துவாயாக)

#115 பாலை மாமூலனார்
என்றும் ஒழிவில்லாத விழாவினையுடைய, நல்லவர்கள் வாழ அச்சப்படும் பழைமையான ஊரினில்
ஒருவர் பழியேதும் இல்லாதவரென்றாலும் அவரைப்பற்றிப் பலர் புறம்பேசும்
அம்பலாகிய ஒழுக்கத்தையும் கொண்டவராய், கடுஞ்சொற்களைப் பேசும்
சேரிப்பெண்கள் நம்மை இகழ்ந்து பேசினாலும் பேசட்டும்,
நுட்ப‌மான‌ தொழில்திறம் அமைந்த‌ அணிக‌ல‌ன்க‌ளை அணிந்த‌ எருமை என்ப‌வ‌ன‌து குட‌நாட்டினைப் போன்ற
என‌து அழ‌கிய ந‌லம் ஒழிந்துபோனாலும் போகட்டும், என்றைக்கும்
நோயில்லாமல் இருப்பாராக நம் காதலர்; பாய்ச்சுதலில் தப்பாத வாளினைக் கொண்ட
எவ்வி என்பான் தோற்று இறந்த போர்க்களத்தில், பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு, முன்னர் வாழ்த்திய, இப்போது ஒடித்துப்போட்ட
வளவிய இசையினையுடைய வளைந்த யாழின் கொம்புகளைப் போல, ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
விள‌க்குப் போன்ற‌ ம‌லரையுடைய‌ கொன்றையின்க‌ண் முற்றி விளைந்த நெற்றுக்க‌ள்
பாறைமீது ப‌ர‌வ‌லாக‌ உதிரும் சுர‌த்தின் நீண்ட‌ நெறியிலுள்ள‌
இள‌ம்பிறை போன்ற‌ வெண்மையான கொம்புக‌ளையும் த‌லைமைப்பண்பையும் உடைய‌ யானைப்ப‌டைக‌ளையும்
சினம் மிக்க ஆற்ற‌லுடன் தாவிப்பாயும் குதிரைப்ப‌டைக‌ளையும் உடைய‌ அதிக‌மான் நெடுமான் அஞ்சி
ஆனிரைகளைக் கைப்பற்றி மறைத்துவைக்கும் அச்சந்தோன்றும் பலவாகப் பிரியும் வழிகளிலே,
நலம் பொருந்திய, கண்டோர் ஆராய்ந்து போற்றத்தகுந்த நமது பேரழகு அழிந்து போகும்படி, தொலைவான நாட்டில்
நம்மைப் பிரிந்து வாழும் பொருளீட்டும் பணி
இன்னும் கைகூடிவராததால் தம் இருப்பை நீட்டிக்கொண்டு செல்பவர் - (நோயில்லாமல் இருப்பாராக)
					மேல்
#116 மருதம் பரணர்
தீ கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப்பூக்களின் இடையிடையே
செந்நெல்லை அறுத்து அதன் தாளைக் குவித்துவைத்த கதிரறுப்போர்
தங்களுக்குக் கள்ளினை ஏற்றிக்கொண்டு அலைந்துதிரிந்துவரும் வண்டி சேற்றில் மாட்டிக்கொண்டால்
சிறந்த கரும்புத் தட்டைகளை அடுக்கிவைத்து அண்டக்கொடுக்கும் ந‌ன்கு நீர் பாய்கின்ற ஊரின் த‌லைவ‌னே,
நிச்சயமாய் நீ பெரிதும் வெட்கமில்லாதவனாயிருக்கிறாய், பொரியினைப் போல்
புங்கம்பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவுபெற, ஒளிபொருந்திய நெற்றியினையும்
நறிய மலர்கள் நிறையச் சூடிய காண்பதற்கினிய குட்டையான, பலவான கூந்தலையும்,
மாவடு போன்ற கண்களையும், முத்துச்சரம் அசையும் அழகிய முலைகளையும்,
நுண்மையுடைய அழகு நலத்தினையும் உடைய ஒரு பரத்தையுடன், நேற்று
குளிர்ச்சி தங்கிய நீரில் விளையாடினாய் என்று அறிந்தோர் எம்மிடம் கூறினர், அதுவேதான்
நாங்கள் பொய்யென்று மறுத்து மூடி மறைக்கவும் எங்களையும் மீறி
ஊரெங்கும் பெரும்பேச்சாய்ப்போய்விட்டது; அதுதான், மலர்ந்த பூமாலையினையும்
மை கொண்டு அழகு செய்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனுடைய
என்றும் நீங்காத திருவிழாக்களையுடைய மதுரை நகரத்தின் பக்கத்திலுள்ள போர்க்களத்திலே
தம்முள் ஒன்று சேர்ந்து போரிடுதற்கு எழுந்துவந்த சேரனும் சோழனுமாகிய இரண்டு முடி மன்னர்களும்
அவருடைய கடல்போன்ற பெரிய படைகளும் கலக்க மெய்தும்படி அவரோடு போர்செய்து
முழங்கும் ஓசையையுடைய தம் போர்முரசங்களைக் கைவிட்டு நாற்றிசையினும் பரவி அம்மன்னர்
தம் படைகளோடு ஓடும்போது (பாண்டியன்) அவரைப் புறங்கண்ட பொழுது
வெற்றிகொண்ட அகன்ற போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக - (பெரும்பேச்சாய்ப்போய்விட்டது)
					மேல்
#117 பாலை
தான் வளர்த்த முல்லைக்கொடியோடு தான் விளையாடும் கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியின் நிழலையும்
அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய தன் தோழிமாரையும் நினையாதவளாய்
யாரோ ஒருவன் கூறிய பொய்யான மொழிகளை நம்பி, அழகிய வேலைப்பாடு மிக்க
வளம் பொருந்திய அழகிய எம் இல்லம் தனித்துக் கிடப்ப அவன் பின்னர்ச் சென்று
அச்சம் வரக்கூடிய பலவாறு பிரியும் வழியையுடைய அப் பாலைநிலத்தில், இரங்கத்தக்கதாக,
கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் மேல் ஏறி இருந்து, வெண்மையான தலையையுடைய 
பருந்து தனது பெடையினை அழைக்கும் பாழ்பட்டுக் கிடந்த நாடாகிய அவ்விடத்தில்
பொன் வளையல்கள் ஒலிக்கும்படியாகக் கைகளை வீசி, தன் சிவந்த அடிகளில் அணிந்த
சிலம்புகள் சிரிப்பன போல கலகலக்க நடந்து சென்ற என்னுடைய மகளுக்கு -
நறுமணத்தைலத்தை விரலில் தோய்த்துக் கோதி வளைந்த கொத்தான கூந்தலை வாரி, கால்காலாக வகுத்து
நான் மலர்களை அவற்றிடையே சேர்ப்பதற்கு, மயிர்ச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளவும் மறுக்கின்றவள்
தன்னையே ஒத்த அழகையும் விருப்பத்தையும் உடைய காதலனாகிய தலைவன்
நறுமணங்கமழும் பாலைநிலத்துப் பல்வேறு மலர்களையும் சூட்டுவதற்காகத் தன் கூந்தலைப் பின்னிவிட
அவளுடைய சிறிய பிடரி மறையும்படி அப் பின்னல்கள் அலையலையாய் தாழ்ந்து தொங்கினவோ -
நீண்ட அடியையுடைய மாமரத்தில் முற்றிக் கனிந்த வெள்ளிய பழத்தை
வளைந்த கால்களையுடைய ஆமையும் அதன் குஞ்சும் கவர்ந்து தின்னுகின்ற
பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய
வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கே இருக்கும்
இனிய நீருள்ள காட்டாற்றின் நெளிநெளியாய் இருக்கும் கருமணல் போன்று - அலையலையாய் தொங்கினவோ!
					மேல்
#118 குறிஞ்சி கபிலர்
ஆரவாரிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய விளக்கமான எமது உச்சிமலைச் சாரலிலே
தேன் மணங்கமழுகின்ற பூங்கொத்துக்களிலே மலர்ந்துள்ள வேங்கை மலரை அணிந்து கொண்டு
தொண்டகப்பறையின் தாளத்திற்கு ஏற்றாற்போல, மகளிரொடு கலந்து
தெருவில் குரவைக் கூத்தாடுகின்ற சிறுகுடியாகிய எமது ஊரினில்
வடிவங்கொண்டு வருகின்ற முருகனைப் போன்ற அழகுடையவனாய், வலிய வேட்டைநாய்கள் பின்னே வர
பகல்நேரத்தில் வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம், பகைமை கொள்ளும்படி,
கரிய பெண்யானையோடும் கன்றோடும் கூடிய அகன்ற வாயினையுடைய
நீண்ட கையினைக் கொண்ட யானையைக் கொள்ளுதல் பிழைத்து, அவை மறைந்திருக்கும்படி செய்த
கொல்லும் புலி நடமாடும் மிகுந்த இருள் சூழ்ந்த நள்ளிரவில்
நீ தனியாக வருவதற்கு அதனைக்காட்டிலும் அஞ்சுகிறோம்; 
இவளுக்கு இனி என்ன ஆகுமோ? பலநாள்
சந்திப்பிடமாகக் கொண்ட முற்றிக்காய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தில்
கிளிகளை ஓட்டுவதற்கு அவள் பாடும் பாடலும் இனி இல்லாமற்போயிற்று - (கதிரும் கொய்யப்பட்டது)
மிகவும் இரங்கத்தக்கவள் - உன்னுடைய அருளையன்றி வேறொரு துணையும் இல்லாத இவள்.
					மேல்
#119 பாலை குடவாயில் கீரத்தனார்
நெற்றியும், தோளும், தேமலையுடைய அல்குலும்
நிறமும், அழகும், கண்களின் செவ்வரியும் வாடிப்போகும்படி
இவள் வருந்துவாள் என்று திருத்தமாகக் கண்டு வைத்தும்
இவளை மணந்துகொள்ளுதலே நன்மையாம் என்று நினையாமல் பிரிந்து சென்றாலும், அவர், (வீணாக)
வழிச்செல்வோர் அறுத்துப்போட்ட பிரண்டை
இடியால் தாக்கப்பட்ட பாம்பின் பசிய துண்டு போல
வழியின் பக்கத்தே (வீணாக) வதங்கிக் கிடக்கின்ற காட்டில், (மணமுண்டாகும்படி,)
உப்புவணிகரின் கூட்டம் சமைத்து உண்டு கைவிட்டுப்போன கல்லால் உண்டாக்கிய அடுப்பினில்
வலிய வில்லையுடைய மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும்
காட்டுவழி நடமாட்டம் அற்றதாகையால் பெண்களோடு செல்வதற்கு ஏற்றதல்ல என்னாமல், ஊக்கம் மிகுந்து
நெய்தல் பூப் போன்ற உருவத்தையுடைய அழகாக ஒளிரும் அகன்ற இலையினையும்
அமைவாகத் தொடுக்கப்பட்ட மயில்தோகையால் பொலிவுற்ற காம்பினையும்
மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், கருமையான தண்டினையுமுடைய வேலுடன்
பகையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்குத் தம்முடன் நாமும் துணையாகிச் செல்லத்
துணிந்திடுவாரோ? துண்டமாகப் பிளவுபடும்படி
மறத்தையுடைய புலியுடன் போரிட்டு வருந்திய தழும்புள்ள நெற்றியில்
மிக்க நோயாகிய துன்பத்தோடு நீர் உண்பதற்காக விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானை
தன் கையால் தோய்த்தும் நீர் கிடைக்காததால் பெருமூச்சுவிடும் வறண்டுபோன சுனையினையுடைய
மேகங்கள் படியும் உச்சியினையுடைய மலையடிவாரத்தில் செல்லும் வழியில் -
					மேல்
#120 நெய்தல் நக்கீரனார்
முருகக்கடவுளின் மார்பினில் கிடக்கும் முத்தாரம் போல
சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும்
பசிய காலையுடைய கொக்குக்கூட்டம் வரிசையாகப் பறந்து உயர
பகற்பொழுதினை மெல்ல மெல்லக் கழித்து மேற்குத்திசையில்
மலையை அடைந்தது, பல கதிர்களையுடைய ஞாயிறு,
தனது மதர்த்த அழகிய கண்களில் நீர் ஒழுக, (இவள்)
மிக்க நாணத்தைக்கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய (இவள்)
தனது மாண்புற்ற அழகு கெட, ஏக்கமுற்று, நிற்காமல்
அழுகையைத் தொடங்கியிருக்கிறாள், பெருமானே! அதனாலும்,
உப்பங்கழியிலுள்ள சுறாமீன் தாக்கிய புண்பட்ட காலையுடைய நினது ஊர்தியாகிய கோவேறுகழுதையும்
நீண்ட நீரினையுடைய கருமையான கழியில் நடப்பதற்கு வலிமை குன்றியதால், (இங்கு இளைப்பாறி),
வலிய வில்லினை ஏந்திய உன் ஏவலரொடு இந்த இரவினில் செல்லாமல்
(இங்கு இளைப்பாறி) நீ தங்கிச்சென்றால் உனக்குக் கேடு ஒன்றும் இல்லையே!
பனைமரங்கள் ஓங்கிய வெண்மையான மணல் பரந்த தோட்டங்களில்
அன்றில் பறவை தன் துணையை அழைக்கும் அவ்விடத்தில்
சிறிய கொத்துக்களான நெய்தல் பூக்களையுடைய எம் பெரிய கழிசூழ்ந்த ஊரில் - 
					மேல்
 



#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நெஞ்சமே! நாம் இப்போது நகைப்பை உடையவர் ஆயினோம், கடுமையாகச் சுடுகின்ற
கோடைக் காலம் நீண்டுசெல்கின்ற மேகங்கள் நீங்கிப்போன வழியில் நாள்தோறும்
தன் வறுமை மிக, முன்னர் குளிப்பதற்கான நீர் இருந்த சிறிய குளத்தில்
தோண்டப்பட்ட குழியினில் குடிக்கமுடியாத கலங்கிய நீரால்
கன்றையுடைய இளமையான தன் பெண்யானையின் மென்மையான தலையைக் கழுவிவிட்டு,
பின் மிஞ்சிய சேற்றை முகந்து தன் மேல் சொரிந்துகொண்டதால் நிறம் மாறிய வலிய ஆண்யானை
சிவந்த காம்பினையுடைய வெண்மையான பூங்கொத்துக்கள் மேலும் கீழும் அசையப் பற்றி இழுத்து
தினவுடைய தன் முதுகினில் தேய்த்துக்கொள்ளும், வழியோரத்தில் இருக்கும் வெண்கடம்பு மரத்தின்
சுருங்கிப்போய் வரிவரியாக இருக்கும் நிழலில் தங்கி, நம்முடன்
தான் கூட வருவேன் என்கிறாள் பெரிய மென்மையான தோளினையுடைய நம் காதலி;
மற்றவர்க்குத் துன்பம் செய்யும் மழவரின் வண்டிச்சக்கரங்கள் தேய்த்து உருவாக்கிய தடங்களையுடைய
வழிச் செல்லும் மக்கள் சோறு கட்டிக்கொண்டுவந்து உண்டு எறிந்த வெண்ணிறப் பனையோலைக் குடைகளை
மிக்க விசையுடன் சூறாவளிக்காற்று தூக்கியெறிதலால், தன் பெண்மானை நினைத்து - 
மருண்டுபோன ஆண்மான் - அதனை அழைக்கும் இடங்களையுடைய
கருத்த முகங்களையுடைய குரங்குகள் மிகுந்திருக்கும் காட்டினில்
					மேல்
#122 குறிஞ்சி பரணர்
நிறையக் கள்ளினைக் குடிக்கும் சிறுவர்கள் ஆடும் இந்த ஆரவாரமுடைய பழமையான ஊர்
திருவிழாக்காலம் இல்லையென்றாலும் உறங்காது இருக்கும்;
வளமுடைய கடைத்தெருவும் மற்ற தெருக்களும் உறங்கி ஒலியடங்கிப்போனாலும்
பெருத்த ஒலியுடன் கூடிய கொடிய சொற்களைப் பேசும் அன்னை தூங்கமாட்டாள்;
நாம் வெளியேசெல்லாமல் நம்மைக் கட்டிவைத்திருக்கிற அரிய சிறையைப் போன்ற அந்த அன்னை தூங்கினாலும்,
துயிலாத கண்களையுடைய காவலர்கள் விரைவாகச் சுற்றிக்கொண்டிருப்பர்;
ஒளிர்கின்ற வேலினையுடைய அந்தக் காவலர் துயின்றாலும், கூர்மையான பற்களையும்
வலமாகச் சுருண்டிருக்கும் வாலினையும் உடைய நாய் குரைக்கும்;
ஒலிமிக்க வாயினையுடைய நாய் குரைக்காமல் தூங்கிப்போனாலும்
பகற்பொழுதின் வெளிச்சம் போல ஒளியினை உமிழ்ந்து வானத்தில்
அகலம் பொருந்திய மதியம் நின்று ஒளிவீசும்;
அந்த மதியமானது மேற்குமலையினை அடைந்து மிகுந்த இருள் படிந்தால்
வீட்டு எலிகளை உணவாகக் கொண்ட வலிமையான வாயினைக் கொண்ட கூகை
பேய்கள் திரியும் நள்ளிரவில் நம் உள்ளம் திடுக்கிட்டு அஞ்சி அழியும்படி குழறும்;
பொந்தில் வாழும் அக் கூகைச் சேவல் ஒலியெழுப்பாமல் உறங்கிப்போனாலும்,
வீட்டில் அடங்கிக்கிடக்கும் கோழிச்சேவல் தனக்கே உரித்தான குரலை எழுப்பிக் கூவும்;
இவை எல்லாம் இல்லாமற்போன பொழுது ஒருநாள்
அவரை எண்ணி நிலையில்லாமல் தவிக்கும் நெஞ்சத்தில் இருக்கும் அவர் வராமற்போய்விடுவார்; அதனால்,
பரல்கள் இடப்பட்ட சதங்கைகள் ஒலிக்க நல்ல நடையால் சிறப்புற்று
ஆதி என்னும் நேரோட்டத்தில் தேர்ச்சிபெற்ற பாய்ந்து செல்லும் ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளையும்
மதில் அரணாகிய காவலையுமுடைய தித்தன் என்னும் சோழமன்னனுடைய உறையூரைச் சூழ்ந்துள்ள
கற்கள் நிறைந்த காவற்புறங்காடு போன்ற
பல்வேறு தடைகளைக் கொண்டது நம் களவுக்காதல்.
					மேல்
#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாததினால் ஒட்டிப்போன விலாப்பக்கத்தையும்,
நீராடாத விரதத்தையும் கொண்ட தவம்மேற்கொள்வோர் போல
மலைகள் செறிந்த சிறிய வழிகளில் வரிசையாகச் சேர்ந்து செல்லும்
காட்டு யானைகள் தம் அழகு அழிந்துபோகும் இடமான மலைநிலத்தைக்
கடந்துபோய்ப் பொருள் ஈட்டிக் கொண்டுவருவதையும் செய்கின்றாய் இல்லை, சிறப்பான,
சிறிதளவான ஐந்து பகுப்பினைக் கொண்ட கூந்தலையுடையவள் இருக்கும் நல்ல இல்லத்தில் அமைதியுடன்
தங்கியிருந்தால் வறுமை வந்துவிடுமோ என்று அஞ்சவும் செய்கின்றாய்; இவ்வாறு தடுமாறி அழியும் நிலையைக்
கொண்டிருக்கிறாய், வாழ்க, என் நெஞ்சமே! நிலவு என்று சொல்லும்படியாக
இரும்பாலாகிய இலைகள் ஒளிவீசுகின்ற நெய் மிகவும் பூசப்பட்ட நீண்ட வேல்களையும், ,
கரிய மேகங்களைப் போன்ற பல கேடயங்களையும் கொண்ட பெரிய கொடைத்தன்மை நிறைந்த சோழரின்
ஓடக்கோலையும் மூழ்கச்செய்யும் காவிரியாறு கடலில் புகும் பெரிய நீர்த்துறையில்
இறா மீன்களோடு வந்து மாலைகளோடு திரும்பச்செல்லும்
பெரிய கடலின் கடற்பெருக்கினைப் போல
போகலாமா, இருக்கலாமா என்ற இவை ஒன்றை உறுதியாகக் கொள்ளமாட்டாய்- போய் ஈட்டும் பொருளுக்காக.
					மேல்
#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
பகைவர்கள் நல்ல அணிகலன்களைக் களிறுகளுடன் ஏந்திக்கொண்டு
வந்து திறையாகக் கொடுத்து வணங்கி நின்று, பணிமொழி கூறி
சென்றருள்க என்று வேண்டினால், நம் அரசனும்
நிலத்தைப் பிளப்பது போன்ற நெருங்கிச்செறிந்த படைகளுடனே
இன்றே நம் ஊர்க்குப் புறப்படுதல் வாய்ப்பது நல்லது;
மாடங்களால் சிறப்புற்ற நமது மாளிகையில் பெருமை அமைந்த படுக்கையில்
நம் மீது கொண்ட பிணக்கம் தீர்ந்த நிலைப்பாடு கொண்ட நம் தலைவி இன்பம் எய்தும்படியும்,
நமக்குப் பாசறையினால் உண்டான வருத்தம் நீங்கவும், பாகனாகிய நீயும்
மின்னல் வெட்டியதைப் போன்ற பொன்னால் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட சேணத்தையும்
கொய்த பிடரி மயிரையும் கையால் இழுத்து ஓட்டுவதற்கான பொலிவுள்ள நடையினையும் உடைய குதிரையை,
மிகுந்த மழையினால் மலர்ந்த பச்சையான முல்லைக் கொடியின்
பூக்கள் மணக்கின்ற நெடிய வழியில், அப்பூக்களில் மொய்க்கின்ற வண்டுகள் வெருண்டு பறக்க
சரியான நேரத்தில் சென்றுசேரும்படியாகச் செலுத்துவாயாக, மாலையில்
அந்திக்காலத்து இடையரின் அழகிய மூங்கில்குழலில் இசைக்கின்ற இசை
நிலாமுற்றமான அகன்ற இடத்தில் ஒலிக்கும்
வரிசையாக நிற்கும் அம்பெய்யும் புழைவாய்களுள்ள நீண்ட மதில் சூழ்ந்த ஊரினை - (காலை எய்தக் கடவுமதி)
					மேல்
#125 பாலை பரணர்
அரத்தினால் அறுத்த அழகிய வளையல்கள் தாம் தோளில் இறுகப்பற்றியிருக்கும் நிலை நெகிழ்ந்துபோகும்படி
இல்லறத்தில் முற்றுப்பெறாத வாழ்க்கையை நேர்செய்து முற்றுவிக்க வேண்டி
இரவம் விதையைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த ஈங்கை மரத்தின்
ஆலங்கட்டி போன்ற வெண்மையான பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கவும்,
கூர்மையான வாலைக் கொண்ட ஓந்தியின் கருமையான தாடிப்பக்கத்தைப் போன்ற
தாது மிக்க குவளையின் மொட்டுகள் தம் கட்டு அவிழவும்,
உறங்காத பசிய கண்ணையும், பரந்த அடியினையும், பெரிய வாயினையுமுடைய
மதநீரொழுக்கு மாறிப்போன யானையைப் போல
மழையினைப் பொழிந்து வறிதாகிப்போய் குபுகுபுவென்று பொங்கியெழும் வெள்ளை மேகங்கள்
கருமை பொருந்திய வானின் எல்லாத் திசைகளிலும் திரியவும்
பனி வருத்துகின்ற நடு இரவின் இருளில்
தனியாக இருப்பவர்களின் பொறுத்துக்கொள்ளும் அளவை எண்ணிப்பாராமல், தண்ணென்று
வெறுக்கும்படியாக  வீசுகின்றாய், உனக்கும் எமக்கும் பகையற்ற காலத்திலும்;
கைகூப்பித் தொழப்படும் மரபினையுடைய கடவுள் தன்மை நிரம்பிய
கல்விகற்கும் செயல்பாட்டிற்காகச் சென்றவர் விரைவில் வந்துவிட்டால்,
விரிந்த பிடரிமயிரால் பொலிவுபெற்ற சிறந்த ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளுடன்
அச்சம் உண்டாக்கும் பெரும்படையும் கொண்டு, தான் விரும்பிய நாட்டில் தங்கக்கூடிய
கரிகால் பெருவளத்தான் முன்னே நிற்கமாட்டாதவராய்
வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் அவன் வெற்றிபெற,
தமது ஒன்பது குடைகளையும் ஒரே பகலில் போட்டுச் சென்ற
பெருமை இல்லாத மன்னரைப் போல
ஓடிப்போவாய் வாடையே நீ எமக்கு முன்னால்.
					மேல்
#126 மருதம் நக்கீரர்
உன் எண்ணங்களை உண்மையானவை எனக் கருதி, நீ பலவற்றையும் எண்ணி,
புன்மையான பெரிய துன்பத்தினால் பெரிதும் வருந்துவதோடு நில்லாமல், மேலும்
மலையின் உச்சியிலிருந்து தொடர்ந்து இறங்கி மிகுந்து செல்லும் வெள்ளத்தால்,
முதல்நாள் பூத்த சிறந்த மலர் குளிர்ச்சியான துறைகளில் அசைந்தாட,
கடலின் கரையைக் கரைக்கின்ற காவிரி என்னும் பெரிய ஆற்றின்
கருமணல் ஒழுகும் நீண்ட மடுக்களின் நிலைகொள்ளாத நீரும் கலங்கும்படி,
கரிய இருளையுடைய நள்ளிரவில் சென்று, தன் தமையன்மார்
விடியற்காலையில் கொண்டுவந்த திரண்ட கொம்பினையுடைய வாளைமீனுக்கு
அழகாக வளைந்த கொப்பூழையும், அழகிய சொற்களையும் உடைய பாண்மகள்
நீண்ட கொடிகள் ஆடுகின்ற கள் மிகுந்த தெருவில்
பழைய செந்நெல்லை முகந்து கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாதவளாகி,
கழற்காய் போன்ற பெரிய முத்துக்களையும் நல்ல அணிகலன்களையும் பெற்றுக்கொள்ளும்
வளம் மிகுந்த ஊர்களையும் பல வேற்படைகளையும் உடைய எவ்வி என்பவன்
நலம் தரும் சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும், அடங்காதவனாய்
பொன் போன்ற கொத்துக்களான மணமுள்ள பூக்களுள்ள புன்னையாகிய காவல்மரத்தை வெட்ட விரும்பி,
திதியன் என்னும் அரசனுடன் போரிட்டு மாய்ந்த அன்னியைப் போல
நீ இறந்துபோவாய் போலும்; கிளியைப் போல
சில சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும், பெரிய
கயல்மீன் என்னும்படியாக ஒன்றோடொன்று போரிடும் மையுண்ட கண்களையும், மேகம் என்னும்படி
முதுகில் தாழ்ந்து இருண்டு விளங்கும் கொத்தான ஐந்து பகுப்பையுடைய கூந்தலினையும்,
மின்னலைப் போன்ற இடையினையும் உடைய இளைய தலைவியின்
பின்னே தாழ்ந்து நிற்பதை விடாத அறியாமை மிக்க நெஞ்சமே!
					மேல்
#127 பாலை மாமூலனார்
ஒளிவிடும் கைவளையல்கள் கழன்றுபோகும்படி மெலிந்து, நாளும்
கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க,
வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
தனது மரக்கலத்தைக் கடலில் செலுத்தி, பகைவரின் காவல்மரமாகிய கடம்பமரத்தை வெட்டி, இமயமலையில்
தனது முன்னோரைப் போன்று வளைந்த வில்லாகிய முத்திரையைப் பொறித்து
நல்ல நகரமாகிய மாந்தை என்னும் ஊரிலுள்ள தன் அரண்மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை மிக்க அழகிய அணிகலன்களையும்,
பொன்னால் செய்த பாவையினையும் வயிரங்களையும், ஆம்பல்
என்னும் பேரெண் அளவுக்கு இடமெல்லாம் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவ்விடத்தில்
நிலம் அரித்துப்போடும்படி விட்டுவைத்திருக்கும் நிதியம் போன்ற பொருளை
ஒருநாளின் ஒரு பகல்பொழுதில் பெற்றாலும், அவர் வரக்கருதியிருந்த நாளுக்கு அடுத்த நாள்
தங்கியிருக்கமாட்டார், வாழ்க, தோழியே! சிவந்த கிளைகளையும்,
கரிய அடிமரத்தையும் உடைய வெண்கடம்பின் வெண்மையான மெல்லிய பூங்கொத்தினைச்
சுருண்டு வளைந்த தலைமயிர் பொலிவுபெறச் சூடி
தமது தொழிலன்றி வேறெதனையும் கல்லாத எயினமறவர்கள் வில்லினை இடப்பக்கத்தில் தழுவிக்கொண்டு
வழியில் வருவோரைப் பார்த்துக்கொண்டிருக்கும் அச்சம் வரும் கிளைவழிகளையுடைய
மொழி வேறுபட்ட வேற்று நாட்டில் இருப்பவர் என்றாலும்
குற்றமற்ற நம் காதலர் தாம் சென்ற நாட்டில் - (வழி நாள் தங்கலர் வாழி தோழி)
					மேல்
#128 குறிஞ்சி கபிலர்
ஊர்ப்பொதுவிடங்கள் ஒலி அடங்கி, வீட்டினரும் உறங்கிவிட்டனர்,
கொல்வதைப் போன்ற கொடுமையோடு இன்று
நடுயாமம் நம்மைக் கொள்வதற்கு வந்தால், காமம் மிகுந்து
கடலைக்காட்டிலும் ஆரவாரித்துக் கரை கடந்து செல்லும்,
இது எப்படியோ, வாழ்க, தோழியே! மயங்கிப்போய்
நாம் இந்த நிலையில் இருக்கவும், நமக்கு நன்மைசெய்யும் இயல்புள்ள நம் நெஞ்சமோ
என்னோடும் உன்னோடும் இருந்து தகுந்த யோசனை கூறாமல், நமது கையைவிட்டு மீறிப்போய்,
புதர்கள் மண்டி இருண்டு கிடக்கும் குறுகலான கடப்பதற்கு முடியாத மலைச்சரிவில் உள்ள
சிறிய சுனையில் உள்ள குவளை மலரை, வண்டுகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டு
குறிஞ்சிநிலத்தவனாகிய நம் தலைவன் வருகின்ற, யானையின்
முதுகில் இருக்கும் கயிற்றுத் தடம் போன்ற மலைமீதுள்ள சிறிய வழியில்,
மேகம் மழைபெய்ததால் நீர் வடிந்து
குறுகிய, செல்வதற்கு அரிய இடங்களிலுள்ள, தாமே உண்டான குழிகளுள்ள பாதையில்
இருளில் மிதிக்கும் இடத்தைப் பார்த்து, அவரின்
தளர்ந்து விழுகின்ற அடியைத் தாங்கும்பொருட்டு இன்று சென்றுவிட்டது - (எவன்-கொல் வாழி தோழி)
					மேல்
#129 பாலை குடவாயில் கீரத்தனார்
இவளைப் பிரிந்தபின் இவளையே எண்ணி வருந்த வேண்டிவரும் என்று நினைத்து
நள்ளிரவில் துன்பத்தால் நடுங்குமளவு அன்புடையவரான நம் துணையாகியவர் -
உன்னை மறந்து வேற்றுநாட்டில் தங்கியிருப்பதற்கு எவ்வாறு முடியும்? புல்லைத் தின்பதை மறந்து
அசையும் நெடிய மூங்கிலிலிருந்து உதிர்ந்த நெல்லைப் பார்த்து
கலைமான் தன் பெண்மானை அழைக்கும் காட்டினில்
பாறையை ஒட்டியிருந்த சிதிலமாகிப்போன குடிசையில்
பெரிய பானையின் அடிப்பகுதியில் செழித்துவளர்ந்த கொழுத்த இலைகளையுடைய பருத்தியின்
பொதி போன்ற வயிற்றையுடைய பிஞ்சினைப் பேடைகளுக்கு உண்பித்து
ஆண்பறவைகள் பிளந்துபோட்ட பஞ்சினையுடைய வெண்மையான கொட்டைகளை
வறுமையுற்ற பெண்கள் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும்
கலங்குவதற்கு ஏதுவான போர் நிகழும் சிற்றூர் மக்கள் கவலையுடன் தம் கைகளைத் தலை மீது வைக்க,
கொழுத்த பசுக்களைக் கவர்ந்து சென்று, கொன்று தின்ற கூரிய ஆயுதங்களையுடைய எயின்மறவர்கள்
கால்களில் செருப்பு அணிந்தவராய், தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும்
அரிய பாலைவழிகள் கடினமானவை அல்ல, நீண்ட கோல்தொழில் அமைந்த வளையல்களையும்
திருத்தமான அணிகலன்களையும், மூங்கில் போன்ற தோளினையும், தேன் மணக்கும் கூந்தலினையும்
குவளைமலர் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட இவளோடு செல்வதற்கு என்று
தம் நெஞ்சில் உள்ளதை வாய்விட்டுக் கூறினார், நம் காதலர்,
அழகிய சிலவாகிய கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய தலைவியே! நமக்கு -(வாய் அவிழ்ந்தனர்)
					மேல்
#130 நெய்தல் வெண்கண்ணனார்
நான் கூறுவதைக் கேளுங்கள், தோழர்களே! முன்னால் நின்று
பார்த்தீர்களென்றால் இவ்வாறு கூறமாட்டீர்கள்;
நுண்மையான பூந்துகள்கள் பொதிந்திருக்கும், சிவந்த தண்டினையும் கொழுத்த மொட்டினையும் உடைய
கழிமுள்ளியையுடைய உயர்ந்த மணல் அடைந்திருக்கும் கரையினில்
பேய் போன்ற தலையையும், சொரசொரப்பான அடிப்பகுதியையும் உடைய தாழையின்
முள்ளாகிய பற்களையுடைய நீண்ட தம் ஓலைகள் பலவும் சேர்ந்து பாதுகாத்துநிற்கும்
தனது வயிற்றில் உள்ள மலர் தூய்மையாக விரிந்து
அங்கிருக்கும் புலால் நாற்றத்தைப் போரிட்டு அழித்த நறுமணம் கமழும் நெய்தல் பரப்பினில்
ஊர்ந்துவரும் அலைகள் கொணர்ந்த குளிர்ந்த, ஒளியினையுடைய முத்துக்கள்
கண்டோர் உள்ளத்தைக் கவரும் அழகிய நடையினையுடைய குதிரையின் காலினை வடுப்படுத்தித் தடுக்கும்
நல்ல தேரையுடைய பாண்டியனின் கொற்கை என்னும் பட்டினத்துக் கடல்துறை முன்பு
வண்டுகள் கிளறியதால் வாய் திறந்த, வளைவான கழியில் உள்ள நெய்தல்
பூவானது அழகினில் போட்டிபோடமுடியாமல் தோற்றுப்போன மையுண்ட கண்களின்
காதல் கனிந்த ஒளிமிக்க முகத்தின்கண்ணே செருக்கிய பார்வையினை - (கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ)
 
மேல்
					மேல்
#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வானளாவ உயர்ந்த கருமையான அடிப்பகுதியையுடைய இகணை மரத்தின்
பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை அருகருகே செறிவாக வைத்ததைப் போல
வண்டுகள் மொய்த்து இருண்டு தாழ்ந்த பெரிய கூந்தலையும்
வண்டுகள் தேனை உண்ணும்படி மலர்ந்த பெரிய குளிர்ச்சியான மாலையையும் உடைய
இவளைக் காட்டிலும் நமக்கு ஈதல் சிறந்தது என்று -
சீழ்க்கை போன்று ஒலித்துச் செல்லும் அம்புகளைச் சிறப்பாகத் தொடுக்கும் வெட்சி மறவர்
விடியற்காலத்தில் பசுக்களைக் கவர்ந்துசென்ற அச்சம்தரும் கொடிய பாலை வழியிலே,
போரிட்டு, அப் பசுக்களை மீட்டு வரும்போது நெடுந்தூரம் கடந்து வருவதால் நடை ஓய்ந்து நின்றுவிட்ட கன்றின்
கடைக்கண்ணிலிருந்து ஒழுகும் நீரைத் துடைத்துவிட்ட கரந்தை வீரர்களுள் போரில் மடிந்த மறவருடைய,
பெயரும், சிறப்பும் பொறித்து வழிகள்தோறும்
மயில்தோகையினைச் சூட்டிய விளக்கமான நிலையினையுடைய நடுகல்லின் முன்னர்
வேலும் கிடுகும் ஊன்றியிருக்க, அந்த இடம் பகைவர் போர்முனையைப் போலத் தோன்றும்
அச்சம்வரத் தக்கதான காட்டுவழியில், நம்முடன்
வருக என்று சொல்வாயானால்
நான் வரமாட்டேன் நெஞ்சமே! நீ நினைத்த காரியம் உனக்குக் கைகூடுவதாக!
					மேல்
#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
தினையும் முதிர்ந்து வளைந்த கதிர்கள் அறுக்கப்பெற்றன, காம நோய் மிகுந்து
இவளின் ஆராய்ந்து போற்றும் அழகு தொலைந்துபோன நெற்றியைக் கூர்ந்து கவனித்து
பொருத்தமற்ற பழிச்சொற்களை இந்த ஊர்மக்கள் பேசலாயினர், எனவே,
களிற்றின் மதம் பொருந்திய கன்னத்தையுடைய முகத்தைப் பிளந்த அம்பினையும்,
வெண்மையான நிணமாகிய உணவினையும் உடைய குறவரின் பெண்ணாகிய
அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களையும், அழகிய இமைகளுடன் கூடிய குளிர்ந்த கண்களையும்
துவளுகின்ற இயல்பினையும் உடைய இக் குறிஞ்சிப்பெண் மீது இரக்கம்கொண்டவனென்றால்
இவளை மணம்முடித்து அழைத்துச் செல்க, நுண்ணிய வேலைப்பாடுள்ள அணிகலன் பூண்ட மார்பினனே!
வானம் மழைத்துளியை முதலில் பெய்யும் மலைச் சாரலில், பெரிய சுனையில்
மலராத மொட்டினை மலரச் செய்த குறுகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள்
வேங்கைமரத்தின் விரிந்த பூங்கொத்துகளில் தேன் பருகி, காந்தளின்
தேனையுடைய குவிந்த மலர்க்கொத்துகளில் உறங்கி, யானையின்
பெரிய கன்னத்தில் ஒழுகும் மதநீரை உண்பதாகக் கனாக்காணும்
பெரிய மலையை அரணாகக் கொண்ட வாழ்வதற்கு இனியதாகிய உன்னுடைய ஊருக்கு - (கொண்டனை சென்மோ)
					மேல்
#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றிமணி போன்ற கண்களையும், நல்ல நிறமுள்ள மயிரினையும்,
மெல்லிய கால்களையும் உடைய வெள்ளெலியின் எடுப்பான மோவாயையுடைய ஆணானது
சிவந்த சரளைக்கற்கள் உள்ள கட்டாந்தரையில் வளை தோண்டியதால் மேலே வந்து கிடக்கும் புழுதியில்
நல்ல நாளைத் தெரியப்படுத்தும் வேங்கை மலர்கள் உதிர்ந்து நல்ல வெறியாடுகளம் போல அழகுசெய்ய,
கார்ப்பருவம் வந்ததால் பசுமை பெற்ற புதர்களையுடைய முல்லைநிலத்தில்
வில்லினால் அடிக்கப்பெற்ற பஞ்சு போல வெண்மையான மேகங்கள் தவழ்ந்திடும்,
கொல்லையாகிய புதிய புனங்களையுடைய சிறிய மலையின் பக்கத்தில்,
கரி பரவியதைப் போன்ற காயா மலர்களின் வாடலோடு
தீப் பரவியதைப் போன்ற இலவமலர்கள் கலந்துகிடப்பதால்,
பூக்களாகிய கலங்கலைச் சுமந்துவரும் இனிய நீரையுடைய காட்டாற்றிலிருந்து
காற்றானது எழுப்புதலால் மேலே எழும் துளிகளையே உண்ணுகின்ற
என்னுடன் வருவதற்கு உன்னால் முடியுமா என்று
பெருமைதங்கிய ஒரு வினாவை எழுப்பினார்; தோழியே!
கவுதாரியின் காலில் உள்ள முள்ளைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த வெட்சிப்பூக்கள்
தினைப்புனத்தில் வெட்டியெறியப்பட்ட குருந்த மலர்களோடு கலந்து கற்பாறைகளில் பரவிக்கிடக்கும்
மிளை நாட்டிலுள்ள பாலைவழியில் உள்ள ஈரமான மேட்டுநிலத்தில் செழித்து வளர்ந்த
வரிகளையுடைய மரலின் மடலைக் கொறிக்கும் மடப்பத்தையுடைய பெண்மானுடன்
முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான்களையுடைய காட்டினைக் கடந்து சென்ற நம் காதலர்.
					மேல்
#134 முல்லை சீத்தலை சாத்தனார்
மழை தப்பாது பெய்வதால் காடு அழகுபெற்று
நிறைந்த சூலினையுடைய கரிய மேகங்கள் கார்காலத்தை உண்டாக்கித் தங்கியதால்
நீலமணிகளைப் போன்ற காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
சிவந்த முதுகினைக் கொண்ட இந்திரகோபப் பூச்சிகள் பரவியிருப்பதோடு, நல்ல பல
முல்லைப்பூக்கள் உதிர்ந்து பரந்துகிடப்பதால், ஓவியத்தில் வல்லவன்
செய்த ஓவியம் போன்ற சிவந்த நிலமாகிய முல்லைப் பரப்பினில்,
சீராகப் பாய்ந்து செல்லும் தாள ஒழுங்கு சிறந்து விளங்கும் ஓட்டத்தையுடைய செருக்குடைய நம் குதிரைகளின்
தாவிச் செல்லும் இணையொத்த கால்கள் மெல்லென நடக்கும்படி,
தார்க்குச்சியின் முள்ளால் அவற்றைக் குத்தாமல் செலுத்துவாயாக, வலவனே! குவிந்த மொட்டுள்ள
வாழைப்பூவின் பெரிய சீப்புகள் முதிர்ந்து (அந்த மொட்டும்) உதிர்ந்துபோய்
மீந்திருக்கும் குலைக்காம்பினைப் போன்ற முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மானுடன்
திரண்ட கால்களையுடைய அழகிய பெண்மான் விருப்பத்தோடு கூடுகின்ற நிலை
நமது வேகமாகச் செல்லும் குதிரைகள் பூண்ட தேரின் ஒலியினைக் கேட்டால்
இந்த நண்பகலில் அவை சேர்ந்திருப்பது நிகழ்வதும் உண்டோ? (நிகழாது அல்லவா!)
					மேல்
#135 பாலை பரணர்
எனது அழகுத்தேமல், மாமை நிறம் ஆகியவற்றின் தளிர் போன்ற அழகு கெட்டுப்போகும்படி
புதர்களில் படர்ந்த பீர்க்கின் புதிய பூவைப் போன்று
பசலை படர்ந்த நெற்றியையுடையவள் ஆகி,
ஓவியர்கள் பார்த்து வரைவதற்குரிய அழகிய குளிர்ச்சியான கண்கள் அழும்படி பிரிவுத்துயர் மிகுந்து
ஆதிமந்தி போல அறிவு திரிந்து
நான் மயங்கித் துன்புறுகின்றேன், என்னிடம் அன்புடைய அழகிய தோழியே!
வெயில் காய்கின்ற கதிரவன் கடுமையாவதால் காற்று மிகுந்து விரைவாக வீசுவதால்
அசையும் தளிரினையுடைய இலுப்ப மரத்தின் உள்ளே ஒன்றுமற்ற குவிந்த வெண்மையான பூக்கள்
யானைத் தந்தத்தைக் கடைந்து செய்ததைப் போன்ற கழங்கினைப் போன்று பாறை மீது பரவிக்கிடக்கும்
காட்டைக் கடந்து சென்றனர் நம் காதலர்; பகைவரைக் கொல்லும் போரினையும்,
நீங்காத சிறந்த புகழினையும் வானளாவிய பெரிய குடையினையும்  உடைய
பதினான்கு வேளிர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய,
கழுவுள் என்பானுடைய காமூரைப் போல
கலங்கிநிற்கிறது, அவர்  நம்மைப்பிரியமாட்டார் என்று உறுதியாய் இருந்த என் நெஞ்சம்.
					மேல்
#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்மையான சோற்றை
வேண்டியவர், வேண்டாதார் என்ற வரையறை அற்ற கொடைத்தன்மையுடன், உயர்ந்த சுற்றத்தாரை உண்பித்து
பறவைச் சகுனம் இனியதாகக் கூடிவர, தெளிவான ஒளியையுடைய
அழகிய இடம் அகன்ற வானம் பொலிவுடன் விளங்குமாறு, திங்களானது
உரோகிணியைச் சேரும் குற்றமற்ற நல்ல நாள் சேர்க்கையில்,
திருமண வீட்டை நன்கு அலங்கரித்து, கடவுளைத் தொழுது,
முழங்குகின்ற மண முழவுடன், பெரிய மண முரசம் ஒலிக்க,
மணமகளுக்கு மணநீராட்டிய மகளிர், விரைவாக,
தம் மலர் போன்ற கண்களாலும் இமையாதவராய் நோக்கிப் பின் மறைந்துகொள்ள,
மெல்லிய பூவையுடைய வாகையின் பொலிவற்ற பின்புறத்தையுடைய பிளவுபட்ட இலையை,
முதிய கன்று கொறித்த பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்லின்
முழங்குகின்ற குரலையுடைய மேகத்தின் முதல் மழை தோற்றுவித்த
கழுவிய நீலமணியைப் போன்ற கரிய இதழையுடைய கிழங்கிலுள்ள
குளிர்ந்த மணமுள்ள அரும்புடன் சேரக்கட்டிய வெண்மையான காப்புநூலை அணிந்து,
தூய திருமணப் புடவையால் பொலிவுபெறச் செய்து, விருப்பத்துடன் ஒன்றுகூடி,
மழை பெய்ததைப் போன்ற ஒலியையுடைய புதுமணல் மிக்க மணப்பந்தலில்
அணிகலன்களை அணிந்ததனால் உண்டான சிறந்த அழகுடன், தோன்றிய வியர்வையை விசிறியால் ஆற்றி,
சுற்றத்தார் இவளை நமக்குத் தந்த முதல்நாள் இரவிலே,
வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் இவளை
கசங்காத புத்தாடையால் உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டதால்
’மிகுந்த புழுக்கம் எய்திய உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் அரும்பிய வியர்வைத் துளிகளை
அங்கு வரும் காற்று ஆற்றிவிட சிறிது நேரம் அந்த ஆடையைத் திற’ என்று கூறி,
ஆர்வம் உள்ள நெஞ்சத்துடன் போர்த்தியிருந்த புடவையைப் பற்றி இழுத்ததால்
உறையை விட்டு உருவப்பட்ட வாளினைப் போன்று அவளின் உருவம் வெளிப்பட்டு விளங்க
திறந்த மேனியை மறைக்கின்ற வழி அறியாதவளாய்ச் சடக்கென்று
வெட்கப்பட்டவளாய்க் குனிந்துகொண்டாள் - தன் அழகைப் பாதுகாத்து,
பருமனில் தன் இடைக்குப் பகையாகிய ஆம்பல் மலரின் நிறம் மிக்க மாலையை அகற்றி,
வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்தெடுத்த மலர்களைச் சூடின
பெரிய பலவாகிய தன் கரிய கூந்தலை இருண்ட போர்வையாகக் கொண்டு தன்னை மறைத்துக்கொண்டு - 
					மேல்
#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
வழியே செல்லும் புதியவர்கள், சேற்றைக் கிண்டி ஊறிய நீரை உண்ட
பலவான சிறிய பள்ளங்களைத் தன் பெண்யானையின் அடிச்சுவடு என்று விரும்பி
ஆண்யானை தொட்டுப்பார்த்துக் கடந்து செல்லும் காட்டாற்றினையுடைய அப் பாலை வழியில்
சென்று சேர்வதற்கு நம் தலைவர் ஒப்பமாட்டாரென்றாலும், உனக்கு,
பகைவரை வென்று அடிக்கும் வீரமுரசினையும், வெற்றி தரும் பேராற்றலையும் உடைய சோழர்களின்
இனிய, கடுப்பு மிக்க கள்ளினையுடைய உறையூரில்
வருகின்ற நீர் இடிப்பதால் இடிந்து விழும் கரைகளையுடைய காவிரி என்னும் பெரிய ஆற்றின்
அழகிய வெண்மையான மணலையுடைய தேன் மணம் கமழும் குளிர்ந்த சோலையில்
பங்குனி மாதத்தில் முழுமதியும் உத்திர மீனும் கூடுகின்ற விழாநாள் கழிந்த அடுத்த நாளில்
மலர்களும் இலைகளும் செறிந்த வளமான மரங்கள் அடர்ந்த குறுங்காட்டினூடே
நெருப்பு இல்லாத அடுப்புகளையுடைய திருவரங்கமாகிய தீவினைப் போலப்
பெரிதும் அழகிழந்த நிலையினைக் கொண்டது உன் நெற்றி; தோள்களும்
துளையிடப்படாத முழு முத்துக்களையுடைய தெளிந்த கடலையுடைய வீரனாகிய
திண்ணிய தேரையுடைய பாண்டியனின் பொதிகை மலையின் உச்சிச் சரிவில் உள்ள
நல்ல அழகிய நீண்ட மூங்கிலை ஒத்த
பழைய அழகு கெட்டன; நான் வருந்துகின்றேன்.
					மேல்
#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
என் நட்புக்குரியவளே! என்மீது அன்புகொண்ட தோழியே! கேட்பாயாக!
குவளை மலரைப் போன்ற எனது மையுண்ட கண்களில் தெளிந்த நீர் ததும்ப,
நான் வீணே சிறிது வருந்திய துன்பத்தினைக் கண்டு, தாயானவள்
காரணம் வேறொன்றாகக் கருதி ஐயமுற்றவளாய், வேம்பின்
மணமுடைய பசிய இலையுடன், நீலப்பூக்களைச் சூடி,
எதிர்த்த பகைவரை வெற்றிகொண்ட கடல் போன்ற சேனைகளையும்
திருத்தமான இலையைக் கொண்ட நீண்ட வேலினையும் உடைய பாண்டியனின் பொதிகை மலையின்
ஏறமுடியாத உச்சியிலிருந்து இறங்குகின்ற ஆரவாரத்துடன் வருதலையுடைய அருவியினைப் போன்று
முழங்கும் இசையினையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, கைகூப்பித்தொழுது
அச்சம் பொருந்திய தலைமைப் பண்புடைய முருகனை வீட்டுக்கு வருவித்து
அவனது கடம்ப மரத்தையும் களிற்றினையும் பாடி, வளைந்து வளைந்து -
முருகனின் பனந்தோட்டையும் கடப்ப மாலையையும் தாமும் கையினில் கொண்டு - இரவெல்லாம்
வெறியாடுவார் ஆவது நம் தகுதிக்கு நல்லதோ? நெடுநாளாக
உன்னிடம் ‘மணம் முடித்துக்கொள்வேன்’ என்று தெளிவாகக் கூறிய நல்ல மலைக்குரிய நம் தலைவன்
நம்மை இரவில் பார்க்கும் இடத்திற்கு வரும் நடு யாமத்தில், குன்றின் உச்சியில்
வழிதப்பிப்போகும்படி உண்டாகிய அணுகமுடியாத மிக்க இரவினில்
தனது அழகிய முடிமணியை இரைதேடுவதற்காக உமிழ்ந்த நாகப்பாம்பு, காந்தளின்
கொழுத்த மடலையுடைய புதிய பூவினில் தேன் பருகும் வண்டின்
நல்ல நிறத்தைக் கண்டு அது தன் மணியோ என ஐயப்பட்டு மயங்கும் அரிய பிளவுகளையுடைய
துயர்தரும் நெடிய வழியை என் நெஞ்சு நினைத்துக் கவலைப்படும். 
					மேல்
#139 பாலை இடைக்காடனார்
கண்ணை மூடி உறங்குவது போல இருண்டு, வானத்தைப் பிளந்து
கண் இமைப்பது போல மின்னி, கடல் நீரை முகந்துகொண்டு
வானத்தில் ஏறுவது போல முழக்கம் மிக்குத் திசையெல்லாம் பரவி,
நிலம் நெஞ்சு துணுக்குற ஓயாமல் இடிஇடித்து 
மிக்க நீரைச் சொரிந்த நீண்ட மழையைக் கொண்ட கார்காலத்தின் கடைசிநாளில்
மழையைப் பொழிந்து தமக்குரிய காலம் கழிந்துபோன தூய்மையில்லாத வெண்மேகங்கள்
விண்ணைத் தொடும் உயர்ந்த மலையுச்சியில் தவழும் வைகறையாகிய
மூங்கிற்புதர்கள் காலை ஒளியில் சிறந்து விளங்கும் காண்பதற்கு இனிய காலத்தில்
குளிர்ந்த மணமுள்ள குளத்து நீரை நிறையப் பருகி, அறுகம்புல்லை மேயும்
வெண்ணிற முதுகினையுடைய முறுக்குண்ட கொம்பினைக் கொண்ட ஆண்மான்
நீண்டமணலின் ஒரு பக்கத்தில் பிடவம்பூக்கள் மலர்ந்திருக்கும் நிறைந்த நிழலில்
அழகிய காதல் துணையாகிய பெண்மானுடன் இன்பம் பொருந்தத் தங்கியிருக்க,
செவ்வரக்கு நிறத்தையுடைய அழகுடைய இந்திரகோபப் பூச்சிகள்
பரப்பி வைத்ததைப் போல் பலவும் ஒன்றாகச் சேர்ந்து பரவிக்கிடந்து
நீர் ஒழுகும் ஈரமான இடத்தில் அழகுடன் திகழ,
இன்னும் நம் காதலர் வரவில்லையெனில், நல்ல நெற்றியையுடைய தோழியே!
அவரது நிலை எப்படிப்பட்டதோ? காதலர்,
மின்னல் முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள் இடியைத் தம்மிடம் கொண்டுள்ள
இந்தப் பருவம் அன்றோ! அவர் ’திரும்பி வருவேன்’ என்று கூறியது
					மேல்
#140 நெய்தல் அம்மூவனார்
பெரிய கடலில் மீன்வேட்டையாடும் சிறு குடியில் வாழும் பரதவர்
பெரிய உப்பங்கழியான வயலில் உழாமலேயே விளைவித்த
வெண்மையான கல் உப்பின் விலையைக் கூறி
கதிரவனின் வெம்மையால் வெடித்த பிளவுகளையுடைய குன்றுகளைக் கடந்துபோகும்,
காளைகளை விரைவாகச் செலுத்தும் கோலையுடைய உப்புவண்டிக்காரரின் அன்பினையுடைய இளைய மகள்
சிலவாகிய திரண்ட ஒளிவீசும் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி,
நெல்லுக்குச் சமமான அளவே தன் வெண்மையான கல் உப்பு என்று
சேரியில் பண்டமாற்றாக விலைகூறிப் போவதால், வீட்டிலுள்ள
குரலைவைத்து இன்னார் என்று அறியும் நாய் குரைக்க, அதனால் வெருண்டுபோன
செழுமையான கயல்மீன்கள் எதிர்த்துப்போரிடுவது போன்ற அவளின் கண்கள், எமக்கு
புதிய கொல்லையை ஆக்கும் குறவன் செடிகொடிகளைச் சுட்டெரிப்பதால் எழுந்த புகையின் நிழலைப் போன்ற
பழமையான கரிய சேற்றில் அழுந்திய வண்டிச் சக்கரத்தின்
இடர்ப்பாடு நீங்க, வருந்தி இழுக்கும் அவள் தந்தை
கையில் பிடித்த காளையைப் போல வருந்தி
வெம்மையாக மூச்செறியும் நோய் ஆகின்றது.
					மேல்
 



#141 பாலை நக்கீரர்
வாழ்க தோழியே!  நான் சொல்வதைக் கேட்பாயாக, மிகவும்
இனியவாய் அமைகின்றன இரவுதோறும் கனவுகளும்; நனவிலும்
ஓவியங்களால் அழகுசெய்யப்பட்ட நல்ல இல்லத்தில் பறவைச் சகுனங்கள் நல்லனவாகவே அமைகின்றன;
என் நெஞ்சமும் அவலம் கொள்ளாமல் அவர் வரவை மிகவும் விரும்பி அமைதிகாக்கிறது; 
உலகில் உழுதொழில் முடிந்து, கலப்பைகள் ஓய்ந்திருக்க,
மழை பெய்யும் கார்ப்பருவம் நீங்கிப்போன, மாகமாகிய விசும்பில்
குறுமுயல் போன்ற களங்கம் தன் மார்பினில் விளங்க, திங்கள் முழுமை பெற்று
கார்த்திகை மீன்களைச் சேரும் இருள் அகன்ற நள்ளிரவில்,
தெருவில் விளக்குகளை ஏற்றிவைத்து மலர்மாலைகளைத் தொங்கவிட்டு
பழமையான வெற்றியையுடைய முதிய ஊரில் பலருடன் ஒன்றுசேர்ந்த
திருவிழாவை நம்முடன் கொண்டாட வருவாராக;
நீராடியபின் புகையூட்டியதால் முற்றுமாக உலர்ந்து, தூய மலர்கள் செறிக்கப்பட்டு,
தகர மரத்திலிருந்து செய்யப்பட்ட மணமுள்ள மயிர்ச்சாந்து மணக்கும் குளிர்ச்சியான நறிய கூந்தலையுடைய
புதிய மணமகள், பல்வேறு உணவுவகைகளையுடைய திருமண வீட்டில்
பல குமிழ்களையுடைய அடுப்பில் பாலை உலைநீராக இட்டு
குட்டையான கூந்தலையும், குறிய வளையல்களையும் உடைய மகளிருடன்
பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களைக் கொய்து
பச்சை அவலை இடிக்கும் கருமையான வயிரம்பாய்ந்த உலக்கையின்
வேகமான இடிக்கு அஞ்சிய நிறைசூல் கொண்ட வெண்ணிறக் கொக்கு
இனிய குலையினையுடைய வாழையின் உயர்ந்த மடலில் அமராமல்
நெடிய அடிமரத்தைக் கொண்ட மா மரத்திற்குச் செல்ல குறுகியதாய்ப் பறந்து செல்லும் -
இடம் மாறிச் செல்ல எண்ணும் குடிமக்களைப் பாதுகாக்கும் பெரும் புகழைக்கொண்ட கரிகாலன் என்னும்
வெல்லும் போரினையுடைய சோழமன்னனின் - இடையாறு என்னும் ஊரினைப் போன்ற
நல்ல புகழையுடைய செல்வத்தை ஈட்டிவருவதற்காக, பல புள்ளிகளைக் கொண்ட
புலியின் நிறத்தையுடைய பூக்களிடையே, பெரிய கிளையினையுடைய
நாரத்தை மரத்தின் மணமுள்ள அழகிய மலர்கள் உதிர, 
குரங்குகள் பாய்ந்து தாவும் மலையில் உள்ள வேங்கை மரங்களையுடைய,
தேன் கமழும் நெடிய உச்சிகளால் சிறப்புற்ற
வேங்கட மலையைச் சார்ந்த ஊர்களையுடைய பாலை வழியில் சென்றோராகிய நம் தலைவர்.
					மேல்
#142 குறிஞ்சி பரணர்
இலவம்பூ போன்ற அழகிய சிவந்த நாவினால்
புலமையால் உயர்த்திக் கூறப்படும் சான்றோர்கள் புகழ,
பலரைக் காட்டிலும் மேலான, கொடுப்பதால் கவிந்த கைகளையுடைய வள்ளலான
நிறுத்த முடியாத சேனையையுடைய, போரினை வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற
வறியவர்களின் பாத்திரங்கள் நிறைந்திருப்பது போல மிகவும்
நிறைவுற்று மகிழ்வாயாக! வாழ்க! என் நெஞ்சமே! நம் காதலியானவள்,
நீதி முறையிலிருந்து வழுவாமல், தன் கடமையினைச் செய்து பெற்ற
உரல் போன்ற அடியினைக் கொண்ட யானையினையுடைய நன்னனின் பாழியிலுள்ள
களவேள்வி செய்து ஊட்டுவதற்கு அரிதாகிய தன்மையினையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு
ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட உண்மையே பேசும் மிஞிலி என்பவன்
பறவைகளுக்குப் பாதுகாவலாகிய பெரும் புகழினையுடைய
வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பவனைக் கொன்று மகிழ்ந்து
ஒள்வாள் அமலை  என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்கள நிகழ்ச்சியைப் போன்று,
பலரும் அறிந்து அலர் தூற்றுவதற்கு அஞ்சி, மெல்ல மெல்ல,
நீரைத் திரட்டிய திரட்சியைப் போன்றிருக்கும் குற்றமற்ற வெள்ளியினாலான
வளைவான திரண்ட வளையல்கள் செறிக்கப்பெற்ற முன்கையையுடையவளாய்
நீர் குறைந்து பாயுமிடத்திலுள் படிந்த கருமணல் போன்ற கருமையான பலவாகிய கூந்தல்
அகலமற்ற தனது சிறிய முதுகில் அணிகலன்களோடு சரிந்து புரள
கடல் மீன்கள் துயிலும் நள்ளென்று ஒலிக்கும் இடையாமத்தில்
அழகு மிகுகின்ற, செய்தொழிலால் பொலிவுபெற்ற பாவையானது
நடக்கப் பழகினதைப் போன்று நடந்து வந்து
மழை அலைத்ததால் கலங்கிய மலைப்பூக்களாலான மாலையிலிருந்து
உலைக்களத்தில் அடிக்கும்போது தெறித்து விழும் பொன் துகள் போன்று தேன் துளித்து விழ
தன் தோள்வளையின் கண் வடு உண்டாக்கும்படி என்னைத் தழுவினாள்,
நன்றாக வடித்த யாழ்நரம்பின் ஒலியினைப் போன்ற இனிய மொழிகளைக் கூறி.
					மேல்
#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
பொருளீட்டும் செயலுக்காகப் பிரிந்துசெல்வதை எண்ணி, அளவுகடந்து -
காடு அழகுகெட்டுப்போகும்படி - கடுமையான ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால்,
நீண்ட கிளைகள் ஒன்றுமில்லாமற்போகும்படி, ஒல்லென்னும் ஓசையுடன்
வாடிப்போன பலவான அகன்ற இலைகள் மேல்காற்றுக்கு உதிர்ந்துபோகும்
தேக்குமரங்கள் செறிந்த மலைச்சாரலாகிய அவ்விடத்தில், (மேலே எழுந்து),
காய்ந்துபோன புதர்களில் உண்டான காற்றால் பெரிதாக்கப்பட்ட பெரும் தீயின்
ஒளிமிக்க நெடிய தீக்கொழுந்து, (மேலே எழுந்து), மலைப் பிளவுகளாகிய குகைகளில் முழங்கும்
வெப்பம் மிக்க மலையிலுள்ள கடப்பதற்கு அரிய வழியைக் கடந்து, ஐயனே!
செல்வேன் என்ற சிலவான உன் சொற்களைக் கேட்டதற்கே, இவளுக்கு -
பழிச்சொல் இல்லாத கொடிய போரில் வல்ல சேரனின் படைத்தலைவனான,
பரிசிலை விரும்பி வாழ்பவர்க்கு நல்ல அணிகலன்களை ஈயும்
குறிதப்பாமல் வெற்றியையே வாய்க்கும் வாளினையும்,புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பவனின்
மேகங்கள் தவழுகின்ற உயர்ந்த உச்சியையுடைய குதிரைமலையின் உச்சிமலைச் சரிவில்
அகன்ற பாறையிலுள்ள நெடிய சுனையில் உள்ள மழைத்துவலையால் மலர்ந்த
குளிர்ச்சியான மணங்கமழும் நீலமலரிலிருந்து நீர் ஒழுகுவது போல
கண்கள் நீரைச் சொரிந்தன, அதைக் கண்டு நான் வருந்துகின்றேன்.
					மேல்
#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
”பிரிந்து செல்கையில், திரும்பி வருவேன் என்று தலைவர் சொல்லிச்சென்ற நாளும் பொய்த்துவிட்டது,
செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களும் நீரை நில்லாமல் சொரிகின்றன,
குளிர்ந்த மழையால் அரும்பிய பசிய முல்லைக்கொடியின் 
கூர்மையான நுனியைக் கொண்ட வெண்ணிற மொட்டுகள் மலர்ந்தன, மலர் மாலை
அணிதலால் உண்டாகும் அழகினை இழந்துவிட்ட நமது கூந்தலையும் நினைக்கவில்லை,
நம்மீது கொண்ட இரக்கம் மாறிப்போனாலும் போகட்டும், 
அறத்திற்கும் அஞ்சுகின்றார் இல்லை, ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே! நமது காதலர்” என்று
சிலவாகிய சொற்களைச் சொல்லிப் பெரிதாக வெறுப்படைந்தாலும்,
குளிர்ச்சி பொருந்திய மணம்மிக்க மாலை குழைந்துபோகும்படி, நம்முடன்
வெறுப்புக்கொண்டது தீர்ந்துவிட்ட தழுவலைப் பெற்றவள் போல
மகிழ்ந்துபோவாள் அன்றோ! வாழ்க! என் நெஞ்சமே! வானத்தில்
இடி தோன்றி முழங்கினாலும், அதற்கு மாறாகத் தாமும் எழுந்து பிளிறுகின்ற
மதங்கொண்ட யானைகள் சுழன்றுதிரியும் நமது பாசறையிலிருந்து
போரை விரும்பி எழுந்த வீரமறவர்கள், கையிலுள்ள
கூர்மையான வாளின் குவிந்த வாய் சிதைந்துபோகும்படி பகைவரைக் கொன்றழித்து
தமது குதிரைகளின் குளம்பு பட்ட குழிகளில் பாய்ச்சிய குருதி
வானத்து மீன்களைப் போல இடங்கள்தோறும் மின்ன,
நாம் மேற்கொண்ட போரை ஆராய்ந்து பகைவரைக் கொன்று பெற்ற நமது வெற்றிச்செல்வத்தை
நம் சுற்றத்தார் விரைந்து சென்று சொல்லக் கேட்கும்போது - (மகிழ்ந்துபோவாள் அன்றோ!)
					மேல்
#145 பாலை கயமனார்
வேர் முழுவதும் காய்ந்துபோய் நின்ற துளையுள்ள (உள்ளீடற்ற) அடிப்பகுதியையுடைய,
தேரில் கட்டப்பட்ட மணி ஒலிப்பதைப் போன்று சில்வண்டுகள் ஒலிக்கின்ற
வற்றலான மரத்தில் உள்ள பொன் நிறத் தலையையுடைய பச்சோந்தி
வெயிலால் அழகு இழந்த ஊர்களில் வருத்தம் கொண்டு,
மெதுவாக உடலை நிமிர்த்தி நிற்கும் வெண்ணிற ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டில்
ஆட்கள் புழங்காத பாழ் வழியில், இரங்கத்தக்கவளாகிய என் மகள், ஓர் அன்னியனுடன்,
வாள் போன்ற வரிகளையுடைய புலியுடன் போரிட்ட புண் மிக்க யானை
புள்ளிகள் சிதைந்த முகத்தினையுடையதாய், குருதி கொட்ட,
உயர்ந்த உச்சிகளைக் கொண்ட நெடிய சிகரத்தில் இடிக்கும் இடியினைப் போன்று முழங்குகின்ற
அரிய பாலை நிலத்தைக் கடந்துசென்றாள் என்று கூறுகின்றனர்; பெரும் புகழையுடைய
அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் திதியன் என்பவனின்
நெடுநாள் நிற்கும் அடிமரம் துண்டாகும்படி செய்த
நல்ல மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தைப் போல
மிகுந்த துன்பத்தை அடைவன ஆகுக; களிக்கின்ற மயில்கள்
யானை பிளிறுவது போன்ற குரலையுடைய யானையங்குருகு என்னும் பறவைகளோடு சேர்ந்து ஒலிக்கும்
ஓய்வில்லாத முழவையும், அனைத்தையும் வேண்டும்படி நுகர்ந்து வாழும் வாழ்க்கையினையும்
நெல்முதலிய உணவுப்பொருள்களையும் உடைய தன் தந்தையின் அகன்ற இடமுள்ள மாளிகையில்
மெதுவாக அடியெடுத்துவைத்தாலும் வருந்தும் இயல்புடைய, ஐந்து பகுதியான
சிறிய பலவான கூந்தலை வேய்ந்த மாலையுடன் கையால் பிடித்து, இரக்கமில்லாமல்
குச்சியே சிதைந்துபோகும்படி அடிவெளுக்கவும், "என் முதுகு
எனக்கு உரியது, அடிக்காதே" என்று சொல்லாமல் பொறுமையுடன் நின்ற எனது
அமர்த்த கண்களையுடைய மகளை அடித்துத் துன்புறுத்திய என் கைகள் - (மிகுந்த துன்பத்தை அடைவன ஆகுக) 
					மேல்
#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
உறுதிமிக்க உடல் வலிமையையும், தலைமைப் பண்பையும் உடைய எருமைக்கடா
குளிர்ச்சியான மலர்களையுடைய பொய்கையில் பகற்பொழுது கழியத் தங்கியிருந்து,
மடப்பத்தையுடைய கண்களையுடைய மாட்சிமை பொருந்திய பெண் எருமையினை அணைந்துவிட்டு,
தோட்டங்களை அடைந்து வயல்வெளியில் தங்குகின்ற,
ஆரவாரமும் மகிழ்ச்சியுமுடைய மருதநிலத் தலைவனின் ஒலிக்கின்ற மணிகளையுடைய நீண்ட தேரானது
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பரத்தையரின் சேரிப்பக்கம் பலநாட்கள்
செல்லவில்லை என்றால், ஒளிரும் அணிகலன்களை அணிந்த அவள்
யாரோ? அவள் இரங்கத்தக்கவள்! என்னைப் போல்
பொய்யையே மெய்போல் பேசுகின்ற பரத்தமைத் தொழிலையுடைய அவன் கூறும் மொழிகளை நம்பி
காற்று மோதுவதாலே அசைகின்ற மழை பொழிந்த காலத்து மலரைப் போன்று
கண்கள் நீரினை மார்பில் சொரிய, கண்கள் வெளுத்து,
தோழிமாரும்,அயலாரும் மருண்டு நோக்க,
தாய் பேணிய, பலரும் ஆய்கின்ற அழகினைப் பேண விரும்பாத அந்தப்பேதை - (யார்-கொல் அளியள் தானே)
					மேல்
#147 பாலை ஔவையார்
உயர்ந்த மலைச் சாரலில், பிடவம்பூவுடன் சேர்ந்து மலர்ந்த
வேங்கையின் மணங்கமழும் பூவுடன் கூடிய தழையை தனித்தனியாக வகுத்து வைத்ததைப் போன்ற
தசையினால் மூடியிருப்பது நீங்காத வளைந்த நகங்களைக்கொண்ட குட்டிகள்
மூன்றை ஒன்றாகப் பெற்றதும், முடக்கமான இடத்தில் மெலிந்துபோய்க்கிடப்பதுவும்
பாறையின் பிளப்பாகிய குகையினிலுள்ளதுமான பெண்புலிக்கு மிகவும் பசித்ததினால்
புள்ளிகள் திகழும் பிளந்த வாயையுடைய ஆண் புலி
வளைவு வளைவான கொம்பினையுடைய உழையாகிய ஆண்மானின் குரலினை உற்றுக்கேட்கும்
பிரிந்துசெல்லும் பாதைகளையுடைய நடந்து முடியாத நீண்ட காட்டில்
தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போலப் பெரிதும்
செல்லத்துணிந்தேன் நானே; பலவற்றையும் வெறுத்து
உண்ணாத வருத்தத்தால் உயிர்போகுமளவுக்கு மெலிந்து,
தோள்களும் தம் பழைய அழகினை இழக்க, நாள்தோறும்
பிரிந்துசென்றவரின் பிரிவுக்கு இரங்கி
அதனைப் போக்கும் மருந்து வேறு இல்லாததினால் உயிரோடிருந்து செயலற்றுப்போய்விட்டேன்.
					மேல்
#148 குறிஞ்சி பரணர்
பனைமரத்தின் திரட்சியைப் போன்ற  பருத்த அழகிய வலிமையான நீண்ட கையையும்
கொல்லுகின்ற சினம் நீங்காத செருக்குப் பொருந்திய உடல்வலிமையையும்,
வண்டுகள் மொய்க்கும் மதநீரையும், நிமிர்ந்த கொம்பினையும் உடைய யானை
குளிர்ச்சியான, மணங்கமழும் மலைச் சாரலிலுள்ள மரம் விழும்படியாக ஒடித்துத்தள்ளி
தனக்கெதிரே வந்த புலியைக் கதறும்படி குத்தி, அதன் வெற்றியைத் தொலைத்துச்
சிறிய தினை வளரும் பெரிய புனத்தில் சென்று மேயும் நாட்டையுடையவனே!
விரைகின்ற ஓட்டத்தையுடைய குதிரையையுடைய ஆய் எயினன் என்பவன்
நீண்ட தேரையுடைய ஞிமிலி என்பவனுடன் போரிட்டுக் களத்தில் இறந்துவிட
அதனைக் காண்பதற்குச் செல்லாத கூகை வெட்கப்பட்டுக்
கடும் பகலிலே வெளிப்படாமல் துன்பப்பட்டதைப் போல, துன்பம்
பெரிதாயிற்று இவளுக்கு, அதனால்
நீ மாலையில் வரவேண்டும், சோலையிலுள்ள
மூங்கில் முளையினை மேயும் பெரிய களிறு திரிகின்ற
மலையடிவாரத்திலுள்ள சாரலில் உள்ள சிறிய பாறைகள் இருக்கும் வழியில் -
					மேல்
#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று கட்டிய
உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து கிடக்கும் புற்றாஞ்சோற்றைத் தின்று வெறுத்துப்போனால்,
புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பைமரத்தின் தொளை பொருந்திய வெண்மையான பூவைப்
பெரிய கையையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும்
பாலை நிலத்தின் நீண்ட வழியினில் சென்று மிகவும்
அரிதாக ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெற்றாலும்
வரமாட்டேன், வாழ்க என் நெஞ்சமே! சேர அரசர்களின்
சுள்ளி என்னும் அழகிய பெரிய ஆற்றின் வெண்மையான நுரை கலங்கும்படி
யவனர் ஓட்டிவந்த தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகோடு மீண்டு செல்லும்
வளம்பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரத்துடன் வளைத்து
அரிய போரை வென்று அங்கிருந்த பொன்னாலான பாவையினைக் கவர்ந்துகொண்ட
உயரமான நல்ல யானைகளையும் வெல்லும் போரினையும் உடைய பாண்டியனது
கொடிகள் அசைந்தாடும் தெருவினையுடைய கூடலின் மேற்கேயுள்ள
பல புள்ளிகளையுடைய வெல்லும் மயில்கொடியினை உயர்த்திய
ஓயாத விழாக்களையுடைய முருகனின் திருப்பரங்குன்றத்தில்
வண்டுகள் மொய்த்ததினால் நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
எதிர்த்து நிற்கும் இரண்டு மலர்களைச் சேர்த்துவைத்ததைப் போன்ற இவளின்
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ளும்படி - (வாரேன் வாழி என் நெஞ்சே)
					மேல்
#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னிவிட்டதால் பெரிதும் நெளிந்துள்ள கூந்தலையும், பொன் போன்று
மார்பிலே தோன்றிய அழகுத்தேமலையும், மார்க்கச்சு மூட்டுவிடும்படி
கண்ணுடன் விம்மி எழுகின்ற முலைகளையும் கூர்ந்து நோக்கி
பெரிதும் அழகுடையவள் என்று பலமுறை கூறி
பெரிய தோளினை முழுவதும் தழுவி, நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து
அரிய காவலில் (தலைவியை) வைத்துவிட்டாள் அவளுடைய தாய்; விரைந்து செல்லும்
வாள் போன்ற கொம்பினையுடைய சுறாமீன்கள் திரிகின்ற சங்குகள் மேயும் பெரிய துறையினையுடைய -
இதழ்கள் செறிந்த நெய்தலின் கண் போன்ற பெரிய பூக்கள் -
அரும்புவிட்ட செருந்தியின் மொட்டுகள் இதழ் விரியும்போது,
- மாலையில் அழகிய இதழ்கள் குவிய, காலையில்
தேன் மணக்கும் குவளை மலர்களுடன் தண்ணென்று மலர்கின்ற -
கழியையும் கடற்கரைச்சோலையினையும் பார்க்கும்போதெல்லாம் பலவற்றை எண்ணி வெறுத்து
தலவர் வரமாட்டாரோ என்று வருந்துவாள்,
மலர்மாலை சூடிய மார்பினையுடையவனே! நீ அவளைப் பிரிந்தபொழுது.
					மேல்
 



