கலித்தொகை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

            3. மருதம் ( 66 - 100)
             66     67     68     69     70     71     72     73     74     75    
             76     77     78     79     80     81     82     83     84     85    
             86     87     88     89     90     91     92     93     94     95    
             96     97     98     99     100    
    கடவுள் வாழ்த்து - 1
    
1. பாலை ( 2 - 36)
    2. குறிஞ்சி (37 - 65)
    4. முல்லை ( 101 - 117)
    5. நெய்தல் ( 118 - 150)
  தேவையான
  பாடல் எண்ணைத்
  தட்டுக

# மூன்றாவது மருதக்கலி
பாடியவர் : மருதன் இளநாகனார்
	
# 66
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட		5
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான்
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை		10
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின்		15
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ
தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின்
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை		20
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை
என ஆங்கு						25
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர்
பூட்டு விடாஅ நிறுத்து
 
மேல்



# 67
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம்
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்		5
நல_தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி	10
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா		15
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே
என ஆங்கு
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே			20
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு
 
மேல்



# 68
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக
முது மொழி நீரா புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர		5
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்		10
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்
ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்_வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம்			15
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல்
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம்
என ஆங்கு						20
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம்
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
ஐய எமக்கு நின் மார்பு				25
 
மேல்



# 69
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்		5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின்
உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறைகூறி கொள நின்றாய்
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என		10
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ
பட்டு_உழி அறியாது பாகனை தேரொடும்
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ		15
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய்
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ
என ஆங்கு						20
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு_உற்று
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்ற_கால்
 
மேல்



# 70
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி		5
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின்
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே		10
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம்
புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால்
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே		15
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால்
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின்
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்		20
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்
பாணன் புகுதரா_கால்
 
மேல்



# 71
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு		5
நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்			10
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய
மடுத்து அவன் புகு_வழி மறையேன் என்று யாழொடும்
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல்
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்_கண்	15
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின்
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய		20
என்று நின்
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர்
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
மாரிக்கு அவா_உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ			25
ஓர் யாட்டு ஒரு கால் வரவு
 
மேல்



# 72
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க			5
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி
கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின்
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ		10
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில்			15
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை		20
என ஆங்கு
செறிவு_உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப
கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ			25
இ நோய் உழத்தல் எமக்கு
 
மேல்



# 73
அகன் துறை அணி பெற புதலொடு தாழ்ந்த
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர		5
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா_கால்
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்_வழி			10
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா_கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்_வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்		15
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா_கால்
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டா பரத்தை தலைக்கொள்ள நாளும்			20
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின்
தோல் ஆமோ நின் பொய் மருண்டு
 
மேல்



# 74
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர		5
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து		10
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என
ஊரவர் உடன் நக திரிதரும்				15
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே
 
மேல்



# 75
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி		5
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய்
தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்		10
வதுவை நாளால் வைகலும் அஃது யான்
நோவேன் தோழி நோவாய் நீ என
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
எல்லினை வருதி எவன் குறித்தனை என
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென		15
விரி உளை கலி_மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்
வாடிய பூவொடு வாரல் எம் மனை என
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்		20
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் ஆயின் தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற
புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும்		25
ஆங்க
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும்
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது
அவ்வவ் இடத்தான் அவை_அவை காண		30
பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென் தோழி கடன் நமக்கு எனவே
 
மேல்



# 76
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும்
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும்
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி			5
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன்
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு		10
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ	15
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே		20
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ
நாம் செயல்பாலது இனி
 
மேல்



# 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர்
திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி		5
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின்		10
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின்
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின்		15
மாசு அற மண்_உற்ற மணி ஏசும் இரும் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்
ஆங்க						20
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோ நின் காணின்
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு
 
மேல்



# 78
பன் மலர் பழனத்த பாசடை தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி
உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்		5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர		10
நீங்கும்_கால் நிறம் சாய்ந்து புணரும்_கால் புகழ் பூத்து
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான்
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என்	15
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான்
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான்	20
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார்
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை
ஆங்க
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின்			25
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே
தண் பனி வைகல் எமக்கு
 
மேல்


# 79
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த
முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன்
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர்
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும்		5
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ		10
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ
கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி		15
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின்
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ
என ஆங்கு
பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி			20
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி
ஆங்கே அவர்_வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனை தந்து
 
மேல்



# 80
நயம் தலை மாறுவார் மாறுக மாறா
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ்
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப				5
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக எம் பாக_மகன்
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும்		10
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும்_கால்
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே			15
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார்
எவ்வ நோய் யாம் காணும்_கால்
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே
நல்காது நுந்தை புறம்மாறப்பட்டவர்			20
அல்குல் வரி யாம் காணும்_கால்
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய			25
கோதை பரிபு ஆட காண்கும்
 
மேல்



# 81
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்
நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்		5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப
பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல்
போல வரும் என் உயிர்				10
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு சில					15
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்	20
வாய் உள்ளின் போகான் அரோ
உள்ளி உழையே ஒருங்கு படை விட
கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர்			25
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின்
ஆணை கடக்கிற்பார் யார்
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி			30
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய் நீ செல்
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்		35
தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும்
ஆ போல் படர் தக நாம்
 
மேல்



# 82
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு				5
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான்
காயேம்
மட குறு_மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற		10
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும்
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும்			15
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள்
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்		20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள்
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா			25
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்
வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி			30
அன்ன பிறவும் பெருமான் அவள் வயின்
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்
அமைந்தது இனி நின் தொழில்				35
 
மேல்



#83
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய்
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம்	5
நீட்டித்த காரணம் என்
கேட்டீ
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை
குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும்
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண்			10
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி			15
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால்
கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால்			20
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி
ஒள்_இழாய் யான் தீது இலேன்				25
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்-கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு		30
தந்தையும் வந்து நிலை
 
மேல்



#84
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா			5
கடவுள் கடி நகர்-தோறும் இவனை
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட		10
குடை_நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர்
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர்			15
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட		20
மோதிரம் யாவோ யாம் காண்கு
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில்			25
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை
அன்னையோ இஃது ஒன்று
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்
வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று		30
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை_கண்
தந்தார் யார் எல்லாஅ இது
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை
இது தொடுக என்றவர் யார்				35
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள்
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள்
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்		40
யானே தவறு உடையேன்
 
மேல்



# 85
காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு
பொடி அழல் புறந்தந்த செய்வு_உறு கிண்கிணி
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல்
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை			5
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி
பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும்
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த
பெய் புல மூதாய் புகர் நிற துகிரின்			10
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண			15
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின்
செல்வு_உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ			20
செம்மால் நின் பால் உண்ணிய
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும்
நுந்தை பால் உண்டி சில				25
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா
ஞாயர் பால் உண்டி சில
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென
தாம் வந்தார் தம் பாலவரோடு தம்மை			30
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்
பாராட்டை பாலோ சில
செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும்
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை		35
தண்டுவென் ஞாயர் மாட்டை பால்
 
மேல்



# 86
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய்
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல்		5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்
போர் யானை வந்தீக ஈங்கு				10
செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல்		15
மென் தோள் நெகிழ விடல்
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல்
சால்பு ஆய்ந்தார் சாய விடல்				20
வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல்
நோய் கூர நோக்காய் விடல்
ஆங்க						25
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ
மகன் அல்லான் பெற்ற மகன்
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர்
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்		30
கன்றி அதனை கடியவும் கைநீவி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன்
 
மேல்



# 87
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை
வெரூஉதும் காணும் கடை
தெரி_இழாய் செய் தவறு இல்_வழி யாங்கு சினவுவாய்
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய்		5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை
புலப்பார் உடையர் தவறு
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி
காயும் தவறு இலேன் யான்				10
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின்
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா			15
பாடு இல் கண் பாயல் கொள
 
மேல்



# 88
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று			5
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து
ஆய்_இழாய் நின்_கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா
என்-கண் எவனோ தவறு
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல்	10
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீற சிவந்த நின் மார்பும்
தவறு ஆதல் சாலாவோ கூறு
அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை	15
தேற்ற கண்டீயாய் தெளிக்கு
இனி தேற்றேம் யாம்
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி		20
யார் மேல் விளியுமோ கூறு
 
மேல்



# 89
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்து ஆங்கே மாறு
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்			5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த	10
இன்_நகை தீதோ இலேன்
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு				15
 
மேல்



# 90
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா
மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின்
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி		5
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும்
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்			10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில்		15
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ
கூறு இனி காயேமோ யாம்
தேறின் பிறவும் தவறு இலேன் யான்			20
அல்கல் கனவு-கொல் நீ கண்டது
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு என காணாது மாறு_உற்று
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா
நின்றாய் நின் புக்கில் பல				25
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு
ஏடா குறை_உற்று நீ எம் உரையல் நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்
 
மேல்



# 91
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீற சிதைந்து நெருநையின்
இன்று நன்று என் ஐ அணி				5
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன்
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார்
செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார்			10
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின்
தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி				15
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து
அன்னதேல் ஆற்றல் காண்
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும்			20
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய்
பேணாய் நீ பெட்ப செயல்
 
மேல்



# 92
புன வளர் பூ கொடி அன்னாய் கழிய
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்			5
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகை ஆதால் மற்று
நனவினால் போலும் நறு_நுதால் அல்கல்			10
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை
கரை அணி காவின் அகத்து
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி
கண்டது எவன் மற்று நீ				15
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும்
மட நடை மா இனம் அந்தி அமையத்து
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன்
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை		20
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்			25
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று அ காவில்
துனை வரி வண்டின் இனம்
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி	30
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச
அவருள்
ஒருத்தி செயல் அமை கோதை நகை
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்			35
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம்
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு_உற்று
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன்			40
தண் தார் அகலம் புகும்
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை
முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த
கடி கயம் பாயும் அலந்து
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட	45
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்
பறந்தவை மூச கடிவாள் கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை				50
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு_உற்றார் வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான்
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்			55
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண்
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான்
செய்வது இல் என்பதோ கூறு
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
நன் வாயா காண்டை நறு_நுதால் பன் மாணும்		60
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்			65
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு
 
மேல்



# 93
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய
கண்டது எவன் மற்று உரை
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின்	5
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர் கண் தங்கினேன்
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன்		10
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க_கால்
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை			15
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு நும் இல்
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ			20
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து			25
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும்
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து		30
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல்
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்			35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு
 
மேல்



# 94
என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உரு சுருங்கி
இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்	5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்ட பெறுபவோ மற்று
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை			10
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர்
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன
கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின்		15
பெண்டிர் உளர்-மன்னோ கூறு
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின்
அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ			20
பக்கத்து புல்ல சிறிது
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை
புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என்			25
பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க
உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா
கூனி குழையும் குழைவு காண்				30
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை
சாமனார் தம்முன் செலவு காண்
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம்		35
உசாவுவம் கோன் அடி தொட்டேன்
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ
பேயும் பேயும் துள்ளல்_உறும் என
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ்			40
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம்
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு
 
மேல்



# 95
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த		5
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி காலின்
பிரியா கவி கை புலையன் தன் யாழின்			10
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின்
தபுத்த புலர்வு இல் புண்
ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின்
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு			15
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம்
ஈரம் ஆய்விட்டன புண்
கொடிற்று புண் செய்யாது மெய் முழுதும் கையின்
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும்		20
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே
கொட்டி கொடுக்கும் குறிப்பு
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின் மெய் தொடுகு
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று	25
அறிகல்லாய் போறி காண் நீ
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்			30
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்
 
மேல்



# 96
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய்		5
குதிரை வழங்கி வருவல்
அறிந்தேன் குதிரை தான்
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல்
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ்			10
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை
தார் மணி பூண்ட தமனிய மேகலை			15
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள்
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை			20
வாதுவன் வாழிய நீ
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே			25
கோரமே வாழி குதிரை
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி
குதிரை உடல் அணி போல நின் மெய்-கண்
குதிரையோ கவ்வியது
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே			30
வியமமே வாழி குதிரை
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
பரும குதிரையோ அன்று பெரும நின்
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்			35
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார்
திரி குதிரை ஏறிய செல்
 
மேல்



# 97
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான்
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த
அ வழி என்றும் யான் காணேன் திரிதர
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல்			5
முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர்
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்
ஒக்கும்
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு		10
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு
தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து			15
நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும்
தொடர் தொடராக வலந்து படர் செய்யும்
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை		20
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி
தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ				25
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை			30
கடாஅம் படும் இடத்து ஓம்பு
 
மேல்



# 98
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்		5
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்-மன் யான்
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும்
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை			10
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன்
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக			15
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை
பாணன் புணை ஆக புக்கு
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி		20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே
போர்த்த சினத்தான் புருவ திரை இடா
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப
சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு			25
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர்
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்   30
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன்
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல்
பல் காலும் ஆடிய செல்வு_உழி ஒல்கி			35
களைஞரும் இல்_வழி கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து
 
மேல்



# 99
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்		5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை		10
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா			15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையை			20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே
 
மேல்



# 100
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும்
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும்
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து		5
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்
ஐயம் தீர்ந்து யார்_கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான்
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்_கால்		10
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான்
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்_கால்
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்	15
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான்
அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால்
ஆங்கு
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள்		20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே

மேல்
		





# மூன்றாவது மருதக்கலி
 அடிநேர் உரை
	
# 66
பெருகுகின்ற நீரில் மலர்ந்த குவளை மலரை விற்பவர், தாம் வயலில் பிடுங்கித்
தலையில் கொண்டுவந்த மலர்களைச் சூழ்ந்துகொண்டு வந்து ஊருக்குள் புகுந்த இசைக்கும் வண்டுக்கு,
ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்
அங்கிருக்கும் வண்டுகள் விருந்தளிக்க, அதனை உண்டு பகலில் தங்கி, இரவில்,
புடைத்து இறங்கும் தோள்களில் உள்ள தொடிகள் அழுத்தி வடு ஏற்படுத்தும் வண்ணம் தாம் விரும்பினவரைக் கூடின மகளிரின்
தேன் மணக்கும் கூந்தலினுள்ளே இருக்கும் அரும்பாயிருந்து மலர்ந்த நறிய முல்லை மலரில்
பாய்ந்து தேன் குடித்துத் தன் பசி தீர்ந்து முன்பு தாம் இருந்த
பூக்களையுடைய பொய்கையை மறந்து அதனை நினையாத நீர்வளம் மிக்க அழகிய நல்ல ஊரினைச் சேர்ந்தவனே!
தலையணை போன்ற மென்மையான தோள்களைக் கொண்ட நாம் வருந்தியிருக்க, நீ விரும்பும் துணையைக் கூடி, நீ
மணக்கோலம் பூண்ட அந்த மனையில் இருக்கின்றாய் என்று உனக்குக் கிடைத்த பெரும்பேச்சைக் காட்டிலும் சிறந்ததன்றோ,
சிறப்பில்லாத இரைச்சலுக்கிடையே, பூமாலையை அணிந்துகொண்டு பொலிவுற்றிருந்த உன்
பரத்தையருடனான திருமணத்தினால் கமழ்கின்ற மணத்தோடு இங்கு வர, அதை விடியற்காலத்தில் நான் பெற்றது?
மேனியெல்லாம் கொதிக்கின்ற நோய் என்னை மேற்கொள்ள, நீ அந்தப் பொற்குழை அணிந்தவரோடு
புனலாட்டு ஆடுகின்றாய் என்று வந்த பேச்சொலியிலும் பெரியதன்றோ,
உன் மாலையை அவள் வாங்கிக்கொள்ள, தடுமாற்றத்துடன் அவளின் தலைமாலையைத் தான் அணிந்துகொண்டு, உன்
ஈரமான ஆடையைக் கூடக் களையாமல் எம் இல்லத்தில் வந்து நிற்பது?
எம்மைவிட்டுப் பிரிந்துசென்றதோடு நில்லாமல், நீ அந்த உறுதியற்ற மனம் கொண்டவரோடு
துணங்கைக் கூத்து ஆடுகின்றாய் என்று வந்த பெரும்பேச்சையும் மிஞ்சியது அன்றோ,
ஒளிவீசும் நெற்றியினராகிய பரத்தையருடன் ஒரே ஆடையில் மகிழ்ந்திருந்த உன்
காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.
என்று நாங்கள் காணும்படியாக,
உம் கருணையைப் பெற்றுக்கொண்டோம்! நீயும் எமக்கு அருள்செய்தாய்! சற்றும் குறையாமல்
நீ நாட்டம்கொண்டவரிடம் செல்வதையே விரும்பிய உன் பாகனும்
இங்கே நீண்ட நேரம் இருந்துவிட்டாய் என்று செலுத்த முற்படுவான்; உன் விரைவாகச் செல்லும் திண்ணிய தேர்
அவிழ்த்துவிடாமல் நிறுத்தியுள்ளது.
 