#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்
தம்மை விரும்பி இருப்போரைக் காப்பாற்றி, தாம் விரும்பிய
இனிமை பொருந்திய நண்பரோடே இன்பம் மிகும்படி சேர்ந்திருந்து
மகிழ்ந்திருக்க முடியாதவர்கள் வறுமைப்பட்டவர்கள் என்று கூறி
மிகுந்த பொருளைச் சம்பாதிக்க நினைக்கின்ற நெஞ்சத்தால், நம்மீது அருள் இல்லாதவர்
ஆவர், வாழ்க தோழியே! இடமெல்லாம் விரிந்து
மிகுந்த காற்று வீசுந்தோறும் கலங்கியதும், புள்ளிகளையும், வரிகளையும் உடைய
கலைமானின் தலையில் முதன்முதலில் கிளைவிட்டு முளைத்த
கொம்பினைப் போன்று கவட்டைகளையுடைய குட்டையான அடிமரத்தையுடையதும் ஆன வாகை மரத்தின்
கிளைகளில் விளைந்த நெற்றுக்குலைகள், ஆட்டக்காரி
கோலால் அரித்தெழும் ஒலியினை உண்டாக்கும் பறையின் ஒலியைப் போல வியப்புண்டாக ஒலிக்கும்
கற்குவியல்களின் மேலுள்ள கரடுமுரடான இடத்தில் உள்ள நிழலில்,
கள்ளியின் முள்ளுடைய அடிப்பகுதியில் இருந்துகொண்டு, வழிப்போவாருக்கு
நடக்கப்போவதைக் கூறும் சிறிய சிவந்த நாக்கையுடைய,
மணிச் சத்தத்தைக் கேட்டாற் போன்ற தெளிந்த குரலைக் கொண்ட
சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக் கடந்துசென்ற நம் தலைவர்.
					மேல்
#152 குறிஞ்சி பரணர்
நம் நெஞ்சு நடுங்கும்படியான, வேறொன்றால் தீர்வதற்கு அரிய துன்பம் தீரும்படியாக வந்து
குன்றை ஒட்டிய தனது சிற்றூருக்குச்
செல்வதற்குத் திரும்பிப்போகும் நம் தலைவியின் வளைந்து சுருண்ட ஐந்தாகப் பகுக்கப்பட்ட கூந்தல்
நுண்ணிய கோலையுடைய பாணர்களைப் பேணும் பெரிய புகழையும்
சினம் மிக்க படையினையும் உடைய தித்தன் வெளியன் என்பவனின்
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தில்
பொன்னைக் கொண்டுவருகின்ற நல்ல மரக்கலங்கள் சிதைந்துபோகும்படி தாக்குகின்ற
சிறிய வெண்மையான இறாமீனின் கூட்டம் போன்ற
மிக்க பகையைத் தரும் வலிமை மிக்க பிண்டன் என்பவனின்
போர்செய்யும் பகைமை சிதைய வென்ற வெற்றியையுடைய வேலினையும்
புகழ் நிறைந்த நல்ல ஈகையினையும், களிறுகளை வழங்கும் வள்ளன்மையாகிய மகிழ்ச்சியினையும் உடைய
பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பவனின்
ஏழில் என்னும் நீண்ட மலைத்தொடரின் பாழி என்னும் பக்கமலையில் இருந்து
களிக்கும் மயிலின் தோகையைப் போன்றது; தோள்களோ
வலிய வில்லையுடைய வீரர்களுக்குத் தலைவனான நள்ளி என்பவனின்
சோலைகள் இருக்கும் மலைச்சரிவில், வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த
கடவுள் சூடுவதற்குரிய காந்தள் பூக்களுக்குள், பலவும் சேர்ந்து
வியக்கத்தக்க அழகிய மலர்கள் மணப்பது போல மணங்கமழ்ந்து,
வல்லவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், தம்மிடம் பரிசில் வேண்டி வந்தவர்க்குப்
பெரிய பானையில் சமைத்த சோற்றினை அவர் ஏந்திய கலங்களின் ஆழமான குழி நிறைய வாரி வழங்கும்
பெரிய யானைகளையுடைய ஆய் என்பவனின் காட்டிலிருக்கும்
தலையாறு என்னுமிடத்தில் நிலைபெற்ற மிக உயர்ந்த மலையிலுள்ள
மூங்கிலில் அமைந்த கணுவின் நடுப்பகுதியைப் போன்று
வெகு தொலைவில் உள்ளனவாயினும் நம்மை நடுங்கவைக்கும் துயரத்தைத் தருவன.
					மேல்
#153 பாலை சேரமான் இளங்குட்டுவன்
நான் நொந்துபோகின்றேன், எனது உள்ளம் வருந்துகிறது;
அழகிய இனிய மொழி பேசும் தோழியருடனே சேர்ந்து
பந்து ஆடும் இடத்திற்குக் கொஞ்ச நேரம் சென்று வந்தாலும், மிகவும் நொந்து
பெரிதும் வருந்துவாள், அந்த இரங்கத்தக்கவள், இப்பொழுதோ,
கொடுமைக்கார ஒருவன் தன் மார்போடு சேர்த்து அவளை வளைத்துக்கொண்டு
இனிய மொழிகளால் அவளைக் கட்டிப்போட்டுவைக்க, அதனை நம்பி, நம்மிடம்
உண்டாகும் துயரத்தை நினைக்காதளாகி, விரைவாக,
காய்கின்ற கதிரவனின் கதிர்கள் கெடுத்த வேனில்காலத்து வெப்பம் மிக்க காட்டினில்,
வேகமாக அடிக்கும் காற்று, தழைத்த மூங்கிலின் கணுக்களைச் சேர்த்துத் தாக்குவதால்
தீப்பொறிகள் சிதறி உண்டாக்கிய, பொங்கி எழுகின்ற மிகுதியான நெருப்பினால்
பசுமை அற்றுப்போன மலைஉச்சிகளிலுள்ள பயனற்ற கடத்தற்கு அரிய வழிகள்
அவளுடைய நல்ல அடிகளுக்கு ஏற்றன அல்ல என்பதால், மென்மையான இயல்பினையுடைய அவள்
கடப்பதற்கு வல்லமையுடையவள் ஆவாளோ? இரவினில்
நெடிய மலைச்சாரலிலுள்ள உயர்ந்த உச்சியில்
மீன்களோடு விளங்குகின்ற வானத்தைப் போன்று தோன்றி,
வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளக்கமான பூங்கொத்துகளைக் கொண்ட கோங்கின்
காற்று அடிப்பதால் கழன்று விழுந்த தேன் மணக்கும் புதிய மலர்
தன் இருக்கையைவிட்டு வீழ்ந்த விண்கல் போன்று தோன்றும்
மேகம் படியும் பெரிய மலை குறுக்கே நிற்கும் பாலை வழியினை-(கடப்பதற்கு வல்லமையுடையவள் ஆவாளோ?)
					மேல்
#154 முல்லை பொதும்பி புல்லாளங்கண்ணியார்
மிகுந்த மழை பொழிந்ததினால் பயன் மிகுந்த முல்லைநிலத்தில்
ஆழமான நீரையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள்
சிறிய பல வாத்தியங்கள் இசைப்பது போன்று நீண்ட வழிகளில் ஒலியெழுப்ப,
சிறு புதராக வளர்ந்த பிடவஞ்செடியின் நீண்ட காம்புகளைக் கொண்ட மலர்கள்
செம்மண்ணாகிய நிலத்தில் குறுமணலில் உதிர்ந்து அழகுசெய்ய,
கடுங்கோபமுள்ள பாம்பின் படம் மேலே உயர்ந்து நிற்பதைப் போல
குளிர்ச்சியான மணங்கமழ்கின்ற காந்தள் பூவின் தாது கட்டவிழ்ந்து விரிய,
முறுக்கிய கொம்புகளையுடைய இரலைமான்கள் தெளிந்த நீரைக் குடித்து
தாம் விரும்பும் துணையுடன் இன்பமாகத் தங்கியிருக்க,
காடு அழகு பெற்ற குளிர்ச்சியான பதமுள்ள பெரிய வழியில்
ஓடுகின்ற ஓட்டம் குறையாத, கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகள்
காலின் அளவு தாழ்ந்த மாலையிலுள்ள மணிகள் தெளிவாக ஒலிக்க,
தேரினை ஓட்டுவாயாக, தேர்ப்பாகனே! மகளிர்க்குரிய சிறப்பெல்லாம் மிகப்பெற்று
நம்மிடத்துப் பெரிதும் விருப்பமுள்ள கோட்பாட்டினைக் கொண்ட
அழகிய மாமை நிறமுடைய தலைவியை விரைவாகச் சென்றடைவோம்.
					மேல்
#155 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறத்தைவிட்டு அகலாத வாழ்க்கையும், என்றைக்கும்
பிறர் வீட்டு வாசலில் சென்று இரந்து நிற்காத நல்ல நிலைமையும் ஆகிய இரண்டும்
பொருளினால் ஆகும், அழகிய அணிகலன் அணிந்தவளே! என்று நம்முடைய
இருண்ட அழகிய ஐந்தாகப்பகுப்பட்ட கூந்தலை நீவியவாறு சொன்னவர்,
அவர் பிரிவால் நாம் பிரிவுத்துயரில் ஆழ்வோமென்றாலும், தாம் தம்முடைய
பொருளீட்டும் செயலை நன்கு முடித்துவிட்டு வரட்டும் தோழியே! பல வழியிலும்
பால் வளம் மிக்க பசுக்கூட்டங்கள் இருக்கும் பாண் நாடு என்னும் அவ்விடத்தில்
நீண்ட சீழ்க்கை விடும் கோவலர்கள் தோண்டிய கிணறுகளிலிருந்து முகந்த
வளைந்த வாயையுடைய பத்தலென்னும் கொள்கலத்திலிருந்து நீர் வழிந்து வீழ்ந்து நிரம்பிய சிறிய குழி
நீரில்லாமல் காய்ந்துபோன வருத்தத்துடன் வேறு நீர் குடிக்குமிடம் இல்லாமையால்
பெரிய களிறுகள் மிதித்துச் சென்ற அடிச்சுவட்டில் பெரிய புலிகள்
அடிவைத்து நடந்து சென்ற சேற்று நிலமான ஈரமான வழிகள்,
குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்கள் தம் முதுகில்
கட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் முகப்பாகிய கண்ணில்
தங்கள் விரல்களால் அடித்த வடுக்கள் போலத் தோன்றும்
மரல்கள் வாடிய இடங்களையுடைய மலையைக்கடந்து சென்றவர்.- (தாம் தம் செய்வினை முடிக்க)
					மேல்
#156 மருதம் ஆவூர் மூலங்கிழார்
முரசங்களையுடைய செல்வர்களின் குதிரையின் தலையுச்சியில்
மூட்டித் தைக்கப்பட்ட கவரியை நிமிர்த்து வைத்ததைப் போன்ற,
வளம் மிக்க வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளங்கதிரை
முதிய பசு தின்றுவிடும் என அஞ்சி, வயல்காவலர்
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றையின் கொடியுடன் அறுத்து
கரும்பினை உண்ணக் கொடுத்துக் காஞ்சி மரத்தில் கட்டிப்போடும்
இனிய நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே! மிக நன்றாக,
குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளும் நானும்,
கழனியிலுள்ள இதழ் ஒடியாத ஆம்பல் மலர்களுடன் கூடிய பசிய தழையாடையை
ஞாயிறு காயாத விடியற்காலத்தில் மார்பினில் சேர்த்துக்கட்டி
மணல்வீடுகட்டி விளையாடி மகிழ்வோம் என்று வந்து
உன்னுடன் சிரித்துப்பேசிய பிழை செய்த தவறோ? பெருமானே!
கள்ளும், மாலையும் ஆகிய வழிபாட்டுப் பொருள்களும்,
நிமிர்ந்த கொம்பினையுடைய வெள்ளாட்டின் தொங்குகின்ற செவியையுடைய கிடாயும்
உட்பட எல்லாம் நீர்த்துறையில் நிலைபெற்ற தெய்வத்திற்குச் செலுத்தியும்
தன் மகளுக்கு உற்ற நோய் தணியும் வழி அறியாதவளாய் அன்னை அழ,
நீலமணி போன்ற மேனி பசலையால் பொன் நிறத்தை அடைதல்-(உன்னுடன் சிரித்துப்பேசிய பிழைசெய்த தவறோ?)
					மேல்
#157 பாலை வேம்பற்றூர் குமரனார்
கள் விற்கும் பெண்கள் தம் இடுப்பிலே சுமந்துவந்த
விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனையிலிருந்து சொரிந்த
அரித்த, நிறம் மிக்க கலங்கலான கள்ளை வயிறாரக் குடித்து,
போரினை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்களையுடைய வீரர்கள்
வில்லால் எய்ய வீழ்ந்தவரின் பிணங்களை மூடிய கற்குவியலில் நிற்கின்ற கோங்க மரத்தின்
இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை
பெரிய இருள் புலர்கின்ற வைகறைப் பொழுதில் அரும்புடன் வளைத்து
காட்டு யானை கவளமாகச் சுருட்டி உண்ணும்
அச்சம் வரும் வழியில் தனியாகச் செல்லும் நம் தலைவர்
மனம் ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்வார், தோழியே!
போர் நிகழ்வதால் குடிகளை இடம்பெயரச் செய்ததால் பொலிவிழந்துபோன ஊர் மன்றத்தில்
மழைபெய்யும்போது இளகிப்போய், வெயிலடிக்கும்போது மெலிந்துபோய்
சாயம்போன பாவையைப் போல அழகிழந்து
வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க யாருக்கு முடியுமோ அவர்களுக்கு - (மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்வார்)
					மேல்
#158 குறிஞ்சி கபிலர்
இடி முழங்குகின்ற மின்னல் முதலிய தொகுதிகளையுடைய பெரிய மழை பெய்துவிட்டு
அந்த மழை நின்று ஒலியடங்கிப்போன இருள் செறிந்த நள்ளிரவில்
மின்னல் பரவியதைப் போன்ற கனத்த குழைகள் ஒளிவிட,
பின்னல் நெகிழ்ந்ததினால் அலையலையாய்ப் பரந்த கூந்தலையுடையவளாய்
மலையிலிருந்து இறங்கும் மயிலைப் போல தளர்ந்து நடந்து
மாடத்திலிருந்து மெதுவாக இறங்கிவர இவளைக் கண்டேன் என்று
இவளைத் துன்புறுத்தாதே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! நல் கொல்லைப்புறத்தில்
தெய்வங்களையுடைய மலைச்சரிவிலிருந்து ஒளிவிடும் பூவைச் சூடிக்கொண்டு,
தாம் விரும்பிய வடிவில் பெண்தெய்வங்கள் வருவதுண்டே!
நனவில் நடப்பது போல, தூங்குபவர்களைக்
கனவு அங்கு மயக்குவதும் உண்டே! இவளோ
விளக்கு இல்லாமல் இரவில் தனியாக இருப்பதற்கும் நடுங்குவாள், அச்சம் தோன்றும்படியாக
ஊர்ப்பொதுவிடத்தில் இருக்கும் மராமரத்திலுள்ள கூகை குழறினாலும்
மனம் கலங்கிப் பாதுகாப்பான இடத்தைச் சேர்வாள், அதற்கு மேலும்
புலிக்கூட்டத்தைப் போன்ற நாய்கள் தொடர்ந்துவரும் வேட்டைத் தொழிலை விட்டு,
முருகனைப் போன்ற சீற்றத்தையும் கடும் ஆற்றலையும் உடைய
எம் தந்தையும் வீட்டிலிருக்கின்றார், எனவே
இவள் இவ்வாறு செய்வதற்குப் பயப்படுவாள் அல்லவா!
					மேல்
#159 பாலை ஆமூர் கவுதமன் சாதேவனார்
தெளிந்த கழியில் விளைந்த வெண்மையான கல் உப்பின்
விலையைக் கூறி விற்ற வளைந்த நுகத்தடியைக் கொண்ட வரிசையான வண்டிகளில் பூட்டிய
வலிமை பொருந்திய பிடரியினையுடைய காளைகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு,
உப்பு வணிகர்கள் இளைப்பாறி விட்டுச்சென்ற ஒழிந்துகிடந்த கல் அடுப்பில் -
நன்கு வடிக்கப்பெற்ற அம்பினையும் வளைவான வில்லினையும் உடைய வெட்சி மறவர்
வருத்தத்தை விளைவிக்கும் வலிமையான வில்லினை மிகவும் வளைத்து
பல பசுக்களையுடைய நீண்ட கூட்டத்தைக் கவர்ந்துகொண்டுவரும்பொழுது, கல்லென்னும் ஒலியுண்டாக
அந்த அரிய போர்முனையில் அவர்களை வருத்தி விரட்டிய பெரும் செருக்குடைய வெற்றி வீரராகிய கரந்தையர்
மிகுந்த ஓசையுடன் விரைவாக ஒலிக்கும் உடுக்கின் தாளத்திற்கேற்றவாறு ஆடி
தழைமாலையைத் தலையில் சூடியவராய் - ஊனை வேகவைத்து உண்ணுகின்ற
பிரிந்துசெல்லும் நெறிகளில் காதலர் சென்றார் என்று மிகவும்
துன்பம் கொள்ளாதே! பெரும் காதலையுடைய தோழியே!
வானத்தில் பேரிடி இடிக்கும் உயரமான உச்சியையுடையதும்
மணமுள்ள பூக்களைக் கொண்ட சாரல்களையுடையதுமான குறும்பொறை என்னும் மலைக்குக் கிழக்கில்
வில் பொருந்திய பெரிய கையினையுடைய, வெல்லுகின்ற போரினையுடைய சேரமன்னனின்
வண்டுகள் மொய்க்கும் கன்னத்தையுடைய,சிறிய கண்களையுடைய யானையின்
பூண் அணிந்த பெரிய கொம்புகள் ஒடியும்படியாகத் தாக்கிஅழித்து,
கொடுமுடி என்பவன் காத்துநிற்கும் விளக்கமுள்ள நெடிய மதில் சூழ்ந்த
நெடுந்தூரம் சென்று விளங்கும் சிறப்பினையுடைய ஆமூரையே அடைவதாய் இருந்தாலும்
அங்கே மனம் ஒன்றித் தங்கிவிடமாட்டார், உன்
பூண் சுமக்கும் மார்பினைத் தழுவுதலை மறந்து.
					மேல்
#160 நெய்தல் குமுழிஞாழலார் நப்பசலையார்
ஒடுங்கிய நெய்ப்பசையுள்ள கூந்தலையுடையவளே! உனக்கும் அப்படித்தான் இருந்ததோ?
நடுங்கிப்போய்விட்டது, பாவம்! என்னுடைய மன அடக்கம் அற்ற நெஞ்சம்!
அடும்பின் கொடியைச் சிதைத்து இழுத்து, வளைவான கழியிடத்து உள்ள
குவியலான வெண்மணலின் பக்கம் சேர்த்து,
நிறைந்த சூல் உடைய ஆமை மறைவாக இட்டு, மணலுக்குள் புதைத்துவைத்த
யானைக் கொம்பினால் செய்த உருண்டை போன்ற புலால் நாறுகின்ற முட்டைகளை,
அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரைக்கும், பிளந்த வாயையுடைய
அதன் கணவனாகிய ஆண்யாமை அடைகாக்கும் கடற்கரைச் சோலையைச் சேர்ந்த தலைவன்,
தார்க்குச்சியால் குத்தினால் இன்னும் வேகமாகப் போகும் என்று அஞ்சி, மெதுவாகத்
தாவிச் செல்வதைக் கடிவாளத்தைப் பிடித்திருப்பதினாலேயே உணர்த்தி,
அம்புபோல் பாய்கின்ற முறையைப் பயின்ற அழகிய நடையினையுடைய குதிரைகள்,
செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடந்துசெல்லும்போது, தேர்ச் சக்கரங்களின்
கூர்மையான விளிம்புகளால் அறுக்கப்பட்ட பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல்
பாம்பின் மேலே தூக்கிய தலையைப்போல வாட்டமுடன் நிமிர்ந்து நிற்க
இரவுநேரத்தில் மறைவாக வந்துகொண்டிருந்த தலைவனின் திண்ணிய தேர், இப்பொழுது மறைவாக இல்லாமல்
ஒல்லென்று ஆரவாரம் செய்யும் ஏவல் இளைஞருடன், பொல்லாத வாயினால்
அலராகிய பேரொலி எழுப்பும் சிறிய ஊரின் மக்கள் பார்க்கும்படியாக,
பகலிலே வந்திருக்கிறது, பாய்ந்து வரும் குதிரைகளினால் சிறப்புற்று. 
					மேல்
 



#161 பாலை மதுரை புல்லங்கண்ணனார்
பொருளீட்டும் வினைக்காகப் பிரிந்து செல்வது எப்படி இயலும்? வளைந்து சுருண்ட
சீப்பினால் சீவப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
அடிப்பக்கம் மூங்கிலினால் ஆன அம்பினை முழுவதும் இழுத்து
வழிச்செல்லும் புதியவரைக் கொன்ற அச்சம்தோன்றும் பாலைநிலத்துக் கிளைவழிகளில்
கிடைக்கும் முடை நாறும் ஊனை விரும்பியுண்ணும் வாழ்க்கையினையுடைய, சிவந்த காதுகளையுடைய
பருந்தின் சேவல் நெருங்கிய தன் சுற்றத்தினை அழைக்கும்
அச்சம் வரும் கானத்தைக் கடந்து பொருளை ஈட்ட விரும்பிச்
செல்வதற்கு எண்ணினார் என்பதை முன்னமேயே நன்றாகக்
கேட்டிருக்கிறாள் அவள்; தோளில் தாழ இறங்குகின்ற,
வண்டுகள் தேனை உண்ண, தழைத்த கரிய பலவான கூந்தலையும்,
அழகிய மாமைநிற மேனியையும் ஆய்ந்த அணிகலன்களையும் உடைய இளம்பெண்ணாகிய தலைவியின்
அழகுத்தேமல் படர்ந்த மார்பினில் முலைமேல் தோன்றும் தெய்வம் போன்று உருக்கொண்ட
நல்ல வளர்ச்சியையுடைய இளம் முலைகள் நனையும்படி
பல இதழ்களையுடைய குவளைமலர் போன்ற மையுண்ட கண்களில் நீர்த்துளிகள் விழுந்து பரவின.
					மேல்
#162 குறிஞ்சி பரணர்
மேகங்கள் கொள்ளக்கொள்ளக் குறையாததும், சங்குகள் வளர்வதும், ஆழத்தினையுடையதால்
அளப்பதற்கு அரிது ஆகியதும், திரண்ட கரிய தோற்றத்தினையுடையதும் ஆகிய
கடலைப் பார்த்ததைப் போன்ற மாகமாகிய விசும்பில்
நெருப்பு கொடிவிட்டு வளர்வதைப் போன்று மின்னல்கள் மேகத்தைப் பிளந்துகொண்டு நெளிந்தோட
கடுமையாக இடிக்கும் இடியுடன், வேகமாக விழும் நீர்த்துளிகளை எங்கும் சிதறி
முடிவிடம் அறியாதவாறு மேகம் பொழியும் நடு இரவில்,
கடுமையாய்க் காவல்காக்கும் காவலர்கள் சோர்ந்திருக்கும் தருணத்தைப் பார்த்து,
குளிர் பொருந்திய, அசைந்துவரும் வாடைக்காற்று வருத்த, அவளின் தந்தையின்
நெடிய மாளிகையின் ஒரு பக்கத்தில் நின்றிருந்தேனாக,
கருமணலெனத் திகழ்கின்ற கூந்தலையும், குவளை மலர்கள் போன்று
ஒளிமிக்க முகத்திலே அங்குமிங்கும் சுழலுகின்ற அழகிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும்,
வண்டுகள் விரும்பும் முல்லை அரும்புகளை வரிசையாகக் கட்டியது போன்ற வெண்மையான பற்களையும்,
புன்னகையால் சிறப்புற்று விளங்கும் அழகு பொருந்திய பவளம் போன்ற சிவந்த வாயினையும் உடையவளாய்
அழகு வாய்ந்த சிறந்த வளையல் விளங்கக் கைகளை வீசிக்கொண்டு,
காற்றால் அலைக்கப்படும் தளிரைப் போல் நடுங்கிக்கொண்டு, ஒழிவில்லாமல்,
எனது காமநோயும், பயணக் களைப்பும் நீங்கும்படியாக முயங்கினாள்; வாய்மையான சொற்களையும்,
நல்ல புகழை உண்டாக்குகின்ற இரவலர்க்கு அவர் எண்ணிய
விருப்பத்தை அடையாமல்போவதை அறியாத ஈகையினையுமுடைய கழலும் வீரவளையும் அணிந்த அதிகனின்
காய்த்தல் அற்றுப்போவதை அறியாத பயனைத் தரும் பலாமரங்களுடன்,
வேங்கை மரங்களும் பொருந்தியுள்ள மலையிடம் பொலிவுபெற -
விற்படையையுடைய பசும்பூண் பாண்டியனின்
களிற்றின் மீது உயர்த்திய வெல்லும் கொடியைப் போன்று, அழகுபெற
மிளிர்வனவாய் இறங்கிவரும் - உயர்ந்து காணப்படும் அருவிகளையுடைய 
செங்குத்தாக நிற்கின்ற உயரமான மலையின் உச்சியிலுள்ள சரிவில் இருக்கும்
அச்சம்தரும் தெய்வப் பெண்களைப் போலப் பெறுவதற்கு அரியவளாகிய நம் தலைவி.
					மேல்
#163 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
பலவகையான மலர்களும் குழைந்துபோகும்படி, வானத்தில் முழக்கத்துடன் ஒன்றுகூடிய
குளிர்ந்த மேகங்கள் பெய்து, குறைந்த மழையைக் கொண்ட கூதிர் காலத்தின் கடைசி நாளில்
நான் தனித்திருக்கவும், பிரிவுத்துன்பம் உள்ளத்தில் மிகுந்து நிற்கவும்
என்னைவிட்டுப் பிரிந்துசென்றவரை எண்ணி, மீதியிருந்த ஒருசில வளையல்களும் கழன்றுவிழ
பெரிய ஆசையையுடைய உள்ளத்துடன், அவர் திரும்பி வரும் வழியையே பார்த்துக்கொண்டு
இறந்தே போகலாம் என்ற துன்பத்துடன் இருப்பவள் இரங்கத்தக்கவள் என்று கருதாமல்,
யானை நீரைப்பருகிப் பின்பு அதனைத் தூவிவிடுவது போன்ற கண்பார்வையை மறைக்கின்ற பனித்துளிகளால்
தாமரை மலர்கள் கருகிப்போகும் முன்பனிக் காலத்து நடு இரவில்
மலையையும் நெகிழ்த்துவிடுவது போன்ற குளிரைக் கொண்டுவந்த வாடைக்காற்றே!
எனக்காகவே வந்ததுபோல் இருக்கின்றாய்! நீரோடும் வாய்க்காலிலுள்ள
மணலால் ஆன குவியல் கரைவது போல நெஞ்சம் கரைந்து இளக,
என் துன்பத்திற்குக் காரணமான அந்தக் கொடுமைக்காரர் சென்ற நாட்டிற்கும், கொஞ்சமும் குறையாமல்
இப்படியே இருந்து செல்வாயாக!
தன் தொழிலிலேயே முனைப்பாயிருப்பவர் என்னை ஒருவேளை நினைத்துப்பார்த்தாலும் பார்ப்பார்.
					மேல்
#164 முல்லை மதுரை தமிழ் கூத்தன் நாகன்தேவனார்
கதிரவன் தன் கதிர்களையே கைகளாகக் கொண்டு ஈரத்தையெல்லாம் உறிஞ்சி,
பசுமை அற்றுப்போகும்படி சுட்டுப்பொசுக்குவதால், தன் பயன்களெல்லாம் மறைந்து ஒழிய
பிளவுகள் ஏற்பட்ட அகன்ற இடங்கள் பொருந்திய இந்தப் பெரிய உலகத்தில்,
காடுகள் தாம் இழந்த அழகைப்பெறும்படி, மிகுந்த மழை பொழிந்ததால்,
புள்ளிகளையும் வரிகளையும் உடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்க, பல பூக்களுடன்
மணம் வீசும் முல்லையோடு செங்காந்தளும் சேர்ந்து மலர,
நறுமணத்தைப் பெற்றது, பூக்கள் மணக்கும் காடு;
என்னவாயிற்றோ போருக்குச் சென்றவரின் நிலை என்று மயங்கி
ஒழுகுகின்ற கண்ணீர் சிந்துகின்ற கண்களுடன் வருந்தி, வீட்டில்
துன்பத்துடன் இருக்கின்றவள் தான் இழந்த பழைய அழகைப் பெறுவாள்,
இது நல்லகாலம் என்பதனைப் பார்ப்பாயாக! பகைவரின்
மதில் கதவினைச் சிதைத்த பூண்கள் சிதைந்த கொம்புகளையுடைய,
கட்டுத்தறிகளை ஒடிக்கும் யானைகளையுடைய
கொடும் சினத்தையுடைய வேந்தன் தன் போர்த்தொழிலை விட்டுவிடப் பெற்றால் - (இது நன் காலம் கண்டிசின்)
					மேல்
#165 பாலை
மென்மையான தலையையுடைய இளம் பெண்யானை குழியில் விழுந்துவிட்டதால்
ஆண்யானை கூக்குரல் எழுப்பும் ஆரவார ஒலியினால் வெருண்டுபோய்
விரைந்து எழுந்த சிவந்த வாயையுடைய யானைக் கன்று
பூந்தாதுக்களே எருத்துகள்களாகச் சிந்திக்கிடக்கும் தெருவினையுடைய பழைய ஊரினில்
எருமையாகிய நல்ல மாட்டிலிருந்து பெறுகின்ற முலைப்பாலைக் குடிக்கும்
நாடுகள் பலவற்றைக் கடந்த அந்த நல்லவளை எண்ணி
அவளின் தோழியர் கூட்டமும் அழகிழந்து வருந்துகின்றது, அவளை ஈன்ற தாயும்
இற்றுப்போகட்டும் என் உயிர், உனது இனிய தோளினைத் தருவாயாக, என்று சொல்லிக்
கண்ணையும், நெற்றியையும் தடவிக்கொடுத்து, குளிர்ச்சிபொருந்த
வளைந்து நிற்கும் நொச்சியின் வரிவரியான நிழலில் கிடத்தி,
தாழியில் வளரும் குவளையின் வாடிப்போன மலரைச் சூட்டி,
கொண்டுவந்து பரப்பிய மணலில் கிடந்த பாவையை, என்
அருமை மகளே என்று கூறித் தழுவியவாறு அழுகின்றாள்.
					மேல்
#166 மருதம் இடையன் நெடுங்கீரனார்
நல்ல மரங்கள் சூழ்ந்த (கள் விற்கும் இடத்தில் உள்ள) கள் நிறைந்த சாடியில்
பலநாளும் கள் வடிக்கப்பெற்றதால் அந்தக் கள் விற்கும் கலத்தை உடைத்துவிட்டால்
செறிவான மழைத்துளிகள் போல தெருவெல்லாம் திவலைபடியும்
பலவான பழைய நெல்லினையுடைய வேளூரின் வாயிலில் இருக்கும்,
நறுமண நீர் தெளிக்கப்பட்ட மணங்கமழும் பூங்கொத்துக்களாலான மாலையை
புள்ளிகளையும்,வரிகளையும் உடைய கூட்டமான வண்டுகள் மொய்க்காமல் போவதற்குக் காரணமான
உயர்ந்த பலியுணவைப் பெறுகின்ற அச்சம்தரும் தெய்வம்,
”அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையுடையவளாகிய - உன்னால் புனலாடியதாகச் சந்தேகிக்கப்படும் - அவளுடன்
நான் அப்படிப் புனலாடி வந்தவன் என்றால், (அந்தத் தெய்வம்) என்னை வருத்தட்டும்” என்று
தன் மனைவியிடம் சத்தியம் செய்து அவளைத் தெளியவைப்பான் எனில்,
யாராக இருக்கும்? வாழ்க தோழியே!, நேற்று
மாலையணிந்த களிற்றினைப் போல, நீர்மிதவையின் தலைப்பைப் பிடித்துக்கொண்டு
மணம் முடித்ததால் நான் கட்டியிருந்த ஆடை நனைந்திருந்த அழகுடன் இருந்த என்னுடன்
புதிதாய்ப் பெருக்கெடுத்து வந்த காவிரியின்
கரையுச்சியைத் தொட்டுக்கொண்டு வந்த மிகுந்த வெள்ளத்தில் புனலாடியோர் - (யாராக இருக்கும்?)
					மேல்
#167 பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஒளிவிடும் மணிகளைப் போன்ற சிறப்பாக அமையப்பெற்ற அழகினையுடைய
புதிய பளிங்குகள் சேர்த்த சரத்தினை அணிந்த அல்குலையுடைய மாநிறத்தவளோடு
அழகிய வேலைப்பாடு அமைந்த அலங்கரிக்கப்பட்ட பூக்களையுடைய படுக்கையில்
விண்ணை முட்டும் உயர்ந்த மாளிகையில் தங்கி, இன்று
இனிதாக முழுதும் கழிந்தது; நாளை
மூடாத கண்களுடன் தனிமை வந்து துயர்தர
தங்கியிருப்போம் அல்லவா! நெஞ்சமே! பயணப்படும் வணிகக் கூட்டத்தைக் கொன்று
வழியிலே ஒன்றுசேர்ந்து உண்ணுகின்ற அச்சம்தரும் அம்பினையுடைய
வளைந்த வில்லினையுடைய மறவரின் மிக்க பகையை அஞ்சி
ஊர் மக்கள் குடிபெயர்ந்து போனதால் வெறுமையாகிப்போன பீர்க்கங்கொடி படர்ந்த பழைய பாழிடத்தில்
முருங்கைக் கிளையை ஒடித்துத் தின்ற பெரிய கையையுடைய யானை
முதுகின் உயர்ந்த பின்புறம் உராய்வதால், தளர்ந்து
செங்கல்லால் ஆன நீண்ட சுவரின் விட்டங்கள் விழுந்துவிட்டதால்,
மணிப்புறாக்கள் பறந்தோடிப்போன மரத்தாலான தூண்கள் சாய்ந்துவிட்ட மாடத்தினையும்
எழுதப்பெற்ற அழகிய கடவுள் வேறிடம் போய்விட்டதால் பொலிவிழந்து
இடைவிடாமல் நடக்கும் வழிபாட்டினை மறந்துபோன மெழுகப்படாத புன்மையான திண்ணையில்
பால்கொடுக்கும் நாய் தங்கிய தேய்ந்துபோன இடத்தையுடைய சிறிய அறைகளையுடைய
கடைந்து உருவாக்கப்பட்ட தூண்கள் சிதைந்துபோகும்படி நெருக்கமாகக் கூடி, வேலின் வாய் போன்ற
கூர்மையான வாயினையுடைய கறையான்கள் புற்றுமண்கொண்டு மூடிவிட்ட
கூரையும் இல்லாமற்போன தாழ்வாரத்தையுடைய அம்பலத்தில் - (தங்கியிருப்போம் அல்லவா!)
					மேல்
#168 குறிஞ்சி கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான்
இரவுப்பொழுதை உன்னுடன் கழித்து, நீ இரவில் வருவதால் உனக்குண்டான தீங்கை எண்ணித் துன்பம் மிக,
நீர் ஒழுகும் கண்ணையுடையவர்களாய் இருக்கின்றோம், எனவே, இனிமேல்
தவிர்க்க வேண்டும், வானளாவிய மலையையுடைய நாட்டைச் சேர்ந்தவனே!
பல்லான் என்ற குன்றினில் உள்ள நிழலில் இருக்கும்
நல்ல பசுக்கூடங்களையுடைய நிலப்பரப்பினையுடைய குழுமூர் என்ற இடத்தில்
ஈகையையே தன் கடமையாகக் கொண்ட, கோட்டமில்லாத நெஞ்சினையுடைய
உதியன் என்பவனின் சமையலறை போல ஒலி மிகுந்து
அருவி ஆரவாரிக்கும் பெரிய மலையின் சாரலிலே
அண்மையில் ஈன்ற தன் பெரிய பெண்யானையைத் தழுவிக்கொண்ட ஆண்யானை, தன்
அசைந்த நடையினைக் கொண்ட கன்று உறங்குகின்ற இடத்தைப் பாதுகாக்க,
ஒடுக்கமான தன் இருப்பிடத்தை விட்டுப்போய் கடுமையுள்ள,
வாள் போன்ற வரிகளையுடைய வலிமையுள்ள புலி மலையின் குகையில் முழங்க,
வேட்டைக்காரர்களும் உறங்கும் இரவினில்
விலங்குகள் செல்லும் வழியாகிய சிறிய பாதையில் நீ வருவதை - (த்தவிர்க்க வேண்டும்)
					மேல்
#169 பாலை தொண்டியாமூர் சாத்தனார்
மரங்கள் தமது உச்சி கருகிப்போகவும், நிலம் வளம் குன்றவும்,
ஞாயிற்றின் அசைகின்ற கதிர்கள் பரவிய வெம்மை விளங்கும் அகன்ற பாலை நிலத்தில்,
புலி கொன்று தின்ற பெரிய களிற்றின் மிஞ்சிப்போன ஊனை,
ஆரவாரம் பொருந்திய மறவர்கள் கோலில் கோத்து எடுத்துக்கொண்டது போக எஞ்சியதை
தீக்கடையும் கோலால் உண்டுபண்ணிய சிறிய தீயில் வாட்டி, ஒலிக்கும் அலைகள் உள்ள
கடல்நீரில் விளைந்த அமிழ்தமாகிய உப்பினை விற்கும் கூட்டமான உப்புவணிகர்கள்
சுனையிலிருந்து எடுத்துவந்த இனிய நீரைச் சோற்றுக்கான உலையாக ஏற்றி ஆக்குகின்ற
பல பாலைநில வழிகளைக் கடந்துசெல்லும் நம்மை நினைந்து மிகவும்
பசலை பாய்ந்த மேனியள் ஆகி நீண்ட நேரம் நம்மை நினைந்து,
மறைகின்ற கதிர் மங்கிப்போன தனிமை கொண்ட மாலையில்
நெற்றியில் தன் மெல்லிய விரல்களை ஊன்றி, நிறையவும்
கயல்மீன் உமிழும் நீரைப் போலக் கண்களில் நீர் ஒழுக,
பெரிய தன் தோள்கள் மெலிவடையும்படியான துன்பத்துடன்
திருத்தமான அணிகலன்களை அணிந்த நம் தலைவி வருந்துவாள், அவள் இரங்கத்தக்கவள்,
					மேல்
#170 நெய்தல் மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கடற்கரைச் சோலையும் சென்று தூது சொல்லாது, உப்பங்கழியும் சொல்லாது,
வண்டுகள் ஒலிக்கும் மணக்கின்ற மலர்களைக் கொண்ட புன்னையும் மொழியாது,
உன்னையன்றி வேறு எதுவும் எனக்கு இல்லை;
கரிய கழியில் மலர்ந்த கண்ணைப் போன்ற நெய்தல் மலரின்
கமழும் இதழ்களின் வாசனையை அமிழ்தம் போல மிகவும் விரும்பி
குளிர்ந்த தாதினை உண்ட வண்டினம் களிப்பு மிகுந்து
பறக்கமாட்டாமல் தளர்ந்திருக்கும் துறையையுடைய தலைவனுக்கு நீதான்
சொல்லவேண்டும், நண்டே! பலமுறை -
தாழைமரத்தின் தாழ்ந்த கிளையில் வருத்தத்துடன் தளர்ந்திருக்கும்
சிறிய கடற்காக்கை, தன் விருப்பம் மிக்க பெடையுடன்
சுறாமீன்கள் நடமாடும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள
வெண்மையான இறா மீனைப்பற்றிக் கனவுகாணும் செறிந்த நடு இரவில்
- நீ பட்ட பெரும் துயரினைக் களைந்தவள்
தான் படும் பெரும் துயரினைக் கடக்க வல்லவளோ என்று - (நீதான் சொல்லவேண்டும், நண்டே)
					மேல்
 



#171 பாலை கல்லாடனார்
நெற்றியிலும் நுண்ணிய பசலை பரவும், தோள்களும்
அகன்ற மலையிலுள்ள குறுங்காட்டில் ஆராய்ந்து பிடித்து அறுத்த 
மூங்கிலைப் போன்ற அழகு அழிந்துபோகும்படி மெலிந்துபோகும், நாள்தோறும்
அவருடைய நல்ல பண்புகளை எண்ணி என்னை ஆற்றிக்கொள்வேன் என்று ஓயாமல்
வருந்தாதே! வாழ்க தோழியே! வந்து உன்னைச் சேர்வார் -
ஒளிவிடும், திரண்ட, அழகிய உன் வளையல்கள் கழன்று விழ, பொருள் மேல் ஆசைகொண்டு,
உலர்ந்த உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய வழியைச் சார்ந்திருந்த 
பெரிய மலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில், மருண்ட பல மக்கள்
கொல்வதில் வல்ல ஆண்கரடியின் ஒலியினை உற்றுக்கேட்டவராய்,
செப்பம் செய்துகொண்ட அம்பினராய், வலிய வில்லை
தோளில் இருத்திக்கொண்டு இடமெல்லாம் பரவியிருப்பதால்,
தரையில் கிடக்கும் உணவினைக் கொள்ளாமல், மேலேயுள்ள கிளைகளில் உள்ள
பழத்தைப்போல் இனிக்கும் சாற்றினையுடைய இனிய துளைகளையுடைய பூக்களை உண்பதற்கு
கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் மேல் ஏறும்
பெரிய கையையுடைய கரடிகளையுடைய பாலைவழியைக் கடந்து சென்றவர் - (வந்து உன்னைச் சேர்வார்)
					மேல்
#172 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நப்பாலனார்
யானைகள் முழங்கும் நீர் மிகுந்த மலைச்சரிவில்
தேனுடன் கலந்துவரும் பளிச்சிடும் வெண்மையான அருவி
இன்னிசையுடன் முழங்கும் மத்தளத்தைப் போன்று இம்மென்ற ஒலியுடன்
மலையின் குகைகளும், பிளவுகளும் எதிரொலிக்க விழுகின்ற,
மூங்கில்கள் நெருங்கி வளர்ந்த உயர்ந்த மலைச்சாரலில்,
இரும்பினால் வார்த்துச் செய்ததைப் போன்ற கரிய கையையுடைய வேட்டுவன்
விரிந்த மலரினையுடைய வெண்கடம்ப மரத்தைச் சார்ந்து நின்று, அம்பினைத் தெரிந்துகொண்டு
வரிகளையுடைய நெற்றியையுடைய யானையின் அரிய மார்பில் செலுத்தி
பகையினைக் கொல்லும் வலிமையையுடைய அதன் வெண்மையான கொம்புகளைக் கொண்டுவந்து தன்
புல் வேந்த குடிசையில் அதிலிருக்கும் ஊன் புலர்வதற்காக நட்டுவைத்து,
முற்றத்தில் நீண்டு வளர்ந்த முழவினைப் போன்ற பலாப்பழத்தின்
சுளை பிழிந்த சாற்றை உண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியையுடையவனாய், தன் சுற்றத்தோடு கூடி ஆரவாரம் மிகுந்து
சந்தன விறகினாலான தீயில் ஊனுடன் கூடிய சோற்றைச் சமைத்து உண்ணும்
குன்றத்தையுடைய நாட்டினனாகிய தலைவனே! நீ அன்பு இல்லாதவனாய் இருப்பதை
அறியாமற் போனேன், நான் அதனை அறிந்திருந்தால்
அழகிய அணிகலன்களையும் மையுண்ட கண்களையும் அழகிய இமைகளையும் உடைய இளையதலைவியின்
நீலமணி போன்ற சிறந்த அழகு கெட
பொன்னைப் போன்ற பசலையும் படராமல் இருந்திருக்கும்.
					மேல்
#173 பாலை முள்ளியூர் பூதியார்
அறநெறியிலிருந்து வழுவாத இல்லறத்தை நடத்துதலும், சிறந்த
சுற்றத்தாரின் பலவகையான துன்பங்களைத் தாங்குதலும், நாள்தோறும்
வருந்தி முயற்சிசெய்யாத உள்ளத்தோடு இருந்தவருக்கு இல்லை என்று
பொருளீட்டும் வினையை விரும்பிய நெஞ்சத்தையுடைய நம் தலைவர், மணமுள்ள நெற்றியையும்
கரிய நெய்ப்புடைய கூந்தலையும் உடையவளே! அரிய துன்பத்தால் வருந்துதலை
சில நாள்களுக்குப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று உன்
அழகிய மாட்சிமைப்பட்ட ஒளியுள்ள வளையல்களைப் பரிவுடன் திருத்தியவாறு கூறினார் எனில்
வந்துவிடுவார், வாழ்க தோழியே! பல புரிகளைக் கொண்ட
நீண்ட கயிற்றினால் கட்டப்பட்ட வரிசையான வண்டிகளைக் காளைகளின் வலிய பிடரியில் பூட்டி,
ஆற்றங்கரை மேட்டின் ஏற்றத்தில் உப்பு வணிகர்கள் எழுப்பும் உரத்த சத்தத்திற்கு வெருண்டு
உழை என்னும் மானின் அழகிய பெண்மான் தன் இனத்தைவிட்டுப் பிரிந்து ஓட,
காடுகள் தம் கவின் அழிய, கோடை பரவி,
நின்று காய்வதினால் வற்றிப்போன அழகிய, பெரிய நீண்ட மூங்கில்கள்
தம் கணுக்கள் வெடித்தலால் தெறித்து விழும் கழுவப்பெற்ற முத்துக்கள்
கழங்குகளைப் போன்ற தோற்றம் உடையனவாகி, அங்குள்ள கழங்காடிய பழைய குழியில் விழும் இடமாகிய
இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் நல்ல ஓட்டம் அமைந்த தேரினையும் உடைய நன்னனது
விண்ணை முட்டும் நெடிய மலையின் உச்சியிலுள்ள சரிவில் உள்ள
பொன் பொருந்திய இடங்களையும் உடைய மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர் - (வந்துவிடுவார்)
					மேல்
#174 முல்லை மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
இரண்டு பெரிய வேந்தர்கள் பகைமைகொண்டு போர்புரியும் அகன்ற போர்க்களத்தில்
தான் கையில் ஏந்திய ஒரே ஒரு படைக்கலத்தால் எதிர்த்து வரும் படைகளையெல்லாம் தோற்றோடச்செய்யும்
வெற்றியாகிய செல்வம் உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று
அத்தகைய வெற்றியை ஈட்டியோர் பொற்பூப் பெறுக என்று முழக்கிய தண்ணுமையை விலக்கி
அவளைப் பார்க்க நாம் விரைந்துகொண்டிருக்கிறோம் என்பதனை அறியாதவளாய், முல்லையின்
நேராக நிற்கின்ற கால்களையுடைய முதிய கொடிகளும் நன்கு தழைக்கும்படி மழையைப் பொழிந்து
காலைநேரத்து வானத்தில் கூடிய பெரும் ஓசையையுடைய மேகங்கள்
முழங்கும்போதெல்லாம் செயலற்று மனம் ஒடுங்கி நம்மை வெறுத்துத்
துன்பம் கொண்ட பசலை பாய்ந்த மேனியையுடையவள்
எந்த நிலையினை அடைவாளோ? வேங்கைமரத்தின்
மலர்ந்த நறிய பூவினைப் போன்ற நிறத்தைக் கொள்ளும்படியாக
தன் மார்பினில் அரும்பிய மாசில்லாத சுணங்கையுடையவளான,
பிரிந்துவரும்போது ஆற்றாமையால் நல்ல மணல் பரப்பிய அகன்ற முற்றத்தில் நம்மைப் பின்தொடர்ந்து வந்த
சிலவான மென்மையான நடையினையுடைய மாமை நிறமுடைய நம் தலைவி
					மேல்
#175 பாலை ஆலம்பேரி சாத்தனார்
தமது தடித்த தோளின் விளிம்பினை உரசும்படி, வேகத்தை உட்பொதிந்திருக்கும் வலிய வில்லில் வைத்து
இழுத்துவிடும் அம்பு தன் குறியில் தப்பாத கொடுமை நிறைந்த பாலைநில மறவர்
எய்யும்போதெல்லாம் விண்ணென்று ஒலியெழுப்பும் கொடிய நுனியையுடைய அம்பு
வழிச்செல்லும் புதியவரின் உயிர் போகும்படி பாய்தலால்
பருந்துகள் தம் கிளையினை அழைத்து, மிகுந்த ஊனை உண்ணும்
கொடிய பாலைநிலவழியைக் கடந்துசென்ற நம் காதலர், இருவருடைய நெஞ்சங்களும் நன்கு தெளியும்படி
பொய்யாகிப்போகமுடியாத சூள் மொழிகளைச் சொல்லியும், பலமுறை
தெரிந்த வளையல்கள் அணிந்த முன்கையைப் பிடித்துக்கொண்டும், தான் மேற்கொண்ட வினையை முடித்துவிட்டு
வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா? தோழியே!
காற்றைப் போல் வேகமாக இயங்கும் நெடிய தேரையும் வள்ளன்மையும் உடைய பாண்டியன்
தலையாலங்கானத்தில் நடந்த போரினை வென்று உயர்த்திய
வேலைக்காட்டிலும் அதிகமாக மின்னி, அவனுடைய வெற்றி முரசின் ஒலி என்று கூறத்தக்கதாக
மிகவும் பெரிய விசும்பில் கடிய இடியினைப் பலமுறை முழக்கி
நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட சக்கரத்தையுடைய திருமாலின்
அசுரர் முதலியோரின் போர் அடங்குவதற்குக் காரணமான மார்பினில் பொருந்திய மாலையைப் போல
பல நிறம் வாய்ந்த அழகிய வானவில்லை விசும்பினில் வளைத்து,
நிலம் பயனைத் தர, வானமெங்கும் பரவி,
குளிர்ந்த மழையையுடைய மேகங்கள் இறங்கிப்பொழியும் காலத்தில்-(வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா?)
					மேல்
#176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கடலைப் பார்த்தாற் போன்ற இடம் அகன்ற நீர்ப்பரப்பில்
நிலம் பிளக்கும்படி இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கினையும்,
மூங்கிலைப் பாத்தாற் போன்ற உள்ளே துளையையுடைய திரண்ட தண்டினையும்,
களிற்றின் செவி போன்ற பசிய இலைகளின் பக்கத்தில்
கழுமரம் உயர்ந்து நின்றாற் போன்ற செழித்த மொட்டுக்களின் இடையிடையே
புன்முறுவலையுடைய முகத்தினைப் போல பல மலர்கள் பொலிவுடன் விளங்க,
பூத்த தாமரையினையுடைய பறவைகள் ஒலிக்கும் வயலில் உள்ள,
வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையைத் தேடும் வெண்மையான நாரைக்கு அஞ்சி, அருகிலுள்ள
செழித்து வளர்ந்த பகன்றைக் கொடி படர்ந்த கரிய செறிந்த சேற்றில்
அழகுத்தேமல் போல வரிகள் உண்டாக விரைவாக ஓடி, தன்
நீர் மிகுந்த மண் வளையில் புகுந்து ஒடுங்கும் ஊரினையுடைய தலைவனே!
வீட்டில் விரிந்து நிற்கும் மரத்தில் படர்ந்த வயலையாகிய செழுமையான கொடியினால்
அழகிய மலராகிய ஆம்பலுடன், நிறையத் தழைகளைச் சேர்த்துக்கட்டிய தழையாடையை உடுத்தி
விழாவில் ஆடும் மகளிரோடு தழுவி ஆடும் அணியில் பொலிவுடன் விளங்கி,
மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களையுடைய சிறந்த அணிகலன்கள் அணிந்தவளின் முன்கையை,
குறிய வளையுடன் சேர்த்துப்பிடித்த நீண்ட பிடிப்பினை நீ விடுத்ததால்
உன் காதலி உன் மேல் சினங்கொண்டாள் போலும்! எம்மைப் போல்
புன்மையான உளை போன்ற குடுமியையுடைய புதல்வனைப் பெற்று
நெல்லுடைய நீண்ட மாளிகையில் நீ இல்லாமல் தங்கியிருக்க
என்ன கடமைப்பட்டவளோ? தன் கண்களில்
எழுதிய மையின் அழகு கெடும்படி அழுதுகொண்டு ஏங்கி,
பொன்னை உருக்கி அடித்தது போன்று உருவமைந்த சுணங்கினையும், பலமுறை
நெரித்துக்கொள்வதால் சிவந்துபோன மெல்லிய விரல்களையும், திருகிக்
கடித்ததால் கூர்மையான முனை மழுங்கிப்போன பற்களையும் உடையவளாய்
ஊர் முழுதும் பழிதூற்றும் உன்னைக் காண்பதற்குச் செல்கின்றாள்.
					மேல்
#177 பாலை செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
உன்னுடைய பழைய அழகு கெடும்படி மெலிந்து, நாள்தோறும்
”இன்னமும் அவர் வரவில்லையே! இனி நான் என்ன செய்வேன்” என்று
மிக்க வருத்தம் அடைவதைத் தவிர்ப்பாயாக; சிறிய கண்களையுடைய
கரிய பெண்யானையின் பெரிய தும்பிக்கையைப் போன்ற, எண்ணெய் பூசி
ஒன்றாகச் சேர்த்துப் பின்னிவிட்ட அலையலையான கூந்தலில்
தேன் மணக்கும் மணமுள்ள மலரைச் சூட்ட - காண்பதற்கு இனிய
மூங்கில்கள் செறிந்து வளர்ந்த மலைச் சரிவில் உள்ள சுரபுன்னைகளின் உச்சி வாடிப்போகும்படி
ஞாயிற்றின் கதிர்களின் வெம்மை முறுகிய நிறையக் கற்களைக் கொண்ட பாதையில்
பசுமையான பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி
காட்டு மயிலின் நிறைவான சூலினைக் கொண்ட பெரிய பேடையானது
அயிரியாற்றின் மணல் அடைந்த கரையில் நின்று ஊதுகொம்பைப் போல ஒலியெழுப்புகின்ற
காட்டினைத் தாண்டிச் சென்ற நம் தலைவர் குறித்த காலத்தில் வராமல் நீட்டித்தார் எனினும்
விரைவில் வந்துவிடுவார்; வெண்மையான வேலின்
இலை நிறம் மாறிச் செந்நிறமடையும்படி செலுத்தி, பகைவரின்
மலையைப் போன்ற யானைகளைக் கடும் போரில் அழித்த
வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணன் என்பவனுடைய காவிரியின் வடக்குப்பக்கம் உள்ள
குளிர்ந்த குளத்தை அடுத்து உள்ள நெடிய அடிமரத்தையுடைய மாமரத்தின்
தளிரைப் போன்ற மார்பினில் அழகுபெற அரும்பிய
வருத்தும் இயல்புடைய உன் அழகிய முலைகளில் பரவிய
சுணங்கிற்கு இடையே எழுதப்பட்ட தொய்யிலை நினைத்து - (விரைவில் வந்துவிடுவார்) 
					மேல்
#178 குறிஞ்சி பரணர்
வயிரத்தைப் போன்ற கூர்மையான மேல்நோக்கிய கொம்பினையும்,
மூங்கிலின் வேரைப் போன்ற பருத்த மயிரினையும் உடைய பன்றியானது,
பறையின் முகப்பைப் போன்ற நிறைந்த சுனையின் நீரைப் பருகி,
நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலைகளைக் கொண்ட சேம்பின்
பிடித்துவைத்த உண்டை போன்ற கொழுத்த கிழங்கினை நிறைய உண்டு,
பெண்யானை படுத்திருப்பது போன்ற பாறை மீது மெல்லமெல்ல இறங்கிவந்து
ஆற்றினை அடுத்து இருப்பது போன்று நீர் ஊறும் இடத்தில் உள்ள சிறுதூறாகிய
பசுமையான குறும்புதரின் செறிந்த கிளைகளில் நாரை அமர்ந்திருப்பதைப் போன்று
வளம் மிக்க மொட்டு விரிந்த வெண்மையான கூதாளத்தின்
அசையும் கொத்திலுள்ள மலர்களைத் தீண்டி, அதன் பூந்தாது மேலே உதிர்ந்ததால்
பொன்னை உரைத்து மாற்று அறியும் கட்டளைக்கல் போன்று அழகுபெறத் தோன்றி,
கிளைகள் செறிந்த சிறுதினையிலிருந்து விளைந்த கதிரைத் தின்று
இனிதாகத் துயில்கொள்ளும் நல்ல மலைநாட்டையுடைய நம் தலைவனோடு,
அவனது சிறந்த பண்பாட்டினை உணர்ந்தவளாய், நட்புக்கொண்ட நீயும், உன்னுடைய தோள்களின்
மூங்கில்போன்ற பேரெழில் ஒருபோதும் அழியாதபடி, உன் துணைவனுடன் என்றும் சேர்ந்து
இம்மை மாறி மறுமையாயினும் என்றும் கெடாத அந்த மேலுலகத்திலும் வாழ்வீராக, தோழியே!
பகலென்றும் இரவென்றும் பாராமல், கல்லென்ற ஓசையுடன்
மேகம் பெரும் மழையைச் சொரிந்த விடியற்காலத்தில்
குளிர்ந்த பனியையுடைய முன்பனிக்காலம், தனியே இருப்பவர்க்குத் தாங்குவதற்கு அரியதாகும் என்று
கனவிலும் உன்னைப் பிரிந்திருப்பதை அறியாதவன் அல்லவா! அதற்குமேலும்
முதன்முதலில் உன்னைக் கண்ட நாளைக்காட்டிலும்
பின்னர் வரும் நாளிலும் பெரிதும் அன்பு செய்பவன் - தன் உயர்ந்த பண்பினால்
					மேல்
#179 பாலை கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
விண்ணைத்தொடும் உச்சியினையுடைய பெருமை தங்கிய மலையின் சரிவினில்
பேய்த்தேர் என்னும் கானல்நீர் ஓடுவது போல் தோன்றும் காய்ந்துபோன கடும்பாலைநிலத்துப் பக்கத்தில்
விரைவான காட்டுத்தீ பரவுகின்ற நெருங்கமுடியாத அகன்ற காட்டிலுள்ள
சிறிய கண்ணையுடைய யானை அந்தக் கானல் நீரை நோக்கித் தன் நீண்ட கையை நீட்டித்
தன் பெரிய வாயைத் திறந்தும் நிறைந்த நீரினைப் பெறாமல்
அந்தக் காட்டையே வெறுத்துக் கடந்து செல்லும் இடம் அகன்ற பரப்பில்,
குறிதப்பாமல் வாய்க்கும்படி விடுகின்ற சிவந்த அம்பினையும், வளைவான வில்லையும் உடைய மறவர்கள்,
நல்ல வெற்றி நிலையை எழுதிய நடுகற்கள் நிலைகொண்ட வழிகளில்
செய்கின்ற குறும்புடைய அமளியை நீக்குபவர்களைக் காணாத
பாலைநிலத்து வழியைக் கடந்து செல்ல விரும்புகின்றீர் என்றால், இனிதான புன்முறுவலையும்,
மயிலிறகின் அடிப்பகுதியைப் போன்ற, திரண்ட கூர்மையான பற்களையும், பவளம் போன்ற வாயையும்,
அன்றைக்குப் பூத்த குவளை மலரினைப் போன்ற மையுண்ட கண்களையும் உடைய, இந்த
பிறைத் திங்கள் போன்ற அழகிய ஒளியுள்ள நெற்றியினையுடையவள் தனிமையில் வருந்தும்படி
இந்த வீட்டைவிட்டு வேறுநாட்டில் சென்று வாழ்வது உமக்கு இயலுமோ?
					மேல்
#180 நெய்தல் கருவூர் கண்ணம்பாளனார்
தோழியே! இது மிகுந்த சிரிப்பினை உண்டாக்குகிறது; அழகு மிக,
மாலையணிந்த தோழியர் கூட்டத்துடன் குவிந்திருக்கும் மணல்மேட்டில் ஏறி
பூக்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச் சோலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது
விரைந்த குதிரை பூட்டிய திண்ணிய தேரினை ஓட்டிவந்து
குளிர்ந்த குளத்தில் நிறையப் பூத்த ஒளிமிக்க பூக்களையுடைய குவளையின்
அரும்பினைக் கையால் நெறித்து மலரவைத்துத் தொடுத்த வண்டுகள் மொய்க்கும் மாலையைப்
பின்னலைக் கொண்ட முதுகில் தொங்கும்படியாகச் சும்மா சூட்டிவிட்டு,
நன்கு வளர்ந்த என் இளமையான முலையைப் பார்த்து நீண்ட நேரம் ஏதோ நினைத்தவனாக
அங்கு நிற்காமல் சென்றுவிட்டான் ஒருவன், இதற்குப்போய்,
புலால் நாறும் கரிய கழியினைத் துழாவிப் பலவகைப்
பறவைகளும் சேர்ந்து தங்கியிருக்கும் முள்ளையுடைய நீண்ட மடலையுடைய
தாழையைச் சேர்ந்து ஞாழல் மரத்தோடு பொருந்தி,
தோட்டத்தில் நிற்கும் வளைந்த அடிப்பகுதியையுடைய புன்னைமரத்தின்
பொன் போன்ற நுண்ணிய தாதினைப் பார்த்து,
என்னையும் பார்க்கும் இந்த ஆரவாரம் மிகுந்த ஊர்.
					மேல்
 



#181 பாலை பரணர்
செல்லுவதற்குக் கடினமான காட்டையும் கடக்கத் துணியமாட்டாய்!
எனக்குப் பின்னே நின்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தாயென்றால்
நீ மட்டும் போய் அவளிடம் எனது இந்த நிலைமையைக் கூறு! நெஞ்சமே! பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிகுந்த பெரிய சேனையையுடைய
போரில் கொல்வதில் வல்ல மிஞிலி என்பவனுடன், போர்க்களத்தில் வேலைச் செலுத்தி,
முருகனைப் போன்ற வலிமையுடன் குருதியால் போர்க்களம் சிவக்கப் போரிட்டு
ஆய் எயினன் என்பவன் இறந்துபட, ஞாயிற்றின்
ஒளிவிடும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாதபடி மறைய, ஒரே தன்மையாக
புதிய பறவைகளின் ஒலிமிகுந்த பெரும் கூட்டம்
விசும்பிடம் மறையும்படி வட்டமிட்டு ஒன்றுகூடி -
பூக்கள் விரிந்த அகன்ற துறையினில் அம்பு போன்ற விசையுடன் விரைந்து வரும் நீரானது
காவிரியாகிய பெரிய ஆற்றின் நுண்மணலை வாரிக் கொணர்ந்து வந்து குவித்து
மேடாக்கிய குவியலான வெண் மணலையும்,
புது வருவாயை உடைய ஊர்களையும் உடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும்,
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட
பொய்கையைச் சூழ்ந்த பொழிலினில், இல்லத்திலுள்ள பேதை மகளிர்
கையாலே செய்த மணல்பொம்மையையுடைய துறையினில் வந்து தங்குகின்ற -
மகரக் கொடியினை உச்சியில் கொண்ட, வானை உரசிக்கொண்டு நிற்கும் கோட்டை மதிலையும்,
உச்சிப்பகுதி அறியப்படாதபடி மிகவும் தூரமாக உயர்ந்து நிற்கும் நல்ல மாடங்களையும்
புகார் என்னும் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டில் உள்ளதாகும் - விற்பவர்களின்
நறுமணப் பண்டங்களின் மணங்கள் மணக்கின்ற, வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையும்
மூங்கிலைப் போன்ற அழகையுடையதாய் வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய தோளினையும் உடைய
நம்மைப் பிரிந்ததால் துன்பம் மிக்கு இருக்கும் நம் காதலி அமர்ந்திருந்த
மலர் மணம் கமழும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம் - (புகார் நன் நாட்டதுவே)
					மேல்
#182 குறிஞ்சி கபிலர்
அழகிய இடத்தில் நிற்கின்ற பொன் நிறமுடைய பூங்கொத்துக்களைத் தலையில் அணிந்து,
வளைந்த மூங்கிலால் செய்த வலிய வில்லினைத் தோளில் இருத்திக்கொண்டு,
இனிய பலாப்பழத்தின் சுளைகளில் விளந்த மதுவினை,
சீழ்க்கையொலியுடன் பாயும் அம்புகளைக் கொண்ட ஏவல் இளையருடன் நிறையக் குடித்து,
விலங்குகளைத் துரத்திப் பிடிக்கும் இயல்பினில் தவறுதல் இல்லாத ஆற்றல் வாய்ந்த நாய்கள் பின்னால் வர,
வேட்டைக்குச் சென்ற குறவன், காட்டிலுள்ள
காட்டுமல்லிகை படர்ந்த குளிர்ந்த புதர்கள் குருதியுடன் அசைந்தாட,
முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்தும் குன்றுகளையுடைய நாட்டின் தலைவனே!
பாம்புகளைத் தாக்கி அழிக்கும் இடியுடன் கூடிக் கால்விட்டு இறங்கி 
வலிய மேகங்கள் மழையைப் பொழிந்த பாதி நாளாகிய இரவில்,
நீ தனியாக வந்த வழியை நினைத்து எப்பொழுதும்
நீருடன் கலங்கிநிற்கின்றன இவள் கண்கள்; அதனால்
நண்பகலில் நீ வரவேண்டும்;
அதிரும் குரலினையுடைய முதிய குரங்கு மிளகின் தளிர்களைத் தின்று வெறுத்துப்போய்,
உயர்ந்த உச்சியையுடைய நெடிய சிகரங்களில் தாவுவதால் உதிர்ந்த
மணக்கும் இதழ்களையுடைய பூக்கள் பரவி, வேலன்
வெறியாடும் அகன்ற களத்தினைப் போன்றிருக்கும்
பெரிய மலையை அடுத்துள்ள சாரலுக்கு - (நண்பகலில் நீ வரவேண்டும்)
					மேல்
#183 பாலை கருவூர் கலிங்கத்தார்
எனது குவளை போன்ற மையுண்ட கண்கள் கண்ணீர் விடவும், திருத்தமான அணிகலன்களை அணிந்த,
அழகுத்தேமலையுடைய அல்குலின் அழகிய வரிகள் வாடிப்போகவும்,
நம் மீது இரக்கம் கொள்ளாமல் நம்மைத் துறந்து, கடக்கமுடியாத வழிகளையுடைய பரந்த பாலைநிலத்தைக்
கடந்துசென்று மிகத்தொலைவில் உள்ள வேற்றுநாட்டில் உள்ளவரென்றாலும், அதிகமாகத்
தன் இருப்பை நீட்டிக்கமாட்டார் என்று கூறுகிறாய், தோழியே! மிகுந்த ஆரவாரத்துடன்,
குளிர்ந்த துறையினையுடைய கடலின் ஊடே சென்று, நீரினைப் பருகி,
குவிகின்ற அலைகளை மிகுதியாய் அள்ளிக்கொண்டனவாய், மேற்கே எழுந்து
சூலுற்ற பெண்யானைக் கூட்டம் போல் இடங்கள்தோறும் வந்து தோன்றி
பெரிய கூட்டமான மேகங்கள் ஒன்று சேர்ந்து கூடிக்
காலையில் வந்துவிட்டது கார்காலம், மாலையில்
குளிர்ச்சி பொருந்திய பிடவின் கூர்மையான அரும்புகளின் மலரும் பக்குவத்திலுள்ள மலர்களை
வண்டுகள் வாயினை நெகிழ்ப்பதால் இடையறாமல் பரவுகின்ற மணத்தை
குளிர்காலத்திற்கும், முன்பனிக்காலத்திற்கும் உரிய வாடைக்காற்று நம்மீது வாரிவீச,
பனியும் வருத்துவதால் கலங்கிய நெஞ்சத்துடன்
நம்மைவிட்டுப் பிரிந்துசென்றவரின் பொருட்டு நாம் வருந்துவோம் அல்லவா?
					மேல்
#184 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
தெய்வத்தன்மையையுடைய கற்புடன், குடிக்கு விளக்காக அமைந்த
புதல்வனை ஈன்ற புகழ் மிக்க சிறப்பினையுடைய
நற்குணம் படைத்த தலைவிக்குமட்டுமல்லாமல், அவளின் தோழியாகிய எனக்கும்
இனிமையைத் தருவதாய் அமைகின்றது, உன்  ஆயுள் சிறப்பதாக!
செய்வதற்கரிய தொழிலை முடித்துவிட்ட தலைமைத் தன்மை பொருந்திய நெஞ்சத்துடன்,
வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய காடு பின்னிட்டுப்போக,
வெண்மையான பிடவம் மரத்தில் மலர்ந்த பூக்கள் கமழும் முல்லைநிலத்தில்,
குட்டையான கிளைகளையும், குறிய முள்களையும் உடைய கள்ளியின்
புன்மையான உச்சியினை மூடிக்கொண்டு படர்ந்த கொழுத்த கொடியினைக் கொண்ட முல்லையின்
காம்பு கழன்று உதிர்ந்த மலர்களைத் தன் மூச்சுக்காற்றால் ஒதுக்கிவிட்டு
தெளிந்த நீரைப் பருகிய முறுக்குண்ட கொம்புகளையுடைய அழகிய கலைமான்
தன் புள்ளிகள் உள்ள அழகிய பெண்மானுடன் தங்கியிருக்கும் அவ்விடத்தில்
களைக்கொட்டினைக் கையில் கொண்டவராய்க் களையெடுக்கும் தொழிலாளர்,
கள்ளைக் குடித்தவராய், அதனால் விளைந்த களிப்பு மிகுந்து தங்கியிருக்க,
செல்கின்ற கதிர்களின் வெம்மை மழுங்கிப்போன செந்நிறமுள்ள ஞாயிற்றையுடைய
செக்கர் வானமும் கரைந்துபோன மாலைநேரத்தில்
பாறையின் மீது விழும் அருவியைப் போல ஒலிக்கின்ற நல்ல தேரிலுள்ள
மாலையில் கட்டப்பட்ட மணிகள் பலவும் சேர்ந்து ஒலிக்க,
சிறப்பு மிக்க தலைவனே! நீ வந்து நின்றது - (இனிமையைத் தருவதாய் அமைகின்றது)
					மேல்
#185 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ
ஒளி பொருந்திய வளையல்கள் கழன்றுபோகும்படி மெலிந்து, ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுடையவளின்
நல்ல அழகினை உடைய பருத்த தோள்கள் தம் பேரழகு அழிந்துபோக,
பெரிதும் செயலற்றுப்போன நெஞ்சத்துடன் இருக்கும் நம்மைப் பிரிந்துபோய்
இரும்பினாற் செய்த இனிய உயிரை உடையவர் போல
உள்ளத்தை வன்மையாக்கிக்கொண்டு இருக்க வல்லவராய் இருக்கிறார் நம் காதலர், வாடிப்போன
ஒலிக்கும் கழை மேலுயர்ந்த, நெல் விளைந்த நீண்ட மூங்கில்
ஆரவாரம் கொண்ட மறவர் வில்லை விசைக்கும்போது தெறிப்பது போல தெறிக்க
பசுமை அற்றுப்போகும்படி வெப்பமுற்ற பருக்கைக் கற்கள் உறுத்துகின்ற பரப்பினையுடைய
வேனில் காலத்துப் பாலைநிலத்துக் கடப்பதற்கரிய வழியாகிய அவ்விடத்தில், மழை வறந்துபோனதால்
அருவிகள் இல்லையாகிப்போன உயரமான சிகரங்களின் பக்கத்தில்
பெரிய கார்த்திகைத் திருவிழாவின்போது ஏற்றப்படும் விளக்குகள் போல, பலவும் ஒன்றாய்
மலர்ந்த இலையில்லாத இலவமரங்களைக் கொண்டு
உயர்ந்த நிலையையுடைய சிறந்துவிளங்கும் மலைகளைக் கடந்துசென்றவர் - (வலித்து வல்லினர்)
					மேல்
#186 மருதம் பரணர்
மழை பெய்தலை வேண்டாத வறுமையற்ற வாழ்க்கையினையுடைய
வலிய தூண்டில் கயிற்றினையுடைய மீன்பிடிப்போர் மீன் முளிலுள்ள இரையைப் பிடிப்பதை அறிந்து இழுக்கும்
மீன்கள் நிறைந்த நீர்நிலையில் செழித்து வளர்ந்த தாமரையின்
நீரின் மீது உயர்ந்து நிற்கும் நீண்ட தண்டிலுள்ள அகன்ற இலையைப்
பெரிய குளத்து நீர் அலையுடன் ஆடும்படி காற்று மோதும்போதெல்லாம்
பெரிய களிற்றின் செவியினைப்போல ஆட்டும் ஊரனாகிய தலைவனால்
ஊரில் எழுந்த பழிச்சொற்கள் மிகவும் பெரிது; அவனுடைய நட்போ,
செழித்த கொறுக்கங்கோலினால் ஆன தெப்பத்தைத் துணையாகக் கொண்டு
புனலாடுவோர்க்கு அதனுடன் உண்டான நட்பு எவ்வளவோ அவ்வளவே ஆகும்; அவனோ,
ஒளியுள்ள வளையலை அணிந்த மகளிர் பண்ணுறுத்தப்பட்ட யாழினை மீட்டிப் பாட
மிகவும் குளிர்ந்த முழவினை அடிக்கும் குறுங்கோல் நடுங்க,
குளிர்ந்த மணமுள்ள சந்தனம் கமழும் தோளினைத்  தழுவி,
இப்பொழுதும் வேறொரு பரத்தையின் வீட்டில் தங்கியிருக்கின்றான்; அவனுடைய மனைவியோ
என்னைப் பழிதூற்றி என்மேல் கோபங்கொள்கின்றாள் என்கிறார்கள்; வெற்றியையுடைய வேலையும்
மழை போல் சொரியும் அம்புகளையும், மேகம் போன்ற கரிய கேடகத்தையும் உடைய பழையன் என்பவனின்
காவிரி நாட்டின் களத்தில் செறிவாக அடுக்கப்பட்ட வைக்கோல் போரினைப் போல் என்
செறிவான வளையல்களை (அவன் மீதுள்ள கோபத்தினால்)இன்னும் நான் உடைக்கவில்லை; உரிமையுள்ள
நான் அந்த மனைவிக்குப் பகையாளி இல்லை; தன்னைச் சேர்ந்தோரின்
அழகிய நெற்றி பசந்துபோகும்படியாக அவர்களைவிட்டு பிரியும்
அவளுடைய கணவனே அவளுடனேயே வாழும் பகைவனாக அமைவான்.
					மேல்
#187 பாலை மாமூலனார்
நமது தோளின் தனிமை அகல, நம்முடன் துயில்கொண்டு,
பல நாள் நீடித்திருந்த மறைவான களவுக்காலச் சந்திப்புகளை,
ஆணுக்குரிய பொருளீட்டும் தொழிலில் ஈடுபடாததினால் நாணப்பட்டு, கைவிட்டுத் தொலைவிலுள்ள நாட்டுக்கு
அரிய பொருளை ஈட்டத்துணிந்த நெஞ்சத்துடன் சென்று, (பொருளீட்டி)
இல்லறம் நடத்திப் புகழ் எய்தும் நம் உயர்ந்த நிலையை நம் காதலர் கருதினார்; சினந்தெழுந்த பகைவரது
பகைப்புலத்தை வென்று அழித்த விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகளையுடைய
நீண்ட வீரக்கழலால் பொலிவுபெற்ற கொடும் மறவர்களுக்குரிய
அழகிய அம்பு தொடுப்பதற்குரிய பூந்தொடை என்னும் விழாவின் முதல்நாளைப் போன்ற பொலிவினையுடைய
கொண்டுவந்த மணலைப் பரப்பிய அழகிய மனையின் முற்றம்
தனிமையுற்றுப் பொலிவிழந்துபோகுமோ? தோழியே! மிகவும் உயரமாக வளர்ந்த
காய்ந்துபோன உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய ஆள் நடமாட்டம் அற்ற இடங்களில்
மலையைச் சார்ந்திருந்த சில குடிகளையுடைய ஊரில் உள்ள மக்கள்
இரவில் வருபவரை உபசரிக்கும் விருந்தோம்பலை ஏற்றுப் பாதுகாப்பாகத் தங்கியிருந்து,
வீட்டிலிருக்கும் சேவற்கோழியின் தொங்குகின்ற தாடியைப் போன்ற
கிளைத்துப் பிரிந்த ஒளிபொருந்திய தளிரையுடைய கரிய அடிமரத்தையுடைய யா மரங்களை உடைய
வேனில்காலத்து வெப்பமுடைய மலையினை அடுத்த காடு காய்ந்துபோனதினால்
அந்தக் காட்டு அரணில் உள்ள மறவர்கள் குடியோடிப்போன பாழான நாட்டின் கடப்பதற்கு அரிய வழியில்
பனையை முறித்து உள்ளிருக்கும் இளம் பகுதியைத் தின்னும் பசிய கண்ணையுடைய யானைகள்
ஒளிரும் சுடர் முதிராத இளம் ஞாயிற்றையுடைய விடியற்காலையில்
உறங்குமிடத்தில் செயலற்று ஒடுங்கி அசைந்துகொண்டிருக்கும் நிலை
வாள் போன்ற வாயினையுடைய சுறா மீன்கள் உள்ள குளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று
காலையில் மீன் வேட்டைக்காகப் புறப்பட்ட கனிவு இல்லாத மீன்பரதவருடைய
கடலில் இருக்கும் தோணிகளைப் போன்று தோன்றும்
மேகம் பொருந்திய பெரிய மலை குறுக்கேநிற்கும் பாலை நிலத்தில் - (ஏகி நம் உயர்வு உள்ளினர்)
					மேல்
#188 குறிஞ்சி வீரை வெளியன் தித்தனார்
பெரிய கடலின் நீரை முகந்துகொண்ட பெரும் கூட்டமான மேகமே!
இருட்டினை உண்டாக்கி, உயர்ந்த வானத்தில் வலப்பக்கமாக எழுந்து சுற்றி
தோல் போர்க்கப்பட்ட முரசு போல முழங்கி, முறையாக ஆட்சிசெய்து
அறநெறி வழுவாத திறன்களையெல்லாம் நன்கு அறிந்த மன்னர்களுடைய 
வெல்வதற்கு அரிய போரில் பகைவரை எதிர்த்த பேராண்மைச் செய்கையையுடைய வீரர்கள்
உருவி வீசுகின்ற வாள்களைப் போல செறிந்தனவாய் மின்னுகின்ற
மின்னலின் தொகுதியை உடையதாய் ஆகி, நாள்தோறும்
வீணாக ஆரவாரம் செய்துபோகிறாயோ? அல்லது, பொன் போன்று
மலர்ந்த வேங்கைப்பூக்கள் நிறைந்த மாலையை அணிந்து
பொலிவுற்ற தோழிமாருடன் காண்பதற்கு இனிதாக நடந்து,
தழலை என்ற கருவியைச் சுழற்றியும், தட்டை என்னும் கருவியைத் தட்டியும்,
தீக்கொழுந்தைப் போன்ற அசோகின் அழகிய தழையாற் செய்த உடையினை உடுத்தியும் இருக்கின்ற
குறமகளாகிய எம் தலைவி காவல்காக்கும் தினைப்புனத்தில்
மழையைப் பெய்து காக்கவும் செய்கின்றாயோ? நீ வாழ்க.
					மேல்
#189 பாலை கயமனார்
பசிய பழங்களுள்ள பலா மரங்களையுடைய காடு வெம்பவும்,
மேகம் வானத்திலிருந்து நீங்கிப்போனதால் வேனில் வெப்பம் மிக
சுனைகள் ஊற்றுக்கண் அற்றுப்போன கற்கள் உயர்ந்த இடங்களில்
வெப்பம் பொறாமல் பெருமூச்சுவிடுகின்ற இளைய பெண்யானையைத் தழுவி, வேறுநாட்டில் நிகழ்கின்ற
விழாவுக்காகத் தங்கள் முழவுகளை எடுத்து உயர்த்திக்கொண்டு செல்லும் மள்ளர்களைப் போல்
களிறு வழிநடத்திச் சென்ற கற்பாறைகளால் உயர்ந்த மலைச் சரிவை அடுத்த
வெப்பம் மிக்க பாலை நிலத்தைக் கடந்துபோகத் துணிந்து, மெதுவாக,
வயலைக் கொடியால் ஆகிய அழகிய தழையுடை தொங்குகின்ற தொடையினையும்,
தேமல் படர்ந்த அல்குலையும் உடைய இளையவளாகிய என் மகள், தன் தலைவனுடன்
சென்று எமக்கு யாரோ ஒருத்தியாய் ஆகிவிட்டபோது, இனி எப்பொழுதும்
துன்ப நினைவுகள் மிகுகின்ற வருத்தத்துடன், திசையெல்லாம் தேடிவந்து காணாமல் திரும்பி
வீட்டினில் மயங்கியிருந்த என்னைக்காட்டிலும், கள்ளின் களிப்பினையுடைய
நல்ல பாணர்களின் ஒன்றுசேர்ந்து ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள்
தேர் ஓடும் தெருக்களில் இடைவிடாமல் ஒலிக்கும்
இந்த ஊரானது தான் மிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை இழந்துவிட்டது.
					மேல்
#190 நெய்தல் உலோச்சனார்
கடல் அலையில் விளையாடிக் களைத்துச் சோர்ந்துபோன வரிசையான வளையல்களையுடைய தோழியருடன்
உப்பு மேட்டில் ஏறி நின்று, ஞாயிறு மறையும்போது
கரைக்கு வரும் படகுகளை எண்ணும் துறையையுடைய தலைவனுடன் உன் மகளை இணைத்து, இந்த ஊர்
மிகவும் இரக்கமற்ற தன் கொடுமையால் பழிச்சொல் பேசுகிறது; (அவனைப் பார்த்ததினால் அஞ்சிச்)
சுழல்கின்ற குளிர்ந்த கண்ணையுடைய இவள் அவனை விரும்பிப் பார்க்கவும் இல்லை
எனவே அவளை வருத்தாதே!, வாழ்க, நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக, உயர்ந்த உச்சியையுடைய
சோலையில் புன்னைமரத்தின் கிளையைச் சேர்ந்திருந்த
புதிய நாரை வெருண்டோடும்படியாக, முன்பு ஒரு நாள்
பொங்கி வருகின்ற வாடைக் காற்றினால் கடலானது கரைகளை வேகமாக மோதவும்
கடலோரத்தில் தேரினை ஓட்டிக்கொண்டிருப்பான், அதற்கு மேலும்
பெரிய கழியினையுடைய துறைமுகத்தில், காலில் புண்ணாகும்படி தாக்கி
வலிய சுறாமீன் ஒன்று வெட்டியதால், தேர்ப்பாகன் தேரினை நிறுத்த,
தம் அழகும், பயனும் குன்றிப்போனதுவும், தேரில் பூட்டிய பூட்டு அவிழ்த்துவிட்டனவுமாகிய
வரிசையான மணிகளால் ஆன மாலையை அணிந்த குதிரைகள், தமது விரைவான நடையை ஒழித்தனவாக
இழுமென்னும் ஓசையையுடைய கடற்கரைச் சோலையில் உள்ள சிறந்த மணலில் தங்கி
இவ்வாறு மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் இங்கு வந்து
மயக்கம் தரும் மாலைப் பொழுது வரையில் தங்கியிருக்கவும் இல்லை. 
					மேல்
 