மேல்



# 67
கார்காலம் முதிர்ந்து, பூங்கொத்துக்கள் மலர்ந்து கமழ்கின்ற இதழ்களையுடைய பூக்களை மேலே பரப்பிக்கொண்டு,
புகழ் மிக்க புலவர் வாயால் சிறப்பெய்தி, நிலமகளுக்கு
மாலை சூடியது போல அழகைப் பூத்துக்கொண்டு வரும் வையை, தன்
நீரினால் சூழ்ந்துகொண்டு மதிலுடன் போதுகின்ற பகையே அன்றி, பகைவர்
போருக்காக வளைத்துக்கொள்வது என்ற ஒன்றை அறியாத மதில்கள் சூழ்ந்த நீரையுடைய ஊரினன்,
நன்கு பொலிவுபெற்ற அழகுள்ள மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் தம்முடைய மாலையால்
அடித்து வருத்திய புண்ணின் வடுவைக் காட்டிக்கொண்டு, அன்பு சிறிதும் இல்லாமல் இங்கு வந்தால், ஏடி!
பிணக்கம் கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
பிணையக் கலக்கலாம் என்று கூறுகிறது இந்தச் செயலற்றுப்போன நெஞ்சம்;
வளைந்துயர்ந்த அழகிய அகன்ற அல்குலையுடைய கொடியைப் போன்ற பரத்தையரின் முலையில் மூழ்கி
பூசப்பட்ட இடத்தில் அழிந்துபோன சந்தனத்தையுடையவன் பண்புகெட்டுப்போய் இங்கு வந்தால், ஏடி!
ஊடல் கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
கூடித் துய்க்கலாம் என்று கூறுகிறது இந்தக் கொள்கையில்லாத நெஞ்சம்;
இப்பொழுது புதிதாகச் சேர்த்துக்கொண்ட, அழகினையுடைய பரத்தையரின் ஒளிவிடும் பற்கள் அழுத்தியதால்
மிகவும் சிவந்துபோன வடுக்களைக் காட்டிக்கொண்டு வெட்கம் இல்லாமல் வந்தால், ஏடி!
சினந்து கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
தன் போக்கில் சென்று தானாக இணங்கிவிடுகிறது இந்தத் தனித்தன்மை இல்லாத நெஞ்சம்;
என்று
பிறையைப் போன்ற அழகிய நெற்றியையுடையவளே! தாம் நினைத்தவை எல்லாம்
முடியப்பெறுதல் இயலுமோ? துணையாக இருக்காமல், 
கூட இருந்தே குழிபறிக்கும் நெஞ்சினை உடையவர்க்கு.
 
மேல்



# 68
இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு
அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல, நூல் வல்லார்
பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் செவிகளே விளைநிலமாக,
முன்னுள்ள சான்றோரின் செய்யுள்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராக, அறிவுடைய நாவாகிய ஏரால் உழும் புலவரின்
புதிய கவிகளைக் கூட்டாகக் கேட்டு நுகரும் மதில் சூழ்ந்த நீரையுடைய ஊரினனே!
தலைவன் நமக்கு மட்டும் ஆதரவாக இருப்பவன் அல்லன் என்று ஒருவர் போல் ஒருவர் பேசாமல்,
ஒரு பெரிய ஊரில் குடிவைக்கக்கூடிய அளவு திரண்டிருந்த உன் சேரிப் பரத்தையருக்குச் சமமாக,
உன்னைக் காணாத கலக்கத்தைக் களைந்து, நீ வரச்சொன்ன இடத்துக்கு வந்து, எம் கதவை அடைந்து தட்டிய கைகளின்
வளையல் ஓசையால் தம் வருகையைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொள்ளும் அந்தப் பரத்தையரை நொந்துகொள்வோமோ?
நம் தலைவன் நமக்கு உறவுடையவன் அல்லன், அவனை அணுகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அவனை அடையத் துடிக்கும்
தோள்களொடு பகைகொண்டு நினைவிழந்து வாடும் நெஞ்சினையுடைய நாங்கள்!
தன்னோடு ஊடல்கொண்ட பெண்ணின் அழகு குன்றும்படி அவர்களை இடையன் கொன்ற மரமாய் ஆக்கிவிட்டுப் பரத்தையரின்
காமத்தைத் தணிக்கும் அவன் மார்பு என்று எழுந்த ஊரார் பேச்சை நொந்துகொள்வோமோ?
பூவின் மொட்டின் தன்மை வாய்த்த முலைகள் அழுத்துவதால் குழைந்துபோன உன் மாலை எம்மை இகழ்ந்துநோக்க,
சிறப்பாகக் கட்டப்பட்ட பூக்குடலையின் உள்ளேயே தங்கிப்போன மாலையைப் போன்ற நாங்கள்;
சேரிதோறும் சென்று நீ இருக்கும் வீட்டைக் கேட்டறிந்துகொள்பவனாய்த்
தேரோடு சுற்றித்திரியும் பாகனையே பழிப்போமா?
ஆரவாரிக்கும் பேரொலியுடன் நீ மணம் செய்கின்ற வீடாகக் கருதி எம்முடைய வீட்டில்
பொலிக பொலிக என்று கூறிக்கொண்டு புகுந்த உன்னுடைய புலையனான பாணனைக் கண்ட நாங்கள்;
எனவே,
உண்மையில் உன் மனம் வேறிடத்தில் இருக்கும் நீ விரும்பாத முயக்கத்தை
நீ எப்போதாவது நம் மனைக்கு வரும்போது பெற்று மகிழ்ந்து, பின்னர் என் தோள்கள் வாடிப்போக,
இவனும் இவளும் இவ்வாறு ஆகிவிட்டனரே என்று கூறக்கேட்டு, பழைய நிலையை அடைய விரும்பி ஏக்கம் கொண்டும்,
கனவில் கிடைக்கப்பெற்ற செல்வம் விழித்தவுடன் இல்லாமற் போவதைப் போன்றதே,
ஐயனே! எனக்கு உன்னுடைய மார்பு.
 
மேல்



# 69
மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த 
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,
விருப்பங்கொள்ளும் மண நாளில் மண ஆடைக்குள் முகத்தை மறைத்துக்கொண்ட,
காதல் கொண்ட மானைப் போன்ற பார்வையினையுடைய பெண் தன்னுடன் கூடவர,
வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல,
அழகிய இறகுகளைக் கொண்ட அன்னம், தன் அழகிய நடையுள்ள பெடையோடு
பெருமிதம் தோன்றச் சுற்றிவரும் மிகுந்த நீர்வளம் கொண்ட நல்ல ஊரினனே!
தெளிந்த பரல்களையுடைய சிலம்பு ஒலிக்க, தெருவில் பார்வையால் உன்னைத் தாக்கி, உன்
உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு பின் கைவிட்டவளை, உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக்கொள்ளக் கருதி நின்றாய்!
இவ்வாறு நினைத்து வந்தது வேறொன்றாய் இருக்க, இவள் திடங்கொண்ட மனத்தினள் அல்லள் என்று
பணிபவனைப் போல வந்து இங்கு பயனற்ற சொற்களைச் சொல்கிறாயே!
உன் உள்ளம் கவர்ந்தவள் இருக்குமிடம் தெரியாமல், உன் பாகனைத் தேரோடும்
அனுப்பி, அவளின் வருகையை எதிர்நோக்கி உபசரித்து வரவேற்கக் காத்து நின்றாய்!
இவ்வாறு நெஞ்சத்துள் பிற எண்ணங்களை வைத்துக்கொண்டு, இவள் உறுதிப்பாடான மனத்தினள் அல்லள் என்று
வஞ்சகமாய் வந்து இங்கு என் மனவலிமையை வருத்துவாயோ!
மலர்க்கொத்துக்கள் செறிந்த குளிர்ந்த சோலையில் நீ சொல்லியபடி உன் குறிப்பிடத்துக்கு வந்தவளைப்
புணர்ந்து பாராட்டியதோடு அங்குப் புனலாடி மகிழவும் பண்ணினாய்!
உன்னுடைய வெற்றிப் பெருமிதம் இவ்வாறு வேறு விதமாக இருக்க, இவள் தனக்கெனப் பெருமிதம் இல்லாதவள் என்று
பெருமையினால் வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறாயே!
என்று
இறுமாப்புக்கொள்ளமாட்டோம், பெருமானே! உன் அன்பினால் விருப்பமுற்றுத்
தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
நீ எண்ணியதை முடித்து, மேலும் எம்மையும் எண்ணிப்பார்ப்பாய்,
நீ விரும்புபவரின் விருப்பம் தீர்ந்துவிட்டபோது.
 
மேல்



# 70
பல மணிகளின் நிறங்களில் பூத்த மலர்களையுடைய பொய்கையில் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஓர் அன்னம் தன்
அழகு மிக்க சேவலை அகன்ற ஓர் இலை மறைத்ததாக,
திடுக்கிட்டு அதனைக் காணாது கலங்கி, அந்த இளம் பேடை
திங்களின் நிழலை நீருக்குள் கண்டு, அதனைத் தன் சேவல் என்று மகிழ்ந்து விரைந்து சென்று,
அதை நெருங்க, அப்பொழுது தன் எதிரே வந்த தன் துணையைக் கண்டு மிகவும் நாணி
பல மலர்களின் ஊடே புகுந்துகொள்ளும் நீர்நிலைகளைச் சேர்ந்த ஊரனே! கேட்பாயாக!
எம்முடைய அழகெல்லாம் எம்மைவிட்டு நீங்க, எம்மைத் துறந்து எம்மிடம் அருள்செய்யாமல் நீ சென்றுவிட்டதால்,
பல நாட்களாய் தூங்காத கண்கள் ஒருநாள் படுக்கையைச் சேர்ந்து இமைமூடிக்கொள்ளும்;
துணை மாலை கொண்ட மலர் மாலை அணிந்த பரத்தையர் கொண்டாட, ஒவ்வொருநாளும் ,
மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
முற்றிலும் எம்மைவிட்டு நீ துறந்துசென்றதால், ஓயாமல் அழுகின்ற மைதீட்டிய கண்கள், எம்
புதல்வனை அணைத்துக்கொள்ள, ஒன்றுசேர இமைமூடிக்கொள்ளும்;
உனக்கு ஏற்ற நலம் மிக்க பரத்தையரை உன் மனையில் கொண்டுவந்து, உன்
சுற்றத்தார் பாடும் துணங்கைக் கூத்துப் பாடலின் ஆரவாரம் வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
வீட்டிற்கே வராமல் நீ எம்மைத் துறந்துசென்றதால் வருந்திய எமக்கு 
நீர் சொட்டும் மலர் இதழ்களைப் போன்று காய்ந்துபோகாத கண் இமைகள் சிலநேரம் கூம்பிப்போய் இமைமூடிக்கொள்ளும்;
அழகிய அணிகலன்கள் அணிந்த நலம் மிக்க பரத்தையரை உன் மனையில் கொண்டுவரும், உன்
தேரில் பூட்டப்பட்ட உயர்ந்த நல்ல குதிரைகளின் தெள்ளிய மணியோசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
எனினும்,
தோற்று ஒளிந்துகொண்டிருக்கும் அரசனின் காதில் வெற்றிகொண்டவனின் விடிகாலை முரசொலி போல்
உன் மணமுரசும், துணங்கைக் கூத்தும், குதிரை மணியும் என் துயிலைக் கலைக்கட்டும்; உன் பரத்தையர்
வீடுகளில் வாசித்த யாழினைத் தழுவிக்கொண்டு அந்த அறிவில்லா வாயையுடைய
பாணன் இந்த வீட்டுக்குள் புகாமல் இருக்கும் மட்டும்!
 
மேல்



# 71
விரிகின்ற கதிர்களையுடைய இளஞாயிறு அகன்ற விசும்பில் எழுந்து மேலே வர
மொட்டுக்களின் முறுக்குண்ட தலைகளிலுள்ள கட்டுகள் அவிழ்ந்த பூக்கள் இருக்குமிடத்தில் ஒன்றுகூடி நுகர்ந்து
வரியினையுடைய வண்டுகள் அந்தப் பூக்களின் மேற்புறத்தைச் சூழ்ந்துகொள்ளும் வளம் பொருந்திய பொய்கையில்,
சினத்தின் மிகுதியால் விழுகின்ற கண்ணீர் அறலாய் ஒழுக,
இனிய, அமைதலான காதலன் கெஞ்சி மன்றாடி, தன் காலைப் பிடித்து
மிக விரைவாக அருள்செய்ததால் சிறிதே மகிழ்பவளின் முகம் போன்று
நீர்த்துளிகள் ஒருபக்கம் சொட்டுச்சொட்டாய் வடிய, பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
தனியான ஒரு மலர் தன் தளைவிட்டு மலரும் குளிர்ந்த துறையையுடைய நல்ல ஊரினனே!
உன் ஒருத்தியைத் தவிர வேறு பெண்டிர் அவனுக்கு இல்லை என்று சொல்லித்
தேரின் மேல் சத்தியம் செய்த பாகன் இங்கு வரமாட்டானோ,
ஒரு வீடு நிறைய தான் கொண்டுவந்து சேர்த்த பரத்தையர் ஊடலில் ஏற்படுத்திய நகக் குறிகள்
பலரும் காணப் பரவிக்கிடக்குமாறு அவர்களைக் கூடிய உன் பரத்தமையைக் காண்பதற்கு?
எனக்குள்ளே வைத்துக்கொண்டு அவன் போகுமிடங்களை உன்னிடமிருந்து மறைக்கமாட்டேன் என்று தன் யாழைத்
தொட்டுப் பலவாறாகச் சூளுரைத்த பாணன் இங்கே வரமாட்டானோ,
அந்தப் பொய்யை நம்பி, அவனது பொய்யைப் பலமுறை அனுபவித்தவர்களைக் கூடிய உன் கழுத்திலுள்ள
கையில் எடுத்துக்கொள்ளலாம் போன்று இருக்கக்கூடிய வளையல்களின் வடுக்களைக் காண்பதற்கு?
என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாய் என்று கேட்டும், உன் தவறுகளை எண்ணிப்பார்க்காமல், என்னிடத்தில் உன்
நற்குணங்களைப் பாராட்டிப் பேசிய உன் தோழன் இங்கே வரமாட்டானோ,
உருண்டு திரண்ட காதணிகளை அணிந்த மகளிரைச் சேர்ந்து அவரின் அவிழ்ந்த கூந்தலே அணையாகக் கொண்டு தூங்கியதால்
தெய்வ மணம் கமழும் உன் விரிந்த மார்பினைக் காண்பதற்கு?
இப்படியாக உன்
அன்பிற் குறையாத முயக்கத்தைப் பெறுகின்ற பரத்தையரைக் கோபித்துக்கொள்பவர்
யார்? நீ வராத நாட்களையும் வந்த நாட்களாகவே கருதி அமைதி கொள்வேன்! நீ அங்குச் செல்வாயாக!
மழைக்காக ஏங்கிக் கதிர்விட்டு வாடிக்கிடக்கும் நெல்லுக்கு, அங்கே
போதாத சிறு தூரல் தூவியது போன்றிருக்கிறது நீ
ஓராண்டுக்கு ஒருமுறை இங்கு வருகின்ற வருகை.
 
மேல்



# 72
பல அடுக்குகளால் உயர்ந்த நீலப் பட்டு விரித்த மென்மையான மெத்தையில்
துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி,
கோபித்துக்கொண்டிருக்கும் மென்மையான சிறிய கிளியை உண்ணச்செய்தவளின் முகத்தைப் போல,
புதிய நீர் வரும் வழியிலுள்ள சிறு புதர்களின் மீது இடைவிடாமல் வரும் அலைகள் மோதுவதால் நீர்த்துவலை மிகுவதால்
அதனைத் திங்கள் என்று எண்ணி மலர்ந்த அல்லியின் வெண்மையான மலரின் அருகில்,
முதிர்வடைந்த குளத்துத் தாமரையின் மணங்கமழும் மொட்டு, கரையிலிருக்கும் மாமரத்தின்
வடுக்கள் தீண்டுவதால் வாய் மலரும் வயல்கள் அணிசெய்யும் நல்ல ஊரினனே!
மிகவும் கருத்தோடு, உன் பாதுகாப்பில் வைத்திருக்கும் பரத்தையரை நீ தழுவி மகிழும்போதெல்லாம், நான் அழுது ஏங்க,
பாட்டிசைத்து உன்னை மகிழ்விக்கும் பாணன் காட்டு என்று சொன்னானோ -
இனிமேல் நம்மைக் காக்கமாட்டான் என்று சினந்த அந்தப் பரத்தையரின் நகங்கள் செய்த வடுவின் காரணமாக,
அடுத்த நாள் உன் தோளினை அணைத்துக்கொண்ட அந்தப் பரத்தையரின் பற்கள் பதிந்த உன் உதடுகளை?
உன் பரத்தையரைத் தேடி, உனக்காகத் தூது செல்வதை மேற்கொண்டு, துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின்
ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி காட்டு என்று சொன்னாளோ -
உன்னைக் கூடிய மகளிர் புனலாட, அவர்களுக்குத் தெப்பமாய் விளங்கிய உன் மார்பினில்
ஊடல் கொண்டவராய் வழித்தெறிய வந்து விழுந்து உண்டான செவ்வரக்குக் கறையை?
வீணாக, உன் புகழைக் கேட்க விரும்பாதவர் மனையிலும் போற்றிக் கூறும்
அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ -
உன்னுடன் கூடிக் களித்த பரத்தையரின் மணங்கமழும் மாலை அழுந்தியதால் ஏற்பட்ட சுவட்டின் மேல்
நீ குறித்த இடத்தில் வந்து கூடிய பரத்தையின் முடித்த கூந்தலின் கோணலை நீ கோதிவிட்டபோது உதிர்ந்த பூந்துகளை?
என்றவாறு
உன்னுடன் உறவுகொண்டிருந்தோம், எம்முடன் நீயும் உறவுகொள்ள; இப்போது உன் குறைகளை அறிந்து
அழிந்து கெடுகின்ற மனம் உடையவர் ஆனோம், அல்லலில் கிடந்து வருந்த
நடந்த குற்றங்களை எண்ணிப்பார்க்காமல், உன்னைக் கண்டவுடன்
மனம் மாறி உன்னை ஆதரித்து ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் இழிந்ததோ,
இந்தப் பிரிவு நோயினால் வருந்திக்கிடத்தல் எமக்கு?
 
மேல்



# 73
அகன்ற நீர்த்துறை அழகு பெறும்படி, புதரில் படர்ந்து தாழ்ந்து கிடக்கும்
பகன்றைக் கொடியின் பூக்களின் மீது உராயும்படியாக நீண்டுயர்ந்த பசிய இலைகளையுடைய தாமரை,
கண் கூசும்படியாக ஒளி விடும் வெண்மையான வெள்ளிக் கிண்ணத்தில்
குளிர்ச்சியான நறுமணம் கமழும் மதுவைக் குடிக்கும் மங்கையின் முகத்தைப் போல,
செழிப்பான தன் முறுக்கு நெகிழும் வயல்கள் அணிசெய்யும் நல்ல ஊரினனே!
மனம் புண்படச் செய்பவன் என்று உன்னை நொந்துகொள்வார் இல்லாதபோது
"நான் தீது இல்லாதவன்" என்று தெளிவிப்பதற்கு வருவாய் -
உன் பிரிவால் நெகிழ்ந்துபோன வளையலையுடைய பரத்தையரின் முலை இடையில் தாதுக்கள் உதிர்ந்ததனால்
தம் இதழ்களின் வனப்பை இழந்த உன் தலை மாலை வந்து சொல்லாதபோது;
நெஞ்சைச் சுடும்படியாக நீ செய்வதைக் கடிந்துகொள்வார் இல்லாதபோது
"மனத்தால் நான் தீது இல்லாதவன்" என்று எம் மனத்தை மயக்குவதற்கு வருவாய் -
சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது
காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் -
வரிசையாக வளையல்களை அணிந்த பரத்தையர் ஆடும் துணங்கைக் கூத்தில் அவரைக் கையால் தழுவிக்கொள்ள
கரையினில் கிழிந்துபோன உன் வேட்டி வந்து சொல்லாதபோது;
எனினும்,
மிகுந்து வரும் வெள்ளத்தாலும் நிரம்பாமல் பெருக்கமுறும் கடலைப் போல உன்
ஆசை அடங்காத பரத்தைமை அளவின்றி வளர்ந்து விடுவதால், நாள்தோறும்
புலந்துகொள்ளும் பரத்தையரின் ஊடலை வேண்டுமானால் தீர்த்துவைப்பாய்! நாங்களோவென்றால்
தோற்றுத்தானேபோய்விடப்போகிறோம், உன் பொய்யுரையில் மயங்கி!
 
மேல்



# 74
பொய்கைப் பூவில் புதிய தேனை உண்ட வரிகளையுடைய வண்டு, கழியில் பூத்த
நெய்தல் பூவின் தாதினை உள்ளம் பொருந்த நுகர்ந்து, பசிய இலைகளையுடைய சேம்பங்கிழங்கால்
செய்து வைத்தது போல் வயலில் பூத்துக்கிடக்கும் தாமரை மலரில்
கருகிய இதழ்கள் நீங்கி மேலெழுந்து நிற்கும் கொட்டையாகிய தன் சிறப்புடைய உறைவிடத்தில் வந்தடையும்
மகளிர் கொய்கின்ற தழை தளிர்க்கின்ற காஞ்சிமரத்தினையுடைய துறை அழகு செய்யும் நல்ல ஊரினனே!
அன்பு இல்லாதவன், அறம் இல்லாதவன் என்று சொல்லப்படான் என்று உன்னைப் போற்றி
உன் புகழ் பலவற்றையும் பாடுகின்ற பாணனும் ஒரு பைத்தியக்காரன்;
நஞ்சு உயிரைக் குடிக்கும் என்று அறிந்திருந்திரும் அதனை உண்பதைப் போல நீ கருணையற்றவன் என்பதைக்
கண்டும் உன் பேச்சை நம்புகின்ற பரத்தையரும் பைத்தியக்காரர்கள்;
முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது;
என்றிருக்க,
சதங்கை மணிகள் கோத்த மாலையோடு ஒலியெழுப்பி ஆரவாரம் செய்ய, ஒளிவிடும் தொடி அணிந்த
பெரிய சுழல்கின்ற கண்களையுடைய பரத்தையர்க்கும் அவரைப் பிடிக்கும் வலை இது என்று
ஊரினர் சேர்ந்து நகைக்கச் சுற்றித்திரியும்
உன் தேர் பைத்தியம் பிடித்தது, உன்னைக்காட்டிலும் அதிகமாக.
 
மேல்



# 75
நீர் நிறைந்த வயலில் நெய்தல் பூவுடன் நீண்டுகொண்டு வளர்ந்த
ஒரே மாதிரியான இதழ்களைக் கொண்ட ஆம்பலின் வரிசையான இதழ்களைக் கொய்வதற்காக,
சிறப்பு மிகுந்த சிவந்த அணிகலன்கள் ஒலிக்க ஓடுகின்ற
விளையாட்டு மகளிரின் ஆரவாரத்தைக் கேட்டு அஞ்சிப் பறந்தெழுந்த
ஆரல்மீனை நிறைய உண்ணும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டம்,
நீண்ட மரக்கிளைகளுள்ள உயர்ந்த மரத்தில் ஏறியிருந்து
கண்டோர் விரும்பும் கண்களையுடைய மகளிர் தம்மை நிலைகெடச் செய்த அந்த வருத்தத்தை
அவருடைய உறவினருக்குத் தெரிவிப்பன போல் பலவிதக் குரல்களால் மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பும்
உயர்ந்த சண்டையினால் உண்டாகும் ஆரவாரத்தினையுடைய நல்ல ஊரைச் சேர்ந்தவன்
புதிய பரத்தைகளை சேர்த்துக்கொள்வதில் விருப்பமுடையவனாயின்,
அதற்கேற்ப ஒவ்வொருநாளும் திருமண நாளாய் அமைந்துவிடுமாயின், அந்த நிலைக்கு நான்
பெரிதும் வருந்துகிறேன் தோழி! வருந்தவேண்டாம் நீ என்று
என்னைப் பார்த்து வருத்தமுறுகின்றவளே! கேட்பாயாக, இப்போது, தெளிவாக;
திருமணக்கோலத்தில் பளிச்சென்று வருகிறாயே! என்னைப் பற்றி என்ன நினைத்தாய் என்று
மனத்தில் எண்ணிக்கொண்டு வேறொன்றும் சொல்லாது இருப்பேன், ஆனால் உடனே
அடர்ந்த பிடரி மயிரும், மன ஊக்கமும் கொண்ட குதிரை பூட்டிய தேரோடு அவன் கூட்டி வந்த
விருந்தினரை வரவேற்கவேண்டியிருப்பதால், என் கோபத்தை அறவே மறந்துவிடுவேன்;
வாடிய பூவுடன் வராதே என் மனைக்கு என்று
ஊடல் கொண்டிருப்பேன், ஆனால் அந்த ஊடலை நீட்டிக்கவிடாமல்,
அவனது பொய்மொழியால் அவனுக்குக் கேடு நேருமோ என்ற என் அச்சத்தைத் உணர்ந்தவனாக வருபவன்
மேலும் பொய்ச்சூளுரைத்துவிடுவானோ என்று அஞ்சிக் கோபப்படாமல் இருப்பேன்;
பகற்பொழுதெல்லாம் அங்குத் தங்குகிறாய், பரத்தைமை உடையவனே! என்று நான்
அவனோடு சண்டைபோடுவேன், ஆனால், தான் தன்னுடைய
தந்தையின் சிறப்பு மிக்க பெயரை முறையால் பெற்ற
புதல்வனைத் தழுவிக்கொண்டு பொய்யாக உறங்குவதைப் போல் கண்ணை மூடிக்கொள்வான்;
இவ்வாறாக,
விருந்தினரை வரவேற்பதற்காகவும், பொய்யுரைகளால் அவனுக்குக் கேடு வருமோ என்ற நாம் அஞ்சுவதாலும்
பெறற்கரும் புதல்வனைத் தழுவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதாலும்,
தாங்கமாட்டாமல், அப்படியே அடங்கி அமுங்கிவிடும் என் கோபம்;
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஒவ்வொன்று நடக்க, அவற்றையெல்லாம் கண்டும்
மலர் விழி மங்கையரின் அலங்காரச் சிறப்புகளை அழிக்கின்ற
மாயம் செய்வதில் வல்லவனான கணவனின் பரத்தைமையை எண்ணி
நொந்திருப்பேன் தோழி! அது நம் தலைவிதி என்று!
 
மேல்



# 76
நான் அணிந்திருக்கும் அணிகலன்களை ஒழுங்குபடுத்தியும், ஆற்றில் நீராடும்போது எனக்குக் காவலாய் இருந்தும்
அழகிய தொய்யில் கோலத்தை என் மேனியில் வரைந்தும், நம் மணல்வீட்டு முன்னர் வந்து நம்மை வணங்கியும்,
நம்மை நினைத்து வருந்துகின்ற இந்தப் பெரியவனுடன் நமக்கு நட்பு உண்டென்று இந்த ஊர்மக்கள்
இவள் இப்படிப்பட்டவள் என்று இட்டுக்கட்டிப் பேசுவதற்கு, நீ அப்படிப்பட்டவளோ என்று
என்னைக் கேட்டால், ஒளிரும் நகைகளை அணிந்தவளே! இப்போது கேட்பாயாக!\
இயல்பாகவே சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போகும்படி நெடுநேரம் பறிக்கின்றாய் என்று அவன்
கடல்நீர் வந்து ஏறின தண்டான்கோரையைப் பறித்துப் பாவை செய்து தந்ததற்காகவோ,
பழிதூற்றல் என்னும் பிணி பிடித்தவர்கள் தாம் பார்க்காமல் பழித்துக்கூறிய சொற்கள்
எனக்குப் பொருந்தாது என்று உணராமல் நீயும் அவர்களின் நிலையிலேயே சொல்வது?
உடலை ஒடுக்கிக்கொண்டு நான் உள்ளே புகுந்து மலர் பறிக்கமாட்டாமல் பின்னேவர, அவன் அதனைக் கண்டு
ஆழமான குளத்து நீரில் இருந்த மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்ததற்காகவோ,
வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்ட மகளிர் விவேகம் இன்றி கூறிய சொற்கள் பொய்யாக இருக்க,
அவறைக் கடிந்துகூறாதது மட்டுமன்றி என்னை இடித்துரைக்கவும் வந்துவிட்டாய்?
தொய்யில் கோலமிட உனக்குத் தெரியவில்லை என்று வளைந்து இறங்கும் முன்கையை அவன் பற்றிக்கொண்டு
தெரிந்தெடுக்கப்பட்ட மூங்கில் போன்ற என் தோளில் கரும்பு வடிவைத் தொய்யிலாகத் தீட்டியதற்காகவோ,
காவல் புரிந்து காக்கின்ற நம் தோழியர் பொய்யாகக் கூறிய சொல்
எனக்கு உரித்தாகும் என்று உணராதவளாய் நீ கலக்கமடைந்தாய் போலும்?
இனிமேல்
மிக அரிது, ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே! இதனைத் தெளிவித்தல்; விருப்பத்துடன் ஒன்றுகூடி
பின்னொருநாள் நம் திருமணத்தில் நம் உறவினர் செய்யப்போவதை இன்று இங்கே செய்வதற்குத்
தானே விரும்பி இருக்கிறது இந்த ஊர் என்றால், என்னதான்
நாம் செய்யக்கூடியது இப்போது?
 
மேல்



# 77
ஒன்றுக்கொன்று இணையான இரண்டு, பொருத்தமாய் ஒத்துப்போகும், மொட்டுக்களுக்கு நடுவே, வேறு ஒன்றும்
துணை இன்றி முறுக்கு அவிழ்ந்த தாமரையின் தனித்த மலர்,
தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்,
அழகுள்ள மலர்களையுடைய நீர்நிலையிலுள்ள பறவை வந்து தாக்க, மிகவும் சாய்ந்து வளைந்து,
மிக மிக அருகிலிருக்கும் அந்த மொட்டுக்களின் மேல் அந்தத் தாமரை மலரின்
உள்ளிதழ்களிலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொட்டும் ஊரினைச் சேர்ந்தவனே கேட்பாயாக!
குளிர்ந்த தளிரில் விழுந்து அழகு பொலிவுற்ற பூந்தாதைப் போன்ற எழிலையுடைய என் மேனியின் மாநிறம் அழிய,
அதனை எடுத்துக்கொண்டு நீ தராமல் விட்ட அழகை நான் திரும்பப்பெற விரும்பமாட்டேன்,
இருக்கிறது என்று கூறமுடியாமலிருக்கிற என் உயிர் ஒரேயடியாகப் பிரிந்துவிடும் என்று உணர்ந்தும் உன்
மனைவி என்று பிறர் கூறும் பழிச்சொல் ஒழிந்துபோகப் பெறுவேனாயின்;
பொன் என்று சொல்லும்படியாகப் பசந்துபோன என் கண்ணின் பூவைப்போன்ற அழகையுடைய நலம் அழிந்துபோக
அதன் பழைய நலத்தை இழந்த அந்தக் கண் துயில் பெறுவதை நான் விரும்பமாட்டேன்,
உன்னால் வருத்தமுற்ற பரத்தையர் நீ செய்யும் கொடுமைகளை
என்னிடத்தில் வந்து நொந்துப்போய் உரைக்காமல் இருப்பதைப் பெறுவேனாயின்;
மாசறக் கழுவப்பட்ட நீல மணியையே ஏளனம்செய்யும் கரிய கூந்தல்
பூ அணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுவதை விரும்பமாட்டேன்,
சோகப் பாட்டை இசைத்துக்கொண்டு உன் பாணன், என் வீட்டுக்கு
நீ போன பரத்தையர் வீட்டைப்பற்றி வினவிக்கொண்டு வராமலிருப்பதைப் பெறுவேனாயின்;
இப்படியிருக்க,
என்னைக் காதல்கொள்ளச் செய்த உன் மார்பினில் இனிச் சாயமாட்டேன் என்கிற
ஊடலும் மனவுறுதியும் எனக்கு எளிதில்வருமோ? உன்னைக் கண்டவுடன்
என்னை உன்னிடத்தில் செலுத்தி, தானும் என்னிடத்தில் தங்கியிராத நெஞ்சு என்று சொல்லப்படும் என்னோடே
உடன் வாழ்கின்ற பகையை உடையவர்க்கு.
 