#191 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
பாலை நில வழியில் நிற்கின்ற பாதிரிமரத்தின் மெல்லிய பஞ்சினை உச்சியில் கொண்ட புதிய பூவைத்
தீப் போன்ற இதழ்களையுடைய இலவம்பூவுடன் இடையிடையே கலந்து
வளமையான தாழம்பூவின் இதழுடன் வைத்துக் கட்டிய வண்டுகள் மொய்க்கும் கண்ணியினைத் தரித்த
செருப்பணிந்து ஒலிக்கின்ற அடியினையும், எருதுகளை அடிக்கும் கோலினையும் உடைய உப்பு வணிகர்களின்
ஊரே திரண்டுவருவதைப் போன்று, ஆரங்களையுடைய வண்டிகளை இழுத்து
ஏறுவதற்கு அரிய கடினமான பாதைகளில் ஊர்ந்துவரும் தளர்வு இல்லாத வலிய கால்களையுடைய
திருத்தமான காளைகளின் ஒலிக்கும் வளைவான மணிகளின் ஒலி. மிகவும் விருப்பத்துடன் அவர்கள்
உதடுகளை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியுடன் விரைந்து எதிரே சென்று
ஓமை மரங்களையுடைய அழகிய பெரிய காடுகளின் வருகின்ற புதிய வழிப்போக்கர்களுக்கு
‘உமக்குப் பாதுகாப்பு உள்ளது’ என்று கூறும் வெப்பம் மிக்க நெடிய பாலையில்
அரிதாக ஈட்டும் பொருளினை விரும்பி, நம் தலைவியைவிட்டுப் பிரிந்து வாழும் உரம் படைத்தவனாய்
வேறு நாட்டுக்குச் சென்று தொழில்செய்ய நினைக்கின்றாயானால், நன்றாகச்
சொல்லுவாய், என் நெஞ்சமே! வரிசையாகக் கோத்த அரும்புகளையுடைய
முல்லையினைச் சூடிக்கொண்டு, மென்மைத்தன்மை உடையன ஆகி
கருமணல் போன்று விரிந்த, அணைவதர்கு இனிய மென்மைத்தன்மையினையுடைய
அடர்ந்த கரிய கூந்தலையுடைய நம் தலைவி உன் பிரிவினைக் கேட்டுத் தெளிந்திருப்பாள் என்று
பிரிவுணர்த்தும் கொடுஞ்சொற்களைக் கூறும் வலிமை உனக்கு இருக்கிறதா? - (சொல்லுவாய், என் நெஞ்சமே!)
					மேல்
#192 குறிஞ்சி பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
பிறைநிலா வந்து இருந்ததைப் போன்ற இவளின் குற்றமற்ற ஒளியுடைய நெற்றி
பொன் போன்ற நிறத்தை உடையது ஆயிற்று; அந்தோ!
இனி இவள் என்ன ஆவாளோ? வானத்திலுள்ள
அம்பினை எய்யாத அழகிய (வான)வில்லைப் போன்ற புதிய மாலையினையும்
சிவந்த வாயினையும் உடைய சிறிய கிளிகள், தினை சிதையும்படி கொய்து,
பாரத்தைச் சுமக்கமாட்டாமல் கீழேபோட்டுவிட்ட புன்மையான புறத்தினையுடைய பெரிய தினைக்கதிரை
வளைந்த சிறகுகளையுடைய காட்டுக்கோழி தன் கூட்டத்துடன் கவர்ந்துகொள்ளும்படியாக,
தினையும் வளைந்த கதிர்களை ஈன்றன. (எனவே தலைவி புனம் காக்கப் பகலில் வரமாட்டாள்), நடு இரவில்
நீ வந்து அவளுக்கு அருள்செய்வாய் என்றால், பெரிய மலையின்
இருள் பொதிந்த குகையின் இடங்களைத் துழாவி, விரைவாக
அருவிநீர் கொண்டுவந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணி,
பெரிய மலையிலுள்ள எம் சிற்றூரின் தெருக்களிலே வெளிச்சம் வீசுவதால்
இரவினிலும் இழந்தாள் ஆவாள், அந்த இரங்கத்தக்கவள், பெரும் மழையுடன்
இடியும் சேர்ந்திருக்கும் உயர்ந்த உச்சியையுடைய 
பெரிய மலைநாட்டுத் தலைவனே! உன் அகன்ற மார்பினைச் சேர்வதை - (இரவினிலும் இழந்தாள் ஆவாள்)
					மேல்
#193 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயர்ந்த காட்டின் பக்கத்திலேயுள்ள பல வழிகள் வந்து கூடுமிடமே தங்கள் பிழைப்பிற்குரிய இடமாக அன்றி
பிழைப்பதற்கு மழையை வேண்டாத தமது வில்லையே ஏராகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் கள்வர்கள்,
சிறந்த நாளில் கிடைத்த கொள்ளையைத் தம் கிளைகளுடன் சென்று வாய்க்கப்பெற்ற
போரிடும் இடத்தில், அவர்கள் கொன்றுபோட்டவர்களின் சிந்திய இரத்தத்தை உண்டதால் சிவந்த வாயையும்
ஓவியத்தில் வரைந்துவைத்ததைப் போன்ற வெண்ணிறமான புறக்கழுத்தினையும்,
தசையினால் செய்து பொதித்து வைத்ததைப் போன்ற சிவந்த செவிகளையும் உடைய கழுகு,
குறிய மலையிடத்தில் வளர்ந்த நீண்ட அடிமரத்தையுடைய யா மரத்தின்
ஏறுவதற்கு அரிய கவட்டிலிருந்து எழுந்த உயர்ந்த கிளைகளிலுள்ள தன் குஞ்சுகளுக்கு ஊட்டும்போது
விரைவின் காரணமாக, வாயிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்த கொழுமையான கண்ணான ஊனின் துண்டு
கொல்லுகின்ற பசியையுடைய முதிய நரிக்கு உணவாக அமையும்
காட்டுவழிகள் நாம் கடந்து செல்வதற்கு எளிதானவையே! நமது நல்ல வீட்டிலுள்ள
பல்வேறு மாண்புகள் அமையப்பெற்ற மென்மைத்தன்மையையும், இனிய மொழிகளையும்,
மயிலிறகின் அடிப்பகுதியைப் போன்ற அழகிய பற்களையும் உடைய இளையவளாகிய நம் தலைவியின்
பெரிய தோளில் எய்தும் இனிய துயிலைத் துறப்பதற்கு ஆற்றாதவன் ஆனேன்.
					மேல்
#194 முல்லை இடைக்காடனார்
பெரிய மழை பெய்த, நன்றாக இருள் புலர்ந்த வைகறைப் பொழுதில்
ஏர்களால் இடம் உண்டாக உழப்பட்டதால் பெரிய வடுக்களோடு, புழுதி
கீழ்மேலாகப் புரண்டு மாறுபட்ட செம்மண் நிலத்தில் உண்டான ஈரத்தினால்
ஊனைக் கிழித்தது போன்ற செந்நிறம் அமைந்த மேட்டுநிலத்தில் அமைந்த நீண்ட பிளவாகிய சாலில்
விதைத்த இடங்களில் விதைகள் பலவும் முளைத்து
நல்ல கலைமானின் கூட்டம் பரந்தது போல,
இருபுறமும் கொம்புகளையுடையதாய்ப் பின்னப்பட்ட தலையில் கவிழ்க்கும் கூடையைச் சூடிய தொழிலாளர்கள்
ஒலிக்கும் பறையின் ஒலியுடன் பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக்
களையைப் பறித்துத் தூய்மை செய்த பெரிய கொல்லையில் விளைந்த வரகின்
கிளைத்துப் பிரிந்த கதிர்களின் கரிய புறத்தினைக் கொத்தித் தின்ற
குடுமியுள்ள தலையினையுடைய நீண்ட கரிய மயில்
தன் அழகிய தோகையினை விரித்து, காண்பவர் இன்பம் அடைய
கொல்லையை உழும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலாக விட்டுவைத்த
வலிய இலையினையுடைய குருந்தமரத்தின் வளைந்த கிளையிலிருந்து
கிளிகளை விரட்டும் பெண்களைப் போலச் சத்தம்போட்டுக் கூவுகின்ற
கார்காலம் அல்லவா இது! தோழியே! போர் உக்கிரமாக மூண்டதால்
கொடுஞ்சியை உடைய நீண்ட தேரில் பூட்டப்பட்ட வேகமான ஓட்டத்தையும்
விரிந்த பிடரி மயிரையும் உடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக்கொண்டு
வந்துவிடுவேன் என்று நம் தலைவர்  தெரிவித்த காலமான - (கார்காலம் அல்லவா இது! தோழியே!)
					மேல்
#195 பாலை கயமனார்
கடப்பதற்கு அரிய பாலைநிலத்தைக் கடந்துசென்ற என் பெரிய தோள்களையுடைய இளைய மகள்
திருத்தமான வேலை ஏந்திய இளைஞனாகிய தன் மகனுடன் வருவாள் என்று அவனுடைய தாயானவள்
மாண்புறக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் எல்லாம் செம்மண்குழம்பால் பூசி,
வீட்டின் முற்றத்தில் மணல் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு
மகிழ்ச்சியுடன் இனிதே கொண்டாடுகிறாள் என்று அறிந்தோர் கூறுவர்; நானும்
பெண்மானின் பார்வை போன்ற பார்வையினையும், இளமையையும் உடைய அந்த நல்லவளை
ஈன்ற உரிமை கொண்ட அன்புடையவள் என்பதனால் என் மனைக்கு அழைத்துவந்து அருள்செய்யான் என்றாலும்,
இனிய பற்களையும், புன்முறுவலையும் உடைய அவன் காதலியான என் மகளைப் பல நாட்கள்
கூந்தலை வாரி முடித்து, இடுப்பிலே தூக்கிவைத்துக்கொண்டு அவளைப் பாதுகாத்து,
நன்மையுடன் கூடிய உதவிகள் பலவற்றையும் செய்துள்ளேன்,
அதனை அவன் அறிந்துகொண்டால் மிகவும் நல்லது;
ஆடை சுற்றிய ஒரு பெரிய குடுமியினையும்,
ஒரு சிறிய பையைத் தொங்கவிட்ட, பல தலைகளைக் கொண்ட, வளைந்த கோலையும் உடைய
நடக்கப்போவதை முன்னரேயே அறியக்கூடிய அறிவு வாய்க்கப்பெற்ற வேலனே!
உன்னுடைய கழங்கினால் குறிபார்த்து அது கூறுவதன் உறுதித் தன்மையைக் கூறுவாயாக -
ஒழிவில்லாமல் வரும் நீருடன் கலங்கி அழுது, இரவில் 
இடைவிடாமல் துன்புறுகின்ற எமது கண்கள் இனிதாகத் தூங்கும்பொருட்டு
எமது மனையில் முதன்முதலில் அழைத்து வருவானா, அல்லது
தனது வீட்டுக்குக் கொண்டுசெல்வானா, அந்த விடலையின் கருத்து என்ன என்பதை -
					மேல்
#196 மருதம் பரணர்
உயரமான கொடிகள் அசைந்தாடும் கள் நிறைந்த இவ்வூரில்
விடியற்காலையில் நீர்த்துறையில் அகப்பட்ட பெரிய வயிற்றினையுடைய வரால் மீனின்
உடுக்கின் கண் போன்ற அகன்ற கொழுத்த துண்டத்தை விற்று, கள்ளினைக் குடித்து மகிழ்ந்து
மீண்டும் மீன்வேட்டைக்குப் போவதை மறந்து உறங்கிக்கிடக்கும் கணவன்மார்க்குப் பாணர் மகளிர்
ஆம்பலின் அகன்ற இலையில் திரளான விருப்பந்தரும் சோற்றை
பிரம்பின் திரண்ட பழத்திலிருந்து பெற்ற இனிய புளிச்சாற்றை ஊற்றி
இருள் புலரும் விடியற்காலத்தில் இடுகின்ற மருதநிலத் தலைவனே!
தொடமாட்டேன்! கிட்டே வராதே! தன் தந்தையின்
கண்ணின் அழகினைக் கெடுத்த குற்றத்துக்காக, அச்சம் உண்டாக,
வஞ்சினம் கூறும் கோசர்களைக் கொன்று, தன் பகைமையைத் தீர்த்துக்கொண்ட
விரைகின்ற தேரையுடைய திதியனின் அழுந்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த வளைந்த காதணியைக் கொண்ட
அன்னி மிஞிலி என்பவளைப் போன்று களிப்புடன் நடக்கும்
உன் அழகுக்குத் தக்கவளான பரத்தையைத் தழுவிய மார்பினை - (த்தொடமாட்டேன்! கிட்டே வராதே!)
					மேல்
#197 பாலை மாமூலனார்
கருங்குவளை மலரின் அழகினை இழந்த கண்களையும்,
பொலிவிழந்து நெகிழ்ந்த பஞ்சணை போல மெலிந்த தோள்களையும் உடையவளாய்
நலமுடைய தோழியர் விரும்பி ஆராயும்
பழைய நலத்தினை இழந்ததினால் உண்டான துயரத்துடன், சிறிதளவும்
வருந்தாதே, வாழ்க, தோழியே! போர்செய்ய
முற்பட்ட பகைவரை ஓட்டிய ஆற்றல் மிக்க செல்வத்தினையும்
வீரம் மிக்க படையினையும் உடைய கண்ணன் எழினி என்பவனின்
தேன் மிக்க முதுகுன்றத்தினைக் கடந்துசென்றாரென்றாலும்,
உன் வரிசையான வளையல்கள் கழன்று விழும்படி நீட்டித்திருக்கமாட்டார்;
தோளின் மேல் தாழ்ந்து இருண்டுகிடக்கும் குவியலான கரிய கூந்தலையுடைய
இளைய தன் காதலியைத் தழுவிக்கிடக்கின்ற வெற்றி மறவனுடைய மார்பின் மேல்
புன்மையான தலையையுடைய புதல்வன் ஏறி இறங்குவது போல
நிறைந்த சூலினையுடைய இளம் பெண்யானையைத் தழுவிக்கிடந்த வெண்மையான கொம்புகளையுடைய
இனத்துடன் கூடிய களிறு, கன்று தன்மீது ஏறி இறங்க,
படுத்திருக்கும் நடுக்கத்தைத் தரும் பாலைநிலத்து வழியைக் கடந்து
ஒளிவிடும் பூங்கொத்துக்களையுடைய கொன்றைமரங்களையுடைய உயர்ந்த மலையை அடுத்த பாதையில்
பொருளீட்டும் தொழிலை வலியுறுத்துகின்ற நெஞ்சத்துடனே
இவ்வாறு நம் மீது இரக்கம் இல்லாதவராகி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் - (நீட்டித்திருக்கமாட்டார்;)
					மேல்
#198 குறிஞ்சி பரணர்
இவளிடம் சொல்லிவிடலாமா அல்லது சொல்லாமல் விட்டுவிடலாமா என்று
இதுவரை மறைத்துவைத்திருந்த ஆசையை மேலும் மறைத்துவைக்கமாட்டாமல்
விரும்பி நாம் வெளிப்படையாகக் கூறிய நமது இனிய மொழியை விரும்பி,
நடு இரவில் பெய்யும் மிக்க மழையில் மறைவாக,
கார் காலத்தின் மணம் கமழும் கூந்தலுடன் தூய்மையான, நல்ல வேலைப்பாடமைந்த
நுண்ணிய நூலால் ஆகிய ஆடையால் தன் உடம்பினை மறைத்தவளாய், மலையிலுள்ள
இலேசான மேகம் சூழ்ந்த இளமையான மயிலைப் போன்று,
வண்டுகள் பின்தொடர்ந்துவர, குளிர்ந்த மலர்களைச் சூடிக்கொண்டு
வில்லினைப் போல வகுத்தலையுடைய அழகிய வளைவினையும், குடம் போன்ற புடைப்பினையும் உடைய
அழகிய தன் சிலம்புகளின் ஓசையை அடக்கி, அச்சத்துடன் வந்து
ஊரெல்லாம் தூங்கும் இந்த நடுச்சாமத்தில் நம்மைத் தழுவியிருந்துவிட்டு மீண்டும் செல்கின்றவள்,
நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற 
அழகிய மாமை நிறமுடைய நிலவுலக மங்கையோ என்றால் அது இல்லை, தெற்கிலே உள்ள
ஆய் என்பவனின் நல்ல நாட்டில் தெய்வத்தையுடைய மலையில்
கவிரமென்னும் பெயரையுடைய அச்சம் பொருந்திய உச்சிமலைச் சரிவினில்
அழகிய மலர்களையுடைய நிறைந்த சுனையில் வசிக்கின்ற
சூர் அர மகள் என்று துணிந்து சொல்வோம், என் நெஞ்சமே!
					மேல்
#199 பாலை கல்லாடனார்
கரைமீது பாயும் வெண்மையான அலைகளைப் போன்று, பலவும் ஒன்றாகச் சேர்ந்து,
அடுத்தடுத்து வரும் காற்று மோதுவதால் பாறையின் மீது உதிர்கின்ற
மலையினைச் சேர்ந்த வெண்கடம்ப மரத்தின் நன்கு மலர்ந்த பூக்களை மழை என்று நினைத்து
தண்ணீர்த் தாகத்தால் வருந்திய யானை, அத் தாகத்தினைத் தணிப்பதற்கு முயன்று மனம் கலங்க,
சிலந்திகள் வலைபின்னிய வெறுமையான காய்ந்துபோன கிளைகளைக் கொண்ட
அசைகின்ற பட்டுப்போன மரங்களின் வரிவரியான நிழலில் தங்கி,
வாடிச் சுருண்டுபோன பெருங்குரும்பையைக் கவ்வித்தின்னும் வேறு செயலற்ற கூட்டத்தில் புகுந்து,
அரத்தால் தேய்த்துக் கூர்மையாக்கப்பட்ட ஊசியின் திரண்ட முனையைப் போன்ற
உறுதியான பற்களைக் கொண்ட செந்நாய்கள் தாக்கியதால்
காற்றின் முன் அகப்பட்ட பூளைப்பூவைப் போன்று விரைந்து அலறிக்கொண்டு
நிலைகெட்டு ஓடிய தன் இனமான மான்கூட்டத்தை மீண்டும் அழைப்பதற்காக, ஆண்மானானது
ஞாயிறு மறையும் மாலைப் பொழுதில் தன் ஆண்குரல் தோன்ற அழைக்கும்
கடல் போன்ற பரந்த காடு பிற்பட்டுப் போகும்படியாக, மற்றவர்களைப் போல
நாம் செல்வோமானால் நமது பயணம் நமக்கு நன்மையாக இருக்கும் என்னும்
பொருளாசைகொண்ட உள்ளம் தளர்ச்சியின்றி முன்னே செலுத்த,
நீ செல்வதற்கு உரியவன் ஆவாய், நெஞ்சமே! மூங்கிலைப் போல
வளைந்தனவாகி நிலைபெற்ற குளிர்ச்சியான திரண்ட
பெரிய தோள்களையுடைய நம் தலைவி இங்கே தனித்திருக்க, மேற்கிலுள்ள
பெரிய பொன் வாகை மரத்தினையுடைய பெருந்துறை என்னும் ஊரில் நடந்த போரில்
பொன்னினால் ஆன அணிகலன்களை அணிந்த நன்னன் என்பவன் போரிட்டு அக் களத்திலேயே மடிய
ஆற்றல் பொருந்திய வெற்றியைத் தந்த இலக்கு தப்பாத வாளினையுடைய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன்
தான் முன்பு இழந்த நாட்டினைத் திரும்பப் பெற்றதைப் போன்ற
பெரிய செல்வத்தைப் பெற்றாலும் உன்னுடன் நான் வரமாட்டேன்.
					மேல்
#200 நெய்தல் உலோச்சனார்
நிலாவைப் போல ஒளிவீசும் மணல் மிகுந்த தெருக்களிலுள்ள
புல் மேய்ந்த குடிசைகளையுடைய புலால் நாறும் சேரியாகிய எமது இடம்
ஓர் ஊர் என்று நினைக்கமுடியாத சிறுமையையுடையதாய், நீரினால் சூழப்பெற்று
தங்குவதற்கு இனியது அல்லாததாயினும், அதில் கிடைக்கும் இன்பமானது
அங்கு ஒரே ஒரு நாள் தங்கியிருந்தவர்க்கும், அடுத்த நாளில்
தமது சொந்த ஊரையே மறக்கவைக்கும் பண்பினையுடையது, அத்தகைய எமது ஊருக்கு
வந்துவிட்டுச் செல்லுங்கள், சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே!
பொலிவுள்ளதாய் ஒலிக்கும் அலைகள் விரைந்து வந்து சிதறிப்போகும்
மரங்கள் உயர்ந்து நிற்கும் ஒரு பக்கத்தில், உன் குணங்களை நாங்கள் பலவாய்ப் பாராட்ட,
பகல் முழுதும் எம்முடன் கழித்து, இரவு வரும்போது
உமது நல்ல தேரினைப் பூட்டிச் செல்லவும் செய்யலாம், இல்லையென்றால்
இங்குத் தங்கிச் செல்வீர் என்றால் நாங்களும்
எங்களால் முடிந்தவரை உங்களை உபசரிப்போம்,
உமக்குச் சம்மதமா? எமக்கு உரையுங்கள்
					மேல்
 




#201 பாலை மாமூலனார்
தோழியே, வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! பொன்னால் செய்த
விரிகின்ற அழகிய ஒளி அசையும் அழகுமிக்க நெற்றிப்பட்டத்தினையுடைய
போர்த்தொழிலில் நன்கு பயின்ற யானைகளையுடைய போரில் வெற்றிகொள்ளும் பாண்டியமன்னனின்
புகழ் மிகுந்த சிறப்பினையுடைய கொற்கைத் துறைமுகத்தின் கடல் துறையினில்
விளங்குகின்ற ஒளியையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து
தழையாடைகளால் பொலிவுபெற்ற பக்கம் உயர்ந்த அல்குலையுடைய
நெய்தல் நிலத்து மகளிர் குளிர்ந்த கடல்துறையினில் நின்று வழிபாடு செய்ய,
கதிரவன் மறைந்த அந்தியாகிய போக்குவதற்கு அரிய பொழுதில்
அச்சம் பொருந்திய பெரிய கடல் நிறைமதி நாளில் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்ததைப் போல
ஊரினர் பேசும் பழிச்சொற்கள் ஊர்மன்றத்தில் பரவியது; தாயும்
கண்னை மூடாதவளாய் வெப்பம் மிக்க பெருமூச்செறிகின்றாள் என்று சொல்லி
ஏன் இவ்வாறு செயலற்றுக்கிடக்கின்றாய்? தோழியே! சோழ மன்னரது
வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினையே பெறுவதாயிருந்தாலும்
வேற்றுநாட்டில் நிலைகொண்டு தங்கிவிடமாட்டார்; முன்னே கிடக்கின்ற
வானளாவிய உச்சியையுடைய மலையின் உச்சிமலைச் சாரலில்
பெரிய கையையுடைய கரடியின் பிளந்த வாயையுடைய ஆண்கரடி
இருளை வெட்டிவைத்தாற்போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும்
தோலாக வற்றிப்போன முலையினையுடைய பெண்கரடியுடனும் மகிழ்ந்திருக்கும்
முதுவேனில் பருவம் நீண்டமையால் வெப்பம் மிகுந்துள்ள பாலைநிலத்தைக் கடந்துசென்ற நம் தலைவர்.
					மேல்
#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஒளிரும் வெண்மையான அருவியைக் கொண்ட மலையின் உச்சிமலைச் சாரலில்
மென்மையான தலையையுடைய இளம் பெண்யானை தன் கூட்டத்துடன் இனிதாக இருக்க,
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை
கற்களைத் தன்னிடத்தில் கொண்ட மலைச் சரிவில் தன் கையை உயர்த்தி பெருமூச்சுவிடுவதால்
நல்ல கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் நறுமணம் மிக்க பூக்கள், கொல்லன்
துருத்தியை மிதித்து ஊதும் உலையில் தெறித்து விழும் தீப்பொறிகள் போன்று பொங்கி எழுந்து
சிறிய பலவான மின்மினிப்பூச்சிகளைப் போன்று பலவும் சேர்ந்து
நீலமணியின் நிறத்தைப் போன்ற பெரிய புதரில் பரவி விழும் நாட்டையுடைய தலைவனே!
எம்மைத் தவிர வேறு யாரும் உண்டோ? நடுஇரவில்
பொறிகளைக்கொண்ட பாம்பின் படத்தையுடைய தலை துண்டாகிப்போகும்படியாக
வலிய இடியானது முழங்கும் அச்சம் வரும் அகன்ற இடத்தில்
தணியாத உள்ளத்துடன் தன் கையிலுள்ள வேலே துணையாக,
செறிந்த இருள் பரவிய கற்களையுடைய வழியாகிய ஒடுங்கிய பாதையில்
நேரிடும் கேட்டினை எண்ணிப்பாராமல் வருகின்ற உன்னை எண்ணி
பொறுக்க முடியாத துன்பக்கடலில் நீந்துவோர் - (எம்மைத் தவிர வேறு யாரும் உண்டோ?)
					மேல்
#203 பாலை கபிலர்
மகிழ்ச்சிகொள்வாள் என்றாலும், கோபம்கொள்வாள் என்றாலும்
தாயானவள் தானாக அறிந்து தெளிந்துகொள்ளட்டும் என்று நினைக்காதவராய், பொல்லாத வாயையுடைய
பிறர்மீது பழிதூற்றும் தொழிலையே விரும்புகின்ற புறங்கூறும் பெண்கள்
இப்படிப்பட்டவள், இன்னவாறு செய்கிறாள் உன் மகள் என்று பல நாட்கள்
என்னிடம் வந்து சொன்னபோதும் அதனை என் மகளாகிய அவளிடம் நான் சொல்லவில்லை,
இவள் வெட்கப்படுவாள் என்று மிகவும் மறைத்துக்கொண்டே அவளுடன் இருந்தேன்,
நான் இந்த வெறும் வீட்டினில் தனித்திருக்க, அவள்தான்
’தாய்க்குத் தெரிந்தால் இங்கு வாழும் வாழ்க்கை
எனக்கு எளிதாக இராது’ என்று கழல் அணிந்த காலினையும்,
மின்னல் போல் ஒளிர்கின்ற நீண்ட வேலினையுமுடைய இளைஞன் முன்னே செல்ல,
பல மலைகளையுடைய கடப்பதற்கு அரிய பாலைநில வழியினில் சென்ற அவளுக்கு, நான்
அப்படிப்பட்டவள் அல்ல என்பது அவளுக்கு மிகுந்த உண்மையாகத் தோன்றும்பொருட்டு
விலங்குகள் செல்லும் பாதைகள் பின்னிக்கிடக்கும் மலையடிவாரத்திலுள்ள சிறிய வழிகளில்
இடையில் தீங்கு நேரிடாமல் அவர்களுக்கு முன்னே சென்று
பொலிவிழந்த பெரிய மலையைச் சார்ந்த தனித்திருக்கும் சிறிய ஊரில்
அவர்களை வருவிருந்தாக உபசரித்துத் தங்கியிருக்கச் செய்ய
நுனிகள் தளிர்த்துக் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் நொச்சி சூழ்ந்த
மனையைச் சேர்ந்த பெண்ணாக நான் ஆவேன் ஆகுக. 
					மேல்
#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்
உலகம் முழுவதையும் நிழல்செய்த தோல்வியில்லாத வெண்கொற்றக்குடையினையும்,
கடல் போன்ற சேனையினையும், செருக்குள்ள குதிரையினையும் உடைய பாண்டியன்
பகைவரை வென்று போர் செய்யும் அகன்ற பெரிய பாசறையிடத்தில்
சென்று யாம் மேற்கொண்ட போர்த்தொழிலையும் வெற்றியுடன் முடித்துவிட்டோம்; எனவே, இன்றே
கார்கால மழையை எதிர்கொண்டு செழித்த காண்பதர்கு இனிய முல்லைக்காட்டில்
திரளான வண்டுகளின் அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டம்
மணம் கமழும் முல்லை மலர்களில் மாலைக்காலத்தில் ஆரவாரிக்க,
இதோ! பார்! கார்காலம் வந்துவிட்டது; மிகவும் விரைந்து
செல்லுவதாக! பாகனே! உன் நல்ல தொழில்திறம் சிறந்த நெடிய தேர்!
வெண்ணெல்லை அறுப்பவர்கள் அடிக்கும் வாயின் தோல் மடங்கிய கிணைப்பறையின் முழக்கம்
பல மலர்களையுடைய பொய்கையில் அமர்ந்துள்ள பறவைகளை ஓட்டும்
விளைந்த நெல்லையுடைய வயல்களையுடைய வாணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள
சோலை போன்று மணக்கும் கூந்தலையும்
ஒளிபொருந்திய வளையல்களையும் உடைய நம் தலைவியின் தோள்களை முயங்கி இன்புறுவதற்கு - 
					மேல்
#205 பாலை நக்கீரர்
உயிருடன் கலந்து ஒன்றிய மிகவும் பழைமையான நட்பினால்
குற்றமற்ற நெஞ்சத்தால் கலந்தவர் போல
பெண்ணே! உன்னைவிட்டு நாம் பிரியமாட்டோம் என்று
முழுப்பொய்யைக் கூறத் துணிகின்ற நெஞ்சத்துடன் நாம் விரும்பும்படி கூறி,
அதனை உறுதியுடன் கடைப்பிடிக்கும் துணிவு இல்லாத கொள்கையினர் ஆகி, இப்பொழுது
துன்பம் மிக்க வருத்தத்தால் நமது நெற்றியில் பசலை பரவிக்கிடக்கவும்,
நாம் அழவும் நம்மைப் பிரிந்துசென்றார் என்றாலும், அவர்தாம்
வாய்மை ஆகிய மொழியே பேசுதலால் நிலைத்த, நெடுந்தொலைவுக்கும் விளங்கும் நல்ல புகழினையுடைய
செல்வம் மிக்க கோசர்களின் வீரம் விளங்குகின்ற படைகளை அழித்து,
அவரின் நிலத்தைக் கைப்பற்ற விரும்பிய பொன்னாலான பூணையுடைய கிள்ளி என்னும் சோழ மன்னனின்
பூக்கள் மலர்ந்த நீண்ட கழியின் நடுவே, பெரிய புகழையும்
தோட்டங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்ற
வளம் மிக்க நமது இல்லத்தில் நல்ல விருந்தினர்களை ஏற்று உபசரிப்பதற்காக, இன்பம் உண்டாக
சிறந்த பொருளை எளிதாக அடைவாராக!
மழை போன்று இறங்குகின்ற முன்பனிக் காலத்து மயங்கவைக்கும் இருள் நீங்க,
நீண்ட மூங்கில் வளர்ந்த நிழல் அமைந்த மலைச் சாரலில்
மதக்களிற்றின் கன்னத்தின் பக்கத்தைப் போல,
அருவிநீர் ஊர்ந்து இறங்கும் அழகிய உச்சிமலையில்
புலியின் உரித்த வரிகளையுடைய தோலைப் போன்று, (செருக்கு மிகுந்து)
அன்று மலர்ந்த வேங்கையாகிய மணமுள்ள பூக்கள் உதிரும்படியாக
மேல் நோக்கி எழுகின்ற பெரிய கிளையில் ஏறி, கூட்டமான ஆண்குரங்குகள் (செருக்கு மிகுந்து)
தம் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும் குன்றின் இடையே செல்லும் சிறிய வழிகளாகிய
பருக்கைக்கற்கள் ஒளிர்கின்ற கடப்பதற்கு அரிய இடங்கள் குறுக்கிட்டுக்கிடக்கும்
மொழி வேறுபட்ட நாடுகளிலுள்ள பாலையைக் கடந்துசென்ற அவர் - (சிறந்த பொருளை எளிதாக அடைவாராக!)
					மேல்
#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
தலைவன் மீது குற்றமில்லை எனப்படும் கூற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வது? தோழியே! நல்ல களிப்புடன்
பேடியாகிய பெண்ணின் உருவம் கொண்டு ஆடுபவனின் பின்சென்று மேல் வளைந்த கைகளைப் போன்று
காண்பவர்க்குச் சிரிப்பு உண்டாகும்படி பருத்த முறுக்கேறின கொம்புகளையுடைய எருமையின்
மயிரால் அழகுபெற்ற கருமையான தோலையுடைய பெரிய முதுகின் மேல்
மாடுமேய்க்கும் சிறிய தொழிலைச் செய்யும் சிறுவர்கள் ஏறி அமர்ந்திருப்பது தொலைவில் உள்ளவர்களுக்கு
உருண்டைப் பாறையின் மீதுள்ள குரங்குகளைப் போலக் காணப்படும் ஊரினைச் சேர்ந்த நம் தலைவன்
மழைக் காலத்து ஈங்கைச் செடியின் சிறந்த தளிரினைப் போன்ற
அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய பரத்தை மகளிரின்
முத்துமாலையை ஏந்திய பரந்த முலைகளையுடைய மார்பகத்தில்
குன்றாத காதலுடன் பூமாலை இடைப்பட்டுக் குழையும்படி
முழவின் முழக்கம் ஒழியாத விழாவினையுடைய பெரிய இல்லத்தில், அவருடன்
திருமணச் சடங்கு செய்து கொள்வதில் பெரிதும் விருப்பம் உடையவன் என்பதினால், அந்தச் செயலை வெறுத்து
பகைவரைக் கொல்லும் போராற்றல் மிக்க வேளிர்களுக்குரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்
பெரிய மழையால் உருகுவது போல
எமது பெரிய மென்மையான தோள்கள் மெலிந்து திருத்தமான வளையல்கள் நெகிழப்பெற்றன.
					மேல்
#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
தெய்வத்தன்மை உடைய கடலின் நீர் வந்து பரவிய உப்பு விளையும் வயலில்
அந்த நீர் வெயிலில் காய்ந்த தன்மையால் இறுகிப்போய் மாறிய வெண்மையான உப்பாகிய அமிழ்தினை
மேற்கிலுள்ள நாடுகளின் பக்கம் எடுத்துச்செல்லும்படி, நல்ல நிமித்தம் பார்த்து
படைக்கலன்களையும் சீர்திருத்திக்கொண்டு எழுந்த பெரிய வீரச் செயல்களைப் புரியும் ஆடவர்
அடுக்கிய உப்புப்பொதியாகிய சுமைகளைத் தாங்கிய வெளுத்த முதுகினையுடைய கழுதைகளின்
தேய்ந்த குளம்புகள் மிதித்ததால் பருக்கைக்கற்கள் புரண்டுகிடக்கும் வழிகள் அமைந்த
வெப்பம் மிக்க பாலைநிலத்தை ஊடறுத்துப் போகின்ற அச்சம் தோன்றும் கிளை வழிகளையுடைய பாதையில்
வண்டுகள் ஆரவாரிக்கும் மதநீர் வற்றி மறைந்துபோன கன்னத்தையுடைய
வெயிலால் மெலிந்துபோய் வருந்திய நீண்ட கொம்பினையுடைய ஒற்றைக்களிற்றின்
சொரசொரப்புத்தன்மை தேய்ந்துபோன, பெரிய கை நீருக்காகத் துழாவிப் பார்த்த கிணற்றில்
தெளிந்த உவர்ப்பு உடைய குறைக்குடமாக முகக்கப்படும் நீருக்காக
அறம் இல்லாதவனாகிய தன் தலைவன் தோண்ட, வெப்பத்துடன் பெருமூச்சுவிட்டு
பிறை போன்ற தன் நெற்றி வியர்க்கும்படி பருகுவாள் போலும்;
தேனைக் கலந்து நன்கு கலக்கிய இனிய பாலை ஏந்திக்கொண்டு
கூந்தலைக் கோதி நயமான மொழிகளைக் கூறவும்
மறுத்த சொற்களையுடையவளாய்
அந்தப் பாலை வெறுத்த நெஞ்சத்தோடே அதனைப் பருகாத என் மகள் - 
					மேல்
#208 குறிஞ்சி பரணர்
நள்ளிரவில், நீண்ட கடைவாயிலில் நின்று
தேன் மிக்க உச்சியினைக் கொண்ட குன்றத்தைப் பாடும்
சிறிய பிரப்பங்கோலைக் கொண்ட பாணர்கள் வேண்டினால் வெண்மையான கொம்புகளைக் கொண்ட
தலைமைப்பண்புடைய யானையை வழங்கும், வள்ளன்மையையும், மகிழ்ச்சியையுமுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் - 
அருள் பொருந்திய வாழ்க்கையையுடையவன் - பாழி என்னும் ஊரிலுள்ள போர்க்களத்தில்
முகபடாம் அணிந்த யானையினையும், நல்ல ஓட்டம் அமைந்த தேரினையும் உடைய மிஞிலி என்பவனோடு
நண்பகலில் செய்த போரில் மிகுதியாகப் புண்பட்டு
மின்னும் வாளுடன் வாள் மோதும் போரில் இறந்துபோனானாக, பறவைகள் பலவும் ஒன்றுகூடி
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றின்
ஒளிவீசும் கதிர்கள் அவன் உடலைச் சுடாதபடித் தம் சிறகுகளால் பந்தலிட்டு
நிழல் செய்து சுற்றிக்கொண்டிருப்பதை நான் காணமாட்டேன் என்று
அவன் இறந்த களத்தைக் காண்பதற்குச் செல்லாதவனாய், சினம் மிகுந்து
அச்சுறுத்தும் போர்த்தொழிலையுடைய நன்னன் மனம் இரங்காதவனாய் மறைந்துகொள்ள,
பெரிதாய்ப் பதற்றங்கொண்ட பல வேளிர் மகளிர்
நிறம்பொருந்திய பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த ஆரவாரம் மிக்க அழுகையை,
பழி நீங்க, பகைவர் படையை வெல்லும் மிகப் பெரிய சேனையினையுடைய
அகுதை என்பவன் களைந்ததைப் போன்று, மிகுந்த மழையால் பெருக்கெடுத்து
உப்பால் ஆன அணையைக் கரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தைப் போல
நாணத்தின் எல்லையில் அடங்காத ஆசை கொண்டவளாய்
வந்து நம் துன்பத்தை நீக்கி நமக்கு அருள்செய்தாள், வாழ்வாளாக! ஓரி என்பவனின்
பல பழங்களையுடைய பலா மரங்களையுடைய பயன் மிக்க கொல்லி மலையின்
கார்காலத்தில் பூக்கும் மலர்களைப் போன்று மணங்கமழும்
அழகும், மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய மாநிறத்தவளாகிய நம் தலைவி.
					மேல்
#209 பாலை கல்லாடனார்
’தோள்களும் தம்முடைய பழைய அழகை இழந்தன, நாள்தோறும்
அன்னையும் அதைப் பார்த்து ஆற்றமுடியாத துன்பத்தை அடைந்தாள், ஊர் தூற்றும் பழிச்சொற்களோ,
பொன்னால் அழகுசெய்யப்பட்ட நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய
கணையமரத்தைப் போன்ற திண்ணிய தோளினையும், நல்ல ஓட்டத்தையும் உடைய தேரையுடைய செழியன்
எதிர்த்த ஏழு பகைவர்களையும் முற்ற வென்ற
தலையாலங்கானத்தில் எழுந்த வெற்றி ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியது’ என்று சொல்லிச்சொல்லி
துயரில் ஆழ்ந்துவிடாதே, தோழியே! நம் தலைவரான அவர்
பெரிய யானையையும், வீரம் மிகுந்த போரினையும் உடைய புல்லி என்பவனது
மூங்கில்களையுடைய நீண்ட மலையாகிய வேங்கடத்தின் அப்பால் உள்ள
குன்றுகளைக் கடந்து போயிருக்கிறாரென்றாலும், தமது உறுதிப்பாடு மிகுந்து
நினையாதவராய் ஆவது மிக அரிது; சிவந்த வேலினையுடைய
முள்ளூர் மன்னனாகிய, வீரக் கழலும், வீர வளையும் அணிந்த காரி என்பவன்
கெடாத நல்ல புகழினை நிலைநாட்டிய வல்வில்
ஓரியைக் கொன்று சேர மன்னர்க்கு உரிமையாக்கிய
சிவந்த வேர்ப்பலாவின் பழம் மிகுந்த கொல்லிமலையில்
நிலைபெற்ற தெய்வத்தச்சனால் உருவாக்கப்பட்ட
பலரும் புகழும் கொல்லிப்பாவையைப் போன்ற உன் அழகை - (நினையாதவராய் ஆவது மிக அரிது)
					மேல்
#210 நெய்தல் உலோச்சனார்
ஒடுக்கமாக இறங்கும் கூரைகளையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலையுடைய கொடிய பரதவர்
எறிந்த உளி தாக்கிய செருக்கு மிக்க பெரிய மீனானது
தன் உடம்பில் பட்ட புண்ணிலிருந்து வெளிவரும் குருதி புலால் நாறும் கடல்நீரில் களங்கத்தை உண்டாக்க
வானத்தை அணிசெய்யும் வில்லைப் போலத் தாவிச் சென்று, பசிய திவலைகளையுடைய
அலைகள் இயங்குகின்ற கடற்பரப்பில் வீழ்ந்து அதனைக் கலக்கி, தன் வலிமை குன்றி
வரிசையாக இருக்கும் படகுகளின் பக்கத்தில் வந்துசேரும் துறையினையுடைய நம் தலைவன்
நடு இரவில் நம் மூங்கிலைப் போன்ற தோளினை நினைத்து,
இங்கு வந்த போது நம் ஊரிலுள்ள
கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையின் அழகினைப் பாராட்டி
ஓயாமல் புகழ்ந்தான், இப்பொழுதோ, தனது
மென்மைவாய்ந்த மார்பில் நாம் கண்துயில்வதை இல்லாமல் செய்து
தாழையின் அழகிய தாழ்ந்த கிளைகள் விரைந்து வருகின்ற தனது தேரினைத் தடுக்க,
இங்கு வருவது பெரிதும் கடினமாக இருக்கிறது என்று கூறுகிறான் என்பதைப்
பலமுறை நாம் கேட்டோம் அல்லவா! 
					மேல்
 




#211 பாலை மாமூலனார்
நான் சொல்வதைச் கேள்! ஏடி! தோழியே! வெண்ணிறமான,
சுண்ணாம்புச் சிப்பி வெந்து மலர்ந்ததைப் போன்ற பல பூக்களைக் கொண்ட வெண்கடம்பமரத்தின்
பறையினைப் பார்த்தது போன்ற பரந்த அடியினையும், வலிமையான கால்களையும்,
உறுதியான நிலை வாய்ந்த கொம்புகளையும் உடைய வலிய களிறு உராயும்போதெல்லாம்
குளிர்ந்த மழையோடு விழுகின்ற ஆலங்கட்டிகளைப் போல உதிர்ந்து பரவி, உழவர்கள்
காயவைக்கும் வெண்ணெல்லின் விதைகளைப் போல பாறைநிலத்தில் காய்ந்துகிடக்கும்
குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடமலையின் அப்பாலுள்ள
மொழி வேறுபட்ட நாட்டில் இருக்கிறாரென்றாலும் விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்;
குழியில் அகப்பட்ட கன்றுகளையுடைய பெருங்கூட்டமான பெண்யானைகளை
அகப்படுத்தும் ஆரவாரத்தின்போது (எழினி என்பவன் தன் ஏவலின்படி) வராமல் இருக்க
மிகுந்த சினம் கொண்ட சோழமன்னனின் ஏவலால் சென்று
(மத்தி என்பவன்)மிகுந்த தொலைவில் உள்ள நாட்டில் முதல் படையிலேயே அகப்பட்டுக்கொண்ட
அரசியல் நூல் கல்லாத அந்த எழினியின் பல்லைப் பறித்து வந்து பதித்த
கொடிய வீரத்தைக் காட்டுகின்ற கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலில்
மத்தி என்பவன் நாட்டிய வீரக்கல் பொருந்திய குளிர்ந்த கடல்துறையினில்
கடல்நீர் மோதி முழங்கினாற் போன்ற பெரிய
பழிச்சொல்லை நமக்கு விட்டுவிட்டு, நாம் அழும்படி பிரிந்த நம் தலைவர் - (விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்)
					மேல்
#212 குறிஞ்சி பரணர்
கெட்டியாக இல்லாமல் நெகிழும் தன்மையுள்ள நல்ல பொன்னால் செய்த பாவையானது
வானில் பரவும் இளவெயிலை ஏற்றுக்கொண்டு ஒளிதிகழ நின்றாற் போல
மிகுந்த அழகைக் கொண்டவளும், திரண்ட கொத்தான கூந்தலையும்,
கிளைவிட்டு வளர்ந்த புதராகிய நாணலின் கிழங்கு மணல் பரப்பில் விட்ட
முளையைப் போன்ற (வெண்மையான) முள் போல் கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயையும்,
யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழிப்பண்ணின்
இசையைக் கேட்பது போன்ற மிக இனிய சொல்லினை உடையவளும் ஆகிய
தெய்வத்தின் இயல்பினையுடைய ஒருத்தியை நீ பெரிதும் விரும்பி, பெரிய களிற்று யானைக்
கூட்டம் இறங்கி ஆடுகின்ற நீர் கலங்குவது போல மனம் கலங்கிய பொழுதிலும்
இவள் பெறுவதற்குக் கடினமானவள் என்று நினைத்துப்பாராமல், நாள்தோறும்
துன்பம் தருகின்ற கடப்பதற்குக் கடினமான வழியைக் கடக்கும்படி நீதான்
என்னை இன்னலுக்கு ஆளாக்குகின்றாய்; மின்னலால் வானத்தைப் பிளந்து
வலிமைகொண்டு எழுகின்ற மேகத்தைப் போன்று பகைமைகொண்டு வேண்டுமளவு வலிமையைக் கூட்டி,
பல்வேறு மொழிகளும் பேசுகின்ற பாசறையைத் தான் வேண்டுமிடத்தில் அமைத்துக்கொண்டு
ஏந்திய படைக்கருவிகளின் ஒளி பிரகாசிக்கும் கடல் போன்ற பெரிய படையினையும்
தேன் துளிக்கின்ற மலர் மாலையினையும் உடைய மறப்பண்பு மிக்க போரில் வல்ல செங்குட்டுவன்
தன்னோடு போரிடும் பகையை இந்த நிலத்தில் பெறாமையால் பொங்கி எழும் சினம் மிகுந்து
போர்புரியும் வலிமையால் கடலை வளைத்து
உயர்ந்த அலைகளையுடைய கடலை விலகி ஓடச் செய்த
தன்மையால் மாண்புள்ள அவனது வேலானது உன் மார்பில் தைத்து அழுந்தும்படியாக
உன் மிகுந்த செருக்கு அழியக்கடவதாக, நெஞ்சமே! இடைவிடாமல்
காண்பதற்கு எளியவளாய் இல்லாதளாகிய அவளை எண்ணி
நீங்காத துன்பத்தினை என்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்த நீதான் - (கூர் மதன் அழியரோ நெஞ்சே!)
					மேல்
#213 பாலை தாயங்கண்ணனார்
போர்ப்பயிற்சி மிக்க யானைகளுடன் சென்று திறம்படப் போரிட வல்ல தொண்டையர் என்னும் மன்னர்க்குரிய
கூட்டமான மேகங்கள் தவழும் ஏறுவதற்குக் கடினமான உயர்ந்த உச்சியிலிருந்து இறங்குகின்ற
உயர்ந்து தோன்றும் வெண்மையான அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பால் உள்ள,
கொய்யத்தகுந்த தழைகளையுடைய காட்டுமல்லிகையின் வைகறையில் மலர்கின்ற பூவினை
சுருண்ட கரிய மயிரில் வண்டுகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டு
பகைவர் ஊரில் கவர்ந்துகொண்டு வந்த காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டத்திற்காக
மலரின் முதிர்ந்த தேனால் ஆகிய கள்ளை விடியற்காலத்தில் பலியாகச் செலுத்தும்
வெண்மையான கொழுப்புச் சோற்றினை உணவாகக் கொள்ளும் வடுகருடைய நாட்டில்
நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தினையுடைய
தீப்பொறி பறக்கும் கடப்பதற்குக் கடினமான பாலை நிலத்து வழி மிகவும் நீண்டுள்ளது என்று கருதாமல்,
நம்மைப் பிரிந்துபோவதற்கு எண்ணங்கொண்டாரென்றாலும், பகற்பொழுது கழிய,
பலவான கதிர்களையும் சுருக்கிக்கொண்ட ஞாயிறு மறைகின்ற அந்திப் பொழுதில்
பெரிய மரங்களை அழித்துக் காற்று நன்கு புகும்படி செய்த அகன்ற கொல்லையில்
தீப்பிழம்பு போன்ற கதிர்களையுடைய அழகிய மாணிக்கங்கள் ஒளிருகின்ற
வெல்லும் போரினையுடைய சேரனின் கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் உள்ள
மூங்கிலின் நேரான பகுதியைப் போன்ற மெலிவான முன்கையினையும், பருத்த தோள்களையும் உடைய
உன்னுடைய பேரழகு சிதைந்துபோகும்படி உன்னைப் பிரிந்துபோய், தேவர்களின்
பெறுவதற்கு அரிய விண்ணுலகத்தை அங்குள்ள அமிழ்தத்துடன் பெறுவதாயிருந்தாலும்
அந்த வடுகர்நாட்டுக்குச் சென்று அங்கு நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார், எந்நாளும்
இரவலர்க்கு அணிகலன் அள்ளிக்கொடுப்பதற்கு கவிழ்ந்த, கழலும் வளையை அணிந்த பெரிய கையினையும்
வலிமையால் எய்திய வெற்றியைப் பொருந்திய குறிதப்பாத வாளையும் உடைய சோழரின்
ஒளிரும் நீரினையுடைய காவிரியின் சிறிதாக ஓடும் நீர் வரிவரியாகச் செய்திட்ட
கருமணலைப் போன்ற நெளிநெளியான கூந்தலைத்
தொட்டு உணரும் இனிய மென்மையுடன் ஒன்றிப்போதலை மறந்து - (நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார்)
					மேல்
#214 முல்லை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அகன்ற பெரிய வானிடம் எல்லாம் மறைந்துபோகும்படி பரவி
ஞாயிற்றின் ஒளியை முழுவதும் மறைத்த பல்வேறு மின்னலின் ஒளியையுடைய மேகங்கள்
பெரிய களிற்றின் கன்று, பிடியுடன் கூடிய கூட்டம் குளிரும்படியாக வீசி
பெரும் மழையின் மிக்க துளிகளைப் பொழிவது நிற்கவில்லை;
அரசனும் மிக்க பகையுடன் மனம் மாறுபட்டு, நிமிர்ந்த இலையினையுடைய
ஒளிவிடும் நீண்ட வேல் மின்னும் பாசறையில் இருந்துகொண்டு
பகைவரை வெல்வதால் கிடைக்கும் புகழின்மேல் விருப்பம் கொண்டு உறக்கம் இல்லாதவனாக இருக்கிறான்;
இப்போரினை நடத்தும் பொறுப்பு நம்மிடத்தில் உள்ளது; நம்மவர் என்று (குறித்த நேரத்தில் வருவார் என்று)
நம்மைத் தன் அறிவால் தெளிவாகப் புரிந்துவைத்துள்ள கூட்டமாய்க் குலைந்துகிடக்கும் கூந்தலையுடையவள்
என்னதான் ஆவாளோ? உயர்ந்த காளையின்
பிடரியில் கட்டிய பெரிய வாயையும் தெளிவான ஓசையையும் உடைய மணி ஒலிக்கும்படி
பசுக்களை ஓட்டிவரும் கோவலர்கள் ஆம்பல்தண்டால் செய்த புல்லாங்குழலின் இசையுடன் சேர்த்து
பிரிந்தவர்க்குத் துன்பத்தைத் தரும் செவ்வழிப்பண்ணை நல்ல யாழில் இசைக்க,
அரிய உயிரினை வருத்தும் அந்த தெளிந்த இசையினை
மாலைப் பொழுதிலும் தனியானவளாய்க் கேட்டு - (என்னதான் ஆவாளோ?)
					மேல்
#215 பாலை இறங்கு குடி குன்ற நாடன்
குறுக்கே நிற்கும், பெரிய உச்சியினையுடைய மலைக்கு அப்பால் உள்ள
வேறான பல மொழிகளைப் பேசும் மக்களையுடைய நாடுகளை நினைத்து
பொருளீட்டும் தொழில்மீது விருப்பம் கொண்டு இழுக்கின்ற ஆற்றல் மிகுந்த நெஞ்சத்தோடே
அழகுசெய்யப்பட்ட சிறந்த வேலினை வலது கையில் ஏந்திக்கொண்டு
செல்லுவதில் பெருமை கொண்ட உம்மை விரைவாக
வெற்றிகிடைக்கட்டும் என்று வாழ்த்துதலும் நன்றாகும் -
வில்லினால் குறித்த இலக்குத் தப்பிப்போனால், அந்த அம்பினைத் தொடுத்த
கைவிரலை வாயால் கவ்விக்கொள்ளும் கல்லாத அறிவினையும்
வில்லை ஏந்திய மாறுபடாத கொடுமையையும்,
நன்றாக வடிக்கப்பட்ட அம்பினையும், அதனை ஏவும் திறத்தையும் உடைய மறவர்கள்
வழிப்போக்கரைக் கொன்று அவரின் உடலை மூடிக் குவித்து உயர்த்திய அச்சம்தரும் கல்குவியலின் மேல்
கூர்மையான அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபோன பிணங்களின் பசிய தலையினைத் தோண்டுவனவாய்க் கூடி
வலிமையுடைய செறிவான தமது விரல்களால் தோண்டி, கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிமையான வாயினையுடைய தன் பேடைக்குக் கொடுக்கும் அவ்விடத்தில்
பிரிந்துசென்றவருக்காக இரங்குகின்ற நெஞ்சத்துடன்
இங்குத் தங்கி உயிருடன் இருக்க வல்லவர்க்கு - (வெற்றிகிடைக்கட்டும் என்று வாழ்த்துதலும் நன்றாகும்)
					மேல்
#216 மருதம் ஐயூர் முடவனார்
கயிற்றினால் கட்டப்பட்ட நுண்ணிய தூண்டில் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரின் மகள்
தான் நீரினை அடுத்த கரையில் அகப்படுத்திப் பிடித்த வரால் மீனை
பன்னாடையால் அரித்து எடுக்கப்பட்ட கள்ளை உண்டு களித்திருந்த தந்தைக்கு
வஞ்சிமரத்தின் விறகினால் சுட்டு வாயில் ஊட்டிவிடும்
குளிர்ந்த துறையினை உடைய மருதநிலத் தலைவனின் பெண்கள், எம்மைத் தம்
மனம்போனபடி இகழ்ந்து பேசுகிறார்கள் என்பார்கள்; அப்படிப்பட்ட பழிச்சொல்லுக்கு
ஆளாகிவிட்டோம் என்றால் இனிமேல் என்ன நடந்தாலும் நடக்கட்டும்;
கடல்நீரில் விளையாடும் பரதவப் பெண்கள் கொய்த ஞாழல் பூவினையும்,
வயல்களில் உழுகின்ற உழவர் கொய்த குவளைப் பூவினையும்,
காவல்காட்டினையுடைய முல்லை நிலத்தில் பூத்த முல்லைப் பூவுடன் சேர்த்து
பல இளம் சிறுவர்களாகிய கோசர்மக்கள் தலைமாலை தொடுத்து விளையாடுகின்ற
பெரிய வளத்தையும், புதிய வருவாயினையும் உடைய செல்லூர் என்னும் ஊருக்குத்தலைவனும்,
எறியுமிடத்தில் சிதையாமல் நிற்கும் சுரை செறிந்த வெண்மையான வேலையுடையவனும் ஆகிய
ஆதன் எழினி என்பவன் அரிய மார்பினில் பாய்ச்சிய
பெரிய களிற்றின் துன்பத்தைப் போல
அந்தப் பெண்கள் வருந்துவார்கள் - நாம் அவர்களின் சேரிப்பக்கம் சென்றால்.
					மேல்
#217 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
முழுதும் பெய்துவிட்டதால் வானத்தை வெளியாகத் திறந்துவிட்ட பொங்கிவரும் வெண்மேகங்கள்
இரும்புக்கோலினால் கடையப்பட்ட பஞ்சு மென்மையாகித் துகள் பரந்து தோன்றினாற் போல 
நுண்ணிய துளியாய்ப் பெய்து கழிய, அகன்ற வயலில்
நீண்டு கோலாக வளர்ந்த கரும்பின் திரண்ட காம்பினையுடைய பெரிய பூக்கள்
மேலைக் காற்றால் அலைக்கப்படும் பூளைப் பூவைப் போல வாடைக் காற்றினால் அசைந்திட,
பச்சை இலை செறிவாக உள்ள புதர்கள்தோறும், பகன்றைப் பூக்கள்
நீலம் ஊட்டப்பெற்ற தோலின் நிறம் மறையும்படி பதித்த
கேடயத்தின் மேல் பதித்த வட்டக்கண்ணாடி போல வெண்மையாக மலர,
செழுமையான இலைகளைக்கொண்ட அவரையின் கொழுத்த அரும்புகள் விரிய,
முதிர்வடைந்த தோன்றியின் ஒளிவிடும் பூக்கள் தம் கட்டுகள் அவிழப்பெற,
எல்லா இடங்களிலும் பறவைகளின் கூட்டம் கல்லென்று ஓசையெழுப்ப,
தம் தலைவரைப் பிரிந்து வாழும் பெண்கள் அழகிழந்து நடுங்க,
முன்பனிக்காலம் வந்துவிட்டது, பொருளீட்டச் செல்வதற்கு இதுதான் தகுந்த தருணம் என்று
எவ்வளவு சிறந்த பொருளைப் பெறுவதாக இருந்தாலும் பிரிந்துபோகவேண்டாம் என்று 
எமக்குத் துணையாக உள்ள உமக்குச் சொல்லுவேன், நீர் நீடுவாழ்க,
எம் மீது இரக்கம் கொள்ளாத காதலர் எம் அழகைத் துய்த்துப் பின் கைவிட்ட
பாழ்பட்ட மேனியைக் கண்டு, பிரிவுத்துன்பம் வருத்த
வலிமை இற்றுப்போய் உடையும் நெஞ்சத்துடன் அவருடன் சேர்ந்திருப்பதை விரும்பி
பற்களைத் தீயுண்டாகக் கடித்துக்
கொடிய பனியில் வருந்தி நாம் நடுங்கிப்போவோம் - நம்மைப் பிரிந்துசென்றால் .
					மேல்
#218 குறிஞ்சி கபிலர்
தன் இனத்தைப் பேணிப் பாதுகாக்கும் விரைவான நடையைக் கொண்ட வலிமையான களிறு
மூங்கிலின் முளைகளைக் கொண்டுவந்து முதலில் ஊட்டி, பின்னர் வேண்டிய தழைகளையும் உண்ணச்செய்ய,
வாளின் நிறத்தைப் போன்ற உருவத்துடன் ஒளிரும்படியாக மின்னி
பருத்த துளிகளாக பல மழைத்துளிகளைச் சிதறி வானத்தில் தெளிவற்ற ஓசைகளை எழுப்பி
பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரும்படியாகச் சூழ்ந்துகொண்டு
மேகமானது இடியுடன் உராய்கின்ற பரந்த இருள்கொண்ட நடு இரவில்
’மேலான அணிகலன்களால் பொலிவுபெற்ற காண்பதற்கு இனிய மென்மையினை உடையதாய்
வளைந்து திரண்ட உன் தோளைச் சேர்ந்தாலன்றித்
துயில் கொள்ளாதனவாகும் எம் கண்கள்’ என்று நீயும்
இருளால் கண்கள் மயங்கும்படியான நடுயாமத்தில் வழிதடுமாறி விலகி
வரிகள் ஒளிரும் பெரிய புலி அங்கு வருபவரை எதிர்பார்த்துக் கிடக்கும்
பெரிய மலையில் உள்ள பிளவுகள் இருக்கும் இடத்தில் வருவது மிகக் கடினமான செயல் என்று எண்ணாமல்
அவ்வழியில் வருவது மிகவும் எளியது என்று எண்ணுகிறாய், அதனால்,
நுண்மையாக அறிந்து பல மணங்களைச் சேர்த்த சிறப்புடன் கூடிய சந்தனம்
குளிர்ச்சியாகக் கமழும் உன் மார்பினை ஒரேஒரு நாள்
முழுவதும் தழுவாமற்போனால் நாங்களும்
மேலான அணிகலன்கள் நெகிழ்ந்துபோகுமாறு மெலிந்துபோவோம், நம் காதல் ஒழுக்கத்தைத்
தாய் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளட்டும், ஏச்சுக்களைக் கூறும் பெண்களின் வாயிலிருந்து வரும்
பழிச்சொற்களை இந்தப் பழைய ஊர் மக்கள் கேட்டாலும் கேட்டுக்கொள்ளட்டும்,
வண்டுகள் தங்கியிருக்கும் தீச்சுவாலை போன்ற தோன்றிப் பூக்களுடன்
ஒளிரும் வேங்கைப் பூக்கள் மணம்பரப்பும்
குளிர்ந்த பெரியமலைச்சாரலில் பகலில் வருவீராக.
					மேல்
#219 பாலை கயமனார்
சிறப்புப் பொருந்திய பெரிய தன் மாளிகையில் கால்சிலம்புகள் சிரிப்பது போல ஒலிக்க நடந்து
விளையாட்டுத் தோழியருடன் சிறிது நேரம் பந்து எறிந்து விளையாடினாலும்,
’இங்கு வருக’ என்று அழைத்து அவளின் அழகைப் புகழ்ந்து கூறி, பெரிய இலையினையுடைய
பகன்றையின் வெண்மையான மலர் பனியால் நிறைந்தது போல
பால் நிரம்ப ஊற்றப்பட்ட கிண்ணத்தைப் பிடித்துக்கொண்டு
’என் பங்குக்கு ஒரு வாய் பருகிவிட்டதனால், ஒரு முறை
உன் தந்தையின் பங்குக்கும் ஒரு வாய் பருகு’ என்று பாலூட்டி
பிறந்தது முதற்கொண்டு சிறந்தவைகளையே செய்து நான்
இவ்வாறு நலம்பாராட்டி வளர்த்த பொன் வளையல் அணிந்த என் இளமையுள்ள மகள்
அறம் இல்லாதவனாகிய தன் தலைவனுடன் சென்றுவிட்டாள் இப்பொழுது என்று
அதனை மறந்து ஆற்றியிருக்க மாட்டாத நெஞ்சத்துடன் வருந்தவில்லை;
பொன்னை உருக்கி வார்த்ததைப் போன்ற கூர்மையான வெள்ளிய பற்களையுடைய
செந்நாயைப் பார்த்து வெருண்ட புள்ளிகளையுடைய கலைமான்
பொரிந்துபோன அடிமரத்தையுடைய விளாமரத்தின் புன்மையான புறத்தையுடைய பழத்திலுள்ள துளையில்
வெப்பத்துடன் வீசுகின்ற மேல்காற்று புகுந்துவருவதால் எழும் ஓசை, இடையர்களின்
புல்லாங்குழல் ஓசை என்று நினைத்து அச்சத்தை நீக்கும் நீர் இல்லாத நீண்ட பாலை வழியில்
தனது மடப்பத்தையுடைய அழகு கெடும்படி மெலிந்து இளைத்து
நடப்பாளோ என்றுதான் வருந்துகின்றேன்.
					மேல்
#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
நாங்கள் வசிக்கும் ஊரிலும், எமது தெருவிலும் ஒன்றாகச் சேர்ந்து பழிமொழி பிறக்கும்படி
தேரோடு வந்து திரிந்தும், பணிவான மொழிகளைப் பலமுறை கூறியும்,
என்றும் நீங்காத வேள்வித்தீயினையுடைய அழகு விளங்கும் செல்லூரின்
மதம் ஒழுகும் யானையின் கூட்டம் போர்முனையில் அழிய
அரசர் குலத்தினை வேரறுத்துத் தொலைத்த மழுவாகிய வாளையுடைய நெடுமாலின் கூறாகிய பரசுராமன்
முன்பு விடாமல் முயன்று அருமையாகச் செய்து முடித்த வேள்விக்களத்தில்
கயிற்றினை இடையிலே சுற்றிய காணத்தக்க அழகினையுடைய
அரிய காவலையுடைய நீண்ட வேள்வித்தூண் போல, எப்படிப்பட்டவரும்
காண முடியாத சிறப்புள்ள அழகினையுடைய தலைவியின் மார்பினை
நினைக்கும்போதெல்லாம் துன்பத்தால் துடிக்கின்ற நெஞ்சத்தை உடையவனாய், நீதான்
நீண்ட நேரமாய் வெளியிலே நின்று வருந்துகின்றாயாதலால்
முழங்குகின்ற கடலின் பெருக்கு காலையில் சுழலும்
மிகுந்த பழைய நெல்லினையுடைய ஊணூர் என்னும் ஊரில்
இணைபிரிந்து சிறுபொழுதும் வாழாத பெரிய அன்றில் பறவைகள் போல, ஒருவர் நெஞ்சில் ஒருவர் பொருந்தி
காதல் நீங்காத அழகிய உறவினாலே,
பெரிய கழியைத் துழவி முகந்த நேரான கோல்களையுடைய அழகிய வலை
வளைந்த முதுகினையுடைய இறா மீனுடன் பிற மீன் இனங்களையும் குவிக்கும்
நீண்ட கதிர்களையுடைய வயல்களையுடைய குளிர்ந்த சாய்க்கானம் என்னும் ஊரில் உள்ள
அழகிய குளிர்ந்த மூங்கிலைப் போன்றிருக்கும் என்று சொல்லி, கடற்கரைச் சோலையில்
தோழிமார் ஆய்ந்து பாராட்டிய மெலிந்த முன்கையினையுடைய பருத்த இவள் தோள்கள்
தமது பெண்மைநலம் மிக்க அழகு கெட்டுப்போகாதபடி ஏதாவது ஒரு பாதுகாப்பினை
நாங்கள் தெளிவாய் அறிந்துகொள்ளும்படி இப்பொழுது சொல்வாயாக.
					மேல்
 