மேல்



# 78
பலவித மலர்கள் நிறைந்த வயலில், பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
இனிய மலரில் ஒலியெழுப்பிக்கொண்டே தேன் உண்ணும் துணையோடு சேர்ந்த கரும் வண்டு
நீர்த்துறையில் மலர்ந்திருக்கும் அந்தப் பூவை வெள்ளம் சாய்த்துவிட, வெறுத்துப்போய் கோபங்கொண்டு,
பண்பட்ட நல்ல நாட்டில் பகைவரின் படை நுழைந்ததாக,
அந்நாட்டைக் கைவிட்டு அகன்றுபோய் தம்மைக் காக்கின்றவனுடைய ஆட்சிக்குட்பட்ட
வேற்று நாட்டில் குடியேறி வசிக்கும் குடிமக்களைப் போல, வேறு ஒரு
பொய்கையைத் தெரிந்தெடுத்து வருந்தியிருக்கும் பொழுதில், பகைவரின் வலிமையை வேரறுத்து,
அந்த அரசன் தன் பகையைத் தணிக்க, அந்தக் குடிமக்கள் மீண்டும் தம் நாட்டுக்குத் திரும்பியதைப் போல
நிறைந்த வெள்ளம் நீங்கக் கண்டு மீண்டும் வந்து அந்த வண்டு அந்த மலரின் மேல்
பறப்பதைத் தவிர்த்து படுத்து இளைப்பாறும் பாய்கின்ற நீர்வளத்தையுடைய நல்ல ஊரினனே!
'பிரிந்திருக்கும் காலத்தில் அழகு குன்றி, பிணைந்திருக்கும் காலத்தில் பொலிவுபெற்று,
நமது உள்ளக் கருத்தின்படியேதான் இவள் மேனியின் நல்லியல்பு இருக்கும்' என்ற செருக்கினால்தான்
நெருப்பைப் போன்ற சிவந்த இதழ்கள் வாடி உதிர, பரத்தையரைப் புணர்ந்த உன் செய்கையைச்
சாட்சியம் கூறும் தலைமாலையுடனே இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
'ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல் என்
தொடர்பு நீங்கினால் தொய்ந்துவிடும் இவள் மேனியின் நல்லியல்பு' என்ற செருக்கினால்தான்,
ஊரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி, நான் மறைத்து வைத்த மனநோய் கைம்மீறிப்போக, பிறர் கூந்தலில் செருகிய
மலரின் மணம் நாறும் மார்புடனே இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
பெய்தால் செழிப்புற்று, பொய்த்தால் உலர்ந்துபோகும் விளைநிலத்திற்கு மழையைப் போல, நான்
சென்றால் மகிழ்ந்து, செல்லாமல் வெறுத்தால் வாடிப்போவாள் இவள்' என்ற செருக்கினால்தான்
முடியில் சூடிய மாலை போல் நான் வாட, பரத்தையரின்
தொடி அழுத்திய வடுவினைக் காட்டிக்கொண்டு இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
இவ்வாறு
வியக்கத்தக்க பண்பு எல்லாம் உன்னிடம் அமைந்துள்ளன, வந்த இடத்திற்கே மீண்டும் செல்வாய்,
உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக! கையினால்
மலரச்செய்த மொட்டினைப் போன்ற தழுவலில் சிறப்பு இல்லை,
குளிர்ச்சி மிக்க பனிக்காலத்து வைகறையே அது எனக்கு.
 
மேல்


# 79
பறவைகள் ஒலிக்கும் வயலில் செழித்து வளர்ந்த செந்நெல்லின் இடையே பூத்த
முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து, அதன்
வளமையான இதழைத் தீண்டுமளவு நீண்ட பொலிவுபெற்ற ஒரு கதிர்,
அவையோர் புகழும் அரங்கின் மேல் ஆடுகின்ற ஆடல்மகள் அழகிய நெற்றியில்
சிறப்பாகச் சூட்டிய வயந்தகம் என்னும் தலையணி போல் தோன்றும்
அழகுபெற்ற வயல்வெளிகளையுடைய அழகிய குளிர்ந்த துறையையுடைய ஊரனே கேட்பாயாக!
பரத்தையர் மனையில் அணிந்துகொண்ட அணியோடு வந்து இங்கு எம் புதல்வனை தூக்கிக்கொள்ளவேண்டாம்,
பவழம் போன்ற அவனது சிவந்த வாயிலிருந்து ஒழுகும் நீர் உன் அகன்ற மார்பை நனைப்பதால்,
உன் மார்பில் சாய்ந்த மகளிரை அறிவேன் நான் என்று மணங்கமழும் உன்
சந்தனத்தால் அறிந்துகொண்டவளாய் அவள் வருந்தமாட்டாளோ?
தழுவவேண்டாம் எம் புதல்வனை! பரத்தையர் கொண்டாடும் அகன்ற உன் மார்பில் கிடக்கும்
பல வடங்களையுடைய முத்துக்கள் கோத்த மாலையைப் பிடித்து அவன் அறுத்துவிட்டால்,
மாட்சிமைப்பட்ட அணிகலனையுடைய இளைய மகளிர் உன்னைத் தழுவினார் என்று உன் மார்பில் கிடக்கும்
அந்த அணிகலனால் அறிந்துகொண்டவளாய் அவள் கோபித்துக்கொள்ளமாட்டாளோ?
எம் புதல்வனைக் கண்டு அவனைத் தூக்கிவைத்துக்கொள்ளவேண்டாம்! உன்னுடைய தலையில்
வண்டுகள் ஒலிக்கின்ற சிறப்பான பூங்கொத்துக்களை அவன் பறித்துப்போட்டால்,
உன்னிடம் நெருங்கிப்பழகிய பரத்தையர் செயலைக் காட்டுவது இது என்று மணங்கமழும் உன்
தலைமாலையால் அறிந்துகொண்டவளாய் அவள் சினந்துகொள்ளமாட்டாளோ?
இவ்வாறாக,
பூப் போன்ற கண்களையுடைய புதல்வனைப் பொய்யாகப் பலவாறு பாராட்டி,
அவனை விட்டு நீங்காதவனாய், இவ்விடத்தை விட்டு அகலாமல் இன்னமும் என் மனை வாசலில் நிற்காதே!
அங்கு அந்தப் பரத்தையரிடம் செல்வாயாக! உன் அணிகலன்களைச் சிதைத்துப்போடுகின்ற
எம் புதல்வனை இங்குத் தந்துவிட்டு.
 
மேல்



# 80
உன்னிடத்தில் அன்பில்லாமல் போனவர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், அந்த அன்பு மாறாத,
மென்மையான தலையில் மின்னும் ஒளிவிடுகின்ற மூன்று வடங்களைக் கொண்ட, உன்னைப்
பெற்ற என் கண்கள் நிறைய நான் காணும்படியாக உன்னிடத்தில் அன்பு செலுத்தி,
பிரகாசமான ஒளியையுடைய முத்துக்களை விளிம்பினில் அரும்பு போலப் பதித்து
பவழத்தால் செய்த சக்கரங்கள் சுமக்க,
கவழம் உண்பதை அறியாத கையால் செய்யப்பட்ட உன் பொம்மை யானையை
முப்புரியாக முறுக்கிய மெல்லிய கயிற்றில் மெதுவாக வளைத்துக்கட்டி,
பரல்கள் இட்ட உன் காற்கொலுசின் மணிகள் ஒலிக்க அங்கிருந்து இழுத்துக்கொண்டே இங்கே
வருக என் பாகனாகிய மகனே!
எழுச்சியுற்ற மணிகள் ஆர்க்க, ஆர்க்க, நீ சாய்ந்து சாய்ந்து நடக்கும்
உன் தளர் நடையைக் காண்பது எமக்கு இனிது; ஆனால் இனியதல்லாதது
இவள் இருக்கிறாளா என்றுகூட எண்ணிப்பார்க்காத உன் தந்தையால் துன்புறும் மகளிரின்
கைவளை கழன்றோடும் காட்சியை நான் காண நேரின்;
ஐயனே! யாவரும் விரும்பும் தோற்றப்பொலிவினையுடையவனே! 'அத்தா அத்தா' என்று கூறும் உன்
இனிக்கின்ற மொழியைக் கேட்பது எமக்கு இனிது, ஆனால் இனியதல்லாதது
உன் தந்தை அவரின் பெண்மை நலத்தை நுகர்ந்துவிடுவதால், உய்வில்லாமல், மிகவும் மெலிந்துபோனவரின்
துன்ப நோயை நான் காண நேரின்;
ஐயனே! திங்களாகிய சிறுபிள்ளையே வா! என்று நான் உன்னை
அம்புலிக்குக் காட்டி மகிழ்வது எமக்கு இனிது, ஆனால் இனியதல்லாதது
அன்பு செய்யாமல் உன் தந்தையால் கைவிடப்பட்டவர்களின்
அல்குலில் உள்ள பசப்புக்கோடுகளை நான் பார்க்க நேரின்;
ஐயனே! என் காதில் உள்ள பொன்னாலான குழைகளைக் கழற்றிக்கொண்டு நீ ஓடும்போதெல்லாம்
மலர் சூட்டிக்கொள்ளாத என் வெறுங்கூந்தலின் மீது தூக்கிவைத்துக்கொள்வது, உன்னை நான்,
உன் தந்தை அந்தப் பரத்தையர் மீது வைத்த அன்பு குறையும்படியாக, அவர்கள் அவரின் அகன்ற மார்பில்
பூந்தாதுக்களைத் தேடியலையும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்படியாகக் கட்டின
மாலையை நீ பறித்து விளையாடும் காட்சியில் காண்பதற்காத்தான்.
 
மேல்



# 81
"மாசற விளங்கும் மணியைப் போன்ற அழகிய வாய், தன்
முழுதும் விளங்காத மழலைச் சொற்களைக் கூறும்போது ஒழுகிய எச்சில் ஒளிவிடும் மார்பணிகளை நனைக்க,
பொன்னால் செய்த பிறையிலிருந்து தொங்கும் சிறந்த வேலைப்பாடு அமைந்த உருண்டையான தலைச்சுட்டி
அழகு ததும்ப மணங்கமழும் தலையில் முத்துவடத்துடன் அசைந்தாட,
கொஞ்சமும் குறையாமல் தன் நிறத்தை நடுவே காட்டுமாறு கட்டப்பட்டு, உடுத்தியது கழன்ற அழகிய துகில்
உள்ளீட்டுப் பரல்களால் பொலிந்த காற்கொலுசு ஓயாமல் ஒலிக்கும் கால்களைத் தடுக்கிவிட,
பாலால் விம்மிய முலையை மறந்து, முற்றத்தில்
வலுவான சக்கரங்கள் கொண்ட உருட்டு வண்டியைக் கையினால் தள்ளிக்கொண்டு, நடை பயிலுகின்ற
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனைப்
போல வருகின்ற என் உயிரே!
பெருமையுடையவனே! விருந்தினரை உபசரிப்பதில் கை ஓயாமல் இருக்கிற என்னையும் நினையாமல்,
பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க,
திருத்தமாக நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி,
மருந்தறியாமல் துயருற்ற என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல
பெருந்தகையே! சிலவற்றைக் கூறுவாயாக!
ஒளிரும் அணிகளை அணிந்தவளே! தொலைவிலிருந்து நாம் கொண்டுவந்த பாணன், நெறி கெட்டு
வாய்தவறி, 'பரத்தையர் வாழும் ஏனாதிப்பாடியத்தில் இருக்கிறோம்' என்று சொன்னதைப் போல்
நம்முடைய வேதனையைத் தணிக்கும் மருந்து என்று எம் மகனைப் பாராட்ட,
ஓயாமல் அடுத்தடுத்து 'அப்பா, அப்பா' என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட
நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?
பொருள் கவர எண்ணி, கோட்டைக்குள் நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தம் படைக்கலங்களை ஒருசேர விடக்
கள்வர்கள் மறைந்து மறைந்து வருவதைப் போல், எம்மை
எள்ளி நகையாடற்பொருட்டே இவர் வந்திருக்கிறார் இங்கு";
"கள்வரால் வரும் கேடுகளை எண்ணி, மதில் அகத்தே உள்ள ஊரின் காவலர்
கள்வரைக் காணாதிருக்கவும், அவரைக் கண்டோம் என்று கூறுவதைப் போல
தள்ளி நின்று, செய்யாத குற்றங்களைக் கூறிக் கோபம் கொள்ளாதே! உன்
சொற்படி நடக்காதிருப்பவர் யார்?"
"நெஞ்சு நடுங்காத வஞ்சனையால் என்னை வருத்தி, என் மகன் மேல் விருப்பம் கொண்டு வந்து,
பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து
உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப,
எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!"
"இப்போது, ஏடி! நான் தீது இலேன் என்று தெளிவாக எடுத்துரைக்கவும், கைமீறிப்போய்,
சிறிதளவும் என்னிடம் கொண்ட கோபத்திலிருந்து மீளுதல் இல்லை என்றால்
சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,
குன்றாத விருப்புடன், கன்று கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு விரைந்தோடும்
பசுவைப் போல், இனி நம்மைத் தேடி வரும்படியாக."
 
மேல்



# 82
"உலகத்தின் வறட்சி நீங்கும்படியாக மழை பெய்வதற்காக, கிழக்குத்திசையில் ஏறி
சரியான பருவத்தில் தோன்றிய கார்மேகத்தைப் போல, என்னுடைய முலைகள்
பாலால் பெருத்து வீங்க, மிகவும் காலம் தாழ்த்திவிட்டாய்,
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக";
"சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்"
"வெகுளமாட்டேன்"
"சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்து
ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான், அவளும்
கொம்புள்ள இடபம் பொறித்த மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்து
'பெருமானே! சிறிது சிரித்துக் காட்டு' என்றாள், அவளின் கண்ணீர் 
சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது, பின்னர்
அவளுக்குத் தங்கையான, இவனுக்கு வழிமுறைத் தாயான ஒருத்தியிடம் சென்றான், அவளும்
தன்னை வருத்தும் பிரிவுத்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு, மகனை எதிர்கொண்டு
தழுவிக்கொண்டாள், முத்தமிட்டாள், அவனை நோக்கி, அவன் தந்தையை நினைத்துக்கொண்டு
'உனக்கு நான் யார்?' என்று கேட்டு
அவன் அழகு சிறக்க, அவனால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குத் தேடியெடுத்து அணிகளைச் சூட்டிவிட்டாள்,
அப்பொழுது, 'மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே' என்றாள்,
அவளுடன் இனிமையாக நடந்துகொண்டு அந்த மனையை விட்டுப் போய்,
தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக்
கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்"; "இவனை அடிப்பதற்கு ஒரு
குச்சியைக் கொடு, உனக்கு அவள் யார்? ஏடி,
வருந்து நான் இங்கே துன்பத்தில் உழல, உன் தந்தையை எப்பொழுதும்
பருந்து கவர்வது போலக் கைப்பற்றிக்கொள்வாள், அத்துடன்
வளையும், நகமும் படைக்கலங்களாக உன் தந்தையின்
மணம் கமழும் மார்பில் சிறிதளவும் அஞ்சாதவளாய்
புண்ணாக்கி வடுக்களையும் ஏற்படுத்துவாள், இனி அழுவதை விடு,
அவள் இன்னும் எவ்வளவோ பிறவும் செய்வாள், பெருமானே! அவளிடம்
கிட்ட நெருங்காமல் பார்த்துக்கொள், செல்லக்கூடிய வீடுகள் என்ன என்பதை எண்ணிப்பார்த்து, நீ
உன் தந்தையின் உறவில் ஐயம் இல்லாமல் உறுதியானவரின் வீட்டைத் தவிர்த்து, எம்மைப் போல்
உன் தந்தையின் அன்பை இழந்து செயலிழந்து நிற்பவர் வீட்டிற்கன்றி வேறு வீட்டுக்குச் செல்லவேண்டாம்,
இனி இன்றோடு முடிந்தது உன் ஊர்சுற்றும் வேலை".
 
மேல்



#83
"பெரும் செல்வம் நிலைபெற்ற, நிறைவாக உண்பொருளும் உள்ள அகன்ற நம் வீட்டின்
ஒன்றோடொன்று பொருந்தும் வலுவான இரட்டைக்கதவைத் தொட்டுக்கொண்டு நான் துன்பத்தோடு காத்திருக்க,
சிறுவர்கள் தழுவிக்கொண்டு விளையாடும் மணல் பரந்த அகன்ற தெருவிற்குக் கூட்டிப்போய்
விளையாட்டுக் காட்டிவிட்டுக் கொண்டுவருவதற்கென்று சென்றவளே!
மனவுளைச்சல் இல்லாமல், அவனுக்குப் பாலூட்டாமல் இனிய பால் என் மார்பில் சுரந்து பெருகும் வரையெல்லாம்
வராமல் நீட்டித்த காரணம் என்ன?"
"கூறுகிறேன் கேள்,
பெரிய மடலையுடைய பனையின் சொரசொரப்பான மட்டைகளுக்கு இடையேயுள்ள பசிய குரும்பைக் காய்களின்
குடம் போன்ற வாய்ப்பகுதியில் கொடியினால் பின்னி இணைத்து அதனை இழுத்து இழுத்துத் தளர்ந்துபோகும்
சிறுவர்களுக்கு நடுவில், பெரிய மணிகள் பதித்த உறுதியான தேரில்
அகன்ற நம் வீட்டை நோக்கி உன் மகன் வந்துகொண்டிருக்கும்போது, முறுக்கு விட்டு
நீல நிறத்தில் வரிசையாக நிற்கும் மலர்கள், மோதுகின்ற காற்றால் முன்னும் பின்னும் அசைவது போல்
சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர், மிகுந்த புகழையுடைய
ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா
தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,
தமது திருத்தமான காலடிகளில் சிலம்புகள் ஆரவாரிக்க, ஓடிவந்து, ஆசையோடு
'உன்னுடைய கண்களாலும், நெற்றியாலும், கன்னங்களினாலும், உன்னைத் தழுவும் உன் தாயர்க்குப்
பொலிவினைத் தோற்றுவிக்கும் அழகிய கைகளினாலும், உன் தந்தைக்கு உன் மனங்குளிர
நீ செய்யும் சிறப்புக்கள் போல எமக்கும் சிறப்புக்கள் செய்து, இந்த இரவுப்பொழுதுமட்டும்
எம்மோடு தங்கியிருந்து செல்லவேண்டும் செம்மலே!
எமது புதிய பெண்மை நலத்தை நுகர்ந்து, பின்னர் எம்மை நினைக்காத அந்த வெட்கமில்லாதவன் செய்த
தனிமைத் துயரத்தை எல்லாம் தீர்த்துக்கொள்வோம்' என்று பரிதவித்து,
வேற்றுவரானாலும் விருப்பத்தில் குறையாத தாய்மார் நேருக்குநேர் வேண்டிக்கொள்ள, அதனை மறுக்காத
இந்தக் கள்வனால் தாமதமானதுதானேயன்றி, என்னைக் கோபிக்கவேண்டாம்!
ஒளிரும் அணிகலன் அணிந்தவளே! நான் ஒரு தீங்கும் செய்தவள்,இல்லை."
"என்னை இகழும்படியாக, அழகிய மென்மையான மூங்கில் போன்ற தோள்களையுடைய உன் சொந்தக்காரர் சூட்டிய மாலையோடு
என்னுடைய வீட்டுக்கு வருகின்றாயோ? ஏடா! நீ உன்னுடைய உடம்பில்
அந்த அழகிய இனிய சொல்லையுடைய நல்ல பெண்கள் அணிந்த அணிகலன்களைக் காட்டிக்கொண்டு
எனக்கு முன்னால் இருந்து மகனாக நீ செய்த கொடுமைக்கும் மேலே
வெந்த புண்ணின் மேல் வேலை எறிந்தது போல் இருக்கிறது அந்த மகளிர் ஏற்படுத்திய வடுக்களோடு
தந்தையும் வந்து நிற்கும் நிலை."
 
மேல்



#84
"ஓங்கியடிக்கும் காற்று உயரத்தூக்குவதால் உயர்வான கிளைகளையுடைய மாமரத்திலிருந்து
நறிய இளம் பிஞ்சுகள் காம்பு அறுந்து விழுகின்றபோது பால் சொட்டுவது போல, அழித்து
மறைக்கும்படி நான் உள்ளங்கையால் அழுத்தித் தேய்க்கவும் அளவு கடந்து வீங்கிப்போய்
சுரந்த என் மென்மையான முலையின் பால் பாழாகப் போகும்படி, நீ
நமது நல்ல வாசல் வழியாகப் போன பொழுது, ஏடி!
தெய்வங்கள் மிகுதியாக இருக்கும் கோயில்கள்தோறும் இவனை
சுற்றிக்காண்பித்துக் கொண்டுவா என்று சொல்ல, அப்படியே சென்றாய்! தவறுசெய்துவிட்டாய்!
நெஞ்சில் ஈரமில்லாத இவனுடைய தந்தையின் பரத்தையர்களுக்குள்
யாருடைய வீட்டில் தங்கியிருந்தாய்? கூறு!"
"நீரினில் இருக்கும் உயர்ந்த இலை மறைத்திருக்கும் அழகிய இதழ்களைக் கொண்ட மலரைப் போல, பிடித்த
குடையின் நிழலில் சென்றுகொண்டிருந்த உன் மகனைக் கண்டு
இவன், நிச்சயமாக, நாம் துயர்கொள்ள, எம் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு, பின்பு எம்மை நினைக்காத
அந்த ஆண்பிள்ளையே அல்லாதவன் பெற்ற மகன் என்று தன் பெரிய வீட்டின்
வாசல் வரை வந்து இறங்கி நடந்துவந்து தாய்மார்
தெருவில் தடுத்து நிறுத்த, அங்கேயே தங்கிவிட்டான், மேலும் அவர்கள்
அவரவர்களுடைய அணிகலன்களில் இருந்து அன்பளிப்பாகவென்று இவனுக்கு
ஏற்றவற்றை ஆராய்ந்தெடுத்து அணிந்துவிட்டார்"; "யாரோ ஒருத்தனுடைய மனைவிமார்
அளித்ததை இவன் வாங்கிக்கொள்வானாம்; இவனொருத்தன்! சீ! சீ!
கோபிக்கத்தக்கவன் இவன் மிகவும்!
விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
அந்த மோதிரங்களுள் நறாம்பூவைக் கண்டாற்போன்ற சிவந்த விரலுக்கு ஏற்ப
ஆண் சுறாமீனின் உருவத்தைப் பொறித்த மோதிரத்தை அணிந்துவிட்டவளுடைய
எண்ணத்தை அறிந்தேன், காமன் கொடியாகிய சுறாமீன் உருவத்தைச் செதுக்கி அதனை எந்நாளும்
அடங்காத பரத்தைமைக் குணத்தையுடைய இவனது தந்தையின் மார்பில்
பொறியாக முத்திரையிட்டுக்கொண்டு அவனை ஆளுவேன் என்று தன் எண்ணத்தை
எனக்கு அறிவிப்பதற்காக அவள் செய்த செயல்;
நீயும் அப்படிப்பட்டவனோ? இதைப் பார்!
என் கண் முன்னே நடக்கும் இவற்றைக் கண்டும் அதனைக் கண்டிப்பதற்கு எழமாட்டாத என் முன்னர்
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல, இதைப் பார்!
இவனுடைய தந்தையின் முன்கையிலிருக்கும் தொடியை இவனுடைய கையில்
மாட்டியது யாரடி அது?
இதைப் பார்! இவனுக்கு நானும் ஒத்தவள்தான் என்று பிறரும் கண்டுகொள்க என்று
தற்பெருமை பீற்றிக்கொள்பவள் தந்தாளோ? உன்னை
இதனை அணிந்துகொள்ளச் சொன்னவர் யார்?
பயப்படாதே! நீயும் தவறு செய்யவில்லை! உன் கையில் இதனைத் தந்த
பூப்போன்ற அழகிய மைதீட்டிய கண்களையுடைய அவளும் தவறு செய்யவில்லை!
வேனில்காலத்துப் புதுவெள்ளத்தைப் போன்ற வேகத்தையுடைய உன் தந்தையை நோவார் யார்?
அவனது அன்பைப் பெறுவதில் எனக்கு மேலாக இருந்தும், அவளை எள்ளி, இதனை இவன் கையில் தந்தவளை
அவள் யார் என்று கேட்ட வேதனைமிக்கவளாகிய
நானே தவறு உடையவள்."
 
மேல்



# 85
காலில் அணிந்திருப்பவை, பசும்பொன்னைச் சுட்டுக் கம்பியாக வளைத்த இரண்டாக அமைந்த வளையத்தைப்
பொன் தூளால் பொடிவைத்து பொலிவுற அழகாகச் செய்த சதங்கை;
உடுத்தியிருப்பவை, கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளைக் கோத்த பொன்னாலாகிய வடத்தின் மேல்
களங்கமில்லாத சிவந்த பவள மாலை ஆகிய இவை இரண்டிற்கும் மேலே
உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன்;
கையில் அணிந்திருப்பவை, நண்டின் கண் போன்ற நெருக்கமாய்ச் சுற்றிலும் அமைந்த
பலவான சிறிய அரும்புகள் வேலைப்பாடு உள்ள ஒளிர்கின்ற சில வளையல்கள்;
கழுத்தில் அணிந்திருப்பவை, வெட்ட ஆகாத சிறிய வாளும், பிளக்க ஆகாத சிறிய கோடரியும்
நெருக்கமாகக் கட்டி, இரண்டு பக்கங்களிலும் தாழச் சேர்த்த,
மழை பெய்த நிலத்தில் ஊர்கின்ற தம்பலப்பூச்சியின் சிவப்பு நிறம் கொண்ட பவளத்தாலான
குற்றமில்லாமல் செய்து விளங்கிய காளை ஒளிவிடும் சங்கிலி;
தலையில் சூடியுள்ளவை, கரிய கடலின் முத்தும், பல மணிகளும், பிறவும் ஒரே இடத்தில்
ஒன்றாகச் சேர்த்துக் கோத்த உருள் வடிவான மூன்று வடங்களின் மேலே,
வண்டுகள் மொய்க்கும் தலைமாலைக்குச் சுற்றியமைந்த நூலாக,
அரும்புகள் மலர்ந்த நீல மலரின் அழகிய இதழ்கள் நாணும்படியான
சுரும்புகள் மொய்க்காத நீலமணியாற் செய்த கண்டோர் மருளும் மாலை;
இப்படியாக இவையும், பிறவும் உன் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைய, உன்
எளிதில் உருண்டு வருகின்ற திண்ணிய நடைவண்டியின் வளைவான மேற்பிடியைப் பிடித்துக்கொண்டு
மிக மிக மெதுவாக நடக்கும் உன் மென்மையான விரல்களைக் கொண்ட சிறிய அடிகள்
வலிக்கவும் செய்யும், இங்கு என் கையில் வருவாய்,
செம்மலே! உனக்குரிய பாலை உண்பதற்கு;
பொய்யாகப் போர்த்துக்கொண்ட பாணர் தொழிலை மேற்கொண்ட அந்தச் சகல கலா வல்ல இழிஞனைத்
தூண்டிலாகப் பயன்படுத்திச் சிக்கவைத்துத் தான் விரும்பியவரின்
நெஞ்சத்தைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டு திரியும்
உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
உன் தந்தையின் வாயிலிருந்து வரும் பொய்யான சூளுரைகளை நம்பி, காமநோய் மிகவே
பூப் போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் கண்ணீர் சொரிய, தூக்கம் இல்லாமல் இருக்கும்
உன் தாய்மாருக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
அம்மாடியோ! நான் என் மகனைப் பாராட்டிக்கொண்டிருக்க, திடீரென்று
தானே வந்திருக்கிறார், தன் கூட்டாளிகளோடு, இவரை
வாருங்கள் என்று யார் இங்கே அழைத்தார்கள்?
எனக்குரிய பாலைக் குடிக்காமல், என் பாராட்டைக் கேட்டு உவந்தவனே! குடித்து உண்பாய் என்
பாராட்டை! அந்தப் பாலும் கொஞ்சமே!
கோபித்து வருபவரையும் மகிழ்ச்சியால் கூத்தாடவைக்கின்ற
உன் புகழைப் பாராட்டும் பெரிய பாராட்டுரைகளைக் கேட்டு மீதியுள்ள எல்லாப்பாலையும் பருகுவாயாக,
மனம் நிறைவுகொள்வேன், இந்தா உன் செவிலித்தாயர் பங்கான பால்!
 
மேல்



# 86
"கருமை படர்ந்த தலையையுடைய இளம் களிற்றின் நெற்றிப்பட்டத்தைப் போல,
கையால் அழகாகச் செய்யப்பட்ட மூன்று வடங்கள் மென்மையான தலையிலிருந்து தொங்க,
பொன்னாற் செய்த மழுவோடு, வாளையும் சேர்த்துக் கொண்ட
நன்றாய் மிகுந்த ஒளிர்வுடன் விளங்கும் கழுத்து மாலையை நனைக்கின்ற அழகிய வாயில்
ஒன்றிக் கலந்த என் கண்கள் ஆசைதீரக் கண்டுகளிக்க, காண்பதற்கு இனிய பவளப் பலகை மேல்
பொன்னால் செய்யப்பட்ட சரிபாதியாக ஒன்றற்கொன்று போரிட்டுகொண்டு மின்னுகின்ற
காவலையுடைய கோட்டைகளைத் தாக்காத கையால் செய்யப்பட்ட உன் யானைப் பொம்மைகளால்
பெண்கள் செய்த மணல்வீட்டை உழப்பிக்கெடுக்கும்படி, உன் காலடியில் நிறைந்திருக்கும்,
தேரையின் வாயைப் போன்ற வாயையுடைய கால்சதங்கை ஆரவாரிக்க, ஓடித்திரியும் என்
போர் யானையே வருக இங்கு!
செம்மலே! அழகிலெல்லாம் உன் தந்தையைப் போன்றிருந்தாலும், உன் தந்தையின்
நிலைப்பாட்டில் உனக்கு ஏற்ற குணங்களை என் வாயால் கேட்டு அவற்றைப் போலிருப்பாயாக!
சினத்தால் கன்றிப்போன முகத்தையுடைய பகைவரை வென்று அவரின் களத்தைத் தனதாக்கிக்கொள்ளும்
வெற்றிச் சிறப்பில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
உம்முடன் ஒன்றிவிட்டோம் யாம் என்று மனத்தெளிவுடன் இருப்போரை, உன் தந்தை போல்
அவரின் மென்மையான தோள்கள் மெலிந்துபோகும்படி விடுவதில்;
ஒரு பக்கம் சார்ந்துகொள்வதில்லாமல், வண்டியின் பகலாணிபோல் முறைசெய்வதில் சோர்வடையாத
செங்கோலின் செம்மையில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
காற்றால் அலைக்கழிக்கப்படும் பூவைப் போல் கவின் குன்றிப்போகும்படி, உன் தந்தை போல்
அவரின் மேன்மையை உணர்ந்தவரை மெலிந்துபோகும்படி விடுவதில்;
அழிதல் இல்லாத அரும் பொருளை நாடிவந்தவர்க்கு
அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
காதலையுடைய மென்மையான பார்வையினையுடைய மகளிரை, உன் தந்தை போல்
அவர் பரிதவித்து நிற்க அவரைப் பாராமுகமாய் இருந்து விடுவதில்;
என்று
நல்லொழுக்கம் அல்லாதவற்றை நாம் கடிந்து கூற, இவன் யாரைப் பார்த்துச் சிரிக்கின்றான், இந்த
மதிக்கத்தக்க ஆண் என்று சொல்லமுடியாதவன் பெற்ற மகன்?
மறைவாக நின்றுகொள்ள அவர் இங்கு வந்திருக்கிறார்";
"அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இங்கு
கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு"; "சீச்சீ என்று நான்
சினந்து அதனைக் கடிந்துரைக்கவும், என் கையை மீறி
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்
தந்தையின் அகன்ற மார்பில் பாய்ந்தான், அந்த அறவுணர்வு இல்லாத
அன்பற்றவன் பெற்ற மகன்".
 