#221 பாலை கயமனார்
அரும்பிலிருந்தும் உண்டாக்கிய கள்ளின் தெளிவை மிகவும் பருகி
நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த நல்ல வீட்டில் மணலைக் கொண்டுவந்து குவித்து
பொலிவுள்ள கூந்தலையுடைய எம்முடைய மகளுக்கு மணம் நிகழும் என்று
திருமணச் சடங்கிற்கு ஆவன செய்கின்றனர் நமது சுற்றத்தார்; அதனால்
புதிதாக வடித்த செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலை ஏந்திய,
என் அறிவுரையான உடன்போக்குக்கு உடன்பட்ட கருமையான தாடியினையுடைய காளையாகிய நம் தலைவன்
வளைந்த கிளைகள் மிகவும் கொண்ட, திரண்ட அடிமரத்தையுடைய வெண்கடம்பு மரத்தின்
தேன் ஒழுகும் மென்மையான பூக்களைத் தளிருடன் கொண்டுவந்து, உனது
குளிர்ச்சியுள்ள மணம் மிக்க உச்சிக்கொண்டைமுடியில் சூட்ட, அத் தலைவனுடன்
மூங்கில்கள் அழகிழக்கும்படி மேகங்கள் பெய்யாமல் உயர்ந்துபோன அகன்ற பாலைவெளியில்
தாக்கப்பட்ட களிறாகிய இரை தப்பிவிட்டதால் பெரிய வாயையுடைய வேங்கைப்புலி
கொதிக்கும் கோபத் தீ மிகுந்து முழங்குதலால் வெருண்டுபோய்
பெரிய பெண்யானை நிலைகெட்டு ஓடும் காட்டினையுடைய
கடப்பதற்கு அரிய பாலைவழியில் செல்வதனை மேற்கொள்ள முடிவெடுத்தேன் நான்
					மேல்
#222 குறிஞ்சி பரணர்
விண்ணைத் தோயும்படி உயர்ந்துநிற்கும் நீல நிறம் பொருந்திய பெரிய மலையினை அடுத்துள்ள
காடு அடர்ந்த குறிஞ்சிநிலத்தவனாகிய நம் தலைவன் எனக்குத் தந்த நோயால் எனது
மேனியின் ஆய்ந்த அழகு அழிந்து போவதால் நான் இதனைக் கூறுகிறேன்;
முழவின் முகத்தில் பூசிய சாந்து புலர்ந்துபோகாத அளவில் அதன் முழக்கம் நிற்காத ஆரவாரமுள்ள இடமாகிய
கழார் என்னும் இடத்திலுள்ள காவிரியின் பெரிய துறையினில் நிகழும் திருவிழாவில் கூத்தாடுகின்ற
பெருக்கிக்கொண்ட அழகினால் பொலிவுற்ற, நிமிர்ந்த திரண்ட தோளினையுடைய
ஆட்டனத்தி என்ற ஆடுகளமகனின் அழகினை விரும்பிப் பரந்துவந்து
தாழ்ந்த இருண்ட கூந்தலைப் போன்ற கருமணலையுடைய காவிரிமங்கை கவர்ந்துகொண்டதால்
திசையெல்லாம் தேடியலைந்து மதி மயங்கி வாடிய
அவன் மனைவியாகிய ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி
ஒலிக்கும் கடலில் புகுந்து மறைந்த புலவரால் பாடப்படும் சிறப்பினையுடைய
மருதி என்பவளைப் போன்று சிறந்த புகழைப் பெறுவதற்காக
செல்வோமாக, வாழ்க தோழியே! பல நாளும்
வலிய இடிமுழக்கத்தோடே கூடி 
இரவு முழுவதும் மழைபொழிந்ததால் ஈரம் மிக்க குளிர்ந்த சேற்றுவழியில் - (செல்வோமாக)
					மேல்
#223 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம்மைவிட்டு பிரிந்துசெல்லும் மனவலிமையுடையவராய் நம்மைவிட்டுச் சென்றவர்
நம்மை மறந்துபோயும் இருப்பாரோ என்று இதனை எண்ணி
துயரத்தில் ஆழ்ந்துவிடாதே, வாழ்க, தோழியே! பன்றியின்
வளைந்த கொம்பினைப் போன்ற கூரிய முனையைக் கொண்ட நீண்ட பெரிய காயினையுடைய 
முதிர்ந்த அரும்புகளைக் கொண்ட முருக்கமரத்தின் கிளைகள் படிந்துகிடக்கும் பெரிய கல்
மிக்க வெப்பமுடைய வேகமான காற்று வீசுவதால், வெம்மை மிக்க காட்டில் எழும்
காட்டுத்தீயால் சூழப்பெற்ற யானையைப் போல காண்போர் வியக்கும்படி தோற்றமளிக்கும்
நிழலே அற்றுப்போன ஓமை மரத்தினையுடைய நீரே அற்றுப்போன நீண்ட பாலைப் பரப்பினைக்
கடந்துசென்றார் என்றாலும் நமது காதலர், நம்மை
மறந்து கண்மூடுவது எப்படி? உன்னுடைய முதுகில் தாழ்கின்ற,
அழகிய மூங்கில் போன்ற நீண்ட தோள்களில் படிந்து, தும்பி
வண்டின் கூட்டத்தைப் போன்ற சுருண்டு வளைந்த கூந்தலின்
நுண்ணிய கருமைநிறம் முழுவதுமாக உள்ளடங்கி இருக்க சீப்பினால் வாரி, துன்பம் தீர
காட்டுமல்லிகையின் நல்ல அரும்புடன் கூடிய மலரோடு குவளை மலரின்
குளிர்ச்சியான நறுமணம் கமழ்கின்ற மாலையைச் சூட்டிய உன்
மஞ்சனநீரால் ஆட்டப்பட்ட கூந்தலாகிய படுக்கையில் படுத்துறங்கிய உறக்கத்தை - (மறந்து கண்மூடுவது எப்படி?)
					மேல்
#224 முல்லை ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்
விரைவாகப் போ பாகனே! பொழுதும் இரவாகிறது,
”வல்லோனாகிய பாகன் குதிரைகள் அடங்கிச் செல்லும்படியாகக் கடிவாளத்தை அமைக்க, கொல்லன்
விசையுடன் இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு
வளைந்த நுகத்தடியில் பூட்டிய தலையையுடையனவாய், வேகமான நடையினையும்,
காற்றுப் போல் விரைவாகச் செல்லும் ஓட்டத்தினையும் உடைய அக் குதிரைகளின்
பாலைக் கடையும்பொழுது வருகின்ற நுரையையுடைய பருத்த வெண்ணெய்த்திரள் போன்ற
மிகவும் வெண்மையாய் உமிழப்பட்டு வழிகின்ற நீண்ட மெல்லிய நுரை
சிலந்தியின் நூல் போல நுணுகிய இழைகளாய்ச் சிதறி
சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பில் மறுச்செய்யவும், காண்பதற்கு இனிய
புதிய அழகினைப் பெற்றுள்ள வெப்பம் நீங்கிய முல்லைநிலத்தினில்
குதித்துச் செல்லும் மான் கூட்டங்கள் அஞ்சி ஓடவும், மனையாள்
நன்கு உலர்ந்த உணவுப் பொருளாகிய தானியத்தை இட்டு, கையால் சுற்றுகின்ற
திரிகை மரத்திலிருந்து எழும் ஓசையைப் போல் ஓசை உண்டாக, வரிப்பட்ட மணலில்
சுழலும் கதிரினையுடைய உருளையாகிய தேர்ச்சக்கரம் பிளந்துகொண்டு செல்லவும்
வருவாரோ தோழி! நம் இன்னுயிர்த் துணைவர்” என்று
சிலவான திரண்ட ஒளிவிடும் வளைகளை ஏற்றி இறுக்கிக்கொண்டு, பலமுறை
அரிய காவலையுடைய பெரிய மனைக்கு வெளியே வந்து பார்த்து
வருந்துவாள், இரங்கத்தக்கவள், திருத்தமான அணிகலன்களை அணிந்த நம் காதலி.
					மேல்
#225 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
காதலும், குற்றம் காணா அறியாமையும், மென்மையும், ஒழுக்கமும்
எலும்பையும் நெகிழ்க்கும் இன்சொல்லும், பிற பண்புகளும்
தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கையையுடையவராய் ஒன்றிணைந்து தழுவி
இன்றைக்கு இவ்விடத்தில் இருக்க, நாளைப் பொழுது
புதர்கள் வளர்ந்துள்ள இடத்திலுள்ள அசைகின்ற மூங்கிலின் மேல் வண்டு துளைத்த
அகலமில்லாத சிறிய அழகிய துளை வழியே மேல்காற்று புகுந்துவருவதால்
நீருக்காகச் செல்லுகின்ற பசுக்கூட்டத்தின் பின்னால் செல்லும் நீண்ட கோலையுடைய
இடையர்கள் ஊதுகின்ற குழலின் இசையைப் போல் இனிதாக வந்து இசைக்கும்
தேக்கு மரங்கள் செறிந்துள்ள சோலைக்கு அப்பால் உள்ள கற்பாறை உயர்ந்துள்ள அரிய பாலைநில வழியில்,
கட்டப்பட்ட அம்புக்கூடுகள் அவற்றின் மூடி திறந்து வைக்கப்பட்டது போல்
பூத்துள்ள இருப்பை மரத்தின் தளிரால் பொதியப்பட்ட குவிந்த பூங்கொத்துக்கள்
நூலிலிருந்து கழன்று விழும் துளையுள்ள முத்துக்கள் போல் செம்மண் நிலத்தில் உதிர்ந்துகிடக்க
மேகங்கள் மழை பெய்வதை மறந்துபோன அழகிய குடிகளையுடைய சிற்றூரில்
தங்கியிருப்போமா? நெஞ்சே! பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
மேகங்களைப் போன்று தழைத்துத் தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலையும்
செறிவான வளையலையும் உடைய முன்கையினையும் உடைய நம் காதலியின்
அறிவு கலங்கிய பார்வையினையும் ஊடலையும் நினைத்துக்கொண்டே - (சிற்றூரில் தங்கியிருப்போமா?)
					மேல்
#226 மருதம் பரணர்
நீ கூறுவதை உண்மையென்று ஏற்றுக்கொள்ளமாட்டேன்! உன் பொய்ம்மொழிகளை என்னிடம் கூறாதே!
உனக்கு வெட்கமில்லை - நிச்சயமாய், நாளும் புதுப்புது வரவுகளைக்கொண்ட மருதநிலத்துத் தலைவனே!
அகன்ற உட்பரப்பினையுடைய ஊரில் உள்ள, முரண்பட்ட நிறங்களையுடைய அழகிய தழையுடையை அணிந்த
குறிய வளையல் அணிந்த மகளிருடன் புதிய செந்நிற வெள்ளத்தில் விளையாடுவது வெறுத்துப்போன பின்பு
பொய்கையிலுள்ள புதிய தண்டான்கோரையைப் பறித்து, கழனியாகிய
கரந்தைக் கொடி படர்ந்த வயல்களில் உள்ள வெள்ளைக் கொக்குகளை ஓட்டுகின்ற இடமான
வலிய வில்லைத் தாங்கிய வலிமை பொருந்திய தோள்களையுடைய, பரதவர் தலைவனாகிய 
பெரிய வேற்படையையுடைய மத்தி என்பவனின் கழார் என்னும் ஊரிலுள்ள நீராடும் துறையின் முன்
நீண்ட வெண்மையான மருதமரத்தோடு வஞ்சி மரத்தையும் சாய்த்து
விடியலில் பெருகிவந்த மிக்க வெள்ளத்தையுடைய காவிரி ஆற்றில்
வளையல் அணிந்த முன்கையினை உடைய உன்னால் விரும்பப்படும் ஒரு பரத்தையுடன்
நீ நேற்று விளையாடியதால் உண்டான அலர்மொழி, இன்றைக்கு
ஆற்றல் மிக்க வலிமையுடைய பாணன் என்பவனுடன் சேர்ந்து, மாலைகளை மிகவும் அணிகிற
தித்தன் வெளியன் என்னும் அரசனுடைய உறையூரில் உள்ள நாளோலக்க மண்டபத்தில்
ஓசை இனிய தெளிவான கிணைப்பறையின் ஒலியைக் கேட்டு அவனது பெருமையை அறிந்து அஞ்சி
போரில் பகைவரைக் கொல்வதில் ஆற்றல் மிக்க படைகளையுடைய கட்டி என்பவன்
போரிடாமல் ஓடிப்போனபோது உண்டாகிய ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியதாகும். 
					மேல்
#227 பாலை நக்கீரர்
”நெற்றியில் பசலைபாய்ந்துள்ளது, தோள்கள் மெலிந்துவிட்டன,
தேமல் பரந்த அல்குலின் வரிகளும் வாடிப்போயின,
இனி இவள் என்ன ஆவாளோ” என்று பல முறை
நீர் மிகுந்த கண்களுடன் நெடிதாக என்னைப் பற்றியே நினைத்து, என்னை ஆறுதல்படுத்தும் வழிகளை எண்ணி
வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே! நனைந்த கன்னத்திலிருந்து ஒழுகி,
வாய்க்குள் புகும் மதநீருடன், பிறரை வருத்துகின்ற கோபம் மிகுந்து,
தனக்கு முன்னால் நிற்பதைப் பொறுக்கமாட்டாமல் பகைத்து, பொன் நிறமான பூங்கொத்துக்களையுடைய
புலியின் நிறத்தைக் கொண்ட வேங்கை மரத்தின் பூங்கிளைகள் அப் பூக்கள் உதிர்வதால் வெறுமையாய் இருக்க,
அந்த மரத்தின் அடிப்பகுதியைத் தாக்கிய மிக்க வலிமையுடைய களிறு
செம்மண் நிலத்துப் புழுதியைத் தன் மேனியில் பூசிக்கொண்டு, போர் புரிந்து
களத்தில் வெற்றிகொண்ட வீரரைப் போல் முழங்குகின்ற பாலைநிலத்து வழிகள்
பலவற்றையும் கடந்து அப்பால் சென்றிருக்கிறாரென்றாலும், 
நோயின்றி இருப்பாராக; குறி தப்பாத வாளினையும்
தமிழ்நாடு முழுவதையும் அகப்படுத்திய, ஒலிக்கும் புகழமைந்த முரசினையும்,
பரிசில் வேண்டி வருபவர்களுக்கு வரம்பின்றிக் கொடுக்கும் பெரிய நாளோலக்க இருக்கையினையும்,
தூங்கல் ஓரியார் என்னும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல பெரும்புகழ் வாய்ந்த
பிடி மிதித்த கத்தரிக்காய் போன்ற தழும்பினைப் பெற்றதால் வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் உடையவனின்
காவல் மிக்க மதில் சூழ்ந்த இடத்தில் அமைந்த ஊணூர் என்னும் ஊருக்கு அப்பால் உள்ள
மிகுந்த செல்வம் நிலைபெற்றிருக்கும் பெருமையுடைய அழகிய நகராகிய
பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர் என்னும் பட்டினத்து
ஒளி வீசும் கடைத் தெருவைப் போன்ற
கல்லென்று ஆரவாரிக்கின்ற பழிச்சொற்களை எழச்செய்து பிரிந்துசென்றவர்- (நோயின்றி இருப்பாராக)
					மேல்
#228 குறிஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார்
தேன் உண்ணும் பல வண்டுகளைக் கொண்ட கூட்டம் ஆரவாரிக்கும்படியாக, கல்லென்ற ஓசையுடன்
மலையிலிருந்து இறங்கும் அருவியின் நீர் சந்தனமரத்தின் மேல் விழுந்து
அதனைக் குளிர்ச்சியுண்டாக நனைக்கும் செறிவான மலைச் சரிவில்
கண் என்று சொல்லும்படியாக மலர்ந்த கரிய இதழ்களையுடைய குவளை மலர்களையுடைய
மலை முழைஞ்சில் உள்ள நீண்ட சுனைநீரில் நம்முடன் நீராடி
பகற்பொழுதை இனிதாக நம்முடன் கழித்து, இரவினில்
திரும்பிப் போவாரென்றாலும் நல்லது;
வானின் இடமெல்லாம் ஒளியைப் பரப்பிய பகலைப் போன்ற நிலவொளியில்
பிரம்புக் காட்டினையுடைய மலைச்சாரலில் கிடந்த வழியில்
மலையின் மேலுள்ள வேங்கைமரத்தின் ஒளிவிடும் பூக்கள்
புலியின் புள்ளிகளைப் போல் தோன்றுவதால். பெரிய வாயையுடைய
கரிய பெண்யானைகள் அஞ்சியோடும் சோலையினையுடைய
பெரிய மலையில் உள்ள புதிய வருவாயினையுடைய தமது ஊருக்கு - (த்திரும்பிப் போவாரென்றாலும் நல்லது)
					மேல்
#229 பாலை மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பகலை உண்டாக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வனின்
அகன்ற இடத்தையுடைய வானத்திலுள்ள ஆணைச்சக்கரம் உலகத்தைக் கிழித்துச் சென்றதால்
நீர் முற்றிலும் வற்றிப்போன, நடந்து முடியாத நெடிய வழியினில்
மென்மையான தலையை உடைய கன்றினையும், கவிந்த நகத்தினையும் உடைய இளைய பெண்யானை
தன் கன்றுக்குக் கொடுப்பதற்காகத் தான் தழையை உண்ணாமல் மறுத்ததால் வாடிய விலா எலும்புகள் பலவும்
பாழ்பட்ட ஊரிலுள்ள கூரையில்லாக் குடிசை போன்று தோன்றும் அவ்விடத்தில்
நெடும் தொலைவிலான இடைவெளிகளையுடைய குன்றுகளைத் தாண்டிப்போய்,
பொய்கூறுவதில் வல்லவராகிய நம் தலைவர் முயன்று ஈட்டும் பெரும் செல்வம்
நாம் இல்லாமற்போனாலும் அவருக்கு விரைந்து கைகூடட்டும் என்று
பெரிதாய் வெறுப்புக்கொள்ளவேண்டாம், பிள்ளைப்பேற்றுக்காக ஏங்கிய பெற்றோர் பெற்ற இளையவளே;
வருத்தம் மிகுந்து உதிர்த்த நுணுகி வருகின்ற சிறிதளவு நீர்
பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்களின் கருமணிகளை மறைக்கவும்,
பொன்னின் நிறம் போன்ற பசலை பரந்திட, புள்ளிகளும் வரிகளுமாகிய தேமலையுடைய,
அழகிய மாந்தளிர் போன்ற உன்னுடைய மேனியின் எழில் தொலைந்துபோவதைப் பார்த்து
வருந்தவேண்டாம் என்கிறாய், தோழியே! கிளைகளில்
அழகிய அரும்புகளை ஈன்ற சிவந்த புதிய மொட்டுகளையுடைய முருக்க மரத்தின்
மலரும் நிலையிலுள்ள பூக்கள் விரிந்த மலர்களைக் கிண்டி, பூந்துகள்களை உண்டு
அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசைகின்ற கிளைகளின் உச்சியில் இருக்கும்
சிவந்த கண்ணையுடைய கரிய குயில் இனிமை தோன்றக் கூவும்
இனிய இளவேனிற்காலத்திலும் வராமல் இருக்கிறாரே,
இப்பொழுதே வந்துவிடுவேன் என்று நம்மைத் தெளிவித்துச் சென்றவர்.
					மேல்
#230 நெய்தல் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
பெரிய உப்பங்கழியின் பக்கத்தில் கடல்நீர் பெருக்கினோடு உயர்ந்து மலர்ந்த
சிறிய கரிய நெய்தலின் மகளிர் கண் போன்ற சிறந்த மலருடன் கூடிய
பெரிய குளிர்ந்த சிறந்த தழையுடை பொருந்திய அல்குலினையும்,
மென்மையாய் அரும்பிய தேமலையும், கூர்மையான பற்களையும்,
கறுத்த நெய்ப்புடைய கூந்தலையும், ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய இளைய மகளே!
நீ சேர்ந்து விளையாடும் உன் தோழியருடன், வெண்மையான மணலில் உதிர்த்த
புன்னை மரத்தின் நுண்ணிய பூந்தாதினைப் பொன் என்று சொல்லிக் கையால் முகந்துகொண்டு
உன் மணல்வீட்டில் இரவலர் போல் வரும் உன் தோழியருக்கு வழங்கி இல்லறம் நடத்துவாயின், (சிறிதேனும்)
இந்த இல்லறத்தினை எம்முடன் சேர்ந்து செய்தால்
(சிறிதேனும்) குற்றமும் உண்டோ? பெண்ணே! என்று கூறி
விரைவான ஓட்டத்தையுடைய நல்ல குதிரை பூட்டிய கொடிஞ்சியையுடைய உயர்ந்த தேரினை
இயக்குவதில் கைதேர்ந்த பாகன் மெதுவாகச் செலுத்த
நாம் அவளருகே சென்றபோது, உயர்ந்த அழகுடைய
செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வருவதை மறைத்து
சிறிதளவு தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்,
பேரளவு துன்பத்தை நாம் இங்கு அடையும்படியாக.
					மேல்
 




#231 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
பகைவரின் செருக்கினை ஒழித்தலும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குத்
துன்பம் வந்த பொழுது விரும்பி உதவிசெய்யும் ஆண்மையும்
வீட்டில் சும்மாயிருந்து சோம்பலினால் அமைந்திருப்போருக்கு இல்லை என்று எண்ணி
நல்ல புகழைப் பெறவேண்டும் என்று துணிந்த நாணமுடைய மனத்தவராகிய நம் தலைவர்,
கொடிய வில்லையுடைய கள்வராகிய கானவர்கள் அம்பு எய்தலால் இறந்த வழிப்போக்கர்
விழுந்து கிடக்கும் களத்தில் வெளியே தெரியும் மயிரினையுடைய தலைகளையுடைய கற்குவியல்கள்
கள்ளிக்காட்டுடன் கூடிய பாழ்பட்ட களர்நிலங்கள்தோறும் கூட்டமாய்க் கிடந்து
நினைத்துப் பார்ப்பவரையும் நடுங்கச்செய்யும் யாரும் செல்லத்துணியாத காட்டினிடையே உள்ள
கொடிய பாலைவெளியைக்  கடந்துசென்றார் என்றாலும், தனது நெஞ்சம் உருகுவதால்
விரைந்து வருவார், வாழ்க! தோழியே! பகைவர் மேல்
படையெடுத்துச் சென்று அவரை வென்ற கெடாத நல்ல புகழினையும்,
வானளவு உயர்ந்த வெண்கொற்றக்குடையினையும் உடைய பசும்பூண்பாண்டியன் என்பவனது
பெருமை பெற்ற சிறப்பினையுடைய மதுரையைப் போன்ற உனது
மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் உச்சியினையுடைய
பூவிதழ் பொருந்திய கூந்தலாகிய படுக்கையில் இனிய துயிலைப் பெற்றவர் - (விரைந்து வருவார்)
					மேல்
#232 குறிஞ்சி கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
நான் கூறுவதை ஆராய்ந்து பார், வாழ்க! தோழியே! நடு இரவில்
மேகங்கள் முழங்குகின்ற முழக்கத்தைக் கேட்ட மூங்கிலைத் தின்னுகின்ற
பெரிய யானை அதனைப் புலியின் உறுமல் என்று எண்ணி வெருண்டு
பெரிய மலையின் குகைகளில் எதிரொலி பிறக்கும்படி விரைந்து ஒடுகின்ற
பெரிய மலைநாட்டினையுடைய நம் தலைவனுடன் நாம் கொண்டுள்ள நட்பானது, இப்பொழுது
மலைகள் சூழ்ந்துள்ள சிறுகுடியாகிய இவ்விடத்தில்
ஊர்ப் பொதுவிடத்தில் நிற்கின்ற வேங்கைமரம் மணநாள் இது என்று காட்டிப் பூத்த
மணி போன்ற அரும்புகளையுடைய பொன் போன்ற பூக்கள் உதிர்ந்து பரந்து
அகன்ற பாறைகளை அழகுபடுத்தும் முற்றத்தில், குறவர்கள்
தம் இல்லத்திலுள்ள ஆடுதல்வல்ல மகளிரோடு குரவைக் கூத்தாடும்
ஆரவாரம் மிகுந்த விழாக்களத்தைப் போன்று, நாள்தோறும்
பல்வேறு பூக்கள் கலந்த வழிபாட்டுப் பொருள்களோடு விரைந்து, நம் தாய்
காவல் அமைந்த நமது பெரிய இல்லத்தைத் தெய்வத்தால் தீங்கு நேராதபடி காக்கக் கருதி
நமது மேனியில்  உண்டான வேறுபாடு முருகனால் உண்டானது என்று வேலனை அழைக்கும்
காலமாக விளைந்தது நமக்கு.
					மேல்
#233 பாலை மாமூலனார்
கலங்குகின்ற குளிர்ந்த கண்களிலிருந்து நிறைந்த நீர் ஒழுகுவதால், உன்னுடைய
அடிபரந்த முலைகள் நனையும்படி அழாதே! தோழியே!
காட்டுத்தீ பற்றி எரித்ததால் கருகிப்போன மேற்பரப்பினையுடைய பெரிய பாலைநிலத்தினை
வளம் பொருந்திய வேறு இடங்களுக்கு ஓடுகின்ற மழை துறந்துவிட்டதால்
தசை வற்றிப்போன யானை வருந்துகின்ற இந்த முதுவேனில் பருவத்தில்
வீரம் பொருந்திய மறவர்படையும், குதிரைப்படையும், புறங்கொடாத ஆற்றலும் உடைய
மேலுலகம் எய்திய அழியாத நல்ல புகழையுடைய,
முன்னோர்களுக்குத் தனது கடமையைச் செய்த உதியஞ்சேரல் என்னும் சேரமன்னன்
அவர்களுக்குப் பலியுணவாக மிக்க சோற்றினை படைத்திட்ட பொழுதில், கரிய, பலவான
பேய்க்கூட்டம் அதனை உண்ணுவதற்குக் கூடியிருந்தது போல
சிறியதும் பெரியதுமான பல குன்றுகள் நெருங்கிக் கூடியிருக்கும்
பாலைவெளியைக் கடந்து அப்பால் சென்றாரெனினும் மிகவும் அதிகமாக
அடங்காத உள்ளத்துடன் மதிமயங்கிப்போய்ப்
பொருள் சேர்ப்பதற்காக இன்னும் அங்கு தனது இருப்பை நீட்டிக்கமாட்டார், உன்
இருண்டு கருத்த ஐந்துபகுப்பாகிய கூந்தலைப் படுக்கையாகக் கொண்ட இனிய தூக்கத்தை மறந்து
					மேல்
#234 முல்லை பேயனார்
மேகங்கள் தங்கள் பயனாகிய மழையைப் பொழிந்ததால் எங்கும் நீர் பெருகிக் கிடக்கின்ற காலத்தில்
நுண்மையான குறுமணல் பரந்துகிடக்கும் குளிர்ந்த நீர்நிலைகளின் பக்கத்தில்
வரிசையாகப் பறக்கும் அன்னங்களைப் போல விரைவான ஓட்டத்தையுடைய
புல்லிய பிடரிமயிரினைக் கொண்ட செருக்குவாய்ந்த குதிரைகளை மென்மையாகப் பூட்டிய
கடிவாள வார்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து, நிலத்தில் அழுந்திய
பல ஆரங்களைக் கொண்ட சக்கரங்கள் மென்மையான நிலத்து வழியில் அறுத்துக்கொண்டு செல்ல,
வேகத்தில் காற்று என மருண்டுபோகும்படி, ஏறியமர்ந்து, நூல் நெறிப்படி செய்யப்பட்டதும்,
வேகத்தால் கண்ணின் பார்வையில் அகப்படாமல் ஓடுகின்றதுமான அழகு செய்யப்பட்ட நமது நெடிய தேரினை
மிக விரைவாகச் செலுத்துவாயாக, தேரினை ஓட்டுவதில் நல்ல வெற்றியைப் பெற்ற தேர்ப்பாகனே!
செறிவான தழைகளைத் தின்று வெறுத்துப்போன துள்ளிச்செல்லும் நடையினைக்கொண்ட இளைய பெண்மான்
ஆண்மானுடன் கூடிய மகிழ்ச்சியுடையனவாய் இடையூறு இன்றித் துள்ளித் திரிய
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டின் மென்மையாகப் பறக்கின்ற கூட்டம்
முல்லையின் மணம் மிக்க மலர்களில் பூந்தாதுக்களை விரும்பி உண்ண,
பகற்பொழுது கழிந்த பொலிவற்ற மாலைக்காலத்தில்
முல்லை நிலத்தை ஒட்டியிருந்த, வாழ்வதற்கு இனிதான நல்ல ஊரில்
மிக்க துன்பத்தால் வருந்திய நீரொழுகும் மையுண்ட கண்களையும்,
நல்ல மேனியில் பரவிய பசலையையும் உடைய நம் தலைவி
மின்னலுக்கு நேரான தன் கூந்தலில் விழுந்த சடையின் சிக்கை அகற்றி அதனை அழகுசெய்ய
					மேல்
#235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
தோழியே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! பொருள்மீது விருப்பம்கொண்டு
நம்மை நினைக்காமற்போனாரோ நம் காதலர்? அப்படியே நினைவுவந்தாலும்
பொருளீட்டுவதே சிறந்தது என்பதைக் குறிக்கோளாகக்கொண்டதால் நம்மை மறந்துவிட்டார் போலும் -
பயனைத் தரும் விளைநிலங்கள் நெகிழ்ந்துபோகும்படி நீரினைப் பெய்து, பின் அவ்வாறு பெய்தலை வெறுத்து
மலையை நோக்கிக் கீழ்க்காற்றுடன் சென்ற பெரிய மேகம்
மூடுபனியின் அடக்கத்துடன் பொங்கித் துளிகளைச் சிந்த,
வாடைக் காற்றினால் நிமிர்ந்து நின்ற அழகிய இதழ்களைக் கொண்ட செங்காந்தள் அரும்புகள்
சுடர்விட்டு எரியும் அகல்விளக்கைப் போன்று சுருங்கிய கட்டு அவிழ்ந்து மலர,
சுருண்டுகிடக்கும் அரும்புகளையுடைய முசுண்டையின் கட்டு அவிழ்ந்த வெண்ணிறப் பூக்கள்
வானத்தை அழகுசெய்கின்ற விண்மீன்களைப் போல பசுமையான புதர்களை அழகுசெய்ய,
நண்டுகள் மண் வளைக்குள் புகுந்துகொள்ள, அகன்ற வயல்களில்
கிளைத்து விரிந்த கரும்பின் திரண்ட காம்பினையுடைய வெண்ணிறப் பூக்கள்
மழைக்காலத்துக் கொக்குகள் போன்று ஈரமுடையனவாய் வளைந்து நிற்க,
மிகவும் கொடிய சினத்துடன் உயிர்களுக்கு அச்சத்தை உண்டாக்கி
பனியுடன் சேர்ந்துகொண்ட பண்பில்லாத வாடை
மயக்கத்தை உண்டாக்கும் மாலைநேரத்துடன் இரக்கமின்றி வருத்த
நெற்றியில் நிலையாய்த் தங்கிவிட்ட அயலாரும் அறிந்துகொள்ளும்படியான பசலையுடன்
பழைய மேனி அழகு கெட்டுப்போய் மெலிந்து
எந்த நிலையில் இருப்பாளோ? பாவம் என்று எண்ணிப்பாராதவர் - (நம்மை மறந்துவிட்டார் போலும்,)
					மேல்
#236 மருதம் பரணர்
நீலமணி போன்ற நிறமுடைய மலர்களையுடைய நீர்முள்ளிச் செடிகள் அடர்ந்த
தெளிந்த நீரையுடைய நீரோடையில் பிடித்த பெரிய மீனின்
உடலை அரிந்தெடுத்த நிறத்தினையுடைய கொழுத்த துண்டினை ஒருவரிடமிருந்து ஒருவர் கவர்ந்து உண்டு
வெண்ணெல் கதிரை அறுப்பவர்கள் மீதத்தை விட்டுவிட்டுப் போன இடத்தில், பின்னர் அவர் கொண்டுவந்துபோட்ட
வெற்றிடம் இல்லாதவாறு செறிவுள்ள நீண்ட கதிரினையுடைய பல நெற்கட்டுகளையுடைய
பனியால் நனைந்த சாய்ந்த புறமெல்லாம் மூடியிருக்கும்படி வயற்புறத்திலுள்ள
கரிய கொம்பினையுடைய மாமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் உள்ள புதிய பூக்கள்
நெருக்கமான மழைத்துளிகளைப் போல் சொரிந்து பரவிக்கிடக்கும் ஊரினைச் சேர்ந்த நம் தலைவனின்
காதல் எவ்வளவு பெரியது என்று அறியேன்; பெரிதும்
தப்பிப்பிழைத்தேன், வாழ்க! தோழியே! நேற்று இரவு
அழகு விளங்கும் சந்தனத்துடன், அழகிய பட்டு ஒளிவீச,
வளைவான காதணி அணிந்த மகளிர் போல நம் தலைவன் நாணி ஒடுங்கியிருந்த இருப்பினைக் கண்டு
மடமையால் உருகிப்போன நெஞ்சினள் ஆகி
காளையின் தன்மையையுடைய எழுச்சி பொருந்திய நடையினையும், பொலிவுள்ள தோளினையும்
மலர்சூடிய கரிய சுருட்டையான தலைமயிரினையும் உடைய
என் தலைவனாகிய ஆட்டன் அத்தியைக் கண்டீர்களா என்று
நாடுதோறும், ஊர்தோறும்
கடல் கவர்ந்து கொண்டதோ என்றும், வெள்ளம் அடித்துச் சென்றதோ என்றும்
அழுத கண்களைக்கொண்டவளாய்த் தன் காதலனைத் தொலைத்துவிட்ட
ஆதிமந்தியைப் போல
துன்பத்தைச் சொல்லிப் பெரிதும் வருத்தப்படுவதிலிருந்து - (பெரிதும் தப்பிப்பிழைத்தேன்)
					மேல்
#237 பாலை தாயங்கண்ணனார்
பாதிரிமரத்தின் புன்மையான காம்புகளையுடைய வரிகள் பொருந்திய நிறமுடைய திரண்ட மலர்கள்
மெல்லிய கொடியாகிய காட்டுமல்லிகையின் மலர்களொடு நுண்ணிய மணற்பரப்பினை அழகுசெய்ய
பாம்பின் பல்லினைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த குரவமரத்தின்
வண்டுகள் ஒலிக்கும் நறுமணமுள்ள கிளைகளைத் தென்றலானது ஊடுருவிச்செல்ல,
குயில்கள் இனிய குரலால் விட்டுவிட்டுக் கூவுகின்ற இளவேனிற்காலத்திலும் தூக்கம் இல்லாமல்
இரவுப்பொழுது இனிமையின்றிக் கழியும் என்று உன்
நல்ல மாமை நிறமுள்ள மேனியின் சிறந்த அழகு ஒழிந்துபோக
வருந்துவதை விடுவாயாக, அழகிய அணிகலன்களையுடைய தலைவியே! மிக்க ஆற்றல் வாய்ந்த
சிவந்த தீயில் சுட்ட வளம் பொருந்திய நிணத்தில் கொழுத்த துண்டுகளை
மெல்லிய தினைச்சோற்றில் சொரிந்த உண்கலத்தோடு
பெரிய நெற்கதிர்கள் காற்றால் சுழலும் வயலில் கரும்பின்
வளர்ந்த தட்டைகளிலிருந்து பிழிந்து காய்ச்சிய அழகிய இனிய பாகுடன்
பால் பெய்யப்பெற்ற செந்நெல்லால் இடிக்கப்பட்ட பச்சை அவலைத் தன் சுற்றத்தாருக்குப் பகிர்ந்துகொடுக்கும்
ஆற்றுநீர் வந்து தாக்குகின்ற மதகுகளையுடைய உறையூரே கிடைக்கப்பெற்றாலும்
தமது பொருளீட்டும் தொழிலையே ஒரு பொருட்டாக எண்ணித் தவிர்க்கமாட்டார் - கடைக்கண் சிவந்து
வியக்கத்தக்க வகையில் ஒன்றுடனொன்று பொருதும்படியான மையுண்ட கண்களையுடைய உன்
கூர்மையான அழகிய எயிறுகளில் ஊறுகின்ற நீரினைப் பருகுவதை - (த் தவிர்க்கமாட்டார்)
					மேல்
#238 குறிஞ்சி கபிலர்
ஒன்றோடொன்று பின்னி அடையாளம் தெரியாதபடி மரங்கள் அடர்ந்துள்ள காட்டில்
ஈன்று, அக் குட்டிகளுக்குக் காவலாக அமைந்த, மிகுந்த உணவு வேட்கையையுடைய பெண்புலிக்குப் பசித்ததாக
அதற்கு இளைய மானாகிய உணவைக் கொண்டுவந்து தர, நடு இரவில்
இருண்ட குகைகளையுடைய மலைச்சரிவில், இரையை விரும்பிப் புறப்பட்ட
பனைமரத்துண்டினைப் போன்ற பிடரியினையுடைய, பல வரிகளையுடைய பெரிய ஆண்புலி
கபடமற்ற கண்களையுடைய காட்டுப்பசு திசையெங்கும் பரவும்படி அலற,
பெரிய கொம்பினையுடைய அந்த காட்டுப்பசுவின் தலைமை பொருந்திய காளையை
அந்த அகன்ற காட்டிலே தனது வலப்பக்கம் வீழும்படியாகக் கொன்று
கருங்கல்லால் ஆன அகன்ற பாறைநிலம் சிவக்கும்படியாக இழுத்துச்செல்லும்
பெரிய மலைநாட்டையுடைய தலைவனே! நீ இவளை வந்துவந்து பார்த்துவிட்டுப் பிரிந்துசென்றால்,
மருந்தினையும் வைத்திருக்கிறாயோ? வேண்டி வரும் இரவலர்க்கு
அணிகள் அணிந்த நீண்ட தேரைக் களிற்றுடன் நாள்தோறும்
மேகங்கள் வழங்குவது போலக் கொடுக்கின்ற ஈகையினையும், மிக்க கள்ளினாலுண்டான மகிழ்ச்சியினையும்,
கழலுகின்ற வீரவளையம் அணிந்த பெரிய கையையும், செருக்குள்ள குதிரைகளையுமுடைய நள்ளி என்பவனின்
செறிவான அரும்புகள் மலர்ந்த மணங்கமழும் கரிய மலைப்பக்கத்தில்
பனைமரத்தின் அடிப்பாகத்தில் நிலைபெற்றுள்ள காந்தளின்
மெல்லிதான பிணிப்பு உள்ள மொட்டுகள் இதழ்விரிந்து மலர்ந்த
குளிர்ந்த நறுமணம் கமழும் புதிய மலர் போல நறுமணம் கமழுகின்ற நெற்றியையுடைய தலைவிக்கு - 
					மேல்
#239 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
நம் நிலை மிகவும் இரங்கத்தக்கது! இனி என்ன ஆகுமோ?
ஊர்மன்றமும் முதலில் மறைந்தது, உயர்ந்த மரங்களும் ஒவ்வொன்றாக மறைகின்றன;
புலி என்று சொல்லும்படியாக முழங்கும் சிவந்த கண்களையுடைய வெட்சி மறவர்கள்
தீக்கொள்ளியுடன் பிடித்த நீண்ட திரண்ட அம்பினையுடையவராய்
இரவினில் அடுத்தவர் ஊரைத் தாக்கி பல பசுக்கள்கொண்ட கூட்டத்தைக் கவர்ந்துகொண்டதால் உண்டான
ஒலி மிகுந்த ஆரவாரம் கொடிய பாலைநிலத்து மலைகளில் எதிரொலிகளை ஏற்படுத்தும்
மொழி வேறுபட்ட பல நாடுகளிலும் உள்ள வழிகள் பலவற்றையும் கடந்து,
மார்பில் புள்ளியிட்ட சந்தனக் கோலங்களையும், பொறிகள் கொண்ட தேமலையும் உடைய
ஒளிவிடும் அணிகலன்களையுடைய மகளிர் உயர இருக்கும் பிறையினை வணங்கும்
பொலிவிழந்த மாலை நேரத்தில், நாம் இங்கே தனியாய் இருக்க,
ஈட்டுவதற்கு அரிதான பொருளைச் சம்பாதிக்கச் சென்றால்
அங்கே நெடுநாள் இருந்துவிடுவீர் அல்லவா பெருமானே! என்று
சிறியதாகவும், பெரியதாகவும் ஊடல்மொழிகளைக் கூறி நம்மிடம்
நேற்றுக்கூட இனிய பல மொழிகளைக் கூறிய
இளமையுள்ள நல்ல நம் காதலி இருக்கும் அந்தப் பெரிய நல்ல ஊரிலுள்ள-(மன்றும் தோன்றாது மரனும் மாயும்)
					மேல்
#240 நெய்தல் எழுஉப்பன்றி நாகன் குமரனார்
சிவந்த மலர்களையுடைய ஞாழல் மரத்தின் கருமையான கொம்பில் உள்ள பெரிய கிளையில்
தனியே இருக்கின்ற தன் குஞ்சினை நினைத்துப் பார்த்த தாழப் பறக்கும் நாரையானது
நீலமணி போன்ற நிறமுள்ள பூக்களையுடைய நெய்தலையுடைய கழியிலிருந்து மேலே எழுந்து பறந்துசெல்ல
கடற்கரைச் சோலையும் இப்பொழுது தனிமையுற்றது; நீர் செறிந்த கடலின்
அலைகளையுடைய பரந்த வெளியில் திரிந்து வருந்திய திண்ணிய படகின் விளக்கொளியில்
பலவான மீன்கூட்டங்களை என் அண்ணன்மார் காட்டுவதற்காக
என் தந்தையும் இரவினில் கடற்கரைக்குச் செல்வார்; அப்பொழுது
தெய்வத்தையுடைய குளிர்ந்த துறையினில் அத் தெய்வத்தைக் கைதொழுது வாழ்த்தி
எம் தாயும் தன் தோழியருடன் வணங்கும்; நீயும்
தேன் ஒழுகும் கூந்தலையுடைய தலைவியின் அழகிய நெற்றியைத் தடவி
கோங்கின் மொட்டுவிட்டதைப் போன்ற குவிந்த முலையினையுடைய மார்பினில்
இனிமையான தூக்கத்தை விரும்பினாயானால், வண்டுகள் மொய்ப்பதால்
மலர்ந்த பூக்களையுடைய செருந்திமரத்தைச் சேர்ந்த வெண்மையான மணல்பரந்த மூலையினில்
பூக்களால் வேயப்பெற்ற புன்னைமரங்களையுடைய அழகிய குளிர்ந்த சோலைக்கு
வருவாயாக - இவளுடன் சேர்ந்திருந்து செல்வதற்கு
					மேல்
 




#241 பாலை காவன் முல்லை பூதனார்
’வெறுப்பு இன்றி ஒன்றிய, என்றும் மனவேறுபாடு இல்லாத நட்பினையுடைய
இனிய குணங்களையுடையவர் நம் தலைவர்’ என்று என்னை வெறுக்காமல்
எனக்கு ஆறுதல் கூறுகின்ற தோழியாகிய நீ அவரது நல்ல குணங்களைப் பாராட்டிக் கூறினாலும், என்றும்
நம்மைவிட்டுப் பிரியாத காதலுடன் நமக்கு அருகில் இருப்பவராகிய
நம் காதலர் - வாழ்க! தோழியே! மலையின் உச்சியில்
மூங்குலின் இளமையுடைய முளை வாடிவதங்கிப்போகவும், மூங்கில்
கோல்கள் உரசிக்கொள்வதால் ஒலி எழுப்புகின்ற அகன்ற நிலப்பரப்பு வெம்ப, மழை பெய்வதை மறந்துபோனதால்
அருவிகளில் நீர் இல்லாமற்போன அச்சம் வரும் அகன்ற இடத்தில்
கானல்நீரை மழை என்று கருதி ஓடி
தாகம் ஏற்பட்ட தனித்திருக்கும் வயதான பெரிய கலைமான்
வேறிடத்திற்குப் போய்த் தங்குவதற்கும் இயலாமல், அந்தக் கானல்நீர் அசைகின்ற
தனக்குப் புதிய இடமான அந்த வெப்பம் மிகுந்த காட்டினில் வருந்தியவாறு தங்கிக்கிடக்கும்
பாலை நில வழியிலுள்ள நெல்லியின் இனிய சுவையுள்ள திரட்சியான காய்களை,
வட்டமான கழங்கினை ஆடுவது போன்று தாவிக்கொண்டு, பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையினையும்
சிவந்த முகத்தினையும் கொண்ட மந்திகள் விளையாடும்
நல்ல மரங்களைத் தம் பக்கத்தேகொண்ட மலையினைக் கடந்துசென்றவர் -
					மேல்
#242 குறிஞ்சி பேரிசாத்தனார்
அரும்புகள் முதிர்ந்த வேங்கைமரத்தின் அசைகின்ற மெல்லிய கிளைகளில்
வண்டுகள் பூவின்வாயைத் திறந்ததால் பொன்துகள் போன்ற நுண்ணிய பூந்தாதுக்கள்
நீலமணியைப் போன்ற தோகையில் உதிர்ந்ததால், அழகு மிகுந்து
ஒளிவீசும் புள்ளிகளையுடைய ஆடுகின்ற சோலையின் பக்கத்தில் உள்ள
பச்சையான தாளையுடைய செந்தினையின் வளைந்த கதிர்களையுடைய பெரிய தினைப்புனத்தில் மேயவந்த
சிவந்த கோடுகளையுடைய கிளிகளை நம்முடனிருந்து ஓட்டிய நம் தலைவனின்
நல்ல இயல்புகள் தந்ததால் உனக்கு உடல் மெலிவு வந்ததை அறியாதவளாய், ’நுண்ணிய நிறம் பொருந்திய
தளிரைப் போன்ற எழுச்சிவாய்ந்த அழகினையுடைய என் மகளின் துயரின் காரணத்தை
அறிய வேண்டும்’ என்று பல குறுணி அளவான படையல்களைப் பலியுணவாக வைத்து
உண்மையை அறியாத வேலனை அழைத்துவந்து, தாயானவள்
வெறியாடும் பெரிய களம் பொலிவுபெறும்படி முருகனைப் புகழ்ந்து பாடி
அத் தெய்வத்திற்கு ஆட்டுக்குட்டியினைப் பலிகொடுக்கும் முன்னர், நாம் சென்று
அணியவும் கழற்றவும் பொருத்தமாக இருந்த, மிகத் தொலைவுக்கும் ஒளிவீசும் பளபளப்பான வளையல்கள்
இப்போது தாமே நெகிழ்ந்து கழன்ற முன் கையும், நேராக இறங்கும் பெரிய தோள்களும்
நல்ல அழகும் அழிவிலிருந்து நீங்கி, அவற்றின் பழைய அழகினைப் பெறும்படியாக,
அரும்பி வரும் இளம் முலைகள் முழுகும்படியாக, பல முறை
தழுவுதல்தான் மிகச் சரியானது, தோழியே!
தேன்கூடுகள் கட்டப்பெற்ற குளிர்ந்த குகைகளையுடைய மலைச்சாரலைக் கொண்ட
பெரிய மலையின் வெடிப்புக்களையுடைய இடத்தில் நீண்டு வளர்ந்த சிறிய இலைகளையுடைய
சந்தனமரத்தின் மெல்லிய கிளைகள் தீண்டும்படி, மேலே இருக்கும்
தேனடைகள் தொங்கும் நெடிய உச்சியினையுடைய
மலைநாட்டையுடைய நம் தலைவன் முன்பு நம்மை முயங்கின மார்பினை - (த் தழுவுதல்தான் மிகச் சரியானது)
					மேல்
#243 பாலை கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
அவரையின் அழகிய மலர் உதிர்ந்துவீழ, சிவந்த நிறமும்
வளைந்த துளையையும் உடைய, பவளம் போன்ற இண்டஞ்செடிகள் பூத்து நிற்கவும்
வளைந்த மொட்டுகள் மலர்ந்த ஈரமான புதராகிய பகன்றை மலர்கள்
காற்றால் சுழலுகின்ற நுண்ணிய பனித்துளிகளோடே இவ்வூரின் பக்கங்களை அழகுசெய்ய
ஆறுகளில் மழை நீரின் புது வரவு முற்றிலும் அற்றுப்போக, கிளைகள்விட்டுச்
சூல்கொண்டு கதிர்வாங்கி மடல் விரிந்து வளைந்த பளிச்சிடும் கதிர்களையுடைய கழனிகளில்
நெற்கள் ஒலிக்கின்ற பச்சையான மேட்டுநிலத்தினைத் தடவிக்கொண்டு, கல்லென்னும் ஓசையுடன்
விரைந்து வந்து தங்கிய இரக்கமற்ற வாடையானது,
இங்கு மட்டும் நிற்காமல், (அங்குச் சென்று) அவருக்காக ஏங்கிக்கொண்டு
பலவற்றையும் சொல்லிப் புலந்துகொண்டு இருக்கும் துணையில்லாத தனி வாழ்க்கையில்
நம்முடைய துன்பத்தை வெற்றிகொள்ளமுடியாத நிலையைக் கூறி, அவர் அங்கிருக்கும் நிலையினையும்
நாம் அறியும்படிசெய்தால் மிகவும் நல்லது;
நாம் நீரொழுகும் கண்களையுடையவராகும்படி, இப்பொழுது அந்த வாடைக்காற்று 
நமக்கே துன்பமாக ஆகிவிட்டது,
அப்படிப்பட்டதாய் விட்டது தோழியே! நமது ஊழ்வினைப்பயன்.
					மேல்
#244 முல்லை மதுரை மள்ளனார்
பசை தடவிய தோலை நெய்யில் தோய்த்ததைப் போன்ற
கரிய சிறகினையுடைய, மிக உயரமான கிளையில் இருக்கும் வௌவால்
தான் பகலில் தங்கியிருக்கும் வயதான மரம் தனியே இருக்கும்படி அதனைவிட்டுச் செல்ல,
அரும்புகள் வாய் திறந்ததால் மலர்ந்த வாயையுடைய முல்லைப்பூக்கள்
அந்த முல்லைக்கொடியின் மீது மணமகளின் கூந்தல் போன்று மணம் கமழ்ந்து, 
வண்டுக் கூட்டம் வேறோரிடத்திற்குச் செல்லாதவாறு தடுக்கின்ற குளிர்ந்த பக்குவமுள்ள கார்காலத்தில்
திரும்பி வந்தாலும், வராமல் அங்கேயே இருந்தாலும், அவர் சென்ற இடம் நம் காதலர்க்கு
இன்பமாகவே இருக்கும் போலும், வாழ்க, தோழியே! என்று தன்னுடைய
பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்களின் நல்ல உட்பக்கங்கள் சிவந்துபோக,
பொறுக்கமுடியாத துயரத்தை உடையவள் இவள் என்று அவளுக்கு நன்மைசெய்ய விரும்பி
பாணன் தூதாக வந்தான், நீயும்
புல்லை நிரம்பத் தின்ற குதிரைகளை மிகவும் விரைந்து பூட்டி
நெடிய தேரைச் செலுத்துவாயாக, பாகனே!
முடிந்துவிட்டது, நாம் எண்ணி வந்த செயல்.
					மேல்
#245 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயிரைக் காட்டிலும் சிறந்த, நல்வழியில் தேடும் பொருளை ஈட்டிக் கொண்டுவருவதற்காக
நன்மை செய்வதையே விரும்பும் அறிவினையுடையவராய் நம்மைப் பிரிந்து சென்றிருக்கிறார் என்று
வீட்டில் தன்னைத் தேற்றிக்கொண்டு தனித்திருப்பதற்குரிய மனவலிமையுடையவளாய் இருக்கிறாள் என்பதனை
நீ நன்கு அறிந்திருப்பாயென்றால், இப்பொழுதே இவளைப் பிரிந்துசென்று,
மேகங்கள் பொழிவதை மறந்துபோனதால் மூங்கில்கள் வற்றிப்போன வழியில்
பயணம்செய்யும் வணிகர் கூட்டத்தைத் தாக்கியழிக்கும் பண்பு இல்லாத வாழ்க்கையையுடைய,
வலிய வில்லையுடைய பாலைநில மறவருடைய தலைவர், இரவு வந்தபோது
கோடுகள் மிகுந்து விளங்குகின்ற பருத்த தோள்களையும், வயிற்றை அழகுசெய்யும் தேமலையும் உடைய
கள்விற்கும் பெண்கள் தங்கியிருக்கும் வீட்டு எல்லையில்
கள்ளிற்குரிய விலைப்பொருள் கிடைக்கப்பெறாதவர்களாய், மதத்தால் நனைந்த கன்னத்தினையுடைய
காட்டுயானையின் வெண்மையான கொம்பு தம் வீட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை எடுத்து வர
ஊர்மன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தன் மகனின் புன்மையான தலையைத் தடவி ஏவுகின்ற இடமான
வெல்லுவதற்கு அரிய போர்க்களங்களையுடைய அந்த பாலைநிலத்து ஊர்களில் தங்கி, விடியும் பொழுது
நிழல் உண்டாக அழகுபெற்ற நீண்ட அடிமரத்தையுடைய இலவமரத்தின்
நெருப்பு கிளைவிட்டு எரிவதைப் போன்ற, ஆடுகின்ற கிளைகளில் உள்ள ஒளிவீசும் பூக்கள்
குழல் போன்ற இசையையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற இடமாகிய
பாறை நிலத்தில் காய்ந்துகிடக்கும் சிதைந்துபோன வெண்மையான எலும்புகள்
விரைந்து ஓடும் ஒட்டகத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும்
கற்களையுடைய நீண்ட கிளைத்துச்செல்லும் வழிகளையுடைய காட்டினைக் கடந்து
அழகிய மாமை நிறத்தவளாகிய நம் காதலி தனித்திருக்க,
நீ செல்வாயாக, நெஞ்சமே! நான் வரமாட்டேன்.
					மேல்
#246 மருதம் பரணர்
சொரசொரப்பான வயிற்றினையுடைய நத்தையின் பிளந்த வாயையுடைய ஆண்
நன்கு வெளிப்பட்டு நிற்கும் மூக்கினையுடைய ஆரல் மீன் சாட்சியாக,
ஆழமான நீரையுடைய பொய்கையில் தன் பெண்ணுடன் உறவுகொள்ளும்
நிறைந்த நீரையுடைய அகன்ற வயல்களின் புதுவருவாயையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனே!
பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய, உன்னால் விரும்பப்படுபவளுடன்
பூந்தாதுக்கள் நிறைந்த குளிர்ந்த காஞ்சிமரச் சோலையிலும், அங்குள்ள அகன்ற ஆற்றினிலும்
நேற்று விளையாடினாய் என்கிறார்கள்; அதனால் எழுந்த அலர்மொழியோ
மிக்க சினமும் வலிமையும் உடைய பெரும் புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
ஆரவாரம் மிக்க கள் வளத்தையுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தில்
சிறப்பு வாய்ந்த பகையரசர் பகைத்து எழுந்த போரினில்
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தில் தனித்துக்கிடக்க,
பதினொரு வேளிருடன் மற்ற இரு பெரு வேந்தர்களும் தோற்றோடும்படி
அவரின் மிக்க வலிமையை வேருடன் அறுத்த நாளில்
அழுந்தூர் என்னுமிடத்தில் எழுந்த குறையாத ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியது.
					மேல்
#247 பாலை மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
கழுவாத முத்தாகிய கண்ணீர் வடிந்த அழகிய முலையினையுடைய
நல்ல சிறந்த மார்பு தனிமையில் வருந்தப் பிரிந்து சென்றவர்
சற்றும் இரக்கம் இல்லாதவர், வாழ்க, தோழியே! பொருள்மீது ஆசைகொண்டு
பெரிய சுற்றத்தையுடைய கரடியின் வெப்பம்பொருந்திய வாயையுடைய ஆண்
கரிய கிளைகளையுடைய இலுப்பை மரத்தின் வெண்மையான பூக்களைத் தின்று வெறுத்துப்போனால்
பெரிய செம்மண் புற்றின் பெரிய உச்சியினைத் தோண்டுகின்ற
செல்வதற்கு அரிய காட்டுவழி என்று நினையாதவராய், பகைமைகொண்டு போர்செய்தலால்
போர்முனையான சிற்றூர்கள் பாழாய்ப்போன அவ்விடத்தில், ஆட்களின் வருகையை எதிர்நோக்கி
கொல்லுவதில் வல்ல யானை பாதையில் காவல்செய்துகொண்டிருக்கும்
இடையூறுகள் மிகுந்த கிளைத்துச்செல்லும் பாதைகளைக் கொண்ட வழிகள் பலவற்றைக் கடந்துசென்று
மிக்க முடைநாற்றத்தை விரும்பிப் பறந்துசெல்லும் நீண்ட கழுத்தினையுடைய
பருந்து மரக்கிளையில் தங்கியிருக்கும் நீண்ட உச்சியினையும்
உயர்ந்த பாறைகளைச் சிகரங்களாகக் கொண்ட மலையைக் கடந்துசென்றவர் - (சற்றும் இரக்கம் இல்லாதவர்)
					மேல்
#248 குறிஞ்சி கபிலர்
நேற்று இரவில் நடந்த இந்த சிரிப்பு மிக்க செய்தியைக் கேட்பாயாக, தோழியே!
வலிமை மிக்க வேட்டைநாயைத் தாக்கி, வலிமையுள்ள குட்டிகளைத் தழுவிக்கொண்டு,
வேட்டுவ இளைஞர்கள் நெருங்குவதைத் தடுத்து, தன் இனத்தோடு
தொங்குகின்ற முலைகளையுடைய பெண்பன்றி தப்பிச்செல்லும்படிசெய்து, காட்டிலிருந்து வெளியேவந்து
நுழைவதற்கு அரிய வாயிலை உடைய குறுகிய வழியில் தன்னை நோக்கி வருபவர்களை எதிர்நோக்கி நின்ற
அச்சமே இல்லாத பன்றியினைக் பார்த்து,
நெருங்கிச்சென்றவனாய்த் தன் வில்லில் பூட்டிய கூர்மையான முனையைக்கொண்ட அம்பினை,
பகைவரைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல்மிக்க தன் படை மறவர் ஓடிப்போகவும், தான் மட்டும் செல்லாமல்
தடுப்பதற்கு அரிய வழியைத் தடுத்துநிறுத்துவதற்குரிய எமது பெரிய மறப்பண்பினைப் போன்றது இது என்று
அந்தப் பன்றியின்மேல் எய்யாமல் நகர்ந்துபோகும் இடமான மலையைச் சேர்ந்த நாட்டினையுடைய நம் தலைவன்
செறிவான புதர்கள் பற்றி இழுக்க,அறுபட்டுப் புரிகள் அவிழ்ந்துபோனதால்
உயர்ந்து திரண்ட வலிமையையுடைய தோளில் உதிர்கின்ற பூக்களைக் கொண்ட மாலையானது
காளையின் திமிலில் கிடக்கும் கயிற்றைப் போன்று அழகுபெற அசைந்தாட,
நம் வீட்டில் வந்து நின்றவனை நம் அன்னை கண்டவளாய்
வேகமாக என் முகத்தைப் பார்த்து
“நீ நல்லவள்தான்” என்று சிரித்துவிட்டுச் சென்றாள்
					மேல்
#249 பாலை நக்கீரனார்
நான் சொல்வதைக் கேட்பாயாக, வாழ்க, தோழியே! பல நாட்களாக
இந்த ஊரில் நம்மையே தூற்றும் பழிச்சொல் எதற்காகவோ? தடித்த வாரினால்
இறுக இழுத்துக் கட்டிய அரியோசை எழுப்பும் கோலினையுடைய தெளிவான ஓசையை உடைய கிணைப்பறையில்
இனிய குரலை எழுப்பிப் பாடும் பாணர்கள் இரந்து வேண்டினால், நாள்தோறும்
பொன்னால் செய்த குப்பிகளைக் கொம்பில் செறிவாகச் செருகிப், பொன் மாலைகளைக் கழுத்தில் பூட்டி
சந்தனம் அப்பிய உயர்ந்து அசைகின்ற அழகிய திமிலையுடைய
காளையை முன்னால் நிறுத்தி, மிகுந்த உணவினைக் குவித்து,
நெடிய தேரினைக் களிறுகளோடு அளிக்கும் வளைந்த பூணையும்,
பல வேற்படையையும் உடைய முசுண்டை என்பவனின் வேம்பி என்னும் ஊரினைப் போன்ற எனது
நல்ல பேரழகும் இளமை நலமும் அழிந்துபோனாலும், திரும்பிவந்து நம்மீது அன்புசெய்யமாட்டார் -
பல பூக்களையுடைய காட்டில் குறைந்த அளவு நிழலில் தங்கியிருந்து
மயிலின் சிறகால் தொடுக்கப்பட்ட மாலையினையுடைய மழவர்கள்
இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற
புலால் வீசும் களத்தைத் துழாவிக்கொண்டு செல்லும் புழுதியைத் தன்னிடம்கொண்ட மேல்காற்றின் ஒலியினை,
நீண்ட மூங்கிலையுடைய மலைச்சாரலில் இரையை விரும்பி எழுந்த
ஒளி பொருந்திய வரிகளையுடைய வலிமையுள்ள புலி இரையைப் பிடித்ததால் எழுந்த ஓலமாக எண்ணி
வேறுவேறாகப் பிரிந்துசெல்லும் பாதைகளையுடைய வழிகளில் விரைவாக அலறிக்கொண்டு
உழைமான் என்னும் மான் கூட்டம் ஓடுகின்ற
மூங்கில் மறைக்கும் உயர்ந்த மலையைக் கடந்துசென்றவர் - (திரும்பிவந்து நம்மீது அன்புசெய்யமாட்டார்)
					மேல்
#250 நெய்தல் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
இதற்குக் காரணம் என்ன? வாழ்க, தோழியே! நெருக்கமான துளிகள்
மிகுந்த அலைகளால் வருந்திய அசையும் நிலையினையுடைய புன்னை மரத்தின்
வண்டுகள் ஒலிக்கும் பூங்கொத்துக்களின் நுண்ணிய பூந்துகள்கள் உதிர்ந்து அழகு செய்ய,
மணங்கமழும் மெத்தென்ற மணல் மேட்டில் காண்பதற்கு இனிமையுண்டாகும்படி
கூட்டமான தோழியருடன் சேர்ந்து மணல்விளையாட்டு விளையாட,
கொடுஞ்சியையுடைய நீண்ட தேரினையும், அதனைச் சூழ்ந்து வரும் பணியாளரையும் தொலைவில் நிறுத்தி
கழுத்திலும், தலையிலும் மாலையை உடையவனாய் ஒருவன் கிட்ட வந்து
நாம் செய்த மணல்வீட்டைப் பாராட்டிய சொல்லையுடையவனாகி, ஏதும்
பதில் கிடைக்காமல் திரும்பிச் சென்றான்; அதுமுதல்
பொறுப்பதற்கு அரிய நினைவுத் துன்பத்துடன் பெரிய தோள்கள் மெலிந்து
அழகிய வலைகளையுடைய மீனவர்களின் கடற்கரையிலுள்ள அழகிய சிற்றூரிலுள்ள
கொடிய வாயினைக் கொண்ட பெண்கள் தூற்றுகின்ற பழிச்சொற்களால் கலங்கி,
முன்கையிலுள்ள வளையல்கள் கழன்றுவிழுகின்ற நம்முடன்
கடல்துறையும் துயில்கொள்ளாது இரவுப்பொழுதில்.
					மேல்
 




#251 பாலை மாமூலனார்
நாம் தலைவரிடம் அனுப்பிய தூதுவர்களும் சென்றுள்ளனர், தோள்களும் பூரிப்படையும்,
நம் கூந்தல் புரளும் ஒளிவீசும் நெற்றியில் பூத்த பசலையும் போய்விடும்;
விம்மிப்புடைக்கின்ற நமது அணிகலன்கள் நெகிழும்படி மெலிந்து வருத்தத்துடன்
அவரைப்பற்றிய நினைவு மிகுகின்ற பொறுக்கமுடியாத துயரத்தை அத் தூதுவர் சொல்லக் கேட்டால்,
நந்தன் என்பவன் குவித்துவைத்த பெருஞ்செல்வத்தையே பெற்றாலும் அந்த இடத்தில்
தங்கியிருக்கமாட்டார், வாழ்க, தோழியே! - வெற்றிக்கொடியினையும்
விரைகின்ற காற்றினைப் போன்ற ஓட்டம் உடைய அலங்காரம்செய்யப்பட்ட தேரினையுடைய கோசர் என்பார்
தமது மிக்க தொன்மைவாய்ந்த ஆலமரத்தின் எண்ணமுடியாத கிளைகளின் கீழ் அமைந்த மன்றத்தில்
இனிமையான ஒலியையுடைய போர்முரசங்கள் குறுந்தடியால் அடிக்கப்பெற்று முழங்க,
பகைவரின் போர்முனையை அழைத்த போது மோகூர் அரசன்
பணியாததினால் அவனோடு பகைமை கொண்டு
குதிரைகளைக் கொண்ட சேனையினையுடைய புதிய மோரியர் என்பவர்
தம் அலங்கரித்த தேர்ச்சக்கரங்கள் உருண்டுசெல்வதற்காக இடித்துச் சீர்செய்யப்பட்ட
ஒளிவீசும் வெண்மையான அருவியைக்கொண்ட கற்பாறை வழிக்கு அப்பால் உள்ள
குற்றமற்ற வெண்மையான கொம்புகளையுடைய தலைமைப் பண்புடைய யானையானது
தன் வாயிலிருந்து தப்பிய தீட்டுவதற்கு முடியாத நிறம் அமைந்த வலிய புலியை
பெரிய நிலம் குழிந்துபோகும்படி கொம்பினால் குத்திக்கொன்று, மறச்செருக்குடன்
தன்னைக் காக்கும் பிற யானைகள் இன்றித் தனியே தங்கியிருக்கும் தேக்குமரங்கள் நிறைந்த காடாகிய
நடந்து முடியாத நீண்ட வெளியில் சென்று,
அரத்தால் அறுத்த அழகிய வளையல்களின் நிலையை நெகிழச் செய்த நம் தலைவர் - (தங்கியிருக்கமாட்டார்)
					மேல்
#252 குறிஞ்சி நக்கண்ணையார்
தன்னால் தாக்கப்பட்ட விலங்கு தனக்கு இடப்பக்கம் விழுவதை அறியாத வெற்றியுள்ள வேட்டையையுடைய
புலியும் அஞ்சும்படியாக விருப்பத்துடன் வந்து யாளியானது
உயர்ந்த நெற்றியையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தில் அறைந்து வீழ்த்தி
அதன் வெண்மையான கொம்புகளைப் பறிக்கும் குளிர்ந்த மணங்கமழும் சோலையினையுடைய
பெரிய மலையின் சாரலின் வழியே, ஒரே ஒரு வேலை மட்டும் ஏந்திக்கொண்டு
தனியாக வருவதற்கு அவனுக்கும் பயமில்லை,
நீர் ஒழுகும் கண்ணையுடையவள் ஆகி பிரிவுத்துன்பம் வருத்த
தனியாக இருப்பதற்கு என்னாலும் முடியவில்லை;
நாம் என்ன செய்வோம், தோழியே!, இண்டையின்
நுனிப்பஞ்சு விரிந்த குளிர்ந்த மலர் உதிரும்படி நீரினை வீசி
பெய்தல் தொழிலையுடைய மழை பொழிந்த நடுநாள் இரவில்
காற்று வீசுவதால் எழும் அலைகள் துளிகளைத் தம் மேல் தூவிவிடும், சிறிய கரையினையுடைய
பெரிய குளத்தைக் காவல்காக்கும் காவலன் போல
தப்பிச்செல்லமுடியாதபடியான காவலை உடைய அன்னையும் தூக்கத்தை மறந்துவிட்டாள்.
					மேல்
#253 பாலை நக்கீரர்
’நாள்தோறும் பசலைநோய் மிகுந்துவருவதால் என்
உடலும் வேகமாகச் செத்துக்கொண்டுவருகிறது,
அன்னையும் என்மேல் முகத்தால் வெறுப்புக்காட்டுகிறாள், ஊரார் தூற்றும் பழிச்சொற்களோ
பொன்னால் செய்த பூவினை அணிந்த கொங்கரை விரட்டி
நாடுகள் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்டுவந்த பசும்பூண்பாண்டியன்
பொன் மிகுந்த தனது பெரிய கூடல் நகரமாகிய மதுரையில் வெற்றிக் களிப்பினால் ஆடிய
இனிய இசையுடன்கூடிய ஆரவாரத்திலும் பெரியதாக இருக்கிறது, இங்கு நான்
சில நாட்கள்கூட உயிரோடிருக்கமாட்டேன் போலும்’ என்று பலவாறாக நினைத்து
துயரில் அழுந்தவேண்டாம், வாழ்க, தோழியே!, வடநாட்டில்
மிகுந்த இருள்நிறைந்த நள்ளிரவில், அழகிய பசுக்கூட்டத்தைக் கவர்ந்துவர
பகைவரைச் சண்டையில் வென்று அவருடைய பலவான பசு இனங்களை ஓட்டியும்,
கூட்டமான கோவலரின் நீண்ட கூப்பிடும் ஒலியை அறிந்துகொண்டு
தன்னுடைய பசுக்கூட்டம் நிற்குமிடத்துக்கு வரும் அசைகின்ற திமிலையுடைய அழகிய காளையின்
சொரசொரப்பு தழுவிய பிடரியில் தொங்கும்படி கட்டப்பட்ட
அழகிய உள்துளையுள்ள அகன்ற மூங்கில் குழாயில் நிறைவாகச் செலுத்தி இட்ட
செறிவுள்ள் மிகுந்த உணவினையுடையவராகிய அக் கோவலருடைய தொழுவமாகிய கொட்டிலைக் கவர்ந்தும்
கன்றுகளையுடைய பெரிய பசுக்கூட்டத்தை தன்னூர் மன்றம் நிறையும்படி கொணரும்
தன் நேர் இல்லாத வலிமையான தோள்களையுடைய வடுகர் தலைவனாகிய
பெரிய புகழையுடைய எருமை என்பவனுடைய நல்ல நாட்டில் இருக்கும்
அயிரி என்னும் ஆற்றைக் கடந்துசென்றாரென்றாலும், மறதி இல்லாமல்
நினைத்துக்கொள்வார் அவர், மூங்கில் போன்ற தோள்களையும்
குரும்பை போன்ற மென்மையான முலைகளையும், அரும்பிய அழகுத்தேமலையும்
இடுப்பை மறைத்துத் தாழ்ந்த செழிப்பான கரிய கூந்தலையும் உடைய
மாகமாகிய வானத்தில் பொட்டு வைத்த
திங்களைப் போன்று விளங்கும் உன் அழகிய முகத்திலுள்ள
ஒளிரும் மத்தகமணி பதித்த பளிச்சிடும் குழையை மோதும் உன் கண் சிந்தும் பார்வையை - (மயர் இறந்து உள்ளுப)
					மேல்
#254 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நரை கலந்த நறுமணமுள்ள மென்மையான கூந்தலும்
செம்மையும் முதுமையும் உடைய செவிலித்தாய்மார் பலவாறு பாராட்டிக்கூற,
பொன்னால் செய்யப்பட்ட சதங்கைகள் தாமே அழகுபெறும்படியான சிவந்த அடிகள்
மணல் மிகுந்த முற்றமாகிய நிலத்தில் தடம்பதியும்படி செய்து,
வீட்டில் வசிக்கும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
தன் பெட்டைப்புறாவுடன் அங்குமிங்கும் சிறியதாகப் பறந்து  பின் மேலே எழுந்து பறக்க,
விளையாட்டுத் தோழியரான இளம்பெண்களைக் காணும்போதெல்லாம்
நம்மை நினைத்துப்பார்க்கும் அழகிய நெற்றியையுடைய நம் தலைவி
தனிமையுடன் தங்கியிருப்பதால் நெஞ்சம் கலங்குவதற்குக் காரணமான துன்பம் நீங்கும்படியாக,
நம் மன்னன் நமக்குக் கொடுத்த தொழிலை ஏற்று வேற்றுநாட்டில் வந்து தங்கி
அந்த வினையையும் முடித்துவிட்டோம், எனவே, நீயும்
கொட்டிலில் நின்றுகொண்டிருப்பதை வெறுத்துப்போன தம் தொழிலை நன்கு கற்ற குதிரைகளைப் பூட்டி
நல்ல அணிகலன்களை அணிந்த நீண்ட தேர்ச் சக்கரங்கள் செல்லுவதால்,
நுண்ணிய மின்னல் கொடி படர்வதைப் போன்ற அறுகம்புல் போன்ற பசுமையான பயிர்கள் வெட்டுப்படும்படி
செம்முல்லை வெண்முல்லையோடு கலந்து தண்ணென்று
நறுமணம் கமழும் பூக்கள் நெருக்கமாக மலர்ந்த முல்லைக்காட்டின்
நீண்ட இடம் பின்னால் போகத் தேரைச் செலுத்துவாய் என்று நான்
உனக்குச் சொல்லிய அளவில் காலம் தாழ்த்தாமல், விரைந்து
மணி மாலை அணிந்த குதிரையின் இயல்பினை அறிந்து
ஊருக்கு மிக அருகில் தேரைக் கொண்டுவந்துவிட்டாய், நாம் பெரிதும் மகிழும்படியாக.
					மேல்
#255 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உலகமே கிளர்ந்து எழுந்ததைப் போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது
புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு செல்ல,
இரவும் பகலும் ஓரிடத்திலும் தங்குதல் இல்லாமல்
வேகமாக வீசும் இயல்புள்ள காற்று அசைத்துச் செலுத்த
நாவாய் ஓட்டுபவன், உயர்ந்த கரையுள்ள மணல் செறிந்த அகன்ற துறையினில் இருக்கும்
மாடத்தின் மீதுள்ள ஒளிபொருந்திய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த,
பொருள் ஈட்டும் முயற்சிக்காக நம்மைப் பிரிந்துசென்ற காதலர் பல நாள்
கழிக்காமல் நமது மிகுந்த துன்பம் நீங்கும்படியாக
வந்துவிடுவார், தோழியே!; குளிர்ச்சியான மருதநிலமான
நீர் வந்து மோதுகின்ற நாட்டிலுள்ள நமது ஊரில்
கருவிளம்பூவோடு மாறுபட்ட குளிந்த புதரான பகன்றைச் செடியின்
மிக்க செழுமையுடைய மலர்களின் அக இதழைத் தொட்டு,
பலாக்காய் போல மேற்பகுதியையுடைய அழகிய பழத்தினையுடைய பாகல் கொடிகள்
கூதாளியின் முற்றிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில் கிடந்து அசையும்படி செய்து,
கொஞ்சமாவது அற உணர்வு இல்லாமல் நம்மை வருத்துகின்ற நிற்காமல் வீசும் வாடை
காவல் உள்ள மாடமான வீட்டில் இரவெல்லாம் வீசுவதினால்
திருத்தமான அணிகலன்கள் கழன்று விழுந்து, பெரிய அழகு கெட்டுப்போய்,
தோள்களில் வரிசையான் வளையல்கள் நெகிழ்ந்துபோய் மேலும் கீழும் நகர்கின்றன என்ற
செய்தியுடன் அவரிடம் தூதுசெல்லும் அன்புடையவர் நமக்குக் கிடைத்தால் - (அழி படர் அகல வருவர்)
					மேல்
#256 மருதம் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
ஒன்றோடொன்று பின்னிப் புதராய் மண்டிக்கிடக்கும் வள்ளையின் நீண்ட இலைச் செறிவில்
சோம்பிக்கிடக்கும் தூக்கத்தை வெறுத்த வளமான நகத்தைக் கொண்ட ஆமை
ஒலியெழுப்பும் பரல் கற்களின் மேல் சென்று அகன்ற நீர்த்துறையில்
பிளந்த வாய் நிறைய, பனங்கள்ளினை
அனுபவித்து அருந்துகின்றவர்கள் களிப்பினால் நடக்கும் தளர்ந்த நடையைப்போன்ற நடையுடன்
இனிய பெரிய வயல்களைக் கலக்கி, அடுத்திருக்கும்
ஆம்பலின் மெல்லிய இலைகளுக்குள்ளே ஒடுங்கிக்கிடக்கும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
பொய்சொல்ல வேண்டாம், உன் வஞ்சனையை நான் அறிவேன், உன் பரத்தமை
கையும்களவுமாய்ப் பிடிபட்டது உனக்குத் தெரியாது, நேற்று
கருமையான அழகிய மையுண்ட கண்களையுடைய உன் பரத்தையுடன் வைகைநதியின் 
அழகு பொருந்திய புது வெள்ளத்தில் உரிமையுடன் இன்பம் நுகர்ந்திட,
அதனை அந்தப் பரத்தையின் கூட்டம் மற்றவர்க்குத் தெரியாமல் மறைக்கவும், மறைக்கமுடியாமல்
ஊரார் தூற்றும் பெரும்பேச்சாய் ஆகிவிட்டது, காண்பதற்கு இனியதான,
தொன்மையான புகழ் நிறைந்த, பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும்
கரும்புகள் மிகவும் விளையும் தோட்டங்களையும் உடைய பெரும் பெயர் பெற்ற கள்ளூர் என்னும் ஊரில்
அழகிய நெற்றியையுடைய இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மைநலத்தினைக் கவர்ந்த
அறவொழுக்கம் இல்லாத ஒரு கயவன் பின்பு தான் அவளைத் தெரியாது என்ற
பண்பு இல்லாத கொடிய சபதமொழிகளை, அதனை அறிந்தோரின் சாட்சிகளை விசாரித்து அறிந்து
தளிர்கள் நிறைந்த பெரிய மரத்தின் கிளையில் இறுகக் கட்டி
அவன் தலையில் சுண்ணாம்பைக் கொட்டியபோது
சிறப்பு மிக்க அந்தக் கூட்டத்தில் எழுந்த ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியது.
					மேல்
#257 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
வேனில் காலத்துப் பாதிரி மரத்தின் வளைவான பெரிய மலர்களின்
தேன் பொருந்திய வாடிப்போன மலர் மணங்கமழுகின்ற பகல்பொழுதில், இந்தப் பாலைநில வெளியில்
பரல் கற்கள் நிறைந்த சிலம்பினை அணிந்த சிறிய அடிகள் சிவந்துபோகுமாறு
என்னுடன் ஒரே வழியில் நடந்து வருவதற்கு உன்னுடைய
பொலிவுள்ள கூந்தலை நெருக்கமாக வாரிவிட்டு 
அரும்புகள் இல்லாமல் மலர்ந்த அழகிய பூக்களையுடைய வெண்கடம்பமரத்தின்
வண்டுகள் மொய்க்கும் மலர்களைத் தொடுத்து சூடிக்கொண்ட உன்
தேன் பொருந்திய கூந்தலை மொய்க்கும் சிறிய பலவான
வண்டுகளை விரட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்வதையும் அறியாமல், அழகு பொருந்த
அழகு உண்டாகும்படி, நுண்ணிய திரண்ட ஒளிவீசும் வளையல்கள் ஒலிக்கின்ற முன்கையையுடைய
மென்மையான மூட்டு அமைந்த மூங்கில் போன்ற தோள்களைச் சிறப்புற வீசி
நடப்பதற்கு வலிமையுடையவளாய் இருக்கின்றாய்; கள்வர்களின்
பகை மிக்க கிளைத்துச் செல்லும் வழிகளில், வழிச்செல்வோர் தாம் செல்லுகின்ற பாதையைக் காணும்படியாக
ஏணியின் மேற்பகுதியைச் சார்த்திய கிளைத்துப் பிரியும் தளிர்களையுடைய யா மரத்தின்
நாரினையுடைய அடிமரத்தின் பக்கத்தில் நீர் கசியும்படி உரித்து
களிறுகள் சுவைத்துப்போட்ட சக்கையாகிய சுள்ளிகள்
தம் தொழிலையன்றி வேறு கற்காத உப்பு வணிகர்க்குத் தீமூட்டுவதற்குரிய பொருள் ஆகும்
வழிப்போக்கர் மிகவும் துன்பம் அடைவதற்குரிய இடமான அவ்விடத்தில், புன்மையான கொம்புகளையுடைய
புதர்கள் படர்ந்த புற்றில் இரவில் உணவை விரும்பி
வெண்மையான பாம்புகள் நெளியும்படியாகக் கைகளால் பிடிக்கும்
கரடிக் குட்டிகளையுடைய மலை வழியே- (நடப்பதற்கு வலிமையுடையவளாய் இருக்கின்றாய்)
					மேல்
#258 குறிஞ்சி பரணர்
நன்னன் உதியன் என்ற மன்னனின் நெருங்க முடியாத காவலையுடைய பாழி என்னும் இடத்தில்
தொன்மையாகப் பண்பு முதிர்ந்துவந்த வேளிர் மன்னர்கள் பாதுகாப்பாக வைத்துள்ள
பொன்னைக் காட்டிலும் பெறுவதற்கு அரியவள் என்பதை நன்கு அறிந்திருந்தும், அப்படிப்பட்டவளை
நெருங்கவேண்டாம் என்று நான் சொன்னாலும் அதற்கு உடன்படமாட்டாய்,
குளிர்ந்த மேகங்கள் தவழும் நீர்வீழ்ச்சி இருக்கும் அகன்ற இடத்தையுடைய
கடுமையான காற்று வீசும் நெடிய பெரிய குன்றினில்
ஒருபோதும் அகலாத இருளையுடைய குகையில் ஒளியின்றி மறையும் மாணிக்கம் போல
நீயும் ஒளியிழந்து ஒழிவாயாக, வாழ்க, நெஞ்சமே! ஒவ்வொரு நாளும்
மென்மையான இயல்பினையுடைய இளைய தலைவியின் அழகிய பெண்மை உள்ளத்தை மிகவும் விரும்பி,
பாம்புகள் இரைதேடித் திரியும் அச்சம் வருகின்ற ஒடுங்கிய வழியில்
இரவினில் சென்றும் அவளைக் காணப்பெறவில்லை, உன்னைப் பார்த்தவர்க்கு உன்மேல் இரக்கம் உண்டாக,
பொலிவிழந்த கண்களையுடையவனாய் தனிமை உணர்ச்சியால் வருந்தி, உலகத்தில்
உள்ளவர்க்கெல்லாம் பெரிய நகைப்பு உண்டாக
காம நோயானது எல்லைகடந்து மிகுந்து நிற்க
கொஞ்சமும் குறையாத பொறுப்பதற்கு அரிய துன்பத்தினை நமக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாய்.
					மேல்
#259 பாலை கயமனார்
வேல்களும் நெய்பூசப்பட்டு ஒளிவீசுகின்றன, ஏவலாளரும் புறப்பட்டுவிட்டார்கள்,
மாலைகளும் கட்டப்பட்டுவிட்டன, தழையுடைகளும் தொடுக்கப்பட்டுவிட்டன,
நிலமானது நீர் இல்லாத வெம்மை நீங்க
மழைநீர் பொழிந்து காய்ந்துபோன இலைகளை உதிர்த்துச்
சிறிய தளிர்களை ஈன்றன மரங்கள்; மணமுள்ள மலர்களைச்
சூடியது போலத் தோன்றி, அம் மரங்கள் பலவும் ஒருசேர
தேன் துளிக்கும்படி செறியப்பட்டன பொழில்கள்; காடுகளும்
மிகவும் நல்லன ஆயின, பனிக்காலம் கழிந்த அடுத்த நாளாகிய இளவேனிலில்
பால் என்று சொல்லும்படியாகப் பரவிய நிலவொளியினைக் கொண்ட மாலைப்
பொழுதானது தூதாக வந்தது, ஆதலால் நீயும்
கலங்காத மனத்தை உடையவள் ஆகி என் சொல்லை
விரும்பி ஏற்றுக்கொள்வாயாக, என் உள்ளம் விரும்பும் தகுதியை உடையவளே!
மேடையில் நாம் வளர்த்து வருகின்ற பூந்தொட்டிகள் நீர் இன்றி வாடிப்போனாலும், வயலைக்கொடி வாடினாலும்
நொச்சியின் மெல்லிய கிளைகளிலுள்ள வளைந்த பூங்கொத்துக்கள் உலர்ந்துபோனாலும்
உன்னைக்காட்டிலும் அறியாமையுடையவளாகி, மிகவும் உன்னை விரும்பிய
அன்னை அடையும்துன்பத்தை மனத்தில்கொண்டும், உன் தமையன்மாரின்
புலியைப் போன்ற அச்சம்தரும் தலைமைத் தன்மையையை நோக்கியும் (கலங்காத மனத்தை உடையவள் ஆகி)
உன் காதலுடன் போகத்துணிவாய், இன்னும் உன் முலைகள் என் மார்பில் தோயும்படி என்னை அணைத்துக்கொள்.
					மேல்
#260 நெய்தல் மோசி கரையனார்
ஞாயிறு தன் வெப்பம் தணிந்துபோக, மலைகள் மாலை வெளிச்சத்தால் ஒளிபெற்றுத் திகழ,
வண்டின் கூட்டம் மலர்களில் பாய்ந்து தேன் குடிக்க, உயரத்தில்
தாழைகளையுடைய கடற்கரைச் சோலையில் நாரையினங்கள் ஒலிக்க,
அலைகளின் ஒலிகள் அடங்கிப்போக, மீன்படகுகள் தம் மீன்பிடிக்கும் தொழிலை மறக்க,
கடற்கரையில் விளையாடிய நண்டுகள் தம் வளைகளுக்குள் செல்ல,
செவ்வானம் தோன்ற, தன் துணையைச் சேர்ந்திருக்கும் அன்றில் பறவை
மணல் மேட்டிலுள்ள பனைமரத்தில் உள் மடலில் சேர்ந்து தங்க,
கழியில் பூத்த மலர்கள் தங்கள் மணக்கும் இதழ்களைக் குவித்துக்கொள்ள, பொழில் சூழ்ந்த வீட்டில் உள்ள
புன்னையின் மணமுள்ள மலர்கள் பொன் நிறத்தினைக் கொண்டு மலர,
பகற்பொழுதை மெல்ல மெல்லப் போக்கி, இரவு வந்தபோது
இவள் எந்த நிலையை அடைவாளோ? இடத்தை விட்டு நீங்காமல்
முதிய மரத்தில் இருக்கும் முழங்கும் வாயினையுடைய பேராந்தை
வேகமாகக் குழறியவாறு ஒலியெழுப்பும் பேய்கள் நடமாடும் நள்ளிரவில்
மனத்தை உருகச்செய்யும் துன்பத்தினைச் செய்த
அன்பில்லாதவன் ஒருவனுடைய அறிவுடைய சொற்களை உண்மை என்று விரும்பினேனே!
					மேல்
 




#261 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
காட்டில் மலர்ந்துள்ள பாதிரியின் கருமையான புறவிதழையுடைய ஒளிவிடும் பூக்களை
வேனிற்காலத்துக் காட்டுமல்லிகை மலர்களுடன் கலந்து, காண்பதற்கு இனிமையுண்டாகும்படி
சிலவான, ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கூந்தலில் செருகி, மென்மையான கொத்துக்களிலுள்ள
தேன் பாயும் மரா மரத்தின் மலர்களைச் சூடி, பெரிய திரண்ட
ஒளிவீசும் வளையல்கள் ஒலிக்கக் கையை வீசி, சிலம்புகள் கலகலக்க,
சிறிதான மென்மையான எட்டு எடுத்துவைத்து மெல்ல மெல்ல நடந்து, உன்
அழகுபடச் சிறந்த முதுகினை நான் காண்பேன், சிறிதுதூரம்
முன்னால் நடந்து செல் என்று நான் சொல்ல, அவ்வாறு செல்வதற்கு  நாணம் கொண்டு வேகமாக
மானைப் போன்ற பார்வையுடன் மடப்பம் தோன்றச் சிறிது விலகி
நின்று தலைகுனிந்து நின்றாள், அதனைக் கண்டு
நானும் முன்பு போல் முன்னே செல்வதைக் கைவிட்டவனாய், அவ்விடமுள்ள
கடக்கமுடியாத பாலைநிலத்தில் தங்கியிருந்தோம், பெரிய புலியானது
களிற்றினைக் கொன்று முழங்கும் ஓசையினையும் ,கள்ளுண்ட களிப்பு மிகுந்து
வில்லையுடைய எயினரின் குடியிருப்பில் அவர் எழுப்பும்
வலிய முகப்பினையுடைய கடிய உடுக்கையின் ஒலியினையும் கேட்டு - (த் தங்கியிருந்தோம்)
					மேல்
#262 குறிஞ்சி பரணர்
பழமைப்பட்டுப்போன பசுமையான காட்டில் பின்னிக்கிடக்கின்ற கொடிகளை மிதித்துச் சிதைத்து,
எருதுகள் பூட்டிய பல ஏர்களால் உழவுசெய்யப்பட்ட சிவந்த புன்செய் நிலத்தில்
எரு இடுதல் முதலிய பல செயல்முறைகள் நிரம்பப்பெற்று, களையெடுத்தல் போன்ற செயல்களால் தழைத்து
பச்சை இலைகள் நிறைந்த பயற்றங்கொடியில், பசு புகுந்து மேய்ந்ததற்காக,
வாய்மை மிக்க தன் தந்தையை இரக்கமில்லாமல் கண்களைப் பிடுங்கி,
பழமை வாய்ந்த ஊரிலுள்ள கோசர் எனப்படுவார் துன்புறுத்திய கொடுமை காரணமாக
உண்கலத்தில் இட்டு உண்ணாமலும், தூய்மையான ஆடைகளை உடுக்காமலும்
சினத்தினால் மேற்கொண்ட விரதத்திலிருந்து மாறாமலும்
வீரம் பொருந்திய படையினையும், வெற்றி பொருந்திய அரணையும் கொண்ட
போர்த்திறம் வாய்ந்த நல்ல குதிரைகளையுடைய திதியன் என்பவனிடம் கூறி, அந்தக் கோசரின்
இனிய உயிர்களைப் போக்கக் கண்டு, கோபம் தணிந்துபோன
அன்னிமிஞிலி போல உடம்பு பூரித்து
குறையாத மகிழ்ச்சியுடையவர் ஆயினோம், பூக்களை நிறையக் கொண்டு
அருவி ஆரவாராமாய் ஒலிக்கும் சுனைகள் விளங்கும் மலைச்சாரலில்
நுண்ணிய பல நீர்த்துளிகள் மலையின் மேலுள்ள புதர்களை நனைக்கும்
வண்டுகள் மொய்க்கும் மதுவினையும், ஈகையால் எய்தும் மகிழ்ச்சியையும் உடைய பேகன் என்பவனின்
மேகங்கள் தவழும் பெரிய மலையைப் போல நறுமணம் கமழ்ந்தவளாய்
அழகிய இனிய சொல்லையுடைய நம் தலைவி வந்தபொழுது - (ஆனா உவகையேம் ஆயினெம்)
					மேல்
#263 பாலை கருவூர் கண்ணம்பாளனார்
முன்னும் பின்னும் அலையாடும் அலைகளையுடைய பெரிய கடலில் உலகமக்கள் தன்னை வணங்க எழுந்து
ஒளிவீசும் கதிர்கள் விரியப்பெற்ற அச்சம் பொருந்திய ஞாயிறு
குளங்கள் தம்மிடத்தில் உள்ள நீர் வற்றிப்போகப் பரந்து, நல்ல நிலங்களின்
விளைச்சல் கெடும்படியாக அழித்த பசுமை அற்ற இக் காலத்தில்,
வெவ்வேறு திசைகளை நோக்கிச் செல்லும் பலவான கிளைவழிகளையுடைய அச்சம் வருகின்ற அகன்ற காட்டில்
வழியே செல்லும் புதியவர்கள் வருகிறார்களா என்பதனைக் காண்பதற்கு
வில்தொழிலில் வன்மையுடைய ஆண்கள் மேலே மறைந்து
உயரமாக நிற்கும் யாமரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் கடப்பதற்கு அரிய பாலைவெளியில்
என் மகளை அழைத்துக்கொண்டு சென்ற மனவுரம் மிக்க இளைஞனுக்கு -
அவள் அவன்மேல் கொண்டுள்ள அன்பின் உறுதியை அறிந்திருப்பேனென்றால், அந்தோ!
ஒளிவீசும் வேலேந்திய சேரமன்னன் மிகவும் பேணிக் காக்கும்
வஞ்சி நகரத்தைப் போன்ற என் வளப்பமுடைய மாளிகை சிறக்கும்படியாக
இனிமையாக மணமுடித்துவைத்திருப்பேன், சிறிதும் வெறுப்பில்லாமல்
அழகிய நெற்றியால் பொலிவுபெற்ற என் இளமகளின்
வளர்ந்து வரும் முலையாகிய முற்றத்தில் இன்பமாகத் துயிலும்படி - (இனிமையாக மணமுடித்துவைத்திருப்பேன்)
					மேல்
#264 முல்லை உம்ப காட்டு இளங்கண்ணனார்
மேகம் இல்லாத வானத்தில் விண்மீன்கள் பூத்து அழகுசெய்ததைப் போல
தழை நிறைந்த முசுண்டையின் மலர்கள் வெண்மையாகப் பூக்க,
வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த குலையிலுள்ள சிறந்த பூக்களை
நிறையச் சூடிக்கொண்ட கிளைத்த கோலினையுடைய இடையர்கள்
பகற்பொழுதில் பெய்த மழையால் வருந்திய பல பசுக்களைக்கொண்ட கூட்டத்தோடு
நீர் விளங்கும் தலைமாலையினராய் ஊரை நோக்கி வர,
மிகவும் தொலைவிலே உள்ள மேகங்கள் நீர்த்துளிகள் மிகுதியாகப் பெய்தலால்
அழகைத்தருகின்ற விரைவான நீர் தெருக்கள்தோறூம் பாய்ந்தோட,
பெரிய இடிமுழக்கத்தோடு மிகவும் (மேகங்கள்) ஒன்றோடொன்று கலந்து
குளிர்காலம் நிலைபெற்றது; நம் தலைவர்
நமது துன்ப நிலையை அறியாராயினும் நாம் இறந்துவிட்டால் இனி அவர் எய்தக்கூடிய நிலையை
அறிந்திருக்கமாட்டாரா? நிமிர்ந்த நடையையுடைய,
மிகுந்த சினத்தினையுடைய யானைகள் இரவிலே சூழ்ந்துநிற்க
அச்சம் உண்டாகத் தங்கியிருக்கும் சேனையையுடைய
கொடிய சினத்தையுடைய அரசனின் பாசறையில் இருப்பவராகிய அவர் - (தம் நிலை அறிந்தனர்-கொல்லோ)
					மேல்
#265 பாலை மாமூலனார்
புகை போல மிகுந்து பரந்து, அகன்ற வானத்தில் உயர்ந்து
பனி படர்ந்த நெருப்புப் பிழம்பு போலக் காணப்படும்
இமயம் என்னும் செம்மையான மலையினைப் போன்றதோ?
பல்வேறு புகழ்களால் நிறைந்த, வெல்லும் பேராற்றல் உடைய நந்தர் என்னும் அரசமரபினர்
சிறப்பு மிக்க பாடலிபுரத்தில் கூடி, கங்கை ஆற்றின்
நீரின் அடியில் மறைத்துவைத்து மறைந்துபோன செல்வமோ?
இவ்விரண்டும் இல்லையென்றால் பின்னர் வேறு எத்தகையதோ? வாழ்க, தோழியே!, பிரகாசமான ஒளிவாய்ந்த
நிழலில் கிடந்த கருமணல் போன்று அலையலையான கூந்தலினையும்
குழலோசை போன்ற குரலினையும் உடைய பாவை போன்ற நீ வருத்தமுற, நம்மைத் துறந்து
நமது ஒளிவிடும் வளையல்கள் நெகிழ்ந்து வீழ மெலிந்து, துன்பத்துடன்
கண்ணீர் சொரிந்து நாம் இங்கே தனித்திருக்க, குன்றினை அடைந்து,
இனிதாக முழங்கும் எழுச்சியுள்ள எருதினைக் கொன்று, உயர்வான
கொழுப்புடன் கூடிய சிறந்த தசையினை நெருப்பில் வைத்துச் சுட்டு எடுத்து
கண்டவரை வருத்தும் காண்பதற்கு அரிய இயல்பினையுடைய பேய்களைப் போல
வெளிறிய அந்த ஊனைத் தின்றதனாலுண்டான நீர் வேட்கை நீங்க
குற்றம் இல்லாமல் விளைந்த தோப்பிக்கள்ளைக் குடித்து
வளைந்த வலிய வில்லையும், கொடிய பார்வையையும் உடைய மறவர்கள்
புலால் நாறும் கையினையும், கழுவாத வாயினையும் உடையவராய்
இடைவிடாமல் விட்டுவிட்டு ஒலிக்கும் குடுமியையுடைய கோட்டானோடு
வெண்கடம்பு மரங்களையுடைய அழகிய சிறிய ஊர்ப்பக்கத்தில் குரவைக் கூத்தாடுகின்ற இடமான
சிவந்த நெற்றியையுடைய யானைகள் வாழும் வேங்கடமலையைப் பொருந்தியுள்ள
கொடிய போர்முனைகள் அமைந்த கடந்துசெல்வதற்கு அரிய பாலை வழியைக் கடந்து சென்ற நம் தலைவர்
நம்மைக்காட்டிலும் சிறந்ததாகக் கருதிய பொருள் - (வேறு எத்தகையதோ?)
					மேல்
#266 மருதம் பரணர்
கரையின் உச்சியைத் தொடும்படியாக உயர்ந்த நீண்ட பெரிய பரப்பினையுடைய
மக்கள் அந்திவிழா எடுத்து வழிபடும் புதிய வெள்ளத்தில், நேற்று
வலிமை மிகுந்த களிற்றினைப் போல தெப்பத்தின் தலைப்பகுதியைத் தழுவிக்கொண்டு
நரந்தம்புல் மணக்கும் திரண்ட கரிய கூந்தலையுடைய
உனக்குத் துணையான இளம் மகளிரோடு நீராட்டுக்குரிய அணிகலன்களை அணிந்து
நீரில் அங்குமிங்கும் சென்று விளையாடிய மிக்க அழகினையுடைய குளிர்ந்த கண்கள்
உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவரின் பார்வையிலிருந்து விலகாதவனாய்
காமம் அளவுகடந்து மிகுவதால் நாணத்தை இழந்து
நீ அவர்களுடன் விளையாடினாய் என்று ஊர்மக்கள் சொல்லுகிறார்கள், அதுதானும்
யாழின் இசையையுடைய தெருக்களையுடைய நீடூர் என்னும் ஊரினைஉடையவனாகிய
குறிதப்பாமல் வாய்க்கும் வாளினையுடைய எவ்வி என்பவனுடைய ஏவலை மேற்கொள்ளாத பகைவராகிய
புதிய பூண்களை அணிந்த மாற்றாரின் மிக்க வலிமையை அழித்த
அரிமணவாயில் உறத்தூர் ஆகிய அவ்விடத்தில்
அவனுடைய படையோர்க்கு அளித்த கள்ளுடன் கூடிய மிகுந்த சோற்றினால் பகலில் எழுந்த ஆரவாரம் போல
மிகவும் பெரிதான பழிச்சொல்லுடன் தூற்றுவது ஆகிவிட்டது, இப்பொழுது அதுதானும்
எனக்குத் துன்பம் தருவதாய் இல்லை; பக்கதிலுள்ள
வயலில் உழுவோர் செருக்கு மிகுந்து எழுப்பிய
ஏர்மங்கலப் பாட்டின் ஒலிக்கின்ற இசைக்கு அஞ்சிப் பறந்த மயில்
தெய்வங்களையுடைய கோட்டம் பொலிவுபெற வந்து தங்கும்
அழகிய மணி விளக்கு ஒளிரும் திருச்சீரலைவாயில் எழுந்தருளியிருக்கும்
போர்வன்மை மிக்க முருகக்கடவுளைச் சுட்டி முன்பு நீ செய்துகொடுத்த சத்தியம்தான் துன்பம் தருகிறது..
					மேல்
#267 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம்முடைய நெஞ்சம் உருகும்படியானவற்றைக் கூறி, காதலால் நம்முடன் இரண்டறக் கலந்து,
என்றென்றும் பிரியாதிருப்பதற்குரிய சூள் உரைத்தவராகிய நம் தலைவர், பொருளீட்டும் வினையை விரும்பி
இப்போது மனம் மாறுபட்டதற்குக் காரணம் என்னவோ என்று பலவகையிலும் ஆராய்ந்து
இவ்வாறு வருத்தப்படுவதை நீ தவிர்ப்பாயாக; கிளைகளில் மோதி
உதிரச்செய்த மேலைக்காற்று, அச்சம் வரக்கூடிய பாலைக் காட்டில்
காட்டுப்பூனையின் அடியைப் போன்ற குவிந்த அரும்புகளையுடைய இலுப்பையின்
தந்தத்தினைக் கடைந்ததைப் போன்ற மிகுதியான வெண்ணிறப் பூக்களை
மயிர் அடர்ந்த காலினையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண,
மை பூசியது போன்ற கருமையான முகத்தையுடைய ஆண்குரங்கு
பசுமையற்ற நீண்ட மூங்கிலில் பாய்வதால், விரைவாக
மூங்கிலில் விளைந்த வெண்ணெல் வெப்பம் மிகுந்த பாறையில் உதிர்ந்து பரந்து,
நகத்தை நெரிக்கின்ற ஓசையைப் போன்ற ஓசையுடன் பொங்கிப் பொரிந்திடும்
உயர்ந்த மலைகளினூடே செல்லும் கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து சென்றவர்
நீ கூறும் தவறுகளைச் செய்தவர் அல்லர், எந்நாளும்
தம்மை விரும்பும் காதலரைத் தம் பிடிப்புக்குள் வைத்துக்கொள்ள இயலாத சிறந்த வேலைப்பாடு அமைந்த
வாளால் அறுத்து அழகுசெய்யப்பட்ட ஒளிபொருந்திய வளையல்களை நெகிழவிட்ட
நம் தோள்களே தவறுடையன.
					மேல்
#268 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
நான் கூறுவதை ஆராய்ந்து தெரிந்துகொள், வாழ்க, தோழியே! புள்ளிகளையும் வரிகளையுமுடைய
பொலிவுள்ள நெற்றியையுடைய யானையோடு புலி போரிட்டதால் குழைந்துபோன
குருதி கலந்த சிவந்த களத்தின் புலால் நாற்றம் நீங்க, வேங்கை மரத்தின்
பொன் நிறம் பொருந்திய மலர்களின் மணம் காட்டுமல்லிகை மலர்களுடன் சேர்ந்து மாற்றுகின்ற
பெரிய மலைநாட்டைச் சேர்ந்த தலைவனோடு குற்றம் ஒருசிறிதும் இல்லையான
அன்பு கலந்த நட்பு உனக்கு உண்டு என்றால்
அது மிக நல்லது, அதனை நீ ஆராயாமல் கூறுகின்றாய்
நாணமும் நட்பும் ஆகிய இரண்டும் இல்லாதவர்களைத் தேடிப்பார்த்தால்
என்னையன்றி வேறு யாரும் இருக்கமாட்டார்கள், இவ்வுலகத்தில்;
இனிய உயிர் போன்ற உன்னோடும் கலந்து ஆராயாமலும்,
முளைகளாலே அழகுபெற்ற மூங்கிலைப் போன்று சுற்றம்சூழப் பொலிவுபெற்று வாழ்கின்ற
பெரும் புகழையுடைய எம் தந்தையின் அரிய காவலைத் தாண்டி,
ஒன்றைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருந்தாத நல்ல செயலைச் செய்ததால்
அதன் காரணமாக உண்மை ஆகாத பெரும் பழியை நான் அடைந்துள்ளேன்.
					மேல்
#269 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வளையல்கள் நெகிழாமல் தோள்களில் மீண்டும் ஏறிச் செறியட்டும், உன் துன்பமும் தீர்வதாக,
நெளிவான கரிய கூந்தலில் மாலையையும் சூடிக்கொள்க,
காளை மாட்டையுடைய பசுக்கூட்டம் மீண்டு வரும்படி, புறங்கொடாமல்
செறிந்த சுரையையுடைய வெண்மையான வேலையுடைய வெட்சிவீரரைத் தடுத்துப் போரிட்டு மாய்ந்த
அஞ்சாமையுடைய கரந்தை வீரரின் நல்ல புகழை நிலைநிறுத்தும்படி
பெண்யானை படுத்துக்கிடந்ததைப் போன்ற சிறிய குன்றுகளின் பக்கத்தில்
நட்டுவைத்ததைப் போன்று இயற்கையிலேயே அமைந்த நீண்ட கற்களின்
அகன்ற இடத்தில் செதுக்கப்பட்ட பல மறவர்களின் உருவங்களை மங்கல நீராட்டி
நறுமணங்கமழும் மஞ்சளை அவற்றின் ஈரமான வெளிப்பக்கத்தில் பொலிவுபடப் பூசி,
அம்பினைக் கொண்டு அறுத்த ஆத்தி மரத்தினை உரித்த பட்டையாகிய நாரினால்
சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்துச் செய்த தலைமாலையை
வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கச் சூட்டி, கழலினை அணிந்த காலினையுடைய
வீரர்கள் தம் ஊருக்குத் திரும்பிச் செல்லும் அரிய காட்டைக் கடந்து சென்றவரான நம் தலைவர்,
தைத் திங்களில் இன்னும் எஞ்சியிருக்கும் குளிர்ந்த மழையையுடைய கடைசி நாட்களில்
பொன்னாலான காசுகளை வரிசையாகக் கோத்த பக்கம் உயர்ந்த அல்குலில்
நல்ல நிறம்வாய்ந்த பூங்கொத்துக்கள் தழையுடன் கூடி அசைய
இசை உள்ளே ஊர்ந்து மிகுகின்ற பெரிய வாயாகிய வட்டத்தையுடைய
ஊதுகொம்பிலிருந்து எழுந்த தெளிவான இசை ஒலிக்க,
தமது மணல்விளையாட்டுப் பாவையை நீர் உண்ணும் துறையில் கொண்டுவந்து வைத்து
அழகிய நெற்றியையுடைய இளம்பெண்கள் குரவைக் கூத்தாடும்
கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய
வாணன் என்பவனின் சிற்றூரிலுள்ள வளைந்த கதிர்களையுடைய நெல்லினையுடைய
புதிய வருவாயையுடைய குளிர்ந்த மருதநிலத்தினில் அரும்புகள் மலர்ந்த
ஒளிவீசும் செங்கழுநீர் போன்ற உன்னுடைய
கண்களிலிருந்து வரும் நீரைத் துடைப்பதற்கு விரைந்து வந்துவிட்டார்.
					மேல்
#270 நெய்தல் சாகலாசனார்
பெரிய கழியில் மலர்ந்த வளம் வாய்ந்த இதழ்களையுடைய நீலப்பூக்களை,
புலால் நாறும் தெருக்களையுடைய சிற்றூராகிய பாக்கத்தில் இருக்கும்
கூட்டமான மீன்களை வேட்டையாடும் பரதவர் ஞாழல் பூக்களுடன் கலந்து அணிந்துகொள்ளும்
மென்னிலமாகிய நெய்தல் நிலத்துத் தலைவனே! இவள் தோள்கள் மெலிந்துபோய்விட்டன,
சிவந்த இறா மீன்கள் கலக்கிய நுரையுடன் கூடிய திவலை பொருந்திய அலைகள்
பருத்த அடியினைக்கொண்ட புன்னை மரத்தின் வளைவான கிளைகளில் தோய்கின்ற
சோலையை அடுத்த அழகிய பெரிய துறையை நோக்கி, இவள்
கொய்யப்பட்ட பிடரி மயிரினையுடைய குதிரைகளையுடைய கையால் வழங்கும் வள்ளன்மையுடைய அரசனான
நல்ல தேரினையுடைய குட்டுவனின் கழுமலம் என்ற ஊரினைப் போன்ற
அழகிய மாமை நிறமுடைய மேனி தன் பழைய அழகு கெட்டுப்போகும்படி
தூங்காத கண்களையுடையவளாய் மனம் கலங்குகிறாள், நீதான்
தெய்வம் உறையும் மரத்திலுள்ள முட்கள் செறிந்த கூட்டில்
சேவலுடன் சேர்ந்திருக்காத சிறிய கரிய அன்றில்பேடை
துன்பமுற்று வருந்தும் இரவிலும்
உனது ஊருக்குச் சென்றுவிட எண்ணுகிறாய், நான் பெரிதும் வருந்துகிறேன்.
					மேல்
 



#271 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
புள்ளிகளையும், வரிகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண்புறா
தனது சிறிய புன்மையான பெடையுடன் தொலைவில் உள்ள இடத்திற்குப்போய் அங்குக்
காற்றால் அரிக்கப்பட்ட மணலையுடைய வழியில் பரல் கற்களை ஆராய்ந்து உண்டு,
வரிகளையுடைய மரல் செடி வாடியிருக்கும் மழை வறண்டு போன அகன்ற இடத்தையுடைய
சிறிய குன்றுகளின் பக்கத்திலுள்ள தீங்கு நிறைந்த பாலைவழிகளைக் கடந்து
நெடுந்தொலைவு வந்ததால் நீர் வேட்கை மிக்க புதிய வழிப்போக்கரின்
போகும் உயிரைப் போகாமல் நிறுத்திய சுவையுடைய காய்களைக் கொண்ட நெல்லி மரத்தின்
பல காய்களைக் கொண்ட அழகிய கிளைகளிலிருந்து ஒலியெழுப்பும் கொடிய வழியில்
நீர் சென்று அவ்விடத்தவர் ஆகி உறுதியாக நின்று ஈட்டிக்கொண்டுவரும்
நிலையில்லாத பொருளை நினைத்திருக்கிறீர் என்றால்
அவ்வாறு நினைத்த உமது பொருளீட்டும் முயற்சி வலிமையுள்ளதாகவே இருக்கட்டும்; இவளுக்கு
கள்ளுண்ட களிப்பு மிக்க கள்ளில் என்ற ஊரையும் நல்ல தேரையும் உடைய அவியன் என்பவனுடைய
அசைகின்ற இயல்பையுடைய வெண்முகிலை அணிந்துகொண்டாற்போல் தோன்றுகின்ற
பலாப்பழங்கள் தொங்குகின்ற மலைப் பிளவுகளில் வளர்ந்த மூங்கிலின்
இரு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதியைப் போல் இருக்கும் நீண்ட மென்மையான பருத்த தோளின்
திருத்தமான திரண்ட அழகிய வளைகள் நெகிழ்ந்து விழுந்தால்
அதற்கு மருந்தும் உண்டோ, நீ பிரிந்து வாழும் நாட்டில்?
					மேல்
#272 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
பெரிய புலியை வென்ற பெரிய கையினையுடைய யானையின்
புலால் நாறும் புள்ளிகளையுடைய நெற்றியைக் கழுவ, இரவில்
அருவிநீரை வழங்கிய தெய்வத்தையுடைய நெடிய உச்சியினையுடைய மலையின்
அச்சம்தரும் பிளவுகளாகிய குகைகளிலுள்ள அகற்றுவதற்கு அரிய இருளையும் போக்கிய
மின்னலைப் போல ஒளிருகின்ற வேல் தான் செல்லுகின்ற வழியினை விளக்கமாய்க் காட்ட,
தனியாக வந்து பனி தன்னை வருத்துவதை வெறுக்காதவனாய்,
நீர் ஒழுகுகின்ற பக்கமான பிறர் செல்லுவதற்கு அரிய இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள
காட்டுமல்லிகை மலரினோடு சேர்ந்த கூதளஞ்செடியின் மலர்களால் செய்த தலைமாலையின்
விட்டு நீங்காத மணத்தினை அசைகின்ற காற்று வெளிப்படுத்த,
குத்துப்பாறைக்கு அண்மையில் உள்ள மிளகுக் கொடிகள் ஏறிப்படர்ந்த தோட்டத்தையுடைய
குறுகலாக இறங்கும் குடிசையாகிய நம் வீட்டில் நுழையும்
உடல் பூரிக்கும் மகிழ்ச்சியுடன் இருப்பவனின் அந்த நிலையைக் கண்டு
முருகனே நம் வீட்டில் எழுந்தருளியிருக்கிறான் என்று எண்ணி புகழுரை கூறி
நல்ல நிறமுள்ள செந்தினையை நீரோடு தூவி,
அன்னையானவள் முருகனுக்குரிய பாடல்களைப் பாடித் தொழுது வணங்கத் தொடங்கிவிட்டாள், ஐயோ!
இனி என்ன நடக்குமோ? பொன்னைப் போல
மலர்ந்துள்ள வேங்கை மரத்தின் ஆடுகின்ற கிளைகள் பொலிவடையுமாறு
நீலமணி போன்ற நிறமுடைய மயில்கள் ஏறியிருந்து கூவும்
அழகிய மலைநாட்டைச் சேர்ந்தவனாகிய நம் தலைவனுடன் கொண்டுள்ள நம் நட்பு
					மேல்
#273 பாலை ஔவையார்
வீசி எறியப்பட்டதால் வானத்தில் வேகமாக எழுந்த கூதள மலர் மாலையைப் போல
இளமையான கால்களையுடைய வெள்ளைக் கொக்குகள் தாவும் சிறகினை வளைத்து
கடலில் வளம் பொருந்திய இடத்தில் காலைப்பொழுதில் பரவி அமர,
கழனிகளில் கதிர்களின் பிஞ்சுத்தன்மை நீங்கிய புதிதாக வந்த முன்பனிக் காலத்தில்
நமது அழகினைக் கவர்ந்துகொள்ளும் பசலை நம்மை வருத்தவும், நமது துயரத்தினை
அறியமாட்டாரோ? அவ்வாறு அறிந்திருந்தாலும்
நம் மனத்தின் மென்மையைப் போன்ற மென்மை அவரிடம் இல்லாமற்போனதால்
நம்முடைய பெண்கள் உலகத்தைப் பற்றி நினத்துப்பார்க்கமாட்டார் போலும் -
நான் இதனை எப்படி எடுத்துக்கொள்வேன்? கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி
தனது முடிவிற்கு எல்லை காணமாட்டாத தன்மையோடு வருகின்ற வாடைக்காற்றுடன் கூடி
நம் முலையில் பிறந்த காமநோயாகிய வளரும் இளைய முளை
தளர்ச்சியையுடைய நெஞ்சத்தில் வருத்தமாகிய திரண்ட அடிப்பகுதியாய் நீண்டு
இந்த ஊர்மக்கள் எழுப்பிய அம்பல் என்னும் அழகிய கிளைகளைக் கொண்டு
குறையாத காதல் என்னும் ஒளிவிடும் தளிர்களைப் பரப்பி
புலவரால் புகழப்பெற்ற நாணம் இன்மையாகிய பெரிய மரம் ஆகி
நிலத்தின் எல்லையெல்லாம் நிழல்செய்து
அலராகிய மலர்களாய்ப் பூத்து உதிர்க்கவும் வராத நம் தலைவர் - (நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ)
					மேல்
#274 முல்லை இடை காடனார்
பெரிய வானம் முழுவதும் அதிரும்படி இடித்து முழங்கி, பாம்புகளை வருத்தி
விழுகின்ற மழையாகிய மிகுந்த மழைத்துளிகளைப் பெய்து, மேகமானது
கார்ப்பருவத்தைச் செய்த நள்ளிரவில்
ஆடுகின்ற தலையினையுடைய செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாப்பாக இருக்க,
தீக்கடையும் கோலால் கடைந்து எடுத்த சிறிய தீப்பொறியை விறகில் சேர்த்து வளர்த்து
திண்ணிய கால்களையுடைய உறியையும், பானையினையும், தோல்படுக்கையினையும் உடையவனாய்
நுண்ணிய பல மழைத்துளிகள் தனது ஒரு பக்கத்தை நனைக்க,
தண்டினை ஒருகாலாக ஊன்றி, ஒற்றைக்காலில் நிற்கும் இடையன்
உதட்டை மடித்து விடும் சீழ்க்கை விரைந்து சென்று ஒலிக்க,
துள்ளிவிளையாடும் குட்டியைக் கவர்ந்துசெல்லப் பார்த்துக்கொண்டிருக்கும் குள்ளநரி அஞ்சி
முட்களையுடைய சிறிய புதர்களின் விழுந்தடித்துக்கொண்டு போகும்
குளிர்ச்சியான் மணங்கமழும் முல்லைக்காட்டில் உள்ளது, நறுமணமுடைய மலரான
முல்லையை அணிந்த கற்பொழுக்கம் உடைய
மெல்லிய இயல்பினையும், இளமையையும் உடைய எம் காதலியின் வாழ்வதற்கு இனிய ஊர்.
					மேல்
#275 பாலை கயமனார்
உயர்ந்து நிற்கும் தாழியில் நிறைய மண்ணை நிரப்பி,
கையைக் குவித்துச் செய்த குடையால் முகந்த நீரினைச் சொரிந்தவளாகப் பேணி வளர்த்த
வயலைக் கொடி படர்ந்த பந்தலின் கீழ் பந்து எறிந்து விளையாடும்
இளமைத் தன்மையை உடையவளே! வளமுடைய எம் இல்லத்திற்கு உரியவளே!
இப்படி ஓடியாடித் திரியும் இயல்பினையுடையவளாய் இருக்கின்றாய்! அது எரிந்து சாம்பாலாய்ப்போகட்டுமென்று
நான் அவளைக் கண்டித்துக் கூறும்பொழுது, அவளோ தன்னுடைய
மழலையாகிய இனிய சொற்களால், கடுமையான சொற்களைச் சொல்லாமல்
எனது இனிய உயிருடன் கலப்பது போல் நல்ல சொற்களைச் சொல்லி, அழகிய நெற்றியையுடைய அவள்,
தினமும் பெருவிருந்து நடக்கும் எம் வீட்டினில் எம்முடன் கூடி இங்கு இருக்காமல்
எவனோ ஒருவனுடைய காதலை நம்பிக்கொண்டு
திரட்சியான அடிமரத்தைக் கொண்ட இலுப்பைமரத்தின் துளையையுடைய வெண்மையான பூக்களை
குட்டிக் கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும்
கொடிய மலைகளை அடுத்த கடப்பதற்கு அரிய வழியினில், நாம் இங்கு தனித்திருக்க,
இந்தப் பெரிய உலகத்து உயிர்கள் எல்லாம் அஞ்சிப் பெருமூச்சுவிடும் துன்பம் தரும் காட்டினூடே
நேற்றுப் போய்விட்ட மிகவும் மடப்பம் பொருந்தியவள்
அழகாக அகன்ற அல்குலில் தழையாகிய ஆடைக்குப் பறிக்கும்
குட்டையான நொச்சியின் கீழே இருக்கிற, என் மகளின்
சிவந்த பக்கத்தையுடைய சிறிய விரல்கள் செய்த
வண்டலாகிய மணல்வீட்டையும் பாருங்கள் கண் உடையவர்களே!
					மேல்
#276 மருதம் பரணர்
நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட
வெண்மையான வாளையின் ஆண்மீனை உண்பதற்கு நாரை தன்
கால்கள் எழுப்பும் ஒலியை அந்த மீன் அறிந்துகொள்ளும் என்று அஞ்சி மெல்ல மெல்ல
காவலையுடைய வீட்டிற்குள் நுழைகின்ற கள்வனைப் போல்
தளர்வாக நடக்கும் இடமாகிய துறையைச் சேர்ந்த ஊரனாகிய தலைவனால்
நமக்குப் பழி ஏற்பட்டாலும் ஏற்படட்டும், இனிமேல் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது?
அந்தத் தலைவன் எமது சேரியிடத்தில் தங்குவதற்கு வரட்டும்,
செவ்வரி பரந்த மையுண்ட கண்களையுடைய அவன் உரிமை மகளிர் காணும்படியாக
அவனது மாலையையும் ஆடையையும் பிடித்துக்கொண்டு, ஆரியர்
பழக்கிவைத்துள்ள பெண்யானை தான் பழகிக் கூட்டிகொண்டுவரும் பெரிய களிற்றினைப் போல
எனது தோள்களே கட்டுகின்ற தறியாகக் கொண்டு, கூந்தலாகிய கயிற்றால் கட்டி, அவன்
மார்பினைச் சிறைப்பிடிக்காவிட்டால். பொருள்மேல் விருப்பம்கொண்டு
இரந்தவர்களுக்கு ஈயாமல் சேர்த்துவைத்தவனின் பொருளைப் போல
இந்த உலகத்தில் புகழாகப் பரவி வெளிப்படாதது ஆகி
வருந்தி ஒழியட்டும் என் தாய் பேணிக் காத்த என் பேரழகு.
					மேல்
#277 பாலை கருவூர் நன்மார்பன்
குளிர்ந்த ஒளியையுடைய திங்களானது அந்த ஒளி இல்லாமற்போய் மழுங்கிப்
பகலில் மறைந்துபோகும் காட்சியைப் போல மெல்ல மெல்ல
நெற்றியின் ஒளி மழுங்கிப்போய் மறைந்துபோகவும், முயற்சியால் பொருளை ஈட்டிக் கொணர்வதற்காக
குன்றாத ஊக்கத்துடன், தமது வேலே உற்ற துணையாகக் கொண்டு
தயிர் கடையும்போது எழும் ஒலியைப் போன்ற குரலையுடைய, ஒளியுள்ள வரிகளையுடைய வேங்கையானது
பெரிய வாயையுடைய தனது பெண்புலியின் துன்பமுடைய பசியைப் பொறுக்கமாட்டாமல்,
கரிய பனையின் சிறாம்பைப் போன்ற தடித்த மயிரினையும்
சிறிய கண்களையும் கொண்ட பன்றி வருகின்ற வழியைப் பார்த்திருக்கும்
வழிகள் கொண்ட காட்டின் பரப்பாகிய அவ்விடத்தில் உள்ள அகன்ற இடத்தில்
பொந்துகளையுடைய மரத்தின் புள்ளிபட்ட நிழலில்
வழிச்செல்லும் புதியவர்கள் சோர்வுடன் தங்கியிருக்கும்
சிறிதளவும் ஈரம் இல்லாத கொடிய பாலைவெளியைக் கடந்துசென்றவர் நம்மிடம்
அவர் திரும்பி வராமலிருக்கும் பொழுதே, ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தோழியே! கூரிய வாயினையும்
தீ கொழுந்துவிட்டு எரிவதைப் போன்ற அழகிய செறிவான மயிர்ச் சிறகினையும் உடைய
வீட்டில் வாழும் கோழியின் வீரமுள்ள சேவலானது
தன் பகைச் சேவலுடன் சண்டையிடும்போது சிலிர்த்தெழும் கழுத்தினைப் போன்று, செறிவான
மிகுந்த நெருப்பினைப் போன்ற முருக்க மரத்தின் ஒளிவிடும் பூங்கொத்துக்களின் தேனைப் பருகி
வண்டுகள் அந்தத் தேன் சிதறும்படி உதிர்த்த இளவேனில்காலம்
வந்துவிட்டது,
நம் காதலர்தான் இன்னும் வரவில்லை, தோழியே,
					மேல்
#278 குறிஞ்சி
கிழக்குக் கடலில் நீரை முகந்துகொண்டு வரும் மிகுதியான மேகங்கள்
முரசினை உடைய அரசர்களின் பலவான படைக்கலங்கள் ஏந்திய சேனையில்
யானைகளை வரிசையாக நிறுத்திவைத்ததைப் போலத் தோன்றி, வலமாக எழுந்து,
ஊன்றுகோலில் உயர்ந்து படருகின்ற கொடியினைப் போல இருளைக் கிழித்துக்கொண்டு மின்னி,
இடி இடிக்கின்ற அதிர்கின்ற முழக்கத்தை உண்டாக்கி, நள்ளிரவில்
பெரிய மலையின் உச்சியில் சூழ்ந்துநிற்பதால்
நாளை, ஒளியுடன் விளங்கும் அருவிகள் குதித்து,
பெரிய மூங்கிலின் அழகிய கழைகள் முரியும்படி தாக்கி,
வளமுள்ள குதிரைமரங்களையும் தள்ளிக்கொண்டு வெள்ளம் வரும்,
மிகவும் பெரிய நிலப்பரப்பினையுடைய நமது ஊரிலுள்ள நீராடும் துறையில்
பனியைப் போல் வெளுத்திருக்கிற குளிர்ச்சியான கண்கள் சிவந்துபோகும்படியாக, நள்ளிரவில்
நம்மை வருத்துகின்ற துன்பம் நீங்கும்படியாக மூழ்கி ஆடுவோமோ!
மணி போன்ற ஒளி படைத்த நமது மேனியின் அழகிய நலம் கெடும்படியாக
தணிப்பதற்கு அரிய துயரத்தை நமக்குச் செய்தவனாகிய நம் தலைவனின்
அழகுமிக்க நெடிய மலையில் தோய்ந்துவருகிற நீரில் - (மூழ்கி ஆடுவோமோ!)
					மேல்
#279 பாலை இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
தம்முடன் நட்புக்கொண்டவரின் இல்லாமையையும், தம் சுற்றத்தார்களின் வறுமையால் வந்த துன்பத்தையும்
தம்மோடு ஒட்டாமல் வாழ்பவர்களின் செல்வச்செழிப்பையும் கண்டும்
ஒரே ஊரில் வாழ்வதைப் பொறுத்திருப்பார்கள் -
பொன்னைப்போல் ஒளிவிடும் அழகுத்தேமலோடு நெருங்கிப் பருத்த
மென்மையான முலையாகிய பரப்பினை விட்டு நீங்காதவர்கள் என்று
நள்ளென்னும் இரவிலும் பகலிலும் தோன்றித்தோன்றி
உள்ளத்தில் மூண்ட, நெஞ்சினைச் சுடுகின்ற மிகுந்த கவலையாகிய தீயினை
பொருளீட்டும் முயற்சியாகிய மழையினால் அவித்து, ஒவ்வொருநாளும்
இக் காட்டில் வருந்தி இப் பாலை நிலத்தில் இருந்துவருகையில், துன்பத்தால் வருந்தி
எப்படி ஆகியிருப்பாளோ அவள்? இனிதாகத் தொடுக்கப்பட்ட
விளரி என்னும் நரம்பின் இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை,
மிகுந்த பூக்களைக் கொண்ட சோலைகளில் மகிழ்ந்து கூவும் குயிலின் ஒலியுடன் 
சேர்ந்திருப்பாரைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் நீர் தெளிக்கப்பெறும் காலைப் பொழுதிலும்
நம்மையே தன்னுடைய வலிமையாகக் கொண்டவளாகி, அழகிய நடையையுடைய
அன்னத்தின் மாட்சிமைபட்ட பேடையைப் போன்று மெல்ல மெல்ல நடந்து
செயலற்றுப்போன நெஞ்சையுடையவளாய் நம்மை அணைத்துக்கொள்ளும்
கரிய, எண்ணெய் பூசிய கூந்தலையுடைய மாமை நிறமுடைய நம் காதலி - (எப்படி ஆகியிருப்பாளோ)
					மேல்
#280 நெய்தல் அம்மூவனார்
பொன்னால் ஆன பூக்கள் செறிந்து இருப்பதைப் போல ஒளிவிடும் கொத்துக்களையுடைய செருந்தியின்
பலவான மலர்களைச் சூடிய அழகு பொருந்திய கூந்தலையுடையவள் ஆகி,
செறிந்த மணலையுடைய கடற்கரையில் நண்டினைப் பிடித்து விளையாடி
இளைப்பாறியிருந்த அழகிய வளையலை அணிந்த இளைய நம் காதலி,
நன்மை மிக்க சிறந்த பொருளும், அணிகலனும் நிறையக் கொடுத்தாலும்
பெறுவதற்கு அரியவள், அப்படியானால், அறத்தினை நினைத்துப்பார்த்து,
நாம் தங்கும் இந்த நாட்டில் இருப்பதைக் கைவிட்டுப் போய், நம் காதலியின் தந்தையாகிய அவனோடு
பெரிய கடலை அடுத்த உப்புவயலில் சேர்ந்து பாடுபட்டும்,
பெரிய கடலின் ஆழத்தில் அவனுடன் தோணியில் சென்றும்,
அவனுடன் மீன்வேட்டையாடி மீனைப் பிடித்தும், அவனுக்கு இணங்கியும், அவனைச் சார்ந்தே இருந்தால்
தருவானா? - விரிந்த திரைகடலில் சென்று
திரண்ட வடிவுடைய முத்துக்களைக் கொணர்ந்து, அவ்விடத்திலுள்ள
வண்டுகள் முரலுகின்ற அகன்ற கரையினில் பலருக்கும் பகுத்துக்கொடுக்கும்
சோலையையுடைய அழகிய பெரிய துறையையுடைய பரதவனாகிய அவள் தந்தை, எனக்கு - (த் தருவானா?)
					மேல்
 




#281 பாலை மாமூலனார்
தோழியே! நாம் இனிச் செய்யவேண்டியவைகளை ஆராய்ந்து பார்; ஒவ்வொரு நாளும்
அகன்ற உள்ளிடம் உள்ள நம் ஊரில் இருந்து, தன் ஆண்மையை வெளிப்படுத்தி, நம் அச்சம் அகலும்படி கூறிய
’பிரியமாட்டேன்’ என்ற சொல் பழுதாகிவிடுமே, என்னும் அச்சம் இல்லாமல்,
ஒரு பக்கம் ஒதுக்கமாய் நடக்கும் இயல்பையுடைய இளமை பொருந்திய மயில் கழித்த தோகையைப்
பிளந்த வெள்ளை நாரால் வலிய வில்லில் சுற்றி, அந்த வலிய வில்லின்
அழகிய நீண்ட கடைப்பகுதிக்குப் பொருந்திய பிறர்க்குத் துன்பம் தரும் இயல்புடைய,
மிகுந்த ஒலி ஒலிக்கும் விரைந்து செல்லும் கொடிய அம்புகளையுடைய 
வலிமை மிக்க வடுகர் முன்னே செல்ல, மோரியர்
தென்திசையிலுள்ள நாடுகளைப் பிடிக்க எண்ணி வருகின்ற வரவிற்காக
வானளாவ உயர்ந்த குளிர்கின்ற பெரிய மலைப்பகுதியில்
ஒளிர்கின்ற ஆரங்களையுடைய சக்கரங்கள் உருண்டுசெல்வதற்காக வெட்டி வழியாக்கிய
பாறைகளைக் கடந்து அவரோ சென்றுவிட்டார் -
பறையை முழக்கியதைப் போன்று ஊரெங்கும் பேசுகின்ற பழிமொழியை நமக்கென்று விட்டுவிட்டு.
					மேல்
#282 குறிஞ்சி தொல் கபிலன்
பெரிய மலையின் சாரலிலே வேட்டைக்குச் சென்ற
செறிவான மூட்டுவாய் கொண்ட அம்பினையும், வலிய வில்லினையும் உடைய கானவன்
போரிட்டுக் கொன்ற யானையின் வெண்மையான கொம்பினைக் கொண்டு
நீர் வளத்தால் விளங்கும் மலைச்சாரலில் அழகிய பொன்னை அகழ்ந்து எடுப்பவன்,
கண்ணைப் பறிக்கும்படியாக ஒளிவிடும் கெட்டியான மணிகள் பொன்னுடன் மேலெழுந்துவர
கூரிய முனையையுடைய வெண்மையான யானைக் கொம்பு ஒடிதலால் உதிர்ந்த
தெளிவான தன்மையுள்ள ஆலங்கட்டியைப் போன்ற முத்துக்களுடன் சேர்த்து
மூன்று வெவ்வேறான பண்டங்களையும் ஒன்று சேர்த்து எடுத்துக்கொண்டு
சந்தன மரம் காவு மரமாக நறைக்கொடி நாரினால்
வேங்கை மலர்களைத் தொடுத்த தலைமாலையுடையவனாய் இறங்கிவரும் நாட்டையுடைய நம் தலைவனுக்கு
இனிய தேன் ஒழுகும் பலாக்கனிகள் உள்ளிட்ட அழகுமிக்க பல்வேறு செல்வங்களையுமுடைய
எம் தந்தையும் உன்னைப் பெண்கொடுக்க ஒத்துக்கொண்டான், நம்மைப் பழித்த வாயினையுடைய
வம்புமொழியாளரைக் கொண்ட நம் ஊரும் நம் தந்தையோடு சேர்ந்து புகழும்,
வளைந்து இறங்கும் உன் திரண்ட தோள்களைப் பாராட்டி
நம் அன்னையும் உனக்கு உரியவன் அவனே என்கிறாள், நாமும்
விரைந்து வருக நம் மணத்திற்கு வரைந்த நாள் என்று
நல்ல இலக்கணமாகிய கோடுகள் அமைந்த நம் மென்மையான விரல்களைக் கூப்பி
நமது வீட்டுத்தெய்வத்திற்கு பலிப்பொருளைச் செலுத்துவோம்.
					மேல்
#283 பாலை மதுரை மருதன் இளநாகனார்
தலைவனே! தலைவியின் நல்ல நீண்ட கூந்தலோடு பெரிய தோளினையும் தடவிக்கொடுத்த
நீ இல்லாமல் இங்கே இருக்கவேண்டிய நிலையை எண்ணி அஞ்சிய என்னைக்காட்டிலும்
உன்னுடன் உடன்போக்கினை மேற்கொண்டு பெரிதும் பரபரப்புக் கொண்டுள்ள தலைவியானவள்
பலவாறு கிளைத்த கொம்பினையுடைய முதிய மான்களை விரட்டிவிட்டு
அவை உண்டு எஞ்சிய தினை முதலான சிறிய உணவுப் பொருள்களைக் கொண்டுவரும் சிற்றூர்ப் பெண்கள்
திரிகின்ற இடத்தில் ஒலிக்கும் தொலைவில் இருக்கும் பேராந்தையின்
வருத்தம்தரும் மெல்லிய குரல் மென்மையாக வந்து ஒலிக்கும்போதெல்லாம்
வழிப்போக்கர் அதனைக் கேட்டு வருந்தும் வழிகள், செல்வதற்கு
அரிதானவை ஆகும் என்று சொல்லி அவளைத் தடைசெய்யாததினால், வெப்பத்தால் கருகிப்போன மரங்களின்
கணுக்களில் கிளைத்துத் தளிர்க்கின்ற இளம் தளிர்கள் அவற்றின் அடி முதல் தழைத்து அழகுபெறவும்
வானம் முழுவதும் இருண்டு, வெப்பம் நீங்கும்படி,
பசுமையைத் தன்னிடம் கொண்ட மேகங்கள் பரவலாகத் துளிகளைச் சொரிந்ததாக
புற்கள் குருத்துவிட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டப்பட்ட பஞ்சின் பிசிர் பரவிக்கிடந்ததைப் போல
சிவந்த நிறமுடைய மூதாய் என்னும் தம்பலப்பூச்சிகள் குளிர்ச்சியான நிலத்தை அழகுசெய்ய
வெப்பம் தணிந்து இனிமையுடையன ஆகுக,
விட்டுப் பிரிந்தால் துன்பத்தைத் தரும் உன்னோடு செல்வதற்கு - (இனிய ஆகுக தணிந்தே)
					மேல்
#284 முல்லை இடைக்காடனார்
சிறிய இலைகளையுடைய நெல்லியின் காயைக் கண்டது போன்ற
சிறிய விழி பொருந்திய கண்களையும், கூர்மையான மயிரினையும் உடைய அழகிய சிறு முயல்
வளைந்து கிடக்கும் வரகின் பருத்த குருத்தினைத் தின்பதற்காக
வளைவான அழகிய காதுகளையுடையனவாய்க் காய்த்துள்ள அடர்த்தியான கொடிகளின் கீழே ஒடுங்கிய
இனிய துயிலிலிருந்தும் எழுந்து தம் துணையுடன் சென்று
முற்றத்திலுள்ள சிறிதளவு நிறைந்து இருக்கும் நீரைக் கண்டு பருகும்
புன்செய் நிலங்கள் சூழ்ந்த குன்றின் அடிவாரத்திலுள்ள சிற்றூர்களில்
தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட தெறித்து எய்யும் அம்பினையுடைய மறவர்கள்
வேகமாய் இழுத்து நாண் பூட்டிய வில்லினையுடையவராய் வேட்டைக்குச் சென்று
முல்லைநிலத் தோட்டத்திலுள்ள மானை அடித்து அறுத்து உண்ணும்
அழகிய முல்லைக்காட்டில் உள்ளது - காதல் மயக்கம்
நம்மைக்காட்டிலும் மிகவும் பெருகிய
அழகிய மாமை நிறமுள்ள நம் தலைவி வாழும் இனிய ஊர்.
					மேல்
#285 பாலை காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நாம் இங்கு துன்பத்தோடு தனித்திருக்க, பொருள் தேடுவதற்குத் தான் மட்டும் செல்வார் என்று நாம்
மிகுந்த துன்பத்தால் எப்பொதும் வருந்தும் வேதனையையுடைய நெஞ்சத்தின்
துன்பம் நீங்கி நெடும் தொலைவு சென்று ஒழியும்படி, கூர்மையான பற்களையுடைய
ஊனை விரும்பும் பெண்நாயின் மிகுந்த பசியினைப் போக்குவதற்கு
காட்டினில் தன் ஆண்மானைத் தேடித்திரியும் பெண்மான் அலறும்படி, அந்த ஆண்மானின்
ஓடித் தப்புவதற்குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண்
வெயிலை வெறுத்து இளைக்கும் வெப்பம் உடையனவும் - வரிகள் கொண்ட
பெரிய வேங்கைப் புலியின் மின்னுகின்ற தோலினைப் போன்று
கள்வர்கள் கல்லை எடுத்து எறிந்ததால் பல கிழிசல்களைக் கொண்ட உடையினையும்
உலறிய குடையையும் உடைய புதிய வழிப்போக்கர் உயர்ந்த மரத்தில் ஏறி,
உணவைப் பாய்ந்து எடுப்பதனை விரும்பி வானில் எழுந்த, தன் கூட்டத்திலிருந்தும் பிரிந்து வந்த பருந்து
பறக்கின்ற தன்மையைப் பார்த்துக்கொண்டிருப்பதுவும் - ஆகிய பாலை நிலத்து வழியில், பெரிய தோளினையும்
குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட இவளும் நம்முடன்
வருவாள் என்று கூறினார் நம் காதலர்,
நாம் இருவரும் பலமுறை ஆரத் தழுவிக்கொள்வோம், வருவாய், தோழியே!
					மேல்
#286 மருதம் ஓரம்போகியார்
வெள்ளியினால் செய்த சிறந்த பூணையுடைய மெல்லிய கரும்பால் ஆகிய உலக்கையால்,
கொடி போன்ற நுண்ணிய இடை வலப்பக்கமும் இடப்பக்கமும் மாறி மாறி வளையும்படி,
மீனின் முட்டையைப் போன்ற வெண்மையான மணலைக் குவித்து
காஞ்சி மரத்தின் நிழலில் தம் சுற்றத்தாரின் செல்வச் செழிப்பைப் பாடி
ஊரிலுள்ள இளம்பெண்கள் உரலில் குற்றும்போது, செறிவாக வரும்
இறால் மீன்களைத் தின்ற சிறிய மீன்கொத்தி, மருதமரத்தின்
தாழ்ந்த கிளையில் துயிலும் குளிர்ச்சியான துறையினையுடைய மருதநிலத் தலைவனே!
அறமல்லாதவற்றை விரும்பாத உள்ளம் எப்போதாவது மயங்கி விரும்பினாலும்
என்றும் தாம் கேட்டறிந்த அறங்கள் அங்குசமாக, உள்ளம் எனும் யானையைத் தடுத்து நிறுத்தி
அறமும் பொருளும் வழுவாமல் இருப்பதை ஆராய்ந்தறிந்து
தனது தகுதியுடைமையை உணர்ந்து அதன்
பின்னரே தான் கருதியதைச் செய்து முடித்தல் ஆகும்,
அப்படிப்பட்டதாகும் பெரியோரின் ஒழுக்கங்கள், அதனால்
அரியவற்றைச் செய்யும் பெரியோரின் செயல்களை ஆராயும்போது
உம்மைப் போன்ற பெரியவர்களிடத்திலும் இத்தகைய
பொய்யுடன் கூடிய கூற்றுக்கள் தோன்றினால்
மெய் என்பது எங்கு இருக்கிறதோ இந்த உலகத்தில்
					மேல்
#287 பாலை குடவாயிற்கீரத்தனார்
தனது வளையல் அணிந்த முன்கையில் சேர்ந்துள்ள விரல்களைக் குவித்து
நம்மைக் காணவேண்டும் என்று நோன்புகொண்டுள்ள நெஞ்சத்துடன் பகற்பொழுதே தனக்குத் துணையாக
வருந்திக்கொண்டிருப்பாளோ! இரங்கத்தக்கவள், அசைகின்ற நிலையினையுடைய
ஆண் மரைமான் தினவினால் சொறிந்துகொண்ட பெரிய அடியையுடைய தூணையுடைய
சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தையுடைய அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊரில் வாழ்பவர்
விடியற்காலையில் பலிகொடுப்பதை மறந்துபோன வெண்மையான இடத்தையுடைய பலிபீடத்தை அடுத்துள்ள
மதிலை மறையச் செய்த பொரிந்துபோன அடியினைக் கொண்ட ஆலமரத்தில் தொங்குகின்ற
ஒன்றாய்த் தனித்த நீண்ட விழுதினை மோதிய கோடைக்காற்று
துணையுடன் அந்த மரத்திலிருந்த புறாக்களை ஓட்டும் மழையற்ற அகன்ற இடத்தில்
திரண்ட காலினையுடைய அழகிய பெண்மானின் முதுகினை ஆண்மான் நக்கிக்கொடுக்க, (அந்தச் செயலை)
அசைகின்ற நிலையினையுடைய யா மரத்தின் உயர்ந்த கிளை தந்த
சுருங்கிய கோடுகோடாய் அமைந்த நிழலில் தங்கியிருந்தவனாய்ப் பார்க்க
குறும்பாக வந்து நம்மை வருத்தும் மாலையில்
நடந்து முடியாத நீண்ட இவ்வழியில் நாம் தனித்து வருந்துகின்றோம்.
					மேல்
#288 குறிஞ்சி விற்றூற்று மூதெயினனார்
சென்று வருக! உன் எண்ணம் சிறப்படையட்டும்! உனது மலையின்
சந்தனம் பூசிய அழகிய பரந்த மார்பினை உடையவனே!
மலைச் சாரலிலுள்ள வேங்கை மரத்தின் உயர்ந்த கிளையில் பூத்த புதிய பூவிலிருந்து
வேறுபட்ட மணத்தையுடைய அழகிய தலைமாலையைச் சூடியவனே!
தீயால் சுட்டு பண்படுத்தப்பட்டகொல்லையில் விளைந்து கதிர் வளைந்த தினைப்புனத்திற்கு
உன் துன்பத்தைக் கூறுவதற்காக நாள்தோறும் வருகின்றவனே!
கனிகள் பழுத்திருக்கும் இந்த மலைப்பக்கத்தில் நாங்கள் தனியே இருப்பதைப் பார்த்ததினால்
நாங்கள் எளிதில் கிடைத்துவிடுவோம் என்று எங்களை எளிதாக எடுத்துக்கொண்டாய், கிட்டிச் சேர்ந்து
கொடிய கள்வர்கள் அணுக்கமாயியிருக்கும் நீண்ட பெரிய குன்றத்தில்
குறுகிய வழியில் வந்து ஒலிக்கும் விட்டுவிட்டு ஒளிரும் அருவியானது
ஏறுவதற்கு அரிய மலையிலிருந்து இறங்குகின்ற இடமாகிய அச்சம் தோன்றும் புதர்களிலிருக்கும்
மென்மையான தலையினையுடைய மந்தியின் வருத்துகின்ற பசியினைப் போக்குவதற்காக
அதன் குட்டியின் தந்தையான ஆண்குரங்கு பலாப்பழத்தின் சுளையைத் தோண்டினாலும்
பெரிய நோய் போல மிகுந்த துன்பத்தைச் செய்கின்ற மலைப்பக்கத்திலுள்ள
தெய்வ மங்கையர் வாழும் மாங்காடு என்னும் ஊரின் காவலை ஒத்தது, துகள் தீரும்படியாக
கொத்துக்களை உதிர்த்து அணிந்த கூந்தலையும்
அழகிய இனிய சொற்களையும் உடைய இவளின் தந்தையின் காவல்
					மேல்
#289 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
வில்லில் கோத்த கணையால் வீழ்ந்து இறந்த புதிய வழிப்போக்கர்களின்
உடலை மூடிய உயரமான கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருக்கமான கொடியாகிய காட்டுமல்லிகையின் பூக்கள்
செங்குத்தாக நிற்கும் நடுகல்லின் காலைநேரப் பலிக்குச் சார்த்தப்பெறும் இடமான
பாலை நிலத்தில் குறுக்கே செல்லும் மரங்கள் உயர்ந்துள்ள வழியில்
வந்து பொருளீட்டும் தொழிலைச் செய்யத் துணிந்துள்ள நம்மிடம் எப்பொழுதும்
நினைத்து நினைத்துச் சுழல்கின்ற நெஞ்சத்தினோடே வருத்தப்படுவது குறையாமல்
நெகிழ்ந்துபோகாத மென்மையான தழுவல் மிகுந்த கை சிறிது
விலகினாலும் வருந்துகின்ற அழகிய மடப்பம் உள்ள நம் தலைவி,
தொலைவில் நாம் தங்குவதால் எய்திய தனிமையால் நாம் பிரிந்திருந்த நாட்களை வரிசையாகக் கோடுகள்போட்ட
திண்மையான சுவரைப் பார்த்து எண்ணி எண்ணிக் கண்ணீர்த்துளிகள்
கோத்த நூலிலிருந்து கழன்றுவிழும் முத்துக்களைப் போல குவிந்த தன் முலையில் வீழ்ந்து தெறிக்க
குற்றம் இல்லாமல் விரிக்கப்பட்ட படுக்கை அமைந்த கட்டிலில்
அழகிய மென்மையான அன்னத்தூவியினால் ஆன தலையணையைச் சேர்த்துக்கொண்டு இருக்கும்
மயக்கம் கொண்ட வலிமையற்றவாளாய் படுத்துக்கொண்டிருப்பள்
பிளந்த வாயினைக்கொண்ட பல்லி ஒலியெழுப்பும்போதெல்லாம் அத்திசையில் கைதொழுது
நல்ல செய்தியைக் கூறுவாயாக என்று மனம் நடுங்கி
பொலிவற்ற மாலைக்காலத்துடன் போரிட்டுக்கொண்டிருப்பாளோ?
					மேல்
#290 நெய்தல் நக்கீரர்
உச்சிக்குடுமியையுடைய பசிய காலையுடைய பெட்டைக் கொக்கானது,
கரிய குழைவான சேற்றில் விடியற்காலத்தில் வேட்டைக்குச் சென்ற
கொழுத்த மீன்களை உணவாகக் கொண்ட புன்மையான தலையையுடைய சிறுவர்களின்
நுண்மையான நூலிலாலான அழகிய வலையில் தனது சேவல் கொக்கு அகப்பட்டுக்கொண்டதாக,
தனியே இருக்கும் பொழுது மெல்லும் இரையினைத் தின்னாமல்
வருந்தியிருக்கும் தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு விரைவாக
அழகிய இடத்தில் நிற்கும் பனைமரத்தில் இருந்துகொண்டு அன்புதோன்ற ஒலியெழுப்பும்
சிறிய பலவான தொன்மையான குடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய நம் தலைவன்
கழியைச் சேர்ந்த புன்னையின் மிகுதியான பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையில்
அன்பு குறையாத நெஞ்சத்துடன் தனியாக வந்து
நம்மிடம் உறவுகொள்வதற்கு முன்பாக, இது எப்படி ஆயிற்று?
வெண்ணிறக் கொம்புகளையுடைய யானையையும் போரில் வெற்றியையும் உடைய குட்டுவனின்
தெளிவான அலைகளையுடைய பரப்பினையுடைய தொண்டி என்னும் துறைமுகத்தின் பக்கத்தில்
வண்டுகள் தேனை உண்ணுவதற்காக மலர்ந்த பெரிய குளிர்ச்சியான நெய்தல் பூவின்
நீலமணியைப் போன்ற மாண்புற்ற அழகிய நிறத்தினை நீங்கி
பொன் போன்ற நிறத்தினைக் கொண்டன என் கண்கள் - (இது எப்படி ஆயிற்று?)
					மேல்
 




#291 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ
மேகங்கள் மழையாகிய தமது வளத்தை மறைத்துக்கொண்டதால், காடுகளின் மரங்கள்
உலர்ந்துபோய் இலைகளே இல்லாதனவாய் ஆக, பலவும் ஒன்றாகச் சேர்ந்த
காளையையுடைய பசுக்கூட்டத்தைப் பசி வருத்த,
குளங்களும் நீர் வற்றிப்போன முதுவேனில் காலத்தில், வளம் ஒழியப்
பெரிய மலைகள் உயர்ந்துநிற்கும் பக்கத்தில், வளைந்த வரிகளையுடைய
புலியுடன் போரிட்டுச் சினம் மிகுந்து செருக்குடன்
வலிய யானை நடந்து சென்ற இடங்களில், பெரிய பரல் கற்கள்
சிறிய பலவாகிய மின்மினிப்பூச்சிகளைப் போல எல்லா இடங்களிலும்
நிறைந்து ஒளிவிடும் நடந்து முடியாத நீண்ட வழியில்,
கழுகின் பெரிய சிறகுகளை வைத்துக் கட்டப்பட்டதும், விரிந்த பூங்கொத்தில்
தாதினை உண்ணுகின்ற தும்பிகள் எழுப்பும் இசையைப் போன்று
விரைந்துசெல்லும்போது ஒலிக்கின்றதும் ஆன அம்பினை உடையவரும்
அஞ்சும்படியாகத் தழையைத் தலையில் அணிந்தவருமாகிய ஆறலைக் கள்வர், கிளைத்துச் செல்லும் வழிகளில்
ஆரவாரம் செய்து அப்பொழுதே அவ் வழிப்போக்கரின் அரிய பொருள்களைக் கவர்ந்து கொள்வதால், சிறிதும்
வணிகச் சாத்தர்கள் புழக்கத்தில் கொள்ளாத உயர்ந்த மலையுச்சிகளை அடுத்த வழிகளில் நிற்கின்ற
சிறிய இலைகளையுடைய நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள்
உதிர்ந்து பரவிக்கிடக்கும் காட்டில், தவிர்தல் இல்லாமல்
புள்ளிகளையுடைய அழகிய பெண்மான்கள் உண்ணும்பொருட்டு அவற்றை அழைக்க நினைத்து,
அற்றுவிழும் கொம்பினை உதிர்த்துவிட்ட தலையினையுடைய, தோலால மூடப்பட்ட
மீண்டும் முளைக்கின்ற கொம்புகளாகிய இளைய கொம்புகள் அதிரும்படி ஆண்மான்கள் கூவியழைக்கும்
வெயில் சுடுவதால் உயிரினங்கள் வருந்திய கடப்பதற்கு அரிய இந்தப் பாலை நிலத்தினைக் கடந்து வந்து, இங்கு
நினைத்துப்பார்க்கின்றாய், வாழ்க! நெஞ்சமே! மலர்கின்ற பூவினைப் போல
இடமெல்லாம் கமழ்கின்ற நறுமணமுடைய கரிய பலவான கூந்தலையும்
பேரெழில் படைத்த குளிர்ந்த கண்களையும் உடைய நம் காதலியின்
மெல்லிதாய் இறங்கும் பருத்த தோள்களின் விளங்குகின்ற மாண்புற்ற அழகினை - (உள்ளினை வாழிய நெஞ்சே)
					மேல்
#292 குறிஞ்சி கபிலர்
நாம் என்ன செய்யலாம் என்பதனைக் கூறுவாயாக,தோழியே! நம் காதல் நோயை வேறு ஒன்றாக எண்ணிய
அன்னையும் வீணில் பொருளைக் கொட்டிக்கொடுத்து, மனம் தடுமாறுகிறாள், மென்மையான தளிராகிய
சிறிதளவு தழையுணவைத் தின்னும், தாய்ப்பால் கிடைக்காத 
ஆட்டுக்குட்டி வெறியாட்டுக்காகப் பலியிடுதலை விரும்பி, வெறியாடலைச் செய்யும்
இதற்குத் தொடர்பில்லாத வேலன், கழுத்தில் மாலை அசைந்தாட
வெறியாடுவானென்றால் அதற்கும் நான் வெட்கப்படுகின்றேன்;
ஒளிரும் வளையல்கள் நெகிழ்வதற்குக் காரணமான நமது துன்பத்தைக் கண்டு, தன் தினைப்புலத்தில் வந்து
இரவில் மேய்வதை மேற்கொண்ட யானையின்
காலின் வலிய நடையை உற்றுக்கேட்டு, நள்ளிரவில்
மலை மேல் பரணில் இருக்கின்ற வலிய கையையுடைய குறவன்
மிக்க வேகத்துடன் கவண் கொண்டு எறிந்த சிறிய கல்
இறகு கொண்ட அம்பினைப் போலச் சென்று, மலைச் சரிவிலிருக்கும்
வேங்கை மரத்தின் விரிந்த பூங்கொத்துக்களைச் சிதறடித்து, தேன் கூட்டைச் சிதைத்துப்
பலாமரத்தின் பழத்துக்குள்ளே சென்று தங்கும்
மலைநாட்டையுடைய நம் தலைவன் நம்மை மணந்துகொள்ளாதபோது - (கூறாய் செய்வது தோழி)
					மேல்
#293 பாலை காவன்முல்லை பூதனார்
இலைகளை உதிர்த்துக் காய்ந்துபோன பொலிவிழந்த தலையையுடைய வேல மரத்தின்
வலையைக் கட்டியது போலத் தோன்றும்படி, பலவும் ஒன்றுசேர்ந்து
சிலந்திப்பூச்சிகள் நூலால் சுற்றிய நிலம் பாழ்பட்ட இடங்களையுடைய
ஆடை நெய்தலை நுணுக்கமாகச் செய்யும் செயலுக்குரிய பாவானது விரிந்ததைப் போல
வெயில் ஒளிவிட்டு அனல்பறக்கும் மிகவும் வெப்பத்தையுடைய காட்டினில்
குயிலின் கண்ணைப்போன்ற நிறமுடைய காய்கள் முற்றி
நீலமணிக் காசினைப் போன்ற கருமை நிற பெரிய பழங்கள்
உகா மரத்தின் மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்து போகும்
வேனில் காலத்து வெப்பம் மிகுந்த பாலை நிலத்தில் தாமே தனியாளாய் நம் காதலர்
செல்வார் என்று ஊரார் கூறுகின்றனர், தோழியே! நாமோ
இரக்கமற்ற கோவலர்கள் தாயிடமிருந்து பிரித்து இழுத்துக்கட்டிய,
நெஞ்சத்தால் அத் தாயை விரும்புகின்ற இளம் கன்றுக்குட்டியைப் போல மிகவும் நொந்து
கேட்பதற்கு இனிய அல்லாத மொழிகளைக் கூறுகிறோம் என்கிறார்கள்
எந்த அளவு நம்மை வருந்தவைத்திருக்கிறார் பார், நம் காதலர்.
					மேல்
#294 முல்லை கழார்க்கீரன் எயிற்றியார்
மிகவும் இருண்டுகொண்டு கருத்த மேகம் வானில் அதிர்ந்து முழங்கி
குதிக்கின்ற மழையைப் பொழிந்துபோன பின்னர், புகையைப் போல
புள்ளி போன்ற நுண்ணிய பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறையவும்,
தம் காதலரைப்  பிரிந்த செயலற்ற மகளிரின்
நீர் ஒழுகும் கண்களைப் போல கருவிளம்பூக்கள் மலரவும்,
நுனிப் பஞ்சினைத் தலையினில் கொண்ட புதர்களில் ஏறிப்படரும் இண்டங்கொடியின்
நெய்யில் தோய்த்ததைப் போன்ற நீரில் நனைந்த அழகிய தளிர் 
இரண்டாக வகிர்ந்த ஈரல் போல ஈரமுடையனவாய் அசைந்திடவும்,
அவரையின் அழகிய பூக்கள் நிறையப் பூத்திருக்கவும், அகன்ற வயல்களில்
கதிர்கள் நீண்டு நன்கு காய்த்த நெல் கண்ணுக்கு இனிமையாய்த் தலை வணங்கித் தொங்கவும்,
வண்டுகள் கிளைகளில் மலரைச் சுற்றி நிலைகொண்டிருக்கவும் இருக்கும் முன்பனிக் காலத்து நள்ளிரவில்,
மிகுந்த சினம் கொண்ட வேந்தனின் பாசறையில் நீண்ட நாள் தங்கி,
நமது துன்பத்தினை அறியாத அறமற்ற நம் தலைவர்
நம்முடைய இந்தத் துன்பமான நிலையை நீக்க வருவாரோ என்று எண்ணி
கொஞ்சமும் குறையாமல் ஓங்கி வீசும் வாடைக்காற்றுடன்
என் தனிமையைப் பொறுக்கமுடியாதவளாய் இருக்கின்றேன்,தோழியே!
					மேல்
#295 பாலை மாமூலனார்
நிலமானது நீர் இல்லாமல் போய், ஆழமான சுனைகள் வறண்டுபோகவும்
மலைகளின் உச்சிகள் பொடிந்து உதிரவும் கடுமையான வெயில் சுடுவதால்
வெப்பம் மிக்க மூங்கில்கள் பட்டுப்போன அகன்ற இடங்களில்,
நிலாப்போல வெண்ணிறமுடைய கொம்பினில் தன் பெரும் கையை அணைத்துக்கொண்டு,
வேங்கைப்புலியை வென்ற அச்சம் வரும் பருத்த தோளையுடைய 
உயர்ந்த களிறு வருந்தி தன் மதநீர் ஓய்ந்து
பல மரங்களையுடைய ஒரு பக்கத்தில் தன் பெண்யானையோடு தங்கிக்கிடக்கும்
கற்களையுடைய வழிகளையுடைய காட்டினைக் கடந்து,
கடல் நீரால் விளைந்த உப்பை வண்டியிலேற்றிச் சென்று விற்கும் கூட்டமான உப்பு வணிகர்
வண்டியை இழுத்து வருந்திய காளைகள் மூச்சுவாங்கத் தங்கி, கட்டாந்தரையை இடித்து
அகன்ற இடத்தில் தோண்டிய அகன்ற வாயையுடைய கிணறு
வழியேசெல்லும் புதியவர்களின் தளர்ச்சி நீங்க ஊறும் இடமாகிய
ஒலிக்கின்ற அழகிய கழல் அணிந்த காலையுடைய புல்லி என்பவனின் வேங்கடமலையைச் சார்ந்த
நடந்து செல்லக் கடினமான காட்டினைக் கடந்து, வலிய வில்லில்
தொடுத்தலையுடைய அம்புகளையுடையவராய், ஓரிடத்தில் செறிந்து வாழும் தன்மையுள்ள வடுகர்
கள்ளினை நிறைய உண்ட களிப்பினையுடையவராய் செருக்கு மிகுந்து ஆரவாரிக்கும்
வேற்றுமொழி வழங்கும் நாட்டினைக் கடந்து சென்றவரென்றாலும்
இப்பொழுது நீ இழந்துள்ள குற்றமற்ற சிறந்த அழகினைத் திரும்ப வந்து தந்தருள்வார்
மாரிக்காலத்தில் பூக்கும் பிச்சிப்பூவின் நனைந்த இதழைப் போன்ற
அழகு ஒழுகும் சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ச்சியான கண்களையும்
மணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்ணே! உன்
அழகு நிலைபெற்ற பெரிய மென்மையான தோளின் - (அழகினைத் திரும்ப வந்து தந்தருள்வார்)
					மேல்
#296 மருதம் மதுரை பேராலவாயார்
மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய குட்டையான அடிமரத்தைக் கொண்ட காஞ்சி மரத்தின்
மலர் விரிந்தபோது உதிர்ந்த மணமுள்ள பூந்துகளை அணிந்துள்ள கூந்தலையும்
செவ்வரியோடிய மதர்த்த கண்களையும் உடைய மாமை நிறமுள்ள பரத்தையரோடு
நேற்றும் மணம் கமழும் பூந்தோட்டத்தில் துயின்று, இன்றும்
அவளுடன் வையை நீர்ப்பெருக்கில் விளையாடி
ஈரம் புலராத மார்போடு வந்து நின்று என்னிடம்
மறைக்க முடியுமா? கடல்நீர்ப் பரப்பில்
பல மீன்களையும் பிடிப்போர் அவற்றுடன் சேர்ந்து முகந்துகொண்ட முத்துச்சிப்பிகளை
பனைநாரால் அரிக்கப்பட்ட மகிழ்ச்சி தரும் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும்
பெரும் புகழினையுடைய கொற்கைக்குத் தலைவனாகிய, வெற்றியைத் தரும் வேலையும்
கடுமை நிறைந்த பெரிய யானையையும் நீண்ட தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்
மலை போன்ற மாளிகைகளையுடைய மதுரை நகரில் நெடுநேரம் வெற்றிக்களிப்பினால் ஆடியபொழுது எழுந்த
நிறைந்த ஆரவாரம் போல
மிகப்பெரும் அலர் ஆகிவிட்டது -  பலர் வாயிலும் விழுந்து
					மேல்
#297 பாலை மதுரை மருதன் இளநாகனார்
பாதி நாளாகிய இரவிலும், பொலிவற்ற மாலை தொடங்கி நெடுநேரம்வரைக்கும்
கொஞ்சமும் குறையாத வருத்தத்துடன் மிகுந்த துயரத்தால் கலங்கி,
நம்மை நினைத்ததால் ஏற்படும் துன்பம் எல்லை கடந்து போவதால்
நமக்கு என்ன துன்பம் விளையுமோ? நெஞ்சமே!
பெரிதாய் அழகில்லாத பெரிய பொலிவற்ற தாடியினையும்,
அஞ்சாமையும் உடைய மறவர்கள் தம் அம்புகளைத் தேய்த்துத் தீட்டியதால்
இடைப்பகுதி தேய்ந்துள்ள அச்சம் தரும் நடுகல்லில்
பெயரும் பெருமையும் விளக்கமாகத் தெரியும்படி செதுக்கிய எழுத்துக்களை
பொருள் பொருத்தத்துடன் படித்துப்பார்க்காமல் தளர்ச்சியுடன்
வழியே செல்லும் புதியவர்கள் அதனை விட்டு நீங்கும்
தெய்வம் அடியில் இருக்கும் ஓமை மரங்களுள்ள காட்டில் உள்ள
நீர்ப்பூலா முள்செடிகளை வேலியாகக் கொண்ட, புலால் நாறும் முற்றத்தில்
ஓவியத்தில் எழுதிவைத்ததைப் போன்ற நீண்ட உடலினையுடைய பூனையின்
பூளைப் பூவைப் போன்ற சிலிர்த்த மயிரையுடைய குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன்கள் போல அத் தாயின் பின்னே தொடர்ந்து செல்லுகின்ற
சிற்றூரில் வசிக்கின்ற மறவர்கள் முழக்குகின்ற ஏறுகோட்பறை முழக்கத்தைக் கேட்ட
ஆண் பருந்து தன் பெரிய சிறகுகளை விரித்து வேறிடம் செல்லும்
அச்சம் வரும் காட்டிற்கு நம்முடன்
வருவேன் என்றவளின் மகிழ்ச்சி தரும் மடப்பம் பொருந்திய பார்வையால்-(நமக்கு என்ன துன்பம் விளையுமோ?)
					மேல்
#298 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
உலகத்தார்க்குப் பயன் மிகுந்த செல்வங்களைத் தரும் பல கதிர்களையுடைய ஞாயிறு
அவர்க்கு வெற்றியுடைய வினைகளைத் தருவதற்கு வலமாக எழுந்து ஒளிவிட்டு
நீர் மிகுந்த கடலில் தோன்றினாற் போல, மிகுதியாக
நீலமணி போன்ற நிறத்தையுடைய மாலைக்காலத்தில் மலர்ந்துள்ள வேங்கைமரத்தின்
ஒளிபொருந்திய தளிர்கள் மின்னுகின்ற செழிப்புடன் தழைத்த பெரிய கிளையிலுள்ள
குளிர்ந்த பனித்துளியை அசைந்து வரும் காற்று மெதுவாகத் தடவிக்கொடுக்கும் நாட்டையுடைய தலைவனே!
தன் பகையைக் கொன்றும் தன் சினம் தணியாமலும்,, அதை வென்றும் தன் பகைமை குன்றாமலும்
தன் பெரிய பெண்யானைக் கூட்டமாகிய இனத்திலும் சேராமலும்
மிகுதியாய்ப் பொழிகின்ற மதத்தினால் செருக்குற்று, வளம் உள்ள மலையில் இருக்கும்
பெரிய களிறு நடமாடும் பெரிய காட்டு வழியினில்
நிறைந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒளிவீசும் வெண்மையான வேலினை ஏந்திக்கொண்டு
தாழ்ந்த பூமாலையில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டி,
மென்மையாய்ப் பிடிப்புள்ள அரும்புகள் கட்டவிழ்ந்த நடுநாளான இரவில் இங்கு
நீ வந்ததைக்காட்டிலும் இனியதாய் இருக்கிறது,
மழை போல் மிகுதியாய்ப் பொழியும் கள்ளினையும் விரைந்து செல்லும் தேரினையுமுடைய எம் தந்தையின்
காவலை உடைய பெரிய மாளிகையில் எம்மைப் பாதுகாத்து நீங்காமல் இருக்கும்
எம் தாய் அறிந்துகொள்வாளென்று அஞ்சி, நள்ளிரவில்
என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் காத்துக்கொள்ளும் நெஞ்சத்துடன் என் காமத்தை யாருக்கும் சொல்லாமல்
நீ என்னைப் பார்க்க வரவில்லையே என்ற உன் கொடுமையை என் தோழியிடம் கூற எண்ணியவுடன் அப்பொழுது
’வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே! நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர்
அதிக நாள் நீட்டிக்காமல் விரைவில் வந்துவிடுவார்’ என்று
இரவில் என் துன்பத்தை அகற்றும் துணையாக இருந்து
என்னுடன் தூங்காமல் இருக்கின்ற தோழியாகிய இவள் மகிழ்ந்ததுதான் - (நீ வந்ததனினும் இனிது ஆகின்றே)
					மேல்
#299 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
பகலும் இரவும் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து செல்லும்
எண்ணம் முந்திக்கொண்டு செயல்பட, அதையே நினைத்து
நம் ஊரை மறந்து வாழ நம்மால் முடியும் என்றாலும்
அதனை மட்டும் மறந்து வாழ்வது மிகக் கடினம்;
வேகமாக வீசும் கோடைக்காற்று பிடுங்கிப்போட்டுக் காம்பிலிருந்து கழன்ற தேக்கின் இலைகள்
நீண்ட சீழ்க்கையொலியையுடைய பருந்துக்கூட்டம் வெறித்து எழுந்து பறந்ததைப் போன்று
விசும்பின் இடமெல்லாம் மறையப் பரவி பலவும் ஒன்றுசேர்ந்து விழுந்து
அகன்ற அப் பாலைநிலத்தில் செல்பவர் வழி தெரியாமல் அறிவுகெட்டுப்போகும்படி பரந்து
கிளைத்துச்செல்லும் வழிகளையெல்லாம் மறைக்கின்ற அகன்ற காடுகளையுடைய வழியில்
பொருளீட்டும் தொழிலை மேற்கொண்டு நம் பயணத்தை அவளுக்குக் கூற
வைகறைப் பொழுதில் வானத்தில் நிலைகொண்ட திங்கள் ஒளி இழப்பது போல, மெல்ல
தனிமையுறப்போகும் துன்பத்தோடு புதிய அழகினை இழந்துவிட்ட
நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, நிலத்தைக் கால்விரலால் கீறிக்கொண்டு
கண்ணீரைக் கட்டுப்படுத்தப் போராடும் ஈரமான இமைகளையுடைய குளிர்ந்த கண்களிலிருந்து
சொரிகின்ற தெளிந்த துளிகள் அவளுடைய மார்பில் விழவும்
தன்னுடைய கால்கள் நிலைத்துநிற்க முடியாமல், மிக்க துன்பத்தினால் கலங்கி
நாவானது நடுங்குவதால் திருத்தமில்லாத சொற்களுடன்
நெளிநெளியான கருமணலைப் போன்ற கூந்தலில் தன்னை மறைத்துக்கொண்டு, ‘சிறந்த ஆற்றலுடன்
நன்கு அமைவதாக உம் பயணம்’ என்று கூறிப் பெருமூச்சுவிட்டு
துன்பத்தைத் தரும் வருத்தத்தால் மனம் அழிந்த,
பெரும் படபடப்பை எய்திய நம் காதலியின் வருந்திய அந்த நிலையை - (மட்டும் மறந்து வாழ்வது மிகக் கடினம்)
					மேல்
#300 நெய்தல் உலோச்சனார்
நாள் காலையில் மீன்களை வலையினால் முகந்துகொண்ட மீன் பிடிப்பதில் வல்லவரான பரதவர்கள்
நுண்ணிய மணலிடத்தில் புலரும்படி காயப்போடுவதற்காக
பறியால் மிகுந்த மீன்களைப் பிடித்துவரும்போது அவர்கள் வருந்தும்படியாக அந்தப் பறியிலிருந்து சிதறிய
மீன்களைத் தின்னுகின்ற பறவைகளையுடைய கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறையில்
பகற்பொழுது குளிர்ந்த பொழிலில் சென்றதாக, ஊருக்குச் செல்ல
தேரைப் பூட்டுவதற்குப் பாகனை ஏவி, இவளின் நீண்ட திரண்ட
செறிந்த வளையல்களைத் திருத்தி அணிவித்து, கலைந்திருக்கும் கூந்தலைத் தடவிக்கொடுத்து
’இப்போது செல்வாயாக, மடந்தையே! உன் தோழியுடன் உன் வீட்டுக்கு’ என்று
சொன்னவுடனே, தான் மிகவும் அழுது
துன்பமுடையவள் ஆனாள் இவள், எனினும், அதனை மனத்தில் கொள்ளாமல்
யாரோ ஒருவர் போல பிரிந்துசென்றால், திடீரென்று
ஏதாவது ஒன்று நடக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன், அதனால்
ஏதோ மிகத் தொலைவிலிருந்து களைப்புடன் வருபவர் போல
மிகுந்த ஆரவாரமுடைய அழகிய எமது சிறிய ஊருக்கு வந்தால்,
இவளது பெற்றோர் விரைவாக எதிர்கொண்டு, மென்மையாக நலம் விசாரித்து
’துறையிலும் பொழுது மயங்கிவிட்டது, சுறா மீன்களும்
கடலலை பெருகி ஏறுவதால் பகைகொண்டு திரிகின்றன,
இருண்டுவிட்டது, மேம்பட்டுத் தோன்றுபவனே! செல்லவேண்டாம்’ என்று
எங்களவர்கள் முறையீடு செய்து வேண்டிக்கொள்ள, எம் ஊரில் தங்கி, நாங்கள் இன்புறும் வண்ணம்
உன்னுடன் வந்த தோழரும், குதிரையும் இன்புற நீயும்
எம் இல்லத்தில் தங்கும் நல்ல விருந்தினராக உம்மை உபசரிப்பதற்கு
இயன்றவர் ஆவோம், பெருமானே! இதற்கு உன்னுடைய சம்மதத்தைப் பெற்றால்
					மேல்
 