மேல்



# 87
"அகன்று போ! நீ எனது கூந்தலைத் தொடவேண்டாம்! நான் உன்னைக்
காண்பதற்கே அஞ்சுகிறேன்!"
"தெரிந்தெடுத்த இழைகளை அணிந்தவளே! செய்த தவறு ஒன்றும் இல்லாதிருப்பினும் சினந்துவிழுகின்றாய்!
ஓருயிர்க்கு இரண்டு உடம்பாகக் கொண்டு இருக்கின்ற அப்படிப்பட்ட என்னைப் பார்த்து!"
"ஏடா! உன்மீது ஏதேனும் தவறு உண்டோ? நல்லொழுக்கத்திலிருந்து நீ விடுதலை பெற்றாய்!
கண்ணை இமைக்கும்போது பார்வை மறைவது போல நீ என்னை மறந்து போனாய்!
உன்னுடைய நிலைப்பாட்டின் தன்மையை அறிந்திருந்தும் உன்னை நொந்து, உன்மேல்
கோபங்கொள்பவரே தவறுடையவர்;"
"மெத்தை போன்ற தோள்களையுடையவளே! தீயவரைப் போல, ஒரு தீமை இல்லாதிருந்தும் வருத்துகிறாய்!
நீ சினந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தவறும் இல்லாதவன் நான்;"
"மான் போன்ற பார்வையை உடையவளே! நீ அழும்படியாக உன்னைப் பிரிந்தவன், பரத்தைமையில் அமையாமல்
வெட்கமற்று இருப்பவன் என்றால் உன்னை வருத்திக்கொண்டு அவன்மேல்
ஊடல் கொள்ளுதலால் என்ன பயன், இப்போது?"
"இனிமேல் ஒன்றும் இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் இல்லை என்கிற
நிலைமையைக் காண்பாய் நெஞ்சே!, கண்ணீர் எல்லைகடந்த,
தூக்கம் இல்லாத கண்கள் சிறிதே படுத்துறங்கும்படி."
 
மேல்



# 88
"அகன்று போ! கொடி போன்ற இயல்புடைய நல்ல பரத்தையரின் கூந்தலின் மணத்தை எடுத்துக்கொண்டு,
அவர் முடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதினைத் தோளிலே கொண்டவனாக
எம்மைத் தொடுவதற்கு எமக்கு நீ யாரோ? பிரிந்து சென்ற பெரியவருக்கு
அடிமையானவரோ பிரிவினை ஆற்றாதவர்?"
"கடுமையாயிருப்போர்க்கு யாரால் சொல்ல முடியும் மறுமொழி?"
"வேலை மெனக்கிட்டு உண்மையல்லாத பிதற்றல்களை இங்கே சொல்லாதே! அவற்றைக் கூறு உன்
ஏமாற்றுவேலையைக் கண்டு மயங்குவாரிடம்";
"அழகிய அணிகளை அணிந்தவளே! உன் கண்களின் அருள்பார்வையைப் பெற்றாலன்றி இன்னுயிர் வாழமாட்டாத
என்னிடத்தில் என்ன தவறு?"
"இவனொருத்தன்! புள்ளிகளுடைய நண்டு நீரை ஒட்டி ஏற்படுத்திய கீறல்களான தடங்களைப் போல
பரத்தையரின் வளமையான நகம் கீறிவிட்ட வடுவும், ஒளிவிடும் பற்கள் அழுத்திய வடுவும்,
ஒளிரும் மலர்கள் வாடிநிற்கும் உன் தலைமாலையும், நல்ல அந்த பரத்தையர்
பிணக்கம் கொண்டு சீற்றத்துடன் அடித்ததால் சிவந்துபோன உன் மார்பும்
நீ தவறிழைத்தவன் என்பதனைக் காட்டப் போதாதோ? கூறு!"
"அப்படி இருந்தால் சரி! ஆனால் அநத வேறுபாடு என்னிடம் இருப்பதாகக் கருதவேண்டாம்! தவறில்லை என்பதை
தெள்ளத் தெளிவாகக் தெளியச் செய்கிறேன் பார்!"
"இனி நானொன்றும் தெளியவேண்டாம்!
தேர் ஏறி வரும் சிறப்பால் மயங்கி உன்னிடம் வந்த, தெரிந்தெடுத்த மாலை சூடிய அந்த அழகிய பரத்தையரின்
மாலையை மாற்றி உன் கழுத்தில் சூடி வந்த தவற்றுக்கு அஞ்சி நான் உன்னோடு கொண்ட ஊடல் போரில் கலங்கி
நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!"
 
மேல்



# 89
"யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது, என் வீட்டுக்கு
வரவேண்டாம், நீ வந்த வழியே திரும்பிச் செல்";
"என்ன இது? ஒரு உயிரும் இரு தலையும் கொண்ட சிம்புள் பறவையின் இரு தலைகளில் ஒன்று
மற்றொன்றுடன் சண்டைக்கு வந்தது போல் வெறுப்பு மொழிகளை நீ கூறினால் என்னுடைய
அருமையான உயிர் நிற்கும் வழி என்ன?"
"ஏடா! எமக்குத் தெரியும்! வெகுளவேண்டாம்! எதையும் செய்ய வல்லவனே!
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல,
உன்னை நீ வருத்திக்கொள்ளாதே உன் வஞ்சகமொழிகளை உரைத்து".
"பரிகாரம் இல்லை, பாராள்பவன் கோபித்தால், கோபித்தவர் மீது தவறு இல்லையாயினும், நீ என்மேல் கூற விரும்பிய
தீமைகள் என்னிடத்தில் இல்லை, இனிய பற்களையுடையவளே!"
"நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில்
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே! இவனோடு மாறுபட்டு, இவனைப்
பொய்சொல்ல விடக்கூடாது என்று நெருக்கினால், தப்பித்தேன்
என்று காலில் விழுந்தாலும் விழுந்துவிடுவான்".
 
மேல்



# 90
"கண்டேன், உன் வஞ்சகச் செயல்கள் மறைவாக நடைபெறுவதை; பொய்யாகச் சிரித்து
நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைத் தொடாதே! தொடுவதற்கு உனக்கு வேண்டிய
பெண்கள் இருக்கிறார்களோ இங்கு?"
"ஒளிரும் வளையணிந்தவளே! நீ என்ன தவற்றைக் கண்டாய்?"
"சொல்கிறேன்; ஒருத்தி தான் உற்ற காதல் நோயையும், தன் உருவத்தையும் மறைத்து மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு,
சொட்டுச்சொட்டாய் விழும் மழை நின்று பெய்த பாதிநாளாகிய இரவில்,
வளையல்களால் பொலிந்த தோளும், முலையும், கூந்தலும்,
நல்ல வடிவான காதணியும், ஏனை அணிகலன்களும் சுமையாகக் கொண்ட
ஒடிந்து விழுவது போன்ற இடுப்புடன், காலும் தளர்ந்தவளாய்,
நிறைவு கொள்ளாத தழுவுதலைக் கொண்ட ஒருத்தி வந்து காலில் படிந்த தன்
சிறப்பு நிறைந்த சிலம்பு ஒலிக்க, கோபித்து உன்
இரு பக்கமும் பொருதின நிறைந்த கதவைத் தட்டியது ஒன்று போதாதோ?
ஆய்ந்தெடுத்த அணிகலன்கள அணிந்த அவள் எழுப்பிய பேரொலி கேட்டமாத்திரத்தில்
காலம் தாழ்த்தாமல் எழுந்து நீ போனது ஒன்று போதாதோ?
கொஞ்சமும் மாறாதவளாய்ச் சினந்து அவள் அங்கே உன் மார்பில் கிடந்த
மணங்கமழும் பூங்கொத்துக்களையுடைய புதிய மலர்மாலையை அறுத்தெறிந்தது ஒன்று போதாதோ?
'தெளிவாயாக நீ! நான் தீயவன் அல்லன்' என்று அவளின்
சிறிய பாதங்களைத் தொட்டு வீழ்ந்துகிடந்தது ஒன்று போதாதோ?
இப்போது சொல்! நான் உன்மேல் கோபங்கொள்ளமாட்டேனோ?
"தெளிவாக யோசித்துப்பார்த்தால், நீ கூறுவது மட்டும் அல்ல, பிற குற்றங்களையும் நான் செய்யவில்லை,
நேற்று இரவிலே நீ கனவு கண்டாயா?"
"பெரும் மழை குளிர்ந்த நீர்த்துளிகளைக் கொட்டும் பொழுதில், நீ சொன்ன இடத்திற்கு வந்தவளை
நான் கண்ட கனவு என்று நீ செய்ததை நினைக்காமல் அதை மறுத்துக்கூறுகிறாய்,
இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா!
இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!"
"மென்மையான தோள்களையுடையவளே! உன் நல்லெழில் இன்பத்தை எனக்குத் தா! அதை நான் நுகர்வேன்!"
"ஏடா! உன்னை ஏற்றுக்கொள்ளும்படி உன் குறைகளைச் சொல்லி நீ என்னிடம் உரைக்காதே! உன் தீமைகளை
இனியும் என்னால் பொறுக்க முடியாது! என்று உன்னிடம் உறுதியாகச் சொல்லும் ஆற்றலைப் பெறுவேனோ,
சொல்வதைக் கேட்காத நெஞ்சத்தை உடைய நான்."
 
மேல்



# 91
"அழகிய பொய்கையில் மலர்ந்த நீலமலரும், அல்லிப்பூவும், அனிச்சப்பூவும்,
முறுக்கு நெகிழ்ந்த முல்லைப்பூவும், நறவம்பூவுடன் சேர்ந்த
தெரிந்தெடுத்த மலர்களாலான தலைமாலையும், கழுத்து மாலையும், நீ விரும்பிய பரத்தையர்
ஊடல் கொண்ட மனமாறுபாட்டால் கோபித்துப் பற்றுவதால் சிதைந்துபோக, நேற்றைக்காட்டிலும்
இன்று நன்றாக இருக்கிறது என் தலைவனின் அழகு";
"மெத்தை போன்ற மென்மையான தோள்களையுடையவளே! நான் செய்யாதவற்றைச் சொல்லிக் கோபிப்பது இங்கு எதற்காக?
சந்தேகப்பட்டு என்மேல் சினங்கொள்ளாதே! என்னிடத்தில் தவறு இல்லை என்பதைத்
தெய்வத்தின் பேரில் தெளிவிக்கிறேன், காண்பாயாக!"
"நீ செய்தவற்றை நான் அறிவேன், உன்னுடைய சூளுரையும் அவ்வாறே பொய்யானது, பரத்தையரின்
செறிந்த வளையல்கள் அழுத்திய வடுவையும், நீ வரச்சொல்லிவிட்டு ஏமாற்றியவரின்
கூரிய நகங்கள் கீறிய மார்பினையும், கசங்கிப்போன உன்
கழுத்து மாலையையும், குலைந்துபோய்க்கிடக்கும் சந்தனத்தையும் கொண்டு, சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த செழுமையான மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது";
"தெரிந்தெடுத்த அணிகளை அணிந்தவளே! இன்னும் தெளிவுபெறாமல் கோபிக்கின்றாய் நீ! என்னிடம் தவறு இல்லை என்பதை
முறையாக நிலைநாட்டுவேன், உன்னைப் பணிந்துகொண்டு";
"அப்படியானால் அதன் திறத்தையும் பார்ப்போம்!
நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
மனம் மாறுபட்டு வேறு மங்கையர்பால் மயங்கித்திரிகின்றாய்! எந்தவொரு வார்த்தையும்
சொல்லி என்னைத் தெளிவிப்பது வேண்டாத காரியம்! மேலும் நீ
மாண்பற்ற செயல்களைச் செய்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு, உன்னைக்
கண்டாலே நெகிழ்ந்துபோகிறது என் நெஞ்சு; அப்படியிருக்கையில் என்ன காரியம் செய்கிறாய்?
விரும்பமாட்டேன் என்கிறாயே நீ, விரும்பத்தக்கவைகளைச் செய்வதை".
 