#301 பாலை அதியன் விண்ணத்தனார்
வறண்டுகிடக்கும் வயலைப் போல வாடிப்போய் வருந்தி
துன்பம் அதிகரிக்க, நம்மைப் பிரிந்த தலைவரைப் பலமுறை நினைத்து வருந்துவதை
மிகச் சிறிய பொழுதேனும் நீங்கியிருப்போம் என்று கூறுகிறாய், தோழியே!
கொடுப்பவர்கள் தமக்குக் கொடுத்துத்தீர்த்த கூலியாகிய எளிய உணவினை
இடைவேளை இல்லாமலும் அடுத்த வேளைக்கு என்று பாதுகாத்துவையாமலும் நன்கு உண்டு
நீரில் வாழும் முதலை கொட்டாவிவிட்டதைப் போல
பாயினால் வேயப்பட்ட அறைத்துச் செல்லும் சக்கரத்தையுடைய வண்டியில் செல்லும்,
இது எம் ஊர் என்று கூறிக்கொள்ளும்படியான ஊர் இல்லையான, இடையூறு அற்ற வாழ்க்கையை உடையவராய்
பாலை நிலத்தின் வெப்பத்தினால் உண்டான துன்பத்தை மரத்தடியில் தங்கிப் போக்கி
இனிய ஒலியினையுடைய தெளிவான கிணைப்பறை ஒலிக்க, காண்பதற்கு இன்பம் தரும்படியான
குவிந்த கொத்துக்களையுடைய எருக்கின் நெருக்கமான பூக்களால் ஆன தலைமாலை
ஆடவர்களின் தலையை அழகுசெய்ய, பெண்களுக்கு,
காட்டுத்தீயாகிய முழங்குகின்ற தீக்கொழுந்தின் வெளிச்சத்தில்
களர்நிலத்திலுள்ள ஆவிரைச் செடியின் ஒளிர்ந்து நிற்கும் பூக்களால் ஆன மாலை
அவர்களின் நிறம் மிக்க மார்பில் உள்ள அழகிய முலைகளில் கிடந்து அசைய,
அடங்கிய நடையையுடைய பெண்யானையுடன் ஆண்யானையும் சேர்ந்து பிளிறினால் போல
சிறுவங்கியம், பெருவங்கியம் ஆகியவற்றின் ஒலியுடன் முழவிசையும் சேர்ந்து இசைக்க,
கரும் மேகம் இடிக்கும்போது நீரின் மேல் ஒலிக்கும்
தேரையின் ஒலியைப் போன்று தாளம் அமைத்து
சிலவாய் அரித்தெழுகின்ற ஓசையையுடைய சிறிய பல இசைக்கருவிகளுடன்
பல ஊர்களுக்கும் சென்று கூத்து ஆடி, கூத்து முடிந்தவுடன் விரைவாக
தலையினைச் சேர்த்துக் கட்டிய பலவான தொகுதியையுடைய இசைக் கலன்களை வைக்கும் பையினராகிய
மிகப் பெரும் சுற்றத்தினரைக் கொண்ட கூத்தர் ஆடிச் சென்ற
பொலிவற்ற இடத்தினையுடைய விழா மண்டபத்தை அடுத்த நாளில் கண்டால்,
ஆரவாரம் கொண்டிருந்த ஊரினருக்குத் துன்பம் உண்டாகும்,
அத்தகைய துன்பத்தையே இந்த மாலையில் அடைந்திருக்கிறோம், அதனால்
நம் காதலர் செய்த காதலினை
ஒரு நொடிப்பொழுதும் மறக்க முடியுமா?
					மேல்
#302 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மலைச்சரிவில் நீண்டு வளர்ந்துள்ள செவ்வாழையின்
அசைகின்ற அழகிய இலைகள் அசையும் காற்று வந்து மோதும்போதெல்லாம்
படுத்துறங்கும் யானையின் பெரிய முதுகைத் தடவிக்கொடுக்கும்
நல்ல மலைநாட்டினையுடைய நம் தலைவனுடன் இனிமேல் நாம் அருவி நீரில் விளையாடலும்,
அங்கு அமைந்துள்ள சுனையிலுள்ள பல இதழ்களையுடைய நீலப் பூக்களைப் பறித்தலும்,
மணமுள்ள பூக்களைக் கொண்ட வேங்கைமரத்தில் கூட்டமான வண்டுகள் ஒலிக்கும்
மிக்க மணங்கமழும் சோலையில் பெரிதும் விரும்பி விளையாடலும் ஆகிய இச் செயல்கள்
நமக்கு எய்துவதற்கு அரியனவாகும் போலும், அன்புடைய தோழியே!
பெரிய பாறைகளையுடைய மலைச் சாரலில் என் தமையன்மார் உழுதவிடத்தில்
கரும்பு என்று சொல்லத்தக்கவிதத்தில் அழகுடைய பெரிய கதிர்களையுடைய தினை
கிளிகள் வந்து வீழும்படி விளைந்ததை அறிந்துவைத்தும், அக் கிளிகளை ஓட்டச் செல்லுங்கள் என்று
நம்மை அங்கே போகச் சொல்லமாட்டாள் போலிருக்கிறது, தம் இயல்புக்கு மாறாகப் பெரிதாக இருக்கும்
சிலவான தேமலை அணிந்து நெருங்கிப் பருத்த இளம் முலைகளை,
மென்மைத்தன்மையுடன் தழைத்து வளர்ந்த கூந்தலுடன்
பலமுறையும் உற்றுப் பார்ப்பாள், அறவுணர்ச்சி இல்லாத தாய்.
					மேல்
#303 பாலை ஔவையார்
எங்களிடையே உள்ள உறவைப் பிறர் அறிவதை அஞ்சி, அந்தக் களவுக் காதலை மறைத்து
பேயைக் கண்ட கனாவை வெளியே கூறாமல் மறைப்பது போல, பலவிதச் சிறப்புக்களுடன்
நுண்ணிதாக அமைந்த நமது காமமானது மற்றவர்க்குத் தெரிந்துபோய் - வெற்றியையுடைய வேலினையும்
வீரம் மிகுந்த சேனையையும் உடைய புதிய அணிகலன்கள் அணிந்த சேரனின்
மேகங்கள் விரும்பி மழைபெய்த, தெய்வங்கள் விரும்பியுறையும் அகன்ற இடத்தினையுடைய
மிகப் பெரிய கொல்லி மலையின் உச்சியில் பரவிச்
செறிந்து விழும் அருவிகளின் ஆரவாரம் போல - ஊர் தூற்றும் பழிச்சொற்கள் மிகுந்து எழப் பிரிந்துசென்றவர்
தம்முடைய அறிவையே சார்ந்து வாழும் இரவலர்கள் நாடி வந்தால்
மலையைப் போன்ற களிறுகளுடன், நல்ல அணிகலன்களை அள்ளித்தரும்
உலகம் முழுதும் மிகுத்துரைக்கும் வளவிய புகழினையுடைய பாரியின் பறம்பு மலையில் வாழ்கின்ற
வரிசையாகப் பறக்கும் குருவிக்கூட்டங்கள், காலையில் வெளியில் சென்று
வளைந்த முதுகினையுடைய செந்நெற்கதிர்களைக் கொணர்ந்து தரும்படி, ஒன்றுசேர்ந்து
அந்த நெற்கதிர்களுள்ள இடத்தை தேர்ந்து திரிந்து, பொழுது மறைய
துன்பத்தைத்தரும் மாலையில் மீண்டும் வந்ததைப் போல
மீண்டு வருவார் என்று எண்ணிய அறியாமை பொருந்திய நெஞ்சமே!
ஐயம் நீங்கித் தெளிவடைவாயாக! பலவும் ஒன்றுசேர்ந்து
காய்ந்துபோன மரத்தில் ஒட்டிக்கிடக்கும் சிள்வீடு என்னும் வண்டுகள், உப்பு வணிகரின்
கூட்டமான எருதுகளின் மணியொலி போல ஆரவாரிக்கும் பாலைவெளியைக் கடந்து,
வடிகின்ற நீரிலிருந்து மீன்கள் ஏறிப்போவது போல அவர்
சென்ற வழியில் செல்வதற்குத் துணிந்துவிட்டேன் நான்.
					மேல்
#304 முல்லை இடைக்காடனார்
பெரிய வானத்தில் ஊர்ந்து மேலேறிய மின்னல், இடி முதலிய தொகுதியையுடைய கரிய மேகம்
நீர் நிறைந்த நுங்கின் கண்கள் சிதறி வீழ்கின்றவை போல
தெய்வம் ஏறி நடுங்கச்செய்வது போன்ற நடுக்கத்தைச் செய்யும் குளிர்ச்சியோடு வருகின்ற ஆலங்கட்டிகளோடே
பருத்த மழையின் மிக்க துளிகளை ஒன்றுகூட்டி, வானத்தில் முழக்கமிட்டு
நிறம் மிக்க துளிகளைப் பொழிந்த பெரிதாய்ப் புலர்கின்ற விடியற்காலையில்
நன்றாகப் பரப்பிச் சீர்செய்தது போன்ற சமமான நிலப் பரப்பில்
செறிவாக அடைத்து நிறுத்திவைத்ததைப் போன்ற தெளிவான நீரைப் பருகித்
தன் சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளுகின்ற நடையினைக் கொண்ட இளைய பெண்மான்
வலமாக முறுக்குண்டு எழும் கொம்புகளையுடைய தலைமைப்பண்புடைய ஆண்மானோடு
ஆடுகின்ற கிளைகளையுடைய குருந்தமரத்தின் குறைவான நிழலில் தங்கியிருக்க,
வண்டுகள் ஒலித்துப் பூக்களை மொய்க்க, பிடவுச்செடிகளின் மலர்கள் கட்டவிழ்ந்து மலர,
காண்பதற்கு அரிய புள்ளிகளையுடைய மயில்கள் களிப்பாக ஆட, கோடுகோடாய்க் கிடக்கும் மணல் பரப்பின்மேல்
நீலமணியுடன் கலந்த செம்பவளம் போல அழகு மிக
காயாம் பூவின் வாடல்மலர்கள் பலவும் சேர்ந்து பரவி
தம்பலப்பூச்சிகளுடன் நிலத்தில் ஈரமான இடத்தை அழகுசெய்ய,
காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்
வளைந்து நிமிர்ந்த கொம்பினையுடைய யானையையுடைய அரசனின் பாசறையில்
போர்த்தொழிலுடன் வேறு நாட்டில் தங்கி, பெரிதும்
அறத்தின்வழிப் பட்டவர் அல்ல நம் மீது இரக்கம் இல்லாதவர் என்று
அவளை எண்ணி நாம் அடையும் நோயினை அறியாதவளாய்
எம்மை நொந்து வெறுப்பாளோ, அந்த மாநிற மேனிகொண்டவள்?
					மேல்
#305 பாலை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
பகல்பொழுதிலும் நீங்காததாய், இரவு
குன்றாத வெள்ளத்துடன் மெதுவாகக் கழிய,
மேகம் துளிகளாகப் பெய்வதால் குளிர்ச்சியுடன் வருகின்ற வாடைக்காற்றால்
நடுக்கம் அதிகமாவதினால் துன்பம் தருகின்ற நள்ளிரவில்
பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த குறை சிறிதும் இல்லாத படுக்கையில்
ஒருவரையொருவர் பருகுவது போன்ற காதலுடன் ஒருவரையொருவர் எதிரே நோக்கித் திரும்பி
ஒருவர் உடம்புக்குள் ஒருவர் புகுந்துவிடுவது போன்று கைகளால் கவர்ந்து அணைத்துக்கொள்ளும்
ஈருடல் ஓருயிராய் இருக்கும் காதலர்களும் வருந்துவர் அல்லவா!
நம்மீது கொஞ்சங்கூட இரக்கம் இல்லாத நம் தலைவர் பொருளீட்டுவதற்காக நம்மை விட்டுச் செல்ல
துன்பத்தைச் சுமந்த வருத்தமுற்ற நெஞ்சத்தையுடைய 
நான் எப்படிப் பொறுத்திருப்பேன்? தோழியே! 
பருத்த அடிமரத்தையுடைய பனைமரத்தில் தங்கியிருக்கும் கூர்மையான வாயினையுடைய
தனியாக இருக்கும் அன்றில் பறவையின் வருத்தமுடைய குரல் எனக்குள் தீமூட்ட
ஏற்கனனே உள்ளே கனன்றுகொண்டிருக்கும் உள்ளம் மெதுவாக
தீப்பிடித்துப் பெரிய நெருப்பாக மாற, வெளியே ஊதுகின்ற
கெடுதல் நினையாத கோவலர்களின் இனிய குழலோசையைக் கேட்டு - (நான் எப்படிப் பொறுத்திருப்பேன்?)
					மேல்
#306 மருதம் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பெரிய புகழையுடைய மருதநிலத் தலைவனே! என்னைப் பற்றிய அக்கறை உனக்கு வேண்டாம், நீ போகலாம்
அகன்ற பொய்கையில் இருக்கும் பிரம்போடு சேர்ந்து நீண்டு வளர்ந்த
முள்ளையுடைய கிளையையுடைய ஈங்கையின் பஞ்சு போன்ற உச்சியினையுடைய புதிய பூவும்,
மாமரத்தில் புதிதாய்த் துளிர்த்த இளம் தளிரும் வருடிக்கொடுக்க,
மீனை உண்ட நாரை உறங்கும் நீர் சூழ்ந்த வளமுள்ள வயல்களைக் கொண்ட
விளைநிலங்களிலுள்ள கரும்பின் சாய்ந்த பக்கத்திலே ஊர்ந்து
பொய்கையைச் சேர்ந்த ஆமை இளம் வெயிலில் காயும்
நெல்கூடுகளைக் கொண்ட தெருக்களையுடைய நல்ல வளம் வாய்ந்த ஊரினைச் சேர்ந்தவனே!
தங்கள் தலைமைப் பண்பு இதுதானோ? மாட்சிமையுள்ள
திங்களைப் போன்ற ஒளிபொருந்திய நெற்றியினையும், மின்னுகின்ற அணிகலன்களையும் உடைய ஒருத்தி
உம்மை இகழ்ந்த சொற்களையும் கூறி, சிவந்த
அழகிய இமைகளையுடைய குளிர்ச்சியான கண்ணால் பெரிதும்  துன்புறும்படி உம்மை நோக்கி
குளிர்ந்த மணங்கமழும் மாலையை அறுத்து, உம்முடன் 
ஊடல்கொண்டு சிறு பிணக்கம் செய்து எமது
மணல் நிறைந்த தெருவழியே சென்றாள்
					மேல்
#307 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
சிறிய நெற்றி பசலை பாயவும், பெரிய தோள்கள் மெலிந்துபோகவும்,
அகன்ற அழகிய அல்குலில் இருக்கும் அழகிய வரிகள் வாடிப்போகவும்,
பகலும் இரவும் மனம் தடுமாறி, மெல்லென
மழையை எதிர்கொண்ட மலரைப் போல் கண்களில் நீர் ஒழுக,
இங்கு இவள் துயரங்கொண்டு இருப்பாள் என்று எண்ணாமல், பொருளீட்டும் செயலை விரும்பி
நீ பிரிந்து செல்வது சரிதானா? ஐயனே! வேங்கைப் புலியின்
கொலைவெறி பிடித்த பகைமையை அழித்த உயரமான அழகிய யானை
மயக்கத்தைத் தரும் மதத்தால் செருக்குற்று வலிமை மிகுந்து
வழிச்செல்வோரைக் கொல்லும் முள்ளம்பன்றிகள் நிறைந்த அகன்ற காட்டில்
பெரிய கையையுடைய கரடிக்கூட்டம் புற்றாஞ்சோற்றினைத் தேடி எடுக்கும்
புற்றுக்களையுடைய சுவரினையுடைய புதர்கள் படர்ந்த அம்பலத்தில்
கடவுள்தன்மை இல்லாமல்போன அரிய அடியினையுடைய தூணில்
நீண்ட காலம் சேர்ந்துவாழும் பழமையின் காரணமாக, அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல்
பெரிய சேவல்புறா தன் பெடையோடு கூடி ஒலிக்கும்
பெரிய பாறைகளுள்ள ஊர்களையுடைய மலையடிவாரத்திலுள்ள வழியில் - (நீ பிரிந்து செல்வது சரிதானா?) 
					மேல்
#308 குறிஞ்சி பிசிராந்தையார்
புலியுடன் போரிட்டதால் வருந்திய நடையைக்கொண்ட களிற்றின்
நீண்டதாக வகிர்ந்த நெற்றிப்புண்ணைக் கழுவ இரவில்
ஆலங்கட்டியுடன் மிகுந்த மழை பொழிந்த விடியற்காலத்தில்
மிக்க வெண்மையையுடைய அருவியின் நீர் மிகுந்து பெருகி வருவதால்,
ஒளிரும் மலை மறையும்படி வெண் மேகங்கள் கூடி
மண் பாத்திரங்களைச் சுடும் சூளையின் புகையைப்போலத் தோன்றும் நாட்டையுடைய தலைவனே!
நீ எதற்காக இரவில் வருகிறாய்? பகலிலே வந்தால்
வெற்றியை ஒருபோதும் இழக்காத வேலையுடைய, ஈகைக்குணத்தால் மகிழ்ச்சியடையும் என் தந்தை அமைத்த
களிறு அண்ணாந்துபார்த்து எட்டமுடியாத மலைக்குகையின் மேலிருக்கும் பரணில்
சிறுதினைக் கதிர்களில் வந்து விழும் கிளிகளை எம்முடன் சேர்ந்து விரட்டி
வளம் மிக்க பாறையை அடுத்துள்ள நீர் நிறைந்த சுனையில் உள்ள குவளையின்
தேன் ஒழுகும் ஒளிவிடும் மணமுள்ள பூக்களைச் சூடிய
கூந்தலாகிய மென்மையான படுக்கையில் துயின்று, பொழுது சாய
காவலர் கண்ணுக்கு மறைந்து காவல் மிக்க தினைப்புனத்தை வளைத்து உண்ட
பெரிய ஒற்றைக் களிற்று யானையைப் போல நடந்து செல்வாய்,
கரிய கிளைகளையுடைய குறிஞ்சிச் செடிகளையுடைய, வாழ்வதற்கு இனிமையுடைய உமது ஊருக்கு.
					மேல்
#309 பாலை கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
வெற்றி பொருந்திய வாளினை வீசி, வில்லின் ஆற்றலால் கரந்தை மறவரைத் தோற்கடித்து
பால் நிறைந்த பசுக்கூட்டத்தைக் கைப்பற்றிக்கொண்ட கொடுமை நிறைந்த வெட்சி வீரர்
தொலைதூரத்துக்கு அம்பினை எய்தவாறு, அந்தப் மந்தையைத் தம்முடைய வறண்ட பூமிக்குக் கொண்டுவந்து,
தெய்வம் தங்கியுள்ள பருத்த அடிமரத்தைக் கொண்ட வேப்பமரத்தடியில்
கொழுப்புள்ள பசுவினைக் கொன்று, அதன் குருதியைத் தூவிப் பலியிட்டு
அதன் புலாலைப் புழுக்கி உண்ட உயர்ந்த இடம் அகன்ற பாறையில்,
களிறு தன் முதுகினைத் தேய்த்துக்கொள்ளும் கரிய அடிப்பகுதியையுடைய இலவமரத்தின்
விதையான வெண்ணிறக் கொட்டை ஆலங்கட்டியைப் போலப் பரவிக்கிடக்கும்
பாலைவெளி மிகவும் நீண்டது என்று எண்ணாதவராய், கூத்தர்கள்
பெரிய குதிரைப்படையைக் கொண்ட நல்ல போர்த்திறமை வாய்ந்த சேரனின்
திருத்தமான வீரக்கழலை அணிந்த சிவந்த அடிகளை விரும்பிச் சென்றாற்போல
நாம் சென்றால் என்ன? தோழியே! மூங்கிலின்
அழகிய தண்டினை உடைத்த கவண் கல்லின் வேகமான கடும் தாக்குதல் உள்ள,
வெப்பம் மிக்க கதிர்களையுடைய பகற்பொழுதில் நடமாடாமல்
இரவில் தினைப்புனத்தை மேய்ந்த வலிமை மிக்க சினம் கொண்ட யானை
குளிர்ந்த பெரிய புதரைக் கண்டு மலைப்பாம்பு என்று எண்ணி அஞ்சும்
குன்றுகள் குறுக்கே நிற்கும் வழிகளையுடைய அவர் சென்ற நாட்டுக்கு - (நாம் சென்றால் என்ன? தோழியே!)
					மேல்
#310 நெய்தல் நக்கீரனார்
விரைந்து செல்லும் தேரையும், ஏவலாளரையும் தொலைவில் நிற்கவைத்து, நீ மட்டும் இங்கு வந்து நிற்கும்
பெருந்தன்மையாகிய இனிய பண்பினையுடையவனாய் இருக்கின்றாய்! மேலும் நீயும்
தொழத்தக்க தோற்றத்தினையுடையவனாய் இருக்கின்றாய். இருப்பினும் உன் நெஞ்சத்துத் துயரை வெளிக்காட்டி
பல நாள் எம்மிடம் வந்து, பணிவான சொற்களைப் பலமுறை கூறுவதினால்
கருங்குவளை போன்ற மையுண்ட கண் கலங்க, உன்னிடம்
இவளும் பெரும் மயக்கம் கொண்டிருக்கிறாள், 
தாய்மார் உள்ள பெரிய மாளிகையில் சுற்றத்தார் பாராட்ட
அன்பினால் வளர்ந்த பெண்ணாக இருப்பதால்
ஓரளவுக்குப் பெரிதும் பேதைமையுடையவள், அதனால்
குன்றைப் போல் தோன்றும் குவிந்த மணல்மேட்டையுடைய கடற்கரைத் தலைவனே!
இன்று இவ்விடத்தில் இருப்பதை விரும்பவேண்டாம், இவ்விடத்திலிருந்து சென்று, அதோ தோன்றுகின்ற
பூக்கள் மலர்ந்த புன்னை மரத்திற்கு மேலே காணப்படுகின்ற பனைமரத்தை அடைந்தால்
கூப்பிடுதூரத்தில் உள்ளது, அவ்விடத்திலிருந்து
உப்புமூடை வண்டிகளைச் செலுத்திக்கொண்டுவரும் உமணரின் வண்டி வரிசையுடன் வந்த
பாதுகாவல் உடைய பெட்டைக்கோழி அஞ்சி ஓட, முழங்கி எழுந்து
இடி போன்ற ஒலியினையுடைய அலை சிதறி விழும்
கடலையே வேலியாகக் கொண்ட எமது சிறிய நல்ல ஊர்.
					மேல்
 



#311 பாலை மாமூலனார்
பெரிய பெண்யானையைப் பரிசிலாகப் பெறும் இரவலர் போல, வாசலில் நின்று
அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த அகன்ற மாளிகையின் ஒருபக்கம்
ஓவியத்தில் வரைந்தாற் போன்ற திண்ணிதாய் நிற்கும் கதவினை,
பேய் நடமாடும் நள்ளிரவில் காவற்கார் அயர்ந்து இருக்கும்போது
திறந்து வந்து, நம்முடன் ஒன்றாயிருந்து, ‘உன்னைக் காட்டிலும் சிறந்தவர்கள்
இப்பிறவிக்கான இந்த உலகத்தில் இல்லை’ என்று பல நாட்கள்
பொலிவுபெற்ற கூந்தலைத் தடவிக்கொடுத்த காதலுடன்,
நீரெல்லாம் வற்றிப்போக, திசையெல்லாம் வெம்பிப்போக,
புதிய வழிப்போக்கர் வரும்போது அவர்களை உபசரித்து, இடையர்கள்
இளைய எருதுகளின் கழுத்தில் கட்டிய மூங்கில் குழாயில் உள்ள சுவையான புளிச்சோற்றை
பசியினால் ஏற்பட்ட காதடைப்பு நீங்க, தேக்கு இலையில் பகிர்ந்தளிக்கும்
புல்லி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள செல்வதற்கு அரிய
பாலை வழியைக் கடந்து சென்றாரென்றாலும், தம் வரவை நீட்டிக்கமாட்டார்
கனிவான மொழியால் நம்மைத் தேற்றிவிட்டு நம்மைப் பிரிந்துசென்றவர் - (தம் வரவை நீட்டிக்கமாட்டார்)
					மேல்
#312 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
இருவர் மனங்களும் ஒன்றுபட்டுவிட்டதால், மணம் செய்துகொள்வதை விரும்பி, மறைவாக
இரவில் சந்திக்க வரும் துன்பமெல்லாம் பறந்துபோக,
மணம்செய்துகொள்ளத் தலைவன் முடிவெடுத்துவிட்டதால், பெரிதும் மகிழ்ந்து
உயர்ந்த மலையிலிருந்து இறங்கிவரும் மிகுந்த மழைநீராலாகிய வெள்ளத்தில்,
காந்தள் மலர்ந்துள்ள அழகிய சிற்றூர் மக்கள் தூற்றும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல்
செவ்வரி படர்ந்த செழுமையான குளிர்ந்த கண்கள் சிவந்துபோகும்படியாக, நாளை
பெரிய மலையைச் சேர்ந்த நம் தலைவனின் மார்பே தெப்பமாக
நீரில் விளையாடுவோம், வருவாயாக, அன்பும் அழகும் பொருந்திய என் தோழியே!
மூங்கில் நிறைய வளர்ந்திருக்கும் மலைச் சாரல் மறையும்படி கால் இறங்கி
இனிய இசையைக் கொண்ட முரசினைப் போன்று முழங்கி, பகைவர்களின்
புறமுதுகு கண்ட முழங்காலைத் தொடும் பெரிய கையினையுடைய
வெற்றியுள்ள போரினையுடைய பாண்டியன் செல்லும் போரில் உயர்த்திய 
கொல்லும் புகழ் வாய்ந்த வேலினைப் போல
கொடிவிட்டு மின்னிப் பரவியுள்ளது மழை.
					மேல்
#313 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
இனி நீ வருந்துவதற்கு வேறொன்றும் இல்லை, அஞ்சுவதைத் தவிர்ப்பாயாக என்று
உன் அழகு மேலும் அழகாக வளரும்படி தழுவிக்கொண்டு, நம் உள்ளத்தைக்
கவர்ந்தவராகிய நம் தலைவர் சென்ற வழியினை நினைத்து, நாள்தோறும்
நீரில் மூழ்கிப் போரிடும் மீன்களைப் போன்ற கண்களில் நீர் பெருக,
நுண்மையாக வெப்பத்துடன் பெருமூச்செறிந்து
இரவும் பகலும் துன்பம் வருத்தப் பெரிதும் வருந்தி
பாம்பு விழுங்கிய திங்களைப் போன்று நெற்றி தன் ஒளியினை இழக்க,
அவரையன்றி வேறு ஆதரவு இல்லாத நாம் இங்குத் தனித்திருக்க,
பொருள்மீது ஆசைகொண்டு பிரிந்துசென்றாரென்றாலும், நம் மீது அன்பு கொண்டு
வந்துவிடுவார், வாழ்க, தோழியே! ,மிகுதியான
நிதியத்தைக் கொட்டிக்கவிழ்த்துவிட்ட நீண்ட துணிப்பை போல
பாம்புகள் உடல் வாடிக்கிடக்கும் வறட்சி மிக்க பாலைவெளியில்
சென்றுகொண்டேயிருக்கும் புதிய வழிப்போக்கர் மேல் கள்வர்கள் அம்பு எய்ய, அதனால் இறந்துபோனோரின்
பிளந்த புண்ணிலிருந்து வரும் குருதியைக் குடித்து
ஒற்று வேலையாகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினையுடையவாய்
வீட்டுப்பக்கம் வந்து தங்கும் காக்கைகள் இருக்கும்
கற்கள் உயர்ந்த குன்றுகளையுடைய மலைவழியே சென்றவர் - (வந்துவிடுவார், வாழ்க, தோழியே!)
					மேல்
#314 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
நீல மணியைப் போன்ற நீர் பொதிந்த கருவினைக் கொண்டு
கரிய விசும்பு அதிரும்படியாக முழங்கி, ஆலங்கட்டி மழையுடன்
நிலம் குளிர்ச்சியுற்று காடுகள் தழைக்க
எருதுகளை ஆராய்ந்து கலப்பையில் பூட்டிய உழவர்கள் பாடும் ஏர்மங்கலப்பாடலாகிய இனிய குரல் ஒலிக்க,
குட்டியையுடைய இளைய பெண்மானைத் தழுவிக்கொண்டு, முல்லை நிலத்தில்
முறுக்கேறிய கொம்பினையுடைய கலைமான் பச்சைப் பயிர்களினூடே துள்ளித் திரிய,
நிரம்பிய மழையைப் பெய்து உலகிற்கு உதவிய கார்ப்பருவத்தைச் செய்கின்ற இந்தக் காலத்தில்,
புரவிநூல் கூறும் முறைப்படி நுணுக்கமாக அமைந்த வேகத்தால் காற்று எனக் கூறத் தகும் குதிரை
கல்லென்று ஒலிக்கும் மணி இடைவிடாமல் ஒலிக்க, தேரோட்டுவதில் வல்ல பாகன்
வாவிச்செல்லும்படி அடக்கி நடத்தும் தாவுகின்ற ஓட்டத்தையுடைய நீண்ட தேரானது
ஈரமான இடங்களில் தான் செல்லும் வழியினை அறுத்துக்கொண்டு செல்ல, நரம்புகள் இனிதாய்த் தொடுக்கப்பட்ட
நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப்பண் தோன்ற,
இத்தகைய மாலைப்பொழுதில் அவர் வந்து சேராவிட்டால், அவரது நிலை
எப்படி இருக்குமோ? பாணனே! சிறிது கூறுவாயாக என்று
தெய்வத்தன்மையுடைய கற்பினையுடைய மடப்பம் வாய்ந்த எம் தலைவி கூற,
செய்யும் செயல்கள் தளர்வதற்குக் காரணமான மயக்கம் கொண்ட நெஞ்சில்
எங்கள் வெறுப்புத்தரும் துன்பம் நீங்க நீ வந்து சேர்ந்தாய்,
எம் தலைவிக்கு இனிய செயலைச் செய்தாய், உன் தலைமாலை வாழ்க!
வீட்டில் வேலியாகச் சூழ்ந்து வளர்ந்த வெண்ணிற முல்லைமலர்களால் ஆன
பெரிய மாலை கமழும் புதுமைப்படத் தழைத்த கூந்தலையும்
இனிய முறுவலையும் உடைய இளையோளாகிய இவள் இடைவிடாமல் தழுவிக்கொள்ளும்படியாக
நிலைபெற்றுத் திகழட்டும் உனது அகன்ற மார்பு.
					மேல்
#315 பாலை குடவாயில் கீரத்தனார்
குட்டையான தலைமயிரும் கூந்தலாகிச் சிறிய நெறிப்புகள் உடைய ஆயின, முலைகளும்
உச்சியில் மென்மையான முகத்துடன் சிமிழ்கள் போல் ஆயின,
இவள் பெண் என்னும் இயல்பினை அடைந்துவிட்டாள் என்று பல முறை
கண்ணால் அவளைக் கூர்ந்து நோக்கி, நேற்றுக்கூட
என் நெஞ்சம் கொஞ்சம் ஐயம்கொண்டது, அதன் பின்னும்
எனது அறியாமையினால் நான் அவளை வீட்டுக்குள் அடைத்துவைக்கவில்லை,
பெரிய புகழினையுடைய பாண்டியனின் மதுரை நகரைப் போன்ற தன்
அரிய காவல் பொருந்திய பெரிய மாளிகையில் சிலம்பு நீக்கும் நிகழ்ச்சியையும் நடத்தப்பெறாள்,
நெடுந்தூரம் சென்று, நீர் இல்லாத சுனையைக் கண்டு சோர்ந்துபோய்
புறாக்கள் குடைந்து தின்ற புன்மையான காய்களைக் கொண்ட நெல்லிமரத்தில்
மேல்காற்று வீசி உதிர்த்துவிட்ட குவிந்த கண்ணையுடைய பசிய காய்கள்,
கோத்த நூல் அற்றுப்போய் விழுந்த துளையுள்ள பளிங்குக் காசுகளைப் போன்று
வறண்ட நிலத்தில் உதிர்ந்துகிடக்கும் பாலைவழியில், மிக விரைவாக,
கூர்மையான வேலையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல, அவனுடன் சென்று
அவள்தான் தங்கியிருப்பாளோ? - தேக்க மரத்தின்
அகலமான இலைகளைப் புதர் போன்று அடுக்கிவைத்துள்ள, குடிசையின்,
ஊனை வேகவைத்து உண்ணுகின்ற முற்றத்தைக் கொண்ட
காட்டைப் பொருந்தி வாழும் வாழ்க்கையினையுடையவர்களின் சிற்றூரில் - (தங்கியிருப்பாளோ?)
					மேல்
#316 மருதம் ஓரம்போகியார்
நீராடும் துறையில் மீன்கள் வந்துபோகும் பெரிய நீர்நிலையாகிய பொய்கையில்
அழகிய மலரையுடைய ஆம்பல் கொடியை மேய்ந்த வளைவுவளைவான கொம்பினையும்,
ஈரமான குளிர்ந்த முதுகினையும் உடைய வயதான எருமைக்கிடா
செறிவான சேற்றுக்குழம்பில் இரவெல்லாம் துயின்று, ஞாயிறு தோன்றிய காலையில்
பசிய நிணத்தையுடைய வரால் மீனின் உடல் துண்டாகும்படி வெளிப்பட்டு,
நிறமுள்ள பகன்றைக் கொடியைத் தலையினில் மாட்டிக்கொண்டு, பழமையான ஊரில்
போரில் வெற்றிபெற்ற வீரர்களைப் போல் நுழையும் ஊரினைச் சேர்ந்த நம் தலைவன்,
தேரில் ஏற்றிக் கொணர்ந்ததால் வந்த, தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்த, நெகிழ்ந்த தோள்களையுடைய
ஊரே கொள்ளாத அளவுக்கான பரத்தையர்களை மேலும் மேலும் கொண்டுவரப்
பரத்தமை ஒழுக்கத்தைக் கைவிடாதிருக்கிறான் என்று வீணே நீ
ஊடல்கொள்ளுதல் தகுதியானதா - இல்லற வாழ்க்கையை உடைய மடந்தையாகிய உனக்கு?
அப்படி ஊடல்கொண்டு வாழ்வதற்கு வலிமையுடையவர்கள்,
திருமகள் தன்னைவிட்டு நீங்க, குருணையைச் சுளகினால் கொழித்து
தாமே சமைத்து உண்டு, தனியே இருப்பவர் ஆகி,
இனிய மொழியைக் கொண்ட புதல்வர் பால் இல்லாமல் வற்றிப்போன முலையைச் சுவைக்க,
வருத்தத்துடன் இருப்பார் என்பதை அறிந்திருந்தும்
அறிவில்லாதர் ஆவார் அவ்வாறு கணவருடன் பகைமைபாராட்டுபவர்.
					மேல்
#317 பாலை வடமோதம் கிழார்
மாகமாகிய விசும்பில் மழை தன் தொழிலான பெய்தலைச் செய்து முடித்த பிறகு,
பரப்பி வைத்ததைப் போல பகலிலும் இருளினை விரித்துவைத்துப்
புகையின் நிறம் போன்ற உருவினையுடைய பனிக்காலம் நீங்க,
குவிந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் கூரிய நுனிகளையுடைய - கூர்மையான பற்களையும்
புன்முறுவலையும் உடைய மகளிர் செம்பஞ்சிக்குழம்பு ஊட்டிய நகத்தைப் போன்ற -
முதிராத பலவான இதழ்களும் உதிரும்படியாக ஒன்றாகப் பாய்ந்து
அந்த மலரிலுள்ள தேனைப் பருகும் ஆசையினால் வண்டுகள் தம் காலால் கிண்டி உதிர்த்திட
பொன்னால் செய்த தராசின் கிண்ணமாகிய தட்டு பொலிவுபெறுமாறு வெள்ளியின் 
மெல்லிய கம்பியை அறுத்த துணுக்குகள் அத் தட்டின்மேல் உதிர்வன போன்று
ஒலியெழுப்பும் வண்டுக்கூட்டம் தாது உண்ணும்போதெல்லாம், குரவமரத்தின்
உயர்ந்த கிளையிலுள்ள மணமுள்ள மலர்களின் பூந்துகள்கள் கோங்கின் மலரின் மேல் உதிர்ந்து விழ
அம் மலர்களைக் காலால் துவைத்து எழுகின்ற வண்டின் விட்டிசைக்கும் ஒலி, விளரிப் பண்னை இசைப்பதற்கு
விசைத்துவிட்ட யாழின் நரம்பு போல் இம்மென்று ஒலிக்கின்ற,
மரங்களும் இன்பமாய் இருக்கும் அழகிய இளவேனில் பருவத்தில்
வெயிலின் பிரகாசத்தைப் போன்ற பூக்கள் செறிந்த மராமரத்திலிருந்து
குயில்கள் எழுப்பும் ஆரவாரக்குரலை எம்முடன் கேட்க
வந்துவிடுவோம் என்று சொல்லிப் போன இந்த இளவேனில்காலம், அவர் இருக்கும் அந்த இடத்தில்
இல்லைபோலிருக்கிறது என்று மெதுவாக ஆராய்ந்து
நாம் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஒன்றை விரும்பிய போது
உள்ளத்தில் நினைத்தவை வந்து சேர்வது போல
வந்து நின்றார் நம் காதலர், நம்மைவிட்டுப் பிரிந்து
எங்கே போனது, பல நாளாக
நம் அன்னையும் அறிந்திட நம்மை வருத்தி
நமது அழகிய நெற்றியில் பரவிக்கிடந்த பசலை நோய்?
					மேல்
#318 குறிஞ்சி கபிலர்
காட்டிலுள்ள விலங்குகள் செல்லும் வழியில் யானையும் திரியும்,
உச்சி வானத்தில் இடியும் மிகவும் முழங்கும்,
அஞ்சத்தக்க விதத்தில் பாம்புகளும் புலிகளும் இருக்கும்,
இரவில் நடமாடிக்கொண்டு, குறுகிய வழியில் தனியே வருகிறாய்,
மலையிலிருந்து விழும் அருவியின் ஒலியுடன், தேனீக்கள்
முழவின் ஒலியுடன் சேர்ந்த யாழின் இசையைப் போல ஒலியெழுப்பும்
பழமையான வெற்றியினையும், அகன்ற இடத்தினையும் உடைய பயன் மிக்க மலைநாட்டைச் சேர்ந்தவனே!
மணம்செய்துகொள்ள விரும்பினாலும் அதை இன்றே செய்துகொள்வாய், அது ஒன்றும் பெரிதல்ல!
ஆனால், இன்று முதல் வரவேண்டாம், அப்படியே வந்தால்,
மனத்தடுமாற்றமுள்ள துயரத்துடனே நாங்கள் இங்கே தனித்திருக்க,
என்னைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, உன்னுடைய
மலைகள் பொருந்திய சிற்றூரைச் சென்று அடைந்த பின்னர்
சிறுதுநேரம் ஊதிக்காட்டு - வேட்டையாடும்போது
மூங்கில் மிகுந்த காட்டில் பிரிந்துபோன உன்னுடைய
நாயை அழைக்கின்ற குறிப்பினைக் கொண்டுள்ள ஊதுகொம்பினை - 
					மேல்
#319 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
கருமணி போன்ற வாயையுடைய காக்கையின் கரிய நிறத்தையுடைய பெரிய சுற்றம்
பிணிப்புள்ள விழுதுகளையுடைய ஆலமரத்தின் அசைகின்ற கிளையில் ஏறி இருந்து
வளைந்த வில்லையுடைய எயினரின் அரணைக் கவர்வதற்கு முயலும்
கொடிய தொழிலையுடைய வீரர்கள் வில்லால் எய்தலால் இறந்தவரின்
விழுந்துகிடக்கும் பிணத்தைக் கவர்ந்து உண்ணும் பாழ்பட்ட அகன்ற பாலைநிலத்தில்,
தெய்வம் என்று சொல்லும்படியான வடிவினைக்கொண்ட கண்களையும், அழகாக
மெலிந்த இடையினையும், நுண்ணிய மாமை நிறத்தினையும்,
பொன் போன்ற பூக்களையுடைய வேங்கையின் புதிய மலரைப் போன்ற
நல்ல மார்பினில் எழுந்த தேமலை அணிந்த அழகிய முலைகளையும்
வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் பெரிய தோளினையும் உடைய இவளைவிட்டு
பிரிந்து செல்ல எண்ணுவீராயின், அரிய பொருள்
உமக்குக் கிடைக்கட்டும், கொய்யப்பட்ட தழையாகிய
தளிரைப் போன்ற பிரிவுத்துன்பத்தைத் தாங்க இயலாத இயல்புடையவள்,
மென்மையானவள், இளையவள், உம்மீது பெரும் அன்புகொண்டிருப்பவள்,
பிரிந்து செல்வேன் என்று சொல்கிற உமக்கு எதிராக நின்று
தனியே இருந்துகொள்வேன் என்று சொல்லும் மனத்திட்பம் இல்லாதவள்.
					மேல்
#320 நெய்தல் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பில் வலையை வேகமாக இழுத்துப் பிடித்து
மீன் பிடிக்கும் படகினைக் கொண்ட தமையன் கொண்டுவந்த கொடிய வலிய மீன்களை
தழையாடையை அணிந்த அல்குலையுடைய செல்வம் மிக்க தங்கைமார்
விழாக் கொண்டாடும் தெருக்களில் இன்ன விலை என்று கூறி விற்கும்
கடற்கரைச் சோலை சூழ்ந்த அழகிய சீறூர்களையுடைய கடற்கரைத் தலைவனே!
மலரைப் போன்ற மையுண்ட கண்களையுடைய எம் தோழியின் துன்பமும்
ஊரார் வாயின் பழிச்சொற்களும் நீங்கும்படி நீ அருள்செய்யாமல் பொய்த்தாலும்,
நீண்ட உப்பங்கழியினைத் துழாவி மீனையுண்ணும் குட்டைக் கால்களையுடைய அன்னம்
அடம்பங்கொடி இருக்கும் மணல் மேட்டில் தன் அழகிய சிறகுகளைக் கோதி உலர்த்தும்
வளைந்து நிற்கும் புன்னை மரத்தின் பூந்தாதுக்கள் உதிர்ந்து அழகுசெய்யும் பெரிய துறையில்
நெகிழும் குறுமணலைப் பிளந்து வந்த கொடுஞ்சியையுடைய நீண்ட தேரினை
நாங்கள் மணலில் செய்து விளையாடிய பாவையைச் சிதைக்கும்படி ஓட்டி வந்து, நீ
இவளின் தோளின் நலத்தைப் புதிதாக நுகர்ந்த நாளில்
நீ கூறிய சூளும் பொய்யோ? கடலே இதனை அறியும் சான்று.
					மேல்
 




#321 பாலை கயமனார்
பசியோடு இருக்கும் யானையின் வாட்டம் போல,
வாடிக் கிடக்கும் நீரில்லாத சுனையில் நுழைந்துவரும் மேல்காற்றின் தெளிவான ஒலி
இழுத்துக்கட்டிய பறை முழங்குவது போல மலை வெடிப்புப் பள்ளத்தில் எதிரொலிக்க,
கதிர் போன்று மெல்லிய கால்களையுடைய பெண்மான் உண்பதற்காக, அதன்மீது விருப்பம் கொண்ட கலைமான்
குதிர் போன்று பருத்த அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் வெண்ணிறப் பூக்களை மேயாமல் விட்டுக்கொடுத்து
தனது ஆண்குரல் தோன்ற அதனை அழைக்கும் தொலைவான இடத்திலுள்ள, பெரிய மடியினையும்
ஒலிக்கும் மணியினையும் உடைய கூட்டமான பசுக்கள் பருகுவதற்காக, இடையர்கள்
மண் விட்டுக்கொடுக்கும் நிலத்தை உடைத்துத் தோண்டிய கசியும் ஊற்றுக்கண்ணையுடைய கிணற்றினைக்
கன்றினையுடைய பெண்யானை தன் களிற்றோடு தடவிப்பார்க்கும்
பொலிவிழந்த இடங்களையும், ஊர்ப்பொது மன்றத்தையும் உடைய அழகிய குடியிருப்புகளையும் உடைய சிற்றூரைத்
தன் துணைவனுடன் தங்கியிருக்கும் தற்காலிக ஓய்விடமாகக் கொண்டிருப்பாளோ? (அல்லது)
அம்பினை எய்யும் ஆறலைக் கள்வருக்குப் பயப்படாத அஞ்சாநெஞ்சினனாகிய காளைபோன்றவனுடன்
இரவுநேரத்தில் அவனுக்கு முன்னால் நடந்து செல்வாளோ?
இவற்றில் எந்தக் காரியத்தைச் செய்வாள்? எனக்கு வேதனையாயிருக்கிறது,
பரல்மணிகளை உள்ளே பெய்து மூடிய ஆராய்ந்து செய்த சிலம்புகளைக் கழற்றிவைத்துவிட்டு,
தாய்க்குத் தெரிந்துவிடும் என்று அஞ்சி,
மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் சிறு குன்றுகளையுடைய பெரிய மலையைக்கடந்து சென்ற என் மகள் -
					மேல்
#322 குறிஞ்சி பரணர்
பிரகாசமான ஞாயிற்றின் வெயில் மறையும்பொழுது, (மேகங்கள்) பரவி, மின்னலால் இருளைக் கிழித்து
மிகுதியான துளிகளைப் பொழிந்த நள்ளிரவின் இருளில்
சிறிதும் குன்றாத காமம் வருத்தி நிலைநின்று அலைத்திட,
மலை முகட்டிலிருந்து விழுபவரைப் போல் நடுங்கி, அச்சம் உண்டாக,
பாம்பின் மேல் வீசிய கோல் போலத் தனித்துக் கிடந்து
வருந்துவாய் போலும் நெஞ்சமே! இடியோசை போல முழங்குகின்ற
யானைகள் ஒன்றாய்த் திரண்டுள்ள, வாளுடன் வாள் பொருதுகின்ற போர்க்களத்தில்
மின்னுகின்ற வேலினையுடைய சேனையையும், விரையும் தேரினையும் உடைய திதியன் என்பவனின்
மலையிலிருந்து வரும் அருவி விழும் மரங்கள் செறிந்த காட்டில்
பிறைநிலாப் போன்ற கொம்புகளையுடைய அஞ்சாமையுடைய பன்றியின்
தசையைத் தின்னுகின்ற புலி முழங்கும் மலைச் சாரலையும்,
உச்சிப்பாறையில் உள்ள இனிய தேனைக் குறவர்கள் அறுத்தெடுக்க,
முயலுபவர்கள் அம் முயற்சி கைகூடாமல்போவதற்குக் காரணமான ஏறுதற்கரிய நெடிய குவடுகளையும் உடைய
புகுவதற்குக் கடினமான பொதியில் மலையைப் போலப்
பெறுவதற்குக் கடினமானவள் நம்மை இவ்வாறு வருத்தும் நம் தலைவி.
					மேல்
#323 பாலை பறநாள் பெருங்கொற்றனார்
இம்மென்று எழும் பெரிய பழிதூற்றும் பேச்சுக்களை இவ்வூரில் நம்மைப்பற்றி
எழுப்புவோரின் அகம்பாவமான சொற்கள் அழிந்துபோகும்படியாக, வெளியூருக்குச் சென்றிருந்த நம் காதலர்
வந்துவிடுவார் என்பது விரைவில் நடக்கும், எனவே
உன் அழகிய, சிவந்த, மெல்லிய, சிறிய
பாதங்கள் நிலத்தில் பட்டால் வலிக்குமோ என்று அஞ்சி, மெதுவாக
வளைந்து நடக்கும் நடை அழகுபெற நடந்து
காண்பதற்கு வருவாயாக, கற்பினால் மேம்பட்ட தலைவியே!
பலா மரங்கள் பலவும் திரண்டு நிற்கின்ற மூங்கில்கள் நிறைந்த மலைச்சாரலில்
கூட்டமாகச் செல்லும் யானைகளைப் போன்று, வானத்தில்
ஞாயிற்றின் மின்னுகின்ற ஒளிக்கதிர்கள் ஒளிமங்கிப் போகும்படி பரவி, பாம்பின்
படம் சிதையும்படி இடிக்கின்ற கடுமையான முழக்கத்தையுடைய இடியுடன்
ஆலங்கட்டியோடு கூடிய மிகுதியான துளிகளைப் பெய்து
கால் இறக்கியுள்ளது உன் கூந்தலைப் போன்ற மேகங்கள்.
					மேல்
#324 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
இன்று இவள் வீட்டுக்கு விருந்தினர் வரப்பெறுவாள் போலிருக்கிறது - திருத்தமான அணிகலன்களை அணிந்த,
பெரிய, மெல்லிய, மூங்கில் போன்ற தோள்களையுடைய, கபடமற்ற மொழிகளையுடைய இந்தப் பெண்;
தளிரின் தன்மையையுடைய கிளி, இனிதாக வளர்த்த
இளைய குஞ்சின் சிறகினைப் போன்ற,
நீண்டு பெய்யும் மழை வளர்த்த பச்சைப் பயிரினையுடைய முல்லைநிலத்தில்
பறையின் முகப்பு போன்ற நிறைந்த நீரைக்கொண்ட சுனைகளிலெல்லாம்
மழைத்துளிகள் வேகமாக விழுவதால் நீர்க்குமிழ்கள் துள்ளியெழுந்து மறைவது போன்று
சேற்றில் (தேர்ச்சக்கரங்கள்) பதிவதால் குமிழ்கள் தோன்றி மறைய,
காற்று கிளைகளை அசைத்து உதிர்த்ததால் மணம் கொண்டு பரந்து
மீன்கொத்தியின் சிறகினைப் போன்ற கருமணல் கொண்ட நிலத்தின் மீது உதிர்ந்து விழுந்து அழகுசெய்த
வண்டுகள் தேன் உண்ணும் மணம் மிக்க பூக்களைச் சிதைத்த தேர்ச்சக்கரங்கள்
குளிர்ந்த நிலத்தில் பிளந்து சென்ற சுவட்டில்
வரிசையாகச் செல்லும் பாம்புகளைப் போன்று விரையும் நீர் வேகமாக ஊர்ந்து செல்ல
பெருந்தகையான தலைவனின் தேர் வந்துகொண்டிருக்கிறது -
முல்லைப் பூக்கள் மலர்கின்ற மாலைநேரத்தில் தலைவியின் மாளிகையில் நுழையும் திட்டத்துடன்.
					மேல்
#325 பாலை மாமூலனார்
வாழ்க, தோழியே! நான் கூறுவதைக் கேட்பாயாக, நம் காதலர்,
வெண்மையான மணல் உயர்ந்து இருக்கும் பொலிவுபெற்ற வாசலையுடைய பெரிய மாளிகையில்
இருள் செறிந்த நீண்ட இரவில், சந்திப்பதற்காகக் குறித்த இடம் வாய்க்கப்பெற்ற
களவொழுக்கமும் அளவுகடந்து அலராகிப்போய்விட்டது, அன்னையும்
இதனை அறிந்து இடைவிடாமல் காவல்காக்கிறாள், இதற்குப் பின்னர் மிகவும்
இங்குத் தங்கியிருத்தல் எப்படி முடியும்? பாவம் அவள் என்று நம்மேல் இரக்கங்கொண்டு,
வெற்றியின் மீதுள்ள மேம்பட்ட விருப்பத்தினால், நாடுகளைக் கைப்பற்றும்படி
அள்ளன் என்பவனை ஏவிய அதியன் இறந்த பின்னர்
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணைப்பறை ஒலி அடங்கினாற்போல
மலையின் அழகு அழிந்துபோன முதிர்ந்த காடாகிய அரிய பாலைவழிகள்
மிகவும் கொடியன, உன் கூரிய பற்கள் நீர் உண்ணும்படியாக
குளிர்ச்சியான மழை ஒருநாள் பெய்யட்டும், ஒளி பொருந்திய நெற்றியையும்
தளரும் இயல்பினையும் உடைய பெண்ணே! உன்னோடு செல்வேன்!
சிலநாள் பொறுத்துக்கொள் என்று, பலநாளும்
ஊக்கம் குன்றாத உள்ளத்தோடு உடன்போக்காகக் கூட்டிக்கொண்டு செல்வதை வலியுறுத்தி,
பின்னர் அவையெல்லாம் அழிந்துபோக, வடக்கிலிருக்கும்
நல்ல வேலையுடைய பாணன் என்பவனின் சிறந்த நாட்டில் இருக்கும்
வானத்தின் கண்ணாகிய ஒளிபொருந்திய ஞாயிற்றின் வெம்மை மிக்க நீண்ட வெளியில்
ஆளைக் கொல்லும் யானை வழியைப் பார்த்துத் தங்கியிருக்கும்
சோலைகளையுடைய காட்டுப் பாதையில் போய்
நாம் இங்கே தனித்திருக்க அப்பால் சென்றுவிட்டார், எனவே
நமக்குத் துன்பத்தைச் செய்கின்ற ஊழ் காரணமாக இன்னும் எத்தகைய பழிவந்து சேருமோ?
					மேல்
#326 மருதம் பரணர்
ஊரல் என்ற அழகுவாய்ந்த பொன்னிறம் கொண்ட தேமலையும்,
பெரிய ஆவலையுண்டாக்கும் குளிர்ந்த கண்களையும், பெரிய தோளினையும், சிறிய நெற்றியையும் உடைய
உன் இளைய பரத்தை அழகிற் சிறந்தவள், செல்வர்களின்
விரைந்து செல்லும் தேர் குழிகளை ஏற்படுத்திய தெருக்களில்
உயர்ந்த கொடிகள் அசையும் அட்டவாயில் என்னும் ஊரிலுள்ள
நீண்ட கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகினைப் போன்ற
அவளின் அழகினைப் பாராட்டி, அவளுடன் சேர்ந்து நடப்பதால் உண்டாகும் அழகால் பொலிவுபெற்று
அவளுடன் நீர்விழாவின் போது நீ செல்வதனை நாங்களும் விரும்புகிறோம்; வெற்றி பொருந்திய வேலையும்
அணிகலன் அணிந்த யானையையும் உடைய சோழனின் படைத்தலைவனும்,
ஓடக்கோலால் அளந்து காணமுடியாத ஆழமுடைய காவிரியாற்றின் கரையைச் சேர்ந்த தோட்டங்களையும்,
நீர் நிறைந்து ஓடும் மதகுகளையுமுடைய போர் என்னும் ஊருக்குத் தலைவனும் ஆகிய
பழையன் என்பவன் பகைவர் மீது எய்த வேல் போல
அவளைப் பார்ப்பவர்கள் மீது அவளது கண்கள் குறிதப்பாமல் தைக்கும்.
					மேல்
#327 பாலை மருங்கூர் பாகை சாத்தன் பூதனார்
இன்பமும், துன்பமும், சேர்ந்திருப்பதுவும், பிரிவதும்
நல்ல பகற்பொழுதும், இரவும் போலத்
தம்முள் வேறுவேறு இயல்பையுடையன ஆகி, தம்முள் ஒன்றற்கொன்று முரண்பட்ட பண்புகளாய்
இருக்கின்றன என்பதை நீ நன்கு உணர்ந்திருப்பாயானால், இவளைப் பிரிந்து செல்லும்
துன்பத்தையுடைய கொடிய பாலை வழியில் நல்ல பொருளீட்டும் ஆசை தூண்டிவிட
நீ செல்லுதல் நமது அறிவிற்குப் பொருத்தமானதா? மன உறுதிப்பாடு இல்லாத நெஞ்சமே!
நீ செல்லுவதற்கே முடிவெடுத்துவிட்டாயென்றால், சிறிதளவாவது
என்னை நினைத்துப்பார்ப்பாயா? மிகுந்த ஒளியாகிய வெயிலின்
ஆவியாகிய அழகிய கானல்நீரின் அலைகளை உண்மையான நீரென்று நினைத்து விரும்பி
விலங்குகள் மிகுதியாக அலைந்து திரிகின்ற இடமான மரல் வற்றிய அகன்ற இடத்தையுடைய
களர்த்தன்மை நிலைபெற்ற இடம் அகன்ற பாலைவெளியில்
செங்குத்தான மலையிலிருந்து கொழித்து வரும் அருவிநீர் போல, பாம்பின்
அழகிய வரி அமைந்த மேற்சட்டை நிமிர்ந்து விழுகின்ற பக்கத்தையுடைய
புற்றுக்கள் அடிப்பகுதியில் கட்டப்பட்டுள்ள உலர்ந்த கிளைகளையுடைய மரத்தில் உள்ள
கரிய நிறத்தையுடைய உருவத்தையும் நீலமணி போன்ற கண்களையும் உடைய காக்கைகள்
பசிய கொழுப்பினைக் கவர்ந்துண்ணும் இடமான மிக்க பிணங்கள் கிடக்கும் கிளைத்துச்செல்லும் வழிகளில்
வழிப்போக்கர் செல்லும்பொழுது அவர்களின் பின்புறத்திலிருந்து இரக்கமில்லாமல் கொன்ற ஆறலைக்கள்வர்கள்
தங்களின் அம்புகள் செலவானதற்கு வருந்துகின்ற வழிகளையுடைய
மூங்கில் மிகுந்த பாலைவெளியைக் கடந்த பின்பு - (என்னை நினைத்துப்பார்ப்பாயா?)
					மேல்
#328 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
சுரபுன்னை மரங்கள் மிகுந்த மலைச்சாரலில் மேகங்கள் வலப்புறமாக எழுந்து, கூத்தர்களின்
முழவு முழங்குவது போல் முழக்கத்தையுடைய இடியுடன்
மிகுந்த மழை பெய்த நள்ளென்னும் ஓசையையுடைய நள்ளிரவில்
பாம்பின் தலையை இடறியவாறு அந்த நடுச்சாமத்து
இரவில் வந்து என் முலைகளின் இடையே பொருந்திக்கொண்டு
நம் துன்பம் நம்மைவிட்டு அகல நம்மை அணைத்துக்கொண்டு, இரவெல்லாம்
இனிதாகப் பொருந்திய நட்புடன் பழகிய தலைவன், பின்னர் நம்மேல் பிரியம் இழப்பான் என்பதை
தெளிவாக நாம் முன்பே நன்கு தெரிந்திருந்தால்
ஒளிவிடும் வளைகள் நெகிழவும், துன்பம் பரவி வருந்தவும், நாம்
அவர் முயங்கும்போதெல்லாம் அவர் வருந்தும்வண்ணம் இரண்டு கைகளாலும் அவரை அள்ளிக்கொண்டு
நமது மார்புக்கிடையே அவரை அடக்கிவைத்திருப்போம், தோழியே! இளைய பெண்யானை
மேகம் தவழும் மலைச் சரிவில் தனது முதல் சூலினை ஈன்று
மூங்கிலைத் தின்னும் தன் யாக்கையினை தன்மீது விருப்பம் கொண்ட ஆண்யானை தடவிக்கொடுக்க
வாழைகளையுடைய அழகிய மலைச்சரிவில் துயிலும்
சாரலையுடைய மலைநாட்டினனான அந்தத் தலைவனின் அழகிய மார்பினை - (அடக்கிவைத்திருப்போம்)
					மேல்
#329 பாலை உறையூர் முதுகூத்தனார்
என் அழகிய கண்களும், நெற்றியும் பசலைபாய்ந்து நிற்க, துன்பம் மிகுந்து
இங்கு நான் வருந்தியிருக்கவும், என்னைவிட்டுப் பிரிந்துசெல்லத் துணிந்து
தனித்து வாழும் வல்லமையுடையவர் என்றால், நம் தலைவர்
தலை குவிந்துள்ள குடிசைகளையுடைய அழகிய குடியிருப்புக்களையுடைய சிற்றூரில்
உமணர்கள் பகலில் தங்கி, ஒலிக்கின்ற மணிகள் ஆரவாரிக்க
வளைந்த நுகத்தடியிலே கட்டப்பட்ட சிவந்த கயிற்றையுடைய வண்டிகளின் வரிசையை
எருதுகள் இழுத்து வருந்துகின்ற கொடிய இடங்களில் புழுதியைத் திரட்டி
வீசுகின்ற காற்று சுழற்றியடிக்கும் பாலைவழியில் சிறிது தங்கியிருந்து
செல்வாரோ? மற்ற விலங்கினங்கள் மேல் பாய்ந்து
அவற்றின் மேலே இருந்து அவற்றின் முதுகினை மிகவும் ஒடிக்கின்ற சிறிய வரிகளையுடைய புலிக்குட்டி
நீண்டு உயர்ந்த அழகிய யானை நீரின் மேல் ஆசைகொண்டு நீட்டிய
கையைக் கடித்து முழங்கும் இடமான மேகம் துஞ்சும் காட்டில்
புலி புகுந்து ஈனும் வற்றிப்போன சுனையினையுடைய
பனி உறைந்த உச்சியினையுடைய பல மலைகளையும் கடந்து - (செல்வாரோ?)
					மேல்
#330 நெய்தல் உலோச்சனார்
உப்பங்கழியில் நம்மோடு சேர்ந்து பூக்களைப் பறித்தும், கடற்கரைச் சோலையில் நம்முடன் தங்கியும்,
நாம் மணற்பாவை செய்து விளையாடுகையில் நம்முடன் வரிப்பட்ட மணலில் கூட அதைச் செய்து விளையாடியும்,
இன்பமுறும்படி நம்முடன் சேர்ந்திருந்தும், தம்முடைய பெருந்தகைமைக்கு இழிவுண்டாக நம்மைப் பணிந்தும்,
தனது துயரம் வெளிப்பட்டுத் தோன்ற, குற்றமில்லாத நமது துயரை
அறியாமல் சோர்ந்த மனத்துடன் 
அவன் ஊருக்குப் போகின்றான், அந்தோ! மென்னிலமாகிய நம் நெய்தல் நிலத் தலைவன்
அவ்வாறு செல்கின்றவன் போகின்ற திசையையே நோக்கிப் பெரிதும் இரக்கமுற்று, அவனுக்கு முன்னே நின்று
செல்லவேண்டாம் என்று தடைசெய்வதற்குச் சென்ற என் வலிமையற்ற நெஞ்சம்
அவன் முன்னே தான் போய்ச் சேர்ந்ததா? ஒருவேளை சென்றடைந்தாலும்
நமது ஆசையை அவனிடம் கூற நாணங்கொண்டு பேசாமல் நிற்கின்றதா?
இங்கே பார்! அவர் ஏறிச் சென்ற தேரை;
வெண்மையான மணல் குவிந்த குவியல்களின் மேலும்
மணல் மேட்டிலுள்ள தாழை மடல்களிலும்,
அழகிய அடும்பின் பச்சையான கொடிகள் அறுந்துபோக ஏறியும் இறங்கியும்
சிறிய குடியிருப்புகளையுடைய பரதவராகிய நம் உறவினர் பெரிய கடலில் செலுத்திய
விரைந்து செல்லும் வளைந்த மீன் படகு போல,
முதலில் உயர்ந்து காணப்படுகின்ற தோற்றத்துடன் செல்லச் செல்லக் குறைந்து அப்பால் மறைந்து போகும்.
					மேல்
 