மேல்



# 92
"புனத்தில் வளர்ந்த பூங்கொடி போன்றவளே! தன்னை மறந்த
கனவு எனப்படுவது ஓர் அழகிய நிகழ்ச்சியாகும்;
தம்மைத் தழுவிய மகளிரின் மார்பிடையே முகம்புதைத்து
மயங்கி மேலும் மேலும் அவர்களையே சுற்றிவந்து அவர்களைச் சென்றடைதலும், எங்கும் செல்லாமல்
வீட்டில் முடங்கிக்கிடப்பவர்க்கு மிகுந்த பொருள் கிடைக்கப்பெறுதலும்,
அரிதின் முயன்று அறம் செய்யாதவர்க்கு மேலுலக வாழ்வும் ஆகிய இம்மூன்றையும்
உரிமையாக ஒருசேரப் பெறுதலும், மனம் விரும்புவாரைப்
பிரிதலும், வந்து ஒன்றுகூடலும் ஆகிய இவற்றைத் தன் கனவுலகில்
தருவதைக் கனவு தடுப்பதில்லை;
நனவில் போவதைப் போலவே, நறிய நெற்றியையுடையவளே! நேற்றிரவு
கனவில் சென்றேன், ஆரவாரம் மிக்க மதுரையின்
மலை போன்ற உயர்ந்த மதிலின் புறத்தே சூழ்ந்த வையை ஆற்றின்
கரையினை அழகுசெய்யும் ஒரு சோலைக்குள்";
"இப்போது கூறுவாயாக! குன்றாத இனிய வனப்பினையுடைய நெடுந்தகையே! அங்கே
நீ கண்டது என்ன?"
"இதுதான் கண்டது: தம்முடன் கூடிநிற்கும் தோழியருடன், அழகிய வானத்தில் ஓய்ந்து பறக்கும்
மென்மையான நடையையுடைய அன்னங்களின் கூட்டம் அந்திக் காலத்தில்
தன்னைவிட்டுப் போகாத இமையமலையின் ஒரு பக்கத்தில்
தங்கியிருந்ததைப் போன்ற சில நல்ல மகளிரைக் கண்டேன்
துறையின் அருகிருந்த உயர்ந்த மணற்குன்றில் ஒன்றி நிறைந்திருக்க";
"பறைகொட்டுபவன் தன் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டும் பறையைப் போல் உன் நெஞ்சத்தில்
விரும்பினதையே கனாவாகக் கண்டாய்!"
"கேட்பாயாக, அவசரப்படவேண்டாம், பின்னர் கோபித்துக்கொள்ளலாம்"; "அப்புறம் என்ன? சொல்";
"இது சரி, இனிக்கும் சிரிப்பினைக் கொண்ட நல்லவளே! எல்லாரும் சேர்ந்து
தாமே கொடிபோன்றிருக்கும் அந்த மங்கையர், தாவி எழுந்து ஒரு
பூங்கொடியை வளைத்துப் பிடித்துப் பூங்கொத்துக்களைக் கொய்ய, அப்பொழுது
கிளைகளில் மலர்கள் மலர்ந்த வேப்பம்பூவினுக்குரிய பாண்டியன் போரிட்ட
போர்க்களத்தில் பகைவரின் பாதுகாப்புப் போல உடைந்து சிதறியது அந்த சோலையில் இருந்த
விரைகின்ற, வரியினையுடைய வண்டுக்கூட்டம்;
எல்லாம் ஒன்றுபோல் இருந்த பூங்கொத்துக்களில் மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் எல்லாம் அங்கே நின்ற
பெண்களின் அழகைக் கவர்ந்து உண்பது போல் ஒன்றாய்ச் சேர்ந்து அவர்களை மொய்க்க,
அவர்களுள்
ஒருத்தியின் அழகாகச் செய்யப்பட்ட பூமாலையும், முத்துமாலையும்
வண்டுகள் ஏற்படுத்திய குழப்பத்தால் குலுங்கிக்கொண்டிருந்த இன்னொருத்தியின் தோள்வளையில் மாட்டிக்கொள்ள,
ஒருத்தியின் நெற்றியில் திலகமாய் சூடிக்கொண்டிருந்த தெரிந்தெடுத்த முத்துக்களைச் சேர்த்த முத்துவடம்
இன்னொருத்தியின் அழகு சிறந்த ஒளிரும் மகரக்குழையணிந்த காதினில் சுற்றிக்கொள்ள,
ஒருத்தியின் அழகுத்தேமல் நிறைந்த அகன்ற அல்குலில் அணிந்திருந்த மென்மையான ஆடையை
இன்னொருத்தியின் பரல்கள் நிறைந்த காற்சிலம்பின் சுறாமீன் வடிவான மூட்டுவாய்கள் பிடித்திழுக்க,
ஒருத்தி ஊடலினால் கணவனைத் தழுவாதிருந்தவள், அலறிப்போய்
வண்டுக்கூட்டம் ஆரவாரிப்பதால், தன் ஊடலைக் கைவிட்டுக் கணவனின்
குளிர்ச்சியான மாலையணிந்த மார்பினில் தஞ்சம்புகுந்தாள்;
ஒருத்தி கால்வரை தாழ்ந்த ஆடையை ஒருகையில் எடுத்து மார்புடன் சேர்த்துக்கொண்டு, இன்னொரு கையில்
முடித்த முடி அவிழ்ந்து தாழ்ந்த கரிய கூந்தலையும் பற்றிக்கொண்டு, பூக்களால் மூடப்பட்ட
மணங்கமழும் குளத்தில் துன்பத்தோடு பாய்வாள்; 
ஒருத்தி, கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வண்டுகள் மொய்க்க, கையினால் விரட்டமாட்டாதவளாய், அணிந்துள்ள
மணங்கமழும் மாலையை அறுத்துக்கொண்டு அதனை ஓங்கிக்கொண்டு
வளைந்த உறுதியான தண்டையுடைய படகுக்குள் புகுந்துகொண்டாள்;
ஒருத்தி, அளவுகடந்த கள்மயக்கத்தால் கண்ணிமைகள் மறைக்கின்ற கண்ணையுடையவளாய்ப்
பறந்துவரும் வண்டுகள் மொய்க்க, அவற்றை ஓட்டுவதற்கு, ஓட்டுகின்ற
இடத்தை அறியாதவளாய் கைசோர்ந்து நின்றாள்;
இவ்வாறாக, கமழ்கின்ற சோலையில், காற்றடிக்க ஒதுங்கி வளைந்து
கொடியும் கொடியும் தம்மில் பின்னிக்கொண்டவை போல்'
தெரிந்தெடுத்த அணிகலன்கள் ஆரவாரிக்க, குழம்பிப்போய் வண்டுகளுக்காகப் பலவாறாகச் சிதறுண்ட
விளையாட்டு மகளிரைக் கண்டேன் நான்";
"உன்னிடம் உன் பரத்தையர் ஊடல்கொண்டதனையும், நீ அவரின்
அடி முன்னே வணங்கி அவரின் ஊடலைத் தீர்த்ததனையும், பலவாறாகக்
கனவின் மேலேற்றிக் கூறுவது, சினந்துகொண்டு நான்
செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பதனாலா? சொல்";
"நான் பொய் சொல்லேன்! இவ்வாறாக நான் கண்ட கனவுதான்
நல்ல முறையில் வாய்த்து உண்மையாவதைக் காண்பாய்! நறிய நெற்றியையுடையவளே! 'பல சிறப்புக்களோடு
கூடிச் சேர்ந்தவர்களே! பிரியாதீர்! நீண்ட காலம்
பிரிந்திருப்போரே! சேர்வதற்காக வாருங்கள்' என்று கூறுபவை போல
அரும்புகள் மலர்கின்ற மெல்லிய கிளைகள்தோறும், கரிய குயில்கள்
ஓயாமல் கூவுகின்ற வேனிற்காலம் வர, அதற்குப் பொருத்தமாக
மதுரை நகரத்து மகளிரும் மைந்தரும்
தேனீக்கள் ஒலிக்கும் மலர்வனத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழாக்கொண்டாடும்படியாக
குன்றாத ஆர்வத்துடன் தம்மை அழகுசெய்துகொள்வர், மன்மதனுக்கு
வேனிற்காலத்து விருந்தினைப் படைக்க எதிர்கொண்டு".
 
மேல்



# 93
"வண்டுகள் மொய்க்கும்படியாக அரைத்த சந்தனத்தை செழும்பப் பூசிய
பார்க்கத் தெவிட்டாத இனிய தோற்றத்தினையும், பரத்தைமைப் பண்பையும் கொண்ட அகன்ற மார்பினனே!
முன்பெல்லாம் நீ இவ்வாறு இல்லை! இங்கு இரவினில் வந்திருக்கிறாய்!
வெளியில் நீ கண்டது என்ன? சொல்வாயாக";
"மிகவும் பெருத்த மென்மையான தோள்களையுடையவளே! நான் சொல்வதைக் கேட்டால் சொல்கிறேன்!
நாம் இருவரும் ஒன்றுகூடி வாழும் உயர்ந்த வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்
கடவுளர் இருக்குமிடத்தில் தங்கிவந்தேன்!"
"சோலை மலர்களைச் சூடிய பெண்மானைப் போன்றவர் பலர் இருக்கின்றனர் நீ
கடவுள்தன்மை கொண்டு வழிபடுபவர்,
அவருள் எந்தக் கடவுளைக் கண்டு வந்தாய்? அந்தக் கடவுளைச் சொல்!"
"முத்துப்போன்ற முறுவலையுடையவளே! நாம் மணம் முடித்த அன்று
இந்த முகூர்த்தம்தான் உமக்குரிய முகூர்த்தம் என்று அது வாய்க்கும்படியான சொன்ன
அந்தக் கடவுளே நான் கண்டு வந்த கடவுள்"; "அது சரிதான்!
வாய்க்குள்ளே நாவு அடங்க, தலையினைச் சாய்த்துக்கொண்டு நீ கூறும்
ஏமாற்றுவேலையில் என்னிடம் அகப்பட்டுக்கொண்டாய்! நீ பார்த்தவரை
உண்மையாக நான் கூற விரும்பியவனே! இப்போது கேள்!
உன்னைப் பெறவேண்டும் என்று விரும்பின தீராத ஆசையால், நீ சொன்ன இடத்திற்குத் தப்பாமல் வந்த,
விழுந்து முளைத்து ஒழுங்கு வரிசையில் அமைந்த பற்களையுடையவராக, கண்டவர்களுக்கு
இறந்துபோகும் நிலையைச் செய்யும் உருவத்தோடு நீ போகும் வீட்டில்
சேரும் முறையோடு உன்னிடம் வந்த கடவுளையே நீ கண்டாயா?
நறிய, குளிர்ச்சியான, மயிரில் தேய்க்கும் நறுமணச் சாந்தும், புழுகும் மணக்கும்
அலையலையான முடித்த கூந்தலில் காலையில் அணியும் அணிகலனுக்கு ஏற்ப
பார்வையால் பிடித்திழுக்கும் கண்களோடு முந்தையநாள் நீ
பூவைப் பலியாக்ச் செலுததிய கடவுளையே நீ கண்டாயா?
ஈரம் புலராத ஆடையை உடுத்திக்கொண்டு இடைவிடாத தவத்தை மேற்கொண்ட
சூரபதுமனைக் கொன்ற சிவந்த வேலையுடைய முருகனைப் பாடி, பல நாட்களாக
நுகர்ந்து நுகர்ந்து குறையாத மிகுந்த காமத்துடன், திருப்பரங்குன்றத்தில் உன்னோடு
மாரிக்காலத்தில் தங்கியிருந்த கடவுளையே நீ கண்டாயா?
நீ கண்ட கடவுள்களுக்குள், உன்னுடைய
மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னைத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! ஒருவேளை நீ செல்லாமல் இருந்துவிட்டால்
உன் நல்ல மாலையையுடைய மார்பினில் ஒன்றாக ஒட்டியிருக்கும்படி பொருந்திக்கிடந்த
நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுளர் எல்லார்க்கும்
சங்கடம் ஏற்படவும் செய்யும்".
 
மேல்



# 94
"என்ன தவம் செய்தாயோ?
நீருக்குள் வளைந்து நெளிந்து தோன்றும் நிழலைப் போல் வளைந்த மென்மையான தோற்றத்துடன்
இங்கு உடல் கூனி
நடக்கின்றவளே! உன்னோடு பேசவேண்டும், நிற்பாயாக!"
"அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே! நீ என்னை
விரும்புவேனென்று தடுத்தாய், உன்னைப் போன்றவர்கள்
என்னைத் தீண்டப்பெறுவார்களோ?"
"சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், மடங்கியும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு";
"நினைப்பைப் பார்! சூதாடு பலகையைத் தூக்கி நிறுத்தினாற் போல,
முட்டாள் குள்ளனே! உச்சிப்பொழுதிலே வந்து என்னை
வீட்டுக்கு வா என்று கையைப் பிடிக்கிறாய்! ஏடா! உன் வீட்டில்
பெண்கள் இருக்கிறார்களோ கூறு!"
"நல்லவளே கேள்! தலைக்கு மேலுள்ள நடுப்பகுதி இல்லையான, வாள் போன்ற வாயையுடைய
கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான்
புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும், உன் முதுகைத் தழுவினால்
கிச்சுக்கிச்சு மூட்டியதைப் போல் தழுவமுடியாதபடி ஆவேன், அருள்வாயாக,
உன் பக்கவாட்டில் சிறிது தழுவிக்கொள்வதற்காக";
"போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு! திரண்ட
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
வளராத தம் வடிவால் என்னைத் தழுவி, என்னைக்
காப்பாற்றுவோம் என்று கூறுபவர் பலர், இந்தப் பரத்தையன் என்
பக்கவாட்டில் வந்து தழுவு என்கிறான், பலவும் சேர்ந்த
உழுந்தம்பணியாரத்தைக் காட்டிலும் விரும்பி அனுபவிக்கப்படுகிறது என் பிறப்பு! குட்டையான சூதாடுகருவியே! உன்னைக் காட்டிலும்
இழிந்ததோ இந்தக் கூன் பிறப்பு?" "இதற்குப் பின்னரும்
நான் உன்னை விரும்புகிறேன் என்று அவளின் பின்னால் சென்றபோதிலும், அதற்கு இணங்காமல்
கூனி குழைகின்ற குழைவினைப் பாரேன்!"
"ஆமையைத் தூக்கி நிறுத்தியதைப் போல் தோள்கள் இரண்டையும் வீசிக்கொண்டு
நாம் வேண்டாம் என்று விலக்கிவைக்கவும், எம்மை விரும்பும்
இந்த அழகன் நடக்கும் நடையைப் பார்!" "ஒருவரையொருவர் வசப்படுத்தும் அம்பினைக்கொண்ட
சாமனுக்கு அண்ணனான மன்மதனின் நடையழகைப் பார்!
ஓ ஓ இங்கே பாரேன்! நம்முள் நாமே நகைத்துக்கொள்ளக்கூடாது! நாம் இருவரும்
கலந்து பேசுவோம், அரசனின் அடிதொட்டுச் சூளுரைக்கிறேன்!"
"அப்படியே ஆகட்டும்! மென்மையால் இனிய மார்பினனே! நானும் உன்னை இகழ்வதை நிறுத்திவிட்டேன்! ஏ ஏ
பேயும் பேயும் துள்ளிக்கொள்கின்றன என்று
இந்த அரண்மனையில் நம்மைக் கண்டவர்கள் சிரிக்காமல் இருக்கவேண்டும்,
ஒளிகுன்றாத பொன்தகட்டு உருவினனே! அரண்மனைக்கு வெளியே சோலையின் நுழைவிடத்துக்குப்
போயிருப்பாய்! நெஞ்சாரக் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொள்வோம்!
குற்றமற்ற அறிவினைக்கொண்ட அவையிலுள்ளோரின் ஓலைச்சுவடிக்கட்டின்
முகப்பைக் கயிற்றினால் இறுக்கக் கட்டியதைப் போல".
 
மேல்



# 95
"அங்கேயே நில்! அங்கேயே நில்! படியேறி வரவேண்டாம்! ஏடா! நீ
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் வீட்டுக்குப் போ! இந்தப் பக்கம்
வழிதவறி வந்துவிட்டாய் போலும்! நீ வந்த வழியே
திரும்பிச் செல் இப்போது, உன் பரத்தையர் இடத்துக்கு, உன் சிவந்த அடிகள் மிகச் சிவந்துபோகும்படி!"
"செறிவாக ஒளிரும் வெண்மையான பற்களையுடையவளே! நான் வேறு, மோதவிட்ட
காடைகளின் சண்டையைப் பார்த்தேன்! அதைத்தவிர வேறு ஒன்றும்
அறிந்ததோ இல்லை! நீ வேறெதையோ நினைத்துக்கொண்டாய்!"
"நீ காடைச் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்ததை நானும் கேள்விப்பட்டேன்! நீ என்றும்
புதிது புதிதாய்க் கொடுக்கும் ஈகை வளத்தைப் பாடியவனாக, உன் காலைவிட்டுப்
பிரியாத கவிந்த கையனாக இருக்கும் உன் பாணன் தன் யாழில்
இசைக்க, அதற்குச் செவிசாய்த்து, மேலும் மேலும் புதிதாகப் பிடிபட்ட (பரத்தையராகிய)
காடைகளின் போரையும் பார்த்தாய் போலிருக்கிறது, உண்மையாக எண்ணினால்
அந்தப் போரில் பட்ட இன்னும் புலராத புண்கள் உன்னைக் கொன்றன போலும்!
ஊரிலுள்ளோர் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சாதவனாய், உன்னிடத்தில் தங்கி, உன் மார்பிலுள்ள
மாலையைக் கையால் அணைத்துக்கொண்டு, தழுவிக் கையால் இறுக்கப் பிடிக்கின்ற
காடையின் போர்த்திறனை வாய்ப்பாகக் கண்டாலும், ஒதுங்கிப்போகாது, போரிட்டுக்கொண்டே இருக்கும்
பார்வைக் காடையின் போரையும் கண்டவன் போலிருக்கிறாய்! உன் தோளின் மேலுள்ள புண்கள் எல்லாம்
புலராமல் ஈரமாகவே கிடக்கின்றன;
கன்னங்களைப் புண்ணாக்காமல், உடம்பு முழுவதையும் கையினால்
துடைத்துவிட்டு, நீ வேண்டினாலும் வெல்லாமல் போரிட்டுக்கொண்டே இருக்கும்
பந்தயம் வைத்தாடும் போரைக் கண்டவனைப் போல் தோன்றுகிறாய்! உன் முகம்தானே
காட்டிக்கொண்டே நிற்கிறதே உன் மனக்குறிப்பை!"
அப்படியெனின், ஆராய்ந்தெடுத்த அணிகளை அணிந்தவளே! நீ கூறியவற்றை நான் அறியமாட்டேன் என்பதை
நீ உணர்வதற்கு உன் மெய்யைத்தொட்டு சூளுரைக்கிறேன்;"
"அம்மாடியோ! உண்மையைப் பொய்யென்று வஞ்சிக்கும் உலக நடப்பை நீ ஒன்றும்
அறியமாட்டாய் போலும்! நீயே உணர்ந்து பார்!"
நல்லவளே! பெய்யையெல்லாம் என் தலையில் ஏற்றி, தவறுகளையெல்லாம் ஒன்றுசேர்த்து,
என்னைக் கையோடு பிடித்துவிட்டாய், தவறிழைத்தேன்! அருள்செய்வாயாக!"
"அருளுவோம்! உனக்கு அருள்செய்ய நாங்கள் யார்? ஏடா! தெளிவாக
நீ அருள்செய்து உனக்கு ஆகும்படி பண்ணிய காடைகள் எல்லாவற்றையும் இன்னும் அதிகமாய்
அழைத்து உன் பாணனோடு ஆடி மீண்டும் அருள்செய்வாய்!
விடலையே! நீ கைவிட்டுவிட்டதால் நோயைப் பெரிதாக எதிர்கொள்கின்றன,
உன் சூதில் ஏமாந்த உன்னுடைய அனைத்துக் காடைகளும்".
 