#331 பாலை மாமூலனார்
நீளமாய் நிற்கும் நடுப்பகுதியையுடைய, சிவந்த தளிரையுடைய இருப்பை மரங்களின்
தந்தத்தினைக் கடைந்ததைப் போன்ற மிகுதியான வெண்ணிறப் பூக்களை,
ஆடுகள் பரவிச் செல்வதைப் போன்று செல்லும் ஈன்ற பெண் கரடிகளின்
கூட்டம் கிளைகளில் ஏறிக் கையால் உருவித் தின்று மிஞ்சிய பூக்களை
பசிய தளிர்களாலான தழையுடை அணிந்த எயினரின் மகளிர்
கணுக்களோடு திரண்டு நீண்டுள்ள மூங்கில் குழாயில் திரட்டியெடுத்து
குன்றுகளின் இடையே இருக்கும் சிறிய குடியிருப்புகளின் தெருக்கள்தோறும் விற்றுத்திரியும்
சிறிய ஊர்களையுடைய பல நாடுகள் பின்னே கழியச்
சென்றவரான நம் தலைவர் நம்மேல் அன்பு இல்லாதவர், தோழியே! நாள்தோறும்
அரிய இசைத்துறைகளை முற்றிலும் உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய
பாணர்கள் ஆரவாரிக்கும்படியாகப் பல அணிகலன்களை அளித்து
நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினையுடைய திதியன் என்பவன்
வேளிர் என்னும் தன் பகைமன்னர்களுடன் போரிடுவதற்கு உறையிலிருந்து உருவிய
வாளின் வாய் போன்று துன்புறுத்தும் வறண்ட பாலைவெளியைக் கடந்து - (சென்றோர் அன்பு இலர் தோழி)
					மேல்
#332 குறிஞ்சி கபிலர்
முளைகள் வளருகின்ற தூற்றினையுடைய மூங்கிலை முறித்துத்
தன் இனத்தோடு மேய்ந்த நிறம் மிக்க யானை
நீருண்ண விரும்பிச் செல்லும் வழியில் தனது உருவத்தைப் பார்த்துத் தன்னைத் தாக்குவதற்குப் பதுங்கிய
போர்செய்யும் பகைமையையுடைய புலியைக் குத்திக் கொன்றதால், கூர்மையான நுனியையுடைய,
குருதியால் சிவந்த  தனது கொம்பினைப் பெரிய மழைநீரில் கழுவிக்கொண்டு
கற்குகைகளையுடைய மலைச்சாரலில் மெல்ல மெல்லச் சென்று
தன் மேல் சினங்கொண்ட பகையான புலியைக் கொன்ற செருக்குடன், ஆறு கால்களையுடைய
யாழ் போன்ற இசையினையுடைய வண்டுகள் ஒலிக்கும்படி சென்று தன் பெண்யானையைக் கூடி
வாழை மரங்களையுடைய மலைச் சரிவில் துயிலும் நாட்டையுடைய தலைவன்
அவன் உனது உயர்வுக்குத் தகுந்த மென்மையான இயல்பையுடையவன் என்று நீ
அன்பால் உரைத்து என் மனம் அமைதிகொள்ளும்படி கூறிய இனிய சொற்களெல்லாம்
இப்பொழுது உண்மையாய் ஆய்விட்டன, வாழ்க, தோழியே! தன்னை விரும்பியவர்க்கு
அமிழ்தம் போன்ற இனிய மணமுள்ள மாலையையுடைய தன் மார்பினில்
வண்டுகள் இடையில் செல்ல மாட்டாத இறுகிய தழுவுதலும்
அழியாத காதலும் அவனை முதன்முதலில் கண்ட நாளில் இருந்தது போலவே இருக்கின்றன
					மேல்
#333 பாலை கல்லாடனார்
யா மரத்தின் ஒளிவிடும் தளிரின் மேல் அரக்கினைத் தெளித்துவிட்டதைப் போல், உன்
உடலின் அழகிய நிறத்தின் மேல் பசலை பாய்ந்துநிற்க,
வருத்தம் மிகுதியும் உடையவளாகி, அவர் மேல்
பழி உண்டாக்குவதை விரும்புகின்றாய் - கூறப்படும் சொற்களைக் கேட்டு
அவரால் துன்பத்தைத் தாங்கியிருக்க முடியுமா - அங்கே சென்று உன்
துன்பம் எவ்வளவு பெரியது என்பதை யாராவது கூறினால்? - பொருளீட்டும் வேலை
விளங்காமற்போனாலும், அப் பொருளின் பயன் கெட்டுப்போய் நிற்க, அடுத்து என்ன செய்யலாம் என்று ஆய்ந்து
அங்கே நெடுநாள் இருக்கமாட்டார், தோழியே! மேல்காற்றால்
குருத்து இற்று உதிர்ந்த வருத்தம் நீங்காமலே
துளையையுடைய பஞ்சு பொதிந்த தலையும் சுருங்கி, வற்றிப்போய் நிற்கின்ற
முதுவேனில் காலத்து இளம் பனையைப் போல, கையை உயர்த்தி
யானையின் பெருங்கூட்டம் மேகத்தை நோக்கிக் கதறும்
மலையைக் கடந்து வெகுதூரம் போய்விட்டாரென்றாலும், மனம் மாறி
இன்னும் நாட்கள் இடைப்படாமல் வந்துவிடுவார் நம் தலைவர் என்று
எனக்கு இன்பமான பயனை அளிக்கின்ற கொள்கையுடன், இனிமை நீங்காது கூறும்
உன் வாயின் இனிய மொழிகள் அப்படியே நல்லபடியாக அமையுமாறு
அவர் வந்துவிட்டால் நல்லது, அப்படி வராமல்
காதலர் அங்கேயே இருந்துவிட்டாரென்றாலும், இங்கே நம்முடைய
பசலை மறைந்துபோவது மிக எளிதாகும் - 
தாம் சென்றுள்ள நாட்டில் தமது பொருளீட்டும் தொழில் முடிவடைந்து
ஊருக்குத் திரும்பும் எண்ணமுடையவரென்றாலும்
திரும்பி வரப் பெரிதும் ஆர்வமுடன் இருக்கின்றார் என்ற தூது வந்தால் - (பசலை மாய்தல் எளிது-மன் தில்ல)
					மேல்
#334 முல்லை மதுரை கூத்தனார்
புறங்கொடுத்து ஓடாத நல்ல காளையின் தோலால் போர்த்த
வெற்றியினையுடைய முரசம் இழும் என முழங்க,
பகைவர் நாட்டினைத் திறையாகக் கொண்டோம் எனவே, பாகனே!
ஒலி முழங்கும் கடலில் நீரை முகந்துகொண்டு எழுந்த மேகத்தொகுதியுடன்
பெரிய களிற்றின் பருத்த கை போல கால் இறக்கி,
கரிய பெண்யானைகளின் கூட்டம் போன்று சேர்ந்து திரண்டு,
வளைந்து இறங்கும் கைகளையுடைய மகளிர் விளையாடும்போது போடுகின்ற
கழங்கினைப் போன்ற ஆலங்கட்டிகளுடன் வேகமான விழும் மழைத்துளிகளை விசி
வானம் மழைபெய்வதைத் தொடங்கிவிட்டது; வானத்தில்
ஒளிவிடும் சிறகுகளையுடைய அன்னங்கள் வரிசையான ஒழுங்கில் பறந்து செல்வதைப் போன்று
காற்று எனக் கூறப்படும் நான்கு சேர்ந்து பூட்டப்பட்ட குதிரைகளையுடைய
கொடிஞ்சியையுடைய நீண்டதேரின் மிகுந்த வேகம் தளராமல்,
கூட்டமான மயில்கள் ஒலியெழுப்பும் கார்காலத்தின் தன்மையையுடைய அகன்ற முல்லை நிலத்தில்,
வலிமையான சூட்டு எனப்படும் புறவட்டப்பகுதியையுடைய சக்கரங்கள் ஈரமான நிலத்தைக் கிழித்துச் செல்ல,
இப்பொழுதே காண்பதற்காகச் செலுத்துவாயாக - அழகிய நிறத்தினால்
பொலிவுடையனவாய் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்கின்ற மையுண்ட கண்களையும்,
தழைத்த பலவான கூந்தலையும் உடைய தலைவியின் அழகிய சிறிய நெற்றியை - (ஈண்டே காணக் கடவு-மதி)
					மேல்
#335 பாலை மதுரை தத்தம் கண்ணனார்
வறுமையினால் இருண்டுபோன நெஞ்சத்தையுடையவர்களின் துயரத்தை நீக்குகின்ற
இரக்கத்தை மிகுதியாய்ப் பெற்றிருந்தாலும், கொடை என்பது
பொருள் இல்லாதவர்க்கு இயலாதது என்பதை
நானும் அறிவேன்; ஆண்யானையானது தனது
கொல்லுகின்ற கொம்பு ஒடிந்துபோகும்படி குத்திச் சினம் மிகுந்து,
துன்பம் தரும் வேனில் காலத்தில் தனக்கு இனிய துணையான பெண்யானை உண்ணும்படி
பட்டுப்போன கிளைகளையுடைய மரா மரத்தின் பட்டையை உரித்து ஊட்ட,
துன்பமே நிலைபெற்றிருந்த நிலம் பிளந்துபோன கொடிய பாலைவெளியைக் கடந்து செல்லுதல்
நமக்கு மிகவும் கடினமானதொன்றும் இல்லை; மலர்ந்த மலர்களையுடைய மாலையையும்
வெற்றி பொருந்திய முரசினையும், பகைவரைக் கொல்லுகின்ற போர்வன்மையையும் உடைய பாண்டியனின்
மாட மாளிகைகளைக் கொண்ட பழைய நகரத்தைச் சூழ்ந்துள்ள மதிலின் வெளிப்புறத்தை ஒட்டியுள்ள,
நீண்ட வெயிலில் வாடிப்போன குட்டையான மடல்களையும், திரண்ட காலினையும் உடைய கமுகமரத்தின்
தொடுக்கப்பட்ட பல மலர்களின் மாலையின் தொகுதியைப் பொதிந்து கட்டிவைத்த
குடையைப் போன்ற நன்றாகக் காய்கள் காய்த்த கழுத்திலுள்ள
பாளை பிடிப்பு நீங்கி வீழ, பக்கத்தை அடைந்து,
வாளை வடித்துவைத்ததைப் போன்ற வயிற்றினில் அமைந்த சூலில் உள்ள,
பருவம் அடைந்தபோது வெளிப்பட்ட இனிமை பொருந்திய அழகினையுடைய
ஆரம் போன்று அழகு விளங்கும் புதிய பூக்கள்
நீளமான கவரியைப் போன்று வண்டுகள் தேன் உண்ணும்படி விரிய,
அதிலிருந்து முத்தைப் போன்ற வெண்மையான பூக்கள் உதிர்ந்து பரவி
சோழியைப் போன்ற அழகிய நிறமுடைய ஆலங்கட்டி போல
மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் சிறப்புடன், அழகு மிக
பூவுடன் வளர்ந்த முற்றாத இளங்காயின்
நீரைக் காட்டிலும் இனிமையுடையதாய் கூர்மையான பற்களிடத்தில்
அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும்,
ஒளிபொருந்திய வளையினையும் உடைய இளையவளாகிய தலைவியை நாம் உடன் அழைத்துச் சென்றால் - 
					மேல்
#336 மருதம் பாவை கொட்டிலார்
குழல் போன்ற தண்டினையுடைய சேம்பின் கொழுத்த மடலில் அமைந்த அகன்ற இலையுடன் கூடிய
பாசி படர்ந்த நீர்ப்பரப்பில் குட்டிகளோடு இருந்த
இரை உண்ணாத பெண்நாயின் பசித்துன்பத்தை நீக்குவதற்கு
காலைப் பொழுதில் இரையினைக் கொண்டுவருவதற்குப் புறப்பட்ட நீர்நாய்
வாளை மீனைக் கவ்வி அதனுடன் போரிட்டதால் நீருண்ணும் துறையில் நீர் கலங்கிக்கிடந்ததால்
தெளிந்த கள்ளாகிய தேறலைப் பருகி மகளிர்
நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அழகிய குடங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு, நல்ல பண்புகளில்லாத
தம் கணவன்மாரின் பரத்தைமை ஒழுக்கத்தைப் பற்றிப் பாடிக்கொண்டு, மலர்ந்த பூங்கொத்துக்களையுடைய
காஞ்சிமரத்தின் நிழலில் குரவைக்கூத்து ஆடுகின்ற
இனிய பெரிய பொய்கையின் துறையைப் பொருந்திய தலைவனுடைய
தேர் கொண்டுவர வந்த அழகிய அணிகலன் அணிந்த பரத்தைமகளிர்
என்னுடைய அழகைப் பழித்துப் பேசுகின்றனர் என்பர், அச் செயல்
யானைப்பாகன் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பதற்குக் காரணம், மிக்க சினத்தினால்
கொல்லுகின்ற யானை அவனைக் கொல்லாமல் விட்டுவைத்திருப்பதால் ஆகும் காரியம் போன்றது,
அப் பரத்தையரும், பிறரும் சிறப்புள்ளவர் போல் செல்லுதல்
முழவு ஒலிக்கும் துணங்கைக்கூத்து ஆடும் விழாக்காலத்தில்
நான் அங்கு வராமல் இருப்பதினாலேதான், வந்தால், வானத்தில் இருக்கும்
ஞாயிற்றின் போக்கினை ஒட்டி அதனைப் பார்த்தவண்ணம் திரும்புகின்ற நெருஞ்சிப்பூவினைப் போல
என்னையே பார்த்துக்கொண்டு நம் தலைவனைச் திரியச்செய்யாவிட்டால், வெற்றி பொருந்திய வேலினையும்
மழை போன்ற அம்பினையும், மேகம் போன்ற தோற்கேடயங்களையும் கொண்ட சோழரது
விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த
ஆரியரின் படையைப் போல உடைந்துபோகட்டும் என்னுடைய
அழகாக இறங்கிவரும் முன்கையில் செறிந்துள்ள வளையல்கள்.
					மேல்
#337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
மலைச் சாரலிலுள்ள யா மரத்தின் உயர்ந்த கிளையில் துளிர்விட்ட
மாரிக்காலத்து குளிர்ந்த தளிரைப் போன்ற மேனியையும்
பெரிய அமைதிபொருந்திய குளிர்ந்த கண்களையும் உடைய தலைவி தனிமைத் துன்பத்துடன் வீட்டிலிருக்க,
இந்த அயல்நாட்டில் அவளைவிட்டுப் பிரிந்து வாழ்தல் இனியதல்ல என்பதனால்
நமக்கு இனி பொருள் என்பது நம் ஊராகிய அவ்விடத்தில் இருப்பதே என்றும் - உப்புவணிகரின்
கழுதைக்கூட்டம் போன்ற சிறிய பாறைகள் உள்ள வழியில், பலமுறை
தூது செல்லும் பார்ப்பான் மடித்த வெள்ளோலையைக் 
கொண்டுவரும் தன்மையைத் தொலைவிலிருந்து பார்த்து, ஆயுதங்களையுடைய கையையுடைய ஆறலைக்கள்வர்
உண்ணாததால் ஒடுங்கிய வயிற்றையுடைய இந்தப் பார்ப்பானின் கையிலிருப்பது
பொன்னாக இருக்கவும்கூடும் என்று கருதி வீணாக
அவனைக் கொன்று அப்போதே வீழ்த்திய கொடுமையையுடைய மறவர்,
உடுக்கமுடியாத கந்தையை உடுத்தியிருக்கும் அப் பார்ப்பானின் வறுமையைப் பார்த்து,
குருதியால் சிவந்த காம்பினையுடைய அம்பினை எடுத்துக்கொண்டு கையை நொடித்துக்கொண்டு சென்றுவிட,
நீளமாக ஒழுகிய குருதியுடன் தொங்கிக்கிடக்கிற குடலைக் கடித்து
வரிகளையுடைய மரல் உள்ள வழியில் ஓர் ஆண் நரி
வெண்மையான பரல்கள் மின்னும் கண்ணைப் பறிக்கும் ஒளியையுடைய கிளைத்துச் செல்லும் வழியில்
கள்ளியின் நிழலில் ஊளையிட்டுக்கொண்டு தங்கியிருக்க,
மேகங்கள் பெய்யாமல் போனதால் வெப்பம் மிக்க காட்டிலுள்ள நடக்கமுடியாத வழியில் 
நாம் தனியே வரும்படி செய்தாய், நடுக்கம் தரும் இருளுடன் கூடிய
பெரிய ஆரவாரமுடைய மழை தலையெடுத்துப் பெய்கின்ற
பெரிய குளிர்கொண்ட வாடையால் அவள் வருந்துவாள் என்றும் - (நாம் தனியே வரும்படி செய்தாய்)
					மேல்
#338 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
மலைகள் உயர்ந்திருக்கிற இவ்வுலகில் உயர்த்திக் கூறும்
வீரம் மிக்க படைகளையுடைய அரசர்களுக்குள்ளும்
அறத்தினைக் கடைப்பிடிக்கும் செங்கோலாட்சியுடன், போரில்
பகைவரின் வீரத்தை வீழ்த்தி மேம்பட்ட வெற்றியால் உயர்ந்த திண்ணிய தோளையும்,
பலரும் புகழும் செல்வச்சிறப்பினையும் உடைய பசும்பூண்பாண்டியன் என்பவனுடைய
தெய்வம் வீற்றிருக்கின்ற உயர்ந்த நிலையினையுடைய பொதிய மலையின் உச்சிமலைச் சாரலில் உள்ள
கிளைத்து வளர்ந்த ஒளிவீசும் காந்தள் மலரின் மணம் கமழுகின்ற வாசமுள்ள நெற்றியினையும்
கடைப்பகுதி ஒத்த நெய்ப்புடைய கூந்தலையும், உடைய மாநிறத்தவளான தலைவியினிடத்தில்
அவளின் நுண்ணிய திரண்ட ஒளிவீசும் வளையல்கள் நமது வளப்பமான முதுகினைச் சுற்றிக்கொள்ளும்படி
தழுவிக்கொள்ளுதல் நமக்குக் கிடைக்காது என்றாலும், எப்பொழுதும்
துன்புறுகின்ற நமது நெஞ்சத்துக்கு உடனிருந்து விசாரித்து அளவளாவும் துணையாக இருக்கும்பொருட்டு
பகைவரின் நாட்டினைப் பாழ்பட்டுப்போகும்படி அழிக்கும்
பகைவரால் கிட்டே நெருங்கமுடியாத வலிமையினையுடைய வெற்றி பொருந்திய வேலினையுடைய சேரனின்
அகன்ற பெரிய காட்டிலுள்ள கொல்லிமலையைப் போல
அவளுடன் நமக்குள்ள நட்பு கெட்டுப்போகாமல் நிலைபெறுவதாக; அவளிடத்தில்
நாம் விடுக்கும் தூது ஒழிந்துபோகாமல் செல்லட்டும்; பகைவர்
விண்ணுலகை அடையும்படியாக உருவிய திண்ணிய பிடியையுடைய ஒளிபொருந்திய வாளையுடைய
அண்மையில் ஈன்ற பசுக்களைக் கவர்ந்துவரும் வெட்சிவீரர்களுக்குத் தலைவனான
முறையாக அமைந்த போர்களையுடைய சோழனின் பண்டங்கள் நிறைந்த பட்டினப்பாக்கத்தின்
மக்கள் நடமாடுவதற்கு அரிய பெரிய துறையினில்
முழங்குகின்ற பெரிய கடலின் அலைகளிலும் பலவாக - ( அவள்வயின் அறாஅலியரோ தூதே)
					மேல்
#339 பாலை நரை முடி நெட்டையார்
விரைந்தோடும் குதிரைகள் பூட்டிய மிகுந்த வேகம் கொண்ட நீண்ட தேரின்
வலிமையுள்ள ஆரங்களைக் கொண்ட சக்கரங்கள் நிலத்தில் பதிந்து செல்லும் தடத்தில்
விரைந்து செல்லும் பாம்பு போல வேகமாகச் செல்லும் நீர் ஓட, குவிந்து
ஒன்றோடொன்று தொடர்பு இல்லாத விரல்கள் போலப் பயற்றுச்செடியில் காய்கள் முற்ற,
இவ்வாறாக முன்பனிக்காலம் வந்து நிலைகொண்டது; முன்பக்கமாக,
பொருளீட்டவேண்டும் என்று எழுந்த தளர்வில்லாத நெஞ்சத்திலுள்ள
ஆண்மை இழுக்க, தலைவியின்மேல் கொண்ட அன்பு பின்னே நின்று தடுக்க,
இவற்றால் இரண்டுபட்ட நெஞ்சம், அடுத்தடுத்த இரண்டு கணுக்களில் தீப்பற்றிக்கொள்ள,
இரண்டு தலைப்புகளிலும் உள்ள நெருப்பிற்கு இடையில் நின்று வருந்தி
ஒருபக்கமும் போகமுடியாத எறும்பினைப் போன்று இருக்கின்றோம்,
இப்பொழுதும் பெரிதும் வருந்திக்கொண்டிருப்பாளோ? பாவம் அவள்! உடலுடன்
உயிர் ஒன்றி இருப்பதைப் போன்ற நட்பினையும், அந்த உயிர்
இன்பமாக வாழ்வதனைப்போன்ற காதலையும் உடைய
சாதலைப் போன்ற துன்பத்தைத்தரும் பிரிவினைத் தாங்குவதற்கு அரியவளாகிய அவள் - (நோம்-கொல் அளியள்)
					மேல்
#340 நெய்தல் நக்கீரர்
பல நாட்களாக இருக்கும் இருவரின் வருத்தமும் நீங்க, பகற்பொழுதில் வந்து
புன்னை மரங்களையுடைய அழகிய சோலையின் இனிய நிழலில் பொழுதினைக் கழித்து
மாலை வந்தவுடன் ஒருவரையொருவர் மயக்கம்கொள்ளப் பார்த்து, தேரின் பூட்டுதலை ஆராய்ந்து
உன்னுடைய பாகன் வளமுள்ள தேரினை இயக்க, நீயும்
உன்னுடைய ஊருக்குச் செல்வதை விரும்புவதைக் கைவிடுக, இது எம் வேண்டுகோள்;
என்றும் கெடாத நல்ல புகழினையுடைய பொன்னாற் செய்த அணிகலன்களை அணிந்த திரையன் என்பவனின்
பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையினையுடைய பவத்திரி என்னும் ஊரினைப் போன்ற இவளின்
நல்ல அழகு வாய்ந்த இளமையான பெண்மைநலம் அழியும்படி, ஒல்லென்று ஆரவாரிக்கும் முழக்கத்தோடே
நீ செல்லும் வழியாகிய உப்பங்கழியில் நீர்ப்பெருக்கு மிகுந்துள்ளது,
கூரிய பற்களையுடைய பாம்புகளோடு, வலிமை மிக்க சுறாமீன்களும் சுழன்று திரியும்,
இவ்வழியில் போயிருக்கிறாரே, பொழுதும் பெரிதும் இருண்டுவிட்டதே என்று
உனக்காக நாங்கள் படும் வேதனை முற்றிலும் நீங்க, இன்றைக்கு இவ்விடத்தில்
தங்கிச் சென்றால் என்ன? பூக்கள் பொருந்திய கடற்கரைக்குத் தலைவனே!
பச்சை மீனைப் பணடமாற்றாக விற்றுப் பெற்ற வெண்ணெல்லின் மாவை
தயிரிட்டும் பிசைந்த உருண்டைகளை (உன் குதிரைகளுக்கு) வயிறாரக் கொடுப்போம், உனக்கும்
வடநாட்டிலுள்ளோர் கொண்டுவந்த வெள்ளை நிற வட்டக்கல்லில்
மேற்கு மலையான பொதிகையில் கிடைக்கும் சந்தனத்துடன் பிறபொருள்களையும் கூட்டிச் சேர்த்து அரைத்த
வண்டுகள் ஒலிக்கும் மணமிக்க சாந்தினைப் பூசுவோம், திண்மையான படகுடன் சென்று
பகலில் மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய தொழிலையுடைய நெய்தல்நில மக்கள்
மிகுந்த விசையுடன் எறிந்த கூர்மையான உளி மாட்டிக்கொள்வதால் ஒன்றாகச் சேர்ந்து பாய்ந்து
கொலைத்தொழிலையுடைய சுறாமீன்கள் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள்
தம் தொழிலை ஒழிந்து குளிர்ந்த கடலிலிருந்து அசைந்து வரும் காற்று வீசும்போதெல்லாம்
வீட்டு முற்றத்திலுள்ள தாழை மரத்தின் மீது கிடந்து தொங்கிக்கொண்டு அசையும்
தெளிந்த கடற்பரப்பினையுடைய வசிப்பதற்கு இனிமையான எமது ஊரில் - (சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப)
					மேல்
 




#341 பாலை ஆவூர் மூலங்கிழார்
என் உயிர் உய்யும் வழி இல்லை, தோழியே! மெல்ல மெல்ல
கோங்கும் கொய்யத்தக்க தளிர்களை துளிர்த்தன, குயிலும்
தேன் துளிக்கும் பூக்களைக் கொண்ட மாமரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து கூவும்,
நாட்டின் உயிரினங்கள் குடிக்கும் காவிரியின் கரைஉச்சியைத் தோய்ந்துகொண்டு வரும் மிகுந்த நிறைந்த
ஓடக்கோலை மறைக்கும் வெள்ளம் வற்றிப்போன பிந்தைய நாளில்
பெருமழை பெய்து ஓய்ந்த பிறகு மழைநீர் ஒழுகி ஓடினாற் போல பெரிய வாய்க்கால்களில் தங்கின நீரை
அறுகம்புல்லாகிய உணவினைத் தின்ற அசைகின்ற திமிலையுடைய நல்ல காளைகள்
வலிமையுடைய நாக்கினால் தளர்ச்சி நீங்கக் குடித்து,
குட்டையான நடுமரத்தைக் கொண்ட காஞ்சி மரத்தின் மாலை போன்ற மென்மையான பூங்கொத்துக்களிலிருந்து
பொன்னின் அழகுடைய நுண்ணிய பொடிகள் மேலே உதிர்ந்திட, ஒன்று சேர்ந்து
குவிந்து கிடக்கும் நெடிய மணல் மேட்டில் துயிலும்
அழகான வேனில் பருவம் அன்றோ இது
சிறந்த இன்பத்தை நுகரும் துணையை உடையவர்களுக்கு.
					மேல்
#342 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
கடிந்துரைத்தாலும் அவளை நினைப்பதை நிறுத்தமாட்டாய், தடுத்தாலும் அவளிடம் செல்லாமல் நிற்கமாட்டாய்,
நண்பர் கூறும் அறிவுரையைப்போல நான் கூறுவதைக் கேட்பாயாக, உனக்கு நான்
உறவினன் அல்லவா? நெஞ்சமே! தெற்கில் உள்ளதாகிய
வெல்லும் போராற்றலையுடைய பாண்டியரின் நல்ல நாட்டிலுள்ள
மண்ணாலான புற்றினையுடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு
பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரில் வாழும் கள்வருக்கு அரசனும்
ஏவுகின்ற வேலையைச் செய்யும் வீரர்களுக்குத் தலைவனும், பகைவரின்
அழிக்கமுடியாத அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துகள் வந்து கூடும்படியாகப்
பல போர்களை வென்ற இடியினைப் போன்ற பெரிய கையினையும்
அழியாத நல்ல புகழையும் கொண்ட பாண்டியனின் தோண்டப்படாத
நீராகிய அருவிநீர் விழுகின்ற ஓரிடத்தில் மலைக் குகையில் மறைந்த அழகிய
வரையர மகளிர் போலப் பார்ப்பதற்கு அரியவள்
அழகிய வரிகள் அமைந்த அல்குலையுடைய நம் தலைவி தானே வந்து நம்மைச் சேராதபொழுது.
					மேல்
#343 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வளைந்த மூங்கிலைப் போன்ற புடைத்தெழுந்து இறங்குகின்ற பருத்த தோளினையும்
சிலவாகிய அழகுத்தேமலைக் கொண்ட பல பூண்களையுடைய மென்மையான முலைகளையும் உடைய
பேரழகு படைத்த மார்பினைத் தழுவ விரும்பி,
வண்டியைக் கொண்ட உப்பு வணிகன் ஓட்டிச்செல்லும் சக்கரத்தின்
புன்மையான விளிம்பு சிதைத்த கடினமான பாறையிலுள்ள நடுகல்லின்
உச்சியில் சூட்டப்பட்ட மாலை வாடிப்போயிருக்கும் கழுவப்படாத பக்கவாட்டில்
கூர்மையான உளியால் செதுக்கப்பட்ட கோடுகள் மறைந்துபோன எழுத்துக்கள் அந்தப்
பாதைவழியே செல்லுகின்ற புதிய வழிப்போக்கர்க்கு வேறுவிதமான பொருளைக் கொடுக்கும்
இடங்கள் பொரிந்துபோயிருக்கும் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய காட்டிலுள்ள
பரந்த உச்சியையுடைய யா மரத்தின் அழகிய தளிகளையுடைய பெரிய கிளைகள் தரும்
வீட்டில் இருப்பது போன்ற நிழலில் இறங்கு வெயிலின் வெப்பம் குறைவதற்காக,
நீண்ட காதுகளையும், குட்டையான கால்களையும் உடைய ஆண் கழுதைகளின்
முதுகில் ஏற்றப்பட்ட நிறைந்த பண்டங்களின் பாரத்தால் ஏற்பட்ட தளர்ச்சியைப் போக்கிய
மீண்டும் புறப்பாடு செய்யாமல் இருப்பவர்களுடன் அளவளாவி அவர்களுக்கு ஆறுதலாய் அமைந்த
சிறந்த ஆண்மைக்குரிய செயலை விரும்பிய நீ, அந்த விருப்பத்திலிருந்து மாறுபட்டுத்
திரும்பிச் செல்ல நினைக்கின்றாய், வாழ்க, என் நெஞ்சமே! கள்ளால் பெறும்
மகிழ்ச்சியைப் போல மகிழ்வதற்கு ஏதுவாகிய செவ்வரி படர்ந்த செழிப்பான குளிர்ந்த கண்களையும்,
சிலவான மொழிகளால் பொலிவுபெற்ற பவள வாயினையும்,
பலவான மாண்புகளையும் உடைய நம் தலைவியைப் பிரிந்து வந்த நீ.
					மேல்
#344 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வளத்தைத் தரும் மழை பொழிந்த வெண்மை நிறமுள்ள களர்நிலத்தில்
வீசுகின்ற குளிர்ந்த காற்று படும்போதெல்லாம், நிலவொளி என்று சொல்லத்தக்க
தொகுதியான மொட்டுக்கள் மலர்ந்த முடம்பட்ட காலையுடைய பிடவமரத்தடியில்
கூர்மையான அழகிய வெண்ணிறப் பற்களையும் ஒளியுடைய நெற்றியையும் உடைய விறலியர்
கையால் சிறப்பாக ஆடுகின்ற தோளி என்னும் கூத்தைப் போன்று மெல்ல
மயில் கூட்டம் ஆடுகின்ற மரங்கள் மிகுந்த காட்டின் வழியே
இருள் வருவதற்கு முன்னே, விரைவாக
கழல் போல ஒலிக்கின்ற நாவினையுடைய தெளிந்த மணிகள் ஆரவாரிக்கும்படி
திங்களின் ஒளி ஒளிர்வதைப் போன்ற நிமிர்ந்த ஓட்டத்தையுடைய குதிரைகளை
நன்கு துலக்கப்பட்ட கொடிஞ்சி அழகுடன் தோன்ற, கடிவாளங்களை ஆராய்ந்து
செலுத்துவாயாக! வாழ்க நீ! தேரைச் செலுத்துவதில் கைதேர்ந்த பாகனே!
பசலையுற்ற துன்பம் வருத்த வருந்திய
அன்பு மிக்க இனிய காதலியின் மகிழ்ச்சியையுடைய முகத்தினை அடைய - (செலுத்துவாயாக!)
					மேல்
#345 பாலை குடவாயில் கீரத்தனார்
வானம் மழையைப் பொழிந்து, நிலத்தில் வெம்மை நீங்கி
குளிர்ச்சியான நிலையை அடைந்ததால், எம்மையும் உடன் அழைத்துக்கொண்டு செல்க எனப் பலமுறை
நாம் அவருடன் செல்வதற்கு விழைந்தோமாக, மிக்க புகழ் வாய்ந்த
காட்டில் உறையும் இறைவியான கொற்றவை அருள்கூர்ந்ததினால், வெண்மையான கால்களையும்
பல அணிகலன்களையும் உடைய குதிரைகளைப் பரிசிலாகப் பெற்ற பழைய புகழையுடைய
மிகவும் நுணுக்கம் அமைந்த செய்யுள் பாடும் புலவன் பாடிய
கூட்டமான மேகங்கள் தவழும் ஏழில் என்னும் குன்றத்திலுள்ள
கரிய காலினையுடைய வேங்கை மரத்தின் சிவந்த பூக்களாலான மாலையை
அழகாக உயர்ந்துள்ள அல்குலில் யாம் அணிந்து உவக்கும்
ஒருசில நாள் கழியட்டும் என்று முன்னொரு நாள்
நம்மிடம் கூறிய சொல்லைப் பொய்யாக்கிவிட்டுப் பிரிந்துபோனாரென்றாலும், அவருடன் செல்லுகின்ற
திருத்தமான வேல் ஏந்திய ஏவல் இளைஞர்கள் வண்டுகள் தேன் உண்ணும்படி அணிந்து மகிழ்வதற்காக
சிறந்த தளிர்களைத் துளிர்த்து, மரங்களின் கொம்புகள் செழிக்கும்படி
மழைபெய்து நீங்கிய பின்பு மலையிலிருந்து வீழும்
சிறிய வெண்மையான அருவியின் நீர்த்திவலைகளால் மலர்ந்த
கருமையான காலினையுடைய நுணா மரத்தின் பெரிய கிளையில் பூத்த வெண்மையான பூக்கள்
சிவந்த மணலையுடைய சிறிய வழிகளிலே கம்மென்று மணக்கும்படி
காடு அழகுபெறுவதாக, தோழியே! அசையும் காற்றினால்
தளரும் நிலை வாய்ந்த இற்றிமரத்தின் ஒற்றையாய்த் தனித்துள்ள நீண்ட விழுது
மலையில் உள்ள செத்தைகளைப்பெருக்கித் தள்ளும் பாலைநில வழியில்
நிலைபெற்றிருக்கும் வெயிலுக்காக நிழலில் தங்கித்தங்கிச் செல்வதற்காக - (காடு அழகுபெறுவதாக)
					மேல்
#346 மருதம் நக்கீரர்
(நீ பரத்தை விட்டுக்குச் சென்றதை மறுப்பது) சிரிப்பைத்தான் தருகின்றது, இறங்கிவரும் கூரையின் மேல்
பூசப்பட்ட சுண்ணாம்பின் மழைக்காலத்து ஈரமான மேற்பக்கத்தைப் போன்ற
சிறகையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது,
வெள்ளியால் செய்த வெண்மையான பூவிதழ் போன்ற கயல்மீனைக் கொத்திப் பிடிப்பதற்காக,
கள்ளைக் குடித்ததினால் உண்டான உவகையினாலான மிக்க செருக்கினைக் கொண்ட உழவர்கள்
காஞ்சி மரத்தின் குட்டையான குச்சிகளை நட்டு, இனிய சுவையையுடைய
மெல்லிய தண்டையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே வைத்து அடைத்து
பெரிய நெற்பயிரையுடைய வயலாகிய பசுமையான பள்ளங்களில் நீரைத் தேக்கி
வருந்திச் செய்த வலிய தலையையுடைய வளைவான அணையின்
மேலே வழிந்து விரைந்து விழுகின்ற நீரைப் பார்த்து மிகவும் மெதுவாகச் சென்று
தன் கூரிய பார்வையை அதன் மேல் பதித்துக்கொண்டு காத்திருக்கும் பயன் பொருந்திய ஊரினையுடையவனே!
நாங்கள் உன் பரத்தமையை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை; நீ உன்
சுருதிசேர்த்த நல்ல யாழையுடைய பாணனுடன், இறுக்கிக் கட்டப்பட்ட
மண் பூசப்பெற்ற முழவின் கண்கள் அதிர்ந்து முழங்க,
நீ மகிழ்வதற்குத் துணையாய் இருக்கின்ற பரத்தையர் கூட்டத்தோடு கள்ளைப் பருகி
எமது வீட்டுப்பக்கம் வராதவனாய், முதல் நாளில்
உமது வீடாகிய அந்தப் பரத்தையின் வீட்டில் சேர்ந்திருந்தபோது, அந்த வீட்டிலுள்ள
சிறிய வளையினை அணிந்த உன் பரத்தை மகிழ்ந்திருந்தாள் - நீண்ட தேரினையும்
அணிகலன் அணிந்த யானையையுமுடைய பழையன் மாறன் என்பவனை
மாடங்கள் மிக்க தெருக்களையுடைய மதுரை மாநகரில்
மிகுந்த சேனையுடன் வேற்றுநாட்டில் போர்செய்ய வந்து தங்கியிருந்த
கிள்ளி வளவன் நல்ல போரினில் சாய்த்து
விரைந்து ஓடும் குதிரைகளுடன் பல யானைகளையும் கவர்ந்துகொண்டு
தன் பகை மன்னனின் ஊர்களைக் கைப்பற்றியபோது
கோதைமார்பன் என்னும் சேரன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பெரிதாக -(உன் பரத்தை மகிழ்ந்திருந்தாள்)
					மேல்
#347 பாலை மாமூலனார்
என் தோள்களின் பழைய அழகெல்லாம் அழிந்து ஒழியவும், ஒவ்வொருநாளும்
என் பெண்மை நலத்தை இரக்கமின்றிக் கவர்ந்து தின்னுகின்ற பசலை நோயால் யாம் வருந்திநிற்க
நிறைந்த பெரிய சேனையினையுடைய நெடுஞ்சேரலாதன்
பெரிய கடலிடத்தில் பகைவரை ஓட்டி, அவரின் காவல் மரமான கடம்ப மரத்தை அறுத்துச் செய்த
பண்ணுக்கு இயைந்த முரசின் கண் முழங்கினாற் போன்று
பிறர் மேல் பழியைத் தூற்றுகின்ற கொடுமையான வாயினையுடைய சேரியில் வாழும்
கிசுகிசுக்கும் பெண்களுடைய பழைய இந்த ஊரில் பரவலான பழிச்சொற்களை நம்மேல் சார்த்திவிட்டு
நம்மைப் பிரிந்து சென்றாரென்றாலும், அவர் மேற்கொண்டுள்ள செயல் அவருக்கு
வாய்ப்பதாக, வாழ்க, தோழியே! பெய்யாமல்
மழையானது மறைந்து ஒளித்துக்கொண்டதால் மூங்கில்களும் வற்றிப்போகும் மலைச்சாரலில்
ஒளிரும் நிறமுடைய வலிய புலி பாய்ந்ததால், திரண்ட அடியினையும்
வெண்மையான கொம்பினையும் உடைய களிற்றின் பிளிறுகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சி
தனது கன்றினை விட்டுவிட்டு ஓடிப்போன புன்மையான தலையினையுடைய இளைய பெண்யானை
துயரத்துடன் கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மனக்கலக்கத்தோடே விரைந்து
தன் பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெண்களைப் போலத் தன் கன்றினைத் தேடுகின்ற
நீண்ட மரங்களையுடைய மலைவழியைக் கடந்து சென்ற நம் தலைவர்.
					மேல்
#348 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
இனி நமக்கு என்ன ஆகுமோ? முற்றத்தில்
தேன் என்று சொல்லத்தகும் சுவையினையுடைய திரட்சியான அடிமரத்தையுடைய மா மரத்தின்
கோடைப் பருவத்தில் முதிர்ந்த மணங்கமழும் இனிய கனியின் சாற்றுடன்
பிசின் பொருந்திய பலாப்பழத்தின் ஒன்றினுக்கொன்று சமமான சுளைகளையும் கலந்து 
தேனடையோடு கலக்கப்பட்ட வண்டுகள் மொய்க்கும் கலவையை,
அசைகின்ற மூங்கிலின் நீளமான கணுக்களுக்கிடையேயான குழாயில் முதிரவைத்த, கடும் ஆற்றல் வாய்ந்த
பாம்பின் சீற்றத்தைப் போன்ற கள்ளினை, உயர்ந்த உச்சியையுடைய
தெய்வம் வாழும் உயர்ந்த மலைக்குப் படைத்து, குறவர்கள்
தளிரால் ஆகிய தழையுடையை அணிந்த பெண்கள் ஊற்றிக்கொடுக்க நிறைய உண்டு,
மலைச் சாரலில் உள்ள பெரிய தினைப்புனக் காவலை மறந்திருக்கும்போது,
யானைகள் தினைப்புனத்தில் நுழைந்து கவர்ந்து உண்ண, அதனைப் பொறுக்காமல்
இளையரும், முதியருமான சுற்றமெல்லாம் கூடி
வில்லையும் அம்பையும் தேடிக்கொண்டு திரியும் நாட்டையுடையவான நம் தலைவனின்
உறுதியற்ற இனிய சொற்களை உண்மையென நம்பிய என் நெஞ்சமே- (இனி நமக்கு என்ன ஆகுமோ?)
					மேல்
#349 பாலை மாமூலனார்
அரத்தால் அறுத்துச் செய்யப்பட்ட அழகிய வளையல்கள் செறிவாக உள்ள எனது முன்கையினைப்
பிடித்து என்னை மணந்தபோது எனக்கிருந்த எனது பழைய அழகு அழிந்து கெட்டுப்போகும்படியாக
வேறு என்ன பொருளை ஆராய்ந்து கண்டாரோ? தோழியே! பொருள்களின் சம அளவை
அறிகின்ற துலாக்கோலைப் போன்ற குற்றமற்ற நடுவுநிலை தப்பாத மொழியினையுடையவனும்,
வறுமையால் வாடிய சுற்றத்தாரோடு பாணர் முதலியோர் சென்றால்
ஊக்கம் மிகுந்த நெஞ்சத்துடன் பகைவர் போர்முனை பாழ்பட
நெருங்கமுடியாத அவரின் அரண்களை இடித்து அவரிடம் பெற்ற பெரும் அணிகலன் முதலான செல்வங்களை
ஆராயாமல் எல்லாருக்கும் வழங்குகின்றவனும் ஆகிய நன்னன் என்பவனின் நல்ல நாட்டில் உள்ள
ஏழில் என்னும் மலையின் உச்சிமலைச் சாரலில், நல்ல நிறம் பொருந்திய
திருத்தமான அடிமரம் நீண்டு உயர்ந்த கரிய காலினையுடைய வேங்கை மரத்தின்
தீயைப் போன்ற பூக்களைக் கவளமாக நிறைய உண்டு, ஆண்யானை தன்
வரிகள் இருக்கும் நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய கை
மலையின் மேல் ஊர்ந்து செல்கிற பாம்பினைப் போல் தோன்றும்
மொழி வேறுபட்ட நாட்டிலுள்ள பாலைவெளியைக் கடந்து சென்றவர்-(வேறு என்ன பொருளை ஆய்ந்து கண்டாரோ?)
					மேல்
#350 நெய்தல் சேந்தன் கண்ணனார்
உப்பங்கழியில், சிறிய பூங்கொத்துக்களையுடைய நெய்தல் மலருடன் கருங்குவளைப் பூவும் குவிந்திருக்க,
வீசுகின்ற அலையுடன் கூடிய நீர்ப்பெருக்கு வந்துகொண்டே இருக்கிறது;
துறையோ, இரண்டு பக்கங்களிலும் நீண்டு வளர்ந்த பெரிய பிளவுபட்ட கொம்புகளையுடைய
நண்டுகள் கருமையான சேற்றிலுள்ள தமது பெரிய வளைகளிலிருந்து வெளியே வர,
நடமாடுவோர் இல்லாததினால் ஒலி அடங்கிக் கிடக்கிறது;
வளைந்த நுகத்தடியின் கீழ் நுழைந்து நிற்கின்ற திரண்ட காலையுடைய கோவேறுகழுதையை
நன்கு வடித்த மணிகளையுடைய நீண்ட தேரினில் பூட்டும்படி உன் பாகனை ஏவாமல்,
உயர்ந்த அழகு பொருந்திய குளிர்ச்சியான கண்களையுடைய தலைவியின் வேண்டுகோளின்படி
தங்கிவிட்டுச் செல்வாயாக, பெரிய கடற்கரையையுடைய தலைவனே!
ஒளிவிடும் பெரிய கடற்பரப்பினில் கொல்லுகின்ற சுறாமீனை விலக்கிவிட்டு
வலம்புரிச் சங்கினை எடுப்பதற்கு நீருக்குள் மூழ்கிய சிறந்த படகினையுடைய பரதவர்கள்
ஒலிக்கின்ற முகப்பையுடைய சங்குகள் முழங்கும்படி, கல்லென்று
ஆரவாரம் மிக்க கொற்கைப்பட்டினத்து மக்கள் தம்மை எதிர்கொள்ளும்படி படகிலிருந்து இறங்கிவரும்
திரண்ட மணலினையுடைய நீண்ட கரையாகிய அவ்விடத்தில்
எமது சிறிய நல்ல ஊர் காணப்படும், அங்கே பார்!
					மேல்
 



#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்
வேற்று நாட்டுக்குச் சென்று அங்குத் தங்கிப் பொருள் ஈட்டவேண்டும் என்ற விருப்பம் கொண்டு அதனைப் போற்றி,
பெறுவதற்கு அரிய சுற்றத்தார் பின்னே வந்து விடைகொடுக்க,
பொருளை ஈட்டிக் கைக்கொண்டமையால் விருப்பம் மிக்க நெஞ்சத்தோடு
கருதிய செயலைச் செய்து முடித்ததால் உண்டான மனநிறைவுடன் இனிதே மீண்டுவரும் இந்தப் பயணத்தைச்
சொல்லி அறிவுறுத்துமோ அது? வெயில் சுடுவதால்
காம்பு கழன்று விழும் இலைகளை உதிர்த்த காற்று மோதிய தாழ்வான கிளையில்
தீ பற்றியெரிவதைப் போன்ற அழகிய தளிர்களையுடைய மரம் செறிந்த சோலையில்
உள்ளே துளையுள்ள பூக்களையுடைய இருப்பை மரங்களையுடைய புல்லிய காட்டு வழியில்
மீண்டு வரவேண்டும் என்ற ஊக்கத்துடன் ஊரினைக் கிட்டிவந்து சேர, (நாம் பிரிந்துவந்த நாட்களைக்)குறித்துவைத்த
செய்குறியாகிய வட்டங்களை நாள்தோறும் எண்ணியவளாக
அவற்றை எழுதிய சுவரினை நினைத்துக்கொண்டு அழுது மழை போன்று நீர் சொரியும் கண்களிலிருந்து
விலகி விழுகின்ற மெல்லிய துளிகள் பொன்னால் செய்த காதணிகளில் விழுந்து தெறிக்க,
திருத்தமான அணிகலன் அணிந்த முன்கையை நாடியில் பொருந்த ஊன்றவைத்து
இருக்கையில் இருந்து பின் மலரணை மீது தனக்குப் பொருந்தும்படியாகப் படுத்துக்கிடக்கும்போது
பிரிவினால் வருந்துகின்ற தோளின் மெலிவினைத் தீர்க்கும் மருந்து இது என்று 
நம்மைப் பற்றி அவள் நினைக்கும்போதெல்லாம் ஒலிக்கும் பல்லியானது, தனது ஒலிக்குறிப்பை
நன்னிமித்தமாகக் கொண்டு கைகூப்பித் தொழும் தலைவியின் காதில்-(இப் பயணத்தைச் சொல்லி அறிவுறுத்துமோ?
					மேல்
#352 குறிஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார்
முடம்பட்டு முதிர்ந்த பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தை
பல குரங்கினங்களுத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு
பெரிதாய் முழங்குகின்ற அருவியையுடைய பாறையின் பக்கத்தில் நின்று,
ஆடுகின்ற மயில் தனக்கு முன்னே இருக்க, கூத்தர்கள்
விழாவினைக் கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்னால் நிற்கும்
மத்தளம் வாசிப்பவன் போல, தன் உடம்போடு சேர்த்துத் தழுவிக்கொண்டு
தனக்கு இனிய துணையான பெண்குரங்கை அழைக்கும் மலைநாட்டையுடைய தலைவன்
நல்ல குடியில் பிறந்தவன், சேர்ந்தவர்களைப் பிரியமாட்டான்,
நாவால் கேடான மொழிகளைக் கூறமாட்டான், அன்புடையவன் என்றெல்லாம் நீ
அவன் சிறப்புக்களைக் கூறி, அவன் எனக்கு வாய்க்கும்படியாக என்னை அவனுடன் சேர்த்துவைத்தாய்,
நீ இப்பொழுது எனக்கு மிகவும் நல்லவள், அன்பினுக்குரிய அழகிய தோழியே!
கடும் வேகத்தினையுடைய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினையுடைய அதியமான் அஞ்சியின்
சிறந்த புகழைப் பொருளாக அமைத்து இயற்றிய கேட்பவர்கள் விரும்புகின்ற செய்யுள்களுக்குப்
பழைய இசையை வகுத்து நிறுத்திய புகழ் மிக்க பாணன் நூலில்
நிறுத்தி எண்ணுகின்ற முறைப்படி வைத்த பண்களைக்காட்டிலும்,
தானே புதிதாக இயற்றிய பண்களின் திறத்தைக்காட்டிலும்,
எமது திருமண நாளைக் காட்டிலும் நமக்குப் பெரிதும் இனியவனாக விளங்குகின்றான்.
					மேல்
#353 பாலை மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்
பொருளீட்டுவதாகிய ஆண்மைக்குரிய செயலை முன்னிட்டு இவளைப் பிரிதலும் உண்டோ? பிரிந்து சென்றாலும்
இப்பொழுது நான் சொல்வதைக் கேட்பாயாக, நெஞ்சமே! ஒவ்வொருநாளும்
கனவில் தோன்றும் பொருள்கள் விழித்தவுடன் மறைந்துவிடுவது போல, நனவில்
நாள்கள் கழிவதும், மூப்பின் வருகையும்,
அரிதாகப் பெறும் சிறப்பினையுடைய காமத்தின் தன்மையும்
கழிந்துபோகும் தன்மையுடையன என்னும் இந்த நிலையை நீ அறியமாட்டாயென்றாலும், செங்குத்தாக நிற்கும்
மூங்கிலில் ஆடுகின்ற அழகிய திரண்ட கோலை மோதி, கல்லென்னும் ஓசையுடன்
ஞெமை மரங்களின் இலைகளை உதிர்த்துவிட்ட வெப்பம் பொருந்திய கோடைக்காற்று
நீண்ட வெண்மையான களர் நிலத்தின் புழுதியை முகந்துகொண்டு சுழன்றிட,
கொடிய வெயில் முறுகிய வேனில் காலத்து வெப்பமுள்ள காட்டில்
வருந்திய நடையினையுடைய இளைய பெண்மானைத் தழுவிக்கொண்டு திரிகிற, ஒளிரும் புள்ளிகளையும்
நெளிநெளியான கொம்புகளையும் உடைய அழகிய கலைமான், நீர் அற்ற குளத்தை நோக்கிச்சென்று
தெளிந்த நீரைப் பருகும் வேட்கையால் உண்டான துன்பம் காரணமாக, தழையைத் தின்பதை மறந்து
உண்ணும் நீர் இல்லாததால் மெலிந்து நடை தளர்ந்து நிற்க,
மரங்கள் நிழல் இல்லாதனவாய் நிற்கும் வழியினையுடைய பாலைவெளியைக் கடந்து
நினைத்துப் பார்ப்பாய் இல்லையா? தன் வீட்டை நினைத்து வருகின்ற
விருந்தினர் வருகை ஒருபோதும் ஒழியாத பெரிய குளிர்ந்த பந்தலின் கீழ்
வருந்தி வருவோரை உபசரித்து, குளிர்ச்சியுண்டாக
தாழையின் தாதாகிய பொடியை உதிர்த்துவிட்ட கூந்தலில்
காண்பவர் விரும்புகின்ற அத் தாழம்பூவின் இதழின் மெல்லிய பக்கத்தை வைத்துப் பின்னி
மகிழ்ச்சியினை அணிந்த புன்னகையுடன் மாண்புற்ற படுக்கையில் இருந்து
நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும்
பொலிவுள்ள கூந்தலையுடைய அழகிய அணிகளை அணிந்தவளின் குணங்களை-(நினைத்துப் பார்ப்பாய் இல்லையா?)
					மேல்
#354 முல்லை மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார்
மிக்க வலிமையையுடைய யானைகள் போர்ச்சினத்துடன் இருக்கும் பாசறையில் இருந்த
இடியென ஒலிக்கும் முரசம் போர்க்களத்தில் முழங்க
போரில் வென்று அரசனும் வெற்றிக்கொடியை உயர்த்திவிட்டான்; கன்றுகளுடன்
பலவான கறவைப் பசுக்களின் கூட்டம் முல்லைநிலங்கள்தோறும் தாவிக்கொண்டு வர,
இடையர்கள் தம் குழல்களை ஊதத் தொடங்கிவிட்டனர்; மிகவும் விரைந்து
உன் ஏவலர் முன்னே செல்வோராய் ஓடிக்கொண்டு வர, விரிந்த பிடரி மயிரையும்
வேகமான நடையினையும் உடைய குதிரைகள் வாயில் நுரைநீர் வழியும்படி ஓடும்படியாகத்
தேர்ப்பாகன் கடிவாளத்தை வலிந்து பிடித்துச் செலுத்த, புலவர்கள்
புகழும் குறியாகிய விழுப்புண்ணைக் கொண்ட பொன்னாலான மாலையை அணிந்த மார்பினில்
குளிர்ந்த மணங்கமழும் சந்தனத்தோடு நுண்ணிய பொடிகளையும் அணிய
வெற்றிகொண்ட உவகையுடன் உன் இல்லத்தில் புகுவதை நீ விரும்பினால்
எங்கே போய் இருக்கும்? மாட்சிமையுடைய
நீல மலரை ஒப்புமையாகக் கொண்ட மையுண்ட கண்களையுடைய
தீது அற்றவளான தலைவியின் அழகிய நெற்றியில் படர்ந்த பசலை - (எங்கே போய் இருக்கும்?)
					மேல்
#355 பாலை தங்கால் பொற்கொல்லனார்
மாமரங்களும் அழகிய தளிர்களை ஈன்றன, குயிலும்
அவற்றின் கொம்புகளிலிருந்து மிக இனிய குரலால் பலமுறையும் கூவிக்கொண்டேயிருக்கும்,
முதிர்ந்த இலைகளை உதிர்த்த மொட்டுகள் விரிந்த பெரிய கிளைகளில்
யாழ் வல்லோன் தடவுகின்ற வளமையான இன்னிசையைக் கொண்ட பாலைப்பண்ணை
அந்த யாழ் நரம்பு ஒலித்ததைப் போல வண்டின் கூட்டம் முரலுகின்ற
தெளிந்த நீர்நிலையை அடுத்த தூய மணல் மேட்டில் உள்ள
பூந்துகள் உதிரும் குளிர்ந்த சோலையில் தங்கி, காதலர்கள்
தம் செழிப்புமிக்க வீட்டினை மறக்கும் இளவேனில் காலம்
வந்திருக்கிறது, எனவே, திரும்பத் திரும்ப இறுக்கினாலும்
ஒளிவிடும் வளையல்கள் மீண்டும் மீண்டும் நெகிழ்ந்து விழும் எம் துன்பமான நிலையைத் தலைவர்க்குக் காட்டி
அவரை வெறுத்துப்பேசிவிட்டு வருவோம், நாம் செல்வோம் தோழியே!
நாங்கள் இங்கே தனியே தவித்திருக்க, நீர்தான்
பொன் மேல் ஆசைகொண்டு சிறிதளவும் இரக்கம் இல்லாதவர் ஆகி
இப்படி இருப்பது உம் தகுதிக்குப் பொருத்தமானது இல்லை என்று - (அவரை வெறுத்துப்பேசிவிட்டு வருவோம்)
					மேல்
#356 மருதம் பரணர்
சற்று மேல்புறமாக இருக்கும் துறையில் கள்ளுண்ட கலங்களைக் கழுவும்போது, தள்ளி இருக்கும் கீழ்த்துறையில்
ஒழுகிய கள்ளின் கலங்கல் நீரை அருந்திட்ட பிளந்த வாயையுடைய ஆமை
சம்பங்கோழியின் குரல் வாத்தியக்காரன் இசை போல் ஒலிக்க, இழுத்துக் கட்டப்பட்ட
தெளிந்த முகப்பையுடைய கிணைப்பறையைப் போலத் தலைகீழாய்க் கிடக்கும் ஊரையுடைய தலைவன்,
நீண்ட தெருவின் நடுவே திடீரெனக் கண்டு, என்
பொன் வளையல்கள் அணிந்த முன்கையைப் பிடித்தானாக,
“அம்மா” என்று நான் அலற, அவன் பிடியை விட்டான் -
நீண்ட நாளாக இருக்கும் ஆசை முற்றுப்பெறாமலேயே! நன்னன் என்பவனின் பறம்பு மலையில்
சாணை பிடிக்கும் சிறுவன் அரக்குடன் இறுக்கிச் சேர்த்த
சாணைக்கல் போல என் நாவும் ஒட்டிக்கொண்டவளாகி, அதைப்பற்றி
என் தாயிடம் எதுவும் சொல்லவில்லை; நல்ல தேரினையும்
கடிய களிற்று யானைகளையும் கொண்ட சோழரின் வழிவந்தவன் -
நீண்ட நெற்கதிர்களையுடைய வல்லம் என்ற ஊரின் தலைவன் -
நல்ல ஒழுக்கம் அமைந்தவனாக இருக்கவும், பகைவர்
அவனுடைய கோட்டை மதிலைக் கைப்பற்றுவதற்கு விடாமல் முயல்கின்றனர், அது கிடக்க,
செழிப்புள்ள பலவான கூந்தலையுடையவளே! நம்மீது இரக்கம் கொள்ளாமல்
நம்மைத் துன்புறுத்தினானென்றாலும் அது குற்றமுடையது ஆகாது,
அருவி நீரால் ஆம்பல் செழித்து வளர்ந்துள்ள முன்துறையினையுடைய
நன்னனின் அழகிய பிரம்பினைப் போன்று
மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையவளே! உன் கருத்து என்ன?
					மேல்
#357 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
வளைந்த முள்ளையுடைய ஈங்கைச் செடி பிரப்பங்கொடியுடன் பின்னிக்கிடக்கும்
வெண்மையான அரும்புகளையுடைய குறுங்காட்டில், கருப்ப காலத்து வேட்கையுடன் கிடந்த
உண்ணாத பெண்புலியின் வருத்தத்தைத் தீர்க்கும்பொருட்டு
பெரிய கொம்பினையுடைய யானையைத் தன் வலப்பக்கத்தில் வீழும்படி தாக்கி வீழ்த்தி
அகன்ற பாறை சிவந்துபோகும்படி இழுத்து, உடலை வளைத்துச் சோம்பல்முறித்து,
புலால் நாறும் புலி கிடந்து புரண்டதால் புற்கள் சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகள்
மிகுதியாய் உள்ள பெரிய காட்டினூடே நடந்து செல்லாமல்
பெரும் களிறுகளும், அவற்றின் பிடிகளும், கன்றுகளுமான கூட்டம் தம் கைகளால் தோண்டித் தின்று போகும்
இனிய சுளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தையுடைய யானைகள் வாழுகின்ற
பெரிய காட்டினைக் கடந்து சென்றாரெனினும், உன்
திருத்தமான அணிகலன்களை அணிந்த பருத்த தோள்கள் மெலிந்து வருந்தும் அளவிற்குத் தன் இருப்பை நீட்டித்து
நினைக்காமல் இருக்கமாட்டார்; உன் மீது அன்புகொண்டு அருள் புரிவார்,
மிகுந்த மழை நிலைத்துப் பெய்வதால் பெருகிய இனிய நீரையுடைய பொய்கையில்
இலைகளை விட்டு மேலெழுந்து மலர்ந்த குளிர்ச்சியாய் மணங்கமழும் நீலமலர்கள்
காற்றினால் அசைந்ததைப் போன்ற உனது
அழகிய இதழ் பொருந்திய குளிர்ந்த கண்களின் விருப்பம் மிக்க பார்வையினை - (நினைக்காமல் இருக்கமாட்டார்)
					மேல்
#358 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நீல மணியைப் போன்ற நிறம் விளங்கும் கழுத்தினையும்,
அழகிய பீலியாகிய சிறந்த தோகையையுடைய மயில்கள்
மிகவும் இனிய குரலினையுடையவாய் ஒன்றுசேர்ந்து, மென்மையான தாள அறுதிகொண்டு
ஆடுகின்ற தன்மையால் தோன்றும் அழகிய சிறப்பினைப் போன்று, ஒன்றுகூடி
கண்ணைப் போன்ற இதழ்களையுடைய குளிர்ந்த மணமுள்ள குவளை மலரின்
சிறிய மாலையினைச் செருகிய மணமுள்ள பலவான கூந்தலையுடைய நீ
ஆழமான நீரினையுடைய நீண்ட சுனையில் உன் தோழியருடன் ஆடாதே!
வருந்திய மனத்தினையுடையவளாகி தனிமையாலுண்டான துன்பத்தைக்கொண்டு
இப்படி ஆகிவிட்ட உன் மேனி வேறுபாட்டைக் கண்டு
நம் அன்னை அதன் காரணத்தைக் கேட்டாளென்றால், அந்தோ!
என்னவென்று சொல்லுவேன் நான்? பொருந்திய
பெரிய மலையிலிருந்து வீழ்கின்ற நீண்ட வெண்மையான அருவி
முகபடாம் அணிந்த யானையின் மீது தூக்கிய
அசையும் வெண்மையான துகில்கொடியைப் போலத் தோன்றும்
உயர்ந்த சிகரத்தைக்கொண்ட மலையையுடைய தலைவன் உண்டாக்கிய இந்தத் துன்பத்தினை
					மேல்
#359 பாலை மாமூலனார்
நீர் ஒழுகும் மையுண்ட கண்களும், பசலை பாய்ந்த தோள்களும்
பிறர் நன்றாக அறியும்படியாக மெலிந்துபோகவும், நாள்தோறும்
அவற்றைப் பிறர் அறியாதபடி மறைத்து வாழ்கின்ற நம் இயல்பினை அறியாதவராய்
வெளியூரில் தாம் இருப்பதை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார் நம் காதலர் என்று நீ
ஏன் செயலற்றுப்போயிருக்கிறாய்? தோழியே! அவர்தான்
வானவரம்பனின் வெளியம் என்னும் இடத்தைப் போன்ற நமது
சிறந்த அழகினைக் கொண்டுசென்றுவிட்டார், முன்னே இருக்கும்
செல்வதற்கு அரிய பாலை நிலத்துக் கிளைத்துச் செல்லும் வழிகளில் தங்கியிருக்கும் கூத்தர்களின்
வாத்தியங்களின் முழக்கம் பெரிய மலையின் உச்சியின் மேல் எதிரொலிப்பதைப் போன்று
தான் பெரிதும் விரும்புகின்ற பெண்யானையைக் காணாத நீண்ட காலையுடைய களிற்றுயானை
தெய்வம் விரும்பி உறையும் மலைச்சாரலில் உள்ள மேகத்தோடு மாறுபட முழங்கும் மலைநாட்டையுடைய
ஒருகாலத்திலும் பொய்க்காத சிறந்த புகழைத்தருகின்ற பெரிய கொடைத்தன்மை உடைய புல்லி என்பவனின்
கிளைத்த கதிரினையுடைய வரகின் அழகிய பச்சையான தட்டைகளையுடைய
பழம் கொல்லையாகிய மேட்டுநிலத்தைச் சுற்றியுள்ள காட்டைச் சுடுவதால் எழும் கரிய நிறமுள்ள புகை
அருவியின் நுண்ணிய துளிகளுடன் கலந்து தோன்றும்
பெரிய மலையைச் சேர்ந்த வழியில் சென்ற நம் காதலர் - (நமது சிறந்த அழகினைக் கொண்டுசென்றுவிட்டார்)
					மேல்
#360 நெய்தல் மதுரை கண்ணத்தனார்
பல பூக்களையுடைய குளிர்ச்சியான சோலையில் பகலெல்லாம் எம் தலைவியுடன் சேர்ந்திருந்து கழித்து
ஒரேயொரு சக்கரத்தையுடைய தேரினையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வன்
மேற்கிலிருக்கும் பெரிய மலையின் பின்னே மறைய, வளைவான உப்பங்கழியில்
குளிர்ந்த சேற்றில் பொருந்திய திரட்சியான காலினையுடைய நெய்தல்பூவின்
நுண்ணிய பொடியை உண்டு, வண்டின் கூட்டம் அதனை விட்டுச் செல்ல,
அஞ்சத்தக்க மிக்க வலிமையையுடைய இரு பெரும் தெய்வங்களான சிவன், திருமால் ஆகிய இவர்களின்
செந்நிறமும், கருநிறமும் ஒன்றாய்ப் பொருந்திய தோற்றம் போலச்
சிவந்த அந்தி வானத்தின் அழகுடன் கரிய கடலின் அழகையும் கொண்டு
வந்த மாலைக்காலத்தில் நீ இவளை விட்டுச் சென்றால், இவள்
பெரும் தனிமைத்துன்பத்துக்கு ஆளாவாள்; அதனால்
தாளம் தவறாதபடி அடிவைத்துச் செல்லும் மாட்சிமைமிக்க தொழில் திறன் அமைந்த உன் செருக்குள்ள குதிரைகள்
இவ்வூர் மக்கள் உறங்குகின்ற நள்ளிரவில் கனைத்து ஒலியெழுப்புவதைத் தவிர்த்து
உன்னுடைய நீண்ட தேரை ஊருக்குத் தொலைவில் செலுத்தி, அங்கு நிறுத்தி, மெதுவாக
மலையிலிருந்து இறங்குகின்ற களிற்றினைப் போல குவிந்துகிடக்கும் இம் மணல் குன்றுகளைக் கடந்து
இரவுநேரத்தில் வருவாயாக, வலிமை மிக்க நீர்ப்பரப்பாகிய கடலின் கரையாகிய இந்த நெய்தல் நிலத் தலைவனே!
கூட்டமான மீன்களைத் தின்கிற நாரைகளோடே, பனை மடலின் மேல்
அன்றில் பறவைகள் தங்கியிருக்கும் முற்றத்தின் அருகில், பொன் போல
அழகிய மலர்ந்த மணமுள்ள பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கும்
புன்னைமரங்களுள்ள நறிய சோலையில் நாங்கள் குறித்துவைத்துள்ள இடத்திற்கு - (இரவுநேரத்தில் வருவாயாக) 
					மேல்
 




#361 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தூய மலராகிய தாமரைப் பூவின் அழகிய உள்ளிடத்தில்
கரிய இதழையுடைய குவளை மலர் இரண்டினைச் சேர்த்துவைத்ததைப் போன்று
அழகிய முகத்தில் உருளுகின்ற பெரிய செழிப்பான குளிர்ந்த கண்களையும்
அழகிய வளையலையுடைய முன்கையினையும், அழகிய உதடுகளையும் உடைய நம் தலைவியின்
கச்சு அணிந்த முலைகளின் முற்றமாகிய மார்பினில் ஒரு நூல் இடையே வந்து தடுத்தாலும்
முயக்கத்தினை வெறுத்து இருக்கும் மிகப் பெரிய காதலுடன்
இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக்காட்டிலும் சிறந்ததோர் இன்பம் வேறு இல்லை என்று
அன்புடன் கூறிய என் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல்
பொருள் மீது கொண்ட ஆசையால் இவ்வளவு தொலைவு வந்து இப்போது மயங்குகின்ற நெஞ்சமே!
வெப்பத்தால் கருகிப்போகாத மலரையுடைய வானோர்கள் நுகரும்பொருட்டு
தீ வளர்க்கின்ற வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை
நிழலுடைய நீண்ட குளத்தில் சென்று புகுவதற்கு விரும்பினதைப் போல
இப்பொழுது நினைப்பதை விட்டொழிப்பாயாக, முள் போன்ற பற்களையும்
சிலவான மொழிகளையும் உடைய நம் தலைவியின் தோள்களை - பல மலைகளையும்
வெப்பமுள்ள பாறைகளையும் உடைய அகன்ற பாலைப் பரப்பினை,
துன்பம் மிகும்படியாக நாம் கடந்துவந்துவிட்டோம்.
					மேல்
#362 குறிஞ்சி வெள்ளிவீதியார்
பாம்புகளையுடைய மலைப் பிளவுகளிலிருந்து வரும் குளிர்ந்த நீர் ஒடுக்கமான துறைகளின் வழியாக
தேனுடன் கலந்து ஓட ஆறுகள் நிறைந்தனவே!
வெண்மையான கொம்பினையுடைய யானை பாய்ந்து குத்திய புண் மிகுந்து
பசிய கண்ணையுடைய ஆண்புலி கல் குகையினுள்ளே  ஒடுங்கியிருக்க,
முருக்கமரத்தின் அரும்பினைப் போன்ற கூர்மையான நகத்தினையுடைய சூல்கொண்ட பெண்புலி
காவல் காத்துக்கொண்டிருப்பதால் அந்த வழியே யாரும் செல்லமாட்டார்; அந் நிலையில்
இருண்டுவிட்டது என்று எண்ணாதவனாகி வெற்றி தரும் வேலினைக் கையில் ஏந்திக்கொண்டு
நம் மேல் கொண்ட விருப்பம் உந்திக்கொண்டுவர வந்த நன்மையாளனாகிய நம் தலைவன்
தன் எண்ணம் கைகூடாதவனாக வறிதாகத் திரும்பிச்சென்றால்
இன்றே இப்பொழுதே நான் உயிரோடிருக்கமாட்டேன்,
நாம் என்ன செய்யலாம், வாழ்க, தோழியே! நமது முலைகளின் இடையே
தேமலால் அழகுசெய்யப்பட்ட முற்றமாகிய இடத்தில் கிடக்கின்ற முத்துமாலையின் ஒளியைப் போலவும்,
மலைச் சரிவிலேயுள்ள நீண்ட சோலையில் துளிகள் செறிவாகச் சிதறுகின்ற
ஒளிவிடும் வெண்மையான அருவியைப் போலவும்
திங்களின் அழகிய ஒளிக்கற்றைகள் நிலத்தின் மேல் பரவிக்கிடக்கின்றன. 
					மேல்
#363 பாலை மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
வரிசையாகச் செல்லும் குதிரைகளை விரைவாகச் செலுத்தி,
அகன்ற பெரிய வானத்தில் பகற்பொழுது கழியச் சென்று
மழுங்கிய ஒளியினையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைந்திட,
அணிகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டவளே! பகற்பொழுது கழிந்த மலரைப் போலக் கூம்பிப்போய்
படுக்கையில் படுத்து இப்படி இருக்கவேண்டாம்; திரட்சியான நடுப்பகுதியையும்,
சிறிய இலைகளையும் உடைய நெல்லி மரத்தின் புள்ளிகள் அற்ற பச்சைக் காய்கள்
கற்களையுடைய வழியின் பக்கத்தில் கடும் காற்று உதிர்த்துவிடுவதால்
பொன்னால் செய்யப்பட்ட காசினைப் போல் அழகுபெறப் பரவிக்கிடக்கும்
பாலைப் பரப்பினை அடைந்து அங்கு வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த
கொலையை விரும்பும் கொள்கையினையும், கொடிய தொழிலையுமுடைய மறவர்கள்
வழிப்போக்கருடைய பட்டால் பிழைக்கமுடியாத மார்பில் எறிந்த
வேலினால் ஏற்பட்ட விழுப்புண் பட்டு இறந்தவர்களின் கிட்டே சென்ற
வளைந்த வாயினையுடைய பருந்தின் கூரிய நகத்தினையுடைய சேவல்
தன் இனமாகிய பருந்துகளைத் தருவித்து அங்குள்ள ஊனைத் தின்பதற்குத் தெளிந்த ஒலியினால் கூப்பிடுகின்ற
துன்பமுடைய கொடிய பாலைநிலத்தைக் கடந்துசென்ற நம் தலைவர், தாம் கருதிச் சென்ற
பொருளீட்டும் தொழிலில் வெற்றியுடையவராய், நாம் இருக்கும் இந்த இல்லத்தை விரும்பிக்
கிட்டே வந்துவிட்டார், தோழி! கரிய அழகுடைய
இணையொத்த எதிரெதிர் பொருந்திய மலர்களைப் போன்ற மையுண்ட கண்களின்
பெண்மானைப் போன்ற உனது பார்வை பேரழகு பெறும்படியாக - (கிட்டே வந்துவிட்டார், தோழி!)
					மேல்
#364 முல்லை மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
திசைகளெல்லாம் மறையும்படியாகப் பரவிக் கால் இறங்கி,
இடியினையுடைய பெரும் மழை பொழிந்ததால், பள்ளங்கள்தோறும்
கழைக்கூத்தர் கூத்தாடுகின்ற களத்தில் ஒலிக்கின்ற பறையொலி போன்று வரிகளையுடைய தேரைகள் ஒலிக்க
சிறந்த பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்களைத் தொங்கவிட்டாற்போன்று
நீளமான பூங்கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் அழகுடன் தோன்ற, காடு முழுவதும்
விளக்குப் போன்ற தோன்றிப்பூக்கள் புதர்களின் உச்சியெல்லாம் மலர்ந்து அழகைக் கொண்டிருக்க,
முல்லைப் பூக்களும், தேற்றாவின் பூக்களும் சேர்ந்து மலர்ந்திருக்க, மலையிலுள்ள
அகன்ற வாயினையுடைய அழகிய சுனைகள் விலங்குகள் எட்டி நின்று நீர் குடிக்கும் அளவுக்கு நீரால் நிறைந்திருக்க
இக் காலம் கார்காலத்தைத் தொடங்கிவிட்டது; நம் காதலரோ,
கொடிய சினத்தினையுடைய அரசனின் மிகப் பெரிய பாசறையில்
பகைவரை வெற்றிகொள்ளும் வேட்கையால் நம்மையும் நினைக்கமாட்டார்;
நாம் என்ன செய்வோம்? தோழியே! நாம் நொந்துபோயிருக்க,
நம்மைக் கொல்ல வருவது போன்ற மாலை
விரைந்து வரும்பொழுது, அதனைக் கடந்து செல்வது மிகக் கடினமானதாகும்.
					மேல்
#365 பாலை மதுரை மருதன் இளநாகனார்
அகன்ற இடத்தையுடைய வானத்தில் மிகுந்த இருள் பரவ,
ஞாயிற்றை வழிநடத்திச் சென்ற பசந்த தோற்றத்துடன்
சினந்தது போல் சிவந்து காணப்படும் துன்பத்தைச் செய்யும் மாலைக் காலத்தில்
காட்டு வழியிலுள்ள நடுகல்லை ஆளென்று நினைத்து உதைத்த
காட்டுயானையின் சிதைவுற்ற வளமான நகம்
பெரிய பனையின் நுங்கின் தோடு போல ஒடிந்து காணப்படும் அவ்விடத்தில்
கொடுமையையுடைய ஆறலைக் கள்வர் அம்பு எய்யும் முயற்சியுடன் பதுங்கியிருக்க,
வழிச்செல்வார் யாரும் இல்லாததால் தன் வறுமையைக் களைபவரைக் காணமுடியாத இடமாகிய
வெப்பம் மிக்க கொடிய பாலை வழியில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற நீ,
எனக்குத் துன்பத்தை விளைவித்து, நீயும் ஆற்றமாட்டாதவனாய் மீண்டும்
நினைத்துக்கொண்டிருக்கிறாய், வாழ்க நெஞ்சமே! வெற்றியையுடைய வேலினையும்
சிறந்த வள்ளல்தன்மையையும் உடைய கழுவுள் என்பவனின் காமூர் என்னுமிடத்தில்
பூதம் வழங்கிய பொரிந்த அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின்
குளிர்ச்சியான மணங்கமழும் புதிய மலர் போல மணக்கும்
அழகிய சிலவாகிய கூந்தலையுடையவளின் அழகிய மடப்பமாகிய குணத்தினை - (நினைத்துக்கொண்டிருக்கிறாய்)
					மேல்
#366 மருதம் குடவாயில் கீரத்தனார்
தாழ்ந்த கிளைகளையுடைய மருதமரம் சிறப்புற அழகுபெற்றிருக்கும்
நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவு பெறும்படி வைக்கோல் போர்களைப் பிரித்து
கள்ளைப் பருகிய உழவர்கள் காளைகளை மாற்றிமாற்றிப் போரடித்து, பின்னர்
வேகமாக அடிக்கும் காற்றில் நெல்லினைத் தூற்ற, பறந்துபோன துரும்புகள் முழுவதும்
உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் இடமெல்லாம் மறையும்படி பரந்து விழுந்ததால்
பெரிய நீர்ப்பரப்பாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய மீனவர்கள்
தம் உணவுக்கு இனிமை தரும் வெள்ளை உப்பு கெட்டுப்போனதால், சினங்கொண்டு
வயல் உழவரோடு பகைத்து எதிர்ந்து கைகலந்து
கரிய உப்பளத்தின் சேறாகிய குழம்பை வாரி எறிகின்ற சண்டையைப் பார்த்து
தலை நரைத்த முதியவர்கள் கைகலப்பை விலக்கி
முற்றிய தேனாகிய கள்ளினை அந்த மீனவர்க்கு வழங்கும் இடமாகிய
பொன்னாலான பூண் அணிந்த எவ்வி என்பவனின் நீழல் என்னும் ஊரைப் போன்ற
பேரழகு பெற்ற பருத்த தோளையும், அழகிய நெற்றியையும் உடைய பரத்தையோடு
மணங்கமழும் குளிர்ச்ச்சியான பொழிலில் தங்கி, நேற்று
நீ தனக்குத் தவறுசெய்ததை அறிந்து
எங்களுக்குத் தெய்வம் போன்றவளாகிய தலைவி அழுத கண்ணளாய் இருக்கிறாள்.
					மேல்
#367 பாலை பரணர்
பிரகாசமான ஒளியுள்ள ஞாயிறு வானத்தை விட்டு நீங்கி
தனது பலவான கதிர்கள் மழுங்கிப்போக மேற்கு மலையைச் சேர்ந்த பொழுது
தன் பிணையைக் காணாமல் கலக்கமுற்ற முதிய ஆண்மான் தன் ஆண்மை தோன்றும் குரலால் அழைக்க,
வீட்டைச் சூழ்ந்து வளரும் நொச்சிமரங்களின் பக்கத்தில் மான்கள் சேர்ந்து தங்கியிருக்க,
காட்டு அரணின் பக்கத்தில் இருந்த அழகிய குடியிருப்புகளையுடைய சிற்றூரில்
கரிய காலையுடைய வேங்கைமரங்கள் நிற்கின்ற சிவந்த மேட்டு நிலத்தில் விளைந்த வரகாகிய
மிகுந்த உணவுப்பொருள் நிறைந்துள்ள தொகுதியாக அமைக்கப்பட்ட கூடுகளின் ஒரு பக்கத்தில்
குவிந்த அடியினையுடைய காட்டுப்பூனையின் பசிய கண்ணையுடைய ஆண்,
ஊனைத் தின்ன விரும்புகின்ற பெண்பூனையின் வருத்தும் பசியினைப் போக்குவதற்காக,
தளிர் போன்ற கன்னத்தினையும், அடர்ந்த மயிரினைக்கொண்ட கழுத்தினையும்
நிமிர்ந்த தலையில் முருக்கம் பூவைப் போன்ற
உச்சிக்கொண்டையினையும் உடைய சேவலைப் பிடிக்கத் தகுந்த சமயம் பார்க்கும்
பொலிவற்ற மாலைப் பொழுதும் இனியதாயிருக்கும் -
அழகிய தம் மார்பகத்தில் அமைந்த வனப்பு மிக்க முலைகள் நன்கு பொருந்தும்படி தழுவும்போதெல்லாம்
தமது உயிர் குழைவது போன்ற மென்மை வாய்ந்த,
மாசற்ற நெஞ்சுடைய இனிய தமது காதலருடன் சேர்ந்திருப்பவர்களுக்கு - (புல்லென் மாலையும் இனிது)
					மேல்
#368 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
காலில் செருப்பைத் தொடுத்துக் கட்டிய குறவன் செடிகொடிகளை வெட்டிச் சுட்டெரித்த அகன்ற கொல்லையில்
கரிந்துபோன இடங்களைக் கழுவிவிட்ட பெரிய மழையினால் உண்டான ஈரத்தில்
இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கதிர்களைக் காவல்காக்கும்
ஒளிவிடும் வளையலை அணிந்த பெண்களுக்கு ஆடுவதற்கு ஊஞ்சல் கட்டுவதற்காக,
அசைகின்ற கிளையின் நுனியைப் போக்கிய கொம்பிலே பூங்கொத்துக்கள் செறிவாயுள்ள
குன்றின் பக்கத்திலுள்ள நீண்ட அடியினையுடைய வேங்கை மரம்
அழகிய மயிலின் உச்சிக்கொண்டை போல் தோற்றமளிக்கும் நாட்டையுடைய நம் தலைவன்,
உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள காந்தளையுடைய அழகிய சோலையாகிய
குரங்குகளும் ஏறி அறியாத மரங்கள் செறிந்த காட்டில்
மணம் மிக்க சுனையின் தெளிந்த பளிங்கு போன்ற இனிய நீரில்
பெண்யானையுடன் சேர்ந்து நீராடும் களிற்றியானையைப் போல எம்முடன் நீராடி
பல நாள் கழித்து வேறிடம் சென்று ஒருசில நாளும்
கழியாததற்கு முன்பே இந்தச் சந்திப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிறரால் பெரிதும் அறியப்பட்டு
அழகிய மூங்கில் குழாயினுள்ளே இடப்பட்டு முதிர்ந்த தேனாகிய கள்ளின் தெளிவை
வண்டுகள் மொய்க்கும் தலைமாலையுடையவர்கள் உண்டு மகிழும் சிற்றூரில்
என்ன ஆகிவிட்டது தெரியுமா? வாழ்க, தோழியே! கொங்கு நாட்டினர்
மணியினை இடுப்பில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடுகின்ற
உள்ளி விழாவில் எழுகின்ற ஆரவாரம் போன்று
அனைவரும் தூற்றும் பழிச்சொல்லாய் ஆகிவிட்டது 
					மேல்
#369 பாலை நக்கீரர்
இதோ, இங்குள்ள நிலையைப் பார்! மகளே! ஒருவருடன் மிகவும் நெருங்கி இயைந்திருப்பதால் என்ன பயன்?
ஒளிரும் வளையலைச் செறிவாக அணிந்த முன்கையினால் மாறி மாறி
பணிமகளிர் இனிய சொற்களால் பலவாறு பாராட்டவும், கழுத்தில் சிவந்த கோடுகளைக் கொண்ட
அவள் வளர்த்த கிளிகளும் இனிய பாலினை உண்ண மறுக்கின்றன, மயில் போன்ற சாயலையுடைய,
சிவந்த அணிகலன்களை அணிந்த மகளிரான அவளது தோழியரும் விளையாடவில்லை,
அவள் நீர் ஊற்றாமல் பூந்தொட்டிகளும் பல மலர்களைக் கொண்டிருக்கவில்லை, அழகிய நிறம் பொருந்திய
முத்துச்சரம் ஆகியவற்றைப் புனைந்து அழகாக அமைந்த கெட்டியான சுவரில் வரையப்பட்ட 
அவளுடைய தெய்வ உருவங்களும் தமக்கு எதுவும் படைக்கப்படவில்லை, துன்பம் வருத்த
இவற்றைக் கண்டு வருந்துவதன் மேலும் அவள் இப்படிச் செய்வாள் என்று சிறிதும் நினைக்கவில்லை,
கல்மனதுக்காரி என்ன நினைத்தாளோ அதனையும் அறியவில்லை, “வளையணிந்தவளே!
இன்று உன் செழிப்பான கூந்தலுக்கு நீராட்டவேண்டும்” என்று சொன்னதற்கு
என் மேல் கோபித்து மனம் உடைந்தவளாகி, அவள் தன் செல்வ நிலைக்குத் தக்க வகையில்
கடல் போன்ற சேனையினையும், சிறந்த வள்ளன்மையையும் உடைய சோழரின்
ஒருபோதும் கெடுதல் இல்லாத நல்ல புகழையுடைய உறையூர் போன்ற
செல்வம் மிகுதியாக உடைய அழகிய மாளிகையைப் புதிதாக ஒப்பனைசெய்து,
தன்னைச் சேர்ந்தவர்கள் மணம்செய்துகொடுக்க மனம் ஒப்பாதவளாகி, கிளைவிட்ட அடிப்பகுதியையுடைய
ஓமை மரங்களின் நெடிய உலர்ந்த கிளைகளையுடைய நீண்ட வெளியில்
மணிகள் பதித்த கேடகத்தையும், சிறந்த காம்பினையுடைய நீண்ட வேலையும்
துணிவுள்ள நெஞ்சத்துடன் மிகுந்த வலிமையையும் உடைய,
தெரியாத தேசத்தில், நடக்கமுடியாத பாதைகளில் கூட்டிச் சென்ற
சிறுமையுடைய ஒருவனின் கருத்திற்கு ஒத்துப்போன பெரிய அறியாமையுள்ளவளென்று சொல்லத்தகுந்தவள்
நல்ல மதிப்பும், உயர்வும் இன்றி, ஒரு சிற்றூரில்
வறுமையுற்று வாழும் ஒருத்தியைப் போல புல் வேய்ந்த குடிசையில்
ஒரு பசுமாடு கட்டிக்கிடக்கும் ஒரே ஒரு தூணையுடைய முற்றத்தில்
அயலாரின் வறிய மனையில் சிலம்புகளைக் கழித்து
அவனுடன் மணம் பொருந்தினாளோ என்று நான் வருந்துகிறேன்.
					மேல்
#370 நெய்தல் அம்மூவனார்
வளைவு பொருந்திய மலர் மாலை அணிந்த இளைய மகளிர் மணல்வீடு செய்து விளையாடிவிட்டு
சிறுவர்களுடன் வீட்டுக்குத் திரும்புவர், பகலும் ஒளி குறைந்தது
அகன்ற இலைகளையுடைய புன்னை மரத்தின் புள்ளிகள் அற்ற நிழலில்
பகல் முழுதும் எம்முடன் விளையாடிவிட்டு, இரவு வந்ததும்
காய்ந்த புல் வேய்ந்த புதிய நல்ல இல்லத்தில்
தலைவனைப் பிரிந்த துன்பத்தால் தங்கியிருப்பாயென்றால், உன்னுடைய தந்தையின்
வெளியில் செல்லமுடியாத காவலுக்கு ஆளாவேன் என்கிறாய், இருப்பினும் நீ
வீட்டுக்குச் செல்க என்று கூறுவதையும் ஏற்கமாட்டேன் என்கிறாய், சென்றால்
உயிர் வாழமாட்டேன் என்கிறாய், ஞாழலின் மலரினால்
வண்டுகள் மொய்க்கும்படியாகச் செறியக் கட்டிய தலைமாலையுடன், நெய்தல் பூவால் செய்த
குளிர்ந்த அரிய பசிய மலர்மாலை அசைய, அந்திப்பொழுதில்
கடல் தெய்வம் கரையினில் நிற்பது போல்
நீ இக் கடற்கரைச் சோலையில் தனித்திருக்க, நானும்
வெறியாட்டத்தை மேற்கொண்ட பாவையினைப் போன்ற எனது அழகினைத் துறந்து,
வெறும் ஆட்டக்காரியைப் போல ஊருக்குத் திரும்பிச் செல்ல
இயலாதவளாய் இருக்கின்றேன். இவ்வூர் அலர் பேசிவிட்டுப்போகட்டும்.
					மேல்
 