மேல்



# 96
"உயர்ந்த அழகினையுடைய மார்பனே! உன் வாய்ச்சொல்லுக்கு எதிர்ப்பேச்சு இல்லை,
பாய்த்துக்கட்டிய அழகிய வேட்டி கழன்று கிடக்கும் அழகோடு நிற்கிறாய்!
சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வருகிறாய்?" "இப்போது கேள்,
உயர்ந்து எதிர் எதிராக வைத்து நீலமலர்களைத் தொடுத்தது போன்ற கண்களையுடையவளே!
குதிரை ஏற்றம் பயின்றுவிட்டு வருகிறேன்!"
"தெரியும் எனக்கு, நீ ஏறியது குதிரைதான்!
ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்,
அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,
நீல மணிகள் கோத்த கடிகையென்னும் கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும், கீழே
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்
கண்ணால் கண்டு அஞ்சும் சாட்டையாக, அழகு பெற்ற
தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும், நூலால் செய்யப்பட்ட மேலாடையே திண்ணிய கடிவாளமாகவும்,
ஒன்றுபோலிருக்கும் மணிகளாலான, ஒன்றுபோலமைந்த மூன்று கழுத்துச் சரங்களே பலவான கண்டமாலைகளாகவும்,
பொன்னாற்செய்த மேகலையே கழுத்தில் கட்டிய சதங்கைத் தண்டையாகவும்,
ஒலிக்கின்ற கெச்சையைக் காலின் அடியில் அமைத்துக் கட்டியது
ஒழுங்குபட்ட பொன்னாலான சதங்கையாக ஒலிக்கவும் கொண்ட அந்தக் குதிரையை ஓட்டி, நீ
காதலித்து ஏறின உன் காமக் குதிரையை,
அழகிதாகச் சுண்ணாம்புச் சாந்து பூசிய மாடத்தில், அழகினையுடைய நிலாமுற்றத்தில்,
குதிரையின் நேரான ஓட்டத்தை அதற்குக் கற்பித்துக் களைத்துப்போனவனானாய்!
நல்ல குதிரைப்பாகன்தான் நீ! நீ வாழ்க!
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
கூர்மையான நகத்தைக் கொண்ட குளம்பினையுடையது, மிகவும்
கொடியது அந்தக் குதிரை! நீ வாழ்க!
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி
குதிரையில் உடல் அழகுபெறுவது போல, உன் உடம்பிலும்
குதிரைதான் கவ்வி அடையாளமிட்டதோ?
சீச்சீ, பயனின்றி இங்கு கடித்தது, மிகவும்
நச்சுத்தன்மை வாய்ந்தது அந்தக் குதிரை! நீ வாழ்க!
மிகவும் நல்லது! இப்போது அறிந்தேன் இன்று நீ ஏறிய குதிரையை!
முறையாக மணம் செய்து அறவழியில் வந்த
மேகலையாகிய சேணம் தரித்த காமக்கிழத்தியாகிய குதிரையும் இல்லை! பெருமானே! உன்
அந்நியனான பெரும்பாணன் தூது போக அங்கே ஒரு
வக்கிரத்தால் வந்த காற்றாய்ப்பறக்கும் குதிரை! அது உன் பழைய
உருவத்தை அழிக்கும்! அந்தக் குதிரையில் இனி ஏறாதே! அவ்வாறு ஏறினால் அந்தப் பரத்தையே
குதிரையாக, அதன் பாகனாக என்றும் அந்தப்பக்கமே
திரிவாயாக! அந்தக் குதிரையை ஏறுவதற்குப் போ!
 
மேல்



# 97
"நீ அப்படிப்பட்டவன்! உன் காதற்பரத்தை கூறிய கடுமையான சொற்களை அறியாதவன் போல நீ
என்னைச் சினந்துகொள்கிறாய்! அதனால் உன்னிடம் நான் சினங்கொள்வேன்!
விடியற்காலையில் எம் வாயிலில் வந்து "நீ கூறிய இடத்திற்கு வந்து
அந்த இடத்தில் முற்றும் உன்னைக் காணாமல் நான் அலைந்து திரியும்படி
நீ எங்கே சென்றாய்' என்றாள் அந்தப் பரத்தை. இப்பொழுது பொதுவாக நின்று எம்மை இகழ்கிறாய்!"
"முத்தைப் போன்ற முறுவலையுடையவளே! நம் வலையில் அகப்பட்டுக்கொண்ட ஒரு
புதிய யானை இங்கு வந்தது, அதனை ஏறிப் பார்ப்பதற்கு நான் தங்கினேன்."
"சரிதான்
அந்த யானை மிகவும் அழகுடையதாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்,
அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,
ஒளிரும் நெற்றியில் இட்ட திலகமாகிய ஒளிவிடும் நெற்றிப்பட்டத்தையும்,
தொய்யில் கோலமிட்ட அழகிய முலைகளாகிய வெண்மையான கொம்புகளையும்,
தொய்யகம் என்னும் தலைக்கோலமாகிய அங்குசத்தையும், காதணிகளான இருபுறமும் தாழும் வடிவான மணிகளையும்,
இலக்குமி பொறித்த புனைந்த தலையணியாகிய கழுத்துமெத்தையையும் கொண்டு
முத்தைப் போன்ற பொலிவினையுடைய வெண்மையான பற்களைத் திறந்து,
நல்ல மனை வாசலின் கதவுகளான கம்பத்தைச் சேர்ந்து,
தன்னுடைய அழகைக் காட்டி, அதன் தன்மையால் காலைத்தட்டிவிட்டு விழவைக்கும்
நட்புறவாகிய சங்கிலியால் கட்டுண்டு, பிறர்க்கு வருத்தத்தைச் செய்யும்
மென்மையான தோளாகிய பெரிய துதிக்கையினால் வாங்கிக்கொண்டு, தன்னைக் கண்டவரின்
நற்பண்புகளையே கவளமாக உண்ணும் சிரிப்பை முகத்திலே கொண்ட யானையை
இன்றைக்குத்தான் பார்த்தது போல ஏன் என்னிடம் பொய்சொல்கிறாய் நீ!
ஏடா! அந்த யானையைத் தழுவி, அதன் தொடி செறிந்த தோள்களிரண்டின் மேல் தத்தி
மேலேறிக்கொண்டு அதனைச் சவாரி செய்தவனும் நீ!
உன்னைச் சேர்ந்து, பின்னர் கைவிடப்பட்டு ஆசையினால் தேம்புகிறவர்களின் வீட்டு வாசல் வழியாகக் கொண்டுபோய்
அந்த யானையில் அழகாகச் சவாரி செய்தவனும் நீ!
மிகவும் அதிகமாய்ச் செல்லாமல், சீராக, உன்னை நுகர்ந்த சிறுமகிழ்ச்சிகொண்ட அழகான மைதீட்டிய கண்கள்
கண்ணீர் வடித்து நிற்க இந்தப் புதிய யானையில் சவாரி செய்தவனும் நீ!
நீ சேர்ந்த இடங்களிலெல்லாம் நெளிநெளியாகத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் எல்லாம்
உன்னை ஒரு சிறிய பாகனாக எண்ணி உன்மேல் கோபங்கொள்ளாதபடி, அந்தப் புதிய யானையை மெதுவாக
விடாமல் ஓட்டிக்கொண்டு நீ எமது வீட்டுக்கு வந்திருக்கிறாய்! அந்த யானைக்கு
மதம்பிடிக்கும்போது உன்னைக் காத்துக்கொள்."
 
மேல்



# 98
"யார் நீ? எம்முடைய இல்லத்தில் நுழைகிறாய்!
புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல,
உன் திருமணக் கோலத்தைத் தினம்தினம் காட்டுகிறாய்!
அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று மங்கையரைக் கொண்டுவந்துகொண்டேயிருக்க,
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர் ஓடுகின்ற தெருக்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய பேச்சுத்தான் எழுவதற்குக் காரணமான உன் மாய்மாலப் பரத்தைத்தன்மையைக்
காட்டுவதற்காக வந்திருக்கிறதைக் கையும்மெய்யுமாகப் பிடித்துவிட்டேன்! முன்பெல்லாம்
அதனைக் கேட்டும் இருந்தேன் நான்!"
"தெரிந்தெடுத்த மாலையினைக் கொண்ட அழகிய நல்லவளே! உன்னுடைய நெஞ்சால் தெளிந்துகொள்ளவேண்டும்
மிகுந்த நீர் மோதுகின்ற கரை சூழ்ந்த பூக்கள் மிக்க வையையாற்றில்
வருகின்ற நீரில் புனலாடுவதற்குத் தங்கினேன், பெரிதாக என்னை
நான் செய்யாதனவற்றுக்காகச் சொல்வது எதற்காக?"
"அப்படியா? அங்கே புனலாடினாய் என்றும் கேள்விப்பட்டேன்! அந்தப் புனல்தான்
நீண்ட தன்மையுடைய நெளிநெளியான கூந்தலே நீண்டொழுகும் அலையலையாய்க் கருமணலில் ஓடும் நீராக,
சிறப்புமிக்க அழகிய மைதீட்டிய கண்கள் துள்ளுகின்ற கயல்களாக,
தலையில் சூடிய கார்காலத்து மலர்கள் மேலாக மூடிய கமழ்கின்ற பூக்களாலான நீர்ப்பரப்பாக,
நாணம் என்ற கரையை உடைத்துக்கொண்டு நல்ல பகற்பொழுதில் வந்த அந்த
புதிய வரவான புதுப்புனலில் ஆடினாய் முன்மாலை நேரத்தில்,
பாணன் என்பவனைத் தெப்பமாகக்கொண்டு நீருள் பாய்ந்து;
தாராளமாக அருள்செய்து, விருப்பத்துடன் கூடிய காதலுடன் அந்தப் நீரில் ஆடியதால்
வெளிப்பட்ட ஊராரின் பழிச்சொற்களை நான் அறிந்துகொள்வேன் என்பதற்கு அஞ்சி,
மறைவாக நடந்துகொண்டாய் என்றும் கேள்விப்பட்டேன்! அப்படி மறைவாக நடந்துகொண்டதற்காக,
கண்களை மறைக்கும் கோபத்தால் புருவமாகிய அலைகளை வீசி
ஆரவாரிக்கும் காற்சிலம்பால் உன் நல்லொழுக்கமெல்லாம் கெட்டுப்போக,
அழகு ததும்ப வந்த அந்தப் புதுப்புனல் உன்னைப் பிடித்து
இழுத்துக்கொண்டு சென்றதைக் கண்டவரும் இருக்கிறார்கள்!
இழுத்துச் சென்ற அந்தப் புனல், புகழ் வாய்ந்த சிறப்பையுடைய உன் நேர்மையான உள்ளத்தையும் தனதாக்கிக்கொண்டுவிட
குற்றமற்ற அந்தப் புதுப்புனல் வெள்ளத்தில் நீந்தி இன்னும்
நீ கரை கண்டதும் இல்லை!"
"வரிசையாக வளையல்களை அணிந்தவளே! தப்பாத வாட்படையையும், புனைந்த கழல்காலினையும் உடைய பாண்டியனின்
வையையாற்றில் வந்த புதுப்புனலில் ஆடுவதற்குத் தங்கினதைத்
தெய்வத்தின் மேல் ஆணையிட்டுத் தெளிவிப்பேன், பெரிதாக என்னை
நான் செய்யாதனவற்றுக்காகச் சொல்வது எதற்காக?"
"உண்மையே! நிறைய மலர்கள் சூடிவந்த அந்த மாயப் புதுப்புனலில்
பலமுறை நீ ஆடச் செல்லும்போது, ஒருபக்கம் ஒதுங்கிக்
காப்பாற்றுவாரும் இல்லாத இடத்தில் ஆழப்பதிந்து, தேருடன்
நீ குறுமணலில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வாயாக! முளையைப் போன்ற
முறுவலையுடைவரைப் பார்த்துச் சிரிப்பதனால்."
 
மேல்



# 99
கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், அவ்விரண்டையும் கைக்கொண்டு
அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்
வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது,
குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை எல்லார்க்கும்
தப்பாமல் கிடைக்கச் செய்தலை, உனது செம்மையான ஆட்சியின் காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த,
அணிகலன்கள் அணிந்த கொடியினை உடைய திண்ணிய தேரினையும், மணி கட்டின கூட்டமான யானைகளையும் உடையவனே!
அறத்தின் நிழலாகக் கொண்டாய், உன் அழகிய வெண்கொற்றக்குடையின் நிழலை; அந்தக் குடையின்
நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? இவளைப் பார்!
பிறை போன்ற நெற்றியில் பசலை படரப் பெரும் துன்பத்துள் ஆழ்ந்தவளை;
பொய்யாமையைச் சொல்கிறது உன் செங்கோல்; அந்தச் செங்கோலின்
நல்லாட்சிக்கு ஒதுக்கப்பட்டவளோ இவள்? இவளைப் பார்!
காம நோய் வருத்த, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளை;
அனைவரையும் காப்போம் என்று முழங்குகிறது உன் ஓங்கியடிக்கும் முரசு; அந்த முரசின்
காப்பு எல்லையைக் கடந்துநிற்கிறாளோ இவள்? இவளைப் பார்!
மூங்கில் போன்ற அழகை இழந்த தன் தோள்களின் வனப்பு வாட அதனை இழந்துநிற்பவளை;
இப்படியாக,
நீண்ட தொலைவுக்கு அப்பால் இருப்பவற்றைக் கண்டாலும், தன்னிடம் உள்ள
குறையை மற்றவர் காட்டினாலொழிய அதனைக் கண் பார்க்கமுடியாது! அதைப் போல என் தோழியின்
வளையல்கள் கழன்று விழும்படியாக நீ அவளைக் கைவிட்டுச் சென்ற கொடுமையைக்
கொடியது என்று நீ உணராதிருப்பது சான்றோரால் கடியப்பட்டதன்றோ உனக்கு?
 
மேல்



# 100
கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,
உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும்,
மிக்க உயர்ந்து தோன்றும் உயர்ந்த உன் வெண்கொற்றக்குடையில் நிழல் வேண்டி வந்தவர்க்கு
காண்பதற்கினிய திங்களைப் போன்ற கதிரைப் பரப்பும் குளிர்ச்சியும் கொண்டு,
சிறப்பு மிக்க உன் ஒழுக்கத்தால் உலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாத்து, அகன்ற உலகத்திலுள்ள
எந்நாட்டவரும் தொழுது போற்றும் முழங்கும் ஒலியையுடைய முரசையுடையவனே!
அரிய தவத்தையுடைய முதல்வனைப் போல, எந்தவித ஐயமும் இன்றி, ஒருவரிடத்தும்
பொய்கூறமாட்டாய் என்று உன்னைப் புகழ்வது கெட்டுவிடாதோ? 
அன்புகொண்டு, பிரியமாட்டேன் என்று நீ உறுதியாகக் கூறிய சொல்லை ஆசையுடன் நம்பியிருந்தவளின்
பல இதழ்களையுடைய மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் நிறைய அவளைக் காணும்போது;
பெருகி நிறைந்த மேகம் மழையைப் பொழிந்தது போல் உன்னைச் சூழவந்து நின்ற யாவர்க்கும்
அவர் வேண்டிக் கேட்கும் விருப்பத்தை வாடிப்போகச் செய்யமாட்டாய் என்ற பெயர் கெட்டுவிடாதோ?
மனம் மிக வருந்தினும் உன் மணக்கும் மார்பைக் காதலிக்கும்
ஒளிர்கின்ற, திரட்சியையுடைய, பிரகாசமான வளையல்கள் அவளது கையில் கழன்று விழுவதைக் காணும்போது;
ஒருவர் வாழும் காலஅளவை நிர்ணயித்து, பாரபட்சமின்றி அந்த உயிரைக் கொண்டுபோகும் கூற்றுவன் போல
முறையுடன் ஆட்சிசெய்கிறாய் என்று உன்னைப் பிறர் மொழிவது கெட்டுவிடாதோ?
மிகுந்த துன்பம் வருத்த உன் இரக்கத்தை வேண்டிக் கலங்கிக்கிடப்பவளின்
பழிச்சொல்லற்ற ஒளிவீசும் முகத்தில் பசலை படரக் காணும்போது;
இனி,
தன் பழைய அழகை இழந்தவளை, நீ துணை என்று சேர்த்துக்கொண்டவளை,
இனிய முயக்கத்தை உடைய அகன்ற மார்பினையுடையவனே! நீ இப்படிக் கொடுமைப்படுத்துவது கொடியது என்று
உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ?
எப்படிப்பட்டவர்களுடைய இடும்பையையும் களைகின்ற உனக்கு!

மேல்