#371 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய விசை அமைந்த வலிய வில்லினையும்,
சிவந்த வாயினையுடைய அம்பினையும், சினங்கொண்ட பார்வையினையும் உடைய மறவர்கள்
அம்பு விடுதலால் இறந்த தன் காதல் மிக்க பெண்மானை நினைத்து
சிறியவும் பெரியவும் ஆன அளவினைக் கொண்ட குட்டிகள் தன் பக்கத்தில் விளையாட,
துன்பம் கொண்ட முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மான்
மேயும் உணவினையும் வெறுத்த துன்பத்தோடு, வருத்தம் மிகுந்து
களர்நிலத்தில் உள்ள சிறிய குழியில் தங்கிய சிறிதளவு நீரையும் பருகாமல்
வேல் தைத்த மக்களைப் போன்று பெரிதும் வருந்திக் கண்ணயர்ந்து கிடக்கும்
பசுமை அற்றுப்போகும்படி வெப்பம் ஏறிப்போன பாழ்பட்ட இந்த வழியில்
தனியாக நடந்து செல்லும் என்னைக்காட்டிலும், கண்ணீர் சொரிந்து
எப்படிப்பட்ட துன்பத்தை எய்திநிற்குமோ? தெளிந்த நீரினையுடைய
அழகிய சுனையிலே மலர்ந்த புதிய மலர் போலும் என்று ஆசையுடன்
மலர்களை ஆராயும் வண்டுகள் விருப்பங்கொள்ளும்
மலர் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள் - (எப்படிப்பட்ட துன்பத்தை எய்திநிற்குமோ?)
					மேல்
#372 குறிஞ்சி பரணர்
யாராலும் அழிக்கமுடியாத இயல்பினையுடைய கடவுள் காக்க,
பெரிய தேனடைகள் தொங்குகின்ற, நாடு முழுவதும் காணத்தகும் உயரத்தையும், அகன்ற இடத்தையும்,
தீண்டி வருத்தும் தெய்வங்களையும் உடைய பாழி என்னும் மலையினில் அமைந்த
பழைய வேள் குடி மக்கள் தமது அகன்ற ஊரினில் மறைத்துவைத்த
அரிய அணிகலன்களாகிய செல்வத்தைப் போல பெறுவதற்கு அரியவளான இவளின் அருமையை நினைத்து
நாம் வருந்தியிருக்கிறோம் என்று கூறியும் நீ அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்,
பெரிய கிளையில் கட்டப்பட்ட பலரும் ஆடுகின்ற ஊஞ்சலின்
ஏறி இறங்கும் கயிற்றைப் போல, நீ அவளைப் பார்ப்பதற்குப் போகவும், பார்க்கமுடியால் திரும்பவும் வருந்தி,
நீண்ட வழியினையுடைய குதிரைமலைத் தலைவனும், கூரிய வேலை உடையவனும் ஆகிய அஞ்சியின்
கடுமையான பகைவரைப் போர்க்களத்தில் வருத்திய வளைந்த வில்லையுடைய வீரர்கள்
வெற்றிகொண்ட ஆரவாரத்தின் ஓசை மிகுந்து அப்போது முழக்கும்
பெரிய உடுக்கையின் வாரைப் போல இறுக்கமாகவும் நெகிழ்ந்தும்,
மேய்வதற்காகத் தான் உமிழ்ந்துவைத்த மணியை இழந்துவிட்ட பாம்பு போல, நீ மிகவும்
வருந்துகிறாய், வாழ்க! என் நெஞ்சமே! பகை மன்னரின்
பகையைத் தணிப்பதற்குக் காரணமான மதில் போல, தந்தையின் காவல் மிகுந்து
இங்கு எய்துவதற்கு மிகவும் அரியவளாய் இருக்கின்றாள், நம்மை வருத்துகின்ற நம் காதலி.
					மேல்
#373 பாலை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
வேற்றரசன் போர்முனையை வென்றெடுத்ததாக, அவ்விடம் சிதைவுற்று, பீர்க்கங்கொடிகள் உயரப் படர்ந்து
வீடுகள் பாழ்பட்டுப்போய், மரைமான்கள் கூடியிருக்கும் மன்றத்தில்
பருத்த காலையுடைய யானை தன்னுடைய பெரிய முதுகினை உரசித் தேய்த்ததால்
சுருங்கிப்போன விட்டம் வீழ்ந்த பழைமையான தூண்கள் நிற்கின்ற அம்பலத்தில்
கடப்பதற்கு அரிய பாலைவழிகளைக் கடந்துவந்த வருத்தத்துடன், செயலற்று,
பெரிய பொலிவிழந்த மாலைப்பொழுது தனிமைத் துன்பத்தை ஏற்படுத்த
உறுதி மிக்க உள்ளம் மேலும் செல்வதை வலியுறுத்திக்கூற,
முழங்கால்களைக் கையினால் சேர்த்துப்பிடித்துத் தன்னந்தனியளாய் இருக்கின்ற இருப்பில்
தனது துன்பநிலையையே எண்ணிக்கொண்டு நாம் இருக்கும் நிலைமையை உணரமாட்டாள்,
நீண்ட பலவான கூந்தலையும், சிவந்த அணிகலன்களையும் உடைய நம் தலைவி
மிகுந்த இருள் படர்ந்த நள்ளிரவில் பஞ்சணையில் கிடந்து
துன்பமுற்று நம்மை வெறுக்கும் நெஞ்சத்தினோடு மெதுவாக மூச்சுவிட்டு
அழகிய பூவிதழ் போன்ற குளிர்ச்சியான கண்களில் நீர் பெருக, வருத்தம் மிகுந்து
பெரிய தோளினை நனைக்கும்படி அழுவதால் ஒழுகும் நீர்த்துளிகளை
மெல்லிய விரல் நகத்தால் தெறித்து, வெற்றியையுடைய வேலினையும்,
தலைமைப் பண்பினைக்கொண்ட யானையையும் கொலைத்தொழில் மிக்க போராற்றலையும் உடைய வேந்தர்
பலர் ஒன்றுசேர்ந்து முற்றுகையிட்டு வளைத்துக்கொண்ட இடிந்துபோன இடங்களையுடைய ஞாயில்களையுடைய
ஒற்றை மதிலால் சூழப்பட்ட அரண்மனைக்குள் இருக்கின்ற மன்னனைப் போலத்
தூக்கமின்றி இருப்பாளோ? பாவம் அவள்!
					மேல்
#374 முல்லை இடைக்காடனார்
பெரிய கடலின் நீரை முகந்துகொண்டு திசைகளையெல்லாம் இருண்டுபோகவைத்து
அகன்ற இடத்தையுடைய உலகம் மறையும்படி, வலப்பக்கமாக எழுந்து
சுமக்கமாட்டாத சுமையினால் வருத்தத்தைக் கொண்ட கொழுத்த பலவான மேகங்கள்
வானத்தைப் பிளப்பது போன்று பலவும் ஒருசேர மின்னி
தாழ்ந்து இறங்குவன போல நிலத்திற்கு மிக அருகில் வந்து
மிகவும் நெகிழ்ந்தன போல மிகுதியான மழையைப் பெய்து
இடியும், குமுறுதலும் இல்லாமல், பாணரின்
நன்கு வடிக்கப்பட்ட நல்ல யாழின் நரம்பு இசைப்பது போன்று
இனிய குரலுடன் மிக்க துளியைப் பெய்து, நல்ல பல
மழைகளைப் பொழிந்து கழிந்த பூக்கள் மணக்கும் விடியற்காலையில்
செறிவான மணல் மேடுபட்டுக் களர் நிலம் தோன்றுகின்ற பாதையில்
சிறிய வயிற்றினையுடைய தம்பலப்பூச்சிகள் குறுகுறுவென்று ஓடி
நீல மணியுடன் கூடிய பவளம் போல, காயாமரங்களின்
அழகு மிகுந்த வாடல் பூக்களுக்குளே தங்களை ஒளித்துக்கொண்டு மறைந்திருக்க,
கார்ப்பருவம் அழகுபெற்ற யாவரும் விரும்பும் காலைப்பொழுதில்
நம் தேர் விரைந்து செல்வதாக, நல்ல திறம் வாய்ந்த பாகனே!
பெரிய தோள்களையும், நுண்ணிய இடுப்பினையும் உடைய
திருத்தமான அணிகலன்களை அணிந்த நம் தலைவி நம்மை விருந்தினராக எதிர்கொண்டு வரவேற்க -
					மேல்
#375 பாலை இடையன் சேந்தன் கொற்றனார்
நம் தலைவர் பொருளீட்டச் சென்று, அங்கேயே நெடுநாள் இருந்துவிடமாட்டார், அவர் மேல்
வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கூறுகிறாய், தோழியே!
தன்னுடைய அம்பு தொடுக்கும் திறத்தை அளந்து அறிவதற்கு, புதிய வழிப்போக்கர்கள்
தம்மிடம் அணிகலன் இல்லாதவராய் இருந்தாலும் அவர்களைக் கொன்று பறவைகளை உண்பிக்கும்
வழிப்பறியைத் தவிர வேறு எதனையும் கல்லாத இளைஞர் செருக்குடன் திரியும் கிளைத்துச் செல்லும் வழிகளில்
கூட்டமான நரிகள் தம் இனத்தோடு கூடி நிணத்தை உண்ணும்,
குருதி தோய்ந்த வளம் மிக்க செறிந்த விரல்களையுடைய
பாலை நிலத்துப் பறவையாகிய கழுகுகளின் சேவல் தங்கியிருக்கும்
அடி திரண்ட யாமரத்தின் வெண்மையான திரண்ட கிளைகள், வினைத்திறமும், வெற்றியும்
கணைய மரம் போன்ற திண்ணிய தோள்களும் உடைய சோழர் பெருமகனாகிய
எங்கும் விளங்கும் புகழினை நிலைநாட்டிய இளம்பெரும் சென்னி என்பவன்
குடிமக்களுக்கு செய்யும் கடமை எனக் கொண்டு, தான் மேற்கொண்ட போர்வினையை முடிப்பதற்காக,
செம்பினைப் போன்ற மதிலையுடைய பாழி என்னும் அரணை அழித்து,
புதிதாய் வந்த வடுகரின் பசிய தலையை நசுக்கிக்
கொன்ற யானையின் கொம்பினைப் போல் தோன்றும்
அச்சத்தை உண்டாக்கும் இயல்பினையுடைய கொடிய பாலை வெளியைக் கடந்து சென்ற நம் தலைவர்
தீங்கு இல்லாதவராய்த் திரும்பி வரும் செய்தியை அறிந்தால்
தோழியே! என் கண்கள் அழமாட்டா.
					மேல்
#376 மருதம் பரணர்
செல்லவேண்டாம், மருதநிலத்துத் தலைவனே! உனக்குச் செய்யவேண்டிய கடமை ஒன்று உள்ளது;
பாகனிடமிருந்து பயிற்சி பெறாத யானை, காவலையுடைய நீரில் விளையாடுவதைக் கற்கும்போது,
அதனால் மிகுந்து எழுந்த நீர் மோதிய மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் தோட்டத்தினையும்,
செழிப்பான கதிர்களையுடைய வயல்களையும் உடைய கழார் என்னும் இடத்திலுள்ள நீர்த்துறையினில்
ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் கரிகால் பெருவளத்தான் கண்டு மகிழ
புனல் விழாக் கொண்டு, இனிய இசை தங்கிய
ஒளிரும் புள்ளிகளையுடைய அழகிய சதங்கை சிவந்த அடியில் புரள
கரிய கச்சு என்னும் ஆடையைக் கோத்துக் கட்டிய காண்பதற்கு இனிய தன் அழகிய வயிற்றின் மேல் கிடக்கின்ற
பெரிய பொன்னால் ஆன பாண்டில் என்ற தாளவாத்தியம் மணியுடன் ஒலிக்க,
ஆற்றில் நீராடுவதை விரும்பி ஆடிய அத்தி என்பவனின் அழகினை விரும்பி
காவிரி அவனைக் கவர்ந்து சென்று ஒளித்து வைத்ததைப் போல (சேரிப்பரத்தையர் உன்னைக் கவர்ந்துசெல்வர்)
எனவே, உம்மை வெறுக்க மாட்டோம், எனினும் எம்மிடம்
பசந்துவிட்டது எம் நெற்றி, அதைக் காண்பாயாக! சேற்றிலுள்ள
அழகிய துளையுடைய வள்ளையாகிய ஒளிர்கின்ற கொடியை உழக்கி,
வளமையான தோடுகளையுடைய நெல்லின் வளைவான இளங்கதிர்கள் விரியுமாறு
துய்யைத் தலையிலுடைய கூனிய இறாமீன் துள்ளிக்குதிக்கின்ற இடமான, அழகு பொருந்திய
வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனின்
மரந்தை என்னும் ஊரினைப் போன்ற என்னுடைய அழகினை என்னிடம் தந்துவிட்டுச் செல்வாயாக
					மேல்
#377 பாலை மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்
கோடைப்பருவம் நீண்டுகொண்டே செல்வதால் வறண்டுபோன நிலத்தில் உதிர்ந்த
சிறிய புல்லரிசியாகிய உணவினை வரிசையாகச் சென்று
நுண்ணிய பலவாகிய எறும்புகள் கவ்விக்கொண்டு தமது வளையிலே சேர்த்து வைத்த
தாம் விதைத்து விளைவிக்காத அந்த உணவினை உண்ணும் பெரிய வில்லையுடைய மறவர்கள்
பல முறை ஊருக்குள் புகுந்து பால் பயன் தரும் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்ல
செல்வச் செழிப்புடைய குடிமக்களும் கைவிட்டுப்போன பெரிய பாழிடமாகிய ஊர்மன்றத்தில்,
மயிர் நரைத்த முதியவர்கள் நடுங்குகின்ற தமது தலையைத் தாழ்த்தியவாறு
வெல்வோமா, தோற்போமா என்று இருபட மனத்தில் இருத்தி சூதாடும் களத்தின் அழகு கெட,
வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்ததால், பொலிவிழந்து
பெரிய அழகு சிதைந்த அச்சம் மிக்க அம்பலத்தில்
இன்னாததாயிருக்கும் ஒரு ஓரத்தில் தங்கி, இனிய புன்சிரிப்பும்,
சிறிய மென்மையாகிய சாயலினையும் உடையவளின் பேரழகை எண்ணிப்பார்த்து
அந்த மகளிர்க்குத் தொடர்பற்ற அயலார் போலவும் மேலும் தம் பயணத்தைத் தொடர்வர் -
பொருள் வேட்கையால் உந்தப்பட்டு வந்த இரவலர், தாம் இரந்து கேட்டவற்றைத்
தமக்குப் புகழ் உண்டாகும்படி ஈதலைச் செய்ய நினைப்பவர்.
					மேல்
#378 குறிஞ்சி காவட்டனார்
செல்வம் மிகுந்து கிடக்கின்ற மிகவும் உயர்ந்து ஓங்கி நிற்கும் வீட்டினில்
திருமணம் செய்த மகளிரின் கூந்தலைப் போல நறுமணம் கமழும்படி,
காற்று ஆட்டுவதால் அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின்
சிறந்த பொன்னின் துகள் போன்ற நறிய பூந்துகள் உதிர்ந்துவிழ,
அழகிய பீலி பொருந்திய சிறந்த தோகையையுடைய மயில்
வேறு வேறு இனத்தைச் சேர்ந்த மலை வாழ் வருடைகளின்
கொம்புகள் முதிர்ந்த இளைய கடாக்கள் எழுப்பும் ஒலியைக் கேட்டு அஞ்சி, அருகிலுள்ள,
ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்புவாத்தியத்தைப் போல இனியதாக ஒலித்து
பசிய முதுகினையுடைய மெல்லிய அழகிய இடம் வளைய, வானில் பறந்து சென்று
நீண்ட கணுக்களையுடைய ஆடுகின்ற மூங்கில் அசைந்தாடத் தங்கியிருக்கும்
பெரிய மலையையுடைய நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவன் பிரிந்து சென்றதாலாகிய தனிமையும்,
நம்முடன் மாறுபட்ட அன்னையின் விருப்பமில்லாத கொடிய பார்வையும்,
வாடைக்காற்று வீசுகின்ற பனி பெய்யும் முன்பனிக் காலத்தில்
ஒளி பொருந்திய தனது வட்ட வடிவம் ஒளி மழுங்கிப்போகும்படி ஞாயிறு
மேற்குக் கடலில் சென்றடையும் துன்பம் மிகுகின்ற மாலைப் பொழுதும்,
அத்தனையும் சேர்ந்து நின்று வருத்தவும், இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு
எப்படித்தான் உயிர் வாழ்கிறாய் என்று என்னைக் கேட்கிறாய், தோழியே!
உன்னை ஒருபோதும் நீங்கமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டு, இப்பொழுது நம்மைப் பிரிந்து சென்றவர்
நம்மை நினையாராயினும், உயிருடன் இருக்கின்றேன், அவர் நாட்டில்
செறிவான இலைகளையுடைய பலாவின் பழத்தினைக் கவர்கின்ற கையையுடைய
அறியாத பெண்குரங்கு ஆண்குரங்கோடு துள்ளித் திரியும்,
மிக்க ஆற்றலுடைய தெய்வத்தையுடைய நீண்ட பெரிய மலையிலுள்ள
இனிய ஓசையைக் கொண்ட அருவியைத் தன் மேல் கொண்டிருக்கிற
வானைத் தீண்டும் சிகரம் இங்கிருந்த பார்க்கத் தோன்றுதலால் - (உயிருடன் இருக்கின்றேன்)
					மேல்
#379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம்மை விரும்பி இருப்பவளாகிய நம் தலைவியின் பழைய அழகு கெட்டுப்போகும்படி
அறிவு தெளிவு பெறாமையால் தீமையொடு பொருந்தி
இரக்கம் இல்லாமல் மிகுந்த வன்மையுடன் பொருள் மேல் ஆசைகொண்டு
அப் பொருளினை ஈட்ட முயல்வதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே!
ஆராய்ந்து பார்ப்பாயானல் நான் கூறுவதைக் கேட்பாயாக!
விரிந்த அலைகளையுடைய கடலும், மண் திணிந்த இந்த உலகமும் ஆகிய இவையெல்லாம்
தனது ஆணைக்குட்பட்ட செல்வமாக, பிறருக்குப் பொதுவானது என்பதில்லாமல்
உண்மையாகவே கைகூடியதாக இருந்தாலும், இரவில்
கனவில் தோன்றி மறையும் தன்மையை உடையது அதன் போக்கு, அதனால்
ஒன்றோடொன்று கலந்த பல மலர்களை, வண்டுகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டு
பின்கழுத்தில் மீது தங்கிய நிலையிலிருந்த அசைந்த பெரிய கூந்தலின்
செறிந்துள்ள பலவான மணங்களையும் வேண்டும்போது பெற்று மகிழ
நன்றாகச் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்களால் பொலிவுபெற்ற தோளை அணைத்துக்கொண்டு
நாம் எய்திய மிக்க துயிலிலிருந்து விழிக்கும்போதெல்லாம் அவளை எதிரில்கொண்டு
ஒருவர் உடலில் ஒருவர் புகுவது போல ஒருவரையொருவர் கையால் பற்றிக்கொள்ளும் தழுவலைக் காட்டிலும்
மேலான சிறப்புள்ளதை நான் கண்டதில்லை, நீ உன்னுடைய
பெரும்பொருள் சேர்க்கவேண்டும் என்ற வேட்கையினால் என்னுடைய சொல்லின் எல்லையைக் கடந்து
போய்த்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினால், காற்றினால்
மிகுந்து எழும் தீ அழித்ததினால் இலையில்லாத அந்தப்பாலைக் காட்டினுள் செல்லும்பொழுது
மானின் முதுகில் உள்ள புள்ளிகளைப் போன்ற மர நிழலில்
இளைப்பாறியிருக்கும்போது அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வந்து, இவளின்
மறக்கமுடியாத பல குணங்களும் நெஞ்சுக்குள் வந்து புதுந்துகொள்ள,
மேலும் செல்வது அல்லது மீண்டும் திரும்புவது என்பதில் ஒன்றை உறுதியாக நினைக்கமுடியாமல், மனம் குழம்பி,
பெரிய புலியுடன் போரிட்டு வருந்திய வடுப்பட்ட கொம்பினையுடைய களிற்றுக்காக
பெண்யானை உண்டாக்கிய ஆரவாரத்தால் அதன் பாதங்கள் பதிதலால் ஏற்பட்ட பள்ளங்களையுடைய
நீண்டுகொண்டே செல்லும் நெடிய இடைவெளியில் தங்கி
உன் வலிமையெல்லாம் கெட்டுப்போய் மெலிவடைந்து வருந்துவாய் அல்லவா?
					மேல்
#380 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
தான் வந்த தேரினைத் தொலைவிலேயே விட்டுவிட்டு, தனியாக வந்து, உம்முடைய
ஊர் எது என்று கேட்டு, (அதற்குப் பதில்கிடைக்காததால்) சிறுசிறு எட்டுக்களாக அடியெடுத்து வைத்து நடந்து
முன்னொரு நாள் சென்ற தலைவன், நேற்று
அகன்ற இலையினையுடைய நாவல் மரம் நீர் உண்ணும் துறையில் உதிர்த்துவிட்ட
கனியினை அதன் அழகு சிதையும்படி பற்றி இழுத்துக்கொண்டு சென்று தன்னுடைய
தாழையின் வேர்ப்பக்கமுள்ள வளையிலுள்ள தனது அன்பிற்குரிய பெண்நண்டிற்குக் கொடுக்கும்
ஓர் ஆண் நண்டினைக் காட்டி, இது நல்வினைப் பயனுடையது என்று
நீண்ட நேரம் நினைத்துக்கொண்ட நெஞ்சத்துடன் திரும்பிச் சென்றான்;
இங்கே பார்! அவனுடைய தேர் இன்றும் தோன்றுகிறது,
இன்றும் நாம் அவனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளாவிட்டால், நமக்கு அவன்மேல் அன்பு இல்லை என்று
முடிவுசெய்துவிடுவான் போலிருக்கிறது, அவன் மானம் மிக்கவன்,
நான் வெண்மையான மணல்கொண்ட உயர்ந்த கரையில் மறைந்துகொள்கிறேன்,
தோழியே! உன் கருத்தினைக் கூறுவாயாக.
					மேல்
 



#381 பாலை மதுரை இளங்கௌசிகனார்
மற்ற உயிர்களை வருத்தும் இயல்பினையுடைய யாளியாகிய சிறந்த விலங்கின் ஆணானது
ஆற்றல் வாய்ந்த யானைகளின் தலைவனான களிறு வருந்தும்படி,
அதன் நிமிர்ந்த வெண்மையான கொம்பினைப் பறித்து அதன் குருத்தினைத் தின்னும்
அச்சம் வரத்தகுந்த பாலைவெளியில், மேகம் பெய்யாமற்போனதினால்,
நெருப்பினைக் கக்கிச் செல்லும் அசைகின்ற கதிர்களையுடைய ஞாயிறு
நிழலையும் தோண்டித் தின்ற செல்லச்செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள,
கன்றுக்குட்டியின் தோலால் அமைந்த குடிலையுடைய சினம் மிக்க வேட்டைநாய்களையுடைய வடுகர்
வழிப்போக்கர் மேல் அம்பு எய்ததினால் தம் சினம் தணிந்து நிற்கும் அச்சம் வருகின்ற வழிகளில்
குருதி படிந்த புலவு நாறுகின்ற பெரிய சிறகினையுடைய
ஆண் பருந்தின் கிளையுடன் கூடிய கூட்டம்
மிகுதியான பச்சை மாமிசம் கிடைப்பதைப் பிற பறவைகளுக்கு அறிவித்து, பறந்து எழுந்து
செவ்வானம் போல வானத்தை அழகுசெய்யும்
கடக்க முடியாத இந்தப் பாலைப்பரப்பின் வழியைக் கடந்து வந்த நம்மைக்காட்டிலும், பகைவருடைய
போர்முனையாகிய அரணை வென்று கடந்த போரில் வல்ல படையினையும்,
வண்டுகள் ஒலிக்கும் மணமுள்ள மாலையினையும் உடைய சேர மன்னன் போரிட்டு அழித்த
பகைமைகொண்ட எதிரிகளின் நிலையாய் இருந்த மதிலரண் போல
முழுவதும் பாழ்பட்டுப்போன மேனியையுடைய நம் தலைவி, பெருமூச்சுவிட்டு
வருந்தியிருப்பாளோ? பாவம் அவள், வண்டுகள் தேனைப் பருகும்படியாக
ஆழமான நீர்நிலையில் தோன்றிய வரிசையான இதழ்களையுடைய குவளையின்
புதிதாய் மலர்ந்த இரட்டை மலர்கள் போன்ற தனது
செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களில் தெளிவான துன்பக்கண்ணீர் நிரம்பும்படி - (வருந்தியிருப்பாளோ? பாவம் அவள்)
					மேல்
#382 குறிஞ்சி கபிலர்
பிறர் படுகின்ற துன்பத்திற்காகப் பெரியவர்கள் தாம் பிறராய் இருந்தாலும் வருந்தி அதனைத் தீர்க்க முயல்வார்கள்,
அவர்கள் தமக்கு வரும் துன்பத்தினைத் தமக்குப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்;
கடம்ப மரத்தில் கொடியினை உயர்த்திக் கட்டி, மாலை சூட்டி
பல்வேறு குரல்களையுடையனவாயிருந்தும் ஒரே தாளத்தில் அமைந்த இனிய இசைக்கருவிகளோடு
குறிஞ்சி நிலத்துக்குப் பொருந்திய முருகனுக்குப் பாடுகின்ற பாட்டிற்குப் பொருந்த
வெறியாட்டுச் செய்யும் அகன்ற களமானது அழகுறும்படி, மெல்ல
வெறியாடுவதற்கு விரும்புகிறார்கள் நம் வீட்டினர் என்று தலைவன் இருக்குமிடத்தில் அவனுக்குத்
தெரியும்படி சொல்லவேண்டும், தோழியே!
அருவி நீரில் குதித்த கரிய விரலையுடைய பெண் குரங்கு
செழுமையான காய்ப்பினையுடைய பலாவின் பழத்தையே தெப்பமாகக் கொண்டு
மலைச் சரிவில் உள்ள பெரிய ஊரின் நீர்த்துறையில் வந்து இறங்கும்
வறண்டுபோவதை அறியாத சோலையையுடைய
வெற்றி பொருந்திய மலைநாட்டுத் தலைவனின் சொல்லைப் பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்ட நீயே.
					மேல்
#383 பாலை கயமனார்
தன்னைப் பேணி வளர்த்தெடுத்த என்னை நினைக்காமல் விட்டுப்பிரிந்தாள்,
ஊருக்குள்ளும், சேரியிலும் ஒரேநேரத்தில் அலர்ப்பேச்சு எழும்படியாக,
காட்டிலும், சோலையிலும் அவனுடன் போகத் துணிந்து,
மிகப் பலவான நாடுகளையும், தேசங்களையும் கடந்துசென்ற
கொடுமைக்காரச் சிறுமிக்கு அழகுசெய்யும் அவளுடைய ஒப்பனை மகளிர் போலவே
வாடிப்போய்விட்டாய், வாழ்க! வயலைக்கொடியே! நாள்தோறும்
பலவான கிளைகளையுடைய கொடியும், கொம்புகளும் பாரம்தாங்காமல் வருந்தும்படி மலர்ந்த
அவளின் அல்குலில் அணியும் தழையாடைக்குச் சேர்க்கவேண்டிய அழகிய தளிர்களை நீ தரும்படியாக
சிறந்த வேலைப்பாடுள்ள மூங்கில் குழாயின் வழியாக வந்து விழும் நீரினை, சிறந்த வளையல்கள் அசைய,
நிறைந்த நீரினைக்கொள்ளும் பெரிய பாத்திரம் ததும்பும்படி முகந்து கொண்டுவந்து ஊற்றி
அழகிய மடப்பம் பொருந்திய என் மகள், தாயைப் போன்ற உன் முகத்தினைப் பார்த்து
தன் காலில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கும்படி நடந்துபோவாள், நாள்தோறும்
உனக்கு நிறைய நீர் ஊற்றி, அவள் போல உன்னைக் காப்பவர்கள்
யார் உனக்குக் கிடைப்பார், பாவம் நீ!
					மேல்
#384 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
பாசறையில் இருந்த வேந்தன் தன் அரிய போரினை வெற்றிகொண்டு முடித்துவிட,
விரும்பிய காதலுடன் பெரிய தேரில், நானும்
ஏறியதை அறிந்தேனல்லாமல் ஊருக்கு வந்துசேர்ந்த
விதத்தை நன்கு அறிந்தேனில்லை, தாவிக்கொண்டு
முயல்குட்டிகள் ஓடித்திரிகின்ற முல்லைநிலமாகிய அழகிய காட்டில்
கிளைத்துப் பிரிந்த கதிர்களையுடைய வரகுப்பயிர் மிகுந்த சிறிய ஊராகிய இடத்தில்
மென்மைத் தன்மை வாய்ந்த தலைவியின் வீட்டு வாசலில் நிறுத்தி
”இறங்குங்கள்” என்று சொன்ன உன்னுடைய சொல்லைக் கேட்டு மருண்டுபோனேன்;
வானத்தில் இயங்கும் இயல்பினையுடைய காற்றைத்தான் உன் தேரில் பூட்டினாயா?
அல்லது குதிரையின் வடிவில் உன் மனத்தையே பூட்டிக்கொண்டு வந்தாயா?
சொல்வாயாக, வாழ்க, பாகனே! என்று சொல்லித் தன்
மலை போன்ற மார்பினில் இறுகத் தழுவியவனாக
அவனையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டினில் புகுந்தான் நெடுந்தகையான தலைவன்,
திருத்தமான அணிகலன்களையுடைய அவன் தலைவி விருந்தோம்பும் சிறப்பினைப்பெற்றாள்
					மேல்
#385 பாலை குடவாயில் கீரத்தனார்
மயிலின் தன்மையைக் கொண்ட என் மகள், தன்னைப் போன்ற தோழிமாரும்,
என்னைப் போன்ற தாய்மாரும் கண்டு மகிழ,
வலிமையான கையையுடைய யானையையும், விரையும் தேரினையும் உடைய சோழர்களின்
காவிரியாற்றின் பக்கத்திலுள்ள உறையூரைப் போன்ற
செல்வம் மிகுதியாக உடைய பெரிய மாளிகையில் மூத்தோராகிய சான்றோர் மணம் செய்துகொடுக்க
நல்ல சிறப்புற்ற மண விழாவில், அவளுக்கு மயிர்ச்சாந்தினைப் பூசி
நாங்கள் பல சிறப்புக்களையும் செய்யத் தன் கணவனுடன் செல்ல விரும்பாதவளாய், மூங்கிலுடன்
நெல்லி மரங்களும் உயர்ந்து வளர்ந்துள்ள கற்பாறைகளையுடைய உச்சிமலைச் சாரலில்
பாதையிலுள்ள ஆலமரத்தின் வாடி அசைகின்ற நீண்ட விழுது
தனது தேமல் பொருந்திய தொடையில் நன்கு உராய்ந்திட
தனது வளையல்களை உடைய முன்கையைப் பற்றிக்கொண்டும், பல பிரிவுகளைக் கொண்டு
செறிவான பெரிய மாலையாகிய அழகிய வடங்களைக் கொண்ட மேகலை அணிந்த
அகலமாக அமைந்த அல்குலை அணைத்துக்கொண்டும், கூந்தலானது
ஆடுகின்ற மயிலின் தோகையைப் போல பொங்கிப் பரக்க, மிகவும்
தான் விரும்பும் காதலன் ஊஞ்சலை ஆட்டிவிட ஆடி,
எங்களை எண்ணாமல் சென்ற முள் போன்ற கூர்மையான பற்களையும், பவளம் போன்ற வாயினையும் உடைய
அந்தக் கல்மனத்துக்காரியாகிய சிறுமி, சிலம்பு கழற்றும் சடங்கினைத் தானேசெய்துகொண்டு,
அறியப்படாத நாட்டுக்காரியாகிவிட்டது மிகவும் கொடியது.
					மேல்
#386 மருதம் பரணர்
பொய்கையிலுள்ள நீர்நாயின் புலால் நாறுகின்ற பெரிய ஆண்
வாளைமீனை நாள்காலை உணவுக்காகத் தேடித்திரியும் ஊரையுடைய தலைவனே!
நான் பெரிதும் நாணமுற்றேன், பெருமானே! பாணன் என்பவனின்
மற்போர் செய்யும் மார்பின் வலிமை மிகுதலால் வருந்தி
அவனுடன் எதிர்த்து மற்போர் செய்வதை மேற்கொண்ட ஆரியனாகிய வீரன்
அப் பாணனின் ஆற்றல் மிக்க திரண்ட மத்தளம் போன்ற தோளையுடைய கையினுள் அகப்பட்டு உயிர் போனதால்
தன் தன்மை வேறுபட்டுப் பிணமாகிக் கிடக்கும் நிலையைப் பார்த்து நல்ல போர்த்தொழிலையுடைய
கணையன் என்பவன் நாணியது போல, மறைவாக
மெல்ல வந்து இனிய மொழிகளைக் கூறி
“மை போன்ற கரிய கூந்தலையும் இளமையையும் உடைய பெண்ணே! நானும் உன்னுடைய
சேரியில் உள்ளவளே! உனக்கு அண்டை வீட்டில்தான் இருக்கிறேன்,
உனக்குத் தங்கை ஆவேன்” என்று சொல்லி, தன் கையின்
மணி பதித்த மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் உடல் குளிரும்படி தடவிக்கொடுத்து
நெற்றியினையும் கூந்தலையும் நீவிவிட்டு
பகற்பொழுதில் வந்துபோன ஒளிபடைத்த நெற்றியினையுடைய உன் பரத்தையைக் கண்டு -
					மேல்
#387 பாலை மதுரை மருதன் இளநாகனார்
திருத்தமான அணிகலன்கள் கழன்றுவிழவும், பெரிய தோள்கள் மெலிந்துபோகவும்,
செவ்வரி பரந்த செழுமையான குளிர்ந்த கண்களில் கண்ணீர் ஒழுகவும், பிரிந்து செல்லும் தலைவரே
திரும்பி வருவதைப்பற்றிச் சொல்லுங்கள்!
உவர்மண்ணைச் சுமப்பதால் தேய்ந்துபோன ஊனையுடைய தலையையுடைய சிறுவர்களுடன்
ஆடையின் அழுக்குகளை நீக்கிய கறைபடிந்த கூர்மையான நகத்தையும்
கஞ்சிப் பசையை உடைய விரல்களையும் உடைய சலவைப்பெண் நீண்ட நேரம் பிசைந்து கஞ்சி ஊட்டிய
அழகிய ஆடை ஒளிரும் பொன் வடம் அணிந்த அல்குலில் கிடக்கும்
அழகிய சுணங்குகள் அழிந்து போக அதனைப் பார்த்தும் - கொலைத்தொழிலை
மிகுதியாகச் செய்கின்ற, பின்னிக்கிடக்கும் கொடிகளில் தங்கியிருக்கின்ற வேடர்களின் அழைப்பொலிக்கு அஞ்சி
முதுகில் வரிகளைக் கொண்ட காடையின் நீல மணி போன்ற கண்களையுடைய பேடை
நுண்ணிய புள்ளிகளை அழகாகக் கொண்ட கழுத்தினையும், கூர்மையான முள்ளையுடைய
சிவந்த காலையும் உடைய தனது சேவலை அழைக்கும் பாலைநிலத்தில்,
விற்படை செறிவாக உள்ள அரிய போரினை அழியக் கொன்று
நல்ல புகழை நிலைநாட்டிய மானம் மிக்க வீரரின்
வரிசையாக நிற்கும் நடுகல்லைச் சேர்ந்திருந்து, கண்ணிமைக்காமல்
இரையை விரும்பிக் கிடந்த முதுமை வாய்ந்த பல்லி
சிறிய அளவில் சில ஒலிகளை எழுப்பினாலும், அதனைத் தடையாக எடுத்துக்கொண்டு, பெரிய
முகபடாம் அணிந்த யானையில் வருகின்ற உயர்ந்த வீரரே என்றாலும்
தயங்கி நின்று ஆராய்ந்து பின்னர்ப் போகின்ற காட்டினில்
சென்றிருக்கிறார் என்று கூறி உயிருடன் காத்திருப்பவர்களுக்கு - (திரும்பி வருவதைப்பற்றிச் சொல்லுங்கள்!)
					மேல்
#388 குறிஞ்சி ஊட்டியார்
வாழ்க, தோழியே! நான் கூறுவதைக் கேட்பாயாக! நமது மலையில்
மூங்கிலை அறுத்துச் செய்த பெரிய ஓசையை எழுப்பும் வாயையுடைய தட்டையினால்,
நறுமணம் கமழும் சந்தனமரத்தை வேருடன் பிடுங்கிக் களைந்து, காடாக்கி, உழுது விளைவித்த
நுனிப்பஞ்சையுடைய கதிரையுடைய சிறுதினையைக் குருவிகள் கொத்தித்தின்பதால், கிளைகளாகச் செறிந்த
பெரிய மூங்கிலையுடைய மலைச் சாரலின் பக்கம் அந்தக் குருவிகளை ஓட்டி,
ஓங்கிய பெரிய மலைச்சரிவில் உள்ள ஒளி பொருந்திய கொத்துக்களில் நறிய பூக்களைக் கொண்ட
வேங்கை மரத்தின் அழகிய கவட்டுக்கு இடையே உயரக்கட்டிய பரணில்
பொன்னைப் போன்ற மணமுள்ள பூந்தாதுக்களை நுகருகின்ற தும்பிகள் எழுப்பும்
இனிய இசையினைக் கேட்டு இருக்கின்ற வேளையில்,
கருமையான நெய்ப்புடைய கூந்தலைக்கொண்ட இளம் பெண்களே!
நான் எய்த வருத்துகின்ற இயல்பினையுடைய அம்பு பாய்ந்ததால் மிகுதியும் புண்பட்டு
துன்பத்துடன் தப்பி வந்த உயர்ந்த கொம்புகளையுடைய ஒரு யானை உம்முடைய
தினப்புனத்துப் பக்கம் போனதா என்று
சினங்கொண்ட அவனுடைய நாய்கள் கோபத்துடன் அவனது பக்கத்தில் நடந்துவர,
கேட்டுச் சென்ற வலிய வில்லையுடைய இளைஞனின்
சந்தனம் நிறையப் பூசப்பெற்ற மார்பினையும், அழகையும் பெரிதும் விரும்பி
இங்கு நாம் அடையும் துன்பத்தினை உணரமாட்டாதவளாய்
நல்ல எண்ணத்துடன், நம் துன்பத்தை வேறுவிதமாக நினைத்து, வெறியாடல் வேண்டும் என்று
அன்னையானவள் அழைத்து வந்த முதுமை வாய்ந்த வேலன்
எம் இறைவனான முருகன் வருத்தியதால் இந்த நோய் வந்துள்ளது,
இதனைத் தணிக்கும் மருந்தினை நான் அறிவேன் என்று கூறினால்,
அவனைக் கேட்டால் என்ன? கனன்றுவரும் சினத்துடன்
மத மயக்கமும் உடைய யானையின் உடலை ஊடுருவிப்போகும்படி
சிவப்பு நிறம் ஊட்டியதைப் போன்ற ஊன் பொருந்திய அம்புடன்
காட்டு விலங்குகள் சென்ற அடிச் சுவட்டினைத் தொடர்ந்து 
வேட்டையாடுவதற்குச் செல்வதும் உண்டோ உன்னுடைய இறைவன் என்று - (அவனைக் கேட்டால் என்ன?)
					மேல்
#389 பாலை நக்கீரனார்
என் நிலையை அறியமாட்டாய், வாழ்க, தோழியே! நெளிநெளியாகவும், கொத்தாகவும் உள்ள,
மயிர்ச்சந்தனத்தை நிறையப் பூசின கூந்தலை விரல்களால் கோதிவிட்டு, மலர் சூட்டி,
தேன் மணம் கமழுகின்ற அழகிய நெற்றியில் பொட்டிட்டும்,
பலவான புதிய மலரிதழ்களை நகத்தால் கிள்ளி என் நிறத்தோடு மாறுபட்டுத் தோன்றும்படி
மிகவும் இளமையும் அழகும் உடைய முலைகளின் மேல் அகவிதழ்களோடே அப்பிவிட்டும்,
பெரிய தோள்களில் சந்தனக்குழம்பால் கோலமிட்டும், சிறிய கணுக்காலின் கீழ்
அழகிய சிவந்த சிற்றடிகளில் செம்பஞ்சிக்குழம்பினைத் தடவியும்
இவ்வாறாக என்னைப் பேணியதுடன், உன்னையும் பெரிதும் பாராட்டிப்பேசியும்
பலவான மலர் பரப்பிய படுக்கையில் பகற்பொழுதிலும் என்னைவிட்டு நீங்காதவராய்
வீட்டுக்குள் தங்கியிருப்பவராகிய நம் தலைவர், விரைந்து எதிர்சென்று
தம்மிடம் இரப்பவர்களின் ஏந்தும் கைகள் நிறையும்படி வழங்கி அவரைப் பேணுகின்ற வள்ளல்கள்
வருத்தம் இல்லாத நெஞ்சத்துடன் புதிய பொருள்களை வழங்கி மகிழும்
அரிய பொருளை நிறைய ஈட்டிவருவதை எண்ணி, தம் மீது பகைமைகொண்டவரின்
சிறிய புன்மையான இழிசொல்லாகிய துன்பம் அழிந்துபோக,
நல்ல புகழினைத் தம்மிடம் நிலைநிறுத்திக்கொள்ளும்பொருட்டு, வலிமையான வேற்படையையுடைய
சேரனுடைய நல்ல நாட்டிற்கு அப்பாலுள்ள
முதுவேனில் காலம் நீண்டதால் வெப்பம் மிக்க காட்டை அடைகின்ற தொடக்க இடத்தில்
வழிச்செல்வோராகிய புதியவர் வெவ்வேறு திசைகளில் ஓடிப்போய் அலறும்படி
கொலைசெய்யும் வேட்கையினால் தன் இருப்பிடத்தைவிட்டு வேறு இடத்தில் தங்கிய,
பெரிய களிற்றினைக் கொன்ற பெரிய நிறம் பொருந்திய ஆண்புலி
குருதியால் சிவந்த நிலத்தில், தன் கால்களை வளைத்துத் தாவி
வலப்பக்கமாக வீழ்த்திய வெற்றியால் மலைச் சரிவுகளில் எதிரொலி பிறக்கும்படி
புதிதாகத் தோன்றிய மழையுடன் வரும் இடியைப் போல் முழங்கும்
உயரமான மரங்களையுடைய சாரலையுடைய மலைவழியைக் கடந்து சென்றார்
					மேல்
#390 நெய்தல் அம்மூவனார்
உவர் நிலத்தில் விளையும் உப்பின் விலையைக் கூறி,
பாதையிலுண்டாகும் புழுதியையுடைய, தொலைவான இடத்திற்கும் செல்லும் இயல்புடைய,
வண்டிமாடுகளை அடிப்பதால் நுனி சிதைந்த கோலையுடைய உமணர் ஊர்களுக்குச் செல்லும் நெடிய வழியில்
கூட்டமாகக் கூடிச்செல்லுகின்ற அவர்தம் வாழ்க்கை தானும் நல்லதொரு வாழ்க்கையே போலும்;
வளைந்து சுருண்ட கூந்தலின் சுருள்கள் முகத்திலும் பிற இடங்களிலும் கிடந்து புரளும்படி
அழகிய, அகலமான அல்குல் மேலும் அழகுறும்படி உடுத்திய
பலவான தளிர்களால் செய்த தழையாடை தனது இடை வளையும்போதெல்லாம் வளைந்து அசையும்படி நடந்து
ஊரிலுள்ள மக்களே! நெல்லும் உப்பும் விலையால் சமமாகும்,
வாங்கிக் கொள்வீராக என்று சேரிகள்தோறும் கூறி விற்கும்
அழகிய வளைந்த வயிற்றினையும், மூங்கில் போன்ற தோளினையும் உடையவளே! உனது
உடம்பிலே வாழ்கின்ற இன்பத்திற்கு விலையை நாம் அறியவில்லை என்று கேட்டு
சிறிதே அவளை மறித்து நிற்க, பெரிய தன்
செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களினால் மாறுபட்டவள் போல் என்னை நோக்கி
என்னை மறித்துநிற்கும் நீங்கள் யார் என்று சொல்லி
புன்முறுவல் பூத்தவளாய் சிறிது தள்ளி நின்ற
ஒருசிலவாய் வரிசையாக அமைந்த வெண்மையான சங்கு வளையல்களால் பொலிவுற்ற
பல மாண்புகளையுடைய இளம்பெண்ணின் பின்னால் என் நெஞ்சு போய்விட்டது.
					மேல்
 




#391 பாலை காவன் முல்லை பூதனார்
தனக்குரிய இரையைக் குறிவைத்துப் பார்த்திருக்கும் காட்டுப்பூனையின் பற்களைப் போன்ற
வரிகளையுடைய மெல்லிய அரும்புகளையுடைய நுண்ணிய கொடியையுடைய காட்டுமல்லிகை மலர்கள்
நிறைந்த அகன்ற கூடையையுடையவர்கள் அவற்றை விலைக்குக்கொள்வோர் இல்லாததினால்
அந்த விலைஞர் நம்மிடம் அனைத்தையும் கொடுத்துப்போன எனது தலையில் சூடிய மணமுள்ள மலர்களை
தேன் பாயும் முல்லைப்பூக்களுடன் அகற்றித் தூரத்தில் போட்டு,
என் குளிர்ந்த நறிய கூந்தலாகிய பாயில் கிடந்து சேர்ந்திருந்தார் தலைவர்; அவர் புனைவுசெய்த என்
நிறைந்த மாண்புள்ள கூந்தலின் உச்சிமுடியை நான் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், முன்பிருந்த என்
பழைய அழகினை நினைத்துப்பார்க்கிறேன், தோழியே!
அவர் சென்ற பின் இன்றுடன் சில நாட்களே ஆயினும் மிகவும்
எம் கண்கள் தூக்கமில்லாதனவாகும்; மதத்துடன் இருக்கும் நிலையில்
தன்னுடைய வெண்மையான கொம்புகளின் மேல் தூக்கிப்போட்டுக்கொண்டிருக்காமல், யானை தன்
வாயில் நிறையும்படி புகுத்திய வலிமை குன்றிய பெரிய கை
மலைக்குகையில் நுழைகின்ற பாம்பினைப் போல் தோன்றுகின்ற
வெப்பம் மிக்க இடங்களையுடைய காட்டைக் கடந்து சென்றார்.
					மேல்
#392 குறிஞ்சி மோசிகீரனார்
காட்டினில், தாழத் தொங்குகின்ற நீண்ட பெரிய கையைத் தனது கொம்பின் மேல்வைத்த,
தான் விரும்பும் பெண்யானையை இழந்த வெண்மையான கொம்புகளையுடைய ஆண்யானை
தான் விரும்பி உண்ணும் தழையினை உண்ணாமல் நீக்கியதால் உண்டான வாட்டத்தைப் போன்ற
பண்பு மிக்க தனது உடம்பின் சிதைவினை நமக்கு நன்றாகத் தெரியும்படி செய்து
பெண்களாகிய நமக்குப் பின்னால் நின்று இரந்துவேண்டுவதை வெறுக்காதவனாய் ஆகி, மிகவும்
பொன்னால் செய்த பாவையைப் போன்ற அழகுடையவளும்,
விரும்பப்படும் மென்மையான இயல்பினையுடையவளும் ஆகிய மடப்பம் பொருந்திய தலைவியை அடைய
தீங்கு பிறவாதபடி நீ எனக்கு உதவியாகச் செல்வாயாக என்று சொல்லிவிட்டுச்
சிறிதளவும் அவன் நீங்கிப்போனால் அவன்
நெஞ்சு அழியும்படி நாம் இவ்விடத்தைவிட்டு அகன்றுபோவது மிகவும் துன்பம்தருவதாய் முடியும்.
என் தோழியான தலைவியே! நீ வாழ்க, இப்பொழுது என் வேண்டுகோளைக் கேட்பாயாக! கல் எனும் ஓசையுடன்
மேகக் கூட்டம் மழையைப் பொழிந்த காட்டின் உயிர்கள் எல்லாம் ஒடுங்கிக்கிடக்கின்ற நள்ளிரவில்
தினைப்பயிரை மேய்கின்ற யானைக்கூட்டம் நிலைகெட்டு ஒடும்படி,
பாறையின்யின் மேல் உயரக் கட்டிய பரணின்மேல் இருக்கின்ற குறவன் வீசி எறிந்த
வலிமையான வாயையுடைய கவணின் கல் எழுப்பிய கடும் ஓசையானது ஒல்லென்று ஒலிக்க,
வீரமுடைய புலி முழங்க, அதனால் யானைகள் கதற,
அகலமாயுள்ள காட்டில் உள்ள மயில்கள் (இடியோசை என்று நினைத்து) எழுந்து ஆட,
மலைவாழ் உயிர் முழுதும் வெருளும் பெரும் பாறைகளையுடைய மலைநாடனாகிய தலைவன்
நம்மைப் பிரிந்து செல்வதும் அரிதாகும், அப்படியில்லாமல்
அவனுக்கு உரித்தானது அல்லாத பண்பினால் ஒருவேளை அவன் நம்மைவிட்டுப் பிரிந்துசென்றால்
தான் மேற்கொண்ட போரில் தோற்றோடிய வெற்றிதரும் வேலையுடைய பகையரசன்
போர்க்களத்தில் கொல்லும் பெரும் சேனையுடன் மீண்டும் மதிலுக்கு வெளியே வந்து தங்கியிருக்க,
அரண் வேந்தனுக்கு, தனக்கு எல்லையாகிய நிலைபெற்ற மதிலாகிய அரணுக்குள் தங்கியிருப்பது
முடியாமற்போன நிலையில், கையில் பிடித்த வேலினையுடைய வலிமை கொண்ட
தனது தோற்றம் கெட்டுப்போகாதபடி அரண் வேந்தனின் பழைய புகழைப் பெற்றுத்தந்த,
கண்டோர் விரும்பும்படி உயர்ந்த மூங்கில்கள் மிகுந்த பக்கங்களையுடைய 
காட்டில் தங்கியிருந்த (பகையரசருடன் போரிட்டு வென்ற) நன்னனைப் போல
நான் செய்வேன், நீ இழந்த நலத்தை மீண்டும் பெறும்படி 
					மேல்
#393 பாலை மாமூலனார்
உயர்ந்த சிகரங்களைக்கொண்ட பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்துசென்று
வேற்றுநாட்டை எண்ணிச்செல்லும் பொருள் தேடும் முயற்சியையுடைய உள்ளத்தினையுடைய
வழிப்போக்கராகிய புதியவர்களின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்காக,
புதிய தினைப்புனத்தில் தழைத்து வளர்ந்துள்ள நீண்ட இதழையுடைய
கிளைத்துப்பிரிந்த கதிர்களையுடைய வரகின் தட்டைகளைத் தொகுத்த மிகுந்த தாளையுடைய பொலியில்
மாடுகளின் பிளவுபட்ட குளம்புகளால் நன்கு துவைக்கப்பட்ட பல கிளைகளிலிருந்து உதிர்ந்த வரகினை
அகன்ற இடத்தையுடைய பாறையில் சமமான இடத்தில் குவித்துவைத்து
திரைந்த கோடுகளையும், பருத்த தோள்களையும் நீண்ட காதுகளையும் உடைய தாய்மார்
பண்ணைக்கீரையின் வெண்மையான பழத்தின் விதையைப் போல
திரிகையால் திரித்து உமியைப் போக்கி, சுளகினால் கொழித்த வெண்மையான அரிசியை
சிறந்த பூண் அமைந்த உலக்கையினால் மாற்றிமாற்றிக் குத்தி
உரலில் இட்டு தீட்டிய, உரலின் குழி நிறைந்த அரிசியை
அவ்விடத்திலுள்ள பெரிய சுனையின் நீரோடு முகந்து
களிமண்ணால் செய்த பானையைக் கற்களால் செய்த அடுப்பில் ஏற்றிவைத்து
பூங்கொத்துக்கள் செறிந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல
இடையர்கள் புழுக்கி ஆக்கிய பொங்கி மலர்ந்த சோற்றை
கொழுத்த நல்ல பசுவின் பாலுடன் சேர்த்து அளிக்கும்
பசுக்கூட்டங்கள் பல்வேறு இடங்களில் கூடிக்கிடக்கும் நீண்ட புகழையுடைய புல்லி என்னும் அரசனுடைய
தேன் கூடுகள் தொங்குகின்ற உயர்ந்த மலையினையுடைய நல்ல நாட்டுக்கு அப்பால் உள்ள
வேங்கட மலையைக் கடந்து சென்றிருக்கிறாரென்றாலும், அந்த இடத்தில் அவர்
நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார், வாழ்க, தோழியே! கூட்டமாய் இருக்கும்
அழகு பொருந்திய மயில்களின் தழைத்த தோகையினைப் போன்ற,
மயிர்ச்சாந்து பூசப்பெற்ற குளிர்ச்சியான மணங்கமழும் கூந்தலில்
களங்கமில்லாத குவளைப்பூவுடன், ஆராய்ந்தெடுத்த இதழ்களையுடைய
வேனில்காலத்து காட்டுமல்லிகைப் பூவையும் சூடியுள்ள உன்னுடன்
இன்பம் மிகுதியாகக் கூடியிருந்தபின் கொள்ளும் இனிய தூக்கத்தை மறந்து - (நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார்) 
					மேல்
#394 முல்லை நன்பலூர் சிறுமேதாவியார்
களாவும் பழுத்துப் புளிப்பேறின, விளாவும் முதிர்ந்து பழுத்தன,
சிறிய தலையினையுடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முதிர்ந்த தயிராகிய உலையில்
புதிய கொல்லையில் விளைந்த வரகின் நன்றாகக் குற்றியெடுக்கப்பட்ட அரிசியுடன்
கார்காலத்து மழை நன்றாகப் பெய்து ஓய்ந்தபின், நனைந்து ஈரமான வாயினையுடைய புற்றிலிருந்து வந்த
ஈசலையும் சேர்த்துப் பெய்து ஆக்கிய இனிய புளிப்பு வாய்ந்த யாவரும் விரும்பும் சோற்றில்
சிவலைப் பசுவின் வெண்ணெய் அதன் சூடான மேற்புறத்தில் உருகும்படி
உன் ஏவல் இளைஞர் உண்ண, பின்னர் நீயும்
முள்ளிட்டுக் கட்டிய வேலியினுள் வளைந்த கால்களையுடைய பந்தலையுடையதும்
புதிய மண்கலத்தைப் போன்ற செம்மண் பூசியதும் ஆகிய சிறிய வீட்டினில்
அலங்கரிக்கப்பட்ட கருமையான கூந்தலையுடைய உன்னுடைய மனைவி விருந்து பரிமாற
பால் பெய்த உணவினை உண்ணுவதற்கு, ஒரு நாள்
பெரிய வண்மையுடைய தலைவனே! வந்துவிட்டுப்போவாயாக!
காட்டில் தங்குகின்ற இடையன் தன் ஆடுகளை ஒன்றுகூட்டுவதற்காக
வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கையொலிக்கு அஞ்சி, குறுமுயலானது
அங்குள்ள பாழ்பட்ட மன்றத்தின் பெரிய புதர்களுக்குள் ஒளிந்துகொள்ளும்
முல்லை நிலத்து ஊராகிய எமது சிறிய நல்ல ஊரினில் - (களவும் புளித்தன விளவும் பழுநின)
					மேல்
#395 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
குளிச்சியான குளம் ஈன்றெடுத்த கொழுத்த காம்பினையுடைய குவளையின்
மழைக்காலத்தில் மலர்ந்த பெரிய மலர் மழைக்கு எதிர்ப்பட்டு நின்றதைப் போல
நீரினால் நிறைந்த பெரிய அமைதலுடனான குளிர்ந்த கண்களிலிருந்து
நீர் ஒழுகும் துன்பம் தீரும்படியாக, இப்பொழுது வந்தால்
மிகவும் நல்லது, வாழ்க, தோழியே! சுடுகின்ற ஞாயிற்றின் வெயில்
நிலத்தில் ஈரமே இல்லாமல் ஆக்கியதால் நீர் அற்றுப்போன அகன்ற இடத்திலுள்ள,
காட்டுத்தீ பரவலாகப் பற்றியெரிந்ததால் நிழலே ஒழிந்துபோன வழியினில்
வற்றிப்போன மரக்கிளைகளைப் போல கிளைத்துப் பிரிந்த கொம்பினையுடைய அழகிய கலைமான்
அரித்தோடும் நீர் ஒளிர்வதைப் போன்ற கானல்நீரினை விரும்பி ஓடி,
தனிமையுற்றதனால் உண்டான கலங்கிய உள்ளத்தோடு
மேயும் தன் பெண்மானை அழைக்கின்ற மெலிந்து மிக்க துன்பத்தினைக் காட்டுகின்ற குரலைக் கேட்டு
கடப்பதற்கு அரிய பாலைவழியில் செல்லுகின்றவர்கள் இது ஆளின் குரலோ என்று உற்றுக்கேட்கும்
திருத்தமான அடியினையுடைய ஞெமை மரம் நிற்கின்ற பெரிய கொல்லைகளையுடைய மலையின் மேல்
ஆடுகின்ற கோலையுடைய பெரிய மூங்கில் ஒன்றோடொன்று உராய்ந்து ஒலியெழுப்பும்
உச்சிகள் வெம்பிய மலைப்பக்கத்திலுள்ள காடுகளைக் கடந்து சென்ற நம் தலைவர் - (இனி வரின் நன்று-மன்)
					மேல்
#396 மருதம் பரணர்
உன்னை நான் இறுகப் பற்றிக்கொண்டேன், மருதநிலத் தலைவனே! போகாதே!, கொடி உயர்த்திய தேரினையும்
பொன்னாலான அணிகலன்களையும் உடைய நன்னன் என்பவன் புனனாட்டின் மேல் வெகுண்டெழுந்தானாக,
யாழின் இசை ஒலிக்கும் தெருக்களையுடைய பாழி என்ற இடத்திலிருந்து
புனனாட்டினரை அஞ்சவேண்டாம் என்று கூறிய ஆய் எயினன் என்பவன்
போரில் வெல்லும் பயிற்சியையுடைய நன்னனின் படைத்தலைவனான மிஞிலியுடன் போரிட்டு,
தான் சொல்லியது பொய்க்காமல் தன் உயிரைக்கொடுத்தான்; நீயோ
வெல்வதற்கு அரிய தெய்வத்தின் முன்னர் நின்று என்னைத் தெளிவித்து
மென்மையாக இறங்கிவரும் முன்கையினைப் பிடித்துக்கொண்டு சொன்ன சொல்லை மறந்து,
உன் காமவேட்கையுள்ள நெஞ்சம் வெவ்வேறு இடங்களில் மகிழ்ந்து சிறக்க, உன்
மார்பினை எனக்குத் தராமல் அயலான் ஒருவன் போல் ஆகிவிட்டாய்,
இனி நான் உன்னை எங்கும் போகவிடமாட்டேன்; ஆதிமந்தி என்பவள்
நீர் ஒழுகும் கண்களையுடையவளாய், பலவற்றையும் சொல்லி வருந்தியிருக்கும்படி,
வெல்லும் ஆற்றலையுடைய அவள் கணவனாகிய அத்தி என்பவனின் ஆடும் அழகை விரும்பி
நீர்ப்பெருக்கினையுடைய காவிரி கவர்ந்து ஒளித்துவைத்துக்கொண்டதைப் போல், உன்
மனையாள் உன்னைக் கவர்ந்துகொள்வாள் என்றும் அஞ்சுகிறேன், வெகுண்டெழுந்து
ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, பெரும் புகழையுடைய
பழையதாகிய முதிர்ந்த இமயமலையின் மீது வளைவான விற்பொறியைப் பொறித்து
கொடிய சினம் மிகுந்த பகைவேந்தரைச் சிறைசெய்தவனுடைய
வஞ்சி நகர் போன்ற என்னுடைய அழகை என்னிடமே கொடுத்துவிட்டு நீ எங்குவேண்டுமென்றாலும் போகலாம்.
					மேல்
#397 பாலை கயமனார்
என் மகளின் பெரிய கபடமற்ற பேதைமையை நான் பாராட்ட, 
அவளை ஈன்ற தாய் தனது தலைமைப் பண்பினால் தனது கடமைகளைச் செய்ய,
முழவின் முகத்தில் பூசப்பட்ட மண் புலர்ந்துபோகாத அளவுக்கு விழாவினையுடைய அகன்ற மாளிகையில்
திருமணத்தின் மூலமாகக் கொள்ளாமலும், பாறைகள் வெடிக்குமளவுக்கு
கூட்டமான மேகங்கள் மழைபெய்வதைக் கைவிட்ட காடு அடர்ந்த பாலைப்பரப்பினில்,
உயர்ந்த கொடி படர்ந்த வழியினில், நடந்துசெல்வதற்கு எளிதாக, 
புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாநிறத்தவளுக்கு இருக்கும்படி,
வெப்பம் தணிந்த பருவத்தில் செல்லாமலும், அவளைக் கூட்டிக்கொண்டு செல்லத்
துணிந்தான் அந்த எதிலும் விரைவினைக் காட்டும் கடுமையான அந்தக் காளைபோன்ற இளைஞன்;
கடுமையான, பெருமையையுடைய, ஆண்யானை மரம் அசையும்படி குத்திப்
பிளக்கும்படி புண்படுத்திய பொரிந்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தின்
பெரிய பட்டை உரிந்த சிவந்த அடிமரத்தினைப் பார்த்து ஊன் என்று கருதி
கரிய நடுப்பகுதியையுடைய யா மரத்தில் இருக்கும் பருந்து பறந்து வந்து தங்குகின்ற
மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ள, வானத்தைத் தீண்டும்படி உயர்ந்த நெடிய சிகரங்களிலுள்ள
மேற்கிலிருந்து வருகின்ற வெப்பம் மிக்க காற்றால் சுழலுகின்ற
புன்மையான இலைகளையுடைய மூங்கிலில் நெல்விளையும் காட்டின்வழியே - (படர்தர துணிந்தோன்)
					மேல்
#398 குறிஞ்சி இம்மென்கீரனார்
என்னுடைய அணிகலன்கள் தம் நிலையிலிருந்து நெகிழ்வதற்குக் காரணமாகிய துன்பம் மிகுதலால்
எண்ணங்கள் மிகுகின்ற வருத்தத்துடன் பலவற்றையும் வெறுத்துக்கூறித் தங்கி,
எனது மென்மையான தோள்கள் மெலிந்துபோக வருந்தி, கொன்றையின்
நன்கு மலர்ந்த பூக்களின் நிறத்தைப் போல அழகெல்லாம் பாழ்பட நிறைந்த
பசலையுற்ற எனது மேனியைப் பார்த்து, நெற்றி பசலையுறப்பெற்று
இப்படிப்பட்ட நிலையிலிருக்கும் எம்மை இங்கு வந்து அருள் செய்யாதவனாய்
உன்னுடைய தலைவன் செய்த கொடுமைக்கு இம்மென்று விரைவாக,
கலங்கும் குளிர்ந்த கண்களில் தெளிந்த நீர் பெருகவும்,
நல்ல அறத்தினைக் கைவிட்டு நீங்குதல், உன்னுடைய
குன்றுகள் சூழ்ந்த நாட்டைச் சேர்ந்த தலைவனுக்கு எப்படித் தக்கதாகும் என்று கூறப்படுமோ?
கரையை மோதிக்கொண்டு வரும் ஆற்றுவெள்ளமே! சொல்வாயாக என்று கூறி
உன்னுடன் நான் கோபித்துக்கொள்வேன் என்று அஞ்சி, அவர் மலையிலுள்ள
பலவான மலர்களையும் போர்த்துக்கொண்டு, நாணத்தால் மிகவும் ஒடுங்கி,
மறைந்தவாறே செல்லுகின்ற உன்னைமட்டும் எம்மூர் வழியாகப் போகும்படி செலுத்திவிட்டு,
சிறிதும் அன்பு இல்லாமல் துறந்து இருக்கும் வலிமையுள்ளவராகிப்போனார்
எனக்கு அந்நியமானவராய் ஆகிவிட்டவர், அதனைப் பார்க்காமல்
தீச்சுடர் போன்ற மலர்களையுடைய வேங்கைமரத்தின் நிழலில் உன் ஓட்டத்தை நிறுத்தி, இளைப்பாறி,
பெய்யும் மழை உன்னைப் பேணுதலால் பெருகி, ஆரியரின்
பொன் பிறக்கின்ற நெடிய இமயமலையைப் போன்ற எங்கள் தந்தையின்
பல பூக்கள் இருக்கும் காட்டில் தங்கி இன்றொருநாள் இவ்விடத்தி;ல்
எம்முடன் சேர்ந்திருந்து செல்வாயானால் உனக்குக் கெட்டுப்போவது ஏதேனும் உண்டோ?
அரிவாள் போன்ற வரிகள் அமைந்த பெரிய ஆண்புலியால் தாக்கப்பட்டுப் புண் மிகுந்து
வருந்தும் பெண்யானையால் தழுவப்படும் வலிமை குன்றிய ஆண்யானை,
வளைந்த மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல் ஒலிக்கும் அவருடைய
உயர்ந்த மலைநாட்டிலிருந்து வருகின்ற வெள்ளமே!
					மேல்
#399 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தலையின் உச்சியில் கொத்துக்கொத்தாய்க் கிடந்து, மயிர்ச்சாந்து பூசப்பெற்று, இருண்டு,
இமயமலையில் உள்ள காடுகள் போல மணங்கமழும் கூந்தலையும்,
நல்ல நெற்றியையும் உடைய நங்கையாகிய தலைவியே! இனிமை பொருந்திய மார்பினை
அப்படியே அள்ளிப் பருகுவது போன்ற காதல் மிக்க உள்ளத்துடன்
பின்னித் தழுவுதல் இன்றி, அந்த வெளிநாட்டில் நீடித்து இருக்கமாட்டார் -
காட்டினைச் சார்ந்த பக்கத்தில் குந்தாலியால் உடைத்துத் தோண்டிய 
நீர் பெருகி உடைத்துக்கொண்டு ஒழுகும் ஊற்றுக்கண்ணில் நீண்ட நாள் ஊறிக்கிடந்த ஊற்றுநீரை உண்ட
இனிய தெளிந்த ஓசையையுடைய மணிகளைப் பூண்ட பயன்மிக்க பெரிய பசுக்கூட்டம்
வறண்ட பாலைநிலத்தில் புகுந்ததாக, இடையர்கள் தங்கள் கொம்புகளை ஊதி அதனை அங்கிருந்து அகற்றி
வற்றி நிற்கின்ற நிலையினையுடைய கொன்றை மரங்களின் குறைந்த நிழலில் இளைப்பாறவிட்டு,
பலவாகிய பசுக்களையுடைய கோவலர் சிறிதும் கற்காமல் தமக்குத் தோன்றியவாறு ஊதும்
சிறிய மூங்கிலால் செய்த இனிமையுடைய குழலின் தனிமைகொண்ட தெளிவான ஓசையை
குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பச்சையான காய்களை உண்டு
அசைபோடும் இளைய மரைமான் கூர்ந்து கேட்கும் காட்டினில்,
காயும் ஞாயிறு உச்சநிலையில் சுட்டெரித்த அழகு ஒழிந்த பாறைகளையும்
மூங்கிலின் கணுக்கள் உடைந்த சிகரங்களையும்,
இடம் அகன்ற பக்கமலைகளையும் உடைய மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர் - (அவண் நீடார்)
					மேல்
#400 நெய்தல் உலோச்சனார்
தலைவியே! ஒரு செய்தியைக் கேள், அது மிகவும் சிரிப்பிற்குரியது ஆகும், நம் தலைவனுடன்
வீட்டுக்கு வெளியே சிறுபொழுது தங்கியிருப்பினும் அது அலராகப் பேசப்படும் என்ற நிலையிலும், ஆசையுடன்
கடற்கரைச்சோலையில் சென்று தங்கிய நம் களவு வாழ்க்கை முற்றிலும் நீங்கும்படியாக,
பல நற்செயல்கள் புரிந்ததால் நமக்கு உண்டான நல்வினைப்பயனால், 
குதிரை நூலுக்குப் பொருந்திய உயர்ந்த பிறப்பினையும், நீலமணி பதித்த நெற்றிச்சுட்டியினையும்
கொய்யப்பட்ட பிடரி மயிரினையுடைய கழுத்தினையும், சொரசொரப்புடன் மிகுதியாகப் பெய்யப்பெற்று
நெய்யுடன் மிதித்துச் செய்த கவளத்தை வெறுத்துக் கொழுமையான சோற்றை மிகுதியாக உண்ணுதலையும்,
வரிசையாகப் பொருந்தி ஒன்றுபட்டுச் செல்லுதலையும், சிவந்த தினைக்
கதிர் நீண்டு வளைந்து அசைவது போல அசைகின்ற தலையையும் உடைய நல்ல நான்கு குதிரைகளை
அவற்றின் பருத்த பிடரியில் நெருங்க அவற்றால் தாங்குகின்ற நுகத்தையுடன் இணைத்து
அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி,
அறிவுடைய பாகன் செலுத்துதலால், இறக்கமாகச் செல்லும் துறையில்
நீர் பாய்ந்து செல்வது போல தாவிச் செல்லும் குதிரை பூட்டிய திண்மையான தேரின்,
அம்பு பாய்வதைப் போன்ற வலிமையான காலினால் விரைந்த ஓட்டம்,
பாலைக் கண்டது போல காற்றால் அடித்துக் குவிக்கப்பட்ட வெண்மையான மணலிடத்தே
வாய்க்காலைப் போலச் சுவடுகள் உண்டாகும்படி சென்று
நுண்ணிய சேற்றுக் குழம்பையுடைய பரப்பினையுடைய அவ்விடத்தில்
இருண்ட நீரினையுடைய குறுகலான வழியையும் கடந்து, கடல் துறையைச் சார்ந்த
நெய்தல்நிலத் தலைவன் மணம் பேசுவதற்காக வந்த பொழுது
மலர்கள் மிகுந்த கருமையான கழியினில் அசைந்தாடும் இலைகளோடு
தலைவனுடைய தேர்ச்சக்கரங்களில் மாட்டிக்கொண்டு வந்த ஆழமான நீரில் இருந்த நெய்தல் பூக்கள்
முதிராத இளங்கள் கமழும்படி, பலவும் ஒன்றுசேர
கட்டு அவிழ்ந்த குளிர்ச்சியான மலர்களை (தலைவன் சூடிக்கொண்டுவருவதை)க் கண்டு, மிகவும்
புதிய தன்மையினை உடையதாய் ஆகிவிட்டது, பழைய பெருமையையுடைய
ஆரவாரம் மிகுந்து முழங்கும் கடலையும்,
நீண்ட கருமையான பனைமரங்களையும் உடைய நமது ஆரவாரமுடைய இவ்வூர்.
					மேல்